
Written by London Swaminathan
Date: 10 September 2017
Time uploaded in London- 17-10
Post No. 4200
Pictures are taken from various sources; thanks.
வேதத்தில் இந்துக்கள் கேட்பது என்ன?
ரிக் வேதத்தில் ஆயிரத்துக்கும் மேலான துதிகள் உண்டு. சில துதிகளைப் படித்தால் அவர்கள் (ரிஷிகள்) என்ன வேண்டினார்கள் என்பது தெரியும்:
ஒவ்வொரு துதியும் இறைவனின் மகத்தான சக்தியைப் போற்றும் . இறைவனின் சாதனைகளைப் பட்டியலிடும். பின்னர் செல்வம், நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள், நல்ல பிள்ளைகளை வேண்டும். சில நேரங்களில் பாவ மன்னிப்பு, நோயிலிருந்து விடுதலை ஆகியனவும் இடம்பெறும்; இதோ சில எடுத்துக் காட்டுகள்:–

இந்திரனுக்கு (கடவுளுக்கு) துதி:
ஓ இந்திர த்யௌஸ் அசுரன் உனக்கு அடி பணிந்தான்; நீண்ட நிலப்பரப்புடைய பிரம்மாண்டமான பூமி உன் வசமாயின.
எல்லா கடவுளரும் இந்திரனை முன்னிலையில் வைத்தனர்-1-131-1
உனக்கு இரண்டாவது (ஈடு, இணை) என்பதே இல்லை 1-32-12
முப்பது சால்களில் இந்திரன் சோமபானம் குடித்தான்.7-66-4
பின்னர் இந்திரன் சொல்கிறான்:
நான் ஆகாயத்தையே தூக்கினேன்; மஹா பலசாலிகளில் மிகப்பெரியவன்; நான் சோம பானத்தைப் பருகவில்லையா?
சோமபானத்துக்கு அவ்வளவு சக்தி! (சுரா பானம் என்பது மதுபானம்; அதை வேதம் நிந்திக்கிறது)
அக்னிக்கு ஒரு துதி:
அக்னியே! நீ ஒரு தூதன்; நன்மை செய்பவன்; கருணையின் வடிவம்; பலத்தின் மகன்; உனக்கு உயிர்வாழும் அனைத்தையும் தெரியும்.
அக்னிக்கு, நான் ஒரு புதிய சக்திவாய்ந்த துதிப் பாடல் பாடுவேன்; என்னுடைய சொற்களையும் பாடலையும் கொண்டுவருகிறேன்.
விலை மதிப்புடைய பொருட்களை உடைய தண்ணீரின் மகனே!
நீ பூமியின் மீது உரிய பருவத் தி ல் அமர்ந்து இருக்கிறாய். 1-143-1
மருத் (காற்று) தேவனுக்கு ஒரு துதி:
மின்னலைச் சுமக்கும் தேர்களில் விரைந்து வருவாயாக; குதிரைகளில் ஈட்டிகளை ஏந்தி, இனிய பாடல் பாடிக்கொண்டு வருக 1-88-1
கடவுளின் அழகையும் ரிஷிகள் போற்றினர்:
இந்திரனின் ஒரு அடைமொழி சுசிப்ரா= அழகான கன்னம்/ மூக் குடையோன்
அக்னியின் ஒரு அடைமொழி= அழகிய தோற்றம் உடையோன்

சீனிவாலி என்னும் தேவி மீதான துதி:
அழகிய விரல்கள், அழகிய கைகள், பல மகன்களை ஈன்றெடுத்த தாயே! அகலமான கூந்தல் உடையோய்! ஆண்களின் ராணியே! அந்த சீனீவாலிக்கு புனித அன்பளிப்புகளைத் தருவோம் 2-32-7
செல்வம் வேண்டும்1
எல்லோரும் விரும்புவது செல்வமே.
இதோ சில துதிப்பாடல்கள்
எங்களுக்குச் செல்வத்தைக் கொணர்க; அதையே விரும்பி நிற்கிறோம் 8-45
இந்திரனுக்கு ஒரு துதி:
ஓ, சோமபானப் பிரியனே! உங்கள் உண்மையுள்ள, ஆனால் ஒன்ர்ருக்கும் உதவாதவர்கள் நாங்கள்
ஆயிரக்கணக்கில் அழகான குதிரைகளை அளிப்பாயாக! ஓ செல்வச் சீமானே!
பலத்தின் தேவதையே! உனது தாடைகள் வலுவானவை; சக்திவாய்ந்தவன் நீ.
ஆயிரக்கணக்கான அழகான குதிரைகளையும் பசுமாடுகளையும் அருள்வாயாக 1-29

மேலும் ஒரு துதி
ஓ!இந்து, சோமா! எல்லா பக்கங்களிலும் செல்வத்தைக் குவிப்பாயாக
ஆயிரக்கணக்கான மடங்கு பொக்கிஷங்களை அள்ளித் தருக–9-40
அளவற்ற தனத்தை அருள்க; ஓ இந்து செல்வத்தைத் தா.
தங்கத்தையும் குதிரைகளையும் பசுக்களையும் தா 9-41-4
ஓ மருத்துக்களே! செல்வத்தை அருள்க; நிலயான, குன்றாத செல்வத்தை அருள்க
நூறு ஆயிரம் படங்கு, இன்னும் எப்போதும் பெருகட்டும் 1-64-15
ஓ அக்னி எங்கள் பிரபுக்களுக்கு அதிகம் செல்வத்தைக் கொடு 8-1-24
அற்புத இந்திரனே! அற்புதமான செல்வத்தை எங்களுக்குக் கொண்டு வா 7-20-7
நிலத்தை உழுவதற்கு முன் சொல்லும் மந்திரம்:
சுபமான உழுகலனே( சீதாவே), அருகில் வருக; உன்னை மதிக்கிறேன்; உன்னை வணங்குகிறேன்
நீ எங்களை ஆசீர்வதி; எங்களுக்கு வளத்தைக் கொடு; அளவற்ற உணவுதானியங்களை அள்ளிக் கொடு 7-57-6
வருணனுக்கு ஒரு துதி:
பாவத்திலிருந்து எங்களை விடுவி
அரசனே! எனக்கு என்றும் திடமான செல்வம் குறையவே கூடாது 2-2-8
வேதங்களில் உள்ள துதிகள் இந்துக்களின் மகத்தான மூன்று கண்டுபிடிப்புகளைக் காட்டும்!
மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு அடித்தளமிட்ட அரிய பெரிய கண்டு பிடிப்புகள் அவை!
வேதத்தின் எல்லா துதிகளிலும் இவை இழையோடி நிற்கும்!
மனித இனத்தையே மாற்றிய மூன்று இந்துக்களின் கண்டு பிடிப்புகள்

1.பசு மாடு
காட்டில் எவ்வளவோ மிருகங்கள் பால் கொடுத்தும் தாய்ப்பாலுக்கு நிகரான ஒரே மிருகம் பசு என்பதைக் கண்டுபிடித்து அதற்கு வேத காலத்திலேயே கோ மாதா, காம தேனு என்று பெயரிட்டு மனித குலத்துக்கு அளித்தான்
உலகில் எகிப்திய, பாபிலோனிய, மாயன் நூல்களில் எங்குமே இப்படி ஒன்றைக் காண இலயவில்லை.

2.குதிரை
காட்டில் வேகமாகச் செல்லும் சிறுத்தை முதலியன இருந்தும் சாக பட்சிணியான குதிரையே மனிதனுக்குப் பயன் படும் என்று அதை வசமாக்கி தேரில் பூட்டி உலகிற்கு அளித்தவன் இந்து!
வேதத்தில் துதிக் குத் துதி பசுவும் குதிரையும் பாய்ந்தோடும்!
உலகில் எந்த நாட்டு பழைய நூல்களில்ம் இத் தகைய போற்றுதலைக் காண இயலவில்லை.
3.டெசிமல் சிஸ்டம்! தசாம்ச முறை
மனித குல அறிவியல் முன்னேற்றத்துக்கு, ராக்கெட்டுகள் பறந்ததற்கு, கம்ப்யூட்டார்கள் செயல்பாட்டூகு எல்லாம் அடித்தளமிட்டது தசாம்ச முறை! இந்துக்கள் உலக மஹா மேதாவிகள்! அதி சூர கணிதப் புலிகள்! வேதத்தில் துதிக்குத் துதி 100, 1000, 10000, 1000000, கோடி என்று அடுத்தடுத்து வரும்.
உலகம் காணாத விந்தை இது. நாம் இல்லாவிடில் உலகம் விஞ்ஞானத்தில் ஒரு அங்குலம் கூட முன்னேறியிராது.
இன்றுவரை உலகில் பசும்பாலோ, பால் பொருட்களோ இல்லாவிடில் மனித இனம் மறு நிமிடமே நோயில் வாடி அழியும்.
இந்துக்கள் வாழ்க! வேதங்கள் வெல்க!!
NUMBERS IN SANSKRIT
एकं सत् विप्रा बहुधा वदन्ति
एकम् = 1
दशकम् = 10
शतम् = 100
सहस्रम् = 1000
दशसहस्रम् = 10000
लक्षम् = 100000
दशलक्षम् = 10^6
कोटि = 10^7
अयुतम् = 10^9
1010 से अधिक परिमाण
नियुतम् = 10^11
कंकरणम् = 10^13
विवर्णम् = 10^15
परार्धः = 10^17
निवाहः = 10^19
उत्संगः = 10^21
बहुलम् = 10^23
नागबलः = 10^25
तितिलम्बम् = 10^27
व्यवस्थान – प्रज्ञापतिः = 10^29
हेतुहीलम् = 10^31
कराहुः = 10^33
हेतविन्द्रीयम् = 10^35
सम्पत-लम्भः= 10^37
गणनागतिः= 10^39
निर्वाद्यम्= 10^41
मुद्राबलम्= 10^43
सर्वबलम्= 10^45
विषमग्नागतिः= 10^47
सर्वाग्नः= 10^49
1050 से अधिक परिमाण
विभूतांगम्= 10^51
तल्लाक्षणम्= 10^53
ஏகம் = 1
த³ஸ²கம் = 10
ஸ²தம் = 100
ஸஹஸ்ரம் = 1000
த³ஸ²ஸஹஸ்ரம் = 10000
லக்ஷம் = 100000
த³ஸ²லக்ஷம் = 106
கோடி = 107
அயுதம் = 109
1010 ஸே அதி⁴க பரிமாண
நியுதம் = 1011
கங்கரணம் = 1013
விவர்ணம் = 1015
பரார்த⁴: = 1017
நிவாஹ: = 1019
உத்ஸங்க³: = 1021
ப³ஹுலம் = 1023
நாக³ப³ல: = 1025
திதிலம்ப³ம் = 1027
வ்யவஸ்தா²ன – ப்ரஜ்ஞாபதி: = 1029
ஹேதுஹீலம் = 1031
கராஹு: = 1033
ஹேதவிந்த்³ரீயம் = 1035
ஸம்பத-லம்ப⁴:= 1037
க³ணனாக³தி:= 1039
நிர்வாத்³யம்= 1041
முத்³ராப³லம்= 1043
ஸர்வப³லம்= 1045
விஷமக்³னாக³தி:= 1047
ஸர்வாக்³ன:= 1049
1050 ஸே அதி⁴க பரிமாண
விபூ⁴தாங்க³ம்= 1051
தல்லாக்ஷணம்= 1053
-Mahabharat according to Kurukkal
एकं पङ्क्तिशतं सहस्रमयुतं लक्षंप्रपूर्वायुतं
कोटिश्चार्बुदकञ्च पद्मकमधो खर्वंनिखर्वं तथा |
बृन्दञ्चैव महासरोजमपरश्शङ्खस्समुद्रोन्तिमो
मद्ध्यञ्चैव वरार्द्ध संज्ञकमिमा संख्यां विदुः पण्डिताः ||1.25
एकं पङ्क्तिशतं सहस्रमयुतं लक्षंप्रपूर्वायुतं
कोटिश्चार्बुदकञ्च पद्मकमधो खर्वंनिखर्वं तथा |
बृन्दञ्चैव महासरोजमपरश्शङ्खस्समुद्रोन्तिमो
मद्ध्यञ्चैव वरार्द्ध संज्ञकमिमा संख्यां विदुः पण्डिताः ||1.25
ekam1
dasam 10
satam 100
sahasram 1000
ayutham10,000
laksham 100000
parapurvayutham10,00,000
koti 10000000
arpudham 100000000
padmakam 1000000000
karvam 10000000000
nikarvam 100000000000
bruntham 1000000000000
mahasarojam 10000000000000
sangam 100 00 00 00 00 00 000
avaramahasanagam
samudram 1 00 00 00 00 00 00 00 00
madhyam
parartham
samnjak imam sankhyaam vidhu: Pandithaa;
–SUBHAM—
You must be logged in to post a comment.