முட்டாள்கள் முன்னேற்ற சங்கம் அழைப்பு! (Post No 2578)

kakakaka

Written by S Nagarajan

 

Date: 27  February 2016

 

Post No. 2578

 

Time uploaded in London :–  5-38 AM

 

( Thanks for the Beautiful Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

kaka2

நையாண்டி மடல் எண் 2

முட்டாள்கள் முன்னேற்ற சங்கம்: மெய் சிலிர்க்க வைக்கும் அழைப்பு!

.நாகராஜன்

 

 

அன்புடையீர்.

நிச்சயமாக உடனே அடுத்து ஒரு மடலை அனுப்பும் எண்ணமே எமக்கு இல்லை. ஆனால் முதல் மடல் வெளியானவுடன் எமக்கு வந்த தொலைபேசி அழைப்பு அந்த எண்ணைத்தை மாற்றி விட்டது.

தொலைபேசியில் பேசியதும் அவரோ இவரோ இல்லை. நீதியைக் காப்பேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நீதித்துறையில் களம் இறங்கியவர்.

 

அவர் உலக நீதித் துறை வரலாற்றிலேயே ‘தனி ஒரு” இடத்தைப் பிடித்தவர்.

தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, இப்போது உலக அரங்கிலும் கூட அனைவரும் அவரைக் கண்ணெடுத்துப் பார்க்கின்றனர்.

உலக நீதித்துறை வரலாற்றில் யாருமே சாதிக்க முடியாதபடி அப்படி இவர் சாதித்த “தனி ஒரு” சாதனை என்று ‘முட்டாள்தனமாகக்’ கேள்வி கேட்கிறீர்களா?

 

 

நமது கழகத்தின் முதல் விதியே கேள்வி யாரும் கேட்கக் கூடாது என்பது தான்!

யாமே கேள்விகளை எழுதி யாமே பதில் எழுதி சாமானியனுக்கு அறிவுறுத்துகிறார் போல அதை ஊடகங்களுக்கு கொடுப்பதே எமது வாடிக்கை.

இருந்தாலும் போனால் போகிறது என்று இந்த ஒரு முறை உங்களை மன்னித்து விடுகிறேன்.

 

 

இவர் சாதித்த சாதனை என்ன தெரியுமா?தன் மீதிருந்த குற்றச்சாட்டுகளைத் தானே விசாரித்து தானே தனக்கு தீர்ப்பு வழங்கிக் கொண்டது தான்! தான் நிரபராதி என்று அந்தத் தீர்ப்பில் இருப்பது நியாயம் தானே!)

இப்படி உலக வரலாற்றில் தன்னைத் தானே விசாரித்து அற்புதமாகத் தீர்ப்பு வழங்கியதாகச் சரித்திரம் உண்டா?

கோட்டா முறைப்படி உள்ளே வந்து சகல சலுகைகளையும் இவர் கடந்த பல்லாண்டுகளாக அனுபவித்தவர்.

 

 

இவர் மீது பல வயிற்றெரிச்சல்காரர்கள் ஊழல் புகார்களை அனுப்பவே நீதியரசர்கள் இவர் மீது வழக்கைப் பதிவு செய்து இவர் எந்த வேலையையும் செய்யக் கூடாது என்று உத்தரவு போட்டனர்.

ஆனால் வேலை ஒன்றையே தாரக மந்திரமென்று கொண்ட இவர் தன்னைத் தானே விசாரித்துக் கொண்டார்.

இவர் எம்மை அழைத்து முமு,கவில் தம்மை இணைத்துக் கொள்வதாகச் சொன்னவுடன் மெய் சிலிர்த்துப் போனோம். உடம்பெல்லாம் புல்லரித்தது..

 

கழகத்தில் வக்கீல் பிரிவு உண்டா, அதற்கான தலைமைப் பதவி தனக்கு கிடைக்குமா என்று கேட்டார்.

 

kaka4

பிரமித்துப் போன யாம்  ‘உடனே தந்தோம்’ என்றோம். பிரிவு  உண்டா என்று கேட்காதீர்கள். கழகத்தின் முதல் நோக்கமே பிரிவினைக்கு வித்திடுவது தான். இதற்கு எத்தனை பிரிவுகள் வேண்டுமோ அத்தனை பிரிவுகளும் இங்கு உண்டு. பிரிவில் ஏற்படும் விளைவுகளினால் நம் கஜானா நிரம்ப வேண்டும்; அதிகாரம் வர வேண்டும் என்று பதில் தந்தோம். அவர் மகிழ்ந்து போனார்.

 

 

இனி கழக உடன்பிறப்புகள் இவர் காட்டிய வழியின் படி எந்த ஊழல், இதர சிவில் கிரிமினல் குற்றங்களைச் செய்தாலும் நீதி மன்றம் செல்ல வேண்டாம்.

தமக்குத் தாமே விசாரித்து  (நிரபராதி என்று) நீதி வழங்கிக் கொள்ளலாம். இது எப்படி ஒரு ஆறுதலான செய்தி!

முட்டாள்களே! இந்த இனிய செய்தியை வேண்டி விரும்பி உங்களுடன் பகிர்ந்து கொண்டு விடை பெறுகிறோம்.

 

அன்புடன்

தலைவர்

தமிழகத்தில் புதிய கட்சி மு.மு.க. — தேர்தலில் போட்டியிடுமா?(Post No 2575)

fool

Written by S Nagarajan

 

Date: 26  February 2016

 

Post No. 2575

 

Time uploaded in London :–  4-44 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

நையாண்டி மடல்  (மடல் எண் 1)

 

முட்டாள்கள் முன்னேற்றக் கழகம்!

 

ச.நாகராஜன்

 

 

அன்புடையீர்,

 

நீஙகள் வெகு ஆவலுடன் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த முமுக ( முட்டாள்கள் முன்னேற்றக் கழகம்) ஆரம்பிக்கப்பட்டு விட்டது என்பதை மகிழ்வுடன் அறிவித்துக் கொள்கிறோம்.

 

இதை ஏன் தமிழகத்தில் ஆரம்பிக்கிறோம் என்பது உங்களுக்கே மிக நன்றாகத் தெரியும்.

 

இங்கு இதன் உறுப்பினர்கள் ஒரே நாளில் ஆயிரக் கணக்கில் சேர்ந்து விடுவார்கள் என்பதே காரணம்.

 

இதில் சேர எந்த விதமான தகுதியும் தேவையில்லை என்பதும் உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

 

brit parties

தமிழகத்தின் ஒரு சில துர்பாக்கியசாலிகளைத் தவிர மற்ற அனைவருமே இதில் உறுப்பினர்களாக ஆக்கப்பட்டு விட்டனர்.

நான் முட்டாள் இல்லையே என்று சொன்னால், ஹ.. ஹ.. ஹ.., நிச்சயமாக நீங்கள் முட்டாள் தான்!

 

நான் முட்டாள், என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று நீங்கள் சொன்னால், அப்புறம் என்ன, நீங்களே ஒப்புக் கொண்டுவிட்டீர்கள், நீங்கள் கழகத்தின் ஆயுள் கால உறுப்பினர் தான்!

 

 

நீங்கள், ‘நான் முட்டாளா, இல்லையா என்று எனக்கே தெரியவில்லை என்ற முட்டாள் குழப்பத்தில் இருந்தால், கவலைப் பட வேண்டாம். சேர்க்கப்பட்டவுடன் கியாரண்டியாக நீங்கள் முட்டாள் ஆகி விடுவீர்கள்.

 

ஆக, சேருவதைப் பற்றிய பிரச்சினை இத்தோடு தீர்ந்தது.

அடுத்து நமது கழகத்தின் ஆலோசகர்களாக யார் வேண்டி விரும்பிச் சேர்ந்திருக்கிறார்கள் என்பதைக் கேட்டால் நீங்கள் அசந்து போவீர்கள்.

 

இந்தியாவின் தலை நகரில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மூத்த பேராசிரியர்கள் தாம் நமது ஆலோசகர்கள்.

 

 

இவர்களது அபார அறிவுத் திறனையும் அனைவரையும் வழி நடத்தும் பாங்கையும் கண்டு உலகமே வியக்கிறது; அதிசயிக்கிறது.

 

நமது கொள்கைகளை வீடு வீடாக எப்படிக் கொண்டு சேர்க்கிறது என்ற கவலையே எந்த முட்டாளுக்கும் (அது தான் நீங்கள் உறுப்பினர் ஆகி விட்டீர்களே) வேண்டாம்.

 

 

டெல்லியில் உள்ள அனைத்து டெலிவிஷன் சானல்களும் நம்மை வெகுவாக விளம்பரப்படுத்த ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

இதற்காகவே, நரைத்த விக் வைத்த தடியர்( சற்று உடல் பருமனைக் குறிப்பிடுகிறோம்) கீச்சுக் குரலில் கத்திப் பேசும் பேராசிரியர், எதிராளியைப் பேச விடாமல் தானே காச் மூச் என்று கத்திக் கொண்டே இருக்கும் காம்ரேட், மற்றும் அழகிய சல்வார் கமீஸ், நல்ல லிப்ஸ்டிக் மற்றும் மேக்-அப்பில் கவனம் செலுத்தி ஸ்டுடியோவுக்கு வருகை புரியும் பெண்ணியப் போராளி ஆகிய அனைவரும் இந்த டெலிவிஷ சானல்கள் வாயிலாக நமக்கு நல்லாதரவு தினமும் தருவது உறுதி.

 

 

“இந்தியா அறிய விரும்புகிறது” என்ற கர்ஜனைக் குரலுடன் தினமும் நமது நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்படும்.

நீங்கள் அறிவாளிகள் (யாராவ்து இருந்தால்) பற்றிப் பயப்பட வேண்டாம்.

 

நமது புதிய அகராதியை அவர்கள் முன் வீசி எறியுங்கள். அவர்கள்  சற்று மறுத்துப் பேசினால்..  .. ஹ. ஹ. அவர்களையே வீசி எறியுங்கள்.

 

 

எடுத்துக் காட்டாக ஒரு வார்த்தையைச் சொல்லி இந்த எமது முதல் மடலை  முடிக்கிறோம்.

 

செகுலரிஸம் என்றால்  மதச்சார்பின்மை என்று அந்த ஆக்ஸ்போர்டும் இதர அகராதிகளும் சொல்வது சுத்தப் பத்தாம் பசலித்தனம். செகுலரிஸம் என்றால் ஹிந்து மதத்தையும் அதைச் சார்ந்த தொன்மத்தையும் நம்பிக்கையையும் அதில் இருக்கும் உறுப்பினர்களையும் இழிவு படுத்துவதே! கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய கொள்கைகளைப் பற்றியோ அவர்களின் தொன்மம், நம்பிக்கை பற்றியோ பேசவே கூடாது. (நமக்கு எதற்கு உடல் ரீதியான விபரீதம்?) இதுவே செகுலரிஸம்.

 

IMG_9517 (2)

இப்படிப் பல புதிய விஷயங்களை நமது ஆலோசகர்கள் அவ்வப்பொழுது கூறிக் கொண்டே இருப்பார்கள். அதனால் நமது முட்டாள்தனம் நீண்ட நெடு நாளாய் இருக்கப் போவது உறுதி.

யாரும் கவலைப்பட வேண்டாம். அடுத்த மடல் விரைவில் வரும்.

 

அன்புடன்

முமுக தலைவர்