‘வடதிசையதுவே வான் தோய் இமயம்’: புறநானூறு (Post No.4134)

Written by London Swaminathan

 

Date: 5 August 2017

 

Time uploaded in London- 17-46

 

Post No. 4134

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சங்க இலக்கியத்தில் 18 நூல்கள் உண்டு: பத்துப்  பாட்டு, எட்டுத்தொகை ஆகிய இரண்டிலும் 18 நூல்கள். இவைகளை பதினெட்டு மேல் கணக்கு நூல்கள் என்றும் பகர்வர். இவைகளில் எதைப் படிக்காவிடிலும் புறநானூற்றின் 400 பாடல்களைப் படித்தாலேயே தமிழர்களின் பெருமையை அறிந்து விடலாம். தமிழ்ப் பண்பாடு என்று எதுவும் கிடையாது என்பதும் விளங்கும். பாரதம் இப்பொழுது உலகில் ஏழாவது பெரிய நாடு. புற நானூற்றுக் காலத்திலோ பாரதம்தான் உலகின் மிகப்பெரிய நாடு. இவ்வளவு பெரிய நாட்டில் பிரதேசத்துக்குப் பிரதேசம் சில புதிய நம்பிக்கைகளும் புதிய வழக்கங்களும் இருப்பது இயல்பே. இது தனிப் பண்பாடு ஆகிவிடாது.

 

என் மனைவி திருநெல்வேலிக்காரி; நான் தஞ்சாவூர்க்காரன்; இருவரும் பிராமணர்கள்; அதிலும் ஒரே பிரிவு- வடமா; ஆயினும் கல்யாணம் நிச்சயமானவுடன் என்ன சீர் செட்டு, எப்படி கல்யாணத்தை நடத்த வேண்டும் என்பதில் விவாதம்!!! எங்கள் வழக்கம் இது, எங்கள் வழக்கம் அது என்று அங்கலாய்ப்பு; பின்னர் ஒரு காம்ப்ரமைஸ் Compromise– இது வேறு வேறு பண்பாடு அல்ல. திருநெல்வேலி அல்வா, பெட்டி வெல்லம், மணப்பாறை முறுக்கு போல சில சிறப்புகளே!

 

இமயம் பற்றியும் கங்கை பற்றியும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பல புலவர்கள் போகிற போக்கில் பாடித் திரிந்தது இந்த நாடு ஒன்று என்பதைக் காட்டும். அது மட்டுமல்ல. வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டை ஒன்றுபடுத்தினான் என்று பேசுவோரை முட்டாள்கள் என்றும் காட்டிவிடும். அவன் சாலையும் ரயில் பாதையும் போடுவதற்கு முன்னரே கரிகாலனும் ஆதி சங்கரனும் சேரன் செங்குட்டுவனும் இமயம் முதல் குமரி வரை வலம் வந்த நாடு இது .

 

இதோ முடமோசியார் என்னும் பெண்  புலவர் பாடிய பாடல்:

 

முன் உள்ளுவோனைப் பின் உள்ளினேனே!

ஆழ்க, என் உள்ளம்! போழ்க, என் நாவே!

பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே!-

நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி

குவளைப் பைஞ்சுனை பருகி, அயல

தகரத் தண் நிழல் பிணையோடு வதியும்

வடதிசையதுவே வான் தோய் இமயம்

தென் திசை ஆஅய்குடி இன்றாயின்,

பிறழ்வது மன்னோ, இம் மலர் தலை உலகே.

–பாடல் 132, முடமோசி

“யாவர்க்கும் முன்னால் நினைக்கப்பட வேண்டியவனான ஆய் வள்ளலை பின்னால்தான் நினைத்தேன். அவ்வாறு நினைத்த குற்றத்தால், என் மனம் அழிந்து போவதாகுக. மற்றவரைப் புகழ்ந்த என் நாவும் பிளவு படுவதாகுக. மற்றவர் புகழைக் கேட்ட என் செவியும் தூர்வதாகுக. நரந்தையையும், நறுமணமுள்ள புல்லையும் மேய்ந்த கவரிமான், சுனை நீரைக் குடித்து பெண்மானுடன் தகர மர நிழலில் தங்குகின்ற வடக்கில் உள்ள வானளாவி உயர்ந்த இமய மலையும் தெற்கிலுள்ள ஆய்க்குடியும் இல்லையானால் இந்தப் பரந்த உலகம் தலை கீழாகப் புரண்டுவிடும்”.

 

இப்படி இமய மலையையும் தெற்கிலுள்ள பொதியம் முதலிய மலைகளையையும் ஒப்பிடுவது பாரத ஒற்றுமையையும் பழங்காலத் தமிழர்களின் புவியியல் அறிவையும் காட்டுகிறது. கங்கை நதியையும் பல புலவர்கள் பாராட்டியுள்ளனர்.

 

புறம். பாடல் இரண்டில் முரஞ்சியூர் முடிநாகனார் “பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே” என்று பாடுகிறார்.

 

இதற்கு 600 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த அப்பர் பெருமான் “ஆயிர மாமுக கங்கை என்று வங்காளத்தில் கடலில் கலக்கும் கங்கை நதி பற்றிப் பாடுகிறார். வங்க தேசத்தில் கடலில் கலக்கும் கங்கை, 1000 கிளைகளாகப் பிரிகிறது. இவை எல்லாம் மேப் , அட்லஸ்(Map and Atlas) இல்லாத காலத்தில் நம்மவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது.

 

இவை எல்லாம் காளிதாசன் பாடல்களிலும் உள்ளன. பூமியை அளக்கும் அளவுகோல் என்று இமயமலையை வருணிக்கிறார் காளிதாசன். அதிசயப்படக்கூடிய பூகோள அறிவு இது!

 

–Subham–

 

எகிப்திய நாகரீகத்தில் மேலும் பல தமிழ்ப் பெயர்கள்!!

pyramid

Research paper written by London Swaminathan
Research article No.1414; Dated 16th November 2014.

எகிப்திய நாகரீகம் குறித்து 2012 ஆம் ஆண்டில் சுமார் பத்து கட்டுரைகளில் பல விஷயங்களை எழுதி இருந்தேன். ‘’நெய்த்’’ என்னும் எகிப்திய தெய்வம் நெய்தல் (துணி நெய்தல்) என்பதுடன் தொடர்புடைய தெய்வம், ‘’க’’ என்றால் கடவுள் (பிரம்மா) முதலிய பல சொல் ஆராய்ச்சி விஷயங்க ளையும் வீடு முதலிய சொற்கள் செமிட்டிக் மொழியில் இருப்பது பற்றியும் எழுதி இருந்தேன். அண்மையில் ‘’பழங்கால எகிப்தில் யார், எவர்’’ — என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாசித்து முடித்ததில் மேலும் பல தமிழ், சம்ஸ்கிருதச் சொற்கள் அங்கே இருப்பதை அறிந்து வியந்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஆய் என்ற மன்னன் எகிப்திலும் உண்டு. சேர நாட்டு மன்னர்களுக்குப் பின் எப்படி ஆதன், குட்டுவன், பொறையன் என்று பெயர் இருக்கிறதோ அது போல எகிப்திலும் உள்ளது.

இமயவரம்பன் நெடுஞ்சேரல் ஆதன், சேரன் செங் குட்டுவன், மாந்த்ரஞ் சேரல் இரும் பொறை எனப் பல பெயர்களை நாம் சங்க இலக்கியத்தில் காண்கிறோம். பொறையன் என்பது எகிப்தில் பாரோ (மன்னன்) என்ற பெயரில் உள்ளது. கேட் என்று முடியும் பல எகிப்திய மன்னர்களின் பெயர்களை (அமன்கேட், ஹருகேட்) குட்டுவன் என்பதோடு ஒப்பிடலாம். ஆதன் என்ற பெயர் சூரியன் என்னும் கடவுளின் பெயராக எகிப்தில் புழங்குகிறது (ஒரு மன்னன் பெயர் அகனாதன்). அதே பொருளில் — (ஆதவன்=சூரியன் என்ற பொருளில்) —- சேரன் பெயர்களில் இருப்பதை அறிவோம்.

நான் பட்டியலில் கொடுக்கும் பெயர்கள் எல்லாம் கி.மு.1900 முதல் கி.மு 1300 வரைக்குட்பட்டது. தனித்தனியே மன்னனின் ஆட்சி ஆண்டு வேண்டுவோர் எனது ஆங்கிலக் கட்டுரையைக் காண்க.
இது தவிர முட ‘’மோசி’’ என்ற பெயர்களும் ஆய் என்ற பெயரும் வியப்பை உண்டாக்கும்.
ஆய் என்பவன் எகிப்தில் சாதாரண நிலையில் இருந்து மன்னன் ஆனவன். தனது மகளை ஒரு எகிப்திய மன்னனுக்கு மணம் செய்து கொடுத்ததால் அவனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

Egyptian-Sunpower

மிட்டன்னிய (தற்போதைய சிரியா/ துருக்கி பிரதேசம்) இந்து மன்னன் தசரதன் தன்னுடைய இரண்டு புதல்விகளான புது கீபா, தது கீபா — (புத்த சிவா, தத்த சிவா என்ற பெயர்களோ!!) —- ஆகியோரை எகிப்திய மன்னனுக்கு மணம் புரிவித்து தங்கத்தினால் ஆன கடவுள் சிலை ஒன்றையும் அனுப்பிவைத்தான். இந்தக் கடவுள் சிலை துர்க்கை என்று நாம் வணங்கும் கடவுளுக்குச் சமமான மேற்காசிய தெய்வம் ஆகும். இவர்கள் எகிப்திய அரசவைக்குள் நுழைந்தபின்னர் ஏராளமான சம்ஸ்கிருதச் சொற்கள் அங்கே புழக்கத்தில் வந்தன. ராம்செஸ் என்ற பெயரில் மட்டும் 13 பேர் எகிப்தை ஆண்டனர் (இது குறித்து காஞ்சி மஹா ஸ்வாமிகள் 1932 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் ஆற்றிய உரை விஷயங்களை முன்னரே எழுதிவிட்டேன்).

முடமோசி என்ற சங்க காலப் பெண் புலவர் பற்றித் தமிழர்கள் நீண்ட காலமாக ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்தப் பெயர் எகிப்து நாட்டில் மிகவும் அதிகம். தத் மோசி என்ற பெயரில் மட்டும் நால்வர் இருந்தனர். இதுதவிர ஆமோசி, ஹரமோசி, காமோசி, மீனமோசி என்ற பெயர்களும் மன்னர்கள் பட்டியலில் உண்டு.

மோசி என்றால் மகன் என்று பெயர். தமிழில் மூசு என்பதை முதலில் விளையும் இளம் பலாக் காய்க்குப் பயன் படுத்துவோம். பலா மூசு கூட்டு, கறி முதலியவற்றைச் சாப்பிடுகிறோம். இதே பொருளில் மோசி என்றால் தலைப் பிள்ளை என்ற அர்த்தம் ஸ்வாகிலி (கிழக்கு ஆப்பிரிக்கா) மொழியிலும், எகிப்திலும் இன்றும் இருக்கிறது. மோசஸ் என்ற குழந்தையை நைல் நதியில் கண்டு எடுத்த மன்னன் மகள் அவனுக்கு ஹீப்ரூ (எபிரேய) மொழியில் மோசி (மோசஸ்) என்று பெயரிட்டாள். பின்னர் அவர் யூதர்களை வழி நடத்திச் சென்ற கதைகளை நாம் அறிவோம்.

trademap

தமிழில் முட மோசி என்ற பெயர், அவர் வீட்டுக்குத் தலைப் பிள்ளையாக (புதல்வியாக) பிறந்ததால் வந்திருக்கலாம். பிறக்கும் போதே இளம் பிள்ளை வாதம் (போலியோ) போன்ற குறைகளுடன் பிறந்ததால் முடமோஸி என்ற பெயரும் பெற்றிருக்கக்கூடும்.

ஆக மோசி என்பது எகிப்து வரை உள்ளது. சேர நாட்டில் இருந்து கடலை நோக்கி உட்கார்ந்தால் அது எகிப்து இருக்கும் திசையை நோக்கி இருக்கும். பழங்காலத்தில் அரபிக் கடல் முழுதும் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தினர். கடல் கொள்ளையர்களை செங்குட்டுவன் ஒடுக்கி அவர்களுடைய காவல் மரமான கடம்ப மரத்தை வெட்டி வீழ்த்தினான்.

நெடுஞ் சேரலாதனோவெனில், அங்கு அட்டூழியம் புரிந்த யவனர்களைப் பிடித்து தலையை மொட்டை அடித்து, கைகளைப் பின்புறம் கட்டி, தலையில் எண்ணையை ஊற்றி அவமானப் படுத்தியதைப் பதிற்றுப்பத்தில் படித்தோம். இந்துக் கடவுளரின் கடற்படைத் தாக்குதல்கள் என்ற எனது பழைய கட்டுரையில் கிருஷ்ன பரமாத்மா, துவாரகை துறைமுகத்தில் இருந்து கடற்படையுடன் சென்று மேற்காசியாவில் நடத்திய தாக்குதல்களை விவரித்துள்ளேன்.

இப்படி நமது ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தகாலதில், 2000 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு இந்தியன் உளறிவிட்டான். எகிப்தில் உள்ள அலெக்ஸாண்ட்ரியாவில் ஒரு கிரேக்க நாட்டானிடம் பருவக் கற்று மூலம் நாம் எப்படி எகிப்து முதலிய நாடுகளுக்குச் செலவே இல்லாமல் செல்கிறோமென்று உளறிவிட்டான். அது முதல் மேலை நாட்டோர் நம் மீது படை எடுத்து நம்மை அடிமைப் படுத்தத் துவங்கிவிட்டனர். அந்த கிரேக்க நாட்டான் பெயர் ஹிப்பலஸ் — அவன் பெயரில் தென் மேற்குப் பருவக்காற்று ரகசியம் மேலை உலகம் முழுதும் பரவியது. (தமிழ் இலக்கியத்தில் அதிசயங்கள் — என்ற எனது பழைய– 2003 ஆம் ஆண்டு வெளியான புத்தகத்தில்– மேல் விவரம் காண்க)

egypt 2

ஆக சேர நாட்டில் இருந்து தமிழ் பெயர்கள் அங்கு சென்றதில் வியப்பில்லை. எபிரேய மொழியில் பல தமிழ் சொற்கள் உண்டு அவற்றை தனிக் கட்டுரையில் தருவேன்.. யூதர்கள், பார்ஸிக்கள் முதலியோர் மேலைக் கடற்கரை மாநிலங்களில் குடியேறியதும் பருவக் காற்று ரகசியம் வெளியேறியதால்தான் என்று சொல்லலாம்.

எகிப்தில் பல பெயர்கள் தேவ (டேப்) என்று முடியும். இவை அந்த நாட்டுக் கடவுளான ஹோதெப் (ஹே தேவ!) என்று அவர்கள் புத்தகத்தில் எழுதுவர். ஆயினும் கடவுள் என்ற பெயரில் தேவ இருப்பதில் வியப்பில்லை. நாம் சிவனை மஹா தேவ என்று சொல்கிறோம்.

இப்படிப் பெயர்களில் மேம் போக்காகக் காணப்படும் ஒற்றுமைகளை வைத்து மட்டும் நாம் எகிப்திய-இந்திய உறவை எடை போடுவது அறிவுடைமை ஆகா. வேறு பல விஷயங்களிலும் காணப்படும் ஒற்றுமைகளை வைத்தே முடிவுக்கு வருகிறோம். ஈசாப் என்னும் கிரேக்க அடிமை, எகிப்து நாட்டில் அடிமை வேலை செய்த காலையில் கேட்ட கதைகளை எழுதி உலகப் புகழ் பெற்றான். அவன் நாட்டில் இல்லாத மயில் போன்ற இந்தியப் பறவைகளை அவன் கதைகளில் காண்பது நம்முடைய கலாசார தாக்கத்தை வெள்ளிடை மலையென விளக்கும்.

egypt india

Please Read my earlier Posts
The Great Scorpion Mystery in History – Part 1 (posted 10 November 2012)
The Great Scorpion Mystery in History – Part 2(posted 10 November 2012)
Did Indians build Egyptian Pyramids? ( 27 August 2012)
Vishnu in Egyptian Pyramids ( 5 September 2012)
Vedas and Egyptian Pyramid Texts ( 20 August 2012)
Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda (26-9-2012)
Hindu Gods in Egyptian Pyramids ( 16-9-2012)
Flags: Indus Valley- Egypt Similarities (15-10-2012)
எகிப்தில் திருமூலர் கருத்துக்கள் (21-11-2013)
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி-எகிப்து அதிசய ஒற்றுமை (14-10-2012)
Hindu Symbolism in France ( 24 August 2014)
More Tamil and Sanskrit Names in Egypt (15th November 2014)
aum
contact swami_48@yahoo.com

மாரி, பாரி, வாரி: காளி.,கம்பன் கபிலன்!!!

06TH_WEATHER2_1937233g
Written by London Swaminathan
Post No.1125 ; Dated :– 23 June 2014.

N.B. If you want to reproduce this article, please email me for permission. Previously I gave blank cheque to some people. They have been uploading all the 1100 posts from my blogs which is not allowed from today. You have to get written permission from me for each and every article separately. swami_48@yahoo.com

மாரி என்றால் மழை;
பாரி என்பவன் கடை எழு வள்ளல்களில் ஒருவன்;
வாரி என்றால் கடல்.

காளிதாசன், கபிலன் என்பவர்கள் 2000 ஆண்டுகளு க்கு முன் வாழ்ந்த புகழ்பெற்ற கவிஞர்கள். அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் உதித்தவன் கம்பன் என்னும் கவிஞன். இம்மூன்று கவிஞர்களும் சொல்லேர் உழவர்கள்; ஒரே விஷயத்தை தமக்கே உரித்தான பாணியில் நயம்பட உரைப்பதைப் படித்து மகிழ்வோம்.

கி.மு முதல் நூற்றாண்டில் வாழ்ந்த உலக மஹா கவிஞன் காளிதாசன். அவனது ஆயிரத்துக்கும் மேலான உவமைகளில் 200—க்கும் மேலான உவமைகளை சங்கப் புலவர்கள் கையாண்டிருப்பதை ஏற்கனவே ஆறு, ஏழு கட்டுரைகளில் ஆதாரத்துடன் எழுதி இருக்கிறேன்.

barcelona mediterranean sea

ரகுவம்சம் (17—72) என்னும் காவியத்தில் வரும் ஸ்லோகம் இது:

வறுமையில் வாடிய புலவரும் ஏழைகளும் அதிதி என்ற அரசனை அடைந்தனர். அவன் அள்ளி அள்ளிக் கொடுத்தான். அந்தப் பொருளை வாங்கி ஊருக்குத் திரும்பி வந்தவுடன் அவர்களும் எல்லோருக்கும் வாரி வழங்கி வள்ளல் என்ற பெயர் எடுத்துவிட்டனர். இதன் உட் பொருள்:–அப்பொருளைப் பெற்றோர், அப்பொருளுக்கு மூல காரணமான அதிதி என்னும் மன்னனையே மறந்துவிட்டனர். மேகங்களும் இப்படித்தான் கடல் நீரை மொண்டு எல்லோருக்கும் மழையாகத் தருகிறது. இதன் உட்பொருள்:–எல்லா கவிஞர்களும் மேகங்களை வள்ளல் என்று புகழ்கின்றனர். ஆனால் அந்த மேகங்களுக்கும் நீர் கொடுத்தது கடல் என்பதை மறந்துவிட்டனரே!!

ரகுவம்சம் 1-18ல் திலீபன் என்னும் மன்னனின் கொடைத் தன்மையை வருணிக்கையில் ‘’சூரியன் கடல் நீரை உறிஞ்சுவது ஆயிரம் மடங்கு திருப்பித் தருவதற்கன்றோ! அதே போல திலீபன் வரி வாங்கியதும் ஆயிரம் மடங்கு மக்களுக்குத் திருப்பித் தருவதற்கன்றோ!!’’ – என்பான்.

ரகுவம்ச அரசர்கள் எப்படிக் கொடுத்துக் கொடுத்து வறியவர் ஆயினரோ அதே போல பாரியும் ஆய் என்ற வள்ளலும் வறியவர் ஆனதை முடமோசியாரும் கபிலரும் பாடுகின்றனர்.

kadal-B_Id_428828_cyclone

புறம் 127 முடமோசியார் பாடிய பாடலில், ‘’ உன் மனைவி கழுத்தில் உள்ள தாலி ( ஈகை அரிய இழையணி மகளிரொடு ) மட்டுமே கொடுக்க இயலாது. மற்ற எல்லாவற்றையும் நீ பரிசிலர்க்கு வழங்கிவிட்டாய் என்பார்.

கபிலன் பாடல்
பாரியினுடைய 300 ஊர்களும் ஏற்கனவே இரவலர்க்கு வழங்கப்பட்டு விட்டது என்பதை முற்றுகையிட்ட மூவேந்தரிடம் கபிலர் கூறினார்.
புறம் 107 கபிலர் பாடிய பாடலில், மேகம் உவமை வருகிறது.:-
பாரி பாரி என்று பல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர் செந்நாப்புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு ஈங்கு உலகு புரப்பதுவே.

எல்லோரும் பாரியையே புகழ்கின்றனரே. உலகத்தைக் காப்பதற்கு மாரி (மழை/மேகம்) யும் உள்ளனவே. இது பழிப்பது போல பாரியைப் புகழ்வதாகும்.

கம்பன் பாடல்
கம்பனும் ராமாயண பால காண்டத்தில் இதே உத்தியைக் கையாளுகிறான்:
புள்ளி மால் வரை பொம் எனல் நோக்கி, வான்
வெள்ளி வீழ் இடை வீழ்த்தெனத் தாரைகள்,
உள்ளி உள்ள எல்லாம் உவந்து ஈயும் அவ்
வள்ளியோரின் , வழங்கின் மேகமே (ஆற்றுப் படலம், பால காண்டம்).

மற்றவர்களுக்கு தானம் செய்யும்போது ஏற்படும் இன்பத்தைக் கருதி தம்மிடமுள்ள செல்வத்தை எல்லாம் வாரி வழங்கும் வள்ளல்களைப் போல மேகங்களும் கோசல நாட்டில் மழையைக் கொட்டித் தீர்த்தனவாம்! இது கடைசி இரண்டு வரிகளின் பொருள்.

முதல் இரண்டு வரிகளின் பொருள்:– பெருமையுடைய இமயமலை பொலிவுடையதாக இருக்க வேண்டும் என்று கருதி வெள்ளி நிறக்கம்பிகள் போல தாரை தாரையாக மழை இறங்கியது.

kadal blue

ஆக மேகத்தையும் கடலையும், மழையையும் கொண்டு மன்னர்களின் வள்ளல் தன்மையை புலவர்கள் விளக்கும் நயம் மிகு பாடல்கள் படித்துச் சுவைப்பதற் குரியனவே!

உலகில் இப்படி வள்ளன்மைக்கு உவமையாக மழை, மேகம், கடல் ஆகியவற்றைப் பயன்படுத்துவதை பாரதம் முழுதும் வடமொழி, தென்மொழிப் பாடல்களில் மட்டுமே காணமுடியும். இது பாரதீயர்களின் ஒருமுகச் சிந்தனையைக் காட்டுகிறது, ஆரிய—திராவிட இனவெறிக் கொள்கையைப் பரப்புவோருக்கு இதுவும் ஒரு அடி கொடுக்கும்!

–சுபம்–