
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7634
Date uploaded in London – 29 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
மார்ச் 2020 காலண்டர்
(மாசி மாதம் -விகாரி வருஷம்)
பண்டிகை நாட்கள் – மார்ச் 8 உலக மகளிர் தினம்; 8 மாசி மகம் 9 ஹோலி/காம தஹனம்; 14-காரடையான் நோன்பு; 25-யுகாதி புத்தாண்டு தினம்.
அமாவாசை-24; பௌர்ணமி-9; ஏகாதசி -5/6, 20
முகூர்த்த தினங்கள்– மார்ச் 5, 6, 12, 13, 22, 30

நந்த வனத்திலோர் ஆண்டி – – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தானொரு தோண்டி- அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி
—கடுவெளிச் சித்தர்
மார்ச் 1 ஞாயிற்றுக் கிழமை
நெளிந்து நெளிந்து நெளிந்து ஆடு பாம்பே சிவன்
சீர்பாதங் கண்டு தெளிந்து ஆடு பாம்பே!
–பாம்பாட்டிச் சித்தர்
XXX
மார்ச் 2 திங்கட் கிழமை
நாதர் முடிமேல் இருக்கும் நாகப் பாம்பே
நச்சுப் பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே
பாதலத்திற் குடிபுகும் பைங்கொள் பாம்பே
பாடிப்பாடி நின்று விளையாடு பாம்பே !
XXx
மார்ச் 3 செவ்வாய்க் கிழமை
எட்டு மலைகளைப் பந்தாய் எடுத்து எறி குவோம்
ஏழு கடலையும் குடித்து ஏப்பமி டுவோம்
மட்டுப்படா மணலையும் மதித்து விடுவோம்
மகராசன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே!
XXX
மார்ச் 4 புதன் கிழமை
மூண்டெரியும் அக்கினிக்குள் மூழ்கி வருவோம்
முந் நீருள் இருப்பினும் மூச்சடக்குவோம்
தாண்டி வரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்
தார் வேந்தன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே!
XXX
மார்ச் 5 வியாழக் கிழமை
வேந்தன் செய்த சிருட்டிகள் போல வேறு செய்குவோம்
வேதனையும் எங்கள் கீழே மேவச் செய்குவோம்
நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம்
நாங்கள் செய்யும் செய்கை இதென்று ஆடுபாம்பே!
XXX

மார்ச் 6 வெள்ளிக் கிழமை
அறுபத்து நாலு கலையாவும் அறிந்தோம்
அதற்கு மேல் ஒரு கலையான தறிந்தோம்
மறுப்பற்றுச் சற்றுமில்லா மனமும் உடையோம்
மன்னனே ஆசான் என்று ஆடுபாம்பே !
XXX
மார்ச் 7 சனிக் கிழமை
சீறுபு லி யானை யாளி சிங்க முதலாய்ச்
சிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம்
வீறு பெருங் கடவுளை எங்களுடனே
விளையாடச் செய்குவோம் என்று ஆடுபாம்பே !
XXX
மார்ச் 8 ஞாயிற்றுக் கிழமை
யானை சேனை தேர் பரியாவும் அணியாய்
யமன் வரும்போது துணை யாமோ அறிவாய்
XXX
மார்ச் 9 திங்கட் கிழமை
முக்கனியும் சர்க்கரையும் மோதகங்களும்
முதிர் சுவைப் பண்டங்களும் முந்தி உண்டவாய்
மிக்க உயிர் போன பின்பு மண்ணை விழுங்க
மெய்யாகக் கண்டோம் என்று ஆடுபாம்பே !
XXX
மார்ச் 10 செவ்வாய்க் கிழமை
வெயில் கண்ட மஞ்சள் போன்ற மாதர் அழகை
விரும்பியே மேல் விழுந்து மேவு மாந்தர்
ஒயில் கண்டே இலவு காத்து ஓடும் கிளி போல்
உடல் போனால் ஓடுவாரென்று என்று ஆடுபாம்பே !
XXX

மார்ச் 11 புதன் கிழமை
மயில் என்றும் குயில் என்றும் மாணிக்கம் என்றும்
மானே என்றும் தேனே என்றும் வான் அமுதென்றும்
ஒயிலான வன்ன மயிற் கொத்தவளென்றும்
ஓதாமற் கடிந்தோம் என்று ஆடுபாம்பே !
XXX
மார்ச் 12 வியாழக் கிழமை
நாறு மீனைப் பலதரம் நல்ல தண்ணீரால்
நாளும் கழுவினும் அதன் நாற்றம் போமோ
கூறும் உடல் பல நதியாடிக் கொண்டதால்
கொண்ட மலம் நீங்கா தென்று ஆடுபாம்பே !
XXX
மார்ச் 13 வெள்ளிக் கிழமை
கோபம் என்னும் மதயானை கொண்ட மதத்தைக்
கூர்கொள் யுத்தி அங்குசத்தால் கொன்று விட்டேங்காண்
தீபமென்னுஞ் சிற்சொரூபச் செய்ய பொருளை
சேர்ந்துறவு கொண்டோம் என்று ஆடுபாம்பே !
Xxx
மார்ச் 14 சனிக் கிழமை
மனமென்னும் குதிரையை வாகனமாக்கி
மதியென்னும் கடிவாளம் வாயிற் பூட்டி
சினமென்னும் சீனியின் மேற் சீராய் ஏறித்
தெளிவிடம் சாரி விட்டு ஆடுபாம்பே
Xxx
மார்ச் 15 ஞாயிற்றுக் கிழமை
உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி ?
உலகத்தின் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி ?
புளியிட்ட செம்பிற் குற்றம் போமோ ?அஞ்ஞா னம்?
போகாது மூடருக்கென்று ஆடுபாம்பே !
xxx

மார்ச் 16 திங்கட் கிழமை
சதுர் வேதம் ஆறுவகை சாத்திரம் பல
தந்திரம் புராணங்களை சாற்றும் ஆகமம்
விதம் விதமானவான வேறு நூல்களும்
வீணான நூல்களே என்று ஆடுபாம்பே !
Xxx
மார்ச் 17 செவ்வாய்க் கிழமை
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கிங் கெய்திடாது போல்
எண்திசை திரி ந்துங் கதி எய்தல் இல்லையே
நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே
நாதன் பாதம் காணார்கள் என்று ஆடுபாம்பே !
xxxx
மார்ச் 18 புதன் கிழமை
ஆயிரத்தெட்டித ழ் வீட் டில் அமர்ந்த சித்தன்
அண்டமெல்லாம் நிறைந்திடும் அன்புதச் சித்தன்
காயமில்லாது ஓங்கி வளர் காரண ச் சித்தன்
கண்ணுள் ஒளியாயினான் என்று ஆடுபாம்பே !
Xxx
மார்ச் 19 வியாழக் கிழமை
கண்டவர்கள் ஒருக்காலும் விண்டிடார்களே
விண்டவர்கள் ஒருகாலும் கண்டிடார்களே
கொண்டகோலம் உள்ள வர்கள் கோள் நிலை காணார்
கூத்தாடி கூத்தா டியே நீ ஆடுபாம்பே !
Xxx
மார்ச் 20 வெள்ளிக் கிழமை
தந்திரம் சொல்லுவார் தம்மை அறியார்
தனி மந்திரஞ் சொல்லுவார் பொருளை அறியார்
Xxx

மார்ச் 21 சனிக் கிழமை
ஓம்காரக் கம்பத்தின் உச்சி மேலே
உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும்
ஆங்காரக் கோபத்தை அறுத்து விட்டே
ஆனந்த வெள்ளத்தைத் தேக்கிக்கொண்டே
Xxxx
மார்ச் 22 ஞாயிற்றுக் கிழமை
சூத்திரக் குடத்திலே பாம்பை அடைப்போம்
சுழுமுனைக் குள்ளேயே சுகித்திருப்போம்
Xxxx
மார்ச் 23 திங்கட் கிழமை
பஞ்ச கருவியைப் பலி கொடுப்போம்
சிவ்வுருவாகியே நின்றோம் என்றே
சீர் பாதங் கண்டு தெளிந்து
Xxx
மார்ச் 24 செவ்வாய்க் கிழமை
தா ந்திமி திமி தந்தக் கோனாரே
தீந்திமி திமி திந்தக் கோனாரே
ஆனந்தக் கோனாரே – அருள்
ஆனந்தக் கோனாரே
–இடைக்காட்டுச் சித்தர்
Xxx
மார்ச் 25 புதன் கிழமை
மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே – முத்தி
வாய்த்ததென்று என்ணேடா தாண்டவக்கோனே
சி னமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே – முத்தி
சித்தியென்றே நினையேடா தாண்டவக்கோனே
Xxxx

மார்ச் 26 வியாழக் கிழமை
ஆறாதாரத் தெய்வங்களை நாடு
அவர்க்கும் மேலான ஆதியைத் தேடு
Xxxx
மார்ச் 27 வெள்ளிக் கிழமை
ஆதி பகவனையே பசுவே !
அன்பராய் நினைப்பாயேல்
சோதி பரகதிதான் பசுவே !
சொந்தமது ஆகாதோ?
Xxx
மார்ச் 28 சனிக் கிழமை
மனம், வாக்கு, காயம் எனும் வாய்த்த பொறிக்கு எட்டாத
தினகரனை நெஞ்சசமத்தில் சேவித்துப் போற்றீரே
xxx
மார்ச் 29 ஞாயிற்றுக் கிழமை
பாலிற் சுவை போலும் பழத்தில் மது போலும்
நூலிற் பொருள் போலும் நுண் பொருளைப் போற்றீரே
Xxxx
மார்ச் 30 திங்கட் கிழமை
கை விளக்குக் கொண்டு கடலில் வீழ்வார் போல்
மெய் விளக்குன்னுளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே
Xxx

மார்ச் 31 செவ்வாய்க் கிழமை
அன்னையைப் போல் எவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்
முன்னவனைக் கண்டு முக்தியடை புல்லறிவே
Xxxx subham xxxx