சூரியன் பற்றிய 31 அருமையான சம்ஸ்கிருத,தமிழ் பழமொழிகள்
Compiled by london swaminathan
Date: 2 March,2016
Post No. 2593
Time uploaded in London :– 9-20 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact
முக்கிய நாட்கள்:- 7 சிவராத்திரி, 9 சூர்ய கிரஹணம், 14 காரடையான் நோன்பு, 22- ஹோலி/காமன் பண்டிகை, 23 பங்குனி உத்தரம், 25 புனித வெள்ளி, மேலை நாடுகளில் ஈஸ்டர் விடுமுறை 25 முதல் 28 முடிய.
முகூர்த்த நாட்கள்:- 6, 10, 11,18, 25
அமாவாசை:- 8/9
பௌர்ணமி:- 22/23
ஏகாதசி:- 5, 19
மார்ச் 1 செவ்வாய்க்கிழமை
ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத்
உடல்நலம் பெற சூரியனை வழிபடுக
மார்ச் 2 புதன்கிழமை
அம்போஜினீ லோசன முத்ரணம் கிம் பானு அவனஸ்தங்கமிதே கரோதி-மிருச்சகடிகம் 10-58
சூரியன் மறையாத போது தாமரை மலர் கண்களை மூடுமா? (குவியுமா)
மார்ச் 3 வியாழக்கிழமை
இந்தனம் அப்கதக்த அபி அக்னி: த்விஷா நாத்யேதி பூஷணம் –சிசுபாலவதம் 2-23
பெரும் விறகுக் குவியலைக் கொண்டு ஜகஜ்ஜோதியாக எரியவிட்டாலும், சூரிய ஒளியை விஞ்ச முடியாது.
மார்ச் 4 வெள்ளிக்கிழமை
சூரியனைக் கண்ட பனி போல
சூரியனைக் கண்ட இருள் போல
மார்ச் 5 சனிக்கிழமை
செங்கதிர் முன்னே வெண்கதிர் அடங்கினது போல
மார்ச் 6 ஞாயிற்றுக்கிழமை
அப்ராத் விமுக்தஸ்ய திவாகரஸ்ய மரீசய: தீக்ஷ்ணதரா பவந்தி- சுபாஷிதரதனாவளி
மேகமில்லாத நாட்களில் வெய்யில் அதிகம் சுடும்.
மார்ச் 7 திங்கள் கிழமை
உதயந்தம் சூர்யம் சர்வே ப்ரணமந்தி
உதய சூரியனை எல்லோரும் வணங்குகின்றனர்.
மார்ச் 8 செவ்வாய்க்கிழமை
சூரியனைக் கண்ட தாமரை போல
மார்ச் 9 புதன்கிழமை
உதிதே ஹி சஹஸ்ராம்சௌ ந கத்யோதோ ந சந்த்ரமா – சுபாஷித ரத்னகண்டமஞ்சுஷா
சூரியன் உதித்து விட்டால், மின்மினிப்பூச்சியுமில்லை, சந்திரனுமில்லை!
மார்ச் 10 வியாழக்கிழமை
சூரியனுக்கு முன் மின்மினி போல
மார்ச் 11 வெள்ளிக்கிழமை
சூரியனைப் பார்த்து நாய் குரைத்தாற் போல
மார்ச் 12 சனிக்கிழமை
சூர்யாபாயே ந கலு கமலம் புஷ்யதி ஸ்வாமபிக்யாம் – மேகதூதம் 2-18
சூர்யன் அஸ்தமித்தபின்னர், தாமரையின் அழகு அதிகரிக்காது
மார்ச் 13 ஞாயிற்றுக்கிழமை
சூர்யே தபதி ஆவரணாய வ்ருஷ்டே: கல்பேத லோகஸ்ய கதம் தமிஸ்ரா – ரகுவம்சம் 5-13
சூரியன் பிரகாசிக்கையில், அடர்ந்த மேகத்தினால் வந்த இருள், நம் பார்வையை மறைக்க இயலுமா?
மார்ச் 14 திங்கள் கிழமை
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரிநாடன் திகிரிபோல், பொன்கோட்டு
மேரு வலந்திரிதலான் (சிலப்பதிகாரம்)
மார்ச் 15 செவ்வாய்க்கிழமை
ஆனால் ஆதிவாரம், ஆகாவிட்டால் சோமவாரம் (ஆதிவாரம்=ஞாயிற்றுக்கிழமை)
மார்ச் 16 புதன்கிழமை
வர்ஷணம் அனுசரதி சூர்யா தப:
மழைக்குப்பின், சூரியனின் ஆட்சிதான்.
மார்ச் 17 வியாழக்கிழமை
சஹஸ்ரகுணம் உத்ஸ்ரஷ்டும்
ஆதத்தே ஹி ரஸம் ரவி: – ரகுவம்சம் 1-18
கதிரவன் (கடல்) நீரை உறிஞ்சுவது
ஆயிரம் மடங்காகத் திருப்பித் தருவதற்குத்தான்!
மார்ச் 18 வெள்ளிக்கிழமை
உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு
ஓ அற இமைக்கும் சேண்விளங்கு அவிர் ஒளி- (திருமுருகாற்றுப்படை).
மார்ச் 19 சனிக்கிழமை
சூர்யஸ்ய கிம் தீப ப்ரதர்சனேன – கஹாவத்ரத்னாகர்
சூரியனைக் காட்ட விளக்கு தேவையா?
மார்ச் 20 ஞாயிற்றுக்கிழமை
ஞாயிற்றுக்கிழமை ஒரு பொழுது, நண்டு வேண்டாம், சாறு விடு.
மார்ச் 21 திங்கள் கிழமை
ரஜஸா ரவிர் அபிபூயதே நஹி – கஹாவத்ரத்னாகர்
தூசிப்புயலால், சூரியனை வெல்லமுடியாது.
மார்ச் 22 செவ்வாய்க்கிழமை
சூரியன் எழுமுன் காரியம் ஆடு.
மார்ச் 23 புதன்கிழமை
சூரியனைக் கிரகணம் பிடித்தது போல, என்னைச் சனியன் பிடித்தான்.
மார்ச் 24 வியாழக்கிழமை
ருதே ரவே: க்ஷாலயிதும் க்ஷமேத க:
க்ஷபாதமஸ்காண்டமலீமசம் நப: – சிசுபாலவதம் 1-38
இருள் சூழ்ந்த ஆகாயத்தைச் சுத்தம் செய்து, விளக்கம்பெறச் செய்ய சூரியனைத் தவிர யாருக்கு இயலும்?
மார்ச் 25 வெள்ளிக்கிழமை
ஞாயிற்றுக்கிழமையை மறைப்பாரில்லை
மார்ச் 26 சனிக்கிழமை
தாரா நைவ ப்ரகாசந்தே பானௌ பாதீஹ பாஸ்வரே – கஹாவத்ரத்னாகர்
சூரியன் இருக்கையில் விண்மீன்கள் கண்சிமிட்டாது
மார்ச் 27 ஞாயிற்றுக்கிழமை
க: ப்ரதீபோ ரவே: புர:?- கதா சரித் சாகரம்
சூரியனுக்கு முன் விளக்கு எதற்கு!!!
மார்ச் 28 திங்கள் கிழமை
தமஸ்தபதி கர்மாம்சௌ கதம் ஆவிர்பவிஷ்யதி – சாகுந்தலம் 5-14
சூரியனிருக்கையில் இருள் ஏது?
மார்ச் 29 செவ்வாய்க்கிழமை
க: சக்த: சூர்யம் ஹஸ்தேனாச்சாதயிதும்?
–அவிமாரக
சூரியனைக் கையால் மறைக்கமுடியுமா?
மார்ச் 30 புதன்கிழமை
சூரியவிளக்கு இருக்க சுடர் விளக்கு எதற்கு?
மார்ச் 31 வியாழக்கிழமை
சூரியன் முன்னே சந்திரன் தோன்றினது போலே
(சம்ஸ்கிருதப் பழமொழிகளின் தமிழாக்கம் – லண்டன் சுவாமிநாதன்)
–சுபம்–