Written by London swaminathan
Date: 4 July 2016
Post No. 2942
Time uploaded in London :– 10-09 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
ஐந்து பேருக்கு பணத்தின் அருமையோ, பணக் கஷ்டமோ தெரியாது. யார் அந்த ஐந்து பேர் என்று ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் அழகாகச் சொல்கிறது:
விருந்தாளி (அதிதி)
சிறுவர், சிறுமியர் (பாலக:)
பெண்கள் (ஸ்த்ரீ ஜன:)
அரசன் (ந்ருபதி:)
மாப்பிள்ளை (ஜாமாதா)
அதிதிர் பாலகஸ்சைவ ஸ்த்ரீஜனோ ந்ருபதிஸ் ததா
ஏதே வித்தம் ந ஜானந்தி ஜாமாதா சைவ பஞ்சம:
சோறுகண்ட இடம் சொர்கம் — என்று உட்கார்ந்து சாப்பிடும் விருந்தாளிகளுக்கு பணக் கஷ்டம் பற்றி என்ன கவலை? விருந்து அளிப்பவன் , பாவம், கடன் வாங்கி விருந்து கொடுத்துக் கொண்டிருப்பான்!
சின்னக் குழந்தைகள் யானையையும், காரையும் கூடப் பார்த்து எனக்கு அதை வாங்கிக்கொடு – என்று அடம் பிடிக்கும். வீட்டில் நாய், பூனை, மீன் வளர்க்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கும். அவர்களுக்குப் பணக் கஷ்டம் தெரியுமா?
பெண்களுக்கு ஆசை அதிகம். வைர நெக்லஸ், தங்க அட்டிகை, பெரிய பங்களா, சொகுசான கார் – என்று பெரிய பட்டியல் வைத்திருப்பர். அந்தக் கலத்தில் அவர்கள் வேலைக்குப் போகாததால் பணத்தின் அருமை தெரியாது. இப்பொழுது அவர்களும் வேலைக்குப் போவதால், “கொஞ்சம்” தெரிந்திருக்கிறது.
அரசனுக்கும், ஆளுவோருக்கும் மக்கள் கஷ்டம் தெரியாது என்பதை விளக்கத் தேவையே இல்லை. மக்கள் மீது வரி மேல் வரி போட்டு வாட்டி வதைப்பர். தாங்கள் மட்டும் எல்லாவற்றையும் அனுபவிப்பர்.
கடைசியாக மாப்பிள்ளை! பெண் வீட்டுக்குப் போய் அதைக் கொண்டுவா, இதைக் கொண்டுவா என்று அதிகாரம் செய்வர். அவர்களோ சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் கஷ்டப்படுவர்.
எவ்வளவு அனுபவபூர்வமான கண்டுபிடிப்புகள்!
-சுபம்-
You must be logged in to post a comment.