எண் மூன்றின் மஹத்துவம் (Post No.6300)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 23 April 2019


British Summer Time uploaded in London – 14-14

Post No. 6300

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

இந்துக்களின் மூன்று உலக மஹா கண்டுபிடிப்புகள்!!! (Post No.4200)

Written by London Swaminathan

 

Date: 10 September 2017

 

Time uploaded in London- 17-10

 

Post No. 4200

 

Pictures are taken from various sources; thanks.

 

வேதத்தில் இந்துக்கள் கேட்பது என்ன?

 

ரிக் வேதத்தில் ஆயிரத்துக்கும் மேலான துதிகள் உண்டு. சில துதிகளைப் படித்தால் அவர்கள் (ரிஷிகள்) என்ன வேண்டினார்கள் என்பது தெரியும்:

 

ஒவ்வொரு துதியும் இறைவனின் மகத்தான சக்தியைப் போற்றும் . இறைவனின் சாதனைகளைப் பட்டியலிடும். பின்னர் செல்வம், நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள், நல்ல பிள்ளைகளை வேண்டும். சில நேரங்களில் பாவ மன்னிப்பு, நோயிலிருந்து விடுதலை ஆகியனவும் இடம்பெறும்; இதோ சில எடுத்துக் காட்டுகள்:–

இந்திரனுக்கு (கடவுளுக்கு) துதி:

ஓ இந்திர த்யௌஸ் அசுரன் உனக்கு அடி பணிந்தான்; நீண்ட நிலப்பரப்புடைய பிரம்மாண்டமான பூமி உன் வசமாயின.

 

எல்லா கடவுளரும் இந்திரனை முன்னிலையில் வைத்தனர்-1-131-1

 

உனக்கு இரண்டாவது (ஈடு, இணை) என்பதே இல்லை 1-32-12

 

முப்பது சால்களில் இந்திரன் சோமபானம் குடித்தான்.7-66-4

பின்னர் இந்திரன் சொல்கிறான்:

நான் ஆகாயத்தையே தூக்கினேன்; மஹா பலசாலிகளில் மிகப்பெரியவன்; நான் சோம பானத்தைப் பருகவில்லையா?

 

சோமபானத்துக்கு அவ்வளவு சக்தி! (சுரா பானம் என்பது மதுபானம்; அதை வேதம் நிந்திக்கிறது)

 

அக்னிக்கு ஒரு துதி:

 

அக்னியே! நீ ஒரு தூதன்; நன்மை செய்பவன்; கருணையின் வடிவம்;  பலத்தின் மகன்; உனக்கு உயிர்வாழும் அனைத்தையும் தெரியும்.

அக்னிக்கு, நான் ஒரு புதிய சக்திவாய்ந்த துதிப் பாடல் பாடுவேன்; என்னுடைய சொற்களையும் பாடலையும் கொண்டுவருகிறேன்.

விலை மதிப்புடைய பொருட்களை உடைய தண்ணீரின் மகனே!

நீ பூமியின் மீது உரிய பருவத் தி ல் அமர்ந்து இருக்கிறாய். 1-143-1

 

மருத் (காற்று) தேவனுக்கு ஒரு துதி:

மின்னலைச் சுமக்கும் தேர்களில் விரைந்து வருவாயாக; குதிரைகளில் ஈட்டிகளை ஏந்தி, இனிய பாடல் பாடிக்கொண்டு வருக  1-88-1

 

கடவுளின் அழகையும் ரிஷிகள் போற்றினர்:

இந்திரனின் ஒரு அடைமொழி சுசிப்ரா= அழகான கன்னம்/ மூக்    குடையோன்

 

அக்னியின் ஒரு அடைமொழி= அழகிய தோற்றம் உடையோன்

சீனிவாலி என்னும் தேவி மீதான துதி:

அழகிய விரல்கள், அழகிய கைகள், பல மகன்களை ஈன்றெடுத்த தாயே! அகலமான கூந்தல் உடையோய்! ஆண்களின் ராணியே! அந்த சீனீவாலிக்கு புனித அன்பளிப்புகளைத் தருவோம் 2-32-7

 

செல்வம் வேண்டும்1

எல்லோரும் விரும்புவது செல்வமே.

இதோ சில துதிப்பாடல்கள்

 

எங்களுக்குச் செல்வத்தைக் கொணர்க; அதையே விரும்பி நிற்கிறோம் 8-45

 

இந்திரனுக்கு ஒரு துதி:

ஓ, சோமபானப் பிரியனே! உங்கள் உண்மையுள்ள, ஆனால் ஒன்ர்ருக்கும் உதவாதவர்கள் நாங்கள்

ஆயிரக்கணக்கில் அழகான குதிரைகளை அளிப்பாயாக! ஓ செல்வச் சீமானே!

பலத்தின் தேவதையே! உனது தாடைகள் வலுவானவை; சக்திவாய்ந்தவன் நீ.

ஆயிரக்கணக்கான அழகான குதிரைகளையும் பசுமாடுகளையும் அருள்வாயாக 1-29

மேலும் ஒரு துதி

ஓ!இந்து, சோமா! எல்லா பக்கங்களிலும் செல்வத்தைக் குவிப்பாயாக

ஆயிரக்கணக்கான மடங்கு பொக்கிஷங்களை அள்ளித் தருக–9-40

அளவற்ற தனத்தை அருள்க; ஓ இந்து செல்வத்தைத் தா.

தங்கத்தையும் குதிரைகளையும் பசுக்களையும் தா 9-41-4

 

ஓ மருத்துக்களே! செல்வத்தை அருள்க; நிலயான, குன்றாத செல்வத்தை அருள்க

நூறு ஆயிரம் படங்கு, இன்னும் எப்போதும் பெருகட்டும் 1-64-15

 

 

ஓ அக்னி எங்கள் பிரபுக்களுக்கு அதிகம் செல்வத்தைக் கொடு 8-1-24

அற்புத இந்திரனே! அற்புதமான செல்வத்தை எங்களுக்குக் கொண்டு வா 7-20-7

 

நிலத்தை உழுவதற்கு முன் சொல்லும் மந்திரம்:

சுபமான உழுகலனே( சீதாவே), அருகில் வருக; உன்னை மதிக்கிறேன்; உன்னை வணங்குகிறேன்

 

நீ எங்களை ஆசீர்வதி; எங்களுக்கு வளத்தைக் கொடு; அளவற்ற உணவுதானியங்களை அள்ளிக் கொடு 7-57-6

வருணனுக்கு ஒரு துதி:

பாவத்திலிருந்து எங்களை விடுவி

அரசனே! எனக்கு என்றும் திடமான செல்வம் குறையவே கூடாது 2-2-8

 

வேதங்களில் உள்ள துதிகள் இந்துக்களின் மகத்தான மூன்று கண்டுபிடிப்புகளைக் காட்டும்!

மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு அடித்தளமிட்ட அரிய பெரிய கண்டு பிடிப்புகள் அவை!

வேதத்தின் எல்லா துதிகளிலும் இவை இழையோடி நிற்கும்!

 

மனித இனத்தையே மாற்றிய மூன்று இந்துக்களின் கண்டு பிடிப்புகள்

1.பசு மாடு

காட்டில் எவ்வளவோ மிருகங்கள் பால் கொடுத்தும் தாய்ப்பாலுக்கு நிகரான ஒரே மிருகம் பசு என்பதைக் கண்டுபிடித்து அதற்கு வேத காலத்திலேயே கோ மாதா, காம தேனு என்று பெயரிட்டு மனித குலத்துக்கு அளித்தான்

உலகில் எகிப்திய, பாபிலோனிய, மாயன் நூல்களில் எங்குமே இப்படி ஒன்றைக் காண இலயவில்லை.

2.குதிரை

காட்டில் வேகமாகச் செல்லும் சிறுத்தை முதலியன இருந்தும் சாக பட்சிணியான குதிரையே மனிதனுக்குப் பயன் படும் என்று அதை வசமாக்கி தேரில் பூட்டி உலகிற்கு அளித்தவன் இந்து!

வேதத்தில் துதிக் குத் துதி பசுவும் குதிரையும் பாய்ந்தோடும்!

உலகில் எந்த நாட்டு பழைய நூல்களில்ம் இத் தகைய போற்றுதலைக் காண இயலவில்லை.

 

3.டெசிமல் சிஸ்டம்! தசாம்ச முறை

 

மனித குல அறிவியல் முன்னேற்றத்துக்கு, ராக்கெட்டுகள் பறந்ததற்கு, கம்ப்யூட்டார்கள் செயல்பாட்டூகு எல்லாம் அடித்தளமிட்டது தசாம்ச முறை! இந்துக்கள் உலக மஹா மேதாவிகள்! அதி சூர கணிதப் புலிகள்! வேதத்தில் துதிக்குத் துதி 100, 1000, 10000, 1000000, கோடி என்று அடுத்தடுத்து வரும்.

உலகம் காணாத விந்தை இது. நாம் இல்லாவிடில் உலகம் விஞ்ஞானத்தில் ஒரு அங்குலம் கூட முன்னேறியிராது.

 

இன்றுவரை உலகில் பசும்பாலோ, பால் பொருட்களோ இல்லாவிடில் மனித இனம் மறு நிமிடமே நோயில் வாடி அழியும்.

 

இந்துக்கள் வாழ்க! வேதங்கள் வெல்க!!

NUMBERS IN SANSKRIT

एकं सत् विप्रा बहुधा वदन्ति

एकम् = 1

दशकम् = 10

शतम् = 100

सहस्रम् = 1000

दशसहस्रम् = 10000

लक्षम् = 100000

दशलक्षम् = 10^6

कोटि = 10^7

अयुतम् = 10^9

1010 से अधिक परिमाण

नियुतम् = 10^11

कंकरणम् = 10^13

विवर्णम् = 10^15

परार्धः = 10^17

निवाहः = 10^19

उत्संगः = 10^21

बहुलम् = 10^23

नागबलः = 10^25

तितिलम्बम् = 10^27

व्यवस्थान – प्रज्ञापतिः = 10^29

हेतुहीलम् = 10^31

कराहुः = 10^33

हेतविन्द्रीयम् = 10^35

सम्पत-लम्भः= 10^37

गणनागतिः= 10^39

निर्वाद्यम्= 10^41

मुद्राबलम्= 10^43

सर्वबलम्= 10^45

विषमग्नागतिः= 10^47

सर्वाग्नः= 10^49

1050 से अधिक परिमाण

विभूतांगम्= 10^51

तल्लाक्षणम्= 10^53

ஏகம் = 1

த³ஸ²கம் = 10

ஸ²தம் = 100

ஸஹஸ்ரம் = 1000

த³ஸ²ஸஹஸ்ரம் = 10000

லக்ஷம் = 100000

த³ஸ²லக்ஷம் = 106

கோடி = 107

அயுதம் = 109

1010 ஸே அதி⁴க பரிமாண

நியுதம் = 1011

கங்கரணம் = 1013

விவர்ணம் = 1015

பரார்த⁴​: = 1017

நிவாஹ​: = 1019

உத்ஸங்க³​: = 1021

ப³ஹுலம் = 1023

நாக³ப³ல​: = 1025

திதிலம்ப³ம் = 1027

வ்யவஸ்தா²ன – ப்ரஜ்ஞாபதி​: = 1029

ஹேதுஹீலம் = 1031

கராஹு​: = 1033

ஹேதவிந்த்³ரீயம் = 1035

ஸம்பத-லம்ப⁴​:= 1037

க³ணனாக³தி​:= 1039

நிர்வாத்³யம்= 1041

முத்³ராப³லம்= 1043

ஸர்வப³லம்= 1045

விஷமக்³னாக³தி​:= 1047

ஸர்வாக்³ன​:= 1049

1050 ஸே அதி⁴க பரிமாண

விபூ⁴தாங்க³ம்= 1051

தல்லாக்ஷணம்= 1053

-Mahabharat according to Kurukkal

एकं पङ्क्तिशतं सहस्रमयुतं लक्षंप्रपूर्वायुतं

कोटिश्चार्बुदकञ्च पद्मकमधो खर्वंनिखर्वं तथा |

बृन्दञ्चैव महासरोजमपरश्शङ्खस्समुद्रोन्तिमो

मद्ध्यञ्चैव वरार्द्ध संज्ञकमिमा संख्यां विदुः पण्डिताः ||1.25

एकं पङ्क्तिशतं सहस्रमयुतं लक्षंप्रपूर्वायुतं

कोटिश्चार्बुदकञ्च पद्मकमधो खर्वंनिखर्वं तथा |

बृन्दञ्चैव महासरोजमपरश्शङ्खस्समुद्रोन्तिमो

मद्ध्यञ्चैव वरार्द्ध संज्ञकमिमा संख्यां विदुः पण्डिताः ||1.25

ekam1

dasam 10

satam 100

sahasram 1000

ayutham10,000

laksham 100000

parapurvayutham10,00,000

koti 10000000

arpudham 100000000

padmakam 1000000000

karvam 10000000000

nikarvam 100000000000

bruntham 1000000000000

mahasarojam 10000000000000

sangam 100 00 00 00 00 00 000

avaramahasanagam

samudram 1 00 00 00 00 00 00 00 00

madhyam

parartham

samnjak imam sankhyaam vidhu: Pandithaa;

–SUBHAM—

மூன்று சொல் மன்னன் கண்ணதாசன்!

k quote3

Compiled by S NAGARAJAN

Article No.1909; Dated 4 June 2015.

Uploaded at London time: 6-22 am

By ச.நாகராஜன

 

மூன்று சொல் முத்துக்கள்

தமிழ் நூல்களில் மூன்று சொற்களில் அமைந்துள்ள சொல்லோவியங்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன. ஒவ்வொரு சொற்றொடரும் ஆழ்ந்த கருத்து. இலக்கிய அழகு, இன்சுவை, உணர்ச்சி வெளிப்பாடு போன்ற பல அம்சங்களை இனிதே தரும்.

கண்ணதாசனின் பாடல்களில் மூன்று சொல் முத்துக்களை எடுங்கள் என்றால் சுலபமாக அப்பாடல்களில் உளத்தைக் கொடுத்தோர் முன்னூறு பாடல்களை மூச்சு விடாமல் சொல்லி விடுவர்.

மொத்தப் பாடல்களையும் எடுத்து வைத்துக் கொண்டு ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் வியப்பு தான் மேலிடுகிறது. நாம் வியக்கிறோம் என்பது ஒரு புறம் இருக்கட்டும், கண்ணதாசனே கண்ணதாசனின் பாடல்களை கடும் விமரிசனத்திற்காகப் பார்த்தாலும் ஆச்சரியம் தான் படுகிறார். (கட்டுரையின் கடைசி பாராவைக் காண்க). அப்படி ஒரு பரந்த களத்தின் அடிப்படையில் அவரது பாடல்கள் எழுந்துள்ளன.

குறளில் மூன்று சொல் முத்துக்கள்

முதலில் குறளில் மூன்று சொல் முத்துக்களைப் பார்ப்போம்.(முழுவதையும் அல்ல, இடம் கருதி சிலவற்றைத் தான்!

செயற்கரிய செய்வார் பெரியர்     குறள்  26

அந்தணர் என்போர் அறவோர்      குறள்  30

அன்றறிவாம் என்னாது அறம்செய்க  குறள்  36

அறத்தான் வருவதே இன்பம்       குறள்  39

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை   குறள்  49

பெண்ணிற் பெருந்தக்க யாவுள?      குறள்  54

தம்பொருள் என்பதம் மக்கள்       குறள்  63

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்   குறள்  71

அன்பின் வழியது உயிர்நிலை    குறள்  80

மறவற்க மாசற்றார் கேண்மை    குறள்  106

நன்றி மறப்பது நன்றன்று     குறள்  108

அடக்கம் அமரருள் உய்க்கும்   குறள்  121

எல்லார்க்கும் நன்றாம் பணிதல்   குறள்  125

யாகாவார் ஆயினும் நாகாக்க   குறள்  127

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை   குறள்  439

அப்பப்பா, ஆழ்ந்த கருத்து மூன்றே சொற்களில்!

k quote1

மஹாகவி பாரதியாரின் மூன்று சொல் முத்துக்கள்

அடுத்து மகாகவி பாரதியாரின் கவிதைகளில் மிகச் சில எடுத்துக்காட்டுக்களைப் பார்ப்போம்.

அன்பென்று கொட்டு முரசே!

பெரிதினும் பெரிது கேள்

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே

வீணையடி நீ எனக்கு

நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!

ஆசை முகம் மறந்துபோச்சே!

மனதில் உறுதி வேண்டும்

பயமெனும் பேய்தனை அடித்தோம்

இப்படி ஏராளமான எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

மூன்று சொல் மன்னன் கண்ணதாசன்

 

இந்த வகையில் கவியரசரின் கவிதைப் பூங்காவில் நுழைவோம்; கண்ணுக்கினிய சில நல்ல மலர்களைப் பார்ப்போம்.

செந்தமிழா எழுந்து வாராயோ – உன்

சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ

அன்பு நெறியிலே அரசாள – இந்த

அகிலமெல்லாம் தமிழர் உறவாட

துன்பங்கள் யாவும் பறந்தோட

தூய மனங்கொண்டு கவிபாட                 படம்: மதுரை வீரன்

தமிழனின் தாய்மொழியைப் பாராட்டி அகில உலக தமிழரை ஒன்று கூட்டி தூய மனம் கொண்டு கவி பாடி துன்பங்கள் யாவும் பறந்தோடச் செய்வோம் என்ற கற்பனையில் உயர்ந்த சிந்தனையைப் பார்க்கலாம்!

துள்ளித் திரிந்த பெண்ணொன்று

துயில் கொண்டதேன் இன்று

தொடர்ந்து பேசும் கிளியொன்று

பேச மறந்ததேன் இன்று                       படம்: காத்திருந்த கண்கள்

அல்லி பூத்த முகத்தினிலே முல்லை பூத்த நகை எங்கே, துள்ளித் திரிந்த பெண்ணொன்று இன்று துயில் கொண்டதேன்? கவிஞர் கேட்கிறார். அவரே பதிலும் சொல்கிறார். அன்னை தந்த சீதனமோ, என்னை வெல்லும் நாடகமோ என்று!

மயக்கம் எனது தாயகம்

மௌனம் எனது தாய்மொழி

கலக்கம் எனது காவியம்  –  நான்

கண்ணீர் வரைந்த ஓவியம்                      படம்: குங்குமம்

Kannadasanlyric2PoonaalPohatumPoda_000

சோகம் ஒலிக்கும் குரலில் கலக்கம் வந்த காரணத்தையும் கவிஞர் கூறி விடுகிறார். நானே எனக்குப் பகையானேன் –என் நாடகத்தில் நான் திரையானேன் என்று.

ஆத்மைவ ஆத்மனோ பந்து: ஆத்மைவ ரிபுஆத்மன: (உனக்கு நீயே நண்பன்; உனக்கு நீயே பகைவன் என்ற கீதையின் கருத்து சாதாரணமாக இங்கு வந்து விழுவதைப் பார்க்கலாம்)

போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடா – இந்த

பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?

போனால் போகட்டும் போடா         படம்: பாலும் பழமும்

வாழ்க்கை கணக்கை சில வரிகளில் போட்டு வாழ்க்கை என்பது வியாபாரம், வரும் ஜனனம் என்பது வரவாகும், அதில், மரணம் என்பது செலவாகும் என்று வரவு செலவு கணக்கை இவ்வளவு கச்சிதமாக மூன்று மூன்று சொல் அடுக்குகளில் காண முடிகிறதே! நமக்கும் மேலே ஒருவன், அவன் நாலும் தெரிந்த தலைவன், அவன் தான் அனைத்தையும் இரவல் தந்தவன், அதை இல்லை என்றால் அவன் விடுவானா?

கவிஞரின் ஆணித்தரமான கேள்விகள் எவ்வளவு சிந்தனையைக் கிளப்பி விடுகிறது?

தொட்டால் சுடுவது நெருப்பாகும்

தொடாமல் சுடுவது சிரிப்பாகும்!

தெரிந்தே கெடுப்பது பகையாகும்

தெரியாமல் கெடுப்பது உறவாகும்

படம்: படித்தால் மட்டும் போதுமா – (அண்ணன் காட்டிய வழியம்மா பாடலில்)

எப்படி இருக்கிறது புது வியாக்கியானம்?

பிறக்கும் போதும் அழுகின்றான்

இறக்கும் போதும் அழுகின்றான்

ஒருநாளேனும் கவலை யில்லாமல்

சிரிக்க மறந்தாய் மானிடனே                படம்: கவலை இல்லாத மனிதன்

kanna2

தத்துவப் பாடல்களின் மன்னன் என்பதை நிரூபிக்க எத்தனை பாடல்கள் வேண்டும்?

உள்ளம் என்பது ஆமை – அதில்

உண்மை என்பது ஊமை!

சொல்லில் வருவது பாதி – நெஞ்சில்

தூங்கிக் கிடப்பது நீதி!              படம்: படித்தால் மட்டும் போதுமா

எனக்கே வியப்பு ஏற்படும்!

தன் பாடல் தொகுதி இரண்டாவது பாகத்தின் முன்னுரையில்  3-9-1971 தேதியிட்டு கவியரசர் இப்படி எழுதுகிறார். அது ஒரு சுய விமரிசனம் தான்!

“”இந்தப் பாடல்களை எல்லாம் படித்துப் பார்க்கும் போது எனக்கே கூட வியப்பு ஏற்படும்…….

 

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் , உலகத்து நடப்பிலும் எந்த நிகழ்ச்சிகள் நேர்ந்தாலும், அங்கே என் பாடலொன்று எதிரொலிக்கும்.”

உண்மை தானே! கண்ணதாசன் பாடல் இல்லாத வாழ்க்கை நிகழ்வுகளே இருக்காது தானே.

மூன்று சொற்களிலேயே முடிப்போம்!

கண்ணதாசன் பாடலின்றி இருக்காது!

                                     ***********