பெண்களுக்கும் மலர் மாலைக்கும் என்ன ஒற்றுமை? (Post No. 2665)

IMG_4530

Translated by london swaminathan

 

Date: 26 March 2016

 

Post No. 2665

 

 

Time uploaded in London :– 7-57 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பெண்கள் பற்றி 150 சம்ஸ்க்ருத பழமொழிகள் –பகுதி 1

மான் கூட்டத்தில் காணாமற்போன பெண்ணைக் கண்டுபிடிக்க முடியாதென்கிறார் வால்மீகி! என்ன அழகான கற்பனை! தொடர்ந்து படியுங்கள்.

 

1.அதீரம் லலநா மன: – ப்ருஹத் கதா மஞ்சரி

பெண்கள் சலனமான மனத்தைக் கொண்டவர்கள்

 

Xxx

2.அநாதா க்ருச்ரபதிதா விதேசே ஸ்த்ரீ கரோதி கிம் – கதா சரித் சாகரம்

வெளிநாட்டில் சிக்கிக்கொண்ட, உதவியற்ற, துயரமுடைய ஒரு பெண் என்ன செய்வாள்?

Xxx

3.அப்ரதிஷ்டம் மன: ஸ்த்ரீணாம் — கதா சரித் சாகரம்

பெண்கள் மனது நிலையற்றது.

Xxx

4.அவத்யா:  சர்வபூதானாம் ப்ரமதா: – வால்மீகி ராமாயணம்

உயிர்வாழும் எல்லா இனங்களிலும் மென்மையான பெண்களைக் கொல்லக்கூடாது

Xxx

5.அசஹ்யம் ஹி புரந்த்ரீணாம் ப்ரேம்ணோகாதஸ்ய கண்டனம் – கதா சரித் சாகரம்

ஆழ்ந்த காதலில் சிக்கிய பெண்கள், பொறுக்கமுடியாத துன்பம் அடைகின்றனர்.

IMG_4880 (2)

Xxx

6.அஹோ ஸ்த்ரீ சரிதம் சித்ரம் – கதா சரித் சாகரம்

பெண்களின் செயல்கள் மிக விநோதமானவை

Xxx

7.ஆனுகூல்ய கதயா ஹி நராணாம் ஆக்ஷிபந்தி ஹ்ருதயானி தருண்ய: -சிசுபாலவதம்

அனுகூலமாக நடந்து, மனிதர்களின் இதயங்களை ஆட்கொள்வர் பெண்கள்.

 

Xxx

8.ஆசய: ஸ்த்ரீணாம் துர்விக்ஞேய: சுரைரபி – ப்ருஹத் கதா மஞ்சரி

தேவர்களுக்கும் புரியாதது பெண்களின் எண்ணம்!

Xxx

9.ஷ்டா ஹி ஸ்த்ரீணாம் அன்யா அசஹிஷ்ணுதா – கதா சரித் சாகரம்

பெண்கள் மற்ற பெண்களை சகிக்கமுடியாதது வருந்தக்கூடிய விஷயம்.

Xxx

10.குதூஹலவானபி நிச்சர்கசாலீன: ஸ்த்ரீஜன:

-மாளவிகாக்னிமித்ர

ஆடிப்பாடி ஓடினாலும் பெண்கள், இயற்கையில் தைரியமற்றவர்கள்.

Xxx

 

IMG_4885 (2)

11.கோ ஹி வித்தம்  ரஹஸ்யம் வா ஸ்த்ரீஷு சக்னோதி கூஹிதும் – கதா சரித் சாகரம்

ஒரு பெண்ணிடமிருந்து ரகசியத்தையோ, செல்வத்தையோ யாரால் காப்பாற்ற முடியும்?

 

Xxx

12.க்ருஹாந்தா ப்ரபுதா ஸ்த்ரிய:

வீட்டிற்குள்தான் பெண்களின் ஆட்டபாட்டமெல்லாம்.

 

Xxx

13.தூரஸ்தா ஏவ சோபந்தே புஷ்ப மாலா இவ அங்கனா: – ராமாயண மஞ்சரி

பெண்களின் வசீகரம்/கவர்ச்சியானது,மலர் மாலைகளைப் போல தூரத்தில் இருக்கும்போது மட்டுமே.

Xxx

14.திக் ஜன்ம ந்ருபயோஷிதாம் – விக்ரமசரிதா

ராணிகளின் பரிதாப வாழ்க்கை முடியட்டும்

Xxx

15.ந பரஸ்பர்சமாத்ரம் ஹி ஸ்தீணாம் ஆபதி தூஷணம் – கதா சரித் சாகரம்

ஆபத்தில் சிக்கிய பெண்ணைத் தொட்டால் தப்பில்லை; அதை யாரும் கண்டிப்பதில்லை.

 

Xxxx

 

16.ந புன: சர்வதா சர்வா துர்வ்ருத்தா ஏவ யோஷித: – கதா சரித் சாகரம்

எல்லா பெண்களும் எப்போதும் கெட்டவர்கள் இல்லை.

Xxx

17.நவ அங்கனானாம்  நவ ஏவ பந்தா:

–சுபாஷிதரத்னகண்டமஞ்சுசா

இளம் பெண்கள், புதுப்புது பாதைகளை (பாஷன்) நாடுவர்.

 

Xxx

18.ந சக்யம் ப்ரமதா நஷ்டா ம்ருகீஷு பரிமார்கிதும் -– வால்மீகி ராமாயணம்

மான்களிடையே காணாமற்போன பெண்ணைக் (மான்விழியாளை) கண்டுபிடிப்பது அரிது!

Xxx

19.ந ஹி நார்யோம் வினேஷ்ர்யயா —சுபாஷிதரத்னகண்டமஞ்சுசா

பொறாமையில்லாத பெண்கள் இல்லை.

IMG_4412

Xxx

20.நஹி அதிசம்மானயேத் ப்ரமதாம் – சதோபதேசப்ரபந்த

இளம் பெண்ணை அதிகம் புகழாதே.

 

Xxx

21.நாரீணாம் பரமோ தர்மோ நிஜசீலஸ்ய பாலனம் –விக்ரம சரிதம்

ஒரு பெண்ணின் தலையாய கடமை, கற்பைப் பாதுகாப்பதே.(தமிழ் மொழியாக்கம்-லண்டன் சுவாமிநாதன்)

தொடரும்……………………………

Source: Suktisudha- The Elixir of Adages, Chinmaya International Foundation, Ernakulam, Kerala