Written by London Swaminathan
Date: 31 DECEMBER 2017
Time uploaded in London- 9-32 am
Post No. 4568
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks
மௌனத்தின் மஹிமை: சாணக்கியன் ஆராய்ச்சி (Post No.4568)
உணவு அருந்த போது மவுனமாக இருக்க வேண்டும் யார் சொன்னார்? உலக மஹா அறிவாளி சாணக்கியன்
இதன் தாத்பர்யம் நமக்கும் புரியும். உப்பு போடவில்லை அல்லது உப்பைக் கூடுதலாகப் போட்டுவிட்டாய்; ஒரே புளிப்பு, ஒரே உரைப்பு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மனைவியையோ அம்மாவையோ, ஹோட்டல் சர்வரையோ திட்டிக் கொண்டே சாப்பிடுபவர்களைக் கண்டுள்ளோம்.
இதில் இரண்டு ஆபத்துகள் உண்டு:
ஒன்று நம் கோபத்தால் உடலில் ஏற்படும் நாடித் தளர்ச்சி, AFRINALIN அற்றினலின் சுரப்பு ஆகியன உடல் நலத்தைப் ,,,,,,,,,,,,திக்கும்
இரண்டாவது ஆபத்து- உணவு பரிமாறுவோரின் உள்ளக் கிளர்ச்சியும் மன வருத்தமும் நம்மைக் கட்டாயம் பாதிக்கும்.
இதனால் சாணக்கியன் சொல்கிறான்:–
யஸ்து ஸம்வத்ச்ரம் பூர்ண நித்யம் மௌனேன முஞ்சதி
யுக கோடி ஸஹஸ்ரம் து ஸ்வர்கலோகே மஹீயதே
—
சாணக்கிய நீதி, அத்தியாயம் 11 , ஸ்லோகம் 9
பொருள்
எவன் ஒருவன் ஓராண்டுக் காலத்துக்கு மௌனமாக உணவு அருந்துகிறானோ, அவனுக்கு ஆயிரம் கோடி யுகங்களுக்கு ஸ்வர்க லோகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
இது கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகத் தோன்றலாம். ஆனால் இதன் உட்கருத்து மௌனமாக உண்க; மதிப்பு பெறுக – என்பதே.
பிராமணர்கள் தினமும் உணவை நீரினால் சுற்றி மந்திரம் சொல்லிச் சாப்பிடுவர். அதில் அந்த உணவை அமிர்தம் என்று போற்றுவர். இதனால் அவர்களின் ஆரோக்கியமும் மந்திர சக்தியும் பெருகியது. சாப்பிட்டு முடியைந்தவுடன் ‘’அன்னதாதா சுகி பவ’’ என்று ஆஸீர்வதிப்பர்; உண்டி கொடுத்தோர் நீடுழி வாழ்க என்பது இதன் பொருள்.
கிறிஸ்தவர்கள் உணவை உண்ணும் முன், அதை வழங்கிய ஆண்டவனுக்கு நன்றி சொல்லிச் சாப்பிடுவர்.
முன்னோர்களின் சடங்குக்ள் உளவியல் ரீதியில் நற்பலன்களை விளைவிக்கும்.
நமது காலத்தில் மவுனத்தின் மூலம் அருள் வழங்கிய ரமண மஹரிஷியை நாம் அனைவரும் அறிவோம்.
மௌனப் ப்ரார்த்தனையின் மஹிமை
இன்னொரு பாட்டில் மௌனப் பிராத்தனையின் மஹிமையைச் சொல்கிறார்:
உத்யோகே நாஸ்தி தாரித்யம் ஜபதோ நாஸ்தி பாதகம்
மௌனே ச கலஹோ நாஸ்தி நாஸ்தி ஜாகரிதே பயம்
–சாணக்கிய நீதி, அத்தியாயம் 3, ஸ்லோகம் 11
முயற்சி திருவினை ஆக்கும்; அங்கே வறுமை தலைக் காட்டாது. மௌனப் பிரார்த்தனை செய்பவனுக்குப் பாபம் ஒட்டாது; மவுனமாக இருக்கும் இடத்தில் சண்டை சசச்சரவுகள் தோன்றாது; விழித்திருப்பவனுக்கு அச்சம் என்பதே கிடையாது.
நல்ல ஸ்லோகம். கோபத்தில் சுடு சொற்களைப் பொழிந்துவிட்டு எவ்வளவு கஷ்டப்படுகிறோம்! எவ்வளவு வருத்தப்படுகிறோம். அதன் விளைவுகள் எவ்வளவு பயங்கரமானவை? ஆட்சிகள் கவிழ்கின்றன; குடும்பங்கள் பிரிகின்றன. இதை எல்லாம் அறிந்தும் நாம் தவறிழைக்கிறோம்!
பிரார்த்தனையில் சிறந்தது மௌனப் பிரார்த்தனை. அதற்கு பன் மடங்கு சக்தி அதிகம். முதலில் உரத்த குரலில் சொல்லிப் பழகிவிட்டால் பின்னர் மௌனப் பிரார்த்தனை எளிதாகும்.ஜபம் என்பதே மௌனமாகப் பிரார்த்திப்பதே!
My old articles on Silence and Prayer.
https://tamilandvedas.com/tag/ஜோதி/
… மௌனம் அனுஷ்டிக்கிறார்களாம்! ஏனெனில் வாயைத் திறந்தால் சொல் குற்றம் வந்து விடுமோ என்று! யூத மதத்தை எடுத்துக் கொண்டால் அங்கும் சொற்களை ஜாக்கிரதையாகப் பிரயோகம் செய் என்றே கூறுகிறது. அதிலும் பிரார்த்தனைபுரிவதில் சொல்லுக்குள்ளே ஜோதியைக் …
பிரார்த்தனை, செய்வது எப்படி? – Tamil and Vedas
https://tamilandvedas.com/…/பிரார்த்தனை-செய்…
எனக்குச் செல்வம் வேண்டும்; நான் புகழ் பெற வேண்டும்; எனக்கு அதிகாரம் வேண்டும்; நான் அமைச்சராக வேண்டும், எனக்கு பிள்ளை பிறக்க வேண்டும், எனக்கு நோய் நீங்க வேண்டும் என்றெல்லாம் பலரும் கோவில் உள்ளிட்டபிரார்த்தனை ஸ்தலங்களில் பிரார்த்தனை புரிவதை …
Missing: மௌனப்
நீண்ட ஆயுளுக்கு வேதப் … – Tamil and Vedas
https://tamilandvedas.com/…/நீண்ட-ஆயுளுக்கு-…
நீண்ட ஆயுளுக்கு வேதப் பிரார்த்தனை! (Post No.4206). Written by London Swaminathan. Date: 12 September 2017. Time uploaded in London- 17-35. Post No. 4206. Pictures are taken from various sources; thanks. வேத கால நிஷிகள் என்ன வேண்டினர் என்று ஒரு கட்டுரையில் கண்டோம். உலகின் பழமையான நூலில் மனிதனின் ஆயுள் 100 ஆண்டு …
–SUBHAM–