இந்துக்களின் நரபலி யக்ஞம்! 179 பேர் ‘படுகொலை’? (Post No.4270)

Written by London Swaminathan

 

Date: 4 October 2017

 

Time uploaded in London- 11-07 am

 

Post No. 4270

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

உலகில் ரிக் வேதத்தை அலசி ஆராய்ந்தது போல வேறு எந்த மத நூலையும் எந்த வெள்ளைக்காரர்களும் மார்கஸீய வாந்திகளும் ஆராய வில்லை. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி! இவர்கள் எல்லா சமய நூல்களையும் இப்படி அணுகி இருந்தால் இவர்கள் ‘யோக்கியர்’கள். ஆனால் மற்ற சமய நூல்களில் சொன்னவற்றை நியாயப்படுத்தி எழுதினார்கள் (குத்து, வெட்டு, கொலை செய், கற்பழி) அவைகளைக் குறைகூறவில்லை. சுமார் 50 வெள்ளைத் தோல்களும் , நூற்றுக்  கணக்கான மார்கஸீய வாந்திகளும் இந்திய வரலாறு பற்றி எழுதியதை இன்றுவரை பாட புத்தகத்தில் வைத்துள்ளனர். நான் மதுரை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. சரித்திரப் பட்டம் வாங்கியவன். ஆனால் காஞ்சி பரமாசார்ய சுவமிகளின் உபந்யாசங்களில் உள்ள சரித்திரம் எதுவும் அதில் இல்லை. மார்கஸீய, காங்கிரஸ் தில்லுமுல்லுகள் எழுதிய — வெள்ளைக்கார்கள் எழுதிய —-டல்ஹௌசி பிரபுவின் சீர்திருத்தம், ‘ரிப்பன் எங்கள் அப்பன்’ என்று போற்றுவது ஏன்? என்று பல பாடங்களைப் படித்துதான் பட்டம் வாங்கினேன்.

ஆனால் 70 வருடங்களுக்கு முன் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் பேசிய உரைதனில் பேசிய போர்னியோவின் அடர்ந்த காட்டுக்குள் மூல வர்மனின் நாலாவது நூற்றாண்டுக் கல்வெட்டு கண்டு  பிடிக்கப்பட்டதும், துருக்கியில் கி.மு 1380 ஆண்டு வேத கால தெய்வக் கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டதும் எந்த சரித்திரப் புத்தகத்திலும் இல்லை. மத் தியப்பிரதேசத்தில் தாரா என்னும் இடத்தில் மசூதிக்குள் சம்ஸ்கிருத இலக்கணக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதெல்லாம் அவர்களுடைய சொற்பொழிவு மூலம் அறிந்ததே!

 

அயோக்கியர் எழுதிய வரலாற்றை விட்டு விட்டு வெள்ளைத் தோல் எழுதியவற்றுக்கு வருவோம். வேத கால இலக்கியங்களை சுமார் 50 வெள்ளையர்கள்– இல்லை இல்லை கொள்ளையர்கள்—- ஆராய்ந்து பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன், லத்தீன் மொழிகளில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் நூற்றுக் கணக்கான நூல்களையும் எழுதிக் குவித்துள்ளனர். அவைகள் ஆங்கிலத்தில் உள்ளதால் அவை எல்லாம் பெரிய ஆராய்ச்சி நூல்கள் என்று அக்காலத்தவர் கருதினர் (ஆனால் உண்மையைச் சொல்லிவிடுகிறேன்; அவைதான் எனக்கும் பயன்படுகின்றன! அவற்றைப் படித்தபின்னர் அவர்களே அவர்களை முட்டாள் என்று காட்டிவிட்டனர் என்பதாவது எனக்குத் தெரிந்தது)

 

வேதங்கள் நான்கு: ரிக், யஜூர், சாமம், அதர்வணம்.

அவற்றை அடுத்து வந்தவை பிராமணங்கள் எனப்படும் உரைநடை இலக்கியம். இவை பிரம்மாண்ட அளவில் இருக்கின்றன. அப்போது மோசஸ் பிறக்கவில்லை . இதுவரை மோஸசுக்கு வரலாற்று ஆதாரம் தொல்பொருட்துறை ஆதாரம் கிடைக்கவில்லை ஆனால் அவர்தான் மூன்று மதங்களுக்குத் தலைவர்!!!

 

வெள்ளைக்கார  “யோக்கியர்” இதை எல்லாம் உங்களுக்குச் சொல்ல மாட்டார்கள். விக்கிபீடியாவைப் படித்து நீங்களே தெரிந்து கொள்ள வேண்டும்.

நம்மூர் திராவிட தத்துப் பித்துகளுக்கும் “கெக்கெப் பிக்கே”க்களுக்கும் இது புரியாது. அவ்வளவு மூளை!!!!

பிராமண்ட பிராமண நூல்களை அடுத்து வந்தவை ஆரண்யகங்கள் ( காட்டு நூல்கள்) அவற்றை அடுத்து வந்தவை உலகப் புகழ் பெற்ற உன்னத உபநிஷத்துகள்.

 

சம்ஸ்கிருத இலக்கியத்துக்கு வரலாற்று, தொல்பொருட்டுறை ஆதாரங்கள் இருக்கின்றன; கி.மு 1400 முதல்; சரஸ்வதி நதியின் விஞ்ஞானச் செய்திகள், வேதங்களை கி.மு 2000க்கு முந்தியவை என்று காட்டிவிட்டன. சுருங்கச் சொன்னால் வேதங்களோ பிராமணங்களோ தோன்றிய காலத்தே  உலகில் தமிழ் மொழி இல்லை, கிரேக்க மொழி இல்லை, லத்தீன் மொழி இல்லை; கொஞ்சம் சீன மொழியும், ஹீப்ரூ /எபிரேய மொழியும் இருந்தன. மற்ற மொழிகள் இன்று மியூசியங்களில் உள்ளன.

 

ஆக இவ்வளவு பழமையான பிராமண இலக்கியங்களில் என்சைக்ளோபீடியா போல பல விஷயங்கள் உள்ளன அவற்றின் சப்ஜெட்களை- பொருளடக்கம், இன்டெக்ஸ் போட்டாலே அவர்கள் பிரஸ்தாபிக்கும் விஷயங்களின் பட்டியல் கிடைத்துவிடும்! கணிதம், வான சாத்திரம், அரசனின் பட்டாபிஷேகம் முதலியன குறித்து அவர்கள் சிலாகிக்கும் விஷயங்களைக் கண்டால், வெள்ளைக்காரன் எழுதியது எல்லாம் நல்ல ஜோக் புக்ஸ் JOKE BOOKS என்று நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்கும்; பசுமரத்தாணி போலப் பதியும்.

 

179 பேர் படுகொலை! நரபலி!!

பிராமண நூல்களில் அஸ்வமேத யாகம், ராஜ சூய யாகம், புருஷமேத யாகம் குறித்துப் படித்த வெள்ளைக் காரர் களுக்கு ஒரே குஷி; மாக்ஸ்முல்லர் போன்ற ஜெர்மானிய கூலிகள், இது என்னத் தத்துப் பித்து உளறல் என்று பரிகசித்தனர். இதை வைத்தே இந்துமதத்தை கோழிகளைக் கூடைக்குள் அமுக்குவது போல ஒரே அமுக்காக அமுக்கிவிடுகிறேன் பார் என்று கொக்கரித்தார்கள்; மெக்காலே போன்றோர் இந்த வேகத்தில் ஆங்கில கல்வி பரவினால் இந்தியாவும் இராது; இந்துமதமும் இராது என்று எழுத்தில் வடித்தனர். நம்மூர் திராவிடங்களும் ஜஸ்டிஸ் கட்சிகளும் பலமாக மண்டையை ஆட்டின.பரிதபக் கேஸுகள்!!!

 

சோழன் பெருநற்கிள்ளி ராஜசூய யக்ஞம் செய்தது புற நானூற்றில் உள்ளது. பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி அஸ்வமேத யாகம் செய்தது புறநானூற்றிலும் காளிதாசனின் ரகுவம்சத்திலும் — குறிப்பால் உணர்த்தப்படுகிறது. சோழப் பேரசன் கரிகால் பெருவளத்தான் பருந்து வடிவ யாக குண்டம் நிறுவி வேள்வி வேட்டதும், ரிக் வேதம் சொல்லுவது போல எல்லோரையும் ஏழு அடி நடந்து வழியனுப்பியதையும் புற நானூறும் ஏனைய சங்க நூல்களும் செப்புகின்றன. வருணனையும், இந்திரனையும், விஷ்ணுவையும் தமிழ்க்கடவுள்கள் என்று ‘ஒல்காப்புகழ் தொல்காப்பிய’னும் செப்பி விட்டான். இந்த 2000 ஆண்டுக்கு முந்தைய விஷயங்கள் வெள்ளைக்காரர்

களுக்குத் தெரியாது!

 

கால்டுவெல் போன்றோர் உளறிய உளறல்களை மரத் (மறத்) தமிழர்கள் ஆங்காங்கே மறுத்து அடிக்குறிப்பு சேர்த்தனர்.

 

பிராமண நூல்களில் சதபத, ஐதரேய , தைத்ரீய பிராமணங்கள் யாக யக்ஞ்ங்களை விரிவாக எடுத்துரைக்கின்றன. அதில் தைத்ரீய பிராமணம் யஜூர் வேதத்தைச் சேர்ந்தது. அதில் புருஷமேத யக்ஞம் எனப்படும் நரபலி யக்ஞத்தில் 179 பேர் தீயில் ஆகுதி அளிக்கப்பட்டதாக பட்டியல் உள்ளது அதைப் அடித்த வெள்ளைகளுக்கு ஒரே ஆனந்தம்! இந்துக்களைக் காட்டுமிராண்டிகள் என்று காட்ட இது ஒன்று போதுமே என்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர். ஆனால் பட்டியலை வெளியிட்டால் அவர்கள் குட்டு வெளிப்பட்டுவிடும்!

 

மாக்ஸ்முல்லர், கால்டுவெல் போன்ற அரை வேக்காடுகள்– மான் தோல் போர்த்திய புலிகள்  — சாயனர் சொன்ன வியாக்கியானத்தைச் சொல்வதாக சொல்லி — அவர் சொல்லாத விஷயத்தையும் சேர்த்தனர்-

 

 

‘ஆரிய’ என்ற சொல்லின் பொருளை ‘ரிஷி முனிவர்கள்’, ‘வடக்கில் இமயத்தின் அடிவாரத்தில் வாழ்பவர்கள்’- ‘சம்ஸ்கிருத மந்திரங்களில் வல்லவர்கள்’- ‘பண்பாடு மிக்கவர்கள்’- ‘நாகரீகம் தெரிந்தவர்கள்’- ‘மாண்புமிகு’– என்ற உண்மைப் பொருளைப் பாரதி பாடல்களிலும் புற நானுற்றிலும் காணலாம்– மாக்ஸ்முலர் வகையறாக்கள் ஆரியர் என்பது ஒரு இனம் என்றும் அதில் தானும் ஒருவன் என்றும்- அவர்கள் ஜெர்மனி முதலிய இடங்களில் வாழ்ந்தனர் என்றும் இந்தியாவுக்குள் கி.மு 1500 வாக்கில் நுழைந்திருக்கலாம் என்றும் கதை கட்டினர். இவை எல்லாமின்று ‘பொய்யாய்ப் பழங்கதையாய்ப்’ போய்விட்டன.

 

ஏனெனில் சரஸ்வதி நதியின் விஞ்ஞான ஆராய்ச்சியும் நாஸா NASA புகைப்படங்களும் வெள்ளைத் தோலை உரித்துவிட்டன.

பிராமண நூல்களில் புருஷமேத யக்ஞத்தில் பலியிடப்பட்ட, அல்லது பலியிடப்பட வேண்டிய 179 பேரின் பட்டியல் உள்ளது. எனது ஆங்கிலக் கட்டுரையில் — மூன்று கட்டுரைகளில் – 179 பேரின் பட்டியலையும் கொடுத்துவிட்டதால் இங்கே தரப்போவதில்லை..

 

அதிலிருந்து நமக்குத் தெரியவரும் உண்மைகளை மட்டும் விண்டுரைப்பேன்!

 

1.தீயில் தூக்கிப் போட வேண்டிய முதல் ஆள் பிராமணன் என்று பட்டியல்  துவங்குகிறது. இதைப் படித்தவுடன் வெள்ளைத்தோல்களுக்கு உப்புச் சப்பில்லாமல் போய்விட்டது. சூத்திரன், ராக்ஷசன், அசுரன் என்று சொல்லி இருந்தால் , பார்த்தீர்களா பிராமணர்களின் அட்டூழியங்களை என்று எழுத முடியும்.

2.இதற்குப் பின்னர் போர் வீரன், வணிகப் பெருமகன், சூத்திரன் ஆகியோர் வருகின்றனர்.

 

  1. இந்தப் பட்டியல் மறை மொழியில் உள்ளது. அதாவது ஒரு சமுதாயம் என்பது இவர்கள் இல் லாமல் இல்லை என்று உணர்த்த எழுதப்பட்டது போல உளது. காரணம் என்னவெனில் இப்படி ஒரு யாகம் நடந்ததாக எங்குமே தகவல் இல்லை. பல நூறு ராஜாக்களில் ஒருவரான ஹரிசந்திரன் காலத்தில் சுனஸ்சேபனைப் பலிகொடுக்க முயன்றபோது புரட்சித்தலைவர் விசுவாமித்ரர் தடுத்துவிட்டதாத இருக்கிறது. சிறுத்தொண்டர் (பெரிய புராண) ஆதி சங்கர நரபலி முயற்சிகளும் காபாலிகர்களால் முயலப்பட்டதே அன்றி புருஷ மேத யக்ஞத்தின் பகுதியாகாது. மேலும் சங்கரர், சிறுத்தொண்டர் கதைகளும் தமிழ்த் திரைப்படங்கள் போல இனிதே- சுபம் – என்றே முழுமை பெறுகின்றன.

 

  1. 179 பேர் பட்டியலில் பல சொற்களுக்கு வெள்ளைகளுக்கே அர்த்தம் புரியவில்லை; விளக்கம் இன்றி அப்படியே எழுதிவிட்டனர்.

 

  1. இந்தப்படியலில் டாக்டர், வான சாத்திர அறிஞன், பொற்கொல்லன் ரதகாரன், கொல்லன், இசை துறை கலைஞர்கள், நாட்டிய சிகாமணிகள், இசைக்கருவி வாசிப்போர், மன்னருக்கு வரிவசூல் செய்வோர், மன்னருக்குப் பட்டாபிஷேகம் செய்வோர் ஆகியோரும் உள்ளது. அதாவது, இவர்கள் ஒவ்வொருவராக தீயில் போடப்பட வேண்டும்

 

ஆக இந்தப் பட்டியலை இலக்கிய பூர்வமாக, எழுத்துக்கு எழுத்து அர்த்தம் செய்ய முடியாது என்று கண்ட வெள்ளைகளும்  மார்கஸீய வாந்திகளும் பேசாமடந்தை ஆகிவிட்டன. இதைப் பற்றி பிரஸ்தாப்பிபதைவிட இதை தொட்டும் தொடாமலும் பட்டும் படாம லும் சொல்லிவீட்டு அந்தக் காலத்தில் — ஆதிகாலத்தில் — இருந்த நரபலியின் எச்சம் -சொச்சம்- மிச்சம்- மீதி என்று ஒரு வரி எழுதி விட்டு ஓடிப்போய் விட்டார்கள்

 

வெடிகுண்டு வெடிக்கலாம் என்று வந்த பயங்கரவாதிகளுக்கு புஸ்வாணமே கிடைத்தது!!!!!

 

  1. இதைவிட இன்னொரு விஷயம் என்னவென்றால் 50 வெள்ளைகளும் 100 மார்கஸீயங்களும் 1000 திராவிடங்களும் ஒரு மந்திரக் கருத்திலும் ஒருமித்த கருத்து கொள்ளவில்லை. ஆரியர் கள் வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் என்று மட்டும் சொன்னால் போதும்– காட்டினால் போதும்– 300 வருஷம் நம்மை ஆண்ட வெள் ளையன் தயவும் ரொட்டித் துண்டும் கிடைக்கும் என்று வா லாட்டின.

7. இதைவிடப் பெரிய விசயம் என்ன வென்றால், கி,மு.1200ல் படிப்பறிவற்ற –மாடு மேய்க்கும்—அநாகரீகக் கும்பல் கைபர் கணவாய் வழியாக நுழைந்தது என்று சொல்லிவிட்டு- கிமு. 1000ல் அவர்கள் பிராமணங்களில் சொன்ன விஷயங்களைப் பட்டியல் போடுவது – “சூடான ஐஸ்க்ரீம்” என்று சொல்லுவது போல இருந்தது. உலகில் எந்த நாகரீகமும் இப்படி வளர்ந்ததாக சாட்சியம் இல்லை. நாம் சுமேரிய, எகிப்திய நாகரீகம் பற்றிப் படிப்பதெல்லாம் 5000 ஆண்டு வரலாறு. ஆக அதே அளவுகோலை இந்துக்களுக்கும் வைத்தால் நாம் 10,000 ஆண்டு வரலாறு உடையவர் ஆகி விடுவோம். அது எப்படி?

பிரம்மாண்டமான வேத இலக்கியமும் பிராமணங்களும் உருவான போது உலகில் வேறு எந்த இலக்கியமுமே இல்லை. எகிப்திய, பாபிலோனிய இலக்கியம் எல்லாம் மியூசியங்களுக்குப் போய்விட்டன. ஆனால் ரிக்வேதச் சொற்களை, கொட்டாம் பட்டி காய்கறிக்கூடைக் கிழவி முதல் இமயமலை ரிஷிகேஷ் பண்டிதர்வரை இன்று வரைப் பேசி வருகின்றனர்; போற்றி வருகின்றனர். நமக்குத் தெரிந்த தமிழ், லத்தீன், கிரேக்கம் ஆகியவற்றுக்கு அப்போது இலக்கியமே இல்லை. ஹீப்ருவீல் அதற்குப் பின்னர்தான் மோசஸ் கதைக்கத் துவங்கினார். அவருக்கும் வரலாற்று ஆதாரம் இல்லை. இலக்கிய ஆதாரம் மட்டுமே உளது. சீன மொழிக் கவிதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உளது. அழிந்து போன எகிப்திய, பாபிலோனிய  கவெட்டுகளும் ஜில்காமேஷ் போன்ற பிதற்றல்களும் உப்பு புளி எண்ணை விற்ற கணக்குகளுமாக உளது. 1,20,000 களிமண் கல்வெட்டுகள் கிடைத்தன. ஆயினும் ரிக்வேதம் போல ஒரு கவிதைத் தொகுப்பு கிடையாது. நாமோ அதை வியாசர் கி.மு 3102-க்கு முன் தொகுத்ததாகப் படிக்கிறோம்.

 

ஆக, நரபலி யாகம் நடக்கவில்லை. அதில் பிராமணன் முதலான 179 பேரைத் தீக்கிரையாக்கவும் இல்லை. அவர்கள் வேள்வி என்று சொன்ன சொல் பிறகாலத்தில் பகவத் கீதையில் வேள்வி என்ற சொல் பல விஷயங்களுடன் இணைக்கப்பட்டது போலப் பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.

 

நானே வெள்ளைக்கரன் மொழிபெயர்ப்பை வைத்துதான் இவ்வளவையும் எழுதுகிறேன். அவன் எத்தனை தப்பு விட்டானோ? திரித்து எழுதினானோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இந்து அறிஞர்கள் மஹா நாடு கூட்டி ரிக் வேதத்தில் உள்ள 10,000 மதிரங்களுக்கும் உண்மைப் பொருளைக் கண்டறிய வேண்டும் அல்லது கான்சி பரமாசார்ய சுவாமிகள் போன்ற பெரியோர்கள் சொல்லுவது போல அவைகளை அர்த்தம் பாராமல் மந்திரங்களாக உச்சரிக்க வேண்டும். எதிர்காலத்தில் வரப்போகும் ஆதிசங்கரர்களும் வியாச மகரிஷிகளும் நமக்கு விளக்கம் தருவர் என்று நம்புவோமாக.

 

TAGS: இந்து, நரபலி, யக்ஞம், புருஷமேதம், 179 பேர் படுகொலை

 

-சுபம்—

 

400 வகை யாகங்கள்: காஞ்சி பரமாசார்யார் உரை

rudra baba

Sri Sathya Sai Baba in Ati Rudra Maha Yagna

By London Swaminathan லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் — 890 தேதி 6 மார்ச் 2014

சென்னையில் 20-11-1932-ல் ‘ஹவிர் யக்ஞங்களும் ஸோம யக்ஞங்களும்’ என்ற தலைப்பில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள் (காஞ்சி பரமாசார்யார்) நிகழ்த்திய சொற்பொழிவின் சுருக்கம்:

விவாஹ காலத்தில் எந்த அக்கினியை சாக்ஷியாக வைத்துக் கொண்டு விவாஹம் பண்ணுகிறோமோ அதை வரன் வீட்டில் வைத்துக்கொண்டு அதில் ஔபாசனம் ஆரம்பித்துக்கொண்டு ஆயுள்பரியந்தம் அதை வைத்துக் காப்பாற்றிக் கொண்டு வர வேண்டும். வருஷத்தில் ஆறு கர்மாக்கள் ஔபாசனாக்கினியால் பண்ண வேண்டும்.

Homam in front of Sayeeshwara

ஒரு பிள்ளை பிறந்தபின் மயிர் நரைப்பதற்கு முன் அக்னிஹாத்திரம் செய்யவேண்டும். பிள்ளை பிறக்காவிட்டால் அக்னிஹாத்திரம் இல்லை.

ஸந்யாசிக்கு சாதுர்மாஸ்யம் என்று ஒன்று உண்டு. அது ஒரே இடத்திலிருந்து பண்ண வேண்டியது. கிருஹஸ்தனுக்கு அது ஒரு யாகம். அக்கினியாதனம், அக்னிஹாத்திரம், தரிசபூர்ணமாஸம், ஆக்ரஹாயணி, சாதுர்மாஸ்யம், பசுபந்தம், சௌத்ராமணி என்னும் ஏழும் ஹவிர் யக்ஞங்கள்.
வேறு சில சொற்பொழிவுகளில் அவர் கொடுக்கும் தகவல்களின் சுருக்கம்.
ஒவ்வொருவரும் 21 வகை யஜ்ஞங்களை செய்துவரவேண்டும். இவை பாக யஜ்ஞ, ஹவிர் யஜ்ஞ, சோம யஜ்ஞ என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பாக யஜ்ஞம் ஏழிலும், முதல் ஐந்து ஹவிர்யஜ்ஞங்களிலும் உயிர்ப்பலி கிடையாது. வாஜபேய யஜ்ஞம் முதல்தான் உயிர்ப்பலி உண்டு. பிராமணர்கள் செய்யக்கூடிய பெரிய யஜ்ஞமான வாஜபேய யஜ்ஞத்தில் 23 பிராணிகளும், க்ஷத்ரியர்கள் செய்யும் மிகப்பெரிய யாகமான அஸ்வமேதத்தில் நூறு பிராணிகளும் பலியிடப்பட்டன.
அதர்வ வேதம் யாகங்களை,

அமைதிக்கான சாந்திகம், பலத்துக்கான பௌஷ்திகம், எதிரிகளை நாசம் செய்வதற்காண ஆபிசாரிகம் என மூன்று வகையாகப் பிரித்துள்ளது.

இராமபிரானைத் தோற்கடிக்க இந்திரஜித், நிகும்பிலயாகம் (ஆபிசார வகை) செய்ய முயன்றான்.
‘’காமதேனு போன்று யாகங்கள், மனிதனுக்கு விரும்புவதைக் கொடுப்பவை என்றும் மனிதனைப் படைத்தபோதே பிரம்மா அவர்களுக்கு யாகங்களை அளித்ததையும் பகவத் கீதை ஸ்லோகம் மூலம் சுவாமிகள் விளக்குகிறார்.

யாகங்கள் செய்வதன் மூன்று நோக்கங்களையும் சுவாமிகள் விளக்குகிறார்:1. எல்லா உயிரினங்களும் நலமுடன் வாழப் பிரார்த்திப்பது 2.இறந்தபின்னர் மேலுலகத்தில் சுகமாக வாழ 3. எல்லாவற்றையும் விட மேலாக, பிரதிபலன் எதிர்பார்க்காமல், உலக நலனுக்காக இதைச் செய்வது நமது கடமை என்று எண்ணிச் செய்வது.

யஜ்ஞங்கள் மூன்று தினுஸு, யஜ்ஞம் என்பது யாகம் வேதத்தில் யஜ்ஞாதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. வேதத்தில் ஏறக்குறைய 400 வகை யாகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

chennai_04
Ati Rudra in Chennai by Baba

ஒவ்வொரு பிராமணனும் செய்யவேண்டிய யஜ்ஞங்கள் 21. அவைகளில் பாக யஜ்ஞங்கள் ஏழு போக பாக்கி உள்ளவை 14. யாகங்களைப் பற்றிய விஷயங்கள் வேதங்களில் நிறைய சொல்லப்பட்டிருக்கின்றன.
ஸோம யாகங்கள் ஏழு. அக்னிஷ்டோமம் முதல் யாகம். அதைச் செய்தவர்கள் ஸோமயாஜி. கடைசியில் இருப்பது வாஜபேயம். அதைச் செய்தவர்கள் வாஜபேயர்கள். வட தேசத்தில் பாஜபே என்று அவர்களைச் சொல்லுவார்கள். வாஜபேயம் பண்ணினவர்களுக்கு அவப்ருத ஸ்நான காலத்தில் அரசர்கள் சுவேதச் சத்திரம் (வெண்குடை) பிடிக்க வேண்டும். திருவாங்கூர், மைசூர் இந்த ராஜ்யங்களில் அவர்களுக்கு சுவேதச் சத்திரம் கொடுக்கிறர்கள்.

ஸோம யாகம் பண்ணும்பொழுது ஸோமலதைச் சாற்றைப் பிழிந்து ஸோமபானம் செய்வார்கள். ஸோமலதையும் கிருஷ்ணாஜினமும்( மான் தோல்) இப்பொழுது மலையாளத்தில்தான் கிடைக்கின்றன. மற்ற இடங்களில் இல்லை. நம்பூதிரிகளில் பத்துக் குடும்பத்தில் ஒருவராவது ஸோம யாகம் பண்ணுகிறர்ர்கள். யஜ்ஞம், தானம், தபஸ், இவைகளைச் செய்வதினால் சித்த சுத்தி உண்டாகிறது என்று நம்முடைய ஸ்ரீ ஆச்சார்யர்கள் சொல்லியிருக்கிறர்கள்.

ஜோதிஷ்டோமம் ஜன்மாவில் ஒருதடவையாவது பண்ணவேண்டும்.

பரமாத்மாவை அறியப் பிரயத்தனப்படுகிறவர்கள் யஜ்ஞம், உபவாசம் முதலியவைகள் எல்லாவற்றையும் பரமேசுவரப் ப்ரீதியாகப் பண்ணவேண்டும்ம். பூர்வ ஜன்மத்தில் யாகங்கள் பண்ணினவன் இந்த ஜன்மத்தில் விவேகத்தைப் பெறுகிறான்.

(சுவாமிகளின் உரைச் சுருக்கத்தை மேலே கண்டீர்கள்)

27.02.05MahaRudra 009 (1)

Maha Rudar Yagna by several priests.

400 யாகப் பட்டியல் தயாரிப்போம்:

சுவாமிகள் 82 ஆண்டுகளுக்கு முன் நடத்திய உரையை மீண்டும் ஒரு முறை படித்தபோது 400 யாகங்களின் பட்டியல் கிடைக்குமா என்று தேடினேன். சுமார் 40 யாக, ஹோமங்கள் பட்டியலே கிடைத்தது. எதிர் கால ஆராய்சியாளருக்காவது நாம் அந்தப் பட்டியலை வைத்திருப்பது நல்லது.

இதோ இதுவரை நான் சேகரித்த யாக, யக்ஜஞ, ஹோம பட்டியல்:
1.ஸ்ரீ மஹா கணபதி ஹோமம்: எந்தக் காரியத்தைத் தொடங்கும் முன்னரும் நாம் செய்ய வேண்டியது.

2.நவக்ரஹ ஹோமம்: புதிய கட்டிடம், வீடு கட்டிய போதும், மேலும் பல புதிய முயற்சிகள் செய்யும்போதும் ஒன்பது கிரகங்களின் தீய பார்வை படாமல் இருக்க செய்யும் ஹோமம்.

3.சுதர்ஸன ஹோமம்: இது எதிரிகளின் தொல்லையைப் போக்கும்.

கேரளத்தில் திருச்சூர் அருகில் நடத்தப்படும் அதிராத்ர யக்ஞம்: பாஞ்சால் என்னும் கிராமத்தில் 1975 முதல் அதிராத்ர யக்ஞம் நடத்தப்படுகிறது. அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக் கழக தத்துவ இயல் பேராசிரியர் ப்ரிட்ஸ் ஸ்டால் இதை அப்படியே படம்பிடித்து உலகிற்கு அளித்தார்.

puranapanda_srinivas._1_

100 இரவு யாகங்கள்

100 இரவுகள் நடத்தும் யக்ஞம்: திருநெல்வேலி மாவட்ட அரியநாயகிபுரம் ஆர்.அனந்தகிருஷ்ண சாஸ்திரி 1936 ல் எழுதிய மகாமேரு யாத்திரையில் ஒரு இரவு முதல் நூறு இரவு வரை நடத்தப்படும் (சதராத்ர்க் க்ரது) பற்றி சிரௌத சூத்திரங்களால் தெரிந்துகொள்ளலாம் என்று எழுதியுள்ளார்.
ராஜஸ்தான் பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியர் விபா உபத்யாய எழுதிய கட்டுரையில் அந்த மாநிலத்தில்தான் யூப ஸ்தம்பங்கள் அதிகம் என்று சொல்லி கல்வெட்டுகளில் குறிப்பிட்ட யாகங்களின் பட்டியலை கொடுத்துள்ளார். இந்தக் கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பில் விரிவாகக் கொடுத்துள்ளேன்.

12 ஆண்டுகள் நீடிக்கும் யக்ஞம் பற்றிப் புராணங்கள் கூறுகின்றன. நைமிசாரண்யம் காட்டில் நடந்த ரிஷிகள் கூட்டத்தில்தான் புராணங்கள் இயற்றப்பட்டன.

அஸ்வமேதம்: அரசர்கள் செய்யும் மிகப்பெரிய யாகம் இது. இதில் நூறு வகை மிருகங்கள் பலியிடப்படும். ராஜாவின்யாகக் குதிரை எங்கெல்லாம் செல்கிறதோ அவை எல்லாம் ராஜவுக்குச் சொந்தம். அதை மறுப்பவர்கள் குதிரையைப் பிடித்து கட்டிப்போடலாம். பின்னர் பெரிய யுத்தம் நேரிடும். 200 வகையான பிராணிகள், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் முதலியன தீயில் இடப்படும். இறுதியில் நாடு நாடாகச் சென்று திரும்பிய குதிரையும் பலியிடப்படும்.

புருஷமேதம்: நர பலி கொடுக்கும் யாகம். ஆனால் இது நடை பெற்றதாகத் தெரியவில்லை. ஜப்பானியர்கள் ஹராகிரி செய்துகொள்வது போல தமிழ் வீரர்கள் போருக்கு முன், கழுத்தை அறுத்து, தங்களைப் பலியிட்டுக் கொண்ட செய்திகள் தமிழ் இலக்கியம் முழுதும் இருப்பதையும், சிலைகள் தமிழ்நாடு முழுதும் இருப்பதையும் பற்றி ஏற்கனவே படங்களுடன் எழுதிவிட்டேன். மஹாபாரதத்திலும் இப்படி களபலி நிகழ்ச்சி இருப்பதையும் குறிப்பிட்டேன். இது போல புருஷமேதம் இருந்திருக்கலாம். ஆனால் அஸ்கோ பர்போலா போன்ற சம்ஸ்கிருத் அறிஞர்கள் இது அடையாள பூர்வமாக (அதாவது மனித பொம்மை செய்து) நடத்தப்பட்டதாகக் கூறுகின்றனர். பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் பலிகொடுக்கப்பட்ட கல்லறைகள் பஹ்ரைனில் உள்ளன. பல்லாயிரக் கணக்கான அடிமைகள் பலியிடப்பட்டதை எகிப்திய கல்லறைகளில் காண்கிறோம். பாரத நாட்டில் இப்படி எதுவும் நடக்கவில்லை.

ராஜசூயம்: சோழ மன்னன் பெருநற்கிள்ளீ நடத்திய ராஜசூய யக்ஞத்தில் சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் மூவரும் ஒரே மேடையில் அமர்ந்ததை பிராமணர்களின் முத்தீக்கு ஒப்பிட்டு அவ்வையார் பாடிய பாடல் புறநானூற்றில் (367) உள்ளது. தர்மன் செய்த ராஜசூய யாகம் பற்றி மஹாபாரதத்தில் மிக விரிவாக உள்ளது.

DSC_0081
At Sri Narayani Peedam

வாஜபேயம்: பாரதத்தின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி இந்த வாஜபேய குடும்பத்தில் பிறந்த பிராமணர். இந்த ஜாதியினர் செய்யக் கூடிய மிகப் பெரிய யாகம் இதுதான். இதில் 23 பிராணிகள் பலியிடப்படும்.

புத்ர காமேஷ்டி யாகம்: குழந்தைகள் இல்லாதவர்கள் செய்யும் யாகம். தசரதன் செய்த இந்த யாகம் குறித்து ராமாயணத்தில் விரிவாகப் பேசப்படுகிறது.

புறநானூற்றில் யாகம்

பூஞ்சாற்றுர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் மீது ஆவூர் மூலங்கிழார் பாடிய ஆர்புதமான பாடலில் 21 வகை யாகம் பற்றிய அரிய தகவல்களைப் பாடுகிறார். உரைகாரர்கள் முக்கியத் தகவல்களைச் சேர்த்துள்ளனர்.

ஔபாசனம்: பிராமணர்கள் முதல் நான்கு வருணத்தவர்களும் திருமணம் ஆன பின்னர் செய்ய வேண்டிய தினசரி ஹோமம் இது. சந்யாசி ஆனால் இதைச் செய்ய வேண்டாம்.

சமிதாதானம்: தினமும் இரண்டு முறை பிரம்மச்சாரி மாணவர்கள் செய்யவேண்டிய ஹோமம்.

அக்னிஹோத்ரம்: தினமும் செய்யவேண்டியது. போபாலில் விஷவாயு வெளியேறி 3000 பேர் இறந்தபோது அக்னிஹோத்ரம் செய்த இரண்டு குடும்பத்தினர் மட்டும் விஷவாயு பாதிக்காமல் தப்பிய செய்தி பத்திரிகைகளில் வெளியானது.

புருஷசூக்த ஹோமம் என்பது ரிக்வேதத்தில் உள்ள புருஷசூகத மந்திரத்தைச் சொல்லி செய்வது.
ம்ருத்யுஞ்சய ஹோமம்: ஸ்ரீ ருத்ரத்தில் ஆயுளை வளர்க்கவும் மரண பயத்தைப் போக்கவும் வரும் மந்திரம் ஓம் திரயம்பகம்….. என்ன்னும் மந்திரம் ஆகும். இதைச் சொல்லி செய்யும் ஹோமம் இது.
காயத்ரி ஹோமம்: காயத்ரி மந்திரத்துடனும், பகவத் கீதா ஹோமம் கீதை ஸ்லோகங்களுடனும் செய்யப்படும்.

yagam1

Picture of Sri Narayani Amma at Narayana Peedam (See Largest Golden Temple in the World posted here)

பாபா செய்த மகத்தான யக்ஞம்

ருத்ரம் என்பது சிவனைப் போற்றும் யஜூர்வேதப் பாடலாகும். இதைப் பலமுறை உச்சரித்து ருத்ர யாகம் செய்வார்கள். நமது காலத்தில் சென்னையிலும் புட்டபர்த்தியிலும் ஸ்ரீ சத்ய சாய் பாபா இதைப் பெரிய அளவில் நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தினார்:–

ருத்ர ஏகாதசி: 11 புரோகிதர்கள் 11 முறை ருத்ரத்தைப் பாராயணம் செய்து 121 தடவை ஹோமம் செய்வது
மஹாருத்ரம்: ருத்ரத்தை 1331 (11X11X11) தடவைப் பாடி யாகம் செய்வது
அதிருத்ரம்: ருத்ரத்தை 14641 (11X 11X11X11) தடவைப் பாடி யாகம் செய்வது.

தமிழ்க் கலைகளஞ்சிய தகவல்

நூறு ஆண்டுகளுக்கு முன் ஆ. சிங்காரவேலு முதலியார் தொகுத்த அபிதான சிந்தாமணி என்ற என்சைக்ளோபீடியா தரும் தகவல் பின்வருமாறு:–

யாகங்கள்: இவை பிரமம், தெய்வம், பூத, பிதுர், மானுஷம் என்பன. இவற்றுள் வேதம் ஓதல் பிரம யாகம். ஓமம் வளர்த்தல் தெய்வ யாகம். பலியீதல் பூத யாகம். தர்ப்பணம் செய்தல் பிதுர் யாகம். இரப்போர்க்களித்தல் மனுஷயாகம். இவை வேதங்களிலும் புராணங்களிலும் கூறிய அக்னி காரியங்களாம். இவற்றின் குண்ட மண்டல மந்திராதி கிரியைகள் ஆங்காங்கு வழக்கங்குறைந்து சிதைந்தும் பிறழ்ந்தும் கிடத்தலின் அவைகளின் கிரியைகளையும் குண்ட மண்டல வேதிகைகலையும் எழுதாது பெயர் மாத்திரம் எழுதுகிறேன்.

(1).அக்னிஷ்டோமம் (2)அத்யனிஷ்டோமம் (3) உக்தீயம் (4) சோடசீ (5) வாசபேயம் (6) அதிராத்ரம் (7) அப்தோரியாமம் (8)அக்னியாதேயம் (9) அக்னிஹோத்ரம் (10) தரிச பூர்ணமாசம் (11) சாதுர்மாஸ்யம் (12) நிருட பசுபந்தம் (13) ஆக்கிரயணம் (14) சௌத்திராமணி (15) அஷ்டகை (16) பார்வணம் (17) சிராத்தம் (18) சிராவணி (19) அக்ரசாயணி (20) சைத்திரி (21) ஆச்வயுசீ (22) விசுவசித் (23) ஆதானம் (24) நாசிகேதசயனம் (25) காடகசயனம் (26) ஆருண கேதுக சயனம் (27) கருடசயனம் (28) பௌண்டரீகம் (29) சத்திரயாசம் (30) சாவித்ரசயனம்

N.B. I have given more information in the English version of this article. I am not translating everything to keep it short: swami

Contact swami_48@yahoo.com