எதிர்காலத்தை அறிய உதவும் அற்புத மூலிகை (Post No.10,471)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,471

Date uploaded in London – –   21 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அதர்வண வேதத்தில் ஏராளமான மாயா ஜால , இந்திர ஜால விஷயங்கள் உள்ளன. ஒரு மந்திரம் மனிதனை எவருக்கும் தெரியாமல் இருக்க வைக்கும் வித்தை பற்றிப் பேசுகிறது இன்னொரு மந்திரமோ இந்த மூலிகை கையில் இருந்தால் வருங்கலத்தை உறைக்க முடியும் என்கிறது. ஆனால் என்ன ஏமாற்றம். மூ லிகையின் பெயரைச் சொல்லாமல் அது, இது என்று மட்டுமே ரிஷி பாடுகிறார். இருந்தபோதிலும் இதில் பல சுவையான விஷயங்கள் தெரிய வருகின்றன.

இந்த மூலிகைப் பாடல் அதர்வண வேதத்தின் நாலாவது காண்டத்தில் 20ஆவது பாடலாக (சூக்தம் 122) அமைந்துள்ளது. தலைப்பு ஓஷதி

முதல் மந்திரமே விடுகதை போல அமைந்துள்ளது.

அவன் இங்கு பார்க்கிறான்; அவன் பின்னால்  பார்க்கிறான்;அவன் தூரம்  பார்க்கிறான்;அவன்  பார்க்கிறான்;வானத்தை பூமியை வானத்துக்கு அப்பாலும் பார்க்கிறான் ஓ, தேவியே அவன் பார்க்கிறான்”.

வெளிநாட்டார்  விளக்கம்

இந்தப் பாடலுக்கு ரால்ப் டி  எச் கிரிப்பித் RALPH T H GRIFFITH  சில விளக்கக் குறிப்புகளை அளித்துள்ளார்.

முதல் மந்திரத்தில் வரும் “அவன்” என்பது ‘சதாபுஷ்பம்’ என்னும் மூலிகை என்று பழைய வியாக்கியனக்காரர்களில் ஒருவரான தாரிலர் (DAARILA) சொல்கிறார்; ஆனால் அது என்ன மூலிகை என்று எவருக்கும் தெரியாது. ஆயிரக் கணக்கான இடங்களில் குறிப்பிடப்படும் சோம ரஸ மூலிகையே என்ன என்று எவருக்கும் தெரியாத பொழுது ‘சதா புஷ்பம்’ பற்றித் தெரியாததில் வியப்பில்லை!

ஆங்கிலத்தில் புகழ்பெற்ற (Milton’s Paradise Lost) சொர்க்க இழப்பு கவிதையை எழுதியவர் மில்டன் என்ற புலவர் ஆவார்.  இங்கிலாந்தில் ஐ பிரைட் EYE BRIGHT / கண் ஒளி என்ற ஒரு மூலிகை இருப்பதாகவும் அதை வேறொன்றுடன் கலந்து மைக்கேல் (Arhangel Michael) என்ற தேவதை ஆதாமின் கண்களில் விட்டதாகவும் இதனால் ADAM ஆதாம் எதிர்காலத்தைப் பார்க்கும் வல்லமை பெற்றதாகவும் விளக்கம் சொல்கிறார்கள்.

வள்ளுவர் பல இடங்களில் சொல்லும் ‘அனிச்சம்’ என்னும் மலரையோ, மயிர் நீப்பின் வாழாக் கவரி மானையோ  இதுவரை நாம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும் !

ஆனால் இது உண்மையா ? கப்சாவா என்றால் உண்மை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இந்துக்களிடம் பவிஷ்ய புராணம் உளது. அதில் எதிர் காலம் பற்றி உளது. கலியுகத்தில் என்ன என்ன நடக்கும் என்பதை பல புராணங்களும் மஹாபாரதமும் பேசுகின்றன. அது பற்றி இங்கு முன்னரே எழுதியுள்ளேன்.

   மேலும் பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா ,  அர்ஜுனனுக்கு எதிர்காலத்தைக் காட்டுவதையும் பார்க்கிறோம். அர்ஜுனன் , தனது எதிரிகளை வீழ்த்துவதற்கு முன்னரே ‘காலம் TIME என்னும் சக்தி அவர்களைக் கப்ளிகரம் செய்து Blackhole பிளாக் ஹோல் என்னும் கருந் துளைக்குள் இழுப்பதைக் கண்ணன் காட்டுகிறான். அது மட்டுமல்ல. சுந்தர மூர்த்தி சுவாமிகள், சம்பந்தர் போன்றோர் காலத்திற்குள் பின்னோக்கிச் (Time Machine) சென்று மாண்ட இருவரை மீட்டு வந்த கதையும் பெரிய புராணத்தில் விரிவாகப் பேசப்படுகிறது அவர்கள் இருவரும் திரும்பி வந்த காலத்தில் என்ன வயது ஆகி இருக்குமோ அந்த வயதில் திரும்பி வந்ததையும் சேக்கிழார் பெருமான் செப்புகிறார்.

இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது; நாம் அறியாத இன்னொரு பிரபஞ்சம் (Parallel Universe) இருக்கிறது. அங்கு எல்லாம் முன்னரே நடந்த கதையாக பதிவாகிறது. வெகு அபூர்வமாக ஒரு சிலர் விஷயத்தில் மட்டும் ஞானிகள் தலையிட்டு காலச் சக்கரத்தைத் திருப்பி விடுகிறார்கள். ஆனால் எல்லார் விஷயத்திலும் இதைச் செய்வதில்லை!

மந்திர மூலிகை விஷயங்களை வெளிப்படையாக சொல்லாமல் ‘அவன்’ , ‘அது’ என்று பேசவும் காரணம் உளது. ஒரு கெட்டவன் போதும்!உலகையே அழிப்பதற்கு ! அவர்கள் கைகளில் இத்தகைய மூலிகை கிடைத்தால் ஆபத்து. மாயா ஜால சக்தி பெறும் பல சாது சந்யாசிகள் அவர்களுக்குக் கிடைத்த அபூர்வ சக்திகளை துஷ் பிரயோகம் செய்து சிறையில் அவதிப்படும் செய்திகளையும் நாம் பத்திரிக்கையில் படிக்கிறோம்  இதனால்தான் அவர்கள் வெளிப்படையாக சில ரகசியங்களை சொல்லுவதில்லை.

இதே துதியில் மேலும் சில அபூர்வ விஷயங்கள் வருகின்றன.

மூன்று பூமிகள், மூன்று வானங்களைப் பார்க்கும் சக்தி பற்றி Mantra No.2 மந்திரம் இரண்டு பேசுகிறது

இதற்கெல்லாம் கிரிப்பித் Griffith  போன்றோரால் சரியான விளக்கம் சொல்ல முடியவில்லை.

கருடன் பற்றி வரும் மந்திரத்தை சூரியன் என்று சொல்கின்றனர். கருடன் போல சூரியனும் பார்க்க முடியும் என்று விளக்குகின்றனர். அது தவறாக இருக்கலாம். ஏனெனில் இன்னொரு மந்திரத்தில் கருடனுக்கு மூலிகையைக் கண்டு பிடிக்கும் அபூர்வ சக்தி உண்டு என்று சொல்லுகின்னர் . ரிக் வேதத்தில் 20, 30 இடங்களில் கருடன் அல்லது பருந் து  அபூர்வ (Soma) மூலிகையைக் கொண்டுவந்து தருவதாக முனிவர்கள் பாடிவைத்துள்ளனர்.

நாலாவது மந்திரத்தில் 1000 கண்ணுள்ள இறைவனே என் வலது கையில் அந்த மூலிகையை வைத்தால் நான் ஆரியர் , சூத்திரர் அனைவரையும்  காணமுடியும் என்கிறார் ரிஷி. 1000 கண் கடவுள் என்பது பிற்காலத்தில் இந்திரனை மட்டும் குறித்தாலும் அதற்கு முன், ல்லா வேத கால கடவுளருக்கும் அந்த அடை மொழி வருகிறது. வலதின் சிறப்பை தமிழர்கள் நன்கு அறிவர். வலது புறம் விழும் இரையை மட்டுமே புலி சாப்பிடும் என்று சங்க இலக்கிய புலவர்கள் பாடுகின்றனர். “மண மகளே!  மண மகளே!! உன் வலது காலை எடுத்து வைத்து (வீட்டுக்குள்) வா” என்று பாடுகிறோம்.; ஆரியர் முதல் சூத்திரர் வரை என்பது மனிதர்கள் எல்லோரையும் என்ற பொருளில் கையாளப்படுகிறது. சம் பந்தர் “வாழ்க அந்தணர் , வானவர் ஆனினம்” என்றால் பார்ப்பனர், பசு மட்டும் வாழ்கவே என்று பொருள் அல்ல; அவர்கள் முதலாகவுள்ள மனிதர்கள், பிராணிகள் எல்லாரும் வாழ்க என்றே பொருள்.

கடைசி  4 மந்திரங்களில் பேய் பிசாசுகளை விரட்டும் சக்தியும் இந்த   மூலிகைக்கு  உண்டு என்று ரிஷி பாடுகிறார் . இடையே இரண்டு உவமைகளும் வருகின்றன . “களைப்படைந்த மண மகள்  படுக்கையை நாடுவது போல”, என்றும் “நான்கு கண் நாய்” பற்றியும் பாடுகிறார். நான்கு கண் நாய் என்பது யமன் கொண்டுவரும் இரண்டு நாய்களின்(2+2=4)  கண்கள் என்று ரிக் வேதம் பாடுகிறது.

ஆக மொத்தத்தில் நிறைய விஷயங்களை இக்கவிதை காட்டுகிறது.

இதை கற்பனை, கப்ஸா என்று யாராவது கருதினால் விஞ்ஞான புனைக் கதைகள் எழுதுவதில் வேத கால முனிவர்களே முன்னோடிகள் என்று ஒப்புக்கொள்ளவேண்டும். இன்று வெளிநாடுகளில் இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான புஸ்தகங்கள் மில்லியன் கணக்கில் விற்பனையாகின்றன.

–சுபம் —

tags- வருங்காலம், எதிர்காலம், மூலிகை, அதர்வண வேதம் , காட்டும் , மில்டன்

பிராணிகள் கண்டுபிடித்த மூலிகைகள் ; வேதம் சொல்லும் அதிசயச் செய்தி (Post No.10,456)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,456
Date uploaded in London – – 17 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

வேத கால முனிவர்கள் எப்படி மூலிகைகள் பற்றி அறிந்தனர்? சில விஷயங்களை உள்ளுணர்வினால், மந்திர சக்தியால் அறிந்திருக்கலாம்; இன்னும் சில வகைகளின் சக்தியை சோதனை முறையில் அறிந்திருக்கலாம். மேலும் சில மூலிகைகைகளை பிராணிகளின் செயல்பாட்டைப் பார்த்து அறிந்தனர். இந்த அதிசய விஷயத்தை அதர்வண வேத மந்திரத்தில் காண முடிகிறது.

தமிழில் ஒரு பழமொழி உண்டு .
‘ஆயிரம் பேரைக் கண்டவனே வைத்தியன்’; அதாவது அனுபவம் மூலம் அறிவது. இதை ஆங்கிலத்தில் TRIAL AND ERROR METHOD என்பர். இன்றும் கூட உலகப் புகழ் பெற்ற மருந்துக் கம்பெனிகள் முதலில் எலி களுக்கும் பின்னர் குரங்குகளுக்கும் புதிய மருந்துகளைக் கொடுத்துப் பார்த்துவிட்டுபி பின்னர் மனிதர்களுக்கு, அவர்கள் அனுமதியுடன் சோ தனை முறையில் கொடுத்துப் பரீட்சித்துப் பார்கின்றனர். வெற்றி பெற்றால்தான் பின்னர் மருந்துக்கு கடைகளில் விற்கிறார்கள். இதற்கு அனுமதி தருவதற்கு பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன .
அந்தக் காலத்தில் இப்படி வசதிகள் இல்லாவிடினும் நம் முனிவர்களும் சித்தர்களும் பறவைகளையும் மிருகங்களையும் பார்த்தனர். மயில், கருடன், கீரி ஆகியன விஷப் பாம்பைக் கடித்துக் குதறிய பின்னரும் எப்படி உயிர் வாழ்கின்றன என்று கண்டனர்; அவை விசேஷ மூலிகைகளை உண்ணுவதைக் கண்டுபிடித்தனர். அதை நமக்கும் எழுதிவிட்டுப் பாடிவிட்டுச் சென்றனர். ரிக் வேத சூக்தம் ஒன்று 107 மூலிகைகள் என்று ஒரு எண்ணைக் குறிப்பிடுகிறது. துரதிருஷ்டவசமாக அந்த மூலிகைகளின் பட்டியலைக் கொடுக்கவில்லை. ஆனால் அதர்வண வேதத்தில் நிறைய மூலிகைகளின் பெயர்கள் வருகின்றன. அவற்றைத் தொகுத்துப் பிற்கால சரகர், சுஸ்ருதர் போன்றோரின் நூல்களுடன் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்தல் அவசியம் .
பாம்பு- கீரி சண்டையில் , கீரி வெற்றி பெற அருகம்புல் எப்படி உதவுகிறது என்று ஏற்கனவே எழுதியுள்ளேன் (கீழேயுள்ள இணைப்புகளைக் காண்க)

அதர்வண வேத சூக்தம் ஒன்று பாம்பு, கீரி , காட்டுப் பன்றி ஆகியன எப்படி மூலிகைகளை கண்டு பிடிக்கின்றன என்று பாடியுள்ளார். இயற்கையை நன்கு கவனித்த அவர்கள் பல மூலிகைகளுக்கு கருட கிழங்கு போன்ற பெயர்களையும் சூட்டியுள்ளனர்.
xxx


அதர்வண எட்டாம் காண்டம் சூக்தம் 440 ல் உள்ள அதிசய விஷ்யங்களைக் காண்போம்

இந்த சூக்தத்தின் தலைப்பே ஒளஷதங்கள் !
இந்த துதியில் 28 மந்திரங்கள் உள்ளன.
28 மந்திர துதியில் ,23ஆவது மந்திரம்

“வராஹம் (பன்றி) செடியை அறியும் ; கீரி சிகிச்சைச் செடியை அறியும் ; கந்தர்வர்களும், சர்ப்பங்களும் அறியும் மூலிகைகளை நான், இப்புருஷனின் துணைக்காக அழைக்கிறேன்”

24 ஆவது மந்திரம் “கருடன் அறியும் ஆங்கிரஸ ஒளஷதிகளையும் , சுபர்ணன் அறியும் தேவ சிகிச்சைகளையும் பறவைகள், ஹம்ஸங்கள் (அன்னம்), வன விலங்குகள் அறியும் அனைத்தையும் இப்புருஷனின் துணைக்காக அழைக்கிறேன்” .
25 ஆவது மந்திரம் ,
“ஆடு மாடுகள் புசிக்கும் மூலிகைகளை துணைக்கு அழைக்கிறேன்” —
என்று சொல்வதிலிருந்து ரிஷி முனிவர் எந்த அளவுக்கு பறவைகள், மிருக்கங்களைக் கவனித்து இருக்கிறார்கள் என்பது புலப்படும்.
இது நோய்வாய்ப்பட்ட ஒருவரைக் காப்பதற்காக பாடப்பட்டது போலத் தோன்றினாலும் மூலிகைகைகளின் பெருமையையே அதிகமாகப் பேசுகிறது!
xxx


முதல் மந்திரத்தில் ரிஷி, பல வண்ண மூலிகைகளைச் செப்புகிறார்- பழுப்பு, சிவப்பு, பிங்களம் , அழகான , பிரகாசமான மூலிகைகள் – நல்ல பாசிட்டிவ் சொற்கள் Positive Words!
இரண்டாவது மந்திரம், வானத்தை மூலிகையின் தந்தை யாகவும் பூமியைத் தாயாகவும் கடலை (Samudra= Ocean) வேர் ROOT ஆகவும் பாடுகிறது

கடல் என்று வரும் இடம் எல்லாம் அதே நீல நிறம் கொண்ட ஆகாயம் என்று விமர்சகர்கள் சொல்லுகிறார்கள் ; ஆனால் உண்மையான கடல் ஆகவும் இருக்கலாம். ஆராய்வது அவசியம் .
சமுத்ரோ மூலம் = கடல் வேர்
மூன்றாவது மந்திரம், நீரே மருந்து (Water is Medicine) என்று புகழ்கிறது. தினமும் தண்ணீரைப் புகழ்ந்து மூன்று வேளைகளிலும் பிராமணர்கள சந்தியா வந்தனம் செய்கின்றனர். இன்று வரை நீரை அமிர்தம் என்று சொல்லி குடித்து காலை, மதியம் மலையில் கிரியை செய்கிறார்கள். சாப்பட்டைச் சுற்றி மந்திரம் சொல்லி இது அமிர்தமாகட்டும் என்று சாப்பிடுகிறார்கள். திருவள்ளுவரும் இதை அப்படியே அமிர்தம் என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லைச் சொல்லிப் போற்றுகிறார் .
நாலாவது மந்திரம், மூலிகைகளின் தோற்றம் குணத்தைச் சொல்லி புகழ்கிறது
ஐந்தாவது மந்திரம், உங்கள் சக்தியால் நான் இவனைக் குணப்படுத்தப் போகிறேன் என்று அறிவிக்கிறது ; இன்றும் கூட டாக்டர்கள் கொடுக்கும் மருந்தைவிட அவர் சொல்லும் வாசகங்களையே நாம் நம்புகிறோம்; அவை நமக்கு நம்பிக்கை அளிக்கிறது அது போல இங்கும் டாக்டர் பாடுகிறார்.
ஆறாவது மந்திரம், தேன் மிகுந்த மலர்களை உடைய ‘அருந்ததி’ என்ற மூலிகையைக் குறிப்பிடுகிறது; இதன் அடிக்குறிப்பு இதை சிலாசி SILACHI என்ற பெயர் கொண்டபடரும் கொ டி வகைத் தாவரம் என்று சொல்லுகிறது. முந்திய துதிகளிலும் இது ப ற்றி வந் துள்ளது
முதல் முதலில் நாலாவது காண்டத்தில் ‘அருந்ததி’ பற்றி வருகிறது; இது உடைந்த எலும்பைக் குணப்படுத்த உதவக்கூடியது. இது கொடி வகைத் தாவரம் .ஆனால் என்ன தாவரம் என்று தெரியவில்லை என்று எழுதியுள்ளனர்

மந்திரம் 9-ல், அவகா AVAKAA என்ற தாவரம் பற்றிய குறிப்பு வருகிறது . இது சதுப்பு நிலத்தில் வளரும் புல் வகை. தாவரவியல் பெயர் ப்ளிக்ஸ்சா ஆக்டன்ட்ரா BLYXA OCTANDRA.
மந்திரம் 12, ஒரு தாவரத்தின் எல்லாப் பகுதிகளும் தேன் மயமானது என்று வருணிக்கிறது ;

மந்திரம் 13ல் ஆயிரம் இலைகளுள்ள தாவரம் என்னைக் காக்கட்டும் என்று சொல்லுவது பலவகை மூலிகைகள் பயன்பாட்டில் இருந்ததைக் காட்டுகிறது .
TIGER AMULET
மந்திரம் 14, புலி தாயத்து பற்றியது (PLEASE READ MY ARTICLE POSTED EARLIER TODAY)
மந்திரம் 15, சிங்கத்தின் கர்ஜனையால் நோய்கள் நடுங்கும் என்பது ஒரு உவமை ஆகும். அடுத்த வரியே நோய்கள் மெழுகு போல கரையும் என்கிறது.

மந்திரம் 20, தர்ப்பைப் புல் , அஸ்வத்தம் என்னும் அரச மரம், தாவர அரசன் ஆன சோமம் ஆகியன பற்றிப் பாடுகிறது ; அரச மரக் குச்சிகளையும், தர்ப்பை புல்லையும் இன்று வரை பிராமணர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
28ஆவது மந்திரத்தை கற்பனை எண்கள் என்று வெளிநாட்டார் ஒதுக்கிவிட்டனர். அவர்களுக்கு அர்த்தம் தெரியாத எல்லா எண்களுக்கும் இப்படி கற்பனை எண்கள் (FANCIFUL NUMBERS) என்று முத்திரை குத்திவிட்டனர். 28ஆவது மந்திரம் ,
“பஞ்ச சரம், பத்து சரத்தினின்றும் நான் உன்னை விடுதலை செய்துள்ளேன். யமனது பாசத்தினின்றும், தேவர்களின் எல்லாக் குற்றத்தினின்றும் உன்னை நீக்கியுள்ளேன்” என்று முடிகிறது. ஏதோ ஒரு ஜுரத்தை இப்படி பத்து அம்பு, ஐந்து அம்பு என்று அழைக்கிறார்கள் என்று வியாக்கியானம் செய்வது சரியில்லை என்றே தோன்றுகிறது.
சரக , சுஸ்ருத சம்ஹிதைகளில் வல்லோர் அமர்ந்து ஆராய வேண்டிய விஷயம் இது. 90 நதிகள், 99 நதிகள் என்று வந்த இடங்களுக்கும் இப்படி கற்பனை எண்கள் என்று வெள்ளைக்காரர்கள் சொல்லுவார்கள். 101 என்ற எண்ணை மட்டும், வேதங்கள் துரதிருஷ்ட எண் என்று சொல்லுவதாக எழுதியுளளனர். அங்கு கற்பனை என்ற பதம் வரவில்லை !!!

XXX


MY OLD ARTICLES ON SAME THEME

அருகம்புல் ரகசியங்கள் | Tamil and Vedashttps://tamilandvedas.com › அரு…· Translate this page12 Jul 2013 — அருகம் புல் ரகசியங்களை இந்துக்கள் ஆதியிலேயே அறிந்திருந்தனர். நெல்லும் …You visited this page on 17/12/21.

வையாக்ரோ மணி | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › வ…· Translate this page7 hours ago — வேங்கை | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › வ… … Tamil children were given talismans made up of tiger nails or tiger ..

—subham—

tags- பிராணிகள், மூலிகை, கண்டுபிடிப்பு, அதர்வண வேதம், கீரி , பாம்பு, பன்றி

நூறு எழுத்துக்களில் எத்தனை மூலிகைகள் உள்ளன? (Post No.7631)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7631

Date uploaded in London – 28 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 2822020

ஒவ்வொரு மூலிகைக்கும் துவங்கும்  எழுத்தும் அதற்கான எண்களும் இதோ –

1அதி….. 7.வல்…… 11.திப்….. 15.நா…. 19.கண்….. 27.சிறு….. 33. நெ…… 37.மி…. 40.அரு…. 46.ஆடா….. 50.ஆடு……58.குங்…… 64.குப் …….69. முட…… 76.கீழா….. 81.நில….. 86.பொன்…. 92.கடு….. 97. வி……….

விடை கீழே உளது………………………

Answers

1அதிமதுரம் 7.வல்லாரை 11.திப்பிலி 15.நாயுருவி 19.கண்டங்கத்திரி 27.சிறுவழுதுணை 33. நெருஞ்சி 37.மிளகு 40.அருகம்புல் 46.ஆடாதோடை 50.ஆடுதின்னாப்பாலை, 58.குங்கிலியம் 64.குப்பைமேனி 69. முக்கத்தான் 76.கீழாநெல்லி 81.நிலவேம்பு, 86.பொன்னாங்காணி 92.கடுக்காய், 97. வில்வம்

–subham–

மூலிகைப் போர்! (Post No 2538)

IMG_6701

Written by S Nagarajan

 

Date: 14  February 2016

 

Post No. 2538

 

Time uploaded in London :–  6-57  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

பாக்யா 12-2-2016 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

 

மூலிகைப் போர்!

.நாகராஜன்

 

 

IMG_6703

ஆயுர்வேதத்தில் இருக்கும் பெரிய நன்மை என்னவென்றால் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தவே ஏற்படுத்தாது. பக்க ஆதாயங்களைத் தான் ஏற்படுத்தும்                         – சுப்ரா கிஷன்

                              

கடைசி கடைசியாக, அதிசயமாக நாம் விழித்துக் கொண்டோம். எதில்?  மூலிகைப் போரில்!

பிரம்மாண்டமான இமயமலை வடக்கில் இருக்க விந்தியாசலம், கொல்லி மலை, மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை என்று நம் தேசத்தில் உள்ள மலைகளைச் சார்ந்துள்ள விஸ்தாரமான காடுகள் அபூர்வ மூலிகைகளைக் கொண்டுள்ளன. இந்த மூலிகைகளின் பயன்பாட்டைத் தெரிந்து கொண்டு அவற்றை இன்றும் ப்ழங்குடி மக்கள் சர்வ சாதாரணமாக உப்யோகிக்கின்றனர். பெரிய வியாதிகள் கூட உடனடியாகத் தீருகிறது. வாதம், பித்தம், கபம் ஆகிய திரி தோஷங்களையும் தனி நபருக்கே உரித்தான பிரக்ருதியையும் அடிப்படையாகக் கொண்டது நமது ஆயுர் வேதம்.

 

இதை நமது விஞ்ஞானிகள் முதல் முறையாக ஆராய்ந்து அதன் அருமை பெருமைகளைக் கண்டுபிடித்து உரைத்துள்ளனர்.

ஆனால் நமக்கு முன்பாகவே விழித்துக் கொண்ட சீனா கன்ஃப்யூசியஸ் கூறிய நெறிகளின் படி மூலிகை ஆராய்ச்சியில் இறங்கி திபெத்தில் உள்ள அரிய பெரிய மூலிகைகளை இனம் கண்டு அதிலிருந்து பல்வேறு மருந்துகளைத் தயார் செய்து வருகிறது. உலகின் பிரம்மாண்டமான மருந்து உற்பத்தி மற்றும் விற்பனை சந்தையில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இந்த மூலிகைப் போரை சீனா ஆரம்பித்துள்ளது.

அமெரிக்காவோ வெளியில் அல்லோபதி என்று சொன்னாலும் மூலிகை மற்றும் தாவரங்களிலிருந்தே உயிர்காக்கும் மருந்துகளைத் தயாரிக்கிறது.

 

1820ஆம் ஆண்டு இரண்டு பிரெஞ்சு ஆய்வாளர்கள் மூலிகையிலிருந்து மலேரியாவைப் போக்கும் கொய்னா மாத்திரையைக் கண்டுபிடித்ததிலிருந்து இந்த மூலிகை வேட்டை ஆரம்பித்தது. சரக சம்ஹிதாவில் சரக முனிவர் கூறிய அற்புதமான சர்ப்பகந்தியை நாம் விட்டு விட அமெரிக்கா அதை எடுத்துக் கொண்டது. அதை உபயோகித்து,  பன்னாட்டு மருந்து நிறுவனமான சிபா-கெய்கி  ரெஸர்பைன் (Reserpine) மாத்திரையைக் கண்டுபிடித்து பெரும்புகழைப் பெற்றது. மஞ்சளை அமெரிக்கா பேடண்ட் எடுத்த கதையையும் நாம் அறிவோம்.

 

2009ஆம் ஆண்டு சீனா ஹார்வர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து மூலிகைகளிலிருந்து மருந்துகளைத் தயாரிக்கும் உயர்தர உத்திகளை வகுத்துக் கொண்டது.

இமயமலைப் பகுதியை முற்றிலுமாக ஆராய்ந்து அங்கிருக்கும் அபூர்வ மூலிககைகளை இனம் கண்டு உயர்தர மருந்துகளை சீனா தயாரிக்கும் வேகத்தைப் பார்த்தால் மூலிகைப் போரில் அது வெற்றி பெற்று விடுமோ என்ற பயம் ஏற்படுவதாக நமது விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

இமயமலைப் பகுதியில் கங்கோத்ரி யமுனோத்ரி என கங்கையும் யமுனையும் உருவாகும் பகுதிகளில் அற்புதமான மூலிகை வளம் உள்ளது.

இங்குள்ள துரோணகிரியின் அருகிலே தான் சஞசீவனி மூலிகை உள்ள் சஞ்சீவனி பர்வதம் உள்ளது.

 

லக்ஷ்மணனைக் காப்பாற்ற ஹநுமார் சஞ்சீவனி மூலிகையை எடுக்க வந்த பந்தர் பூஞ்ச் பகுதியில் பங்குனி மாதத்தில் ஒரே ஒரு குரங்கு மட்டும் வருகிறது. ஹரித்வார் வழியாக வரும் அந்தக் குரங்கை தரிசிக்க யாத்ரீகர்கள் கூட்டம் கூட்டமாகக் காத்திருப்பர். பலரும் தரிசிக்கின்றனர். ஒரு வருடம் மலை உச்சியில் வசிக்கும் அந்தக் குரங்கு அடுத்த குரங்கு வந்தவுடன் மலையை விட்டு இறங்கி விடும். இமயமலை தரும் நூற்றுக் கணக்கான அபூர்வங்களில் இதுவும் ஒன்று!

 

உயிரை மீட்டுத் தரும் சஞ்சீவனி மூலிகை உள்ளிட்ட ஏராளமான மூலிகைகளின் பெயரை சரகர் குறிப்பிடுகிறார்.  உயிரைக் கொல்லும் வியாதியான கான்ஸருக்கு வின்ப்ளாஸ்டைன் (Vinblastiine), மற்றும் வின்கிறிஸ்டைன்(Vincristine) ஆகிய மருந்துகள் மூலிகையிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன.

 

இந்திய அரசின் நிறுவனமான  சென்ட்ரல் ட்ரக் ரிஸர்ச் இன்ஸ்டிடியூட் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் குக்குள் மூலிகையிலிருந்து குக்குளிபிட் மருந்தை 1986இல் தயாரித்தது குறிப்பிடத் தகுந்தது.

 

இந்த வகையில் நமது ஆராய்ச்சிகள் தீவிரமடைந்துள்ளன. ஹைதராபாத்தைச் சேர்ந்த சென்டர் ஃபார் செல்லுலர் அண்ட் மாலிகுலர் பயாலஜியைச் (Centre for Cellular and Molecular Biology)  சேர்ந்த விஞ்ஞானிகள் ஆயுர்வேதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும் மனித அமைப்பு சரிதானா என்ற சோதனையில் ஈடுபட்டனர். இதற்காக  20 வயதிலிருந்து 40 வயது வரை உள்ள ஆரோக்கியமான ஆண்கள் 3416 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த நிறுவனம் ஆய்வை ஆரம்பித்தது. இறுதியில் வாத, பித்த, கபம் ஆகிய மூன்று தோஷங்களில் ஏதேனும் ஒரு தோஷம் 60 சதவிகிதத்திற்கு மேலாக உள்ள 262 பேர்களை தேர்ந்தெடுத்தது.

IMG_6704 - Copy

இவர்களின் மீது மரபணு, புள்ளியியல் அடிப்படையில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1.2கோடி ரூபாய் செலவில் ஆறு ஆண்டுகள் செய்யப்பட்ட இந்த ஆய்வு சமீபத்தில் 2015 வருட முடிவில் முடிந்து விட்டது.

இதன் முடிவுகள் ஆச்சரியமூட்டும் விதமாக நமது ஆயுர்வேத கொள்கைகளை உறுதி செய்கிறது!

 

இந்த ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட விஞ்ஞானி டாக்டர் குமாரசாமி தங்கராஜ் தனது குழுவினர் மரபணுவில் 52 மாறுபாடுகளைக் கண்டறிந்துள்ளனர் என்று தெரிவிக்கிறார். இந்த ஆராய்ச்சி மேலும் நடைபெற்றால் மூன்று தோஷங்களின் உட்பிரிவுகளையும் கண்டு பிடிக்க முடியும். அப்போது ஒவ்வொரு தனி நபருக்கும் உரிய தனித் தனி சிகிச்சை முறையை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

 

இந்திய அறிவியல் இதழ்களில் இடம் பெற்று விட்ட இந்த ஆராய்ச்சி மூலிகைப் போரில் இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை ஊக்குவிக்கிறது.

தொன்மமும் நம்பிக்கையும் ஒரு புறம் இருக்க அறிவியல் ரீதியாக ஆராய்ந்து அவை உறுதிப்படுத்தப் படும் போது வரும் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாதல்லவா!

 

ருத்ரமூலிகா, சஞ்சீவனி, சர்ப்பகந்தி உள்ளிட்ட அபூர்வ மூலிகைகளை இந்திய விஞ்ஞானிகள் இனம் கண்டு ஆய்வு நடத்தினால் புதியதோர் வியாதியில்லா உலகைப் படைக்க இந்திய விஞ்ஞானிகள் காரணமாகி விடுவார்கள். புராதனமான அறிவும் நவீன அறிவியலும் ஒன்றிணைந்தால் இந்தியா, ‘மூலிகை நாடு’ என்ற உயரிய அந்தஸ்தைப் பெற்று விடும்!

அந்த நாள் விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

பிரான்ஸை சேர்ந்த பிரபல் விலங்கியல் அறிஞரும் இயற்கையியலருமான (Zoologist and Naturalist)  ஜார்ஜ் குவியே         ( Georges Cuvier 1769-1832) ஒரு விநாடி கூட நேரத்தை வீணாக்க மாட்டார்.  உலகில் உள்ள சகல விதமான மிருகங்கள், பறவையினங்கள் உள்ளிட்ட உயிரினங்களைப் பற்றி அவருக்கு அத்துபடி. அந்த விவரங்களை எல்லாம் தனது அறையில் அவர் சேகரித்து வைத்திருந்தார்.

 

தன் வீட்டிற்குள் வந்து அநாவசியமாக யாரேனும் நேரத்தை வீணடிப்பது அவருக்கு அறவே பிடிக்காது. பிரபலமான ஒரு கனவான் அவரை மரியாதை நிமித்தம் சந்திக்க வருவார். ஒருமுறை அதைப் பற்றிக் கூறுகையில், “ அவர் வருவது ஒருவருக்கொருவர் முகமன் கூறிக் கொள்ள; அவ்வளவு தான்! யாராவது வந்து இன்று மழை பெய்யுமா, வெயில் அடிக்குமா என்று என்னிடம் தெரிவிக்கத் தேவையே இல்லை. அவர்கள் கூறுவதை விட எனது தெர்மாமீட்டரும் பாரோமீட்டரும் இன்னும் துல்லியமாக அனைத்தையும் தெரிவிக்கும்.” என்று கூறியவர் தன் அறையைச் சுட்டிக் காட்டி. “இதோ இங்கு இருக்கும் மிருக உலகத்தில் எந்த வகையிலும் சரி, எந்த இனத்திலும் சரி, எப்படி ஆனாலும் சரி என்னை பயமுறுத்தக் கூடிய ஒரு உயிரினமே கிடையாது. ஆனால் வெட்டியாய் நேரத்தைப் போக்கும் சோம்பேறிக்கும் நேரத்தை வீணடிக்கும் வீணரையும் கண்டால் நான் மிகவும் பயப்படுகிறேன்” என்றார். ஆகவே அவரைச் சந்திப்பவர்கள் ஒரு வினாடி நேரத்தையும் கவனமுடன் கணித்துக் கொள்வார்கள்.

IMG_6707

மேதைகள் அனைவருக்கும் நேரம் என்பது பொன்னைக் காட்டிலும் மதிப்பு மிக்கது. பிரான்ஸ் நாட்டின் சட்ட மேதையும் பிரதான அமைச்சராகவும் விளங்கிய ஹென்றி ப்ராங்கோய்ஸ் டி அகுஸா (Henry Francois de aguesseau 1688-1751)) என்பவர் ஒரு வினாடி நேரத்தையும் வீணாக்க மாட்டார்.

 

தின்சரி உணவு நேரத்தில் மேஜைக்கு சரியான நேரத்தில் அவர் வந்து அமர்வார். ஆனால் அவரது மனைவியோ தினமும் 15 நிமிடம் கழித்தே வருவார். எவ்வளவோ சொல்லியும் அவரது வழக்கம் மாறவில்லை.

 

பார்த்தார் அகுஸா. டைனிங் டேபிளுக்கு ஒரு நோட்டுடன் வந்து அமர ஆரம்பித்தார். 15 வருடங்கள் கழித்து பெரிய நான்கு தொகுதிகளை அவர் வெளியிட்டார். எல்லாம் டைனிங் டேபிள் நோட்புக்கில் எழுதிய நூல் தான்! அது பல பதிப்புகளைக் கண்டு பெரும் புகழை அவருக்குப் பெற்றுத் தந்தது.

 

எல்லா மேதைகளும் முதலில் மற்றவருக்குக் கற்றுத் தரும் முதல் பாடம்: நேரத்தை வீணாக்காதே என்பது தான்!

IMG_6708

*******