கற்பு பற்றி வள்ளுவர், வால்மீகி , கம்பர், ஷேக்ஸ்பியர், மநு! (Post No.10,664)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,664

Date uploaded in London – –    16 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர்

நிறைகாக்குங் காப்பே தலை – குறள் 57

பெண்களை பலவகையான காவலுக்கு இடையே சிறைவைப்பது என்ன பயனைத் தரும்?  தம் 

கற்பு நெறியால் தம்மைத் தாமே காத்துக் கொள்ளும் காப்புதான் சிறப்புடைய காவல் ஆகும் .

பெண்களை என்ன காவலில் வைத்த்தாலும் பலன் தராது. அவர்களுடைய கற்புதான் அவர்களைக் காக்கும். இந்தக் கருத்து வால்மீகி ராமாயணம், உலகின் முதல் சட்ட நூலான மனு ஸ்ம்ருதி, ஷேக்ஸ்பியரின் நாடகம் , கம்பராமாயணம் ஆகியவற்றிலும் வருகிறது. ஆயினும் வால்மீகியும் மனுவும் இதை அப்படியே சொல்லியிருக்கிறார்கள்.

வால்மீகி சொல்கிறார் ,

न गृहाणि न वस्त्राणि न प्राकारास्तिरस्क्रियाः |

नेदृशा राजसत्कारा वृत्तमावरणं स्त्रियः ||

ந க்ருஹானி ந வஸ்த்ரானி ந ப்ரகார ஸ்திரஸ்க்ரியாஹா

நேத்ருசா ராஜஸத்காரா வ்ருத்தமாவரணம் ஸ்திரியஹ

இதன் பொருள் :

வீடோ , அணியும் உடைகளோ,வீட்டைச் சுற்றி எழுப்பப்படும் காவல் மதில்களோ , கதவுகளோ அல்லது அரசர்கள் கொடுக்கும் விருதுகளோ ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பாக இராது .அவளுடைய ஒழுக்கமே (கற்பு) அவளைப் பாதுகாக்கும் கேடயம் ஆகும் — யுத்த காண்டம், அத்தியாயம் 114

Xxx

மானவ தர்ம சாஸ்திரத்தில் மநுவும் இதையே சொல்கிறார்,

பெண்களை ஆண்கள் , ஒரு வீட்டுக்குள் காவலில் வைப்பது அவர்களைக் காக்காது; பெண்மணிகள், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதே நல்ல பாதுகாப்பு ஆகும் – மநு ஸ்ம்ருதி 9-12

अरक्षिता गृहे रुद्धाः पुरुषैराप्तकारिभिः ।

आत्मानमात्मना यास्तु रक्षेयुस्ताः सुरक्षिताः ॥ ९.१२॥

அரக்ஷிதா க்ருஹே ருத்தாஹா புருஷைராப்தகாரிபிஹி

ஆத்மானமாத்மனா  யாஸ்து ஸுரக்ஷிதாஹா

“நம்பிக்கை மிக்க ஆண்களைக் காவல் காக்கவைத்தாலும்” அது அவர்களைக் காக்க முடியாது என்பதையும் மநு சேர்த்துச் சொல்லியுள்ளார். அவர்களிடம் மனக் கட்டுப்பாடு , கற்பு நெறி, இல்லாவிடில் இது சாத்தியமாகாது என்று உரைகாரர்களும் உறுதிப்படுத்துகின்றனர்.

XXXX

ஸம்ஸ்க்ருத , தமிழ் இலக்கியங்களில் கற்பு என்பதை ஒரு முக்கிய பண்பாகக் கருதி நிறைய பாடல்களை எழுதிச் சேர்த்துள்ளனர். அருந்ததி என்னும் கற்பரசியை சங்கத் தமிழ் நூல்களும் வேத இலக்கியங்களும் போற்றிப் பாடியுள்ளன . இப்படிப்பட்ட ஒரு பண் பையோ , மாதரசியையோ மேலை நாட்டு இலக்கியத்தில் காண்பது அரிதிலும் அரிது. ஆயினும் நாடக மன்னன் ஷேக்ஸ்பியர் தனது நாடகம் ஒன்றில் டயானா DIANA  என்னும் கத பாத்திரம் வாயிலாக சொல்லுவதைப் படியுங்கள்

டயானா

என்னுடைய மானம் ஒரு மோதிரம் ;

என் கற்புதான் எங்கள் வீட்டின் ஆபரணம்

அது என் முன்னோர்களிடமிருந்து வந்தது

……….

இழப்பதற்கு அரியது

All is well that ends well, Act 4, Scene 2

Xxx

கம்பனும் கற்பு பற்றி, சீதையின் கற்பு பற்றி , அது எப்படி அவளைக் காக்கும் என்பதை குறைந்தது இரண்டு இடங்களில் காட்டுகிறான் . சீதையை தூக்கிச் செல்லும் ராவணனை தடுக்க முயன்று வெட்டுப்பட்ட ஜடாயு என்னும் பறவை அரசன், அடடா இவள் ராவணனால் சிறை வைப்படப்போகிறாளே என்ன ஆகுமோ என்று புலம்புகிறான். பின்னர் தன்னைத் தானே தேற்றிக்கொண்டு கவலைப்பட ஒன்றுமில்லை; சீதையின் கற்பு அவளைக் காக்கும் என்று சொல்கிறான்

3560.  பரும் சிறை இன்னன பன்னி உன்னுவான்;

அருஞ்சிறை உற்றனளாம் ” எனா மனம்

பொரும் சிறை அற்றதேல் பூவை கற்பு எனும்

இரும் சிறை இறாது ‘என இடரும் நீங்கினான்.

ஆரண்ய காண்டம் சடாயு உயிர்நீத்த படலம்

பூவை – நாகண வாய்ப்பறவை போல மொழியுடைய சீதை 

Xxx

சுந்தர காண்டத்தில் மற்றோர்  காட்சி ,

ராவணனின் அரண்மனை படுக்கை அறை , அந்தப் புரம் எல்லாவற்றிலும் சீதையைத் தேடும் அனுமன், அசோகவனத்தில் ஒரு மரத்தின் அடியில், அரக்கிகளின் காவலுக்கு  இடையில் சீதையைக் கண்டவுடன் வியக்கிறான் : அற்புதம், அற்புதம் ! இவள் இங்கே மானபங்கம் ஆகாமல் இருந்ததற்கு ஜனகன் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் காரணமா?அல்லது தர்மம் இவளை இதுவரை காத்து உதவியதா? அல்லது சீதையின் உயரிய கற்பு நெறிதான் அவளைக் காத்து நிற்கிறதா?  ஒப்பற்ற காட்சி;  எது காரணம் என்பதை என்னைப் போன்றவர் உரைக்கவும் இயலுமோ என்று கம்பன் பாடி முடிக்கிறான்.

5143. 

தருமமே காத்ததோ ? சனகன் நல் வினைக்

கருமமே காத்ததோ? கற்பின் காவலோ ?

அருமையோ !அருமையே ! யார் இது ஆற்றுவார் ?

ஒருமையே, எம்மனோர்க்கு, உரைக்கற்பாலதோ ?

-சுந்தர காண்டம் , காட்சிப் படலம்

Xxxx

ஆக கற்பு நெறியின் சிறப்பை வால்மீகி முதல் கம்பன் வரை கண்டோம். நாலடியார், பழமொழி ஐம்பெரும் காப்பியங்களிலும் நிறைய குறிப்புகள் உள .

–சுபம் —-

tags-  கற்பு , வள்ளுவர், வால்மீகி , கம்பர், ஷேக்ஸ்பியர், மநு, 

எண் 14-ன் மஹிமை! (Post No.7384)

மநுவை வள்ளுவர் காப்பி அடித்தாரா? (Post No.7221)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 16 NOVEMBER 2019

Time  in London – 19-25

Post No. 7221

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

மநு நீதி நூல் – Part 45

ரெவரண்ட் ஜி.யூ. போப் முதல் அண்மையில் பேரரறிஞர் டாக்டர் இரா.நாகசாமி வரை பலரும் திர்வள்ளுவர் எழுதிய திருக்குறளில் மநுவின் கருத்துக்களும் உவமைகளும் அப்படியே இருப்பது பற்றி சுட்டிக்காட்டி வந்துள்ளனர். இமயம் முதல் குமரி வரை பாரதீய சிந்தனை ஒன்றே  

என்பதை இது காட்டுகிறது. யாரும் யாரையும் காப்பி அடிக்கவில்லாஇ; இன்னும் ஆழமாகப் போனால் மஹாபாரதத்திலும் இக்கருத்துக்கள் இருப்பதைக் காணலாம். ஆனால் அதுவோ மஹாசமுத்திரம் ஒரு லட்சம் ஸ்லோகங்கள்; இரண்டு லட்சம் வரிகள்; பத்து லட்சம் சொற்கள். யாரே அதன் கரை காண்பார்?

மநு ஸ்மிருதியின் ஒன்பதாவது அத்தியாயத்தைத் தொடர்ந்து காண்போம். முந்தைய பகுதியில் 9-220 வரை கண்டோம். இதோ தொடர்ச்சி. முதலில் புல்லட் பாயிண்ட்ஸ்- ரத்தினச் சுருக்கம்—

வள்ளுவர், நாற்பது குறட்பாக்களில் நாலு அதிகாரங்களில் (சூது, கள்ளூண்ணாமை, கயமை, ஒற்றாடல் ) சொன்ன விஷயங்களை இந்த ஸ்லோகங்களில் மநுவும் குறிப்பிடுகிறார்  . அந்த  தீமைகளை கண்டிக்கிறார். அதாவது வள்ளுவரும் மநுவும் ஒரே கருத்தைச் சொல்கின்றனர். மநுவில் இடையிடையே ஜாதிகள் பற்றி வரும். வள்ளுவத்தில் அது இல்லை. காரணம்?

மநு எழுதியது சட்டப் புத்தகம்; வள்ளுவர் எழுதியது நீதி நூல்

வள்ளுவர் எழுதியது நமக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்னர்; மநு எழுதியதோ அதற்கும் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்! (வள்ளுவர் மற்றும் மநுவின் காலம் பற்றி முன்னரே எழுதியதைக் காணவும்)

மேலும் சில சுவையான ஸ்லோகங்கள்:-

9-221- சூதாட்டத்துக்கும், பெட்டிங் (BETTING AND GAMBLING)  எனப்படும் பந்தயம் கட்டும் போட்டிக்கும் தடை விதிக்கவும்

9-235- பஞ்ச மஹா பாதகங்கள் எவை?

9-237 முதல் — நெற்றியில் சூடு போட்டு, பச்சை குத்தி அவமானப்படுத்தல்; ஜாதியிலிருந்தும், ஊரிலிருந்தும் விலக்கி வைத்தல்

9-244- பறிமுதல் செய்த சொத்துக்களை கடலில் எறி

9-245- வருணன் நம்மைக் கவனிக்கிறான் (தொல்காப்பியத்தில் வரும் வருணன்)

9-247- நல்ல மன்னன் நாட்டில் நிலங்கள் தானாக விளையும் .(வள்ளுவனும் குறளில் 545, 559, 560 சொல்லும் அதிசயம்; காளிதாசனும் இந்த அதிசயத்தை விளம்புவான்

9-249- அப்பாவிகளைத் தண்டித்து விடாதே

9-250-  18 வகைக் காரணங்கள் (எட்டாம் அத்தியாயத்தில் 4-7 முதல் உள்ள ஸ்லோகங்களில் 18 வகைக் காரணங்கள் உள.)

9-256 – ஒப்பிடுக- குறளில் வரும் ஒற்றாடல் அதிகாரம்.

9-288- சிறைச் சாலைகளை` சாலையின் இரு புறமும் அமைக்கவேண்டும்; எல்லோரும் கைதிகளையும் அவர்கள் படும் கஷ்டங்களையும் காணட்டும்

9-258- ஜோதிடர் பற்றி

9-286, 9-329 –ரத்தினக் கற்கள் பற்றி

9-301– யுகங்களும் மன்னர்களும் பற்றிய சுவையான செய்தி

9-303- மன்னர்கள் இந்திரன், யமன் முதலிய திக் பாலகர் போல;

இதுவும் காலத்தைக் காட்டும். புறநானூறு முதலிய நூல்களில் மன்னரை சிவன், முருகன் மற்றும் இந்திரன் அக்னி, யமனுக்கு ஒப்பிடுவர். ஆனால் மநுவில் பிரம்ம, விஷ்ணு, சிவனை விட வருணன் இந்திரன், அக்னியே ஒப்புமைக்கு வரும்; மநு, காலத்தால் மிகவும் முந்தையவர். கிருஷ்ணன், பலராமன் போன்று என்று புறநானூறு சொல்லும் உவமைகள் மநுவில் இரா.)

9-313 – சான்றோரைப் பகைக்காதே; அரசு தவிடு பொடியாகிவிடும்; திருவள்ளுவரும் இதைச் சொல்லுவார்- குறள் 898, 899

9-264, 265- எந்த எந்த இடங்களை அரசன் கண்காணிக்க வேண்டும் என்ற பட்டியல்

9-270- திருடர்களுக்கு மரண தண்டனை; வள்ளுவரும் மரண தண்டனையை ஆதரிக்கும் புலவர் (குறள் 550, 1224, 1077, 1078))

9-276- திருடர்களின் கைகளை வெட்டு ( வள்ளுவர் கஞ்சர்களின் கையை முறுக்கி மூஞ்சியில் குத்தி முகவாக்கட்டைடையை நொறுக்கு என்கிறார் (குறள் 1224, 1077)

9-290- மாயா ஜால மந்திரவாதிகள், சூன்யக்காரிகளுக்கு 200 பணம் அபராதம் ( மேலை நாடுகளில் ஜோன் ஆப் ஆர்க்கை எரித்தது போல பல்லாயிரம் பெண்களை கிறிஸ்தவப் பாதிரிகள் உயிருடன் கொளுத்தி விட்டனர்)

9-292- பொற்கொல்லர்களுக்கு கடும் தண்டனை

9-294 – அரசின் ஏழு அங்கங்கள்

9-311 – குறள் (151) உவமை — அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல பொறுமை வேண்டும்; பூமாதேவியின் பொறை பற்றி சம்ஸ்கிருத நூல்கள் எல்லாவற்றிலும் உவமைகள் வரும்

9-313 முதல் – ஐந்து ஸ்லோகங்களில் பிராமணர்களின் புகழ்; புத்தரும் தம்ம பதத்தில் 26ஆவது அத்தியாயத்தில் பிராமணர்களின் புகழ் பாடுகிறார்.

9-320- க்ஷத்ரியர்கள் பிராமணர்களிடமிருந்து தோன்றினர்.

TAGS

மநு, வள்ளுவர், காப்பி அடி, ஜோதிடர் பற்றி, ரத்தினக் கற்கள், திருட்டு, மரணதண்டனை

Valluvar and Vasuki

மநுவும் ஹமுராபியும்- யார் முதல்வர்? (Post No.5831)

Hamurabi and Sun God Shamash

Research Article written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 25 December 2018
GMT Time uploaded in London – 16-00
Post No. 5831


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பழங்கால இந்தியாவில் நிறைய தர்ம சாஸ்திரங்கள் (சட்ட நூல்கள்) இருந்தன. அவைகளில் சிறந்தது மநுதர்ம சாஸ்திரம் என்பதால் எல்லோரும் தங்களை மநுநீதி மன்னன் என்று புகழ்ந்து கொண்டனர். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனுநீதிச் சோழனும் அவர்களில் ஒருவன். பாண்டியர் செப்பேடுகளும் மநு நீதி வழுவாது ஆண்ட மன்னர்கள் என்று பாண்டியர்களைப்  புகழ்கின்றன. மநு என்பவர் ரிக் வேத காலத்தில் வாழ்ந்தவர். 4000 முதல் 10,000 ஆண்டுகள் வரை பழமையுடைத்து என்று அறிஞர்களால் போற்றப்படும் ரிக்வேதத்தில் மநுவின் பெயர் உளது. கிருஷ்ணனும் பகவத் கீதையின் நாலாவது அத்தியாயத்தின் முதல் ஸ்லோகத்தில் தான் முன்னொரு காலத்தில் விவஸ்வானுக்கு உபதேசித்ததை அவருடைய மகனான வைவஸ்வத மநுவுக்கு உபதேசித்ததாகவும் அவர் சூரிய குல முதல் மன்னனான இக்ஷ்வாகுவுக்கு உபதேசித்ததாகவும் அர்ஜுனனிடம்

சொல்கிறார். ஆக மஹாபாரதத்துக்கும் முந்தையவர் மநு. அதாவது கி.மு 3102க்கும் முன்னர்!

ஆக மநுவின் காலம் மிகப்பழமையா னது. ஆனல் இப்போதுள்ள மநு நீதி நூல் சூத்திரர்களுக்கு எதிராக 40, 50 ஸ்லோகங்கள் சேர்க்கப்பட்ட UPDATED EDITION அப்டேடட் எடிஸன். அதாவது புதிய பதிப்பு.

மநுவும் ரிக் வேதமும் ‘சதி’ என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் பற்றிக் கதைப்பதில்லை. மநுவும் ரிக்வேதமும் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் ஸரஸ்வதி நதி பற்றிப் பேசுகின்றன. ஆகவே மநு என்பவர்—அதாவது ஒரிஜினல் மானவ தர்ம சாஸ்திரத்தை எழுதிய வைவஸ்வத மநு — மிகப்பழையவர். ஆயினும் பாலைவனத்தில் கெட்டுப் போகாமல் இருக்கும் ஹமுராபியின் களிமண் பலகைகளைக் கண்டு மகிழ்ந்த மேலை நாட்டினர் ஹமுராபியின் சட்ட புஸ்தகததை விதந்து ஓதுவர். இது மநு பற்றி அறியாததால் வந்த தோஷம்!

ஹமுராபி யார்?

ஹமுராபி என்னும் மன்னன் பாபிலோனிய அரசன். அவன் கி.மு.1792-ல் அரசாட்சி செய்யத் துவங்கினான். அவனுக்கு முன்னரே பாபிலோனியா, சுமேரியா முதலிய அரசுகளின் கீழ் சட்டங்கள் இருந்தபோதும் ஹமுராபி அதை ஒரு முறைப்படுத்தி கல்வெட்டிலும், களிமண் பலகைகளிலும் எழுதிவைத்தான். அதில் சூசா (SUSA IN IRAN) என்னும்  இடத்தில் அவன் எழுப்பிய பெரிய கல்தூணில் செதுக்கி வைத்தது முக்கியமானதாகும். ஏனெனில் அது நிறுவப்பட்ட இடத்திலிருந்து அகற்றப்பட்டு வேறிடத்தில் இருந்ததை பிரெஞ்சு அதிகாரிகள் பாரீஸிலுள்ள லூவர் மியூஸியத்தில் கொண்டு வைத்தனர்.இதனால் ஹமுராபியின் புகழ்  பரவியது.

‘பல்லுக்குப் பல்,கண்ணுக்குக் கண்’ என்று

தண்டனை கொடுப்பது அவன் வழக்கம்..

முதலில் மநுவின் சட்ட நூலுக்கும் ஹமுராபி சட்டத்துக்கும் உள்ள மேம்போக்கான ஒற்றுமைகளைக் காண்போம்:

மநு என்பவன் விவஸ்வானின் மகன்; விவஸ்வான் என்பவன் சூரிய பகவான். விவஸ்வானின் புதல்வன் எ ன்பதால்தான் வைவஸ்வத மநு என்று பெயர் பெறுகிறான். அவனுக்கு முன்னரும் பல மநுக்கள் இருந்தனர். மநுவிடமிருந்து சூரியகுல முதல் மன்னனான இக்ஷ்வாகுவுக்கு, தான்

யோக விஷயங்களைச் சொல்லிக் கொடுத்ததாக கிருஷ்ணன் கூறுகிறார் (கீதை 4-1). இங்கு சூரியன் – மநு – சட்டம் பற்றிய தொடர்பு தெரிகிறது.

.

முதல் ஒற்றுமை

இது போலவே பாபிலோனியாவிலும் ஹமுராபி நிறுவிய கல்தூணில் ஷாமாஷ் என்னும் சூரியதேவனே ஹமுராபிக்கு உபதேசிக்கிறார்

ஹமுராபி என்பதை சமர+ரவி (போர் சூரியன்) என்பதன் திரிபு என்றே நான் கருதுகிறேன்.

இரண்டாம் ஒற்றுமை

மநுவின் புஸ்தகத்தைப் பார்த்து, ஹமுராபியும் தனது புஸ்தகத்தை 12 பிரிவாகப் பிரித்தார். மநு தர்ம நூலிலும் 12 அத்தியாயங்கள்தான்.

மூன்றாம் ஒற்றுமை

சங்கராச்சார்யார் முதலிய மதிக்கத்தக்க பெரியோர்களிடம் பக்தர்கள் பேசுகையில் தம்முடைய எச்சில் அவர்கள் மீது தெறிக்காமல் இருக்க பயபக்தியாக வாய் புதைத்து– வாயில் கை வைத்துக் கொண்டு பேசுவர்- இது போல ஷாமாஷ் என்னும் சூரிய/ நீதி தேவதையிடம் சட்டங்களைப்பெறும் ஹமுராபி பவ்யமாக நிற்பது சிலைகளில் காண்பிக்கப்பட்டுள்ளது.

நாலாம் ஒற்றுமை

பிற்காலத்தில் அசோக சக்ரவர்த்தியும் ஹமுராபி போல பொது இடங்களில் தர்ம விதிக்ளை மக்கள் பேசும் பாலி மொழியில் எழுதி வைத்தார். ஹமுராபியும் களிமண் பலகை தவிர பெரிய கல்வெட்டுகளில், மக்கள் பேசும் அன்றாட அக்கடியன் மொழியில் எழுதி வைத்தார்.

அசோகன் இப்படி செய்தது ஹமுராபியைப்  பார்த்து என்று சொல்லுவதைவிட இப்படி ஒரு வழக்கம் இந்தியாவிலும் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அசோகன் நிறுவிய பல்லாயிரம் கல்வெட்டுகளில் இன்று 30+ மட்டுமே உள்ளன. இது போல, பழங்கால இந்திய கல்வெட்டுகள் பருவக் கோளாற்றினாலும் வெளிநாட்டுக் காட்டுமிராண்டிப் படை எடுப்புகளினாலும் அழிந்தன என்று கருதலாம்.

ஐந்தாம் ஒற்றுமை

ஹமுராபி கல்வெட்டில் 282 சட்டங்கள் மட்டுமே உள. இவை எல்லாம் மநுவும் பிரஸ்தாபித்த விஷயங்களே.ஆனால் மநுவோ பாரதப்  பண்புகளைக் காட்டி ஒவ்வொன்றையும் விவரிக்கிறான். ஹமுராபி அப்படி எதுவும் சொல்லாமல் சட்டங்களை மட்டும் சொல்கிறான்.

ஆறாம் ஒற்றுமை

ஷமாஷ் என்னும் நீதி தேவதை,சூரிய தேவன்; ‘உடு’ என்றும் சுமேரியாவில் அழைக்கப்பட்டான். ‘உடு’ என்பது நட்சத்திரம், விண்மீன் என்றும் தமிழ் .ஸம்ஸ்க்ருத்தில் புழக்கத்தில் உள்ளது

ஏழாம் ஒற்றுமை

ஹமுராபி அம்மோரைட் என்னும் இனத்தை சேர்ந்தவன்.அமர என்பது மலை நாடு, பர்வதப் பிரதேசம் என்று புராணங்கள் சொல்லும்

வேற்றுமை

ஹமுராபி ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’லென்னும் பழிவாங்கும் சட்டத்தைச் சொல்கிறான். மநுவோ ஆளுக்குத் தக,நேரத்துக்குத் தக, சூழ்நிலைக்குத் தக தண்டனை கொடு என்று ஏழாம் அத்தியாயத்தில்  சொல்கிறான். பசுவின் கன்று இறந்ததால் அதுபட்ட துயரத்தைக் கண்டு தன் மகனையே பலி கொடுத்த மநு நீதிச் சோழன் கதை ஹமுராபி சட்டம் போலக் காணப்பட்டாலும் அனைவரும் தடுத்தும் மன்னன் செய்த செயல் அது. இறுதியில் அனைவரும் உயிர் பெற்று எழுந்த அற்புதமும் நிகழ்ந்தது.

TAGS–  ஹமுராபி, மநு, சட்டப்புத்தகம், ஒற்றுமை, சூரிய தேவன்

–subham–

ஆளும் கட்சியின் 18 கெட்ட செயல்கள்- மநு (Post No.5801)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 19 December 2018
GMT Time uploaded in London – 7-29 am
Post No. 5801


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

உலகின் முதல் சட்டப் புத்தகம் மநு நீதி நூல்- 12 அத்தியாயங்களைக் கொண்டது. ஹமுராபி எழுதிய சட்டப் புத்தகத்தைவிட முந்தியது. ஆனால் அவ்வப்பொழுது UUDATE ‘அப்டேட்’ செய்யப்பட்ட ஸரஸ்வதி நதி தீர நாகரீக நூல். 2600 ஸ்லோகங்களுக்கு மேல் கொண்டது. ஒன்பது முழு நீள வியாக்கியானங்கள் (உரைகள்) இப்பொழுது கிடைக்கின்றன. நாம் இது வரை வெற்றிகரமாக ஆறு அத்தியாயங்களைக் கண்டு களித்தோம்.

இன்று ழாவது அத்தியாயத்தில் அடி எடுத்து வைப்போம். இதில் அரசனுக்குரிய நீதிகள் பிரஸ்தாபிக்கப்படுகின்றன. அவைகளை இன்று உலகை ஆளுவோருடன் ஒப்பிட்டாலும் பொருந்தும்.

முதலில் சுவையான விஷயங்களை புல்லட் பாயிண்டு BULLET POINTS களில் தருகிறேன்.

1.அரசனைக் கடவுள் என்று இந்துமத நூல்கள் போற்றும். இது சங்க இலக்கியத்திலும், தமிழ் வேதமான திருக்குறளிலும் உள்ளது தமிழில் ‘கோ’,’இறை’ என்பன கடவுளையும் மன்னர்களையும் குறிக்கும் சொற்கள்.

ஸ்லோகம் 1 முதல் 8 வரை காண்க

2.அரசனை இந்திரன் முதலான எட்டு தேவதைகளின் சக்தியுடன் ஒப்பிடுதல்— இதுவும் சங்க இலக்கியப் பாடல்களில் உள. அவன் அக்னி போன்றவன் ,யமன் போன்றவன்,இந்திரன் போன்றவன்; பகைவர்களுக்கு யமன், சூரியன் நெருப்பு; வேகத்தில் காற்று என்றெல்லாம் புற நானூற்றுப் புலவர்கள் வருணிப்பது மநுவின் ஸ்லோக அடிப்படையிலேயே. ஸ்லோகம் 1 முதல் 8 வரை.

3. திருக்குறளில் அதிகாரம் 55, 56  செங்கோன்மை, கொடுங்கோன்மை,அதிகாரம் 39 இறைமாட்சி, அதிகாரம் 70 மன்னரை சேர்ந்தொழுகல் ஆகியன மநுவின் ஏழாவது அத்தியாயத்தின் எதிரொலி.

மன்னன் கடவுள்- குறள் 388= மநு 7-5

மன்னன் நெருப்பு- குறள் 691

இப்படி தொடர்ந்து ஒப்பிட்டுக்கொண்டே போகலாம் நிற்க.

4.கெட்ட மன்னர்களும் நல்ல மன்னர்களும்

ஸ்லோகம் 41,42-ல் மக்களால் தூக்கி எறியப்பட்ட, போற்றப்பட்ட மன்னர்களின் பட்டியல் உளது. இதில் சுமுகன் என்னும் மன்னர் பெயர் சுமேரியாவில் மட்டும் உளது. இந்திய அறிஞர்களைத் திணற வைக்கும் பெயர். இது பற்றி ஏற்கனவே ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளேன். மநு நூல் ரிக் வேத கால நூல் என்பதற்கு நான் தரும் பல சான்றுகளில் ‘சுமுகன்’ பிரச்சனையும் ஒன்று

5.தண்டனைகள்

மநு, தண்டனை பற்றிக் கூறும் ஸ்லோககங்கள் மிக முக்கியமானவை. தமிழர்களின் கல்வெட்டுகள் மன்னர்களை மநு நீதி வழுவாது ஆண்டவன் என்று போற்றுகின்றன. மநு நீதிச் சோழன்  கதையை முன்னரே கொடுத்துவிட்டேன் ஸ்லோகங்கள் 9-31

6. உவமைகள்- மீன், நாய் காகம், நீரில் சிந்திய எண்ணைத் துளி,  நீரில் விழுந்த நெய் முதலியன ஸ்லோகங்கள் 20, 21, 33, 34

7. 18 கெட்ட செயல்கள்

அரசர்கள் தவிர்க்க வேண்டிய 18 தீய செயல்கள், குணங்கள்

ஸ்லோகங்கள்-45 -53

8. எண்பேராயம்ஐம்பெருங்குழு

தமிழர்கள் அக்காலத்தில் பஞ்சாயத்து (5), எட்டு அமைச்சர் குழு முதலியன வைத்திருந்தது சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் காணப்படுகிறது மநுவும் 7 அல்லது 8 அமைச்சர் குழு பற்றிப் பேசுகிறான். வீர சிவாஜி, கிருஷ்ண தேவ ராயர் முதலியோர் எட்டு அமைச்சர் அமைப்பைப் பின்பற்றினர். காண்க ஸ்லோகம் 54

9. பிராமணர்களுக்கு சலுகை

உலகில் இன்று வரை ஒழுக்கம் மிக்கவர்களும் அறிஞர்களும், ஒரு சிறு தவறு செய்தால் மன்னிக்கப்படுகின்றனர். அந்த வகையில் பிராமணர்களுக்கு தண்டனை விஷயத்தில் மென்மை காட்டும் படி மநுவும் அறிவுரை தருகிறான். அண்மையில் பிரிட்டனில் ஒரு டாக்டருக்கு வழங்கிய தீர்ப்பு, சோவியத் ரஷ்யாவில் அரசை எதிர்த்த அணு விஞ்ஞானி ஷகாரோவுக்குக் கிடைத்த சலுகைகள் முதலியவற்றைப் பல கட்டுரைகளில் பகர்ந்துவிட்டேன். ஸ்லோகம் 38, 82 முதல்

10. தூதர்கள்

உலகில் தூதர்கள், கொடி , சின்னங்கள் ஆகியவற்றை முதலில் கையாண்டது பாரதமே என்பதை சில ஆராய்ச்சிக் கட்டுரைகளில் கொடுத்து விட்டேன். தூதர் நியமனம் பற்றி ஸ்லோகம் 63 முதல் மநு கதைக்கிறார். வள்ளுவனும் தூது (அதிகாரம் 69) என்னும் பொருள் பற்றிப் பத்துகு றள்களில் கதைக்கிறார்.

11. மலை மேல் கோட்டை கட்டுவதில் உள்ள சாதகங்களை மநு எடுத்துரைக்கிறான். இவ்வாறு செய்ததால் ராஜஸ்தானியர்களும், வீர சிவாஜியும் துலுக்கப் படைகளை துவம்ஸம் செய்தனர். வள்ளுவனும் அரண் என்னும் அதிகாரத்தில் இதை ஆராய்கிறார். ஸ்லோகம் 71-75 .

12. தர்ம யுத்தம்

ஸ்லோகம் 90- 98 தர்மயுத்தம் பற்றியவை. அந்தக் காலத்தில் குறிப்பிட்ட ஓரிடத்தில், ஊருக்கு வெளியே, சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை மட்டுமே சண்டை போடுவர். பிராமணர்கள், பெண்கள், வயோதிகர்கள், நோயாளிகளை அந்தப் பக்கம் வரக்கூடாது என்று முன் எச்சரிக்கை செய்துவிடுவர். மநுவும் போர் பற்றிப் பேசிவிட்டு போரில் வென்ற பொருள்கள் யாருக்குச் சொந்தம் என்றும் சொல்கிறான். மநு சொல்லாத விஷயங்களே  இல்லை எனலாம். அரச நீதி முறை பற்றிய ஏழாவது அத்தியாயத்துக்கு ஒன்பது பாஷ்யக் காரர்களும் வழங்கிய வியாக்கியானங்களைப் படிப்போருக்கும் மநு உலக மஹா ஜீனியஸ், (Great genius) மேதாவி என்பது விளங்கும். இதனால்தான் உலகம் முழுதும் இன்று வரை மநுவைப் புகழ்கிறது. 40 Anti-Shudra சூத்திர எதிர்ப்பு ஸ்லோககங்களை மட்டும் வைத்துக்கொண்டு கூத்தடிக்கும் மார்கஸீயங்களுக்கும் திராவிடங்களுக்கும் கரி பூசும் பகுதி இது.

மநு, ஒவ்வொரு அதிகாரத்திலும், மன்னரானாலும், பிராஹ்மணன் ஆனாலும் ஒழுக்கத்தையும், புலன் அடக்கத்தையும் வலியுறுத்துகிறான். காம, க்ரோத, லோபம் கூடாது என்கிறான். அப்படிப்பட்ட ஆட்சி இருந்தால் எவருக்கும் குறைவில.

tags–18 கெட்ட செயல்கள், அரசர்கள், மநு

–subham–

பிராமணர்கள் என்ன செய்யக்கூடாது? மநுவின் தடாலடி! (Post No.5443)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 18  September 2018

 

Time uploaded in London – 8-13 am (British Summer Time)

 

Post No. 5443

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

மநு நீதி நூல்- Part 26

 

 

 

முதல் 25 பகுதிகளில் மநு தர்ம சாஸ்திரத்திலுள்ள மூன்று அத்தியாயங்களிலுள்ள சுவையான செய்திகளை நுகர்ந்தோம் இன்று நாலாவது அத்தியாயத்தை சுவைப்போம். இதில் பெரும்பாலும் பிராஹ்மணர்கள் பற்றி வந்தாலும் ஏனையோரும் படித்தால்தான் தமிழ் மன்னர்களும், பிரபுக்களும் பிராஹ்மணர்களுக்கு ஏன் அள்ளித் தந்தார்கள், வாரி வழங்கினார்கள் என்பது விளங்கும். பிராஹ்மணர்களின் வேத அறிவு பரவ வேண்டும் என்பதற்காக அவர்கள் சொத்து சேர்த்து வைக்கக்கூடாது என்று மநு சொல்லிவிட்டார். பிராஹ்மணர்கள் எப்போதும் இப்படி மற்றவர்களை எதிர்பார்த்து வாழ்க்கை நடத்தி இருந்தால் அவர்கள் மீது பொறாமையும் வந்திராது; அவர்கள் தொழிலுக்கு வேறு யாரும் போட்டிக்கும் வரமாட்டார்கள்!

 

 

முதலில் இன்று எடுத்துக்கொள்ளும் பகுதியிலுள்ள சுவையான, முக்கியமான விஷயங்களைச் சுட்டிக்காட்டுவேன்.

 

  1. ஸ்லோகங்கள் 4, 7 ஆகியவற்றைக் காணவும். பிராஹ்மணர்கள் எப்படியெல்லாம் தானியத்தைப் பெறலாம், எவ்வளவு சேர்த்து வைக்கலாம் என்று மநு கடுமையான விதிகளை விதிக்கிறார்.
  2. ஸ்லோகம் 12-ன் பொருளைக் காண்க; இதையேதான் மஹாத்மா காந்தியும் சொன்னார். இருக்கும் அவசியப் பொருள்களுடன் மனிதன் திருப்தி அடையவேண்டும். ஆசைக்கு அளவே இல்லை. சைக்கிள் வைத்திருப்பவன் மோட்டார் சைக்கிளுக்கு ஆசைப்படுகிறான். அதை வாங்கியவுடன் காருக்கு ஆசைப்படுகிறான். அதையும் வாங்கிய பின்னர், அடுத்த வீட்டுக்காரனை விட விலையுயர்ந்த கார் வாங்க விரும்புகிறான். அதற்குப் பின்னர் ஊரிலேயே சிறப்பான காரை வைத்திருக்க வேண்டும் என்பான். இதே போலத்தான் வீடு வாசல், நில புலன்கள் விஷயங்களும்.

 

3.ஸ்லோகம் 29ன் பொருள் விருந்தோம்பல் என்பது பற்றியது. இது இந்துமத நூல்களில் மட்டுமே இருக்கும்; தமிழ் இலக்கியமும் ஸம்ஸ்க்ருத இலக்கியமும் மட்டும் போற்றும் பண்பு இது. ஆரிய- திராவிட பிரிவினை வாதத்துக்கு செமை அடி கொடுக்கும் விஷயம் இது. தமிழ் கலாசாரம் என்று தனி ஒரு பண்பாடு இல்லை. அந்தந்த ஊருக்குச் சில சிறப்புகள் இருப்பது போல சில புதுமையான வழக்கங்கள் நாடு முழுதும் மாநிலம்தோறும் இருப்பது போல தமிழ் நாட்டிலும் சில வழக்கங்கள் இருந்தது உண்மையே. ஆரியர்கள் வெளியே இருந்த வந்தவர்கள் என்று சொல்லுவோரின் தலையில் ஆணி அடிக்கும் விஷயம் இது. இந்தியாவில் இமயம் முதல் குமரி வரையுள்ள நூற்றுக் கணக்கான நம்பிக்கைகள் உலகில் வேறு எங்குமே இல்லை. பல்லாயிரம் ஸம்ஸ்க்ருதச் சொற்கள் ஐரோப்பிய மொழிகளில் இல்லை. தமிழுக்கும் ஸம்ஸ்க்ருதத்துக்கும் தொடர்பில்லாத ஏராளமான சொற்கள் ஐரோப்பிய மொழிகளில் உண்டு. ஆரியர்கள் வெளி இடங்களில் இருந்து வந்தார்கள் என்பதை இதுவும் தவிடு பொடி ஆக்கியது.

 

 

4.ஸ்லோகம் 11 பிராஹ்மணர்கள் தினமும் அக்னிஹோத்ரம் என்னும் வேள்வி செய்ய வேண்டும் என்கிறது. இப்பொழுது இப்படிச் செய்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

 

5.ஸ்லோகம் 21  ஐவேள்வி- பஞ்ச யக்ஞம்– பற்றிப் பேசுகிறது. காக்கை குருவி மூதல், , எறும்பு முதல் ஏழைகள், விருந்தினர் வரைக்கும் உணவு படைக்கும் சடங்குகளை மூன்று வருணத்தார் செய்து வந்தனர்.

 

6.ஸ்லோகம் 40 மனைவியுடன் உறவு கொள்ளும் நேரம் பற்றியது

 

7.ஸ்லோகம் 44, 52 பெண்களைப் பார்க்கக் கூடாது என்பது முதல் சிறுநீர் கழிப்பது வரையான விஷயங்களைப் பேசும். மநு என்ன என்ன விஷயங்களையெல்லாம் கவனிக்கிறார் என்பதற்கு இவை எடுத்துக் காட்டுகள். பிராஹ்மணர்களுக்கு சலுகைகளை விடக் கட்டுப்பாடுகளே அதிகம்!

 

8.ஸ்லோகங்கள் 64ம், 74ம் ஆடல், பாடல், சூதாட்டம் ஆகியவற்றுக்கு தடை போடுகிறது. இவை பிராஹ்மணர்களுக்கானவை.

 

 

பிராஹ்மணன் வியாபாரம் செய்யலாம்

 

பிராமணர்கள் உயிர்வாழ்வது எப்படி?

 

பாட்டும் கூத்தும்

 

தினமும் படிக்க வேண்டும்

 

 

காலையிலும் மாலையிலும் வேள்வித் தீ

விருந்தினர் உபசாரம்

 

 

ருத்திராக்ஷப் பூனைகள் ஜாக்கிரதை!

 

சூரியனைப் பார்க்காதே

மனைவியுடன் படுப்பது எப்போது?

 

 

மல, மூத்திர விதிகள்

 

 

புறச்சூழல் பாதுகாப்பு; நீரை அசுத்தப் படுத்தாதே

பால் குடிக்கும் கன்றைத் தடுக்காதே

 

 

ஆடலும் பாடலும் வேண்டாம்

பயனில்லாத செயல்களைச் செய்யாதே

சூதாட்டத்துக்கு தடை

 

 

to be continued………………………

 

–SUBHAM–

அமாவாஸை சிரார்த்தம் பற்றி மநு (Post No.5233)

 

Srardha during Amavasya in Ganges, Kolkata

WRITTEN by London swaminathan

 

Date: 18 JULY 2018

 

Time uploaded in London – 15-23 (British Summer Time)

 

Post No. 5233

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

மநு நீதி நூல்- Part 22

 

WRITTEN by London swaminathan

 

Date: 18 JULY 2018

 

Time uploaded in London – 14-39 (British Summer Time)

 

Post No. 5233

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

மநு ஸ்ம்ருதியின் மூன்றாம் அத்யாயத்தைத் தொடர்ந்து காண்போம்.

 

இதிலுள்ள சுவையான விஷயங்கள்:

 

யார் யாரை அமாவாஸை சிரார்த்தத்துக்குச் சாப்பிடக் கூப்பிடக் கூடாது என்ற நீண்ட பட்டியலில் டாக்டர்கள், ஜோதிடர்கள், நடிகர்கள், சோமலதை (ஆட்டாங்கொடி) விற்போர் உள்ளனர்

 

மநு காலத்தில் சோம லதை கொடி விற்போர் பற்றி அடிக்கடி வருவதால் இவரை வேத காலத்தை ஒட்டியவர் என்றே கருத வேண்டியுள்ளது.

 

 

பணக்காரனாக இருந்தாலும் ஐந்து பேருக்கு மேல் சிரார்த்தச் சாப்பாடு போடக் கூடாது என்பது குறிப்பிடத் தக்கது.

 

நண்பர்களை, சலுகைகளை உத்தேசித்து சாப்பிட அழைப்பது பாவம் என்றும் மநு சொல்கிறார்.

 

மநு ஏழு தலைமுறை பற்றிப் பேசுகிறார் (இது பற்றி நேற்று தனிக் கட்டுரை எழுதிவிட்டேன்)

மநு பயன்படுத்தும் உவமைகள் மிகவும் சுவையானவை

1.ரத்தத்தை ரத்தத்தால் கழுவ முடியாது

 

இது சேக்ஸ்பியரின் மாக்பெத் (MACBETH) நாடக வசனத்தை நினைவுபடுத்து; “கொலைகாரி மாக்பெத்தின் கைகளில் படிந்த ரத்தக் கறையை அரேபியாவில் உள்ள அத்தனை சென்ட்டும் கூட போக்க முடியாது” என்று மாக்பெத் வசனத்தில் வருகிறது.

2.இன்னொரு உவமை- குருட்டு மாடு

3.தண்ணீரில் போட்ட சுடப்படாத களிமண் கலம் (இது குறளிலும் கையாளப்படும் உவமை)

 

4.காய்ந்த புல் எரிவது போல

5.ஆறிய சாம்பலில் அவிஸைப் போடுவது போல

7.கொழுந்துவிட்டு எரியும் இரும்பு குண்டுகளை விழுங்குவது போல

 

8.களர் நிலத்தில் விதைப்பது போல

XXXXX

வேதம் படித்த ஒருவனுக்கு சாப்பாடு போடுவது ஒரு லட்சம் பேருக்குப் போடுவதை விட சிறந்தது என்கிறார் மநு.

 

பெண்களும் மாலைநேரத்தில் மந்திரம் இல்லாமல் வைஸ்வதேவ யக்ஞம் செய்ய வேண்டும் என்பார்.

 

அண்ணன் இருக்கும் போது தம்பி கல்யாணம் முடிப்பது தகாது என்கிறார்

 

குண்டன், கோளகன் என்னும் இருவகை பு த ல்வர்கள் பற்றியும் பேசுகிறார்

 

நான்கு வகை பிராஹ்மணர்கள் (3-144) பற்றியும் விளக்குகிறரர்.

விதியை மீறுவோருக்கு என்ன என்ன நேரிடும் என்றும் எச்சரிக்கிறார்.

 

இதோ ஸ்லோகம் வாரியான மொழி பெயர்ப்பு:-

 

3-121 பகலில் தானும் மாலையில் மனைவி மந்திரம் இல்லாமலும் வைஸ்வதேவம் எனும் உஅணவு படைக்கும் சடங்கை இயற்றல் வேண்டும்

 

3-122 மாதம் தோறும் அமாவாசையன்று பிண்டம் மூலம் முன்னோர்களுக்கு பலி கொடுத்த பின்னர் சிரார்த்தம் செய்ய வேண்டும்

 

3-123 இதற்கு அன்வஹார்யம் என்று பெயர்; இதற்கான விசேஷ உண்வுடன் படைக்க வேண்டும்

 

3-124  என்ன உணவு, எத்தனை பேரை அழைப்பது, யாரை அழைக்கக்கூடாது என்று விள்ம்புவேன்.

3-125 விஸ்வேதேவர்க்கு இரண்டு பிராஹ்மணர்க ள்:, பிதுர்களுக்கு (இறந்து போன முன்னோர்) மூன்று பிராஹ்மணர்கள் வீதம் சாப்பாடு போட வேண்டும். இயலாவிட்டால் ஒவ்வொருவர் வீதம் போதும்; பணக்காரன் ஆனாலும் ஐந்து பேருக்கு மேல் கூடாது.

 

3-126 ஏன் தெரியுமா? 5 காரணங்கள் உள: நல்ல உபசாரம், தகுந்த நேரம், தகுந்த இடம் தேவை, சுத்தம் இருக்க வேண்டும், சாப்பிட வருவோர் இடையே நல்லிணக்கம் நிலவுதல் அவசியம்

 

3-127 இது மிகவும் பிரபலமானது. இதனால் பிதுரர்களுக்கு மறுமையில் பலனும் நமக்கு இம்மையில் சந்ததியும் செல்வமும் கிடைக்கும்.

 

3-128 வேதம் மனப்பாடமாகத் தெரிந்தவர்க்கே சாப்பாடு போடுக; இது நல்ல பலன் தரும்

3-129 வேதம் ஓதாத ஆளுக்கு அளிப்பதை விட வேதம் தெரிந்த ஒவ்வொருவருக்கு — இரு சடங்குகளிலும் — சாப்பாடு போட்டால் போதும்

 

3-130 இதற்காக முன்கூட்டியே பிராஹ்மணர்களைத் தேடி வைத்துக் கொள்; சொந்த கிராமத்தான் ஆனாலும் அவன் விருந்தினனே.

 

3-131 ஆயிரம் ஆயிரம் பேர சாப்பிட்டாலும் ரிக் வேதம் தெரிந்த ஒருவன் சாப்பிடுவதும் திருப்தி அடைவதும் நல்ல புண்ணியம் தரும்

 

3-132 அதிக ஞானம் உடையவனுக்கே முன்னோர்களுக்கான, தெய்வங்களுக்கான உணவை அளிக்க வேண்டும் ரத்தக் கறை படிந்தவன் கைகளை ரத்தம் கொண்டு கழுவ முடியாதல்லவா!

 

 

ஞானமில்லாதவனுக்குக் கொடுப்பது பலனற்றது; பாவகரமானது

 

3-133 வேதம் ஓதாதவன் எவ்வளவு கவளம் உண்கிறானோ அவ்வளவுக்கு இறந்து போன முன்னோர்கள் கொதிக்கும் இரும்புக் குண்டுகளையும், முள் நிறைந்த கம்பிகளையும்      ஈட்டிகளையும் உண்ண நேரிடும்

 

3-134 சிலருக்கு ஞானம் அதிகம்; சிலருக்கு தவ வலிமை அதிகம்; இன்னும் சிலருக்கு வேத அறிவும் தபோ பலமும் சேர்ந்து இருக்கும்; நாலாவது வகையினர் சடங்களைச் செய்விப்பதில் வல்லவராக இருப்பர்.

 

3-135 முன்னோர்களுக்காக கொடுப்பதை ஞானத்தில் மிகுந்தவனுக்குக் கொடு; தெய்வ த்துக்காக கொடுப்பதை நால்வரில் எவருக்கேனும் அளி

 

3-136 ஒரு புதல்வனின் தந்தை வேத வித்து- ஆனால் புதல்வனுகுக்கு வேதம் தெரியாது; மற்றொரு தந்தைக்கு வேதம் தெரியாது ஆனால் புதல்வன் வேதம் ஓதியவன் என்று வைத்துக் கொள் (யாரைக் கவனிப்பாய்?)

 

3-137 இவ்விருவரில் வேதம் அறிந்தவனுடைய பிள்ளையே சிறந்தவன்; மற்றொரு புதல்வன், வேதம் படித்தமைக்காக தக்க மரியாதை கொடு.

 

3-138 சிரார்த்தத்தில் நண்பர்களை சாப்பிட அழைக்காதே; அவர்களை நீ எப்படியும் வெல்லலாம்; நண்பனும் அல்ல, எதிரியும் அல்ல என்பவரையே அழை

3-139 நண்பர்களைத் திருப்தி செய்யும் சிரார்த்தம் பலன் தரா.

3-140 அறியாமையால் இப்படிச் செய்பவன் தேவலோகம் சென்றாலும் கீழே விழுந்து விடுவான்

 

3-141 மூன்று வருணத்தாரும் இப்படி நண்பர்களைத் திருப்தி செய்ய முயன்றால் அது இருளில் திரியும் குருட்டு மாடு போன்றதாகும் பலன் தராது

3-142 களர் நிலத்தில் விதைப்பவனுக்கு அறுவடை இல்லை; ரிக் வேதம் தெரியாதவனுக்குக் கொடுப்பவனுக்கும் பலன் இல்லை.

 

3-143 வேதம் அறிந்த பார்ப்பானுக்குக் கொடுப்பது இருவர்க்கும் இம்மையிலும் மறுமையிலும் பலன் தரும்.

 

 

 

3-144 வேதம் அறிந்த பார்ப்பான் கிடைக்காவிடில் நண்பனையும் அழைக்கலாம்; எதிரி ஞானவானாக இருந்தாலும் அவனுக்கு உணவு போடுவது பலனற்றதே

 

3-145 ரிக், யஜுர், சாம வேதம் ஓதியவர்களை அழை

 

3-146 இவர்களில் ஒருவருக்கு கொடுக்கும் உணவும் இறந்து போன ஏழு தலைமுறையினரை கடைத்தேற்றும்

 

3-147 இதுதான் முக்கிய விதி; சில துணை விதிகளும் உள

 

3-148 தாய்ப்பாட்டன், அம்மான், மருமான், மாமனார், ஆச்சார்யன், பெண்ணின் வயிற்றில் பிறந்தோன், மாப்பிள்ளை, சித்தி, பெரியம்மா, இவர்களின் பிள்ளைகள், சிஷ்யன், ரிக் வேதம் அறிந்தோன் ஆகிய வகையினரும் புசிக்க அருகதை ஆனவர்களே.

 

3-149 தேவ காரியங்களில் சாப்பிட வரும் அந்தணர் பற்றி அதிகம் கேட்கத் தேவை இல்லை; பிதுர் காரியங்களில் சாப்பிட வரும் பார்ப்பனர்களின் ஞானம், மூதாதையர் பற்றி சோதித்து அழை.

 

தொடரும்………..

கல்யாணம் கட்டாதே; முனிவர்கள் அறிவுரை; வள்ளுவர் எதிர்ப்புரை (Post No.4461)

கல்யாணம் கட்டாதே; முனிவர்கள் அறிவுரை; வள்ளுவர் எதிர்ப்புரை (Post No.4461)

 

Written by London Swaminathan 

 

Date: 5 DECEMBER 2017 

 

Time uploaded in London-  6–53 am

 

 

Post No. 4461

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

கல்யாணம் செய்யலாமா வேண்டாமா என்பதற்கு கிரேக்க நாட்டறிஞன் சாக்ரடீஸ் சொன்ன பதில் நமக்குத் தெரியும்:

 

“மகனே! வாய்ப்பு கிடைத்தால் விடாதே; கல்யாணம் கட்டு; நல்ல மனைவி வாய்த்தால் நீ சுகமாக இருப்பாய்; கெட்ட மனைவி கிடைத்தாலோ நீ (என்னைப் போல) தத்துவ ஞானி ஆகிவிடுவாய்; உலகமே பயனடையும்!”

 

இன்னொரு சாக்ரடீஸ் கதையும் உங்களுக்குத் தெரிந்ததே! சாக்ரடீஸ் வழக்கம்போல இளஞர்களைக் கண்டவுடன் கதைத்தார். இதைப் பிடிக்காத அவரது மனைவி மேல் மாடியிலிருந்து அவரைத் திட்டித் தீர்த்தாள்; அசராது, அலங்காது அவர்பாட்டுக்கு உபதேசத்தைத் தொடர்ந்தார். மேல் மாடியிலிருந்து அவரது மனைவி ஒரு வாளி தண்ணீரை எடுத்து அவர் தலையில் கொட்டினாள்; அவர் சொன்னார்: “இவ்வளவு நேரம் இடி இடித்தது; இப்போது மழை பெய்கிறது!”

 

 

வள்ளுவரும் மனுவும் திருமணம் செய்துகொள்; ஏனெனில் கிருஹஸ்தன் என்பவனே மற்ற மூவர்க்கும் உதவுபவன் ; ஆகையால் அவனுக்கு மற்ற மூவரை விட புண்ணியம் கிடைக்கும் என்கின்றனர். பிரம்மச்சாரி, வானப்ரஸ்தன், சந்யாசி ஆகிய மூவர்க்கும் சோறுபோட்டு ஆதரவு கொடுப்பவன் இல்வாழ்வான்தான் (கிரஹஸ்த) என்று செப்புவர் அவ்விருவரும்.

 

கண்ணகியும் சீதையும் ‘அடடா! இந்த மூவரையும் கவனிக்கும் வாய்பை இழந்துவிட்டோமே’ என்று புலம்புவதை சிலப்பதிகாரத்திலும் கம்பராமாயாணத்திலும் காண்கிறோம்.

 

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை (குறள் 41)

மனு புகல்வது யாது?

“மற்ற மூவர்க்கும் அறிவினாலும் உணவினாலும் ஆதரவு அளிப்பதால் மனை   வி யுடன் வாழ்பவனே மற்ற மூவரையும்விடச் சிறந்தவன்” என்பார் மனு (3-78)

 

இன்னும் பல இடங்களிலும் கிரஹஸ்தனே சிறந்தவன், மனைவியே குடும்ப விளக்கு என்கிறார் மனு.

 

ஆனால் நாலடியார் இயற்றிய சமண முனிவர்களோ நேர் மாறான கருத்தைக் கொண்டுள்ளனர். திருவள்ளுவர் சமணர் அல்ல என்பதற்குக் கொடுக்கப்படும் ஏராளமான ஆதாரங்களில் இதுவும் ஒன்று. அதாவது கல்யாணம் வேண்டுமா, வேண்டாமா என்னும் பட்டிமன்றத்தில் சமண முனிவர் கல்யாண எதிர்ப்பு கோஷ்டி; வள்ளுவனும் மனுவும் கல்யாண ஆதரவு கோஷ்டி!

 

கல்லால் அடித்துக்கொள்வதே திருமணம்

 

இதோ நாலடியார் பாடல்கள்:

 

கடியெனக் கேட்டும் கடியான் வெடிபட

ஆர்ப்பது கேட்டும் அது தெளியான் – பேர்த்துமோர்

இற்கொண்டு இனிதிரூஉம் ஏமுறுதல் என்பவே

கற்கொண்டு எறியும் தவறு – நாலடியார் 364

 

பொருள்:

கல்யாணம் கட்டாதே என்று பெரியோர் சொல்லக்கேட்டும் அதை ஏற்காமல், தலை வெடிக்கும்படி சாக்கொட்டு ஒலித்து, அதைக்கேட்டும், இல்வாழ்க்கை நிலை இல்லாதது என்பதை உணராதவனாய் மறுபடியும் ஒருத்தியை மணம்புரிந்து இன்புற்றிருக்கும் மயக்கம், ஒருவன் கல்லை எடுத்து தன் தலையிலேயே போட்டுக்கொண்டது போலாகும் என்பர் சான்றோர்.

 

திருமணம் என்பதே துன்பம்

 

மாண்ட குணத்தொடு மக்கட்பேறு இல்லெனினும்

பூண்டான் கழித்தற்கு அருமையால் — பூண்ட

மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக்கண்ணே

கடியென்றார் கற்றறிந்தார் — நாலடியார் 56

 

பொருள்:

நல்ல குணங்களும் புத்திரப்பேறு என்னும் பாக்கியமும் மனைவியிடம் இல்லாவிட்டாலும் கல்யாணம் செய்துகொண்ட புருஷன் அவளை விட்டுவிட முடியாது. எனவே திருமணம் என்பது ஒருவன் தானே வலிய ஏற்றுக்கொண்ட துன்பம் ஆகும். ஆகையால்தான் உயர்ந்த ஒழுக்க நூல்களைக் கற்றுணர்ந்த ஞானிகள் திருமணம் செய்து கொள்ளாதே என்றனர்.

 

ஆக, நாலடியார் இயற்றிய சமண முனிவர்கள் திருமண எதிர் கோஷ்டி; தீவிர இந்துக்களான திருவள்ளுவனும் மநுவும் திருமண ஆதரவு கோஷ்டி.

 

 

TAGS: -சாக்ரடீஸ், திருமணம், கல்யாணம், சமண முனிவர், மநு, வள்ளுவன்

 

 

சுபம், சுபம் —