WRITTEN by London Swaminathan
Date: 26 JANUARY 2018
Time uploaded in London – 11-05 AM
Post No. 4664
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
(தமிழை வளர்க்க விரும்புபவர்கள், தன் மனைவி, மகன்கள், கணவ்ர்கள் , ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)
யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்
ஒரு ஊரில் பத்து செட்டியார்கள் துணி வியாபாரம் செய்து வந்தனர். அந்த ஊரிலுள்ள நெசவாளர்களிடம் புடவை, தாவணி, வேஷ்டி, துண்டு முதலியவைகளை வாங்கி பக்கத்து ஊர்களில் நடக்கும் சந்தைகளுக்குக் கொண்டு சென்று விற்பார்கள். ஒரு முறை அவர்கள் பக்கத்திலுள்ள பட்டணத்தில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு காட்டுப் பாதை வழியே கிராமத்துக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது மூன்று திருடர்கள் கத்தி கம்புகளுடன் தோன்றி அவர்களை மிரட்டி எல்லாவற்றையும் பறித்துக் கொண்டனர்.
செட்டியார்கள் எப்போதும் இடுப்பில் பணம் முடித்து வைத்திருப்பார்கள் ஆகையால் வேட்டி சட்டையையும் அவிழ்க்கச் சொல்லி விட்டனர். அப்போது அவர்கள் தொந்தியும் தொப்பையுமாக இருப்பதைப் பார்த்து நாட்டியம் ஆடுங்கள் என்று திருடர்கள் உத்தரவிட்டனர். செட்டியார்கள் தங்களுக்கு நடனம் எதுவும் தெரியாது என்று சொன்னவுடன், ஏதேனும் ஆடாவிட்டால் கத்தியால் வெட்டுவேன் என்று மிரட்டியவுடன் ஒரு செட்டியார் மெதுவாக முன் வந்தார். உடனே மற்ற 9 செட்டியார்களும் அவருடன் சேர்ந்து மெதுவாக ஆடினர்.
செட்டியார்கள் வணிக பரிபாஷையில் பேசிக்கொள்ளும் வழக்கத்தை உடையவர்கள்; வாடிக்கையாளருக்குத் தெ ரியக் கூடாது என்பதற்காக விலைகள் தொடர்பான பரிபாஷை (ரகசிய/ சங்கேத மொழி) இது. அப்போது ஒரு செட்டியாருக்கு ஒரு யோஜனை தோன்றியது உடனே அதை ரஹசிய சங்கேத மொழியில் சொன்னார்.
தோம்தோம் ததிங்கிணதோம்
அண்ணமார்கள் திருபேர்
தம்பிமார்கள் புலிபேர்
ததிங்கிண ததிங்கிண ததிங்கிண தோம்
சவணம் சவணம் பேர்களைத்
திருவர் திருவர் தழுவிக்கிட்டா
தத்தீம் தத்தீம் ததிங்கிண தோம்
சவணம் தானே மீதிடா
கைகட்டி சவணம் கையைக்கட்டி
தோம் தோம் ததிங்கிண தோம்
நில்லடா, வாங்கடா, போங்கடா
தத்தீம் தத்தீம் ததிங்கிண தோம்
என்று ஒருவர் பாடினார்.
வர்த்தகர்களின் பரிபாஷையில் இருந்த கருத்து இதுதான்:-
செட்டியார் பரிமாறிக்கொண்ட கருத்து: “நாமோ பத்துப் பேர்; அவர்களோ மூன்று பேர்தான். நாம் ஆளுக்கு முன்று பேர் என்று சுற்றி வளைத்து திருடர்களைப் பிடிப்போம்”.
வர்த்தகர்கள் ஒன்று, மூன்று, பத்து என்ற எண்களை முறையே சவணம், திரு, புலி என்று குறிப்பார்கள்.
முதலில் இருந்த செட்டி சொன்ன கருத்தை மற்றவர்கள் அறிந்து கொண்டார்கள்; ஆனால் பத்து திருடர்களும் ஏதோ பாட்டு என்று நினைத்து தத்தீம் தத்தீம் ததிங்கிண தோம் என்ற பல்லவியை மட்டும் பாடி மகிழ்ந்தார்கள்.
திருடர்களோ தனது கடுமையை எல்லாம் விட்டுவிட்டு ஜாலியாக சீட்டுக் கட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். மூவரும் குடித்துவிட்டு, கும்மாளம் போட்டனர். இதுதான் தருணம் என்று மூன்று மூன்று பேராகச் சேர்ந்து பாடிக்கொண்டே திருடர்களைப் பிடித்து கயிற்றால் கட்டினார்கள்; ஒருவர் ஓடிச் சென்று பட்டணத்தில் உள்ள போலீஸ்காரர்களிடம் தெரிவித்தார். அவர்கள் வந்து பத்து திருடர்களையும் பிடித்தனர்.
இதுதான் “யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்” என்ற பழமொழிக்குப் பின்னால் உள்ள கதை!
–சுபம்—