கீதையின் மஹிமையை அறிந்து தன் தடையை நீக்கிய துருக்கி! (Post.9404)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9404

Date uploaded in London – –  21 MARCH  2021    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

கீதையின்  மஹிமையை அறிந்து தன் தடையை நீக்கிய துருக்கி! by S Nagarajan

உலகின் மஹிமை வாய்ந்த நூல்களில்  மகான்களாலும், அருளாளர்களாலும் அறிஞர்களாலும் பெரிதும் மதிக்கப்படும் பெரும் நூல் பகவத்கீதை. மஹாபாரதத்தில் இடம் பெறுவது இது. கிருஷ்ண-அர்ஜுன சம்வாதமாக – உரையாடலாக – அமைந்துள்ள இந்த நூல் மனித குலத்திற்கே ஒரு வழிகாட்டி.

இந்த நூலை துருக்கி நாடு 1971ஆம் ஆண்டு தடை செய்தது.

பாரத நாட்டில் உள்ள அறிஞர் பெருமக்கள் உள்ளிட்ட அனைவரும் திடுக்கிட்டனர்.

எதற்காக இந்தத் தடை திடீரென்று என்று!

tags – கீதை,  மஹிமை,  தடை,  துருக்கி, 

புனர்வசு நட்சத்திர மஹிமை (Post No.8710)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8710

Date uploaded in London – – 20 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

YOU ARE INVITED TO LISTEN TO OUR QUESTION AND ANSWERS ON HINDUISM (in tamil) AND WEEKLY ROUND OF HINDU EVENTS AROUND THE WORLD (in Tamil)  VIA ZOOM OR FACEBOOK.COM/GNANAMAYAM

LIVE ON MONDAYS AT 14-00 HORS LONDON SUMMER TIME AND 18-30 IST. BUT YOU MAY SEE US 24 HOURS A DAY AT FACEBOOK.COM/GNANAYAMAYAM

14-9-2020 அன்று நடைபெற்ற facebook.com/gnanamayam கேள்வி-பதில் நிகழ்ச்சியில் ச.நாகராஜன் புனர்வசு பற்றிய கேள்விக்கு அளித்த பதில் இது. ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டன் நேரம் மதியம் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது. அன்பர்கள் தங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டுகிறோம்.

வணக்கம்!

சென்ற வாரம் திரு சீனிவாசன் அவர்கள் ராமனின் புனர்வசு நட்சத்திரம் பற்றிச் சொன்னார். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சில நட்சத்திரங்களே கடவுளின் பெயர்களாக வருகின்றன. அதில் ஒன்று புனர்வசு. இது பற்றி உங்கள் கருத்து என்ன? புனர்வசு பற்றி புராணக் கதைகள் உண்டா?

இதோ பதில்:-

27 நட்சத்திரங்களும் அபூர்வமான வரலாறுகளைக் கொண்டவை. வானத்தில் திகழும் இவை பற்றிய ஆச்சரியகரமான உண்மைகள் புராணங்களில் கதை வடிவமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

புனர்வசு 27 நட்சத்திரங்களில் 7வது நட்சத்திரமாகத் திகழ்கிறது.

புனர்வசு தேவதையானவள் மஞ்சள் நிறமுள்ளவள். ஸ்ருக், ஸ்ருவம், ஜபமாலை, கமண்டலம் ஆகியவற்றை நான்கு கரங்களில் தரித்திருப்பவள். அதிதி இந்த நட்சத்திரத்தின் அதி தேவதை.

ஸ்ரீராமருடைய நட்சத்திரம் என்பதால் இது விசேஷ பெருமையைப் பெறுகிறது.

புனர்வசுவின் நான்காம் பாதத்தில் ராமர் பிறந்ததால் அவர் ராசி கடக ராசியாக அமைகிறது.

புனரர்வசு என்பது புனர் மற்றும் வசு ஆகிய இரு சொற்களின் சேர்க்கையாகும்.

புனர் என்றால் மறுபடி திருப்பி வருவது. வசு என்பது ஒளி, செல்வம் உள்ளிட்ட அனைத்து நலன்களையும் குறிக்கிறது.

இந்த நட்சத்திர வடிவம் அம்புகள் அடங்கிய அம்பராவைக் கொண்டிருக்கிறது. இந்த அம்புகள் எல்லையற்ற ஆற்றல் கொண்டவை. யார் இதை உணர்ந்து ஆணயிடுகிறார்களோ அவர்களுக்கு இவை பலன் தரும்.

புராணத்திலே புனர்வசுவைப் பற்றி விளக்கமாகக் காண முடிகிறது. பிரம்மாவின் புதல்வர் மரீசி. அவரது புதல்வர் கஸ்யபர், அதாவது பிரம்மாவின் பேரர். தக்ஷ ப்ராஜாபதியின்  மகளான அதிதியை கஸ்யபர் மணந்தார். அதிதி என்றால் எல்லையற்றவள் என்று பொருள். அளப்பரிய ஆற்றல் கொண்டவள் அதிதி. அதிதிக்கு ஸத்யம், தயாளம், பெருந்தன்மை, தூய்மை, அழகு, ராஜ கம்பீரம் உள்ளிட்ட பல குண நலன்கள் உண்டு. அதிதிக்கு 12 ஆதித்யர்கள் பிறந்தனர். இந்திரன், பாகன், வாயு, த்வ்ஷ்டா, வருணர், ஆர்யமான், பூஷா, மித்ரா, அக்னி, பர்ஜன்யா, விவஸ்வான், தினகர் ஆகியோர் இந்த 12 ஆதித்யர்கள்.  

புனர்வசுவின் அதி தேவதையான அதிதியைப் பற்றி ஏராளமான புராணக் கதைகள் உண்டு. அதிதியின் 12 சகோதரிகள், அதிதிக்கு மஹாவிஷ்ணு வாமனனாகப் பிறந்தது, நரகாசுரன் அதிதியின் காதணிகளைத் திருடியது, புதனிடம் அதிதி சாபம் பெற்றது என இப்படி பல சம்பவங்களைப் புராணங்களிலும் ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்களிலும் காணலாம்.

இழந்ததைப் பெறுவது, பிரிந்த கணவன் மனைவி திருப்பி ஒன்று சேர்வது, தூர தேசங்களில் பயணம் செய்தவர் திரும்பி வருவது இவை எல்லாம் புனர்வசு நட்சத்திரம் தரும் பலன்களாகும்.

ராமரின் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் ஒரு முறை பார்த்தால் இந்த நட்சத்திரத்தின் பலன்கள் நன்கு தெரியவரும்.

ஒரு முறை கேட்டால் மட்டும் போதாது, மறுமுறை கேட்டால் அடைய முடியும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது புனர்வசு. எல்லையற்ற தன்மையையும் -limitless abundance –  இது குறிக்கிறது.

மேலை நாட்டு வான சாஸ்திரத்தில் கேஸ்டர் மற்றும் போலக்ஸ் இந்த நட்சத்திரத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.கேஸ்டர் ஒன்றை இழக்கச் செய்யும்; போலக்ஸ் அதை மீட்டுத் தரும்.

விஷ்ணுசஹஸ்ரநாமத்தில் 150வது நாமமாக வருவது புனர்வஸு என்ற நாமம்.

இதற்கு பாஷ்யம் அருளி இருக்கும் ஆதி சங்கரர்  திருப்பித் திருப்பி உடல்களில் க்ஷேத்ரக்ஞனாக உறைபவர் விஷ்ணு என்று கூறி அருளுகிறார்.

பராசர பட்டரோ தனது பாஷ்யத்தில் மற்ற மூர்த்திகளிலும் தேவதைகளிலும் அந்தராத்மாவாக உறைபவர் விஷ்ணு என அர்த்தம் விளக்குகிறார்.

இதற்கு அடுத்து வரும் நாமம் உபேந்திரன் என்பதாகும். புனர்வஸு ராமாவதாரத்தையும் உபேந்திர என்னும் நாமம் கிருஷ்ணாவதாரத்தையும் குறிக்கிறது.

புனர்வசுவின் பெருமை எல்லையற்றது, அனைத்தையும் அளிக்க வல்லது, வேண்டியதை உடனே  என்பதைக் காண்பிக்க புனர்வசு நட்சத்திரத்தில் ஜனித்த காமதேனுவைக் குறிப்பிடலாம்.

புனர்வசுவில் பிறந்த பெரும் மகான் பகவான் ரமண மஹரிஷி ஆவார். அப்பர் திருவாதிரைப் பதிகத்தைப் பாடி அருளியது போல, ரமண மஹரிஷியின் அணுக்கத் தொண்டரான முருகனார் ‘புனர்வசு வண்ணம்’ என்ற ஒரு பதிகத்தைப் பாடியுள்ளார்.

ஆயுர்வேதத்தை அருளிய புனர்வசு ஆத்ரேயா அக்னிவேசதந்த்ரா என்ற நூலை இயற்றிய அக்னிதேவரின் குரு ஆவார்.

புனர்வசு நட்சத்திரத்தை வானில் எப்படிக் கண்டு வணங்கலாம்? ஓரியன் கூட்டத்திற்கு வடகிழக்காக வட வானத்தில் உயரத்தில் இரு நட்சத்திரங்களைக் காணலாம். இவற்றில் கிழக்காக ஒளிர்வது போலக்ஸ் (Polux) என்னும் நட்சத்திரம். அதற்கு சற்று வடமேற்காக உள்ளது காஸ்டர் (Castor) நட்சத்திரம். இந்த இரட்டை நட்சத்திரங்களே புனர்வசு கூட்டமாகும். இதே ஓரியன் கூட்டத்தில் ப்ராசியன், சிரியஸ் ஆகிய நட்சத்திரங்களும் உண்டு. இவை பிரமிக்க வைக்கும் சுவையான தகவல்களைத் தருபவை; பூமியில் மனித நாகரிகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை.

புனர்வசு நட்சத்திரத்திற்கு இன்னும் ஒரு பெருமை உண்டு.

இந்த நட்சத்திரம் எந்தக் கிழமை, திதியில் வந்தாலும் அதற்கு மரண யோகம் இல்லை!

இப்படி புனர்வசுவின் பெருமையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் வாழ்க்கையில் நம்பிக்கையைத் தரும் நட்சத்திரம் புனர் வசு. இழந்தது கிடைக்கும்; எல்லையற்ற ஆற்றல் மிக்க பாணங்களை எடுத்து அவற்றை விடுத்து வெற்றி பெறலாம். மீண்டும் மறு ஒளியைத் தரும் புனர்வசுவைப் போற்றுவோம்; வணங்குவோம்! ஒளி பெறுவோம்! உயர்வோம்!

அடுத்து இன்னும் ஒரு நிகழ்ச்சியில் உங்களைச் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது சந்தானம் நாகராஜன்.

—subham—-

tags -புனர்வசு, நட்சத்திரம், மஹிமை,

காயத்ரி மந்திர மஹிமை என்ன? (Post No.8684)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8684

Date uploaded in London – – 15 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டனிலிருந்து ஞானமயம் நிகழ்ச்சி லண்டன் நேரம் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இதில் ஒரு பகுதி.14-9-2020 அன்று ஒளிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியில் காயத்ரி மந்திரம் பற்றிய கேள்விக்கு அளித்த பதிலை இங்கு காணலாம்.

கேள்வியை அனுப்ப விரும்பும் அன்பர்கள் facebook.com/gnanamayam -க்கு அனுப்பலாம்.

காயத்ரி மந்திர மஹிமை என்ன? காயத்ரி மந்திரத்தைப் பெண்களும் ஓதலாமா? – 1

ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

இன்று நம் முன் இருக்கும் கேள்வி : காயத்ரி மந்திரத்தின் மஹிமை என்ன? காயத்ரி மந்திரத்தைப் பெண்களும் ஓதலாமா?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளைப் பார்ப்போம்.

காயத்ரி மந்திரத்தின் மஹிமை சொல்லுக்கு அப்பாற்பட்டது.

மந்த்ர ராஜம் என்று அழைக்கப்படுவது காயத்ரி. வேத மாதா என்று அழைக்கப்படுவது காயத்ரி.

குடிமக்களின் அதிபதியாக எப்படி ஒரு ராஜா கருதப்படுகிறாரோ அதேபோல மந்திரங்களின் உச்சத் தலைமையிடத்தைப் பெறுவது மந்த்ர ராஜம் காயத்ரி.

காயத்ரி மந்திரம் என்ன தரும்?

‘காயந்தம் த்ராயதே இதி காயத்ரி.’

தன்னை ஓதுபவரைக் காப்பது காயத்ரி.

ஓம் பூர்புவஸ் ஸுவ:

தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோன: ப்ரசோதயாத் |

இது தான் காயத்ரி மந்திரம்.

இதன் அர்த்தத்தைப் பல்வேறு மொழிகளிலும் பல்வேறு அறிஞர்கள் மொழி பெயர்த்துள்ளனர். இப்படி நூற்றுக்கும் மேலான மொழி பெயர்ப்புகள் உண்டு.

இப்போது தமிழில் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அளித்துள்ளதைப் பார்ப்போம்.

ஓம்

பூர், புவ, ஸுவ: – உடல், ஆன்மீக, தெய்வீக வாழ்வுக்குரிய

ஸவிதுர் – உலகங்களுக்கு மூலாதாரமாக உள்ள

வரேண்யம், தேவஸ்ய – போற்றுதலுக்குரிய , யாவரிலும் மேலான, தெய்வீக மெய்ம்மையின்   

பர்கோ –  தெய்வீகப் பேரொளி மீது

தீ மஹி – நாம் தியானிக்கின்றோம்

தத் – நாம் மேலான உண்மையை உணரும்படி அந்த மேலான தெய்வம்

நஹ – நம்

தியோ – அறிவுக்கு

ப்ரசோதயாத் – ஒளி ஊட்டட்டும்

அறிவைத் தரும் ஆற்றலினைத் தருகிறது காயத்ரி. அத்தோடு காயத்ரி மந்திரம் சர்வ ரோக நிவாரணி. எல்லா நோய்களையும் போக்க வல்லது. சர்வ துக்க பரிவாரிணி காயத்ரி! அது அனைத்து துன்பங்களையும் கவலைகளையும் போக்குகிறது. சர்வ வாஞ்சா பலஸ்ரீ காயத்ரி. அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவது காயத்ரி.

மஹாகவி பாரதியார் இதை ‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம், அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக’ என அற்புதமாக பாஞ்சாலி சபதத்தில் முதல் சருக்கமான துரியோதனன் சூழ்ச்சிச் சருக்க முடிவில் தமிழில் தருகிறார்.

காயத்ரி பரிவார் என்ற அமைப்பை நிறுவிய ஸ்ரீராம் சர்மா ஆசார்ய காயத்ரி பற்றி ஏராளமான சுவையான சம்ப்வங்களையும் விளக்கங்களையும் அளித்துள்ளார். சுமார் 3000 புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். 1911ஆம் ஆண்டு பிறந்த அவர் 1990ஆம் ஆண்டு காயத்ரி ஜயந்தி தினத்தன்று தாமாகவே தன் உடலை உகுத்தார். அவரது 108 புத்தகங்கள் – ஒவ்வொன்றும் A -4 அளவிலான 500 பக்கங்கள் கொண்டது காயத்ரி பற்றிய அபூர்வமான ஆற்றல்களைத் தருகிறது. ஹிந்தியில் உள்ள இந்தப் புத்தகங்கள் பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அன்பர்கள் இதை இணையதளத்திலிருந்து டவுன்லோட் – தரவிறக்கம் – செய்து கொள்ளலாம்.

காயத்ரி மந்திரத்தின் மஹிமையை விளக்கும் சம்பவங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. வரலாற்று ஏட்டிலிருந்து ஒரு முக்கிய சம்பவத்தை எடுத்து இங்கு பார்ப்போம்.

நாதிர்ஷாவிற்கு டெல்லியின் மீது ஒரு கண். பேராசை கொண்ட அவன் பெரும்படையை ரகசியமாகத் திரட்டினான்.  எதற்காக இப்படிப்பட்ட பெரும்படை திரட்டப்பட்டது என்பதை அவன் யாரிடமும் சொல்லவில்லை. திட்டமிட்ட நாளில் திடீர் தாக்குதலை அவன் டெல்லி மீது நடத்தினான். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தன் படை திடீர் தாக்குதலை மேற்கொண்டிருப்பதால் ஒரு சில மணி நேரங்களிலேயே டெல்லி வீழ்ந்து விடும் என்பது அவனது கணிப்பு. ஆனால் என்ன ஆச்சரியம். அப்போது டெல்லியை ஆண்ட முகம்மது ஷா நாதிர்ஷாவின் படையை எதிர் கொண்டதோடு அந்தப் படையை ஓட ஓட விரட்டினான். தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவன் படை வீரர்கள் புறமுதுகு காட்டி ஓடினர். ஏமாற்றம் அடைந்த நாதிர் ஷா ஈரானுக்குத் திரும்பி விட்டான். எப்படி இப்படி முகம்மது ஷா தனது திடீர் படையெடுப்பைச் சமாளிக்க முடிந்தது என்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது; புரியாத புதிராக இருந்தது.

முகம்மது ஷா நாதிர்ஷாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பினான். அதில் நீங்கள் படை எடுத்து வருவீர்கள் என்பதை ஆறு மாதத்திற்கு முன்னாலேயே எங்கள் நாட்டில் உள்ள முனிவரான குரு சரணதாஸர் எனக்குக் கடிதம் மூலம் விளக்கி எழுதியதோடு தகுந்த முன்னேற்பாடுடன் இருக்குமாறு அறிவுரை கூறினார். அவரது கூற்றுப்படி நானும் முன்னெச்சரிக்கையுடன் இருந்து வெற்றி பெற்றேன். என்று எழுதியதோடு சரணதாஸர் தனக்கு எழுதிய கடிதத்தையும் இணைத்து அனுப்பினான்.

நாதிர்ஷா பிரமித்தான். வியந்தான். ஆறு மாதத்திற்கு முன்னர் தனக்கே அந்த எண்ணம் எழவில்லையே என நினைத்தான் அவன். நேரடியாக சரணதாஸரை தரிசித்து வணங்கினான். அவரது ஆசியையும் பெற்றான்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆள்வார் மாவட்டத்தில் டெஹ்ரா என்ற கிராமத்தில் எளிய அந்தணர் குலத்தில் பிறந்தவர் சரணதாஸர். தாயார் குஞ்சு பாயும், தந்தை முரளீதரரும் அவரை தெய்வ வழிபாட்டில் ஈடுபடுத்தினர். காயத்ரியை உச்சரிக்க ஆரம்பித்தார் சரணதாஸர். ஒரு நாள் இரவு மஹரிஷி சுகர் அவரது கனவில் தோன்றி காயத்ரி உபாசனையை விளக்கினார். நர்மதை நதிக்கரையில் வெகு காலம் காயத்ரியை ஜெபித்த சரணதாஸர் அதில் சித்தி பெற்றார்; நேரடியாக முஸாபிர் நகரில் உள்ள சுக்ரதலம் என்ற கிராமத்திற்கு வந்தார். அங்கே பகவதி ரூபமாக காயத்ரி மாதா அவருக்கு தரிசனம் தந்தாள்.

சரணதாஸர் மனித குல நன்மைக்காக முகமது ஷாவை எச்சரிக்க, அதனால் மகிழ்ந்த முகம்மது ஷா பல கிராமங்களை அவருக்கு மானியமாக அளிக்க முன் வந்தான். ஆனால் அவரோ அதை ஏற்க மறுத்து பல கல்விச் சாலைகளை நிறுவுமாறு அறிவுரை கூறினார்.

இன்றும் கூட சுக்ரதலம் கிராமத்தில் வருடந்தோறும் அவர் நினைவாக காயத்ரி மஹோற்சவம் நடை பெற்று வருகிறது.

இன்னும் ஒரு சம்பவம். மஹா முனிவர் வித்யாரண்யர் வாழ்வில் நடந்தது இது. அவர் காயத்ரி தேவியை தரிசிக்க காயத்ரி மந்திரத்தை 24 மஹாபுரச்சரணம் உச்சரித்தார்.

ஒரு புரச்சரணம் என்பது ஒரு மந்திரத்தில் எத்தனை அக்ஷரங்கள் இருக்கிறதோ அத்தனை லக்ஷம் தடவை அதை ஜெபிப்பதாகும். காயத்ரி மந்திரத்தில் 24 அக்ஷரங்கள் இருப்பதால் அதை 24 லக்ஷம் முறை ஜெபிப்பது ஒரு புரச்சரணம் ஆகும். வித்யாரண்யர் 24 புரச்சரனம் உச்சரித்தார்.

தேவியின் தரிசனம் கிடைக்கவில்லை. அவர் சந்யாசியானார்.

திடீரென ஒரு நாள் காயத்ரி தேவி அவர் முன் பிரசன்னமானாள்.

ஹே, தேவியே, 24 மகாபுரச்சரணம் செய்து உன் தரிசனத்திற்காக ஏங்கிய போது தரிசனம் தராத நீ இன்று இப்படி தரிசனம் தந்தது எதனால் என்று வியப்புத் தாளாமல் அவர் கேட்டார்.

அதற்கு தேவி, “ முதலாவதாக 24 மஹாபுரச்சரணம் செய்து நீ 24 முன் ஜென்மங்களில் செய்த பாவம் அனைத்தையும் தீர்த்துக் கொண்டாய். ஆகவே என்னை தரிசிக்கும் தகுதியை நீ பெற்று விட்டாய். என்றாலும் என்னை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை  மட்டும் உனக்கு இருந்தது. அனைத்து ஆசைகளையும் துறந்தவனே என்னை தரிசிக்க முடியும். அதையும் துறந்து நீ சந்யாசி ஆனாய். உனக்கு இதோ தரிசனம் தந்து விட்டேன்” என்று தேவி கூறி அருளினாள். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று தேவி கேட்க “உன் தரிசனமே கிடைத்து விட்டது! எனக்கு வேறு வரம் என்ன வேண்டும்?” என்றார் அவர். ரிக், யஜூர், சாம வேதங்களுக்கான உரையை அவர் எழுதினார். இன்னும் பல நூல்களையும் எழுதி அருளினார். அவரை அணுகிய ஹரிஹரர், புக்கர் ஆகிய இருவருக்கு ஆசியை அளித்து பெரும் ஹிந்து சாம்ராஜ்யம் அமைய வழி கோலினார். விஜய நகர அரசை ஸ்தாபித்தார்.

please go to Facebook.com/gnanamayam

tags– காயத்ரி மந்திரம்,  மஹிமை

TO BE CONTINUED………………………………….

விபூதியின் மஹிமை! – 1 (Post No.7541)

Vibhuti Valluvar

Written  by S Nagarajan             

Post No.7541

Date uploaded in London – – 6 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

விபூதி எனப்படும் திருநீறு சைவர்கள் தரிக்க வேண்டிய முக்கியமான ஒன்று.

“ஒரு நாளாவது ஒருவன் பஸ்மத்தைத் தரிப்பானாயின் அவனுக்குண்டாகும் புண்ணியபலத்தைச் சொல்கிறேன், கேட்பாயாக : என்னவெனில் அவ்ன் மகாபாதகங்களைச் செய்திருப்பின் அவைகளும் வேறு பாதகங்களும் நசித்துப் போய்விடும். இது சத்தியம்! சத்தியம்!! சந்தேகமில்லை”

என்று இப்படி நாராயணர், நாரதரிடம் கூறிய் ஆச்சரியகரமான உரை தேவி பாகவதத்தில் இடம் பெறுகிறது.

தேவி பாகவதம், பதினொன்றாம் ஸ்கந்தத்தில் 11ஆம் அத்தியாயம் மூவகை பஸ்மம் பற்றி விளக்குகிறது.

12,13,14 ஆகிய அத்தியாயங்கள் பஸ்ம மகிமையை மிக விரிவாக விளக்குகின்றன.

15ஆம் அத்தியாயம் பஸ்மம் தரிக்கும் முறைகள் பற்றிய விளக்கத்தை அளிக்கிறது.

ஸ்கந்தபுராணமோ சூத சம்ஹிதையில் யக்ஞ வைபவ காண்டத்தில் (29ஆம் அத்தியாயம்) திருநீற்றின் மகிமை பற்றிக் கூறுகிறது.

அதை இங்கு சுருக்கமாகக் காண்போம்:

மஹாபஸ்மம், பஸ்மம் என்று விபூதி இரு வகைப் படுகிறது.

பாவங்களை எல்லாம் நாசம் பண்ணுவதால் அதற்குப் பஸ்மம் என்று பெயர்.

ஞானத்தைக் கொடுத்து மஹாபாவங்களை எல்லாம் நாசப்படுத்துவதால் சிவபெருமானே மஹாபஸ்மம் எனப்படுவார்.

அந்த மஹாபஸ்ம சொருபத்தை அடைந்தவர்களுக்கு தவம் முதலியவற்றினால் யாதொரு பயனும் இல்லை.

மஹாபஸ்ம சொரூபம் விளங்கப் பெற்றவன் சிவனே ஆவான்.

மஹா பஸ்ம ஞானம் அடைவதையே பெரும் பயன் என்று வேதம் முதலிய நூல்கள் கூறுகின்றன.

சிரௌதம், ஸ்மார்த்தம், லௌகிகம் என்று  பஸ்மம் மூன்று வகைப்படும்.

இதில் சிரௌதம், ஸ்மார்த்தம் ஆகிய இரண்டும் அந்தணர்களுக்கே உரியன.

லௌகிகம் மற்ற எல்லோருக்கும் ஆகும்.

ஜாபாலோபநிஷத் மந்திரங்களினால் உத்தூளனம் செய்து கொண்டு, பஞ்சபிரம மந்திரங்களால் நீர் விட்டுக் குழைத்துத் திரிபுண்டரம் தரித்துக் கொள்ள வேண்டும்.

மேதாவி முதலிய மந்திரங்களால் பிரம்மச்சாரி அணிய வேண்டும்.

சந்யாசி பிரணவ மந்திரத்தால் (ஓம்) அணிவது தகுதி.

மந்திரங்களுக்கு அதிகாரமில்லாதவன் மந்திரம் இல்லாமலேயே தரித்தல் வேண்டும்.

விபூதியை உத்தூளனமாகவும் திரிபுண்டரமாகவும் தரித்தல் ஞானாங்கமாகும் என்று வேதங்கள் சொல்லும்.

பாசுபத விரதத்தை அனுஷ்டிப்பவன் மெய்ஞானத்தை அடைந்தவனாவான் என கைவல்ய உபநிடதம் கூறுகிறது.

முக்தியை விரும்புவபவர்கள் விபூதியை எப்போதும் தரிக்க வேண்டும்.

உயிரைக் காப்பாற்றல், சுபம், ஸ்நானம், தானம், தவம், யாகம் எல்லாம் திருநீறு என்று வேதங்கள் கூறுகின்றன.

திருமால், பிரமன்,இந்திரன், தேவர்கள்,இலட்சுமி, சரஸ்வதி, இந்திராணி, அரம்பையர்கள், யட்சர், கந்தர்வர், ராக்ஷஸர், அசுரர், முனிவர்கள் ஆகிய இவர்களில் விபூதியை உத்தூளனமாகவும் திரிபுண்டரமாகவும் தரியாதவர் யார்?

திருநீறு அணியாதவர்க்கு ஞானமில்லை.

அவர்கள் கோடி ஜன்மம் எடுத்தாலும் சம்ஸார பந்தம் ஒழியார்; பாவிகள் ஆவார்! நரகத்தில் வீழ்ந்து வருந்துவர்.

வர்ணாசிரம தர்மம் தரும் பலனையும் அவர்கள் அடைய மாட்டார்கள். அவர்கள் செய்யும் புண்ணியமும் பாவமாகும்.

பல ஜன்மங்களிலும் பாவம் செய்தவர்களுக்கு விபூதியில் வெறுப்பு உண்டாகும்.

paramam pavitram Bhaba Vibhutim

விபூதியை விரும்பாதவர்கள் அனைவரும் மஹாபாவிகள் என்று

தெரிந்து கொள்ள வேண்டும்.

திருநீற்றின் மகிமையை ஒருவராலும் சொல்ல முடியாது.

இப்படி ஸ்காந்த புராணம் அழுத்தமான வார்த்தைகளால் விபூதி அணிவதன் அவசியத்தையும் அதன் மகிமையையும் விளக்குகிறது.

அடுத்து தேவி பாகவம் கூறும் மகிமைகளைச் சற்றுப் பார்ப்போம்.

  • தொடரும்

****

எட்டாம் நம்பர் மஹிமை (Post No.7036)

COMPILED BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 30 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 8-59 AM

Post No. 7036

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

எட்டு வகைத் திருமணங்கள் | Tamil and …



https://tamilandvedas.com › tag › எட்டு-வகை…

1.      

8 Jun 2018 – தொல்காப்பியரும் மநுவும் சொல்லும் எட்டு வகைத் திருமணங்கள் … ஆருஷத் திருமணம் மூலம் பிறக்கும் குழந்தைகளின் முன், …

திருமண வகைகள் | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › திருமண-வக…

1.      

9 Apr 2015 – Tagged with திருமண வகைகள் … இந்துமதத்தில் 8 வகைத் திருமணங்கள். Written by … வரை பின்பற்றுவது; எட்டு வேற்றுமைகளை பின்பற்றுவது.

எட்டு வகை திருமணங்கள் | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › எட்டு-வகை-…

8 Apr 2015 – Tagged with எட்டு வகை திருமணங்கள் … எட்டு வகைத் திருமணங்கள் … பைசாசம் — என்ற எட்டுவகை திருமணம் பற்றி பல சுவையான …

அஷ்டமா சித்திகள் | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › அஷ்டமா-சி…

1.      

Translate this page

29 May 2018 – Tagged with அஷ்டமா சித்திகள். வேதம் முதல் தாயுமானவர் வரை அஷ்டமா சித்திகள்! அற்புத சக்திகள்! … தன்னிகரில் சித்தி பெறலாம்.

வித்தை | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › வித்தை

1.      

Translate this page

12 Aug 2017 – WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU. அஷ்டமா சித்தி (எட்டு வகை …

ரிக்வேதக் கவிதை | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › ரிக்வேதக்-…

1.      

Translate this page

21 May 2018 – WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU. அஷ்டமா சித்தி (எட்டு வகை …

to be continued……………………

Indus Valley Weights

லெட்சுமி வசிக்கும் இடம்; மஞ்சள் மகிமை! (Post No.5688)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 22 November 2018

GMT Time uploaded in London –7-23 am
Post No. 5688

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

 

பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் மறைந்து வருகிறது. பல வகையான சோப்புகளும், கிரீம்களும் அந்த இடத்தைப் பிடித்துவிட்டன. மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால் பெண்களின் முகத்தில் முடி வளர்வதைத் தடுக்கலாம். பரு முதலியன வராமலும் தடுக்கலாம்.

மஞ்சள் என்பது பாக்டீரியா எதிர்ப்புக் குணம் மிக்க பொருள் என்பதை இப்பொழுது விஞ்ஞானிகளும் ஒப்புக் கொண்டு விட்டனர். மஞ்சள் பொடி போட்டு இந்திய உணவு உருவாக்கப்படுவதை வெளிநாட்டு சமையல் சானல் (channels) கள் மிகவும் சிலாஹித்துப் பேசுகின்றன. சமைத்த பண்டங்கள் விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க மஞ்சளும் உப்பும் உதவும் என்பது தாய்மார்கள் அறிந்த விஷயமே.

அந்தக்காலத்தில் தெய்வத்தின் பெயரில் எதைச் சொன்னாலும் மக்கள் கேள்வி கேட்காமல் அதை ஏற்றனர். இந்தக் காலத்தில் விஞ்ஞானத்தின் பெயரில் எதைச் சொன்னாலும் மக்கள நம்புகின்றனர். இரண்டுமே விவேகமற்ற செயல். ஒரு காரியத்தின் கருத்தை அறிநதால் அது எக்காலத்திலும் நம்பப்படும்; காப்பி குடித்தால் நல்லது என்று ஒரு கட்டுரை வரும்; அடுத்த வாரம் காப்பி குடித்தால் கெடுதி என்று வரும் அநத ஆராய்ச்சியை யார் எங்கு எத்தனை பேரிடத்தில் நடத்தினர், அது எல்லோருக்கும் பொருந்துமா என்பதை எல்லாம் நாம் முழுதும் ஆராய்வதில்லை. இப்படித்தான் அந்தக் காலத்திலும் காரண காரியங்களை விளக்காமல் ‘அங்கே’ லக்ஷ்மி வசிப்பாள் என்று சொல்லி விட்டார்கள். இன்று அறிவியல் சோதனைகள் மூலம் காரண காரியங்களை விளக்க, விளங்கிக்கொள்ள நமக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

பழங்காலத்தில் லக்ஷ்மி வாசம் செய்யும் இடங்களைப் பற்றி ஒரு நல்ல ஸ்லோகம் இருக்கிறது. அதை நன்கு சிந்தித்துப்  பார்த்தால் அவர்கள் சொன்னது சரிதான் என்பது தெரியும்.

கணவர்களுக்கு ஆயுளைத் தரும் பெண்களின் அலங்காரங்கள்

ஹரித்ரா குங்குமம் ச ஏவ ஸிந்தூரம் கஜ்ஜலம் ததா

கூர்பாஸகம் ச தாம்பூலம் மங்கள்யாபரணே ததா

கேசஸம்ஸ்கார கபரீ கர்கணாதி பூஷணம்

பர்துர்ராயுஷ்மிச்சந்தி தூஷயேன்ன பதிவ்ரதா

பொருள்

மஞ்சள் பூசிக் குளிப்பது

குங்குமம்,ஸிந்தூரம் தரிப்பது

கண்ணுக்கு மை தீட்டுதல்

ரவிக்கை, தாம்பூலம் (வெற்றிலை பாக்கு)

காது, மூக்குகளில் நகை அணிதல்

வாரின தலை

முதலியன கணவர்களுக்கு ஆயுளைத் தரும் பெண்களின் அலங்காரங்கள்

 

கோலத்தின் மஹிமை

இன்னொரு ஸ்லோகத்தையும் காண்போம்

யத் க்ருஹம் ராஜதே நித்யம் மங்களைரனுலேபனைஹி

தத் க்ருஹே வசதே லக்ஷ்மீ: நித்யம் பூர்ணகலான்விதா

எவள் வீட்டைப் பெருக்கி மெழுகி,  கோலமிட்டு  அலங்கரிக்கிறாளோ அங்கே லக்ஷ்மீ பூரண கலைகளுடன் வசிக்கிறாள்.

அது என்ன பூரண கலை?

நாம் அஷ்ட லக்ஷ்மீ என்று சொல்லும்போது வளத்தை, தனம், தான்யம், வீரம், ஸந்தானம் (மகப்பேறு), ஐஸ்வர்யம், சௌபாக்கியம் என்று எல்லாம் பிரித்துப் பார்க்கிறோம். இவை அனைத்தும் இருந்தால் அது லக்ஷ்மீயின் பூரண அம்சம் ஆகும்.

இந்த இரண்டு ஸ்லோகங்களும் வியாஸர் சொன்னதாக ஒரு புஸ்தகத்தில் படித்தேன். ஆனால் மஹாபாரதத்திலா என்று சொல்லவில்லை.

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.

மஞ்சள் முகமே வருக, மங்களம் என்றும் தருக என்று பாடுவோம்.

tags– மஞ்சள்,மஹிமை,  கோலம், லெட்சுமி

–சுபம்–