எலி கடிக்குது நெசவு நூலை ! கவலை கடிக்குது என் மனதை ! –ரிக்வேதம் ( Post No. 9474)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9474

Date uploaded in London – –9  APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எலி கடிக்குது நெசவு நூலை ! கவலை கடிக்குது என் மனதை !

TRUE HINDUS AND TRUE TAMILS NEVER DELETE THE AUTHOR’S NAME AND BLOG’S NAME

BY LONDON SWAMINATHAN

உலகிலேயயே பழமையான நூல் ரிக்வேதம் ; ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்கா தர திலகரும் கி.மு 4500 க்கு முந்தையது என்று வான சாஸ்திர ரீதியில் காட்டினார்கள். வில்சன் முதலானோர் கி.மு.2000 என்றனர். மாக்ஸ்முல்லர் முதலில் கி.மு 1200 என்று சொல்லி மற்ற அறிஞர்களிடம் செமை அடி வாங்கிய பின்னர் இது கி.மு. 1500 க்கு முந்தையது; எவரும் இதன் காலத்தைக் கணிக்கவே முடியாது என்று சொல்லி ‘ஜகா’ வாங்கினார்.

துருக்கி-சிரியா எல்லையில் பொகஸ்கொய்  (Bogazkoy Inscription) என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட களிமண் படிவ கியூனிபார்ம் கல்வெட்டும் ரிக் வேத தெய்வங்களை அதே வரிசையில் குறிப்பிடுவதால் தொல்பொருட் துறை ஆதாரமும் கிடைத்துவிட்டது. இப்போது சந்தேகப் பேர்வழிகளும் , இந்து மத விரோதிகளும் கூட  கி.மு 1700 என்று கதைக்கத் துவங்கியுள்ளனர்!

ரிக் வேதம் அற்புதமான கவிதைத் தொகுப்பு ஆகும். அதிகமான உவமைகள் தாய்க்கும் தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள அன்பு, பாசம், நேசம் குறித்துப்  பேசுகின்றன .

ஒரு சில உவமைகளை இப்போது படித்து ரசிப்போம்.

***

புலவர்/ ரிஷி காதினன் விசுவாமித்திரன் பாடுகிறார் :–

நதிகள் இடையே உரையாடலாகவும் , இந்திரன் மீதான துதியாகவும் இந்தப் பாடல் அமைந்துள்ளது

“ஏய் , புலவா ! மறந்துவிடாதே;, நீ எங்களுடன் நடத்திய உரையாடலை மறந்து விடாதே! வருங்கால சந்ததியினர் இதைப் போற்றி பாடப்போகிறார்கள் .

“புலவரே , கவிதைகள் /சூக்தங்கள் மீதுள்ள உன் ஆர்வத்தை எங்களுக்கும் சொல் ; மனிதர்களுக்கு இடையில் எங்களைத் தாழ்த்தி, மட்டம்தட்டிப் பாடி விடாதே ; உனக்கு வணக்கம்” . இவ்வாறு நதிகள் சொல்கின்றன.

உடனே விசுவாமித்திரர் பாடுகிறார் …

நதி சகோதரிகளே! உங்களைப் பாடுகிறேன் ; அன்போடு கேளுங்கள்; நான் தொலை தூரத்திலிருந்து தேரில் வந்து இருக்கிறேன். நீங்கள் தாழ்ந்து வணங்குங்கள்  சுலபமாய் உங்களைத் தாண்ட உதவுங்கள் . உங்கள் நீரோட்டம் என் தேர்ச் சக்கரத்தின் அச்சுக்கும் கீழே இருக்கட்டும்.”

உடனே நதிகள் பதில் சொல்கின்றன

“புலவா , நீ சக்கரம் உடைய தேரோடு வந்திருப்பதை நாம் அறிவோம். . நீ தொலைவிலிருந்து வந்ததாகச் சொன்னதையும் நாங்கள் செவி மடுக்கிறோம்

நாங்கள் குழந்தைக்கு  பாலூட்டும் தாய் போலவும் , காதலன் கட்டி அணைக்க வசதியாக தாழத்தணியும் இளம் அழகி போலவும் உனக்கு உதவி செய்வோம்”.

ரிக் வேதம் 3-33-8/9

இப்படி உரையாடல் நீடிக்கிறது

இதுபற்றி வேதங்களுக்கு பாஷ்யம் எழுதிய சாயனர் ஒரு கதையும் சொல்கிறார் :-

இங்கே விபாஸா , கதுத்ரி என்ற இரண்டு நதிகள் பாடப்படுகின்றன. விசுவாமித்திரர் ஒரு மன்னர். அவர் நிறைய செல்வத்தை ஈட்டிக்கொண்டு இவ்விரு நதிகளும் கூடும்  இடத்திற்கு வந்தபோது இதைப் பாடினார் . இது கவிதை அழகு மிகவும் நிறைந்தது .

விபாஸ என்பது இப்போது பியாஸ் என்று அழைக்கப்படுகிறது. இதை வியாஸ நதியின் மரூஉ என்றும் செப்புவர். கதுத்ரி என்பது அமிர்தசரஸ் நகரின் தெற்கில் பாயும் நதியாக இருக்கலாம் என்றும் யூகிப்பர்

கவிதையை முழுதும் படித்து அனுபவியுங்கள் !

***

என் கருத்துக்கள் :–

என்ன அற்புதமான கவிதை ! இயற்கை பற்றிய வருணனையும் காதலன்-காதலி அன்பும், தாய்ப்பால் ஊட்டும் தாயின் அன்பும் உவமைகளாக வருகின்றன. எந்த அளவுக்கு   வேத கால இந்துக்கள் பாசமும் நேசமும் கொண்டனர் என்பதை இந்தப் பாடல் நமக்குத் தெரிவிக்கிறது.

அது மட்டுமல்ல; வேத கால இந்துக்களை நாடோடிகள் என்று எழுதிய அழுக்கு மூஞ்சிகளின் முகத்தில் கரி பூசுகிறது . எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் கவிதையை “எதிர்கால மக்கள் பாடப்போகிறார்கள்” என்று நதியின் கூற்றாக புலவன் சொன்னது எவ்வளவு உண்மையாயிற்று! ஹெர்மன் ஜாகோபி, திலகர் கணக்குப்படி 6500 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தக் கட்டுரையை நாம் ரசித்துக் கொண்டு இருக்கிறோம். ‘பொய்யா நாவுடையோர் புலவர்’ என்பது மெய்யாகிப் போயிற்று . இதற்கு இணையான கவிதையை நான் எங்கும் படித்ததில்லை ( லண் டன் சாமிநாதனாகிய நான் 27,000+++ வரிக ளையுடைய 18 சங்க கால நூல்களையும், எட்டு ஆண்டுகளுக்கு, இரு முறை வாசித்துள்ளேன். அவற்றின் மீது நூற்றுக் கணக்கான கட்டுரைகளை இதே பிளாக்கில் எழுதியுமுள்ளேன்)

‘பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து’ என்றும், ‘அம்மையே அப்பா ! ஒப்பிலா மணியே’ என்றும் மாணிக்கவாசகர் பாடியது இந்த வேத மந்திரத்தைப் பயின்றதால் தானோ!

xxxx

ஐயோ ஐயோ எலி கடிக்குது நெசவு நூலை !

இன்னொரு கவிதையையும் பார்ப்போம். இது நெசவாளர் உவமையைத் தருகிறது. வேத கால இந்துக்கள் என்ன தொழில் செய்தனர் என்பது மிக நீண்ட பட்டியல். ஆனால் அவர்களை நாடோடி என்று சொன்னவர்களுக்கு ‘செமை அடி, மிதி அடி’ கொடுக்கும் பாடல் இது. கவலையில் வாடிய ஒரு புலவனின் புலம்பல். நம்மில் எவருக்கேனும் கவலை இல்லாத வாழ்வு இருந்து இருக்கிறதா ?

கவசன்  ஐலுசன் என்ற புலவர் விஸ்வே தேவர்களை — பல கடவுளரை — நோக்கிப் பாடுகிறார் …

ரிக் வேதம் 10-33-3

“என்னுடைய இருபுற விலா எலும்புகளும் சக்களத்திகளைப் போல ( இரட்டை மனைவி) நோவு கொடுக்கின்றன. என் மனமோ வேடனால் அச்சுறுத்தப்பட்ட பறவை போல படபடக்கிறது நோயும் பசியும், வெறுமையும் என்னை வாட்டுகின்றன.; கவலைகள் நூலைக் கடித்துக் குதறும் எலிகளைப் போல என்னை தின்கின்றன. இந்திரனே, மகவானே, சதக்ரதுவே! ; எங்களுக்கு நிறைய செல்வத்தைத் தந்து ஒரு தந்தை போல கவனித்துக்கொள்.” 

இதைப் படிக்கும்போது சங்க காலக் கவிதைகளில் வரும் வறுமையில் வாடிய பாணர்கள் நினைவுக்கு வரும். எல்லா காலங்களிலும் மனித குலத்தில் ஏற்ற தாழ்வுகள் இருந்தன. கிருஷ்ண பரமாத்மா மாளிகையில் வசித்தபோது, அவருடைய கிளாஸ்மேட்  classmate குசேலர்/ சுதாமா குடிசையில் வறுமையில் சோற்றுக்கு ‘லாட்டரி அடித்ததை’ , ‘தாளம் போட்டதை’ நாம் அறிவோம். அதே போல இந்த நெசவாளர்  காலனி குடும்பமும் வறுமையில் வாடிற்று ; அப்பாவைப் போல  என்னைக் கவனித்துக் கொள் என்ற உவமை அக்கால குடும்பங்களில் நிலவிய  பாச பந்தங்களை எடுத்துக் காட்டுகிறது .

இப்படி எவ்வளவோ கவிதைகள் உள்ளன  கவிதை வேட்டையைத் தொடர்வோம் .

நெசவாளர் இடையே, வறுமையில் வடிய புலவர் போலும் அல்லது அவர்களுடைய வறுமையை பிரதிநிதித்வப் படுத்த(to represent the poor weavers)  பாடினார் போலும் !

கவலைங்களும் வறுமையும் மறையட்டும்!!

–subham–

TAGS- எலி, கடிக்குது ,நெசவு, கவலை ,ரிக்வேதம், நூல், மனது ,

ராஜா, மனது- ரிக்வேதத்தில் தமிழ்ச் சொற்கள்! (Post No.5461)

Research Article Written by London Swaminathan

swami_48@yahoo.com


Date: 23 September 2018

 

Time uploaded in London – 17-32 (British Summer Time)

 

Post No. 5461

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

ராஜா, மனது- ரிக்வேதத்தில் தமிழ்ச் சொற்கள்! (Post No.5461)

 

உலகிலேயே பழமையான நூலான ரிக் வேதத்தில் பல தமிழ் சொற்கள் இருக்கின்றன. இதையே சிறிது தலைகீழாக மாற்றி ரிக் வேதச் சொற்கள் இன்று வரை தமிழ் உள்பட எல்லா மொழிகளிலும் ஸர்வ ஸாதாரணமாகப் பயன்படுகின்றன என்றும் சொல்லலாம்.

ராஜா:-

இந்தச் சொல் காஷ்மீர் முதல் இலங்கையிலுள்ள கண்டி வரை மனிதர்களின் பெயர்களில் காணப்படுகிறது.

தமிழ் இலக்கண விதிப்படி சொற்கள் ச, ஞ, ல, ர — முதலிய எழுத்துக்களில் துவங்கக் கூடாது. இதனால் அ , உ, இ போன்ற உயிர் எழுத்துக்களை அந்தச் சொற்கள் முன்னால் சேர்த்துக் கொள்வோம்.

 

இதனால் லோகம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை ‘உ’லகம் என்று  தமிழில் சொல்லுவோம்.

 

ராஜா என்ற ரிக்வேதச் சொல்லை ‘அ’ரசன் என்று தமிழில் செப்புவோம்.

 

மனது என்ற சொல் ரிக் வேதத்திலும் சங்க இலக்கியத்திலும் உண்டு.

 

xxx

ராஜா என்ற சொல் ரிக்வேதத்தில் வரும் இடங்கள்:

ராஜன் -ரிக்.3-43-5, 5-54-7

அதர்வ-4-22-3-5; 8-7-16

இது தவிர ராஜ என்ற (prefix) முன்னொட்டுடன் ஏராளமான சொற்கள் உள.

 

 

மனஸ் என்ற சொல்

மனஸ் என்ற சொல் ஏராளமான இடங்களில் வருகிறது.

மனஸ்- ரிக் 10-90 (புருஷசூக்தம்), யஜூர் வேதத்தில் பல இடங்கள்.

xxx

 

தமிழில் மனம்-

புறம்-183, அகம்-231, 273, 259, 377; நற்றிணை, கலித்தொகை, பரி பாடலில் நிறைய இடங்கள்

 

அரசன் (ராஜன்)- கலி-27, 129, குறு.276.

அரசர்- அக-338, புறம்-154

அரசு- நிறைய இடங்கள்

xxx

 

நான் நீண்ட நாட்களாக சொல்லும் புதிய கொள்கை:– உலகிலுள்ள பழைய மொழிகளின் சொற்களை தமிழிலோ ஸம்ஸ்க்ருதத்திலோ கண்டு பிடித்துவிடலாம். அதாவது உலகில் கலாசாரம் என்பதே இந்தியாவிலிருந்து சென்றது. இந்துக்கள்தான் அதை உலகம் முழுதும் எடுத்துச் சென்றனர். இதுவரை இதை வலியுறுத்த நான் எழுதிய பல கட்டுரைகளில் இன்றைய கட்டுரை மேலும் ஒன்று.

 

ஆரிய மொழிகள், திராவிட மொழிகள் என்று வெளிநாட்டினர் பிரித்தது தவறு. திராவிட மொழிகள் என்று எதுவும் கிடையாது. இந்தியாவில் தோன்றிய மூல மொழியிலிருந்து கிளைவிட்டுப் பிரிந்த மொழிகளே தமிழும் ஸம்ஸ்க்ருதமும். இதனால்தான் அகஸ்தியரை அனுப்பி, தமிழுக்கு இலக்கணம் உண்டாக்கினார் சிவ பெருமான்.

சந்தி விதிகள், வேற்றுமை உருபுகள், சொற்களின் பொருள், அகர வரிசை முதலிய பல ஒற்றுமைகள் வேறு எந்த இரண்டு மொழிகளிலும் கிடையாது. தமிழ்-ஸம்ஸ்க்ருத உறவு உள்ளது போல வேறு எங்குமில்லை.

‘ஒன்’ one என்ற ஆங்கிலச் சொல்லை ஸம்ஸ்க்ருத மூலச் சொல் என்று மொழியியலாளர் சொல்லுவர். ஆனால் தமிழில் ‘ஒன்று’ உள்ளது.

 

எயிட் eight என்ற ‘ஆங்கிலச் சொல்லை ஸம்ஸ்க்ருத மூலச் சொல் என்று மொழியியலாளர் சொல்லுவர்; ஆனால் ஆனால் தமிழில் ‘எட்டு’ உள்ளது.

மைன்ட்/mind ஆங்கிலச் சொல்லை ஸம்ஸ்க்ருத மூலச் சொல் என்று மொழியியலாளர் சொல்லுவர். ஆனால் தமிழில் மனஸ்/ மனது உள்ளது.

மனஸ், எயிட் (அஷ்ட) என்பன தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்திலும் மனது =mind எட்டு=eight உருவாகியுள்ளது.

 

மற்ற எழுத்துக்கள் வேறு விதமாக உருவாகியுள்ளன. இதை நினைவிற்கொண்டால் எப்படி சொற்கள் மாறுபட்டு வளர முடியும் என்பது விளங்கும்.

 

ஆக ஒரு மொழி இப்படியெல்லாம் வளர முடியும் என்பதற்கு இரண்டு எடுத்துக் காட்டுகள்.

 

xxx

 

இவை காட்டும் உண்மைகள் என்ன?

உலகில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கிய ரிக் வேத, ‘ராஜா, மனசு’ இன்று வரை தமிழில் ஆழ வேரூன்றிவிட்டது. அதவது ரிக் வேத சொற்களை நாம் தினசரிப் பேச்சு வழக்கில் பயன் படுத்துகிறோம்.அரசன்,மனது என்பன ஸம்ஸ்க்ருத்த்த்தில் புழக்கத்துக்கு வந்த பின்னரே தமிழில் இடம் பெற்று 2000 ஆண்டுக்கும் மேலாக இன்று வரை நீடித்து வருகின்றன. இது ஓரிரு சொற்களுடன் நின்று போயிருந்தால் ஏதோ ஒரு தொடர்பு ஏற்பட்ட கால கட்டத்தில் மட்டும் இருந்திருக்கலம் என்று விட்டுவிடலாம். ஆயிரக் கணக்கான சொற்கள் இப்படி இருப்பதால் இவை ஒரே மூலத்தில் இருந்து வந்ததாகவே கொள்ள வேண்டும்.

 

தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒன்று; அறியாதவன் வாயில் மண்ணு

 

–சுபம்—

 

மனது இரண்டு வகைப்படும்! (Post No.2835)

Abstract Businessman has a Moral Dilemma.

Article written by London swaminathan

 

Date: 24 May 2016

 

Post No. 2835

 

Time uploaded in London :–  9-08 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

good_and_bad

மனோ ஹி த்விவிதம் ப்ரோக்தம் சுத்தம் சாசுத்தமேவ

அசுத்தம் காமசங்கல்பம் சுத்தம் காமவிவர்ஜிதம்

–அம்ருதபிந்து உபநிஷத்

மனது இரண்டு வகையானது; ஆசைகள் நிறைந்திருந்தால் அது அசுத்தமானது; அதாவது எபோதும் ஏதாவது ஒன்றின் மீது விருப்பம் கொண்டு அதையே நாடித் தேடி ஆடி ஓடி காலம் கழிப்பது. ஆசைகளை அறவே ஒழித்தால் அது சுத்தமானது; இதற்கு நம் நாட்டு சாது சந்யாசிகள், முனிவர்கள், மகான்கள் எடுத்துக் காட்டு. அவர்கள் ஆசையை அறவே ஒழித்து, பேரின்பத்தில் வாழ்ந்தார்கள்.

இதே கருத்தை வள்ளுவனும் இயம்புவதைப் படித்து இன்புறலாம்:–

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது

வாய்மை வேண்ட வரும் (குறள் 364)

பொருள்: தூய்மை எனப்படுவது எந்தப் பொருளிடத்தும் ஆசை கொள்ளாதிருத்தல்; அந்த நிலை வாய்மையை நாடுவோருக்கு தானாக வந்து சேரும்.

 

ஆசையே துன்பத்திற்குக் காரணம் – என்பது புத்தர் பிரானின் முக்கியப் பொன்மொழி.

“ஆசை என்னும் காட்டை அழியுங்கள்; ஒரு மரத்தை மட்டுமல்ல.ஏனெனில் அந்தக் காட்டில்தான் அபாயமே உள்ளது. அந்தக் காட்டிலுள்ள மரங்களை வெட்டி, அதன் கீழ் வளர்ந்துள்ள புதர்களையும் அழியுங்கள். பிக்ஷுக்களே! அப்படிச் செய்வீர்களானால் நீங்கள் விடுதலை (நிர்வாண) பெறுவீர்கள்”.

–தம்மபதம் 283

 

ஆங்கிலத்திலும் ‘ஆசை உள்ளவனுக்கு அமைதி இல்லை’, ‘உயர்ந்த மனிதர்கள் உன்னத ஆசை கொள்வர்’ என்றெல்லாம் பழமொழிகள் உண்டு

Desire has no rest

Humble hearts have humble desires

He that desires but little has no need of much.

Good Choice, Bad Choice Road Sign with blue sky and clouds.

இந்து மதத்தில் ரிஷிகள் அழகான ஒரு உவமை சொல்லுவர்:–

“ஆசைக்கு அணை போடமுடியாது. யாரேனும் ஒருவர் அப்படி நினைத்தால் நெய்யைக் கொண்டு தீயை அணைப்பதற்குச் சமம்; அதாவது ஆசையை நிறவேற்ற, நிறைவேற்ற, புதுப்புது ஆசைகள் எழும், தேவைகள் வரும்.

 

சம்ஸ்கிருதத்திலும் இதற்கிணையான பழமொழிகள் இருக்கின்றன:–

ஆசா துக்கஸ்ய காரணம் = ஆசையே துன்பத்திற்குக் காரணம்

ஆசாவதிம் கோ கத: = ஆசைக் கடலின் கரையைக் கண்டவர்கள் யார்?

கால: க்ரீடதி கச்சத்யாயுஸ்தபி ந முஞ்சத்யாசாவாயு: (மோகமுத்கரா) = காலமோ ஓடுகிறது, வயதோ ஆகிறது, ஆனால் ஆசையின் பிடி தளரவே இல்லை.

 

இதை தமிழிலும் அழகாகச் சொல்லுவர்—

“மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை”.

 

மேலே கண்ட, தூய்மையையும் ஆசையின்மையையும் முடிச்சுப் போடும் சம்ஸ்கிருத ஸ்லோகமும் வள்ளுவன் குறளும் பாரதீய சிந்தனையின் ஒற்றுமையைக் காட்டி நிற்கின்றது.

 

–சுபம்–