
Written by london swaminathan
Date: 14 March 2016
Post No. 2630
Time uploaded in London :– 8-57
(Thanks for the Pictures; they are taken from various sources)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
(Already posted in English by me under the title: Every jackass wants an office;post no. 2628)

அமெரிக்க ஜனாதிபதியாகவிருந்த ஆப்ரஹாம் லிங்கன் சொன்ன கதை; தமிழ் மொழியாக்கம்-லண்டன் சுவாமிநாதன்
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் மந்திரியுடன் சேர்ந்து வேட்டைக்குப் போனார்.
“மந்திரியாரே! இன்று மழை வருமா?”
“மன்னனே! இன்று கட்டாயம் மழை வராது.”
இந்த உரையாடலுக்குப் பின்னர், ராஜா, ஒரு விவசாயியைப் பார்த்தார். அவன் ஒரு கழுதை மீது சவாரி செய்து கொண்டிருந்தான். “என்ன, வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறாய்?” என்று ராஜா கேட்டார்.
“ஐயோ, ராஜா, மழை கொட்டப்போகிறதே! அதனால்தான் வேகமாகப் போகிறேன்” – என்றான்.
“அது எப்படி உனக்குத் தெரியும்?” என்று ராஜா கேட்டார்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. என் கழுதையின் காதுகளைப் பார்த்துத்தான் நான் கண்டு பிடித்தேன். இதோ பருங்கள்! காதுகளை நன்றாக நீட்டி வைத்துக்கொண்டுள்ளன. இப்படியிருந்தால் மழை கொட்டப்போகிறது என்று அர்த்தம்” – என்றான்.
ராஜாவும் , மந்திரியும் காட்டுக்குள் வேட்டையாடப் போனார்கள். மழை கொட்டித் தள்ளிவிட்டது. ராஜாவுக்குப் பயங்கர கோபம். மந்திரியைப் பதவி நீக்கம் செய்தார். அந்த விவசாயியைக் கண்டுபிடித்து, அவன் கழுதையை விலைக்கு வாங்கி, அதற்கு மந்திரி பதவி கொடுத்தார்.
எல்லோரும், ஆப்ரஹாம் லிங்கன் சொன்ன கதையைச் சுவையாகக் கேட்டனர்.
“அந்த ராஜா பெரிய தப்புச் செய்துவிட்டார்” ….. என்று லிங்கன் கதையைத் தொடர்ந்தார். எல்லோருக்கும் சந்தேகம். ராஜா என்ன தப்பு செய்தார்? கூட்டத்தில் ஒருவன் எழுந்து “ராஜா, என்ன தப்பு செய்தார்?” – என்று கேட்டான்.
“அவர் ஒரு கழுதைக்கு மந்திரி பதவி கொடுத்ததிலிருந்து, இப்பொழுது எல்லா கழுதைகளும் மந்திரி பதவிக்காக அலைந்து கொண்டிருக்கின்றன” – என்று போட்டாரே ஒரு போடு!
Xxx

கர்னல், இடத்தில் என்னைப் போடுங்கள்!
ஒரு ராணுவத்தில் பெரிய கர்னல் பதவி வகித்தவர் இறந்து போய்விட்டார். இன்னும் இறுதிச் சடங்கு கூட நடந்த பாடில்லை. அதற்குள் அந்த மாகாண கவர்னரிடம் அந்த பதவிக்காக பல மனுக்கள் குவிந்தன. இறுதிச் சடங்கு ஊர்வல நாளும் வந்தது. பெரிய ராணுவ மரியாதையுடன் ஊர்வலம் துவங்கியது. சவப்பெட்டிக்குள் கர்னலின் சடலம் இருந்தது. ராணுவ அதிகாரிகளில் ஒரு ‘முந்திரிக்கொட்டை’, கவர்னரிடம் போய், “கர்னலின் இடத்தில் (பதவியில்) என்னைப் போடுங்களேன்”. என்று சொன்னார். கவர்னருக்கு ஒரே கோபம்! “கர்னலின் இடத்திலா? அதோ, அந்த சவப்பெட்டியைத் துக்கிக்கொண்டு போகிறார்களே, அவர்களிடம் போய்க்கேளுங்கள்” – என்றார்.
-சுபம்-
You must be logged in to post a comment.