குட்டிக் கதை — எமனிடம் சிக்கிய சிற்பி (Post No.9423)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9423

Date uploaded in London – –26 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

குட்டிக் கதை — எமனிடம் சிக்கிய சிற்பி

ஒரு ஊரில்  எமகாதக  சிற்பி ஒருவன் இருந்தான் . அதாவது சிற்பங்கள் செய்வதில்  வல்லவன். லண்டன் மேடம் துஸாட்ஸ் (Madame Tussauds)  மெழுகு பொம்மை மியூசியத்தை விட  தத்ரூபமாக சிலைகளை வடிப்பான் . லண்டனில் வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் அங்குள்ள மெழுகு சிலைகளுக்கும் வித்தியாசம் தெரியாது!!

அவன் செய்யும் சிலைகளை பார்ப்போருக்கு உண்மையான, உயிருள்ள உருவமா, அல்லது சிலையா என்று தெரியாமல் 

tags — யமன், எமன், சிற்பி, அஹம்காரம் , யான் எனது 

பெற்றோருக்குப் பணிவிடை செய்!- யமன் கூறிய உபதேசம் (Post.9130)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9130

Date uploaded in London – –11 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹாபாரதம்

யமன் கூறிய உபதேசம் : பெற்றோருக்குப் பணிவிடை செய்!

ச.நாகராஜன்

மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் ஏராளமான கதைகளையும் அந்தக் கதைகள் சொல்லும் நீதியையும் காணலாம். தர்ம சம்பந்தமான தனது கேள்விகளை தர்ம புத்திரர் கேட்க பீஷ்மர் ஒவ்வொன்றுக்கும் ஆணித்தரமான விடைகளைக் கூறுகிறார்.

அதில் கௌதமருக்கும் யமனுக்கும் நடந்த இந்த உரையாடல் – சம்வாதம் – ஒரு அரிய உண்மையைத் தருகிறது. (இதை சாந்தி பர்வம் 129ஆம் அத்தியாயத்தில் காணலாம்).

பாரியாத்திரம் என்னும் மலையில் கௌதமருக்கு பெரியதோர் ஆஸ்ரமம் இருந்தது. தனது பாவங்களை தவத்தால் எரித்த கௌதமர் அங்கு வசித்து வந்தார். அறுபதினாயிரம் வருடங்கள் அவர் தவம் செய்தார்.

ஒரு நாள் அவரிடம் லோகபாலனான யமதர்மன் வந்தான்.

தனது தவ வலிமையால் வந்தவனை யமன் என்று பிரம்ம ரிஷியான கௌதமர் அறிந்து கொண்டார். கைகட்டி வணக்கத்துடன் அவனிடம் அவர் சென்றார்.

யமன் அவரை நமஸ்கரித்து, “தர்மனான நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டான்.

கௌதமர் யமனை நோக்கி, “ ஒருவன் எதைச் செய்து தாய் தந்தையரிடத்துக் கடனில்லாதிருக்கும் தன்மையை அடைவான்? அடைய முடியாத புண்யலோகங்களையும் ஒருவன் எப்படி அடைய முடியும்?” என்று கேட்டார்.

இதற்கு பதிலை யமன் கூறலானான் : “எப்பொழுதும் தவமும் பரிசுத்தியும் உள்ளவனும், சத்தியத்திலும் தர்மத்திலும் விருப்பமுள்ளவனுமாய் இருந்து கொண்டு ஒவ்வொரு நாளும் தாய் தந்தையரின் பூஜையை நேராகச் செய்து வர வேண்டும். நிறைந்த தக்ஷிணை கொடுத்து பல அஸ்வமேத யாகங்களைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அப்படிச் செய்பவன் ஆச்சரியமாக காணப்படும் உலகங்களை அவன் அடைவான்”.

யமனின் இந்த வார்த்தைகளால் தாய் தந்தையரை உரிய முறையில் வணங்கி அவர்களைப் பாதுகாக்கும் ஒருவன் அவர்கள் புத்திரர்களுக்குச் செய்த செயல்களுக்கான கடனைத் திருப்பிச் செய்தவன் ஆகிறான் என்பது தெரிகிறது.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது அவ்வையார் வாக்கு,

மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ என்பது வேத வாக்கு.

இதையே யமனும் தனது வார்த்தைகளால் கௌதமருக்கு உறுதி செய்தான்.

***

tags- பெற்றோர, பணிவிடை,  யமன், உபதேசம்

நைடதத்தில் உள்ள நான்கு சிலேடைப் பாடல்கள்! (Post No.5309)

Written by S Nagarajan

Date: 11 August 2018

 

Time uploaded in London – 7-00 AM  (British Summer Time)

 

Post No. 5309

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

நைடதத்தில் உள்ள நான்கு சிலேடைப் பாடல்கள்!

 

ச.நாகராஜன்

 

அதிவீரராம பாண்டியன் இயற்றிய தமிழ்க் காவியமான நைடதம் சிருங்காரச் சுவை சொட்டச் சொட்ட எழுதப்பட்ட ஒன்று.

இதில் சுயம்வரப் படலம் குறிப்பிடத் தகுந்த ஒன்று.

திரிலோகத்தில் உள்ள அரசர்களெல்லாம் ஒருங்கு கூடி சுயம்வர மண்டபத்தில் வந்து சேர தமயந்தியின் தந்தையான வீமராஜன் மகிழ்ச்சியும் திகைப்பும் அடைந்தான்.

 

 

அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு தன் மகளை மணம் செய விரும்புவது குறித்து மகிழ்ச்சி,

ஆனால் இவரை இன்னார் என்று நல்ல விதத்தில் அறிமுகப்படுத்தக் கூடியவர் இந்த மண்ணுலகில் இல்லையே என்பதை நினைத்து திகைப்பு.

 

 

நாரணனை மனம் உருக வேண்டினான். நாரணனோ பிரம்மாவை நோக்கி, ‘பிரம்ம தேவா!. இவர் இன்னின்னார் என்று கூற கலைமகள் அன்றி வேறு யார் இருக்கிறார்கள்” என்று கேட்டார். பிரம்மா கலைமகளை நோக்கி, “நீ சென்று அரசர் கூட்டத்தை தமயந்திக்கு இவர் இன்னார் என்று விளக்கி வருவாய்” என்று பணிக்க கலைமகள் சுயம்வர மண்டபம் வந்து ஒவ்வொருவரைப் பற்றியும் தமயந்திக்கு எடுத்துக் கூற ஆரம்பித்தாள்.

 

 

42 பாடல்களில் அரசர்கள் பற்றிய அறிமுகம் விளக்கப் படுகிறது.

தமயந்தியை மணக்க வேண்டி சுயம்வர மண்டபத்திற்கு வந்த இந்திரன், அக்கினி தேவன், யமன்,வருணன் ஆகியோரை விளக்கும் பாடல்கள் நளனுக்கும் இவர்களுக்குமாக அமைந்துள்ள சிலேடைப் பாடல்களாக அமைந்துள்ளன.

இந்திரனுக்கும் நளனுக்கும் சிலேடை:

 

கலை வளர்திங்க ளென்னக் கடிகமழ் கமலம் வாட்டுந்

திலக வாண் முகத் தாயிங்கு வைகிய சினவேற் காளை

வலனுடை வயிர வாளான் கற்பகமலிந்த தோளான்

பலபகைவரை முன்செற்ற பகட்டெழின் மார்பினானே.

 

இதன் பொருள் :- கலைமகளுடைய அருளும், நல்ல வாசனை பொருந்திய தாமரை மலரும் வாடி விடும்படியான, திலகமிட்ட சந்திரனைப் போன்ற முகத்தை உடைய தமயந்தியே! இங்கே இருக்கும் அரசன் கோபமும் வீரமும் ஒருங்கே பெற்றும், வலனைக் கொன்ற வெற்றியுடையவனும், வெற்றி மிகுந்த கூரிய வாளை உடையவனும், கற்பக மாலை சூடியவனும், மலை பிளக்கும் தோழனும், பகைவரை முதலில் ஜெயித்து  பெருமை பொருந்திய அழகிய மார்பினனுமான இந்திரன் ஆவான்.

இந்த அரசனின் வர்ணனை – கோபமும் வீரமும் ஒருங்கே பெற்றவன், கூரிய வாளை உடையவன், பகைவரை ஜெயித்தவன் ஆகியவை நளனுக்கும் பொருந்துபவை. ஆகவே இந்திரனையும் நளனையும் குறித்த சிலேடைப் பாடலாக இது அமைகிறது.

 

அக்னிதேவனுக்கும் நளனுக்கும் சிலேடை:

நகைமதி முகத்தாயீங்கு வைகிய நாமவேலான்

புகலுரும் வெகுளி யுள்ளத் தொருவினான் பொங்கி யார்த்த

பகையிருட் பிழம்பு சீக்கும் பலசுட ருமிழும் வாளான்

றகைமைசால் புலவ ரேத்துந் தால மேழுடைய கோவே

 

இதன் பொருள் :

சந்திர பிம்பம் போன்ற முகத்தை உடைய தமயந்தியே! (நகை மதி முகத்தாய்) இங்கு இருப்பவர் யார் எனில் சொல்ல முடியாத அளவு கோபமும் ஒளியும் பொருந்தியவனுமான அக்னி தேவன்.

இருளை ஒத்த பகைவரை தன் வாளால் வென்று பெருமை மிக்க புலவர்களால் சத்சத் தீவை உடையவன்.

 

 

தீவு தேவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு அக்னியையே முதலாவதாக பூஜிப்பதாலும் அவர்களுக்கு வேண்டிய ஹவிர் பாகங்களை அக்னி மூலமாகப் பெறுவதாலும் வேதத்தில் அக்னியை மூலமாகச் சொல்வதாலும் இருள் பிழம்பை ஓட்டி ஒளி தரும் ஏழு நாவை உடையவன் ஆதலாலும் தேவர்களால் புகழப்படுவதாலும் அக்னி தேவன் இவ்வாறு புகழப் படுகிறான்.

 

 

அக்னியைக் கூறும் போது தேவர்கள் என்றும் நளனைக் குறிப்பிடும் போது புலவர்கள் என்று கூறுவதும் காண்க. தேவர்களும் புலவர்களும் சிலேடையாகக் கூறப்படுகிறது.

 

யமனுக்கும் நளனுக்கும் சிலேடை

அஞ்சன மெழுத லாற்றா தம்மவோ வென்று நையும்

வஞ்சிநுண் ணிடையா யிங்கு வைகிய நாமவேலா

னெஞ்சலி றருமன் றெண்ணி ரிருங்கட லுலக மெல்லாஞ்

செஞ்சவே யோசை போய தீதறு செங்கோல் வேந்தே

 

இதன் பொருள் : அஞ்சன மை எழுதும் போது அதன் கனம் கூடத் தாங்க மாட்டாது நைந்து போகும் நுண்ணிய இடையை உடையவளே! இதோ இருக்கின்றானே இவன் யம தருமன்! பயமுறுத்தும் வேல் படையை உடையவன். செவ்விய கால தண்டாயுதத்தைக் கொண்டு கடல் சூழ்ந்த உலகை புகழ் பரப்பச் செங்கோலால் ஆள்பவன்!

நளனும் இருங்கடல் உலகம் ஆள்பவன். செங்கோலால் ஆட்சி செய்து புகழ் பெற்றவன். ஆக ஈற்றடி இரண்டினாலும் நளனுக்கும் யமனுக்கும் சிலேடை புகலப்பட்டது.

 

வருணனுக்கும் நளனுக்கும் சிலேடை :

பாற்றிரை யமிரத மூறும் படரொளிப் பவளச் செவ்வாய்

கோற்றொடி மடந்தை யீங்கு வைகிய குலவுத் தோளான்

மகற்றருஞ் சிறப்பின் மிக்க வளங்கெழு புவன வேந்த

னாற்றிசை பரப்புஞ் சூழ்போ நலங்கெழு நேமி வேந்தே

 

இதன் பொருள் ; பாற்கடலில் தோன்றிய அமிர்தமென ஊறுகின்ற பவளச் செவ்வாயை உடையவளே! அழகிய வளையலை அணிந்துள்ளவளே! இங்கு  வந்திருப்பவன் நன்மை பொருந்திய கடல் அரசனான வருண தேவன்.

 

 

புவனம் என்றால் நீர் ; நீருக்கு அரசன் வருணன்

புவனம் என்றால் பூமி : பூமிக்கு அரசன் நளன்

நேமி என்றால் கடல். வருணனைக் குறிப்பது.

நேமி என்றால் சக்கரம். நளனைக் குறிப்பது.

ஆக வருணனுக்கும் நளனுக்கும் சிலேடை புகலப்பட்டது.

 

இப்படி இந்திரன், அக்னி, யமன், வருணன் ஆகியோரின் சிறப்பியல்புகள் அனைத்தும் ஒருங்கே கொண்டவன் என்று குறிப்பால் தமயந்திக்கு கலைமகள் சொல்லிக் கொண்டே வருகிறாள் என்பது சுவையான செய்தி!

அதிவீரராம பாண்டியனின் நைடதம் கற்போர்க்கு ஔடதம்.

***

 

யமன் (எமன்) போல வந்த 3 பெண்கள்! (Post No.4104)

Written by London Swaminathan


Date: 22 July 2017


Time uploaded in London- 11-00 am


Post No. 4104


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

ஒரு பாட்டுக்கு எனக்கு முழு அர்த்தம் விளங்கவில்லை. இது நீதி வெண்பாவில் உள்ளது. அந்த நூலை யார் எழுதினார்கள் அல்லது தொகுத்தார்கள் என்பது தமிழ் கூறு நல்லுலகிற்குத் தெரியாது. கால வெள்ளத்தில் மறைந்துவிட்டது. நாம் மிகவும் போற்றும் மூன்று பெண்களை எமனென்று வருணிக்கிறது இந்தப் பாடல்! ஓரளவுக்கு அர்த்தம் விளங்குகிறது!

 

முதலில் பாடலைப் படித்துவிட்டு விவாதிப்போம்:-

என்னே கிரேதத் திரேணுகையே கூற்றுவனாம்

தன்னேர் திரேதத்திற் சானகியே – பின்யுகத்திற்

கூடுந்திரௌபதையே கூற்றாம் கலியுகத்தில்

வீடுதொறும் கூற்றுவனாமே

 

பொருள்:-

கிரேதத்து- கிரேதா யுகத்தில்

இரேணுகையே – இரேணுகை என்பவளே

கூற்றுவன் ஆம் – யமன் ஆகும்

திரேதத்தில் – திரேதா யுகத்தில்

தன் நேர்- தனக்குத் தானே ஒப்பாகிய (வேறு எவரையும் உவமை சொல்ல முடியாத)

சானகியே –  சீதை என்பவளே

கூற்றுவனாம் – யமன் ஆகும்

பின் யுகத்தில் – அதற்கடுத்த துவாபர யுகத்தில்

கூடும் – வந்த

திரௌபதியே – திரௌபதையே

கூற்றாம் – யமன் ஆகும்

கலியுகத்தில் – இப்பொழுது நடக்கும் கலி யுகத்தில் என்றாலோ

வீடுதொறும் – ஒவ்வொரு வீட்டில் இருக்கும் (ஒவ்வொரு பெண்ணும்)

கூற்றுவனாம் ஆம் – யமன் ஆகும்

என்னே – இஃது என்ன ஆச்சரியம்!

 

மொத்தத்தில் கருத்து என்னவென்றால் பெண்கள் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்காமல் அடக்க ஒடுக்கமாக வாழவேண்டும். முன் யுகத்தில் இருந்ததைவிட இப்பொழுது பெண்கள் மிகவும் கெட்டுப் போய்விட்டார்கள் என்பதே.

 

அது எப்படி?

ரேணுகா – பரசுராமன் கதை பலருக்கும் தெரிந்ததே. ரேணுகாவுக்கு காமம் தொ டர்பான தீய எண்ணங்கள் வரவே அவரது கணவர் ஜமதக்னி ரேணுகாவைக் கொல்ல உத்தரவு இடுகிறார். உடனே பரசுராமன் அதைச் செய்கிறார். அதைப் பாராட்டி ஜமத்னி முனிவர் ஒரு வரம் தருகிறார். தன்னுடைய அம்மா ரேணுகாவை உயிர்ப்பிக்க வேண்டும் என்று வேண்டுகிறார். ரேணுகா மீண்டும் உயிர் பெறுகிறாள்.

 

இதில் ரேணுகா செய்த தவற்றால் ஒரு சம்பவம் நிகழ்கிறது. ஆனால் எல்லாம் சுபமாக முடிகிறது. பரசுராமர் க்ஷத்ரியர்கள் மீது கோபம் கொண்டு 21 தலைமுறையை அழித்ததற்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பில்லை.

 

சீதை, ஒரு மாய மானுக்காக ஆசைப்பட்டதால் ராவணன் கடத்துகிறான். இலங்கையே அழிகிறது. பிறகு சீதையைப் பற்றி ஒரு சலவைத் தொழிலாளி சந்தேகம் கிளப்பவே அவள் பூமாதேவியிடம் திரும்பிச் செல்கிறாள். இங்கு சீதை செய்த தவறு எல்லாப் பெண்களையும் போல தங்கத்துக்கு (பொன் மான்) ஆசைப்பட்டது. அதாவது அது பொன் மான் இல்லை என்று கணவன் தெளிவு படுத்தியும் அடம்பிடித்ததால் வந்த வினை.

 

மூன்றாவது, திரவுபதி சிரித்ததால் வந்த வினை. ரத்தினக் கல் போல இழைக்கப்பட்ட தரையைத் தண்ணீர் என்று நினைத்து துரியோதனன் தனது பட்டாடையைத் தூக்கவே பலகணியில் இருந்து அதைப் பார்த்த திரவுபதி ‘களுக்’ என்று சிரித்துவிட்டாள்; பெண்களுக்கான அடக்கம் அவளுக்கு அப்போது இல்லை.

 

இதற்கெல்லாம் சேர்த்துப் பழிவாங்க, வேறு ஒரு சந்தர்ப்பத்தில், அவளுடைய ஆடையை அவிழ்க்க உத்தரவிட்டான். அவள், உடனே சபதம் செய்து, மஹா பாரதப் போருக்குப் பின்னால்,  துரியோதனன் ரத்தத்தை முடியில் தடவி பழி தீர்த்துக்கொண்டாள். இது பெண்ணின் நகைப்பினால் வந்த வினை.

 

கலியுகத்தில் ஒவ்வொரு பெண்ணும் இப்படித் தவறு செய்யக்கூடும் என்பதால் புலவர் எச்சரிக்கிறார் போலும்.

 

இன்று டெலிவிஷன்களில் வரும் சீரியல்களிலும் அப்படித்தானே பெண்களைக் (நீலாம்பரிகளாக) காட்டுகிறார்கள்.

 

புலவர் பெருமான் காரணம் சொல்லாவிடிலும் மூன்று கதைகளையும் நாமாகத் தொடர்புபடுத்தி விளக்கம் காண முடிகிறது.

 

வேறு ஏதேனும் பொருள் தெரிந்தால் நீங்களும் சொல்லலாம்.

TAGS:- யமன், பெண்கள்,ரேணுகா, சீதை, திரௌபதி, யுகம்

-சுபம்–

 

 

யமனுக்கு அப்பரின் பாராட்டு! கம்பன் ஜாக்பாட்டு!! (Post No.4014)

Written by S NAGARAJAN

 

Date: 19 June 2017

 

Time uploaded in London:-  6-35  am

 

 

Post No.4014

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

தேவார சுகம்- கம்பன் கவி நயம்!

யமனுக்கு அப்பரின் பாராட்டும்

கம்பன் கூறிய யமனுக்கான ஜாக்பாட்டும்!

 

ச.நாகராஜன்

 

காலன் மட்டும் அறிந்த கழலடி!

 

தரும தேவதையாகத் திகழும் யமனைக் கண்டால் எல்லோருக்கும் ஒரு வெறுப்பு. பயம். கவிஞர்களுக்கோ சொல்லவே வேண்டாம்.

பாரதியார் உட்பட அனைவருமே காலா என்னருகே வாடா, உன்னைக் காலால் சற்றே எட்டி மிதிக்கிறேன் என்ற அளவில் தான் பாடுவர்.

அப்பர் பிரான் சிவனின் காலால் யமன் எட்டி உதைக்கப்பட்ட சம்பவத்தை பற்பல பாடல்களில் எடுத்துக் கூறுவார்.

ஆனால் அவரே யமனின் அதி புத்திசாலித்தனத்தைப் பாராட்டி மகிழும் பாடலும் ஒன்று உண்டு.

யமன் எப்படி புத்திசாலித்தனமாக நடந்து கொண்டான்?

சிவனின் முடியைத் தேடி அலைந்த பிரம்மாவால் அதைக் கண்டுபிடிக்க முடிந்ததா? இல்லை.

தோல்வி தான் மிச்சம்.

சிவனின் அடியைத் தேடிச் சென்ற விஷ்ணுவால் அடியைக் காண முடிந்ததா? இல்லை.

தோல்வி தான் மிச்சம்.

 

ஆனானப்பட்ட பிரம்மா, விஷ்ணுவால் செய்ய முடியாத காரியத்தை எப்படிச் செய்வது.

யமன் யோசித்தான்.

மாற்றி யோசித்தான். ஒரு சின்ன தந்திரம் செய்தான்.

Alternative Thinking!!

 

அதன் விளைவாக சிவ பக்தனான மார்க்கண்டேயன் மீது ‘துணிந்து பாசக் கயிறை வீசினான்.

விளைவு, யாருமே பார்க்க முடியாத சிவனின் காலால் உதையுண்டான். சிவன் தரிசனம் சாத்தியமானது.

அந்தக் கழலடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் என்று சொல்லவும் வேண்டுமா?

 

பாடினார் அப்பர:-

“மேலும் அறிந்திலன் நான்முகன் மேல் சென்று, கீழ் இடத்து

மாலும் அறிந்திலன் மால் உற்றதே வழிபாடு செய்யும்

பாலன்மிசைச் சென்று பாசம் விசிறி மறிந்த சிந்தைக்

காலன் அறிந்தான் அறிதற்கு அரியான் கழல் அடியே

    (ஆறாம் திருமுறை – தனித் திரு விருத்தம்- பவளவரைத் தடம் போலும் என்று தொடங்கும் பதிகத்தில் பதினொன்றாம் பாடல்)

காலன் மட்டும் அறிந்த கழலடி சிவனது அடி!

அறிதற்கு அறியா கழல் அடியை யமன் மட்டும் அறிந்ததை அப்பர் இப்படிப் பாராட்டுகிறார்.

 

கொள்ளப்பட்டுள உயிர் :கம்பன் கூறும் ஜாக்பாட்!

அடுத்து கம்பனுக்கு வருவோம்.

கம்பன் பல பாடல்களில் யமனைப்  பாடியுள்ளான்.

ஆனால் அவனது ஜாக்பாட் பாடல் யமனுக்கு அடித்த ஜாக்பாட் பற்றித் தான்!

 

அனுமன் இலங்கைக்குள் புகுந்து அசுரரை அழிக்க ஆரம்பித்தான். இராவணனின் புதல்வனான அக்ககுமாரன் – (அட்சகுமாரன்)என்பான் அனுமனுடன் போரிட வந்தான்.

அவ்வளவு தான், அனுமன் யமனுக்கு நண்பன் ஆகி விட்டான்.

ஒரு உயிர், இரண்டு உயிர் என்று எவ்வளவு நாள் எடுத்துக் கொண்டு போவான் யமன்.

ஜாக்பாட் அளவில் கொள்ளை கொள்ளையாக் உயிர்களைக் கொண்டு போக வகை செய்தான் அனுமன்.

 

பாடலைப் பார்ப்போம்:

பிள்ளப்பட்டன நுதலோடைக்கைர் பிறழ்பொற் தேர்பறி பிழையாமல்

அள்ளப்பட்டழி குருதிப் பொருபுனலாறாகப்படி சேறாக,

வள்ளப்பட்டன மகரக் கடலென மதிள் சுற்றியபதி மறலிக்கோர்

கொள்ளைப்பட்டுள வுயிரென்னும்படி கொன்றான் ஐம்புலன்வென்றானே

 

நித்திய பிரம்மச்சாரியாக இருப்பதால் ஐம்புலன் வென்றான் அனுமன்.

தோணிகள் (வள்ளப்பட்டன) நிறைந்த மகர மீன்கள் நிறைந்துள்ள கடலே அரணாக அமைந்துள்ள தனித் தீவு இலங்கை.

(அங்கு போரில்) வருகின்ற பிராணிகளை எல்லாம் அடித்துப் போட்டு அதனால் பெருகும் இரத்தம் ஆறு போல ஓடுகிறது.

அதில உடல் பியக்கப்பட்ட நெற்றியில் வீரப்பட்டம் அணிந்த யானைகளும் தேர்களும் குதிரைகளும் அந்த ஆற்றில் படிந்த சேறாக மாறும் படி யுத்தம் செய்கிறான் அனுமன்!

 

மறலிக்கு (எமனுக்கு) கொள்ளைப்பட்டுள உயிர் எனும்

எராளமான உயிர் என்னும் ஜாக்பாட்டை அளித்தான் அனுமன்!

ஓய்ந்து உலந்த எமன்

யமனின் நிலை பற்றி ஏற்கனவே கிங்கரர் வதைப் படலத்தில் ஒரு பாடலில் கம்பன் குறிப்பிடுகிறான்.

அனுமனைக் கொல்ல வரும் கிங்கரர்களை அவன் வதை செய்ய அரக்கர்களில் உயிர நீத்த உடல்கள் அரக்கருடைய தெருக்களில் எல்லாம் நிரம்பிக் கிடக்கின்றன.

அதனால் என்ன ஆயிற்று?

 

பாடலைப் பார்ப்போம்.

ஊனெலாம் உயிர் கவர்வுறும் காலன் ஓய்ந்து உலந்தான்

தானெலாரையும் மாருதி சாடுகை தவிரான்

மீன் எலாம் உயிர் மேகமெலாம் உயிர் மேன்மேல்

வானெலாம் உயிர்மற்றும் எலாம் உயிர் சுற்றி

  (கிங்கரர் வதைப் படலம் பாடல் 45)

அனுமனால் கொல்லப்பட்ட உயிர்களை எமனால் எடுத்துச் செல்ல முடியவில்லை.

உடம்புகளிலிருந்து உயிரைக் கவரும் காலன் ஓய்ந்து வலிமை கெட்டான்.

அதனால் எடுத்துப் போவாரின்றி நட்சத்திர மண்டலம் எல்லாம் உயிர்.

மேக மண்டலம் எல்லாம் உயிர்.

மிக உயரத்தில் உள்ள ஆகாயம் எல்லாம் உயிர்.

மற்றுமுள்ள இடைவெளி எல்லாம் உயிர்,

 

எப்படி இருக்கிறது யமனுக்கு வேலை, பாருங்கள்!! எல்லா உயிரையும் ‘கலெக்ட் செய்து – சேகரித்துக் கொண்டு செல்ல வேண்டும் அவன்!

எப்படி ஒரு  காட்சியை நம் முன்னே கொண்டு வருகிறான் கம்பன்!

உலக மொழிகளில் எல்லாம் ஒப்பற்ற இலக்கியம் தமிழ் இலக்கியம்

இது போல “யமப் பாடல்கள்தமிழ் இலக்கியத்தில் நூற்றுக் கணக்கில் உள்ளன. தமிழ் இலக்கியத்தில் மட்டுமே இப்படிப்பட்ட பாடல்கள் உள்ளன.

***

 

 

யமன் பயன்படுத்தும் அளவுகோல்! தமிழன் கண்டுபிடிப்பு!! (Post No 2979)

padi

Compiled by London swaminathan

Date:17 July 2016

Post No. 2979

Time uploaded in London :– 9-16 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

reading-jug-large

நாலடியார் என்னும் நூலில் ஒரு அருமையான பாடல் வருகிறது. இது 18 கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.

 

யமன், ஒரு அளவு கோல் வைத்திருக்கிறானாம். நாம் படி, அல்லது லிட்டர் என்ற அளவுகளை பயன்படுத்துவது போல அவன் தினமும் சூரியன் உதிப்பதை ‘நாழி’ என்னும் அளவாகப் பயன்படுத்தி தினமும் நம் வாழ்நாளை அளந்து கொண்டிருக்கிறானாம். இதைப் படித்தும் கூட நம் வாழ்நாள் தினமும் கழிந்துகொண்டிருப்பதை பலரும் உணருவதில்லை.

 

இதோ அந்தப் பாடல்:-

 

தோற்றம் சால் ஞாயிறு நாழியா வைகலும்

கூற்றம் அளந்து நும் நாள் உண்ணும் – ஆற்ற

அறஞ்செய் தருடையீஇர் ஆகுமின் யாரும்

பிறந்தும் பிறவாதார் இல்

பொருள்:–

எமன் ஒளிமிக்க சூரியனை, ‘நாழி’ என்னும் அளவு கருவியாகக் கொண்டு, உமது வாழ்நாளை நாள் தோறும் அளந்து, ஆயுள் இறுதியில் உயிரை உண்ணும்! ஆதலால் மிகுதியாக அறம் செய்து உயிர்களிடத்தில் அருள் உடையவராக ஆகுங்கள்! அப்படி ஆகாதவர்கள் மக்களாகப் பிறந்தும் பிறவாதவரே ஆவர்!

 

நாலடியாரில் இன்னொரு பாட்டில்,

 

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்

வைகலும் வைகலை வைகுமென்று இன்புறுவர்

வைகலும் வைகற்றம் வாழ்நாள்மேல் வைகுதல்

வைகலை வைத்துணராதார்

 

பொருள்:-

நாள்தோறும் நாள் கழிந்து வருவதைப் பார்த்திருந்தும், அப்படி நாள்தோறும் நாள் கழிதலை அறியாதார், தமது ஆயுள் நாளில் ஒரு நாள் அப்படிக்கழிவதை உணராது அது நிலையாக இருக்கிறது என நினைத்து இன்புறுவர்.

 

 

ஒரு நாளையும் வீணடிக்காமல் தர்மம் செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள்.

 

 

வள்ளுவனும் இதே கருத்தை நம் முன் வைக்கிறான்:–

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்து இவ்வுலகு

(திருக்குறள் 336)

 

பொருள்: நேற்று இருந்தவன் இன்று உயிருடன் இல்லை என்று கூறப்படும் பெருமை கொண்டு விளங்குகின்றது இந்த உலகம்.

 

 

 

முந்தைய கட்டுரைகள்

 

உலகிலேயே எது பெரிய அதிசயம்? எது ஆச்சர்யம்? (10 ணொவெம்பெர் 2013)

 

கடல் ஓய்ந்து சமுத்திர ஸ்நானமா? (Post No.2969), Date:14 July 2016

 

ஒன்றே செய்க! நன்றே செய்க! இன்றே செய்க! (4-4-2014)

 

உலகில் ஆச்சரியம் எது? அற்புதம் எது? அதிசயம் எது? (Post No 2876), Date: 7 June 2016

 

–Subham–

நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே! (Post No.2847)

lord-yama-1

Research Article written by london swaminathan

 

Date: 28 May 2016

 

Post No. 2847

 

Time uploaded in London :– 9-48 AM

 

(Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact ; swami_48@yahoo.com

 

யமனுக்கு 14 பெயர்கள்! தர்மராஜன் என்று ஏன் பெயர்?

அமரகோசம் என்ற சம்ஸ்கிருத அகராதி உலகில் தோன்றிய முதல் அகராதி—நிகண்டு ஆகும். ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்த அகராதியில் பிரம்மாவுக்கு 29 பெயர்கள் (21 நவம்பர் 2014ல் நான் எழுதிய கட்டுரையில் விவரம் காண்க) கொடுக்கப்பட்டுள்ளன. ஏனைய கடவுளருக்கு

 

 

சிவனுக்கு 52 பெயர்களும்

விஷ்ணுவுக்கு 46 பெயர்களும்

பலராமனுக்கு 17 பெயர்களும்

அம்பாளுக்கு 21 பெயர்களும்

லெட்சுமிக்கு 14 பெயர்களும்

கணபதிக்கு 8 பெயர்களும்

முருகன்/ ஸ்கந்தனுக்கு 17 பெயர்களும்

இந்திரனுக்கு 35 பெயர்களும்

அக்னிக்கு 34 பெயர்களும்

யமனுக்கு 14 பெயர்களும்

வருணனுக்கு 5 பெயர்களும்

வாயுவுக்கு 20 பெயர்களும்

குபேரனுக்கு 17 பெயர்களும்

சூரியனுக்கு 37 பெயர்களும்

மன்மதனுக்கு 19 பெயர்களும்

ஜினதேவனுக்கு 18 பெயர்களும்

புத்தபகவனுக்கு 7 பெயர்களும்

கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பல உரைகள் எழுந்தன. அவைகளைப் படித்தால் சம்ஸ்கிருதத்தையும் இந்து மதத்தையும் “ஓரளவுக்கு அறிந்ததற்குச் சமம்”. (இவர்களில் இந்திரன், அக்னி, குபேரன், வாயு, பிரம்மா பற்றிய பெயர்ப் பட்டியலையும் அதன் விளக்கங்களையும் இங்கே எழுதிவிட்டேன்)

The_deity_Yama_with_fangs_and_holding_a_daṇḍa_(a_rod).jpgB MUSEUM

 

ரம்பையின் காதல் என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு அருமையான பாடல்:–

 

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லையின்றினே தூங்கிடும் வீடு
தொல்லையின்றினே தூங்கிடும் வீடு
உலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

ஆண்டி எங்கே அரசனும் எங்கே ஆண்டி எங்கே அரசனும் எங்கே
அறிஞன் எங்கே அசடனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி ஆ..ஆ..ஆ…ஆ.
சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
உண்மையிலே இது தான் நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
சமரசம் உலாவும் இடமே சமரசம் உலாவும் இடமே

Song: samarasasm ulavum – பாடல்: சமரசம் உலாவும் இடமே
Movie: Rambaiyin kaathal – திரைப்படம்: ரம்பையின் காதல்
Singers: Sirkazhi Govindarajan – பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
Lyrics: Marudhakasi – இயற்றியவர்: மருதகாசி
Music: T.R.Pappa – இசை: டி.ஆர். பாப்பா
Year: – ஆண்டு: 1956
((நன்றி;—Read more at http://www.thamizhisai.com))

thajavur big temple yama

Thanjavur Big Temple painting of Yama, Markandeya and Lord Shiva

 

இந்துக்கள் ஏன் தினமும் மரணதேவனை (யமனை) வழிபடுகிறார்கள் என்ற எனது கட்டுரையில் (Why do Hindus worship God of Death (my research article posted on 29 July 2013) பிராமணர்கள் தினமும் மூன்று வேளை செய்யும் சந்தியாவந்தனத்தில் தெற்கு திசையை நோக்கி நின்று கொண்டு யமதர்மராஜாவை வணங்குவதையும் அதில் யமனைப் போற்றி கீழ்கண்ட பெயர்களை சொல்லுவதையும் எழுதியுள்ளேன்:–

யமாய, தர்மராஜாய, ம்ருத்யவே, அந்தகாய, வைவஸ்வதாய, காலாய, சர்வபூதக்ஷயகராய, ஔதும்பராய, தத்னாய, நீலாய, பரமேஷ்டினே, வ்ருகோதராய, சித்ராய, சித்ரகுப்தாய.

இப்பொழுது அமரகோஷத்தில் உள்ள 14 பெயர்களைக் காண்போம்:–

தர்மராஜ:=அறத்தில் வழுவாதவன்; யார், யார் என்னென்ன செய்தார்களோ அதற்கேற்ப பலன் தருபவன்

பித்ருபதி:= இறந்தவர்களை பித்ருக்கள், என்றும் நீத்தார் என்றும் அழைப்போம்; அவர்களுக்குத் தலைவன்

சமவர்த்தி= சமமாகப் பார்ப்பவன் (ஆண்டியும் ஒன்றே; அரசனும் ஒன்றே; சமரசம் உலாவும் இடம் சுடுகாடு.)

“முடி சார்ந்த மன்னரும் பிடிசாம்பராய்ப் போவர்.”

பரேதராட் = பர லோக ராஜா

க்ருதாந்த: = முடிவை உண்டாக்குபவன் (க்ருத+ அந்த)

யமுனாப்ராதா = யமுனையின் சகோதரன் (சூரியனுடைய புத்ரி, புத்ரர்கள் யமுனா, சனி, யமன்)

சமன: = கட்டுப்படுத்துபவன்

யமராட்= கட்டுப்படுத்துவதில் மன்னன்/ ராஜா

யம: = கட்டுப்படுத்துபவன் யம, நியமம் முதலிய சம்ஸ்க்ருத சொற்கள் கட்டுப்பாடு, ஒழுங்கு முதலிய பொருட்களில் கையாளப்படுகின்றன.

 

கால: = காலத்தைக் கணக்கிடுபவன்

தண்டதர: = யமனின் கையிலுள்ள ஆயுதம் தண்டம்; அதால் தண்டிப்பவன்

ஸ்ராத்ததேவ:= சிராத்தத்தின் (திதி) தலைவன்

வைவஸ்வத: = விவஸ்வான் (சூரியன்) புத்ரன்

அந்தக: = வாழ்க்கையை முடித்து வைப்பவன்

Yama and Markandeya, Siva

இவைகளில் தர்மராஜன், சமவர்த்தி என்ற இரண்டு பெயர்களும் அழகான பெயர்கள். மரணத்தில் யாருக்கும் சலுகை காட்டாதவன். அதே நேரத்தில் அவரவர் பாபபுண்யங்களை கணக்கிட்டு நீதி தவறாமல் தீர்ப்பு வழங்குபவன்.

சித்ர (வரைபடம்), சித்ரகுப்த (மறைவான படம்):– இவ்விரு பெயரும் யமனின் கணக்குப்பிள்ளைகள்; ஒருவர் இறந்தவுடன் பாப, புண்ணிய பதிவேட்டை எடுத்துக் கொண்டு வந்துவிடுவர் என்று சொல்லுவர். உண்மையில் நம்முடைய எண்ணங்கள் ஒவ்வொன்றும் ஒரு உருவத்தை உண்டாக்குகிறது. அதுதான் சித்ரம், சித்ர குப்தம். மனதினால் தீங்கு செய்தாலும் அது சித்திரமாக உருவாகி கணக்குப் புத்தகத்தில் பதிவாகி, இறுதித் தீர்ப்பன்று தக்க தண்டனைகளைப் பெற்றுத் தரும். அதே போல நல்ல எண்ணங்கள் நற்பலனைத் தரும். இந்துக்கள் எந்த தத்துவத்தையும் கதை ரூபத்தில், உவமை ரூபத்தில் சொல்லுவதில் வல்லவர்கள்!

 

இந்துக்கள் யமனை தினமும் வணங்குவதால் மரண பயம் நீங்கி விடுகிறது. பிறந்தோர் எல்லாம், இறப்பது இயற்கை என்ற நியதியையும் நினைவுபடுத்துகிறது யம வந்தனம்.

 

–சுபம்–

 

டாக்டருக்கும் யமனுக்கும் வேறுபாடு என்ன?

cartoon-doctor-8

Compiled by London swaminathan

Post No.2227

Date: 9  October 2015

Time uploaded in London: 9-03 காலை

Thanks for the pictures.

ஒரு அருமையான சம்ஸ்கிருத ஸ்லோகம்.

இது, பல்லாயிரக் கணக்கான சம்ஸ்கிருதப் பாடல்கள் நிறைந்த புத்தகமான சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் நூலில் இருக்கிறது. அதாவது சம்ஸ்கிருத தனிப்பாடல் திரட்டு நூலில் ஒரு பாடல். அதில் டாக்டர்களைப் பற்றிக் கூறுவது உலகில் எல்லா மொழிகளிலும் ‘ஜோக்’-குகளாக உள்ளன.

வைத்யராஜ! நமஸ்துப்யம் யமராஜ சஹோதர!!

யமஸ்து ஹரதே ப்ராணான், வைத்ய: ப்ராணான் தனானி ச!

“ஹே, டாக்டர்! யமரஜனின் சகோதரனே!! உனக்கு வணக்கங்கள்!

யமன் என்பவன் உயிரை (மட்டும்) கொண்டுபோகிறான். டாக்டர்களோ உயரையும் பணத்தையும் சேர்த்துக் கொண்டுபோகிறார்கள்!!!”

இதே கருத்து உலகம் முழுவதிலும் டாக்டர்கள் பற்றிய “ஜோக்”–குகளில் இருப்பதை முன்னரே ஆங்கிலத்தில் நிறைய சம்பவங்கள் மூலம் கொடுத்துள்ளேன்.

டாக்டர்களின் அனுபவமின்மை பற்றியும் பல பொன்மொழிகள் உள. தமிழில் சொல்லுவோம்:

“ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்” – என்று! இதுவும் சம்ஸ்கிருதத்தில் காணப்படுகிறது!

ஹத்வா ந்ருணாம் சஹஸ்ரம், பஸ்சாத் வைத்யோ பவேத் சித்த:

ஆயிரம் பேரின் கதையை முடித்தவுடன்தான், ஒரு டாக்டர் பெரிய டாக்டர் ஆகிறார்.

xxx

doctor

யாருக்கு முதல் மரியாதை என்று ஒரு டாக்டருக்கும் வழக்கறிஞருக்கும் வாக்கு வாதம் வரவே டயொஜெனிஸ் (கி.மு.412) என்ற கிரேக்க நாட்டு தத்துவ அறிஞரிடம் சென்றனர். அவர் சொன்னார்:

திருடன் முதலில் போகட்டும்; மரணதண்டனை நிறைவேற்றுபவன் அவன் பின்னால் செல்லட்டும்!

Xxx

அலெக்ஸாண்டர் துமா என்பவர் பிரபல பிரெஞ்சு நாவலாசிரியர். மார்செய் நகரத்தின் பிரபல டாக்டர் ஜிஸ்டால், அவரை விருந்துக்கு அழைத்தார். விருந்து எல்லாம் சுகமாக முடிந்தவுடன் தன்னுடைய ஆல்பத்தைக் காட்டினார் டாக்டர்.

“ஓய், நாவலாசிரியரே! நீரோ எழுத்துச் சித்தர்! எழுத்துத் தச்சர்! எங்கே பார்க்கலாம், உமது கை வல்லமையை? என் ஆல்பத்தில் ஏதாவது எழுதுங்கள் பார்க்கலாம்”– என்றார் டாக்டர் ஜிஸ்டால்.

நாவலாசிரியர் துமா, பேனாவை எடுத்தார், எழுதினார்:

“டாக்டர் ஜிஸ்டால் ஊருக்கு வந்தார்

நோய்களை ஒழிக்க மிகவும் முயன்றார்;

மருத்துவ மனைகளுக்கு வேலையே இல்லை!!

—இதை எழுதிக் கொண்டிருக்கையில் டாக்டர் குறுக்கிட்டார். “எழுத்தாளரே உமது புத்தியைக்காட்டிவிட்டீரே! உங்கள் வர்க்கமே சோறு கண்ட இடம் சொர்க்கம் என்னுமினம். நான் விருந்து கொடுத்தவுடன், என்னை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்து தள்ளுகிறீர்களே!”

நாவாலசிரியர் சொன்னார்; “அட! ஏன் அவசரப்படுகிறீர்கள்; நான் இன்னும் எழுதியே முடிக்கவில்லையே”- என்று சொல்லிக் கொண்டே கடைசி வரியை எழுதி முத்தாய்ப்பு (முத்தான ஆப்பு) வைத்தார்:

“ஊரின் இடு(சுடு)காடு பெரிதாகிவிட்டது!”

 

முழுக்கவிதையையும் படியுங்கள்:—-

 

“டாக்டர் ஜிஸ்டால் ஊருக்கு வந்தார்

நோய்களை ஒழிக்க மிகவும் முயன்றார்;

மருத்துவ மனைகளுக்கு வேலையே இல்லை!!

“ஊரின் இடு(சுடு)காடு பெரிதாகிவிட்டது!”

–சுபம்–

ராமன் – யமன் சண்டை! அரிய ஏட்டுச் சுவடி!!

Compiled by London swaminathan

Date : 4 September  2015

Post No. 2124

Time uploaded in London : 12-58

கம்ப ராமாயணத்திலும்,வால்மீகி ராமாயணத்திலும் இல்லாத எவ்வளவோ விஷயங்கள் செவி வழியாக வந்துள்ளன. புற நானூற்றில் உள்ள இரண்டு பாடல்களில் உள்ள செய்திகள் இரண்டு ராமாயணங்களிலும் இல்லை. ஆழ்வார் பாடல்களில் உள்ள அணில் கதையும் முந்தைய இரண்டு ராமாயணங்களில் இல்லை. இவைகள் குறித்து முன்னரே எழுதிவிட்டேன். ஒரு வேளை இவைகள் நமக்குக் கிடைக்காமற்போன போதாயன ராமாயணம் முதலியவற்றில் இருந்திருக்கலாம். ராமனுக்கும் யமனுக்கும் நடந்த சண்டை குறித்த ஏட்டுப் பிரதி விஷயம், ஒரு சிறிய நூலாக வெளிவந்து, பிரிட்டிஷ் லைப்ரரியில் வைக்கப்பட்டுள்ளது. இதோ அந்தப் புத்தகம்.

வசந்தன் உயிர்வரு படலம்

வெளியான தேதி – 6-11-1917

வெளியிட்டவர்: கும்பகோணம் அ.அரங்கசாமி மூப்பனார்

(தற்போதைய கம்பராமாயணப் பதிப்புகளில் இந்தப் படலம் சேர்க்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை).

IMG_3972 (2)

IMG_4130

IMG_4133 (2)

IMG_4134

IMG_4135 (2)

IMG_4136 (2)

IMG_4137 (2)

IMG_4138

தமிழில் யமன்!!

??????????????????????????

எழுதியவர் சந்தானம்/லண்டன் சுவாமிநாதன்

English version of this article is posted already.

இந்துக்கள், குறிப்பாக பிராமணர்கள், தினமும் யமனை வழிபடுகின்றனர். மரண தேவனை பயமில்லாமல் கும்பிடும் ஒரே இனம் இந்துக்களாகத் தான் இருப்பார்கள். பிராமணர்கள் தினமும் காலை, மதியம், மாலையில் சூரியனை நோக்கி சந்தியாவந்தனம் செய்வர். இதில் தெற்கு திசையை நோக்கி யமனைப் பார்த்து சொல்லும் மந்திரமும் வருகிறது. இதில் யமனைக் கருப்பன் என்று கூறுகிறது. காளி, கலி, சனிக் கிரஹம், கிருஷ்ணன், விஷ்ணு, ராமன் போல யமனும் ஒரு கருப்பன். வெள்ளைத் தோல் தெய்வங்கள் ஆரிய தெய்வங்கள் என்றும் கருப்புத்தோல் தெய்வங்கள் திராவிட தெய்வங்கள் என்றும் எழுதி இந்துக்களை பிளவுபடுத்தி இந்தியாவை சீர்குலைக்க எழுதிய வெள்ளைத்தோல் அறிஞர்களுக்கு யமன் சரியான அடி கொடுக்கிறான்.

யமனைப் பற்றி சங்கத் தமிழ் இலக்கியங்களிலும் பல குறிப்புகள் வருகின்றன. ஏற்கனவே இந்திரனையும் வருணனையும் தமிழர் தெய்வங்கள் என்று தொல்காப்பியம் கூறியதைக் கொடுத்தேன். இப்போது சங்கத் தமிழ் இலக்கியம் யமதர்மன் பற்றிக் கூறுவதையும் காண்போம். அதில் ஞமன் என்றும் கூறுவர்.

சங்கத் தமிழில் புறநானூறு மிகவும் பழமையான பகுதி. அதில் பாடல் 4,13,19,22,56,195, 226,294 ஆகியவற்றிலும் பதிற்றுப்பத்தில் பாடல் 13, 14 கலித்தொகையில் பாடல் 105, 120 ஆகியவற்றிலும் காலன் என்ற பெயரில் புறநானூறு பாடல் 23, 41, 240, பதிற்றுப்பத்தில் பாடல் 39 ,கலித்தொகையில் பாடல் 105, 143 ஆகியவற்றிலும் யமதர்மராஜா பவனி வருகிறார்.

ஞமன் என்ற பெயரும் எருமை வாஹனமும் பரிபாடலில் வருகிறது (3, 5, 8 ஆம் பாடல்கள்) மீளி, மறலி, கணிச்சிப்படையோன், மடங்கல், கூற்றம் என்ற பெயரிலும் யமன் பற்றி நிறைய குறிப்புகள் இருக்கின்றன.

ஆரிய திராவிட வாதத்தை நகைப்புள்ளாக்கும் யமனைப் பற்றிய குறிப்புகளை மட்டும் பார்ப்போம்:

கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்

பிணிக்கும் காலை, இரங்குவீர் மாதோ (புறம் 195)

பொருள்: கடுந்திறலோடு மழுப்படையுடன் கூற்றுவன் பாசத்தால் கட்டி இழுத்துச் செல்லும்போது வருத்தப்படுவீர்கள்.

இந்துமதத்தில் இன்றுள்ள நம்பிக்கையை 2000 ஆண்டுகளுக்கு முன் நரிவெரூவுத்தலையாரும் பாடிவிட்டார். எருமை வாஹனம் உடையவன் என்பதும் புராணக் கருத்தாகும்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை இடைக்காடனார் பாடிய பாடலிலும் (புறம் 42) ‘’கணிச்சி என்னும் படைக் கலத்தை உயிரை வருந்தச் சுழற்றி வரும் கூற்றம்’’ என்று யமன் வருணிக்கப்படுகிறான்.

TIBET15_Yama, 16c

ஒரு மன்னரின் சீற்றத்தை விவரிக்கும் போது, தமிழ், வடமொழி இலக்கியங்கள் மன்னனை யமனுக்கு ஒப்பிடுவது வழக்கம்.

திருக்குறளில் கூற்று/யமன் என்ற சொல் 326, 765, 1050, 1083ல் வரும். கலித்தொகை, பரிபாடல் ஆகிய இரண்டும் யமன் பற்றி மட்டுமின்றி ஏராளமான புராணக் கதைகளையும் உவமைகளையும் கையாளுகின்றன.

பிராமணர்கள் தினமும் மும்முறை சொல்லும் யம வந்தனத்தில் யமன் பற்றி 13 பெயர்கள் வரும். இதை தெற்கு திசை நோக்கி நின்றுகொண்டு சொல்லுவர். இறந்த மனிதர்கள் தென் திசைக்குச் செல்லுவர் என்னும் இந்து மதக் கருத்தை ஆணித் தரமாக, அழுத்தம் திருத்தமாகச் சொல்லி, ஆரிய திராவிட வாதத்துக்கு ஆப்பு வைக்கிறான் வள்ளுவன்:

‘’தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை’’ ( குறள் 43)

இந்துக்கள் தினமும் பஞ்ச யக்ஞம் செய்யவேண்டும் என்பதை வள்ளுவன் இரண்டே வரிகளில் சொல்லும் குறள் இது. ஆறாவது பகுதி தானியத்தை மன்னனுக்கு வரியாகச் செலுத்தவேண்டும்.

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போல் புதல்வர் பெறா அதீரும் (புறம்-9)

என்று சொல்லி நெட்டிமையார் என்னும் புலவரும் ஆரிய திராவிட வாதத்துக்கு செமை அடி கொடுப்பார். இறந்தோருக்கு திதி, தர்ப்பணம் செய்வதை அழகாக எடுத்துரைக்கிறார் புறநானூற்றுப் புலவர்.

சித்திரகுப்தன் யார்: யமனுடைய காரியதரிசி ஒரு தனி ஆள் அல்ல. சித்திரகுப்தன் என்றால் ‘’ரகசிய வரைபடம்’’ என்று தமிழில் பொருள். நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் செயல் வடிவம் பெரும் முன் சித்திரமாகப் படியும். அப்பொழுதே யமன் நமக்கு மதிப்பெண் போட்டு விடுகிறான். அதன் படியே, புண்ணிய பாபங்கள் ஏற்படும். அதன் அடிப்படையில் நாம் நரகத்துக்கோ, சுவர்க்கத்துக்கோ செல்கிறோம். இதையே சித்திர குப்தன் (ரகசிய=குப்த, வரைபடம்=சித்திர) என்போம். ஒரு கம்ப்யூட்டரும் மூளையும் கோடிக் கோடி கணக்குகளைப் போடும். சித்திரகுப்தன் கணக்கு சூப்பர், சூப்பர் கம்ப்யூட்டருக்கும் மேல்!

yama

இந்துக்கள் ஏன் மரணதேவதையை வழிபடுகிறார்கள்?

மஹாபாரதத்தில் மிகவும் சுவையான கதை ‘’ஒரு பேயின் கேள்விகள்’’ ( யக்ஷப் ப்ரஸ்னம்) என்ற பகுதியாகும். இதில், ‘’உலகிலேயே அதிசயமான விஷயம் என்ன?’’ என்ற கடைசி கேள்விக்குப் பதில் கொடுத்த தருமன் ‘’ உலகில் தினமும் எவ்வளவோ பேர் இறந்து போகிறார்கள். அதைப் பார்த்த பின்னரும் எல்லோரும் தினமும் வாழப் போகிறோம் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறார்களே’’ என்பதாகும். ஆக நாம் எல்லோரும் எந்தக் கணத்திலும் இறக்கலாம் என்பதை நினைவு படுத்தவே இப்படி தினசரி ய்ம தர்மன் வழிபாடு போலும்.

திருவள்ளுவரும் மஹாபாரத ஸ்லோகத்தை ‘’நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு’’ (குறள் 336) என்ற குறளில் தந்துள்ளார்.

மற்றொரு காரணமும் உண்டு. இது கார்களில், வண்டிகளில் உள்ள ‘’ஷாக் அப்சார்பர்’’ போன்றது. குழந்தைகள் பிறக்கும் போது மகிழும் மனிதன், ஒரு உறவினர் இறக்கும்போது,உலகமே பறிபோய்விட்டது போல மயங்கி பறிதவிக்கிறான். இறப்பும் ஒரு இயற்கை நிகழ்வே என்பதை மறந்து விடுகிறான்.  தினமும் மரண தேவனை நினைத்து வழிபட்டால் அதுவே  ‘’குஷன் மெத்தை’’ போல செயல்படும். மரண பயம் நீங்கும். நமது ஆயுளும் நூறு ஆண்டு நீடிக்கும். ஏனெனில் பிராமணர்களின் மதிய வேளை சந்தியாவந்தனத்தில் ‘’நூறாண்டுக்காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க’’ (பஸ்யேமஸ் சரதஸ் சதம், ஜீவேம சரதஸ் சதம், நந்தாம சரதஸ் சதம்  என்ற மந்திரமும் வருகிறது. இதையே கண்ணதாசன் திரைப்படத்தில் பாடி இருக்கிறார்.

 

யமனைப் பற்றிய சில சுவையான குறிப்புகளையும் காண்போம்:

1.யமன் தென் திசைக்கு அதிபன். யமன் பற்றி உலகிலேயே பழமையான மத நூலான ரிக் வேதத்திலும் வருகிறது. யம என்ற வார்த்தைக்கு இரட்டையர் என்ற பொருளும் உண்டு. அவனுடன் பிறந்தவள் யமி.

2.யமன் தான் உலகில் இறந்த முதல் மனிதன் என இந்துமத நூல்கள் பேசும். யமனுக்கு உதவி செய்ய ஒரு கணக்குப் பிள்ளை உண்டு. அவன் பெயர் சித்திர குப்தன்.

3.யமனிடம் இரண்டு நாய்கள் உண்டு அதன் பெயர் சரமா. அதற்கு ஒவ்வொன்றுக்கும் நான்கு கண்கள்.

4.யமனுடைய மனைவியர்  பெயர்கள் ஹேமமாலா, சுசீலா, விஜயா.

5. யமனுக்குப் பல கோவில்களும் தனி சந்நிதிகளும் இருக்கின்றன.

6.யமன் மிகவும் நியாயமானவன். அவரவர் புண்ணிய பாபத்தால் கிடைப்பதைப் பாரபட்சமின்றி கொடுப்பதால் அவனுக்கு தர்மராஜன் என்று பெயர்.

7.யமனுடைய அப்பா பெயர் விஸ்வவத். இதனால் யமனை வைவஸ்வதன் என்றும் அழைப்பர். அம்மா பெயர் சரண்யு.

8. இவன் கருப்பன் என்பதால் ‘’நீலாய’’ என்றும் அழைப்பர்.

யமனுடைய வாஹனமும் கருப்பு— எருமை!

9.யமன் கையில் உள்ள ஆயுதத்தை கணிச்சி என்று சங்கத் தமிழ் இலக்கியங்கள் பகரும். அவனுடைய கையில் பாசக் கயிறும் இருக்கும்.

10. யமனுடைய ‘பெர்சொனல் அஸ்ஸிஸ்டன்ட்’ சித்திர குப்தனின் கையில் இருக்கும் ரெஜிஸ்டருக்குப் பெயர் ‘’அக்ர சந்தனி’’.

ஆக, ஆரிய யமனும் இல்லை, திராவிட யமனும் இல்லை; ஒரே ஒரு யமன் தான்! அவன் இந்தியாவையும் இந்துமதத்தையும் சீர்குலைக்க எண்ணுவோரின் உயிர்குடிக்கும் இந்திய யமன்!!

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்யாதீர்கள். தமிழ்த் தாய் பொறுக்கமாட்டாள்.)

Pictures are taken from various websites;thanks. contact swami_48@yahoo.com