மனிதனும் தெய்வமாகலாம் -குறள் , ரிக் வேதம் (Post No.9722)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9722

Date uploaded in London – –12 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மனிதன் தெய்வமாகலாம் என்று வள்ளுவரின் திருக்குறளும்  ரிக்வேதமும் செப்புகின்றன.பல கவிஞர்கள் தெய்வ நிலைக்கு உயர்த்தப்படுவதை நாம் அறிவோம். ‘தெய்வப் புலவர்’ திருவள்ளுவர் என்பது ஆன்றோர் வாக்கு. ‘பகவான் பாணினி’ என்று இலக்கணப் பேருரை (மஹாபாஷ்யம்) எழுதிய பதஞ்சலி முனிவர், பாணியைப் புகழ்கிறார். கிரேக்க நாட்டிலும் ஹோமர் என்னும் மஹா கவியை Divine Homer ‘டிவைன் ஹோமர்’ என்று கிரேக்கர்கள் போற்றினர். பகவத் கீதையில் கண்ணபிரானும் கவிகளுள் ‘நான் உசனஸ் கவி’ என்று ரிக்வேத கவிஞரை தன நிலைக்கு உயர்த்துகிறார்.

ராமன், கிருஷ்ணன் போன்ற கறுப்புத்  தோல்படைத்த  மன்னர்களையும் அவதாரம் என்று இந்துக்கள் கருதுகின்றனர். மற்றொரு காகம் போல கருப்புத் தோல் படைத்த கிருஷ்ண த்வைபாயன வியாஸரையும் பகவான் என்றும் விஷ்ணுவின் மறு அவதாரம் என்றும் சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் துதி பாடுகின்றன. இவை எல்லாம் மனிதனை, குறிப்பாக கவிஞர்களை, தெய்வீக நிலைக்கு உயர்த்தியத்தைக் காட்டுகின்றன.

இதை வள்ளுவர்  மிக அழகாகச் சொல்கிறார்….

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும் – குறள் 50

நிலவுலகத்தில் , இல்லற வாழ்க்கையை , வாழவேண்டிய அறநெறிப்படி நின்று வாழ்பவன் மண்ணுலகத்தில் வாழ்ந்தாலும், வானுலகத்தில் வாழும் கடவுளுக்கு சமமாகக் கருதப்படுவான்.

இதனால்தான் நாம் சம்பந்தர், ஆதி சங்கரர் போன்றோரையும் கடவுளின் அவதாரமாக அல்லது அம்சமாகக் கருதுகிறோம்.

திருக்குறள் 413ல் மீண்டும் இதே கருத்தை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

செவியுணவிற் கேள்வியுடையார்  அவியுணவின்

ஆன்றாரோ  டொப்பர் நிலத்து – குறள் 413

செவிக்கு உணவாகிய வேதத்தை (கேள்வி=சுருதி) உடையவர்கள் (பிராமணர்கள் )உலகத்தில் வாழ்ந்தாலும் அவிஸ் என்னும் யாக உணவை உண்ணும் தேவரோடு ஒப்பிட்டுக்  கூறத்தக்கவர்களே .

பிராமணர்களை பூ சுரர் , ‘பூலோக தேவர்கள் என்று மநு முதலிய சட்டப்புஸ்தகங்கள் கூறுவதை வள்ளுவர் அப்படியே மொழி பெயர்த்து விட்டார். அவி = ஹவிஸ் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை வள்ளுவர் பயன்படுத்துவதில் இருந்து இது தெரிகிறது. ஆயினும் ராமர் கிருஷ்ணர் போன்றார் பிராமணர் அல்ல. வாழ்வாங்கு வாழ்பவர் எல்லோரும் தெய்வங்களே.

வள்ளுவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இது சதபத பிராஹ்மண நூலில் உளது.

யே ப்ராஹ்மணாஹா சுச்ருவாம்ஸோ

அனூ சானாஸ்தே மனுஷ்யே தேவாஹா

xxx

வித்வாம்ஸோ ஹி தேவாஹா  (அறிஞர்களும் தேவர்களே)

2-2-2-6; 2-4-3-14 ; 3-7-3-10, சதபத பிராமணம்

ஜாதி என்பதை மறந்துவிட்டு அறிவை நாடும் எல்லோரும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம்.

இந்தக் கருத்துக்கள் உலகிலேயே மிகப்பழைய நூலான ரிக் வேதத்தில் இருப்பது பலருக்கும் தெரிந்திராது

இதோ ரிக்வேதப் பாடல்கள்/ மந்திரங்கள். இதைத்தான் பிற்கால பிராஹ்மண நூல்களிலும் திருக்குறளிலும் காண்கிறோம்

ரிக்வேதம் 1-20-8 ல்

வேள்வியைத் தாங்கும் ரிபுக்கள் மானிட வடிவில் இருந்தார்கள் ; அவர்கள் தங்கள் நற்செயல்களால் வேள்வியில் தேவர்களோடு பங்கு கிடைக்கப்பெற்றார்கள் என்று ரிஷி மேதாதிதி கண்வன் பாடுகிறார் .

இது குறள் 413 போலவே உளது.

ரிபுக்கள் யார் ?

ரிக்வேதத்தில் வரும் தெய்வங்களில் ரிபுக்கள் என்ற பன்மைச் சொல்லும் உளது. இவர்கள் சுதன்வான் என்பவருடைய 3 மகன்கள். இவர்கள் அங்கீரஸ் என்பவர்களின் வழித்தோன்றல்கள். ரிபு, விபவான், வாஜா  என்ற மூவரையும் கூட்டாக ரிபுக்கள் என்பர். இவர்கள் தங்கள் இடையறா முயற்சியால் தெய்வீக அந்தஸ்த்தைப் பெற்றனர் சூரிய மண்டலத்தில் இவர்கள் வசிக்கின்றனர். சூரியனின் ஒளிக்கதிர்கள் என்றும் இவர்களை ரிஷிகள் துதி பாடுகின்றனர் மனிதன் தெய்வீக நிலையை அடைய முடியும் என்பதற்கு இவர்கள் எடுத்துக்காட்டு என்று ரிக் வேத பாஷ்யம் (உரை) இயம்புகிறது.

பிற்காலத்தில் உபநிஷத்துக்களில் இந்தக் கருத்து மிகவும் தெளிவாகவே உள்ளது. தத் த்வம்  அஸி , ‘அஹம் பிரம்மாஸ்மி  (நீயே அது; நானே பிரம்மம்) போன்ற வேத வசனங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.

–subham—

yags-கடவுள், தெய்வம், மனிதன், தெய்வப்புலவர்

Boy Magnet காந்தப் பையனும் Counting Horse கணிதக் குதிரையும் (Post No.8142)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8142

Date uploaded in London – 10 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சில அதிசயச் செய்திகள்

காந்தப் பையனும் கணிதக் குதிரையும்

உலகில் காந்த சக்தியுள்ள மனிதர்கள் பத்துப் பதினைந்து பேர் இருக்கிறார்கள் .

ஆயினும் இவர்கள் பிற்காலத்தில் காந்த சக்திகளை இழந்து விடுகிறார்கள் போலும்; ஏனெனில் இவர்களின் பிற்கால வாழ்வு பற்றி செய்திகளே வருவதில்லை. கூகுள் google செய்து பார்த்தபோதும் இது கிடைக்கவில்லை. மத்திய பிரதேச சாகர் நகர் முதல் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் வரை ஸ்பூன் மேன் Spoon Man, அயன் மேன் Iron man, நெயில் மேன் Nail Man, பேன் மேன் Pan Man  என்று பலர் காணப்படுகின்றனர்.

சிலர் இவர்களின் உடலில் இருப்பது காந்த சக்தி அல்ல; இவர்களின் தோல் கோந்து, பசை போல ஓட்டும் தோல் உடையோர்த்தான் (Sticky Skin)  ; ஏனெனில் இவர்களின் உடம்பில் பிளாஸ்டிக் பொருட்களும் ஒட்டுகின்றன என்பர். இன்னும் சிலர் , இவர்கள் உடம்பை வைத்துக்கொள்ளும் முறையால் பொருட்களை (Knacks) நிறுத்தி வைப்பதாகச் சொல்லுவர் . இவற்றில் கொஞ்சம் உண்மை  இருக்கலாம். ஆயினும் மேலும் ஆராயப்பட வேண்டிய விஷயமே .

2011ம் ஆண்டு மெட்ரோ பத்திரிகையில் வந்த செய்தி இதோ —

ஐ வான் ஸ்டோய்கோவிச் (Ivan Stoiljkovic) குரோவேஷியா நாட்டில் வசிக்கிறான். வயது ஆறு; ஆயினும் 25 கிலோ பொருட்களை உடம்பில் ஓட்ட வைத்துக் கொண்டு நிற்கிறான்.

ஐ வான் வசிக்கும் கோப்ரிவனிக்கா கிராமம் வடக்கு குரோவேஷியாவில் உளது . சரியான குண்டன். இவானுடைய சதை மடிப்புகளே 25 கிலோவைத் தாங்குவதாக , குறைகூறுவோர் செப்புவர்.

ஐ வானைப் பற்றிய அதிசயச் செய்திகள்

1. ஐ வான் 50 கிலோ சிமெண்ட் மூட்டையை முதுகில் சுமந்து கொண்டு கிராமத்தை வளம் வருவான்

2. ஐ வான் தொட்ட இடத்தில் காயங்கள் ஆறும்; வலி பறந்தோடிப் போகும்.

3. வீட்டில் பாட்டி, கதவுக்கு உடம்பு வலி என்றால் இவான் போய் தொடுவான்; வலி குட் பய் சொல்லிவிட்டுப் பறந்தோடிவிடும்.

4. கிராமத்தில் ஒருவருக்கு டிராக்டர் விபத்தால் காலில் கடும் வலி உண்டானது ; ஐ வான், அந்த ஆள் பக்கத்தில் போனவுடன் வலி மறைந்தது; அவன் வெளியே போனவுடன் அந்த ஆளுக்கு மீண்டும் வலி வந்தது; பின்னர் ஐ வானை அழைத்தபோது வலி ஓடி விட்டது. அபோது முதல் சிறுவனின் மஹிமை பரவத் தொடங்கியது. உடனே உலக மஹா ஊடககங்கள் ஐ வனை உலகெங்கிலும் காட்டின.

எங்கள் மதுரையில் யாருக்கேனும் சுளுக்கு, முதுகுப் பிடிப்பு வந்தால் இரட்டைக் குழந்தை பெற்றவளோ அல்லது இரட்டைக் குழந்தையில் ஒருவர் தொட்டாலோ சுளுக்கு போய்விடும் என்பர். அதுவும் உண்மைதானோ ???? !!!

ஆராய வேண்டிய விஷயம்தான்.

மின்சார மனிதர்கள் பற்றி நாம் அறிவோம். காந்த மனிதர்களும் இருக்கத்தானே வேண்டும் !!!

XXXXXXXX

கணக்குப் போடும் குதிரை Horse can Count

2012 மெட்ரோ பத்திரிகையில் கணக்குப் போடும் குதிரை பற்றி ஒரு செய்தி வெளியானது ; அந்த குதிரைக்கு 19 வரை எண்ணத் தெரி   யுமாம்.

நான் சிறு வயதில் மதுரையில்  ஆண்டுதோறும் நடக்கும் சித்திரைப் பொருட்காட்சிக்குப் (Chitra Exhibition in Madurai)  போவேன். அங்கு கிளி சர்க்கஸ் Parrot Circus  காட்சிக்கு பெரிய Q கியூ நிற்கும். அவர்களுக்கு நல்ல வசூல் . அங்குள்ள கிளிகள் வண்டி இழுக்கும்; கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லும். பத்து வரை கூட்டல், கழித்தல் கணக்குப் போடும்; கடைசியில் ஒரு தீக்  குச்சியைக் கொண்டுபோய் பட்டாசு வெடிக்கும். அத்துடன் ‘ஷோ’ show  முடியும்; 60 ஆண்டுகளுக்கு முன் பார்த்த காட்சிகள் இன்றும் மனக் கண் முன் காட்சி தருகின்றது.

அது போல இதோ கணக்குப் போடும் குதிரை

மெட்ரோ, ஏப்ரல் 20, 2012 செய்தி

குதிரையின் வயதும் 19; அதற்குத் தெரிந்த எண்களும் 1 முதல் 19 வரை.

வசிக்கும் இடம் — கலிபோர்னியா, அமெரிக்கா

குதிரையின் பெயர் – லூகாஸ் (Lucas)  ;

அதை வளர்க்கும் பெண்மணி – கரேன் மர்டோக்.வயது 54.

திருமதி கரேன் மர்டோக் சொல்கிறார் :

“எனக்கு குதிரை சவாரி ரொம்பப் பிடிக்கும். லூக்காசை பார்த்தேன்; எலும்பும் தோலுமாக நின்றது; இனிமேல் பந்தயத்தில் ஓட முடியாது என்று தெரிந்தவுடன் எல்லோரும் ‘அம்போ’ என்று விட்டுவிட்டனர் அதை நான் சுவீகாரம் எடுத்தேன். ; அது மிகவும் புத்திசாலி என்று எனக்குத் தெரியும்; எதையேனும் கொண்டு வா என்று சொன்னால் நாய் போல ஒடி அதை எடுத்துவரும். 1 முதல் 19 வரை எண்களையும் அறியும். உட்கார் என்றால் உட்காரும்; கற்றுக் கொள்வதில் ஆர்ம் காட்டுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக shapes வடிவங்கள் numbers நம்பர்களையும் சொல்லிக் கொடுத்தேன்”.

xxxx

tags — காந்த , மனிதன், பையன், கணக்குப்போடும், குதிரை

–subham —