மாப்பிள்ளை உள்பட 5 பேருக்கு பணத்தின் அருமை தெரியாது ! (Post No.2942)

IMG_4371

Written by London swaminathan

 

Date: 4 July 2016

Post No. 2942

Time uploaded in London :– 10-09 AM

( Thanks for the Pictures)

 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஐந்து பேருக்கு பணத்தின் அருமையோ, பணக் கஷ்டமோ தெரியாது. யார் அந்த ஐந்து பேர் என்று ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் அழகாகச் சொல்கிறது:

 

விருந்தாளி (அதிதி)

சிறுவர், சிறுமியர் (பாலக:)

பெண்கள் (ஸ்த்ரீ ஜன:)

அரசன் (ந்ருபதி:)

மாப்பிள்ளை (ஜாமாதா)

 

அதிதிர் பாலகஸ்சைவ ஸ்த்ரீஜனோ ந்ருபதிஸ் ததா

ஏதே வித்தம் ந ஜானந்தி ஜாமாதா சைவ பஞ்சம:

 

IMG_4496 (2)

சோறுகண்ட இடம் சொர்கம் — என்று உட்கார்ந்து சாப்பிடும் விருந்தாளிகளுக்கு பணக் கஷ்டம் பற்றி என்ன கவலை? விருந்து அளிப்பவன் , பாவம், கடன் வாங்கி விருந்து கொடுத்துக் கொண்டிருப்பான்!

 

சின்னக் குழந்தைகள் யானையையும், காரையும் கூடப் பார்த்து எனக்கு அதை வாங்கிக்கொடு – என்று அடம் பிடிக்கும். வீட்டில் நாய், பூனை, மீன் வளர்க்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கும். அவர்களுக்குப் பணக் கஷ்டம் தெரியுமா?

 

பெண்களுக்கு ஆசை அதிகம். வைர நெக்லஸ், தங்க அட்டிகை, பெரிய பங்களா, சொகுசான கார் – என்று பெரிய பட்டியல் வைத்திருப்பர். அந்தக் கலத்தில் அவர்கள் வேலைக்குப் போகாததால் பணத்தின் அருமை தெரியாது. இப்பொழுது அவர்களும் வேலைக்குப் போவதால், “கொஞ்சம்” தெரிந்திருக்கிறது.

 

அரசனுக்கும், ஆளுவோருக்கும் மக்கள் கஷ்டம் தெரியாது என்பதை விளக்கத் தேவையே இல்லை. மக்கள் மீது வரி மேல் வரி போட்டு வாட்டி வதைப்பர். தாங்கள் மட்டும் எல்லாவற்றையும் அனுபவிப்பர்.

 

கடைசியாக மாப்பிள்ளை! பெண் வீட்டுக்குப் போய் அதைக் கொண்டுவா, இதைக் கொண்டுவா என்று அதிகாரம் செய்வர். அவர்களோ சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் கஷ்டப்படுவர்.

IMG_4545

எவ்வளவு அனுபவபூர்வமான கண்டுபிடிப்புகள்!

 

-சுபம்-

 

கல்யாணமாம், கல்யாணம்!

azaki

Article No.2011

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 23  July 2015

Time uploaded in London : காலை 8-01

 

கல்யாணம் என்று வந்தால் யாருக்கு எதில் ஆசை? என்ன எதிர்பார்க்கிறார்கள்? நம் முன்னோர்கள் பாடிய பாட்டு என்ன தெரியுமா?

பெண்ணுக்கு ஆசை – கணவன் அழகாக இருக்க வேண்டும்

அம்மாவுக்கு ஆசை – மாப்பிள்ளை நல்ல பணக்காரராக இருக்க வேண்டும்

அப்பாவுக்கு ஆசை – மாப்பிள்ளை நல்ல புத்திசாலியாக இருக்க வேண்டும்

உறவினர்களுக்கு ஆசை – நல்ல குடும்பமாக இருக்க வேண்டும்

அழைப்புக்கிணங்கி வந்தோருக்கு ஆசை – நல்ல சாப்பாடு கிடைக்க வேண்டும்.

கன்யா வரயதே ரூபம், மாதா வித்தம், பிதா ஸ்ருதம்!

பாந்தவா: குலம் இச்சந்திமிஷ்டான்னமிதரே ஜனா:!!

radha beauty

நல்ல மனைவி யார்?

ஐந்து ‘ல’காரம் இருந்தால் போதும்; நீங்கள் நல்ல அதிர்ஷ்டசாலிதான்! ஐந்து ல- காரம் என்றவுடன் ஐந்து லட்சம் ரூபாய் வரதட்சிணை என்று நினைத்துவிடாதீர்கள். அந்தக் காலம் எல்லாம் மலை ஏறிப் போய்விட்டது. கீழ்கண்ட ஐந்து ல, லா – வேண்டும்:-

அனுகூ’லா’ = நன்மை செய்பவர்

விம’லா’ங்கி = நாணம் உள்ளவர்

கு’ல’ஜா = உயர்குலப் பெண்; அதாவது பண்புமிக்க குடும்பப் பெண்

குச’லா’ = திறமைசாலி

சுசீ’லா’ = நல்ல ஒழுக்கம் வாய்ந்தவள்

அனுகூலாம் விமலாங்கிம் குலஜாம் குசலாம் சுசீலசம்பன்னாம்

பஞ்ச லகாராம் பார்யாம் புருஷ: புண்யோதயா லபதே

–சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

IMG_4877 (2)

மாப்பிள்ளைக்கு எதனால் மதிப்பு?

இதேபோல மாப்பிள்ளைக்கோ அல்லது எந்த ஒரு மனிதனுக்கோ, மதிப்பளிக்கக்கூடிய ஐந்து ‘வ’கார அம்சங்கள் இருக்கின்றன. அவையாவன:–

வஸ்திரம் / உடுப்பு

வபுஷம் / உருவம்

வாக் / உரைத்தல் (பேசுதல்)

வித்யா/ கல்வியறிவு

விநய/ பணிவு

வஸ்த்ரேன வபுஷா வாசா வித்யயா விநயேன ச

வகாரை: பஞ்சாபி: ஹீன நரோநாயாதி கௌரவம்

வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க தமிழ்!