WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,605
Date uploaded in London – – 28 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பண்டிகைகள் – பிப்ரவரி 8- ரத சப்தமி; 8- பீஷ்மாஷ்டமி ; 16/17 மாசி மகம்- பல கோவில்களில் தெப்பத் திருநாள்
(மாசி மகம் –17; ரத சப்தமி –8; பாம்பு பஞ்சாங்கத்தில் பிப்ரவரி எட்டாம் தேதி ரத ஸப்தமி , பீஷ்மாஷ்டமி இரண்டும் போடப்பட்டுள்ளது)
பெளர்ணமி பிப்.16;
பிப்ரவரியில் அமாவாசை கிடையாது
ஏகாதஸி விரத நாட்கள் – 11, 26
சுபமுஹூர்த்த நாட்கள் – பிப்ரவரி 6, 11, 14
xxxx
பகவத் கீதை பொன் மொழிகள் ,மேற் கோள்கள்
பிப்ரவரி 1 செவ்வாய்க் கிழமை
ந மே பக்த ப்ரணச்யதி (9-31): என் பக்தன் அழியவே மாட்டான்)
xxxx
பிப்ரவரி 2 புதன் கிழமை
பரித்ராணாய சாதூணாம், விநாசாய துஷ்க்ருதாம் (4-8) :
சாதுக்களைக் காத்தற்கும், துஷ்டர்களை அழிப்பதற்கும் யுகம் தோறும் அவதரிப்பேன்.
xxx
பிப்ரவரி 3 வியாழக் கிழமை
சம்யாத்மா விநஸ்யதி(4-40) : ஞானம் இல்லாதவன் சிரத்தை இல்லாதவன் சந்தேகம் உடையவன் அழிகிறான் அவர்களுக்கு இவ்வுலகும் இல்லை, அவ்வுலகும் இல்லை.
xxxx
பிப்ரவரி 4 வெள்ளிக் கிழமை
கர்மன் ஏவ அதிகாரஸ்தே மா பலேஷூ கதாசன (2-47): கருமத்திலேயே உனக்கு அதிகாரம், ஒருபோதும் பலனில் இல்லை
xxx
பிப்ரவரி 5 சனிக் கிழமை
க்லைப்யம் மாஸ்ம கம: ந ஏதத் த்வயீ உபபத்யதே(2-3) :
பேடித்தனத்தை அடையாதே.இது உன்னிடத்தில் சிறிதும் பொருந்தாது
xxxx
பிப்ரவரி 6 ஞாயிற்றுக் கிழமை
ஆசை, பயம் கோபம் இல்லாதவர்கள், என்னைச் சரண் அடைந்தவர்கள் என் தன்மையை அடைந்திருக்கிறார்கள் (4-10).
Xxxx
பிப்ரவரி 7 திங்கட் கிழமை
ந ஜாயதே ம்ரியதே வா கதா சிந் நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
(2-20) ஆத்மா ஒருபோதும் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. இல்லாமல் இருந்து மறுபடியும் உண்டாவதும் இல்லை. என்றும் உள்ளது, அழியாதது.
xxxx
பிப்ரவரி 8 செவ்வாய்க் கிழமை
பண்டிதா: சம தர்சின (5-18): பிராமணன்,பசு, யானை, நாய், புலையன் எல்லோரையும் சமமாகப் பார்ப்பவனே ஞானி
xxxx
பிப்ரவரி 9 புதன் கிழமை
ந ஹி கல்யாண க்ருத் கஸ்சித் துர்கதிம் தாத கச்சதி (6-40) : நல்லதைச் செய்பவன் எவனும் நிச்சயமாக தீய நிலையை அடையவே மாட்டான்.
xxxx
பிப்ரவரி 10 வியாழக் கிழமை
யத் யத் ஆசரதி ஸ்ரேஷ்ட: தத் ததேவ இதர ஜன: (3-21):
பெரியவன் ஒருவன் எதைச் செய்கிறானோ அதையே ஜனங்களும் பின்பற்றுவர்.
xxxx
பிப்ரவரி 11 வெள்ளிக் கிழமை
ஆசையும் அதற்குக் காரணமான சங்கல்பமும் இல்லாமல் வினைகளை ஞானத்தீயில் யார் ஒருவன் பொசுக்குகிறானோ அவனே பண்டிதன்(4-19)
xxxx
பிப்ரவரி 12 சனிக் கிழமை
ஸ சாந்தி மாப்னோதி ந காம காமி (2-70) : ஆசையுள்ளவனுக்கு அமைதி இல்லை.
Xxx
பிப்ரவரி 13 ஞாயிற்றுக் கிழமை
வேள்வி செய்தால் தேவர்கள் உங்களுக்கு இன்பம் தரும் பொருட்களைத் தருவார்கள். அவர்கள் கொடுத்ததை அவர்களுக்குக் கொடுக்காமல் உண்பவன் திருடனேயன்றோ? (10-12)
xxxx
பிப்ரவரி 14 திங்கட் கிழமை
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் (9-26): எவன் எனக்கு பக்தியுடன் பச்சிலையோ, பூவோ, பழமோ, தீர்த்தமோ தூய்மையுடன் கொடுக்கிறானோ அதை நான் புசிக்கிறேன்.
xxx
பிப்ரவரி 15 செவ்வாய்க் கிழமை
உத்திஷ்ட, யசோ லபஸ்வ (11-33): எழுந்திரு, புகழ் அடை.
xxx
பிப்ரவரி 16 புதன் கிழமை
சர்வ பூத ஹிதே ரதா(12-4, 11-55): தே மாம் ஏவ ப்ராப்னுவந்தி: எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க நினைப்பவர்கள் என்னையே வந்து அடைகிறார்கள்.
xxxx
பிப்ரவரி 17 வியாழக் கிழமை
உத்தரேத் ஆத்மநாத்மானம்: தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டும்.தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது.தனக்குத் தானே நண்பன், தனக்குத் தானே பகைவன்(6-5).
xxx
பிப்ரவரி 18 வெள்ளிக் கிழமை
ஆத்மவான் பவ: (2-45) : உன்னையே நீ அறிவாய்
xxx
பிப்ரவரி 19 சனிக் கிழமை
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ (18-66): எல்லா தருமங்களையும் விட்டுவிட்டு என்னையே சரண் அடை. நான் உன்னை எல்லா பாபங்களிலும் இருந்தும் விடுவிக்கிறேன்.
Xxxx
பிப்ரவரி 20 ஞாயிற்றுக் கிழமை
நாலு பேர் என்னைத் தேடி வருகிறார்கள் (7-16) -சதுர்விதா ஜனாஹா பஜந்தே மாம் – துயரம் உள்ளவன், ஞானத்தை நாடுபவன், பணம் வேண்டியவன், ஞானி
xxx
பிப்ரவரி 21 திங்கட் கிழமை
தமக்காகவே சமைப்பவர்கள் பாவத்தையே உண்கிறார்கள் (12-4).
xxx
பிப்ரவரி 22 செவ்வாய்க் கிழமை
சாதுர்வர்ண் யம் மயாசிருஷ்டம் குண கர்மா விபாகஸஹ 11-13 நான் குணங்களுக்குத் தக்கபடி நான்கு வர்ணங்களை / பிரிவுகளை உருவாக்கினேன்
Xxxx
பிப்ரவரி 23 புதன் கிழமை
எவர்கள் என்னை எவ்வாறு வழிபடுகிறார்களோ , அவர்களை நான் அவ்வாறே அனுக்ரஹிக்கிறேன் / அருளாசி வழங்கி ஆதரிக்கிறேன் – யே யதா மாம் பிரபத்யந்தே தாம் ததய்வ பஜாமஹம் 4-11
XXX
பிப்ரவரி 24 வியாழக் கிழமை
நரகத்தின் மூன்று வாசல்கள் -(16-21) – காமம், கோபம், லோபம்/பேராசை
xxx
பிப்ரவரி 25 வெள்ளிக் கிழமை
ஓடு , பொன் ஆகிய இரண்டையும் ஒன்றாகப் பார்ப்பவன் குணக் குன்று ஆவான் 14-21
XXXX
பிப்ரவரி 26 சனிக் கிழமை
ச்ரத்தாவான் லபதே ஞானம் 4-39; முயற்சியுள்ளவன் ஞானத்தை அடைகிறான்
XXX
பிப்ரவரி 27 ஞாயிற்றுக் கிழமை
அசுரர்கள் என்னை வணங்குவதில்லை – ந மாம் ப்ரபத்யந்தே ஆஸுரம் பாவம் ஆச்ரிதாஹா – 7-15
XXX
பிப்ரவரி 28 திங்கட் கிழமை
சும்மா இருப்பதைவிட காரியங்களை செய்வது சிறந்தது 7-8
xxx
BONUS QUOTES
பல பிறப்புகளுக்குப் பின்னரே முடிவில் ஞானவான் என்னை வந்தடைகிறான் – 17-19
XXXX
வேதங்களுள் நான் ஸாம வேதமாக இருக்கிறேன் 10-22
XXXX
சேனாதிபதிகளில் நான் முருகன் – 10-24
XXXX
மரங்களுள் நான் அரச மரம் என்று அழைக்கப்படும் அஸ்வத்த மரம் ஆவேன் 10-28
XXXX Subham xxxx
tags- பகவத் கீதை பொன் மொழிகள் ,மேற் கோள்கள்