Date: 10 FEBRUARY 2018
Time uploaded in London- 9-11 am
WRITTEN by London swaminathan
Post No. 4724
PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))
எந்த ஒரு புதுத் திட்டம் வந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு கும்பல் இருக்கும்; அதற்குப் பின்னுள்ள காரணம் என்னவென்றால் அவர்களின் பிழைப்பில் மண் விழுந்திருக்கும்.
சவூதி அரேபியாவில் டெலிபோன் அமைப்பது, ‘சாத்தான் வேலை’ என்று குரல் கொடுத்த முஸ்லீம் மதத் தலைவர்களை அந்த நாட்டு மன்னர் எப்படிச் சமாளித்தார் என்ற சுவையான சம்பவம் ஒரு பழைய ஆங்கிலப் புத்தகத்தில் உள்ளது.
அச்சுக்கூடங்களை கூடன்பர்க் நிறுவியவுடன் கிறிஸ்தவப் பாதிரிகள், இது ‘சாத்தான் வேலை’ என்று பயங்கரக் கூச்சல் போட்டார்கள். ஏனெனில் அதுவரை பைபிள் கையினால் எழுதப்பட்டு விற்கப்பட்டது. அதில் பாதிரிகளுக்கு ஏராளமான பணம் கிடைத்தது. அவர்கள் அனுமதி இல்லாமல் பைபிளை யாரும் வாங்கவும் முடியாது; வைத்துக்கொள்ளவும் முடியாது — ஒரு போப்பாண்டவர் பைபிள் எந்த வீட்டிலும் இருக்கக்கூடாது. அது சர்ச்சில் மட்டுமே இருக்கலாம என்று தடையும் விதித்து இருந்தார்!
மதுரையில் நான் தினமணியில் வேலை பார்த்த காலத்தில் வாரத்துக்கு ஒரு முறை கம்யூனிஸ்ட் ( மார்கஸீய மூடர்கள்) யூனியன்கள் வங்கி (BANK) வாசலில், எல்.ஐ.சி (L.I.C) அலுவலக வாசலில் கூச்சல் போடுவார்கள்– கம்யூட்டர்களை எதிர்த்து! ——அவர்கள் எவ்வளவு முட்டாள்கள் என்பதை லண்டனில் உள்ள அவர்களுடைய மகன்கள் (COMPUTER PERSONNEL) இப்போதும் சொல்கிறார்கள்.
சவூதி அரேபிய மன்னர் அரண்மனையில் புதிய டெலிபோன் அமைப்பு வேலைகள் துவங்கியவுடன் செய்தி காட்டுத் தீ போல பரவியது. உடனே முஸ்லீம் மதத் தலைவர்கள் ‘’ஹராம் ஹராம்! அபச்சாரம், அபச்சாரம்’’: சாத்தான்களை அரண்மனக்குள் நுழையவிடக்கூடாது என்று கூக்குரல் எழுப்பினர். மன்னரும் யோசித்தார்; இந்த மூடர்களுக்கு எப்படி அறிவு புகட்டுவது என்று ஆலோசித்தார். எல்லா மதத்திலும் சாணக்கியர் போன்ற அறிவாளிகள் உண்டு அல்லவா?
நல்ல யோஜனை பிறந்தது! மதத் தலைவர்களை சவூதி மன்னர் அழைத்தார். “அன்பர்களே! நண்பர்களே! தோழர்களே; காம்ரேட்களே!
ஒரு மௌல்வி டெலிபோனின் ஒரு புறத்தில் இருந்து குரானை ஓதட்டும். டெலிபோனின் மறு புறம் மற்றொரு மௌல்வி காது வைத்துக் குரானைக் கேட்கட்டும். அப்படியே பிழை இன்றிக் கேட்டால், புனித குரான் வந்த டெலிபோன் சாத்தானின் வேலையாக இருக்காதல்லவா?” என்றார். மௌல்விகள் பலமாக தலையை ஆட்டினர். அவ்வாறே குரானும் ஓதப்பட்டது; அது மறுபுறமும் ஒலித்தது. எல்லோருக்கும் பரம திருப்தி; பஹு சந்தோஷம்.
XXXXX
பேய்கள் இருக்கிறதா?
ஆங்கிலக் கவிஞர், தத்துவ வித்தகர், இலக்கிய விமர்சகர் காலரிட்ஜ் (SAMUEL TAYLOR COLERIDGE).
அவரிடம் ஒரு பெண்மணி வந்தார்.
“ஐயா, பேய்கள் இருக்கிறதா? உங்களுக்குப் பேய்கள் மீது நம்பிக்கை உண்டா?”
காலரிட்ஜ் செப்பினார்_
“அம்மணி! அதை ஏன் கேட்கிறீர்கள்; எங்கு பார்த்தாலும், ஏராளமான பேய்களைப் பார்ப்பதால் எப்படி நம்புவது என்றே புரியவில்லை!”
xxxxxx
ஏசு கிறிஸ்து சக்தி வாய்ந்தவரா?
லூயிஸ் நெப்போலியன் (LOUIS LITTLE NAPOLEON) சிறுவனாக இருந்தபோது நடந்த நிகழ்ச்சி. இவர் நெப்போலியன் போனபர்ட்டின் வாரிசு. பிரான்ஸில் தேர்தலில் வெற்றி பெற்று முதல் ஜனாதிபதியாக இருந்தார்- அதுவும் மிகவும் இளம் வயதிலேயே!
பள்ளிக்கூடடத்தில் பாடம் நடந்தது. வாத்தியார் மிகவும் உருக்கமாக ஏசு கிறிஸ்துவின் துயரங்களை வருணித்தார். மக்களுக்காக உயிர் நீத்த மஹான் அவர் என்றார். அவர் பட்ட துன்பம் கொஞ்சமா, நஞ்சமா என்றார். அவர் ஏசு பிரானின் கஷ்டங்களையும் சிலுவையில் அறையப்பட்டதையும் சொன்னபோது எல்லா மாணவர் முகத்திலும் சோகமே ததும்பியது; சிலர் கண்களில் கண்ணீரும் உருண்டோடியது.
லூயிஸ் நெப்போலியனின் முகத்தை ஆசிரியர் கவனித்தார்; அவர் முகத்தில் சிறிதும் மாறுதல் இல்லை; அன்றலர்ந்த தாமரைபோல அவர் முகம் பிரஸன்ன வதனமாய் இருந்தது. என்ன லூயிஸ், நான் சொன்னதை கேட்டாயா? உனக்குக் கொஞ்சமும் வருத்தமே இல்லையா?
லூயிஸ் சொன்னான்:
அதானே கேட்டேன்! நீங்கள் சொல்லுவது போல ஏசு பிரான் சக்தி வாய்ந்தவராக இருந்தால், அவரால் ஏன் இதைத் தடுக்க முடியவில்லை?
வாத்தியார் ஐயா வாயடைத்துப் போனார். ‘’அம்மாடி! நாய் வாலை நிமிர்த்த முடியாது’’ என்று எண்ணினார்!
XXXXX
நாத்தீகம் பற்றிக் கதைப்போமா?
பிரபல பிரெஞ்சு எழுத்தாளர், தத்துவ ஞானி அறையில் அறிஞர்கள் குழுமி இருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக விவாதம், நாத்திகத்தை நோக்கித் திரும்பியது.
‘’சரி, நாத்திகம் பற்றி இப்போது கதைப்போம்’’ என்றனர்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த வால்டேர் திடீரெனப் பாய்ந்தார்; எல்லார் காதிலும் கிசுகிசுத்தார்.
‘’ஐயா வாயை மூடுங்கள்; என் வேலைக் காரர்கள் எல்லாம் முதலில் வெளியே போகட்டும்ம். அவர்கள் இந்தப் பேச்சைக் கேட்டால், உங்களை இங்கே அனுமதித்ததற்காக இன்றிரவு நான் தூங்கும் போது என் குரல்வளையை நெறித்து விடுவார்கள்! — என்று.
(பிரான்ஸில் அவ்வளவு மத நம்பிக்கை இருந்த காலம் அது!)
(இது ஆங்கிலத்திலும் பதிவு இடப்பட்டுள்ளது)
-சுபம்–