100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்! -1(Post No.10,556)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,556
Date uploaded in London – – 13 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹெல்த்கேர் ஜனவரி 2022 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.
100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்! -1
ச.நாகராஜன்


இந்த வேக யுகத்தில் மூளை ஆற்றலை மிக அதிகமாகப் பயன்படுத்தி உடனுக்குடன் பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. நவீன் சாதனங்கள் ஒரு புறம், அன்றாடம் வளர்ந்து வரும் பல அறிவியல் கலைகள் என்று மறு புறம், குழந்தைகளானாலும் சரி, முதியோர்களானாலும் சரி மூளை ஆற்றலைப் பயன்படுத்தாமல் வாழவே முடியாத சூழ்நிலை.


ஆனால் பயப்படத் தேவை இல்லை. மூளை ஆற்றலைப் பயன்படுத்த நூறு வழிகள் உள்ளன. உங்களுக்குப் பிடித்த வழிகளை எல்லாம் தேர்ந்தெடுத்து அவற்றை உங்களுக்கு உகந்த நேரத்தில் பயன்படுத்தி மூளை ஆற்றலை முழுதுமாகப் பெற்று உலகில் வெற்றிகரமான வாழ்க்கையை வாழலாம்.


இதோ நூறு வழிகள் :-


உலகில் உள்ள தலையாய ஆய்வு நிறுவனங்கள் இந்திய யோகாவின் பயனைக் கண்டு பிரமிக்கின்றன. ஹார்வர்டு, யேல், மசாசூசெட்ஸ் ஆகிய இடங்களில் உள்ள ஆய்வகங்கள் தியானத்தினால் மூளையின் அளவு பெரிதாகிறது என்று கண்டு பிடித்துள்ளன. கவனத்தையும் புலன்களின் உணர்வைச் செயல்படுத்தும் மூளைப் பகுதிகளின் கனம் தியானம் செய்வோர்களிடம் கூடுகிறது என்பதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன. உங்களின் மன அழுத்தத்தைப் போக்கி உங்களை நிதானமாக எப்போதும் வைக்க வல்லதும் தியானமே. ஆகவே தியானத்தை மேற்கொள்ளுங்கள்!
ஒரு சுலபமான வழி படிப்பது. ஆனால் யாரும் இதை அவ்வளவாகச் செயல்படுத்துவதில்லை. நீங்கள் படிக்கும் போது மூளையானது தகவலை ஆய்ந்து நடைமுறைப்படுத்தி ஒரு புதிய நியூரான் வழியை உண்டாக்குகிறது. தகவலைப் புரிந்து கொள்ளச் செய்கிறது. இதனால் அறிவு கூடுகிறது. புதிய தகவல்களைப் பெற முனைப்புடன் ஈடுபடுங்கள்; அறிவை அதிகமதிகம் பெறுங்கள். இதற்கு சுலபமான எளிய வழி படிப்பது தான்! ஆகவே படியுங்கள்!!


கேள்வி கேளுங்கள் : எந்த மேதையை எடுத்துக் கொண்டாலும் அவர் கேள்வி கேட்டுக் கேட்டு அறிவைக் கூர்மைப் படுத்திக் கொண்டதைக் காணலாம். தனக்குப் புரியாத எதையும் நன்கு அறிந்து கொள்ள அவர்கள் கேள்வி கேட்கத் தயங்குவதே இல்லை. நீங்கள் கேள்வி கேட்கும் போது ஒரு பிரச்சினைக்கான விடையைக் காணத் துடிக்கிறீர்கள். நீங்கள் சிந்திக்கத் தொடங்குகிறீர்கள். சிந்திப்பது என்பது மூளை ஆற்றலைக் கூட்டுவதற்கான சிறந்த பயிற்சி! ஆகவே கேள்விகளைக் கேளுங்கள்.
இசையை அனுபவியுங்கள் : இசைப் பிரியராக இல்லாத ஒருவரை உலகில் காண்பது மிகவும் அரிது. இசையைக் கேட்கும் போது மூளை ஆற்றல் கூடுவதையும் வாக்கு வன்மை கூடி சரளமாகப் பேச முடிவதையும் ஆய்வுகள் கண்டுள்ளன. குறிப்பாக கரோனரி ஆர்டிரி வியாதி (Coronary artery disease) உள்ளவர்கள் தங்களுக்குப் பிடித்த கர்நாடக, ஹிந்துஸ்தானி, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட திரைப்படப் பாடல்களைக் கேட்டு அமைதி பெறலாம். வாக்கு வன்மை இரட்டிப்பாகக் கூடுவதை ஆய்வுகள் நிரூபிக்கும் போது வியப்பு தான் அடைய வேண்டியிருக்கிறது. இசை கேளுங்கள்!


கற்றுக் கொண்டே இருங்கள் : ஒரு விஷயத்தைக் கற்கும் போது நியூரான்கள் மற்றும் அவற்றின் இடையே உள்ள இணைப்புகள் ஆகியவற்றின் அளவும் அமைப்பும் மாறுகின்றன. படிப்பதால் மட்டும் கற்க முடியும் என்பதில்லை. புதிய இடங்களுக்குப் போவது, ஒரு புதிய மொழியை அறிவது, ஒரு புதிய இசையைக் கற்று நாமே பாடுவது, ஒரு இசைக் கருவியைக் கற்பது, ஏன் இணைய தளத்தில் ஒரு புதிய தகவலைத் தேடுவது இவை எல்லாமே கற்பதற்கான வழிகள் தாம்!


நண்பர்களைப் பெறுங்கள். மனிதர்கள் கூட்டு சமூகத்தால் வாழ்பவர்கள். தனியாக ஒருவரால் வாழவே முடியாது. உறவுகள் மூளையை மேம்படுத்தும். மற்றவர்களுடன் ஊடாடி மகிழ்வது, உண்மையிலேயே மூளைக்கான சிறந்த பயிற்சி. நண்பனில்லா மனிதன் பாழ்!
மன அழுத்தத்தைக் குறையுங்கள். அது தான் மனிதனின் முதல் எதிரி. தொடர்ந்து மன அழுத்தம் இருந்தால் அது மூளை செல்களைப் பாதிக்கிறது. நினைவாற்றல் திறன் குறைகிறது. ஆகவே வாழ்க்கையை லகுவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
சிரித்து மகிழுங்கள். சிரிப்பே சிறந்த மருந்து என்ற அனுபவ மொழி அற்புதமான உண்மை. அது மூளைக்கும் நினைவாற்றலுக்கும், உடலுக்கும் அற்புதமாகப் பொருந்தும். ஜோக்குகளும், பஞ்ச் டயலாக் வரிகளும் மூளையைக் கற்கச் செய்கிறது; படைப்பாற்றல் திறனைக் கூட்டுவிக்கிறது.


எதையும் நேர்த்தியாக வைத்திருங்கள் : இந்தியரிடம் இருக்கும் மகத்தான குறை எதையும் நேர்த்தியாக நிர்வகிக்காமல் கன்னா பின்னாவென்று அலங்கோலமாக வைத்திருப்பது தான். எதிலும் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும். இது மூளைச் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. நினைவாற்றலைக் கூட்டுகிறது. விஷயங்களை எளிதாக்குகிறது. படபடப்பைத் தவிர்க்கிறது. டெஸ்கிலிருந்து மட்டும் குப்பைகளை அகற்ற வேண்டாம். மூளையிலிருந்தும் அனாவசிய விஷயங்களைத் தேக்காமல் அகற்றி விடுங்கள்.


பகல் கனவு காணுங்கள் : பகல் கனவை அனுபவித்துக் காண்பது மூளைக்கான சிறந்த பயன் தரும் ஒன்று. மனம் அங்கும் இங்கும் அலை பாயும் போது பிரச்சினைக்கான தீர்வைக் காணும். இது ஆய்வின் முடிவு. பல மேதைகளின் கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாக இது அமைந்துள்ளது.


கையினால் எழுதுங்கள் : நாம் மறந்து கொண்டிருக்கும் ஒரு பழக்கம் கையினால் எழுதுவது. வார்த்தைகளை எழுதிப் பார்ப்பதால் மூளை ஆற்றல் கூடுகிறது; கற்றல் மேம்படுகிறது. நினைவாற்றல் கூடுகிறது.


மூளை விளையாட்டுக்கள் எனப்படும் ப்ரெய்ன் கேம்ஸ் – Brain Games – பலவற்றை விளையாடுங்கள். மூளையில் உள்ள வெவ்வேறு பகுதிகள் புதிர்களை விடுவிக்கும் போதும், விடுகதைகளை விடுவிக்கும் போதும் புதிய தொடர்புகளைப் பெறுகின்றன; மூளைத் திறனைக் கூர்மையாக்குகின்றன.


கார்ட்டுன் வரையுங்கள். கார்ட்டூன், கேலிப்படம் வரைவது, சில அர்த்தமற்ற கிறுக்கலகளை வரைவது மூளையை ஊக்குவிக்கிறது. நினைவாற்றலை மேம்படுத்துகிறது.


தொலைக்காட்சியைப் பாருங்கள். தொலைக்காட்சியை அளவோடு அதாவது ஒரு நாளைக்கு அரை மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு மிகாமல் பார்ப்பது மூளை ஆற்றலை வளர்க்கிறது. நேரடிப் பேட்டியில் பங்கு கொள்வோரில் பலர் இப்படி தொலைக்காட்சியை அளவோடு பார்ப்பதால் மிகத் திறமையுடன் பதில் அளிக்கின்றனர் என்பதை ஆய்வுகள் கூறுகின்றன.


ஒரே வழியில் தினமும் போகாமல் சற்று வழியை மாற்றிப் பழகுங்கள். இப்படிப் புதிய செயலைச் செய்வதால் டோபமைன் வெளியாகிறது. அது புதிய நியூரான்களின் வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. உங்களை ஊக்குவிக்கிறது.
உங்கள் நகரைப் பற்றி நன்கு அறிந்து அதை ஞாபகப்படுத்திப் பாருங்கள். ஆய்வு ஒன்றில் நகரத்தில் டாக்ஸி ஓட்டும் டிரைவர்கள் இடம் பற்றி அறியும் மூளைப் பகுதிகளில் வல்லுநர்களாக இருப்பது தெரிய வருகிறது.


ஒரு புதிய இசைக் கருவியைக் கற்றுக் கொள்ளுங்கள். மோட்டார் கண்ட்ரோல், கேட்டல், பார்க்கும் பகுதிகள் எனப்படும் மூளைப் பகுதிகள் இப்படிப்பட்ட இசைக் கலைஞர்களிடம் மற்றவர்களை விட அதிகத் திறனுடன் இயங்குவதை ஆய்வு கூறுகிறது.
உரக்கப் படியுங்கள். எதையேனும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதா? உரக்கப் படித்துப் பழகுங்கள். உரக்கப்படித்தால் நினைவுக்குக் கொண்டுவருவது சுலபமாகிறது.


ஒரு புதிய மொழியைக் கற்க ஆரம்பியுங்கள். மூன்று மொழிகளுக்கு மேல் தெரிந்து வைத்திருப்பவர்கள் மற்றவர்களை விட அதிக ஐ க்யூ கொண்டிருக்கின்றனர். அல்ஜெமீர் வியாதி உள்ளவர்கள் ஒரே ஒரு மொழி மட்டுமே தெரிந்து வைத்திருப்பவர்கள் என்பதை ஆய்வுகள் கூறுகின்றன.


குறிப்பேடுகளில் குறிப்பெடுங்கள் : உங்கள் கருத்துக்களைக் குறிப்பெடுத்துக் கொள்வது நினைவுக்கு ஆதாரமாகவும் இலக்கியத்தை கற்கும் உங்கள் மூளையில் அமைந்துள்ள பகுதிகளுக்கு ஆக்ஸிஜனோடு கூடிய இரத்தைத்தை கொண்டு செல்லவும் உதவுகிறது. ஆகவே தான் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள் மாணவர்களைக் குறிப்பெடுத்துக் கொள்ளும் படி தூண்டுகின்றனர்.


மற்றவர்களுக்குக் கற்பியுங்கள். மற்றவர்களுக்கு எதையேனும் கற்பிக்கும் போது நீங்கள் தகவலை நினைவுக்குக் கொண்டு வர வேண்டியதாக இருக்கிறது. அதைப் புதிய முறையில் திருப்பி அமைத்துச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. இதனால் நினைவாற்றல் திறன் கூடுகிறது.


ஓவியம் வரையுங்கள். ஏதேனும் ஒரு சித்திரம், படம், ஓவியம் ஒன்றை வரைந்து பாருங்கள். படம் வரைவது வலது பக்க மூளைப் பகுதியின் செயலை அதிகரித்து படைப்பாற்றல் திறனை மேம்படுத்துகிறது. கலர் பென்சில்கள் உங்கள் மூளையைச் சக்தி உள்ளதாக ஆக்கும் சிறிய கருவிகள்!


ஆரோக்கியமான விவாதங்களில் கலந்து கொள்ளுங்கள். வெட்டி அரட்டை, வீண் பேச்சு இவற்றைத் தவிர்த்து, ஆரோக்கியமான ஒரு விவாதத்தில் கலந்து கொள்ளும் போது மூளை வெகு வேகமாகச் சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது. கருத்துக்களை உரிய வார்த்தைகளில் சொல்ல அவசியம் ஏற்படுகிறது. ஆகவே சிறந்த விஷயங்களைக் குறித்து நிபுணர்களுடன் விவாதிப்பது மூளை ஆற்றலைக் கூட்டுவிக்கும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். ஆகையால் தான் அறிஞர்களிடம் பழகு, நல்லோரை அணுகு என நமது அறநூல்கள் வலியுறுத்துகின்றன.


உங்கள் சுற்றுப்புறத்தை மாற்றுங்கள். ஒரே இடத்தில் இருக்காமல் புதிய இடங்களில் செயல்படுவது மூளையை ஊக்கப்படுத்தி மாற்ற வழி வகுக்கிறது. அடுத்த முறை வேறு ரெஸ்டாரண்ட், ஒரு புதிய வழியைத் தேர்ந்தெடுப்பது போன்றவை இதற்கான வழிகள்.
குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். பாஸிடிவ் சிந்தனைக்காக மூளையில் உள்ள பகுதிகளைச் செயலாற்ற வைப்பது உங்களால் நிர்ணயிக்கப்பட்ட உங்களின் குறிக்கோளே. வெற்றியைப் பெறச் சிறந்த வழி முதலில் குறிக்கோளை நிர்ணயிப்பது தான்! வாழ்க்கையை வளமாக்க வழி குறிக்கோள் ஒன்றைக் கொள்வது தான்!
*** மற்ற வழிகள் தொடரும்

tags — மூளை, ஆற்றல், 100 வழிகள்

மூளைக்கு வல்லாரை- அருமையான மூலிகைப் பாட்டு (Post No.7183)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 6 NOVEMBER 2019

Time  in London – 8-23 am

Post No. 7183

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

ஹெல்த்கேர் மருத்துவ மாத இதழ் R.C.ராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு 10, வையாபுரி நகர், திருநெல்வேலி டவுன் – 627006 (போன் : 9843157363) -லிருந்து வெளிவருகிறது. வருட சந்தா ரூ 120/. நவம்பர் 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது:

மூளைக்கு வல்லாரை, முடி வளர நீலிநெல்லி : அருமையான மூலிகைப் பாட்டு!

ச.நாகராஜன்

ஏராளமான இரகசியங்களைத் தெரிவிக்கும் பாடல்களை தமிழ்ச் சுவடிகள் கொண்டிருப்பதை பல கட்டுரைகளின் வாயிலாகச் சுட்டிக் காட்டி இருக்கிறேன்.

மாயச் சதுரம் பற்றியும், சதுரங்க பந்தம் போன்ற சித்திரத் தமிழ் பற்றியும் ஒரு சின்னப் பாடல் மூலமாக அருமையான ரகசியத்தை அறிகிறோம்.

இந்த வகையில் அன்பர்  மாரிமுத்து, அவனியாபுரம், மதுரை அனுப்பியுள்ள பாடல் மூலிகைப் பாட்டாக, அருமையான ஒன்றாக அமைகிறது. அதைக் கீழே தருகிறேன்.

இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும், 

இப்பாடல் 

அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்

    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை

  முடிவளர நீலிநெல்லி

ஈளைக்கு முசுமுசுக்கை

   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்

  பசிக்குசீ  ரகமிஞ்சி

கல்லீரலுக்கு  கரிசாலை

  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை

  காதுக்கு சுக்குமருள்

தொண்டைக்கு அக்கரகாரம்

  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்

  நாசிக்கு நொச்சிதும்பை

உரத்திற்கு  முருங்கைப்பூ

ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய் 

  மூட்டுக்கு முடக்கறுத்தான் 

அகத்திற்கு  மருதம்பட்டை

  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை

  உணர்ச்சிக்கு  நிலப்பனை

குடலுக்கு ஆமணக்கு

   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை

  களைப்பிற்கு சீந்திலுப்பு

குருதிக்கு அத்திப்பழம்

  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை

  வெள்ளைக்கு கற்றாழை

சிந்தைக்கு  தாமரைப்பூ

  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்

  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                           

விக்கலுக்கு மயிலிறகு

   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்

  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்

வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ  

   வெட்டைக்கு சிறுசெருப்படையே 

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை

  சீழ்காதுக்கு நிலவேம்பு

நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்

   நஞ்செதிர்க்க அவரிஎட்டி 

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்

    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்

பெரும்பாட்டிற்கு அத்திநாவல்

  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்

  கழிச்சலுக்கு தயிர்சுண்டை 

அக்கிக்கு வெண்பூசனை

  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி

   விதைநோயா கழற்சிவிதை 

புண்படைக்கு புங்கன்சீமையகத்தி

  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்

  கரும்படை வெட்பாலைசிரட்டை

கால்சொறிக்குவெங்காரபனிநீர்

  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு

   உளம்மயக்க கஞ்சாகள்ளு

உடல்இளைக்க தேன்கொள்ளு

   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்

  அன்றாடம்சிறுபிணிக்கு

அருமருந்தாய் வழங்கியதை

  அறிந்தவரை உரைத்தேனே!

இதே போல அருமையான பாடல்களை தஞ்சையில் உள்ள சரஸ்வதி மஹால் சுவடிகளில் காணலாம். சரஸ்வதி மஹால் வெளியீடுகளும் அற்புதமானவை.

நோயில்லா நெறி என்ற புத்தகம் ஒவ்வொரு நதியின் நீர் பற்றிய அருங்குணங்களைத் தருகிறது. வைகை, காவிரி, தாமிரபர்ணி ஆகிய நதிகளின் நீருக்கு இவ்வளவு சக்தியா என வியக்கிறோம். அத்துடன் நோயில்லாமல் வாழ்வதற்கான நெறிகளையும் அது தருகிறது.

பழைய பாடல்களைத் தேடி எடுத்து அதை வல்லாரிடம் கொடுத்து அதன் மெய்ப்பொருளைக் காண்பதுவே அறிவு.

செய்வோம்; மனதால் உயர்வோம்; ஆரோக்கியத்தால் உயர்வோம்!

***

மூளை நன்கு செயல்பட உடல்பயிற்சி (5391)

WRITTEN BY S NAGARAJAN

Date: 4  SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-17 AM (British Summer Time)

 

Post No. 5391

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

திருநெல்வேலியிலிருந்து ஆர்.சி.ராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு மாதம் தோறும் வெளிவரும் ஆரோக்கிய மேம்பாட்டு மாத இதழ் ஹெல்த்கேர். இதில் ஜூலை 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. தொடர்பு மின்னஞ்சல் editor@tamilhealthcare.com

மூளை நன்கு செயல்பட எவ்வளவு நேரம் உடல்பயிற்சி செய்ய வேண்டும் ?

மூலம் : கிறிஸ்டோபர் வாஞ்செக்

தமிழாக்கம் : ச.நாகராஜன்

அனைவருக்குமே உள்ள கவலை வயதாக ஆக, மூளையின் செயல்பாடு குறைந்து கொண்டே வருகிறதே, ஞாபகமறதி அதிகமாகிறதே, உடலின் அவயவங்கள் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறதே என்பன போன்றவை தாம்!

நன்கு உடல்பயிற்சி செய்யுங்கள் என்பது பொதுவான அறிவுரை.

யோகா, தாய்-சி போன்றவற்றையும் பலரும் பரிந்துரை செய்கின்றனர்.

எதைச் செய்வது, எவ்வளவு நேரம் செய்வது என்பதில் ஒரே குழப்பம்.

 

தினசரி செய்யுங்கள் என்கின்றனர் சிலர். வாரத்திற்கு இவ்வளவு மணி நேரம் என்கின்றனர் சிலர்.

இப்படிச் செய்ய முடியாதவர்கள் கவலைப்படுகின்றனர்.

கவலை போக்கும் விதமாக இப்போது நல்ல செய்தி வந்துள்ளது.

 

ஆறு மாத காலத்தில் 52 மணி நேரம் உடல் பயிற்சி செய்தால் போதும் என்கிறது நவீன மருத்துவ ஆய்வு ஒன்று! இது மூளையை நன்கு செயல்படுத்த உதவும் என்கிறது ஆய்வு முடிவு!

பொதுவாக உடல்பயிற்சியானது, சிந்தனையாற்றலை நன்கு தூண்டி விடும்; உடலையும் மனதையும் பண்படுத்த உதவும்; மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்; அல்லது மூளை செயலிழப்பைத் தடுக்கும் என்பன போன்றவற்றை ஆய்வு முடிவுகள் அறிவித்துள்ளன!

 

நியூராலஜி கிளினிகல் ப்ராக்டீஸ் என்ற பத்திரிகையில் 30-5-2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை அகில உலக ஆய்வு ஒன்றை விரிவாக வெளியிட்டிருக்கிறது.

 

நடைப்பயிற்சி, ஓட்டம், வெயிட் தூக்குதல், யோகா, தாய்-சி எல்லாமே நலம் பயப்பவையே! இதில் எதைச் செய்தாலும் ஆறு மாதத்தில் 52 மணி நேரம் செய்தால் போதும்!

“இந்த 52 மணி நேரத்தையும் கூட உங்களுக்கு உகந்த முறையில் பிரித்துக் கொள்ளலாம். இப்போது ஒரு மணி நேரம்; பின்னால் இன்னொரு மணி நேரம் என்று” என்கிறார் ஆய்வைச் செய்த மியாமி மில்லர் ஸ்கூல் ஆஃப் மெடிசின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜாய்ஸ் கோமஸ் -ஆஸ்மான் (Joyce Gomes-Osman) என்னும் நியூரோஸயிண்டிஸ்ட் பெண்மணி.

 

இது அனைவருக்கும் பெரிய ஆறுதல் அளிக்கும் செய்தியாகும். தினசரி ஒரு மணி நேரம் என்பது போன்ற கடுமையான விதி முறைகள் தேவை இல்லை.

 

குறைந்த தீவிரம் உடையவை யோகாவும் தாய்-சியும்.

அதிக தீவிரப் பயிற்சி என்பது வலுவை அதிகரிக்கும் கடினமான பயிற்சிகளும் ஏரோபிக் பயிற்சிகளும். இவை இரண்டுமே பலனளிக்கின்றன என்கிறார் கோமஸ்.

உடல் பயிற்சி சம்பந்தமாக முன்னர் செய்யப்பட்ட 100 ஆய்வுகளை இந்தப் புதிய ஆய்வு ஆராய்ந்தது. இதில் பங்கு கொண்டவர்கள் மூளை செயல்பாடு பற்றிய ஆய்வுக்கு உட்பட்டவர்கள். மொத்தம் 11000 பேர்கள் இவற்றில் பங்கு கொண்டனர். அவர்களின் சராசரி வயது 73!

ஆய்வு தந்த முடிவின் பொதுவான அம்சம் எந்த முறையில் உடல் பயிற்சி செய்யப்பட்டாலும் ஆறு மாதங்களில் 52 மணி நேரம் செய்தால் அவை மூளை சிந்தனையாற்றலைக் கூர்மைப் படுத்துகின்றன என்பதே!

இந்த 52 மணி நேரத்திற்குக் குறைவாகச் செய்யப்பட்ட பயிற்சிகள் நல்ல முடிவுகளைத் தரவில்லை என்பதே ஆய்வு தரும் செய்தி!

உடல் பயிற்சி சிகிச்சை முறையைத் தருகின்ற நியூரோ ஸயிண்டிஸ்ட் என்ற முறையில் கோமஸ், “என்னுடைய நோயாளிகளுக்கு ஒரு சரியான டோஸை தர ஆசைப்பட்டேன், இப்போது தான் அது சாத்தியமாகி இருக்கிறது” என்கிறார்.

 

 

“இன்னும் அதிக செயல்பாட்டுடன் இருங்கள் என்று பொதுவாக நாங்கள் கூறி விடுகிறோம் எங்களிடம் சிகிச்சை பெற வருபவர்களிடம். ஆனால் அதன் அர்த்தம் என்ன? அவருக்கு தினமும் 30 நிமிடப் பயிற்சி தேவையா? அல்லது ஒரு மணி நேரம் தேவையா? எந்த விதமான உடல் பயிற்சி வேண்டும் என்பதைச் சொல்ல முடியாமல் இருந்தது. ஆனால் இப்போது தெளிவாக 52 மணி நேர லட்சியத்தை முன் வைக்க முடிகிறது” என்கிறார் அவர் முத்தாய்ப்பாக!

 

இதய நோயாளிகளுக்கு அவர்களின் உடல்நலத்தை மேம்படுத்த இதுவே வழி!

 

டாக்டர் டக்ளஸ் ஷார் என்பவர் ஓஹையோ ஸ்டேட் பல்கலைக் கழகத்தில் வெக்ஸ்னர் மெடிகல் மையத்தில் உள்ள மூளை செயல்பாடு மற்றும் நினைவுத் திறன் குறைப்பாடு பற்றிய மையத்திற்கு டைரக்டர். அவரும் இந்த ஆய்வு முடிவை ஏற்றுள்ளார். “மூளை செயல்திறனுடன் இயங்க உடல் பயிற்சி இன்றியமையாதது என்பதே முக்கிய செய்தி. நீண்ட கால அடிப்படையில் அதைச் செய்யவேண்டும். அவ்வளவு தான்” என்கிறார் அவர்.

 

ஷார் மேலும் கூறுகையில், “ உடல் பயிற்சியின் போது மூளையானது நன்கு செயலூக்கம் செய்யப்படுகிறது. நமது தசைகளை எப்படிக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என்பதை நாம் கற்க வேண்டும். ஆகவே பயிற்சிகளின் போது அதிக கவனம் தேவை. ‘use it or lose it’ – பயிற்சியைச் செய்யுங்கள்; அல்லது பலனை இழந்து விடுங்கள் என்பதே தாரக மந்திரம் என்கிறார்.

 

அத்தோடு தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டே இருந்து யாருடனும் பழகாமல் இருப்பது பயனளிக்காது என்றும் அவர் கூறுகிறார்,

பிரேஸில், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் உள்ள ஆய்வாளர்கள், உடல் பயிற்சியானது மூளையின் செயல்பாட்டு வேகம், திட்டமிடுதல், கவனம் கொள்ளுதல் ஆகியவற்றை மேம்படுத்துகிறது என்கின்றனர். பொதுவாக வயதாக ஆக, இவைதான் அனைவருக்கும் பொதுவாக ஏற்படும் பிரச்சினை என்பதால் இந்த ஆய்வின் முடிவு ஒரு வரபிரசாதமே.

இனி ஆறு மாதத்தில் 52 மணி நேர பயிற்சி என்பதை மேற்கொள்வோம். செயல்பாட்டுடன் கூடிய முளையால் உடல் இயக்கம் கொண்டு நலம் பெறுவோம்.

 

***

மூலம் : கிறிஸ்டோபர் வாஞ்செக்

தமிழாக்கம் : ச.நாகராஜன்

நன்றி : லைவ் ஸயின்ஸ்

 

 

மூளை பற்றிய பிரம்மாண்டமான ஆராய்ச்சி! (Post No.4002)

Written by S NAGARAJAN

 

Date: 15 June 2017

 

Time uploaded in London:-  6-01  am

 

 

Post No.4002

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பாக்யா 26-5-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

நாஜிகளுக்கு பலியானோரின் மூளை பற்றிய பிரம்மாண்டமான ஆராய்ச்சி!

 

by ச.நாகராஜன்

 

 

கர்வம் என்பது ஒரு ஆயுதம் – 2003ஆம் ஆண்டு வெளியான ‘தி ரெய்ஸ் ஆஃப் ஈவில் என்ற படத்தில் ஹிட்லர் கூறுவது

 

 

ஹிட்லரின் நாஜி ஜெர்மனியில் நடத்தப்பட்ட, ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரமான கொலைகளுக்கு ஒரு கணக்கே இல்லை,

இவற்றில் மிகவும் மோசமான கொலைகள் கருணைக் கொலை என்ற பெயரில் நடத்தப்பட்டவை தாம்!

 

உடல் ஊனம் அல்லது குறைபாடு ஹிட்லரைப் பொறுத்த மட்டில் ஒரு மருத்துவக் குறைபாடு அல்ல. அது இனத்தின் மரபணுவில் இருக்கும் ஒரு குறைபாடு என்று கருதப்பட்டது.

ஹிட்லர் “தனது ஆர்ய இனம்” என்பது உயரிய இனம் என்று கருதியதால் ஆயிரக்கணக்கான உடல் ஊனமுற்றோரைச் சிறை செய்து கருணக்கொலை செய்து அவற்றின் மூளைகளை ஆய்வு செய்யக் கட்டளையிட்டான். இந்த மூளைகள் இன்னும் இருக்கின்றன.

 

 

இவற்றை மீண்டும் சோதனைக்கு உட்படுத்தி இந்த மூளைக்குச் சொந்தக்காரர்கள் யார் என்று அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது.

 

இந்த ஆயிரக்கணக்கான மூளைகள் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட சிலைடுகள் உள்ளிட்டவை அனைத்தும் மாக்ஸ் ப்ளாங்க் சொஸைடியில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிரது.

2017, ஜூன் மாதம் துவங்கி மூன்று ஆண்டு காலம் 15 லட்சம் யூரோ (ஒரு யூரோ என்பது சுமார் 70 ரூபாய்) செலவில் இந்த பிரம்மாண்டமான ஆய்வு தொடங்க உள்ளது

இந்த மூளை ஆய்வுத் திட்டத்திற்கு அகிடன் டி 4 (Akiton T4)  என்று பெயர்.

 

தனது உயரிய இனத்தைச் “சுத்தமாக” வைத்துக் கொள்ள ஹிட்லர் 1933இல் தான் அதிகாரத்திற்கு வந்தவுடன் இந்த மூளை ஆராய்ச்சியை மேற்கொண்டான். மனம் மற்றும் உடல் ரீதியிலான குறைகள் இனத்தை அசுத்தப்படுத்தும் குறைகள் என்பது அவனது கருத்து.

 

1940இல் டி4 திட்டம் தொடங்கப்பட்டவுடன் ஆயிரக்கணக்கில் உடல் ஊனமுற்றோர் சிறை பிடிக்கப்பட்டு மரணக் கிடங்கு என்று சொல்லப்பட்ட ஓரிடத்தில் இருந்த கருணைக்கொலைக்கான ‘மருத்துவ தொழிற்சாலை மையங்க’ளுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு குழந்தைகளுக்கு மரண ஊசி போடப்பட்டது. பெரியவர்க்ள் கேஸ் சேம்பரில் விஷ வாயு செலுத்தி கொல்லப்பட்டனர்.

 

 

இப்படி கொல்லப்பட்டோர் சுமார் இரண்டு லட்சத்தி ஐம்பதியாயிரம் பேர் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இவற்றில் ஐந்து சதவிகிதம் பேரின் மூளைகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன.

 

மூளைகள் அனைத்தும் பெர்லினில் உள்ள கெய்ஸர் வில்ஹெல்ம் இன்ஸ்டிடியூட்டிற்கு அனுப்பப்பட்ட்ன. இந்த நிறுவனம் ஏராளமான விஞ்ஞானிகள் நோபல் ப்ரிசு பெற வழி வகுத்த ஒரு அருமையான நிறுவனம்.

 

 

இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் இதை மாக்ஸ்பிளாங்க் சொஸைடி தன் வசம் எடுத்துக் கொண்டது. விஞ்ஞானிகள் தாஙகள் மேற்கொண்ட மூளை மற்றும் செல் ஆராய்ச்சிக்கு இங்கு வந்து பாதுகாக்கப்பட்டு வைத்திருந்த மூளைகளைப் பயன்படுத்தலாயினர்.

 

1980ஆம் ஆண்டு ஆய்வில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள், பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த இன்னும் ஏராளமான மூளைகளைக் “கண்டுபிடித்தனர்”.

மாக்ஸ் ப்ளாங்க் சொஸைடி 1933 முதல் 1945 முடிய ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியில் கொல்லப்பட்டோரின் மூளைகளை மூனிச்சில் உள்ள ஒரு கல்லறையில் புதைத்து வைத்திருந்தது. இவை இப்போது எடுக்கப்பட்டு விட்டன.

 

எழுபது ஆண்டுகள் கழித்து செய்யப்பட இருக்கும் இந்த மூளை ஆராய்ச்சி மிக பிரம்மாண்டமானது.

 

இதில், கொல்லப்பட்டோரை அடையாளம் கண்டு பிடித்து அவர்கள் பெயருடன் உரிய விதத்தில் அந்த மூளைகளைப் புதைப்பதும் ஒரு பெரிய நினைவுச் சின்னத்தை எழுப்புவதும் இந்த ஆய்வின் முடிவில் செய்யப்படும்.

 

எதிர்காலத்தில் யாரும் இப்படிப்பட்ட ஈனத்தனமான செயல்களை விஞ்ஞானத்தின் பெயரால் செய்யக்கூடாது என்பதற்கும் வரலாற்றை முறைப்படுத்துவதற்குமான ஒரு ஆராய்ச்சியாக இது கருதப்படுகிறது.

 

உலகம் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் வந்து விட்டது!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

மர்யா ஸ்க்லோடோவ்ஸ்கா (Marya Sklodowska)  என்ற இயற் பெயருடைய பெண்மணி தான் பின்னால் நோப பரிசு பெற்று பிரபலமான விஞ்ஞானி மேடம் க்யூரி (1867-1934) ஆவார். இளமையில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் பின்னால் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார்.

 

 

சிறிய வயதிலேயே ஒரு விஷயத்தில் மனதைக் குவித்து கவனம் செலுத்துவதில் அவரது திறமை அபாரமாய் இருந்தது. ஒரு நாள் அவர் படித்துக் கொண்டிருக்கும் போது அவரது சகோதரி அவரைச் சுற்றி நாற்காலிகளை வரிசையாகச் சுற்றி அடுக்கலானார் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் க்யூரி படித்துக் கொண்டிருந்தார்.

 

படித்து முடித்த பின்னர் அவர் ஒரு நாற்காலியைத் தொட அனைத்து நாற்காலிகளும் சரிந்து விழுந்தன. ‘என்ன முட்டாள்தனமான் காரியம் செய்திருக்கிறாய் என்பது தான் அவரது ஒரே கமெண்ட்..

 

மிகுந்த ஏழ்மையின் காரணமாகவே மிகுந்த தாமதத்துடன் 1891இல் அவர் சார்போன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். பாரிஸில் தான் தன் எதிர்காலக் கணவரான பால் அபெல்லை (Paul Appelll) அவர் சந்தித்தார். தனது பரிசாக அவர் இளம் பெண்மணியான கியூரிக்கு அவர் தந்தது எலக்ட்ரோ மாக்னெடிஸம் பற்றிய ஒரு கட்டுரை தான்!

 

க்யூரிக்கும் அவரது கணவருக்கும் விருதுகள் வந்து குவிந்தன. ஆனால் அவற்றை அவர்கள் பெரிதாக மதிக்கவே இல்லை. லண்டன் ராயல் சொஸைடியால் வழங்கப்ப்ட்ட டேவி மெடலை தங்களின் குட்டிப் பெண்ணான ஐரீனுக்கு அவர்கள் விளையாடுவதற்காகத் தந்தனர். (ஐரீன் பின்னால் தன் கணவருடன் இணைந்து ஒரு நோபல் பரிசைப் பெற்றவர்). அதை ஐரீன் பிக் கோல்ட் பென்னி – பெரிய தஙகத்தினால் ஆன பென்னி நாணயம்- என்று சொல்லி விளையாடிக் கொண்டிருப்பாராம்.

1903இல் நோபல் பரிசு பெற்றவுடன் ஏராளமான பேர்கள் அவர்களை விருந்துக்கு அழைத்தனர். ஒரு நாள் மாலை பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியின் அதிகார பூர்வ இல்லமான எல்ஸி அரண்மணையில் நடந்த ஒரு விருந்துக்கு அவர் அழைக்கப்பட்டார். அவரை விருந்துக்கு அழைத்தவர் க்யூரியிடம் கிரீஸ் தேசத்து அரசர் வந்திருக்கிறார். அவரைப் பார்க்க விருப்பமா என்று கேட்டார். “அவரைப் பார்த்து எனக்கு என்ன ஆகப் போகிறது” என்று கூறிய க்யூரி அரசரைச் சந்திக்க விரும்பவில்லை.

 

தனது விஞ்ஞான ஆராய்ச்சியிலேயே கவனம் செலுத்தி உழைப்பால் உயர்ந்தார் எளிய குடும்பத்தில் பிறந்த இந்த மேதை.

****

 

 

மூளை ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வழிகள்! (Post No.3996)

Written by S NAGARAJAN

 

Date: 13 June 2017

 

Time uploaded in London:-  5-56  am

 

 

Post No.3996

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

 

திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் ஹெல்த்கேர் மாத இதழில் ஜூன் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

மூளை ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வழிகள்!

ச.நாகராஜன்

மனிதனின் செயல்பாட்டை நிர்ணயிக்க வல்ல முக்கியமான உறுப்பு மூளை. இதை ஆரோக்கியமாகவும் செயல்திறனுடனும் அதிக ஆற்றலுடனும் வைத்திருக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

நாளுக்கு நாள் முன்னேறி வரும் மூளையியல் ஆராய்ச்சிகள் பல உத்வேகமூட்டும் உதவிக் குறிப்புகளை நல்குகின்றன.

மூளை ஆரோக்கியத்திற்கென மையம் ஒன்றை நிறுவியவர் சான்ட்ரா பாண்ட் சாப்மேன். (Sandra Bond Chapman Ph.D.) டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் இந்தப் பெண்மணி ‘மேக் யுவர் ப்ரெய்ன் ஸ்மார்டர் (Make Your Brain Smarter)  என்ற நூலை எழுதியுள்ளார். மூளை ஆற்றலை மேம்படுத்த  அவர் கூறும்         வழிகளில் முக்கிய,மான சிலவற்றைச் சுருக்கமாகக் கீழே காண்போம் :

அறிவியலின் வேகமான முன்னேற்றத்தால் ஒவ்வொரு மனிதனுடைய ஆயுள் காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. பழைய காலத்தை ஒப்பிடும்போது இது அதிகம். என்றாலும் கூட மூளை ஆரோக்கியத்தைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்பவர் மிகச் சிலரே. சிறிது ஆர்வம் இருந்தால் கூட போதும், ஒருவர் தன் மூளை ஆற்றலை வெகுவாக முன்னேற்றிக் கொள்ளலாம்.

புதிய் விஷயங்களில் ஆர்வம் காட்டுவது, மூளைக்கான பயிற்சிகளை மேற்கொள்வது, தனக்கென பிரத்யேகமான சில பொழுதுபோக்கு ஹாபிகளை தேர்ந்தெடுத்துக் கொள்வது போன்றவற்றால் மூளை ஆற்றல் மேம்படும்., நினைவாற்றலும் கூடும்.

போட்டி மிகுந்த இன்றைய நாட்களில் மூளையை கூர்மையாக வைத்துக் கொண்டிருப்பது மிகவும் அவசியம். சிறிது நேரம் வேலை பார்த்தாலேயே மூளை களைப்புற்று சோர்வை அடைவது இன்றைய நாட்களில் பலருடைய அனுபவமாக ஆகி விட்டது.. இதற்காக வெவ்வேறு சுற்றுலா தலங்களை நாடி புத்துணர்ச்சி பெறுவதும் வாடிக்கையாகி விட்டது.

ஆனால் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான முயற்சியை அன்றாடம் எடுத்து வந்தால் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாமே!

 

எனக்கு கூர்மையான மூளை இல்லையே என்று ஏங்குவோருக்கு ஆறுதலைத் தரும் ஆறு வழிகள் இதோ:-

  • பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்வதைத் தவிருங்கள்

இன்றைய அவசர யுகத்தில் பலரும் பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்ய முயல்கின்றனர். மல்டி டாஸ்கிங் யுகம் இது என்று பெருமையாக வேறு சொல்லிக்  கொள்கின்றனர். மல்டி டாஸ்கிங் ஒருவரது மனோ ஆற்றலைக் குறைக்கிறது. மூளையைச் சீக்கிரம் சோர்வடையச் செய்கிறது. மன அழுத்தத்தை அதிகமாக்குகிறது. மாறாக ஒரே ஒரு காரியத்தை எடுத்துக் கொள்வது அதை செவ்வனே திற்ம்படச் செய்வது என்ற வழி முறையை மேற்கொண்டால் வேலையும் சிறப்பாக முடியும்; மூளையும் சோர்வடையாது.

2)  தேவையான தூக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

தூக்கம் என்பது இன்றியமையாத ஒன்று. ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை அன்றாடம் ஒவ்வொருவருக்கும் உறக்கம் தேவை. தூங்கும் நேரத்தில் தான் மூளை உள்ளார்ந்த ஆழ்நிலை மட்டத்தில் தகவல்களை ஒருங்கு சேர்த்து இணைத்துக் கொள்கிறது. இரவில் வெகு நேரம் முழித்திருந்து தூக்கத்தை தியாகம் செய்தால் மூளை ஆற்றலையும் செயல் திறனையும் தியாகம் செய்ததற்குச் சமம்

  1. உடல்பயிற்சி தேவை

ஒரு நாளைக்கு 30 நிமிட திறந்த வெளி உடற்பயிற்சி செய்வது உத்தமம்..  வாரத்திற்கு கும்றைந்த பட்சம் நான்கு முறையாவது இந்த 30 நிமிடப் பயிற்சியை அவசியம் செய்தல் வேண்டும். இது நினைவாற்றலைக் கூட்டுகிறது. கவனக் குவிப்பை மேமபடுத்துகிறது. மனதை ஒருமைப்படுத்துகிறது. மூளையில் உள்ள் நினைவாற்றலுக்கான பகுதியில் இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது

  1. முக்கிய விஷயங்களைத் தனியே குறித்து வைத்துக் கொள்ளுங்கள்

நீங்கள் படித்தவற்றில் முக்கியமானவற்றின் சுருக்கத்தை தனியே தொகுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கோர்ஸ் அல்லது கருத்தரங்கம் சென்றீர்களா, உங்களுக்குத் தேவையான முக்கியமானவற்றைத் தனியே எழுதுங்கள். நல்ல புத்தகம் படிக்கிறீர்களா, அதன் அடிப்படை செய்தியை தனியே குறித்து வைத்துக் கொள்ளுங்கள். புதிய ஐடியாக்கள் அல்லது யோசனைகள் தனியே குறிப்பது, நல்ல கவிதை அல்லது மேற்கோள்களுக்கான தனி நோட்புக்கைப் பயன்படுத்துவது ஆகியவை மூளையின் நீண்ட கால நினைவாற்றலைக் கூட்ட வழி வகுக்கிறது. இது உலகளாவிய அளவில் உள்ள நல்ல கருத்துக்களை நீங்கள் உள்வாங்கிக் கொள்ளவும், அடிப்படை உண்மைகளைத் திரும்பத் திரும்ப பெற்றுக் கொள்வதற்கும் உதவி செய்கிறது.

5. முக்கிய விஷயங்களில் கூர்மையான கவனக் குவிப்பு தேவை

தேவையற்ற விஷயங்கள் மற்றும் தகவல்களைத் தூக்கி எறியுங்கள். தேவையற்றதை படிக்காமல், பார்க்காமல் இருப்பது மூளை செயல்பாட்டைத் திறம்படச் செய்வதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மூளை ஆரோக்கியம் வேண்டுவோர் ‘இன் டேக் இன்ஃபர்மேஷன்’ எனப்படும் உள் கிரகிக்கும் விஷயங்களில் எதை எடுத்துக் கொள்வது  என்பது பற்றிய கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.

  1. உத்வேகத்துடன் இருங்கள்

எப்போதும் உத்வேகமூட்டப்பட்டுக் கொண்டே இருக்கும் மூளை வேகமாகவும் மிக்க வலுவுடனும் மூளையில் நியூரல் கனெக்‌ஷன்களை – மூளைத் தொடர்புகளைக் கொள்ண்டதாகவும் ஆகிறது. உங்களுக்கு விருப்பமான விஷயங்களை இனம் காணுங்கள். அதில் அக்கறை செலுத்தி அதைப் பற்றி மேலும் மேலும் அறிந்து பரவ்சப்படுங்கள்.

 

ஆறு மனமே ஆறு, மூளையை மேம்படுத்தும் வழிகள் ஆறு!

இவற்றைக் கடைப்பிடித்தால் கூர்மையுடனும் ஸ்மார்ட்டாகவும் ஆகி விடலாம்!

****

 

 

 

மூளையை ஏமாற்றும் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகள்! (pOST No.2516)

gulob jamun, fb

Written by S Nagarajan

 

Date: 7 February 2016

 

Post No. 2516

 

Time uploaded in London :–  6-34 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் ஹெல்த்கேர் பிப்ரவரி 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

 

 

மூளையை ஏமாற்றும் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுப் பதார்த்தங்கள்!

ச.நாகராஜன்

 

விஞ்ஞான இதழின் அறிவுரை

 

உலகின் பிரபல அறிவியல் இதழான ஸயிண்டிபிக் அமெரிக்கன் – (MIND இதழில்)  தனது 2016, ஜனவரி முதல் தேதியிட்ட  இதழில் இனிப்பும் கொழுப்பும் எப்படி நமது மூளையையே ஏமாற்றுகிறது என்பது குறித்த எச்சரிக்கை கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஃபெர்ரிஸ் ஜாப்ர் எழுதியுள்ள இந்த கட்டுரை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய நவீன கண்டுபிடிப்புகளைத் தெரிவிக்கிறது.

 

 

குறிப்பாக குண்டாக இருப்பவர்கள் இந்தக் கட்டுரையை நிச்சயம் படிக்க வேண்டும். உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக இருக்கும் இதரர்களைப் போல ஆக அவர்கள் ஆசைப்படுவதைத் தடுப்பது எது?

 

இதோ கட்டுரையின் சில முக்கியப் பகுதிகளின் சுருக்கம்:

 

போதைப் பழக்கம் போல ஆகும் உணவுப் பழக்கம்

 

மாத்யூ ப்ரையன் என்பவர் தனது 24ஆம் வயதில் 135 பவுண்டுகள் எடையுடன் இருந்தார். 20 ஆண்டுகள் கழித்து இப்போது அவரது உடல் எடை 230 பவுண்டுகள். காரணம்? , மற்றவர்கள் எல்லாம் அளவோடு சாப்பிடும் போது அவர் மட்டும் ப்ரட், பாஸ்தா, சோடா, குக்கீஸ், ஐஸ்கிரீம் போன்றவற்றைத் தவறாமல் அளவுக்கு மீறி உட்கொண்டு வந்தது தான்! அவரால் தடுக்க முடியாதபடி அவரது உணவுப் பழக்க வழக்கம்  போதை போல மாறி, ஐஸ்கிரீமை முழு டின்னுடன் வாங்கிச் சாப்பிடும் அளவு ஆனது.

அவரால் தடுக்க முடியாமல் போகும் படி அந்த உணவுப் பண்டங்களின் மீது அவருக்கு ஆசை ஏன் வந்தது

இதை விஞ்ஞானிகள் தங்களிந் ஆராய்ச்சிப்  பார்வையில் பார்க்கின்றனர்.

 

இப்படிப்பட்டவர்களின் பசியை ‘hedonic hunger’ என்று அழைக்கின்றனர் அவர்கள். தேவைக்கும் மேலாக மிக அதிகமாகச் சாப்பிடுவதைத் தான் இந்த புதிய பெயர் சுட்டிக் காட்டுகிறது. 2007ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புதிய சொற்றொடர் இது!

 

இது பற்றிய நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் ஒரு அதிசயமான உண்மையை வெளியிடுகின்றன. இனிப்புப் பண்டங்களும் கொழுப்பு சேர்ந்த உணவு வகைகளும் மூளையின் சர்க்யூட்டை சூதாட்டமும் கோகெய்னும் செய்வது போலக் கவர்கிறன. இதை ரிவார்ட் சர்க்யூட் என்று சொல்லலாம்.

 

 

பசித்தால் பசிக்குச் சாப்பிடுவது போய், இனிப்பு மற்றும் கொழுப்பு வகைகளைப் பார்க்கும் போதெல்லாம் சாப்பிடத் தூண்டும் ஒரு பழக்கத்திற்கு அடிமையாகச் செய்கின்றன.

jangri

இனிப்பையும் கொழுப்பையும் கண்டவுடனேயே  சுவை அறியும் சுவை அரும்புகள் மூளைக்கு சிக்னல்களை அனுப்புகின்றன. உடனேயே எல்லையில்லா இன்ப உணர்வு ஏற்படுகிறது. இதை அறிவியல் சோதனை ஒன்றில் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

 

இந்த இன்ப உணர்வை அநுபவித்தவர்கள் அதை மீண்டும் அநுபவிக்கத் துடிக்கின்றனர். இதனால் எடை கூடிக்கொண்டே போகிறது. அவர்களால் தடுக்க முடியாதபடி இந்த எடைக் கூடுதல் ஏற்பட்டு பல வித வியாதிகளை அவர்களுக்குத் தருகிறது.

 

 

2007, 2011 ஆண்டுகளில் ஸ்வீடனின் உள்ள கோதன்பர்க் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு நடந்தது.

பசிக்கான ஹார்மோனான கெரெலினை (ghrelin)  வயிறு வெளிப்படுத்தியவுடன் மூளையில் உள்ள ரிவார்ட் சர்க்யூட்டில் டோபமைன் என்ற ஹார்மோனின் வெளிப்பாடு அதிகப்படுகிறது. அதாவது இனிப்பையும் கொழுப்பையும் உண்டதற்குப் பரிசாக – ரிவார்டாக இன்ப உணர்வு ஏற்படுகிறது.

 

 

சாதாரண நிலையில் லெப்டின் மற்றும் இன்சுலின் ஆகியவை டோபமைன் வெளிப்படுத்துவதை நிறுத்துகிறது. ஆகவே இன்ப உணர்வு குறைகிறது.

 

ஆனால் கொழுப்பான உணவைச் சாப்பிடும் போது மூளை இந்த ஹார்மோன்களுக்கு ‘செவி சாய்ப்பதில்லை’.

 

 

 

புதிய சிகிச்சை அறிமுகம்

 

ஆய்வின் விளைவு ஒரு புதிய சிகிச்சையை அறிமுகப்படுத்தி உள்ளது.

 

உடல் எடை கூடி குண்டாக இருப்பவர்களுக்கு கடைசி தீர்வாக இந்த  புதிய அறுவை சிகிச்சை வந்துள்ளது. இதன் காரணம் இப்போது கெரலின்  உடலின் எடை குறைப்பில் எவ்வளவு முக்கியத்துவம் கொண்டுள்ளது என்பது பற்றிய உண்மை தெரிய வந்துள்ளது தான். இந்த சர்ஜரி அல்லது அறுவைச் சிகிச்சை பாரியாட்ரிக் சர்ஜரி (Bariatric Surgery)  என்று அழைக்கப்படுகிறது. இது வயிறைச் சுருங்க வைக்கும் ஒரு அறுவைச் சிகிச்சை.

 

ஒன்று திசுக்களின் மூலம் சிகிச்சை மூலம் தரப்படும் அல்லது வயிறை எவ்வளவு குறைக்க முடியுமோ அந்த அளவு குறைத்து இரண்டு அவுன்ஸுக்கு மேலாக உணவு அங்கு இருக்க இடமே இல்லாதபடி சிகிச்சை செய்து விடும்.

 

 

சிகிச்சை முடிந்த ஒரே மாதத்திற்குள்ளாக சிகிச்சை பெற்றவருக்கு இனிப்பு மற்றும் கொழுப்புப் பண்டங்களின் மீதிருக்கும் ஆசையே போய்விடும். இது ஹார்மோன்களில் ஏற்படும் மாறுதல்களால் ஏற்படும், ஏனெனில் வயிறு சுருங்கி விடுகிறதல்லவா!

 

 

சமீபத்திய ஆய்வுகள் உணவின் மீதான ஆசை மூளையின் நரம்பு மண்டல சர்க்யூட்டில் பிரதிபலிக்கிறது எனத் தெரிவிக்கிறது.

‘hedonic hunger’ என்ற இந்தப் புதிய உண்மை மருத்துவ உலகில் கண்டுபிடிக்கப்பட்டவுடன் நிலைமையே மாறி விட்டது.

உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான கலோரிகளையும் மீறி போதைப் பழக்கம் போல இனிப்பும் கொழுப்பும் கொண்ட உணவு வகைகள் மூளையை ஏமாற்றி ஒரு வித இன்ப உணர்வைத் தருவதை அறிந்து அதை நிறுத்தினாலே போதும், உடல் எடை குறைந்து விடும் என்பது தெரிந்து விட்டது.

 

IMG_5057

 

முடிவு மன உறுதியைப் பொறுத்தது

 

இதை அடிப்படை நிலையில் புரிந்து கொண்டவர்கள், இப்படி இனிப்பையும் கொழுப்பு பதார்த்தங்களையும் அளவோடு சாப்பிட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம்.

அளவுக்கும் மீறி அதிகத் தீனி சாப்பிட்டே ஆக வேண்டும் என்பவர்கள் இதற்கான புதிய அறுவை சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

 

எதைத் தேர்ந்தெடுப்பது என்பது குண்டாக இருப்பவர்களின் மன உறுதியைப் பொறுத்துத் தான் இருக்கிறது!

**********

 

ஐன்ஸ்டீன் மூளை பற்றிய ரகசியங்கள்!

usa e=mc2

Research Article No. 2033

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 1st August  2015

Time uploaded in London : – 13-25

(This is already published in English a few days back)

ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை விளக்க ஒரு கணித வல்லுநர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு பேராசிரியர் மிகவும் சிரமப்பட்டு அந்த கொள்கையை விளக்க முற்பட்டார். மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்த அறிஞர்கள் பொறுமை இழந்தனர்; ஒரு துணிச்சல்காரர் எழுந்து சொன்னார்:

“அன்பரே! ஐன்ஸ்டீனின் தத்துவம் 12 பேருக்கே புரிந்தது என்று கேள்விப்பட்டேன். நீங்கள் பேசியதோ எங்களில் ஒருவருக்கும் விளங்கவில்லை. ஆகவே நீவீர் ஐன்ஸ்டீனுக்கும் மேலான அறிஞரே!”

(பழிகரப்பு அங்கதம் வாழ்க)

Xxxxx

india eistein

நான் கணித மேதை அல்ல!!

சர் வில்லியம் ராதென்ஸ்டைன் என்ற ஓவியர் ஐன்ஸ்டீனின் ஓவியத்தை வரைந்தார். இதற்காக ஓவியருக்கு முன்னால் ஐன்ஸ்டீன் மணிக்கணக்கில் உட்கார வேண்டி வந்தது. ஆனால் ஐன்ஸ்டீன் கொஞ்சமும் நேரத்தை வீணாக்க வில்லை. அவருடன் ஒருவர் வந்திருந்தார். அவர் ஒரு மூலையில் சிவனே என்று அமர்ந்திருந்தார். அவ்வப்பொழுது ஐன்ஸ்டீன் சில கணிதப் புதிர்களைப் போடுவதும் அதை அவர் விடுவிப்பதுமாக இருந்தது.

ஓவியம் வரைந்த பின்னர் ராதென்ஸ்டைன், மெதுவாக ஐன்ஸ்டீனிடம் யார் அந்த ஆசாமி என்று கேட்டார். “அவரா? அவர்தான் என்னிடம் கணிதமேதையாக வேலை செய்பவர். எனக்கு கணக்கு வராது. ஆகையால் அவ்வப்பொழுது நான் போடும் கணக்குகளைச் சரிபார்க்க அவரை வைத்திருக்கிறேன்” என்றார். பணக்காரர்கள் எல்லோரும் கணக்குப்பிள்ளை ஒருவரை வேலைக்கு வைத்திருப்பார்கள் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். விஞ்ஞானிகள் , “கணிதமேதைப்பிள்ளை”-களையே வேலைக்கு வைத்திருக்கிறார்கள்!!

Xxxx

E= mc2

ஐன்ஸ்டீனுக்கு சின்ன மூளை!!!

ஆங்கிலத்தில் யாருக்காவது சின்ன புத்தி இருந்தால் “பறவை அளவுக்குதான் மூளை— bird’s brain பேர்ட்ஸ் பிரயின் – என்று கேலி செய்வர். டால்பின் போன்ற பிராணிகளுக்கு மூளை மிகவும் பெரிதாகையால் அவை மிகவும் புத்திசாலிப் பிராணிகளாக இருக்கின்றன என்றும் படிக்கிறோம். ஆனால் வியப்பான செய்தி ஐன்ஸ்டீனுக்கு நம்மைப் போன்ற சாதாரண ஆட்களைவிட மூளை சிறியது என்பது அவர் இறந்தபின்னர் உடலைப் பரிசோதித்த போதுதான் தெரிந்தது!

ஐன்ஸ்டீனின் மூளையை 240 துண்டு போட்டு உலகெங்கிலும் உள்ள மூளையியல், நரம்பியல் ஆராய்ச்சியாளர்களுக்குக் கொடுத்தனர். அதை ஆரய்ந்ததில் ஒரு குறிப்பிட்ட (ப்ரீ Fராண்டல் கார்டெக்ஸ்) உறுப்பு அவருக்கு சிறப்பாக அமைந்திருந்ததைக் கண்டனர். இதுதான் அவரை உலகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானியாக்கி இருக்கிறது ((The researchers noted a uniquely formed pre-frontal cortex and concluded that this would explain the kind of abstract thinking Einstein would have needed for his experiments on the nature of space and time – such as imagining riding alongside a beam of light.))

Xxxx

Albert_Einstein_1979_USSR_Stamp

மந்தமான ஐன்ஸ்டீன்!

ஐன்ஸ்டீன் சிறுவயதில் யாருடனும் அதிகம் பேச மாட்டார். தனியாகவே விளையாடுவார். உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி ஆகியன எல்லாம் வயதுக்கேற்றவாறு இல்லை .பேச்சே வரவில்லை. டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். அவரும் இந்தக் குழந்தை – கொஞ்சம் மந்தம்தான் – என்று சொல்லிவிட்டார். பெற்றோர்களுக்கோ பெரும் கவலை.

ஒரு நாள் இரவுச் சாப்பாட்டிற்கு அனைவரும் மேஜையில் அமர்ந்தனர். திடீரென சின்னப் பயல் ஐன்ஸ்டீன், “அம்மா இந்த சூப்பு மிகவும் சூடாக இருக்கிறது” என்று தாய்மொழியில் (ஜெர்மன் மொழியில்) கத்தினான். பெற்றோர்களுக்குத் தூக்கிவாரிப்போட்டது. பேரானந்தம்! ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

“அடப் பாவி மகனே! தேனே! பாலே! கற்கண்டே! என் அமுதமே! குஞ்சு மணியே! ஏனடா இவ்வளவு காலம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை?” என்று சொல்லி கட்டி அணைத்துக் கொண்டனர்.

சின்னப் பையன் ஐன்ஸ்டீன் சொன்னான்:

“இவ்வளவு காலம் வரை எல்லாம் சரியாக இருந்தது!” (அதனால் பேசத் தேவை எழவில்லை).

இதற்குப் பின்னர் இப்படி சிறு வயதில் வளர்ச்சி குன்றி, பிற்காலத்தில் பெரும் மேதைகளாக வரும் “நோய்க்கு” ஐன்ஸ்டீன் சிந்Dரோம் என்று பெயர் சூட்டினர் மருத்துவ வல்லுநர்கள்.

உங்கள் பிள்ளை கொஞ்சம் மந்தமாக இருந்தால் கவலைப்படாதீர்கள்” யார் அறிவார்? ஐன்ஸ்டீனை விடப்பெரிய கண்டுபிடிப்புகளைச் செய்யக் கூடும்!!!

Xxxxxx

mocambiqe

ஐன்ஸ்ட்டீனும் கடவுளும்

ஐன்ஸ்டீனுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா? அவரே சொன்ன பதில்:–

ஒரு சிறுவன் ஒரு நூலகத்தில் நுழைகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சிறுவன் வியப்பான் இவ்வளவு புத்தகங்களையும் யார் எழுதியது? எவ்வளவு மொழிகள்? யாரோ இதை அழகாக ஒரு வரிசையில் வைத்திருக்க வேண்டும் என்று அந்தைப் பையன் வியப்பான். நூல்களை அடுக்கியவரோ, புத்தகத்திலுள்ள மொழிகளோ , அவைகளின் ஆசியரோ – யாரையும் அவனுக்குத் தெரியாது.

எவ்வளவு பெரிய அறிஞரானாலும் இப்படித்தான் பிரபஞ்சத்தைப் பார்த்து வியப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஒரு மர்மமான முறையில் இந்தப் பிரபஞ்சமே இயங்குகிறது. அற்புதமான, அபாரமான ஒரு வரிசைக் கிரமத்தில் இந்தப் பிரபஞ்சம் இயங்குகிறது. அதன் முழு விளக்கங்களும் நமக்குப் புரிவதில்லை”.

s_einstein-8

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்………………………

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்…….. என்று தமிழில் ஒரு பழ மொழி உண்டு. இது போல எல்விஸ் பிரஸ்லி என்ற பாடகர், மர்லின் மன்றோ என்ர நடிகை முதலான பத்துப் பேர் இறந்த பின்னரும் அவர்களின் பாடல், நடிப்பு, பெயர்கள், பிராண்டுகள் மூலம் ஏராளமான ராயல்டி தொகை கிடைக்கிறது. அதாவது உலகிலேயே பெரிய பத்து – செத்துப் போன—இப்போது பணம் உண்டாக்கும் பணக்காரர்கள்– என்று சொல்லலாம். இந்த பத்துப் பேரில் ஐன்ஸ்டீனும் ஒருவர். ஆண்டுக்கு அவர் பெயர் – புகழ் – மூலம் கிடைக்கும் வருவாய் இருபது மில்லியன் ( 2 கோடி) டாலர்கள்!!!

Einstein.stamp

–சுபம்–