காந்திஜியும் மத மாற்றமும் (Post No.5155)

Written by S NAGARAJAN

 

Date: 28 JUNE 2018

 

Time uploaded in London –   7-27 AM (British Summer Time)

 

Post No. 5155

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

காந்திஜியும் மத மாற்றமும்

 

ச.நாகராஜன்

 

மஹாத்மா காந்தி அடிக்கடி தான் ஒரு ஹிந்துவாக இருப்பதில் பெருமைப்படுவதாகக் கூறி வந்தார்.

கிறிஸ்தவ மிஷனரிகள் அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களை மதம் மாறச் செய்வதில் அவர் வருத்தமும் கோபமும் கொண்டார்.

பல்வேறு சமயங்களில் அவர் அவர்களை இதற்காகக் கண்டித்துள்ளார்.

ஒரே ஒரு உரையை மட்டும் இங்கு காணலாம்:

23-4-1931 தேதியிட்ட அவரது உரையில் பல கருத்துக்கள் தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றன.

அவற்றின் சாரத்தைத் தமிழிலும் மூலத்தை – ஒரிஜினலை – ஆங்கிலத்திலும் கீழே காணலாம்.

மனிதாபிமானத்திற்காக அல்லாமல் மதமாற்றத்திற்காக கல்வி,மருத்துவ உதவி போன்றவற்றை ஏழை மக்களுக்கு அவர்கள் செய்வதாக இருந்தால் அதை நான் ஆதரிக்க மாட்டேன்.

ஒவ்வொரு தேசமும் அதன் மத நம்பிக்கை இதர தேச மத நம்பிக்கை போலவே நல்லது என்று கருதுகிறது.

இந்தியாவில் உள்ள மத நம்பிக்கைகள் அங்குள்ள மக்களுக்கு நிச்சயமாகப் போதுமானது. ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறுவது இந்தியாவிற்குத் தேவையே இல்லை.

 

மனிதாபிமானம் என்றபெயரில் மதம் மாற்றுவது ஆரோக்கியமான விஷயம் அல்ல. இங்குள்ளோர் அதனால் மிகவும் வருத்தமடைகின்றனர். மதம் என்பது ஒருவரது தனிப்பட்ட விஷயம். அது இதயத்தைத் தொடும் ஒன்று. கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் ஒரு டாக்டர் ஏதோ ஒரு வியாதியை எனக்குக் குணப்படுத்தி விட்டார் என்பதற்காக நான் ஏன் மதம் மாற வேண்டும்? அவரது செல்வாக்கில் நான் இருக்கும் போது அப்படி ஒரு டாக்டர் அதை ஏன் எதிர்பார்க்க வேண்டும் அல்லது அப்படி மாற ஏன் யோசனை கூற வேண்டும்? அவரது மருத்துவத்தினால் குணமாவதே அவருக்கான சிறந்த பரிசும் திருப்தியும் இல்லையா? ஒரு மிஷனரி கல்வி நிலையத்தில் நான் படிக்கையில் கிறிஸ்தவபோதனைகள் என் மேல் ஏன் திணிக்கப்பட வேண்டும்? எனது அபிப்ராயத்தில் இவை என்னை மேலே தூக்கி விடும் ஒன்றல்ல; இரகசிய எதிர்ப்பிற்காக இல்லையென்றாலும் அது சந்தேகத்திற்கு இடமளிக்கும் ஒன்றாகும். மதமாற்ற வழிமுறைகளானது சீஸரின் மனைவி போல சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும்.மதசார்பற்ற விஷயம் போல மத நம்பிக்கை இருத்தல் வேண்டும். அது இதயம் பேசும் மொழியால் தரப்படும் ஒன்று. ஒரு மனிதன் ஜீவனுள்ள நம்பிக்கையைத் தன்னிடம் கொண்டிருந்தால் அது ரோஜா மலரின் வாசனை போல மணம் பரப்பும். கண்ணுக்குத் தெரியாத அதன் தன்மையினால் கண்ணுக்குத் தெரியும் மலர் இதழ்களின் அழகை விட அதன் செல்வாக்கு வெகு தூரம் வரை பரப்பும்.

 

நான் மதமாற்றத்திற்கு எதிரானவன் இல்லை. ஆனால் அதன் நவீன முறைகளுக்கு எதிரானவன். மதமாற்றம் என்பது இன்று வணிகமாகி விட்டது. ஒரு மிஷனரி அறிக்கையில் ஒரு மனிதனை மதமாற்ற தலைக்கு ஆகும் செலவு எவ்வளவு என்றும் அதன் அடிப்படையில் அடுத்த “அறுவடைக்கு” ஆகும் செலவுக்கு பட்ஜெட் தர வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருப்பதை நான் படித்தேன்.

 

“ஆமாம். இந்தியாவின் பெரிய மத நம்பிக்கைகள் அதற்குப் போதும். கிறிஸ்தவம், யூதம் தவிர ஹிந்து அதன் கிளைகள்,இஸ்லாம்,ஜொராஷ்ட்ர மதம் ஆகியவை ஜீவனுள்ள மதங்கள். எந்த ஒரு மதமும் பூரணமானதல்ல.

எல்லா மதங்களும் சமமானவை. ஆகவே வேண்டுவது என்னவெனில் உலகின் பெரும் மதங்களைப் பின்பற்றுவோரிடையே நட்புடனான தொடர்பு வேண்டுமேயன்றி மற்றவற்றை விட பெரிது என்று காட்டும் பயனற்ற முயற்சி தேவையில்லை. அப்படிப்பட்ட நட்பு ரீதியிலான தொடர்பால் நமது மதத்தில் உள்ள குறைகளையும் தேவையற்றவற்றையும் களைந்து விட முடியும்.

 

மேலே நான் கூறியவற்றால், இந்தியாவில் மதமாற்றத்திற்கான தேவை இல்லை. சுய தூய்மை, ஆன்மாவை உணர்தல் ஆகிய மாற்றமே இன்றைய அவசரத் தேவை.  இதை மதமாற்றம் என்று சொல்லப்படுவதற்கு என்றுமே அர்த்தமாகக் கொண்டதில்லை.

 

இந்தியாவை மாற்ற வருபவரிடம், “வைத்தியரே, முதலில் உம்மைக் குணப்படுத்திக் கொள்ளும்” என்று சொல்ல வேண்டுமல்லவா?

(மகாத்மா காந்தி நூல்கள் தொகுதி 46 பக்கம் 28)

**

ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம்:

 

Gandhiji clarified his views on the role of foreign missionaries in India. (23-4-1931)

 

“(If) instead of confining themselves purely to humanitarian work such as education,

medical services to the poor and the like, they would use these activities of theirs for

the purpose of proselytizing, I would certainly like to withdraw. Every nation considers

its own faith to be as good as that of any other. Certainly, the great faiths held by the

people of India are adequate for her people. India stands in no need of conversion from

one faith to another.

“Let me now amplify the bald statement. I hold that proselytizing under the cloak of

humanitarian work is, to say the least, unhealthy. It is most certainly resented by the

people here. Religion after all is a deeply personal matter, it touches the heart. Why

should I change my religion because a doctor who professes Christianity as his religion

has cured me of some disease or why should a doctor expect or suggest such a change

whilst I am under his influence? Is not his medical relief its own reward and

satisfaction? Or why should I, whilst I am in a missionary educational institution, have

Christian teaching t^mist upon me? In my opinion these practices are not uplifting and

give rise to suspicion if not even secret hostility. The methods of conversion must be

like Caesar^ wife above suspicion. Faith is imparted like secular subjects. It is given

through the language of the heart. If a man has a living faith in him, it spreads its aroma

like the rose its scent. Because of its invisibility, the extent of its influence is far wider

than that of the visible beauty of colour of the petals.

“I am, then, not against conversion. But I am against the modern method of it.

Conversion nowadays has become a matter of business like any other. I remember

having read a missionary report saying how much it cost per head to convert and then

present a budget for ‘the next harvest’.

“Yes, I do maintain that India’s great faiths all suffice for her. Apart from Christianity

and Judaism, Hinduism and offshoots, Islam and Zoroastrianism are living faiths. No one

faith is perfect.

All faiths are equally dear to their respective votaries. What is wanted therefore is living

friendly contact among the followers of the great religions of the world and not a clash

among them in fruitless attempt on the part of each community to show the superiority

of its faith over the rest. Through such friendly contact it will be possible for us all to rid

our respective faiths of shortcomings and excrescences.

“It follows from what I have said above that India is in no need of conversion of the kind

I have in mind. Conversion in the sense of self-purification, self-realization is the crying

need of the times. That, however, is not what is ever meant by proselytizing. To those

who would convert India, might it not be said, ‘Physician heal thyself’ ? (Complete Works of Mahatma Gandhi – Volume 46:Page 28)

**

மதமாற்றம் பற்றிய காந்திஜியின் கருத்துக்களை இதற்கு மேல் விளக்க வேண்டிய தேவை இல்லை.

இன்றைய போலி செகுலரிஸவாதிகள் காந்திஜியை தங்கள் துஷ்பிரசாரத்திற்கு இனியும் இரையாக்கத் தேவையில்லை.

1931ஆம் ஆண்டு அவர் கூறிய இந்தக் கருத்துக்கள் இன்றைக்கும் பொருந்தும்.

மதமாற்றப் பாதிரிகள் இன்னும் தீவிரமாக மக்களை ஏமாற்றுவதை நாடெங்கும் தினம்தோறும் பார்த்து வருகிறோம்.

கடலோரப் பகுதிகளிலும், மலைவாழ் மக்களின் பட்டி தொட்டிகளிலும், தேசத்தின் எல்லையோரப் பகுதிகளிலும் அவர்களின் முயற்சி அதிக அளவில் அதிகப் பணச்செலவில் இன்றும் தொடர்கிறது.

மதமாற்றத்திற்காக தேசத்தைத் துண்டாடும் கலவரங்களைத் தூண்டிவிடும் அளவிற்கு இன்றைய நிலைமை மோசமாகி விட்டது.

 

கிறிஸ்தவ பாதிரிகளே, முதலில் உமது வியாதியிலிருந்து நீவீ ர்  உம்மைக் குணப்படுத்திக் கொள்ளும் என்று காந்திஜியின் வார்த்தைகளை அப்படியே கூறி அவர்களை உடனடியாக பாரதத்தை விட்டு அகற்றுவதே இன்றைய தேவை.

***

ஹிந்து காந்திஜி! (Post No.4263)

Written by S.NAGARAJAN

 

 

Date: 2 October 2017

 

Time uploaded in London- 4-58 am

 

Post No. 4263

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

ஹிந்துத்வம் வாழ வழி காட்டியவர்

ஹிந்து காந்திஜி!

ச.நாகராஜன்

1

புனிதமான தினம் அக்டோபர் இரண்டாம் தேதி.

அண்ணல் அவதரித்த திருநாள்.

அவரைக் கொண்டாடும் விதமாக எழுத முற்படும் போது வந்த தலைப்பு தான் ஹிந்து காந்திஜி!

இந்தத் தலைப்பையே செகுலரிஸ்டுகள் விரும்பமாட்டார்கள்.

மாறாக கிறிஸ்துவ காந்திஜி என்றோ அல்லது இஸ்லாமிய காந்திஜி என்றோ தலைப்புக் கொடுத்திருந்தால் இமயமலை ரேஞ்சுக்கு என்னைப் பாராட்டுவார்கள்.

காந்திஜியின் வழியில் நடக்க விரும்புவதால் பாராட்டுக்கு பக்குவப்படாமல் உண்மையை எழுதத் துணிவேன்.

அதற்கு உகந்த தலைப்பு இது தான். ஹிந்து காந்திஜி!

 

2

சபர்மதி சிறையில் காந்திஜி இருந்த சமயம்.

ஒரு நாள் தி மான்செஸ்டர் கார்டியன் (The Manchester Guarding)  என்ற பத்திரிகையிலிருந்து அதன் பிரதிநிதி ஒருவர் 1922ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதிக்கு முன்னால் காந்திஜியைப் பேட்டி காண வந்தார்.

அந்தப் பேட்டியை மதராஸிலிருந்து வெளி வரும் ஆங்கிலப் பத்திரிகையான தி ஹிந்து 1922ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட்டது.

ஒத்துழையாமை இயக்கம் என்பது கிறிஸ்துவின் உபதேசத்திற்கு முரணானது என்று பத்திரிகையாளர் காந்திஜியிடம் கூறினார். அதற்கு காந்திஜி, “ நான் ஒரு கிறிஸ்தவன் அல்ல; ஆகவே கிறிஸ்தவ கொள்கைகளுக்கு ஏற்றபடி எனது செயல்களை நியாயப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லைஎன்று முகத்தில் அடித்தாற்போல் பதில் கூறினார்

3

தன்னை இந்தியாவின் நீண்ட கால நண்பர் என்று கூறிக் கொண்ட ஒரு அமெரிக்கப் பெண்மணி, “ஹிந்து சமயத்தைப் பற்றி உங்களுடைய விளக்கத்தை நீங்கள் கொடுத்து ஹிந்து சமயத்தையும் ஏசுநாதரின் உப்தேசங்களையும் ஒப்பிட்டுக் கூறுவீர்களா?” என்று வேண்டிக் கொண்டார்.

 

20-̀10-1927 யங் இந்தியா இதழில் அவரது கடிதத்தையும் தன் பதிலையும் காந்திஜி வெளியிட்டார்.

விரிவான அந்த பதில் ஹிந்துவாக தான் இருப்பதற்கான காரணம் என்ற காந்திஜியின் நிலைப்பாட்டை விளக்கும் அற்புத பதிலாக அமைந்தது.

 

ஆனால் இன்றைய செகுலரிஸ்டுகள் காந்திஜியைத் தங்களின் கபடப் போர்வைக்குள் சுருட்டப் பார்ப்பதால் அதையெல்லாம் பற்றிப் பேசுவதில்லை;; வெளியிடுவதில்லை.

அவரது பதிலின் ஒரு பகுதி:

 

“பரம்பரையின் செல்வாக்கில் எனக்கு நம்பிக்கை உண்டு. எனவே, நான் ஓர் ஹிந்து குடும்பத்தில் பிறந்ததால், நான் ஹிந்துவாக இருந்து வருகிறேன்.

 

எனக்குத் தெரிந்த எல்லா சமயங்களுக்குள்ளும் ஹிநது சமயம் ஒன்று தான் மிகவும் சகிப்புத்தன்மை வாய்ந்தது என்பதை நான் அறிந்து கொண்டிருக்கிறேன்.

 

அதில் கண்மூடித்தனமான பிடிவாதத்திற்கு இடமில்லை. இது தான் என் மனத்தை மிகவும் கவர்ந்திருக்கிறது.

அதில் தான் அஹிம்சை நடைமுறையிலும் அனுசரிக்கப்படுகிறது. (ஜைன மதம் அல்லது புத்த மதத்தை ஹிந்து சமயத்திலிருந்து வேறானதாக நான் கருதவில்லை)

 

ஹிந்து சமயம் பசுவை வழிபடுவது, ஜீவ காருண்ய மலர்ச்சிக்கே அடிப்படையாகும். எல்லா உயிர்களும் ஒன்று என்பதையும், எனவே எல்லா உயிர்களும் புனிதமானவை என்பதையும் அது செயலில் காட்டுவதாக இருக்கிறது.

அந்த நம்பிக்கையின் நேரடியான பலனே, மறு ஜன்மத்தில் உள்ள மகத்தான நம்பிக்கையாகும்.

 

மேலும் சத்தியத்தை இடைவிடாது தேடியதன் அற்புதமான பலனாகவே, வர்ணாசிரம தருமம் கிடைத்தது.

ஹிந்து சமயத்தில் நான் இருந்து வருவதற்கான காரணமான சிறந்த அம்சங்கள் என்று எனக்குத் தோன்றியதையே இங்கே மிகவும் சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

 

4

1937ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் தேதி  போலந்திலிருந்து தத்துவ பேராசிரியரான க்ரென்ஸ்கி காந்திஜியை வந்து சந்தித்தார்.

அனைவரும் படிக்க வேண்டிய பேட்டி இது.

முழுவதையும் தர இடம் இல்லை என்பதால் சில முக்கியப் பகுதிகளை மட்டும் இங்கு காணலாம்:

 

Krzenski : Catholicism is the only true religion

Gandhiji : Do you therefore say that other religions are untrue?

Krzenski : If others are convinced that their religions are true they are saved.

Gandhiji : Therefore you will say that everyone would be saved even through untruth.

Krzenski: But I have studied all religions and have found that mine is the only true religion.

 

Gandhiji : But so have others studied other religions. What about them?

Krzenski : I have examined the arguments in favour of other religions.

Gandhiji : But it is an intellectual examination. You require different scales to weigh spiritual truth…. My submission is that your position is arrogant. But I suggest you a better position. Accept all religions as equal, for all have the same root and the same laws of growth.

Professeor switched to a next question.

 

Gandhiji : It is no use trying to fight these forces without giving up the idea of conversion, which I assure you is the deadliest poison that ever sapped the fountain of truth.

 

 

மதமாற்றம் என்பது கொடிய விஷம்

 

மதமாற்றம் என்பது கொடிய விஷம் என்ற காந்திஜியின் கருத்து  செவிடன் காதில் ஊதிய சங்கு போலத் தான் ஆயிற்று பல கத்தோலிக்க பிஷப்புகளுக்கு.

காந்திஜியை “அறுவடை” செய்தால் ஒட்டு மொத்த இந்தியாவையுமே அறுவடை செய்தது போலத் தானே!

அதை நம்பி இந்த போலந்து புரபஸர் மட்டும் வரவில்லை.

ஸ்டான்லி ஜோன்ஸ் உள்ளிட்ட பிரபல பாதிரிகள் அவரை நோக்கிப் படை எடுத்து வந்தன.

ஆனால் ஏமாந்தே போயின.

அனைத்தையும் அன்பர்கள் விரிவாக முழுவதுமாகப் படிக்க வேண்டும்.

 

5

போலந்து மாணவன் ஒருவன் காந்திஜியின் போட்டோ ஒன்றை எடுத்து வந்தான். அவரிடம் அதில் கையெழுத்திட வேண்டினான்.

கத்தோலிக்க பாதிரிமார்கள் நடத்தும் பள்ளி ஒன்று இருக்கிறது.

உங்கள் கையெழுத்திட்ட இந்த போட்டோவை விற்று அதில் வரும் பணத்தை அவர்களிடம் கொடுத்து விடுவேன் என்றான அந்த மாணவன்.

 

“ஆ, அப்படியா சேதி! இதில் கையெழுத்திட்டு பாதிரிகளின் மதமாற்ற வேலைக்கு நான் உதவுவேன் என்று நீ எதிர்பார்க்கிறாயா?” என்று கூறியவாறே போட்டோவை அந்த மாணவனிடமே திருப்பிக் கொடுத்தார் காந்திஜி.

மஹாதேவ தேசாய் தனது டயரிக் குறிப்பில் இந்தச் சம்பவத்தை விரிவாகக் குறிப்பிடுகிறார்.

 

6

காந்திஜிக்கு பாதிரிகளின் அந்தரங்க எண்ணமும் தெரியும்;ஜிஹாதிகளின் உள் நோக்கமும் புரியும்.

அவர் தெளிவான ஹிந்துவாகவே வாழ விரும்பினார்.

ஏனெனில் ஒரு ஹிந்துவுக்கு யாரும் பகை இல்லை. அவனுக்கு அனைவரும் சமமே.

 

ஆனால் ஒரு கிறிஸ்துவனுக்கோ அவனுக்கு முன்னால் மற்றவர் சமம் இல்லை. அவன் ஏசுவுக்குத் தன்னை ஒப்புக் கொடுக்க வேண்டும்.

 

ஒரு இஸ்லாமியருக்கு அடுத்தவர் யாரானாலும் காஃபிர் தான்!

ஹிந்து மதம் வாழ்ந்தால் உலகில் அனைவரும் வாழலாம். ஆனால் இஸ்லாமோ அல்லது கிறிஸ்தவமோ வாழ்ந்தால் ஏனையது இருக்கக் கூடாது.

 

காந்திஜி அனைவரும் வாழ வேண்டுமென்று விரும்பினார்; அந்த நல்லெண்ண வேள்வியில் தன்னை ஆகுதி ஆக்கினார்.

இன்றைய போலி செகுலரிஸ்டுகளும், மதவாதிகளும் அவரை மறக்கடிக்கவே முயல்வர்.

 

அதைத் தோற்கடிக்க ஹிந்து காந்திஜியைப் போற்றுவோம். உண்மையான ஹிந்துவாகவே என்றும் இருப்போம்.

ஹிந்து ராஷ்டிரத்தை நிறுவுவோம்.

***

 

பாரதியாரின் தீர்க்கதரிசனம்

Article No. 2064

Written by S NAGARAJAN

Date : 12  August  2015

Time uploaded in London :–  6-05 am

 

மதமாற்றம் செய்து சகோதர ஹிந்துக்களிடமிருந்து பிரித்த எதிரிகள்! – 2

By .நாகராஜன்

 1430101410-1335_india1200AD

பாரதியாரின் தீர்க்கதரிசனம்

ஆங்கிலேயர்களின் முக்கிய நோக்கம் எந்த விதத்திலெல்லாம் பிரிக்க முடியுமோ அந்த விதத்திலெல்லாம் பாரதீயர்களைப் பிரித்து இந்திய சுதந்திரத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது தான்.

 

இது முடியாத நிலையில் ஒரு வேளை இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டால் அதை உருப்படியாகத் தக்க வைத்துக் கொள்ளாமல் ஏராளமான பிரிவினைகளுக்கு வித்திட்டு இந்தியாவை கூடிய சீக்கிரம் சிதறுண்டு சின்னாபின்னமாக்குவது தான் ஆங்கிலேயரின் நோக்கம்.

 

இந்த வெள்ளைக்கார குள்ளநரி தந்திரத்தை நன்கு தீர்க்கதரிசனத்தால் கண்ட மஹாகவி பாரதியார் முஸ்லீம்கள்ஹிந்துக்கள் பிளவுபட்டு அழியக் கூடாது, சுதந்திரம் பெறுவதை எந்தக் காரணம் கொண்டும் தள்ளிப் போட்டு விடக் கூடாது என்று ஆரம்பமுதலே குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்.

 

அதன் வெளிப்பாட்டையே முந்தைய பாராக்களில் பார்த்தோம். இனி அவரது கட்டுரையின் தொடர்ச்சியில் வரும் ஒரு முக்கிய பாராவைப் பார்ப்போம்:-  

 

 “ஆதி முதல் அந்தியம் வரையில் இந்தியா மேல் படையெடுத்து வந்த ஒவ்வொரு மிலேச்ச ஜாதியும் இந்தியர்களில் வேற்றுமைகளுண்டுபண்ணி அவர்களில் தேசத்துரோகிகளாயும், ஸகோதரத் துரோகிகளாயுமிருந்த சிலரைத் தம் வசம் சேர்த்துக் கொண்டு வஞ்சனையாலும் பலவித மோசங்களாலும் இராஜ்யங்களைக் கைவசப்படுத்திக் கொண்டார்களேயொழிய வீரத்தன்மையோடும் தரும வழியிலும் ஒருவராவது ஒரு அடி பூமி கூட ஸம்பாதிக்கவில்லை. ஆங்கிலேயர்கள் சென்னை இராஜதானியிலும் மற்றுமுள்ள இந்தியாவின் பிராந்தியங்களிலும் என்னென்ன மோசங்களும் மித்திர துரோகங்களும் செய்து இராஜ்யம் ஸம்பாதித்தார்களென்பது சரித்திரங்களை வாசிக்கத் தெரியும். பூர்வீக பிரதேச மஹம்மதீய எதிரிகளும் இவ்வாறேதான் ஸம்பாதித்தார்கள். இன்றைக்கும் நாளைக்கும் இது தான் ஆங்கிலேயரின் இராஜதந்திரம். ஸர்வ ஜீவதயாபரக் கொக்கைப் போல் (ஓடு மீனோட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாங் கொக்கு) இந்தியா காரியதரிசியாகிய மிஸ்டர் மார்லீ துரை இந்தியாவுக்கு நன்மை செய்வது போல் சில சீர்திருத்தங்களைக் காட்டி மஹம்மதீயர்களுக்கும் மற்ற இந்தியர்களுக்கும் புதிய வேற்றுமையையும் விரோதத்தையும் மூட்டி விட்டார்

 

எப்படி இருக்கிறது கட்டுரையின் வேகமும், வீச்சும்? துரோகத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டதே ஒவ்வொரு அடியும் என்ற வார்த்தைகளில் தான் எவ்வளவு தீவிரம்!!

 

தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்கள். சிறந்த பகுப்பாய்வு. மார்லியின் சீர்திருத்தங்களைசர்க்கரையால் மூடப்பட்ட விஷம்என்று அடுத்து வர்ணிக்கிறார் மஹாகவி.

 

 

பிளவுபடுத்தும் சக்திகளை தூர எறிவீர்!

 

ஒற்றுமை குன்றி இன்னும் நாசமாய்ப் போக வந்த மாயை என்பதையுணராது நம் மஹம்மதீய சகோதரர்களும் மற்ற இந்தியர்களும் மனஸ்தாபப்படுவது என்ன மதியீனம்!” என்று அவர் மனம் நொந்து கொள்கிறார்.

 

இன்று இந்தியாவில் வாழும் முஸ்லீம்களின் பிரச்சினைகளுக்கு அவர்களே காரணம். அதைத் தீர்க்க அவர்களால் மட்டுமே முடியும். இதை பாரதியாரின் அணுகுமுறையில் சென்றால் அவர்களால் ஒரு நொடியில் சரி செய்து விட முடியும்.

ஆங்கிலேயன் செய்து வைத்த பிரிவினைகளின் வேரை அடியோடு முஸ்லீம்கள் பிடுங்கி எறிய வேண்டும்.

இந்தோனேஷியாவில் ராமர் தேசீய வீரர். கர்ணன் வியந்து பார்க்கப்படும் கதாபாத்திரம்.

 

 

இதனால் தான் சுகர்ணோவின் தந்தை தனக்குப் பிடித்த கதா பாத்திரமான கர்ணனின் பெயரைத் தன் மகனுக்கு வைக்க விரும்பினார். ஆனால் கர்ணன் போல தீயோருக்குத் தோள் கொடுக்கக் கூடாது என்ற காரணத்தால் சுகர்ணன் என்று பெயர் வைத்தார். இந்தோனேஷியாவின் ஏர்லைன்ஸின் பெயர் கருடா ஏர்வேஸ்.

 

பெரிய முஸ்லீம் தேசமான இந்தோனேஷியாவில் இதெல்லாம் சாத்தியமெனில் இந்தியாவில் இது முடியாதா என்ன? தேசம் மதத்தினால் பிளவு படும் ஒன்று அல்ல; அது உணர்வினாலும், நடை, உடை, பாவனைகளினாலும் ஒன்று பட்டு உயிர் அமுதம் தரும் அன்னை என்பதை இந்தியர்கள் அனைவரும் உணரும் போது இந்தியா ஒளிரும்!

 

இதற்கு ஒரே வழி முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் பிரிவினைக்குத் தூபம் போடும் தங்களின் இன்றைய (2015ஆம் ஆண்டு) தலைவர்களுக்குமுழுக்குப் போட்டு விட்டுபுதிய தலைமுறைக்கான தலைவர்களை உருவாக்க வேண்டும்; ஒருவேளை அவர்கள் உருவாகி இருந்தால் அவர்களை ஏற்க வேண்டும்; உயரத்தில் ஏற்ற வேண்டும்.

 

இதற்கு ஒவ்வொரு ஹிந்துவும் முஸ்லீம்களுக்கு உதவ வேண்டும்.

மஹாகவிக்கு உண்மையில் நாம் செய்யும் அஞ்சலி இதுவே ஆக இருக்கும்.

***************