யானையே சிங்கத்தின் பலத்தை அறிய முடியும்(Post No.10,303)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,303

Date uploaded in London – –   6 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுபாஷிதச் செல்வம்

யானையே சிங்கத்தின் பலத்தை அறிய முடியும்: ஒரு பலசாலியே இன்னொரு பலசாலியை அறிய முடியும்!!

ச.நாகராஜன்

சரோஜா பட் தொகுத்த சுபாஷித சதகம் என்ற நூலிலிருந்து சில சுபாஷிதங்களைப் பார்த்தோம். இதோ இன்னும் ஐந்து சுபாஷிதங்கள் :-

குணைர்கௌரவமாவாதி நோச்சைராஸநமாஸ்தித: |

ப்ரஸாதஷிகரஸ்தோபி காகோ ந கருடாயதே ||

உயர்ந்த பதவியை அடைவதனால் மட்டும் ஒருவன் பெரியவன் ஆகி விட முடியாது. நல்ல குணங்களைக் கொண்டிருப்பதாலேயே பெரியவனாக முடியும். காக்கை ஒன்று உயரமான இடத்தில் அமர்ந்திருபப்தால் மட்டும் அது கருடனாகி விட முடியாது.

One becomes great by means of virtues not by occupying high seat. A crow sitting on the top of a place is not regarded as an eagle.

*

ரவிரபி ந தஹதி தாட்யக் யாட்யக் சம்தஹதி வாலுகானிகர: |

அன்யஸ்மால்லப்தபதோ நீச: ப்ராயேண து:ஸஹோ பவதி ||

சூடான ஒரு மணல் குவியல் தரும் வெப்பத்தைச் சூரியனால் கூட தர முடிவதில்லை. இன்னொருவனால் ஒரு உயர்ந்த நிலையை அடைந்தவன் பொதுவாக சகிக்கப்பட முடியாதவனாக இருக்கிறான்.

Even the sun does not burn as much as the (heated) heap of sand. One who has attained a position because of another (person) usually becomes unbearable.

*

குணேஷு க்ரியதாம் யத்ன: கிமாடோபை: ப்ரயோஜனம் |

விக்ரீயந்தே ந கண்டாபிகவி: க்ஷீ ரவிவர்ஜிதா: ||

நல்ல குணங்களை அடைவதில்  முயற்சி செய். மற்றவற்றை அடைவதால் என்ன பிரயோஜனம்? பால் சுரக்க முடியாத பசுக்களின் கழுத்தில் மணியைத் தொங்க விட்டு அடித்தாலும் அது விற்கப்பட முடியாது!

Make effort in (acquiring) virtues. What is the use of doing much ado? Cows devoid of milk cannot be sold off by tying bells (in their necks).

*

குணி குணம் வேத்தி ந வேத்தி நிர்குண:

பலி பலம் வேத்தி ந வேத்தி நிர்பல: |

பிகோ வஸந்தஸ்ய குணம் ந வாயஸ:

கரி ச சிம்ஹஸ்ய பலம் மூஷக: ||

நல்ல குணங்களைக் கொண்ட ஒருவனே இன்னொருவனின் நல்ல குணங்களை உணர்கிறான், அப்படி நல்ல குணங்களைக் கொண்டிராதவன் அல்ல! நல்ல பலம் கொண்ட ஒருவனே இன்னொரு பலசாலியின் பலத்தை அறிகிறான, பலம் இல்லாதவன் அறிவதில்லை. குயில் வஸந்தத்தின் வருகையை அறிகிறது, காக்கை அல்ல! யானையே சிங்கத்தின் பலத்தை அறிகிறது, சுண்டெலி அல்ல!

The meritorious alone recognizes the merit and not one who is devoid of merit. The powerful alone recognizes power (and) not one who is devoid of power. The cuckoo recognizes excellence of spring, not the crow. The elephant knows the prowess of a lion, not the mouse.

*

குணினி குணக்ஞோ ரமதே நாகுணஷீலஸ்ய குணினி பரிதோஷ: |

அலிரேதி வனாத்கமலம் ந தர்துரஸ்தன்னிவாஸோபி ||

நல்ல குணங்களைப் பாராட்டுபவனே நல்ல குணங்கள் கொண்டவரின் சேர்க்கையில் ரமிக்கிறான். நல்ல குணங்களை மதிக்காத ஒருவன் நல்ல குணங்களைக் கொண்டிருக்கும் ஒருவனிடம் சேர்ந்திருப்பதில் திருப்தி அடைவதில்லை. தேனியானது காட்டிலிருந்து தாமரையை நோக்கி வருகிறது, குளத்திலேயே வசித்தாலும் கூட தவளை தாமரையை நோக்கி வருவதில்லை.

One who appreciates virtues enjoys the company of a virtuous person. One who does not respect virtue is not satisfied in the company of a virtuous person. The bee comes from the woods to the lotus but not the frog, even if it stays there (i.e. in the same pond).

English Translation by Saroja Bhate

Source : Subhasita Shatakam Thanks : Saroja Bhate

***

Tags- யானை, சிங்கம்,  பலசாலி, தவளை, தேனி, . குயில்

நல்ல கதை – ‘டான்ஸ்’ Dance ஆடிய யானை (Post No.8180)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8180

Date uploaded in London – 15 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரத்தன்பூர் என்ற ராஜ்யத்தை குமார சேனன் என்ற ராஜா ஆண்டு வந்தார். வீரத்துக்கும் நீதிக்கும் பெயர்போன நாடு அது. மன்னனுக்கு சங்கீதம் என்றால் உயிர் .அவரே மிருதங்கமும் வாசிப்பார். அதே ராஜ்யத்தில் நந்தலாலா என்ற சங்கீத நிபுணர் வாழ்ந்தார். அவர் தாள வாத்ய விற்பன்னர். புதிய தாளங்களைக் கண்டு பிடிப்பதில் மன்னன்.’இனம் இனத்தோடு சேரும்’ அல்லவா ? ஆகையால் நாட்டு மன்னனுக்கும் தாள வாத்ய மன்னனுக்கும் இடையே நட்பு மலர்ந்தது.

இருவரிடையே வளர்ந்த நட்பு பல மந்திரிகளிடையே பொறாமைத் தீயை வளர்த்தது .

ஒரு நாள் நந்தலாலாவும், குமார சேனனும் காட்டில் உலவிக்கொண்டிருந்த போது தாள மன்னன் நந்த லாலாவின் மனத்தில் ஒரு தாளக்கட்டு உருவாகியது. ஆனால் காட்டில் உலாவை முடிப்பதற்குள் முழு தாளமும் உருவாகவில்லை.

மாலை நேரம் வந்துவிட்டது; மலை வாயில் கதிரவனும் விழுந்தான். இருவரும் பிரிந்தனர். மறுநாள் பொழுதுவிடிந்தது. மன்னனுக்கு ஆர்வம் பொங்கி எழுந்தது. இவ்வளவு நேரத்தில் நந்தலாலா தாளம் முழுவதையும் கண்டு பிடித்து இருப்பார் ; அவரிடம் பேச வேண்டும் என்ற அவா எழுந்தது .

அக்காலத்தில் மொபைல் போனோ , ‘வாட்ஸ் அப்’போ, பேஸ் புக்கோ , ‘ஸ்கைப்’போ (Whats up, Mobile Phone, Facebook, Skype, Zoom ) எதுவும் கிடையாது. நந்தலாலாவை எப்போது மன்னர் சந்திக்க விரும்புகிறாரோ அப்போது வாத்ய கோஷம் முழங்க யானையையும் படை வீரர்களையும் நந்த லாலா வீட்டுக்கு அனுப்புவார். அவரும் ஊர்வலமாக வருவார். திரும்பிப் போகும் போதும்  ‘ஓலா’ ,’ ஊபர்’ (Ola, Uber)  டாக்சி வசதி இல்லாததால் யானை மீது ஏறி வீட்டுக்குப் போவார். அவர் போடும் தாளத்தை எல்லாம் யானையும் கேட்டு மகிழும்.

இந்த வழக்கப்படி, அன்றும் நந்த லாலா வீட்டுக்கு யானை அனுப்பப்பட்டது .ஆனால் அவரோ முழுக்க முழுக்க புதிய தாளம் கண்டு பிடிப்பதில் மூழ்கி இருந்தார். யானைப்பாகன் அரசர் அனுப்பிய செய்தியைச் சொன்னான் . அவரோ தாள சைகைகளையே காட்டினார். அவன் ஓஹோ இப்போது வரமாட்டேன் என்று சொல்கிறார் போலும் என்று எண்ணி அரண்மனைக்கே திரும்பிச் சென்றான்.

இவ்வளவு காலமாக பொறாமைத் தீயில் புகைந்து கொண்ட மந்திரிகளுக்கு நல்ல சாக்கு கிடைத்தது . அரசனை நந்த லாலா அவமதித்து விட்டதாக எல்லோரும் ஒரே குரலில் ‘கோரஸ்’ (Chorus)  பாடினார்கள். நாட்டின் சட்டப்படி அரசனை அவமதித்த நந்தலாலாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் வாதாடினர். இன்று இவர் ஒருவரை சும்மா விட்டால் நாளைக்கு நாட்டில் எல்லோரும் மன்னனை எள்ளி நகையாடும் நிலைமை வந்துவிடும் என்றும் அச்சுறுத்தினர் ; மன்னனும் நந்த லாலாவுக்கு மரணதண்டனை விதித்தான். நாளும் தேதியும் அறிவிக்கப்பட்டது.

பெரிய மைதானத்தில் ஒரு குழி தோண்டி நந்த லாலாவின் தலை மட்டும் தெரிய ஏற்பாடாகி இருந்தது ; அந்தத் தலையை யானை வந்து இடறி துண்டிக்கும். இதுதான் வழக்கமாக மரண தண்டனை நிறைவேற்றும் முறை ; மரண தண்டனை நாளும்  வந்தது. மிக தீவிரமாக புதிய தாள முயற்சியில் இருந்த நந்தலாலா எப்படியும் தாளத்தை கண்டுபிடித்து மரணம் அடைய வேண்டும் என்று முழுவீச்சில் இறங்கினார். மரண தண்டனைக்காக வாசலில் வந்து நின்ற சேவகர்கள் அவரை சிவப்பு மாலை அணிவித்து அழைத்துச் செல்வதற்குள் இவர் மனதில் உதித்த தாளத்தின் முழு வடிவமும் கிடைத்தது; உடனே அவருக்குப் பேரானந்தம்; பிரம்மா நந்தம். ஆன பரவசத்தில் மரண தண்டனை ஊர்வலத்தில் அந்த புதிய தாளத்தை வாசித்துக்கொண்டே அதி பயங்கர சந்தோஷத்துடன் ‘டான்ஸ் ஆடிக்கொண்டே வந்தார். ஊரே பார்த்து வியந்தது.

இதற்குள் நந்தலாலாவை யானை கொல்லும் காட்சியைக் காண மைதானத்துக்குள் பல்லாயிரம் மக்கள் கூடினர். நந்த லாலா கழுத்தில் சிவப்பு மாலை போட்டு மரணதண்டனை மைதானத்துக்கு அழைத்து வந்தனர் ; அவர் புதிய தாளத்தை பரவசத்துடன் வாசித்துக் கொண்டே வந்தார். பின்னர் பேரமைதி ; ஏனெனில் மரண தண்டனைக்கு அறிவித்த நேரம் வந்துவிட்டது.

வழக்கமாக மரணதண்டனைக் கைதியின் கடைசி ஆசையைக் கேட்டு அதை நிறைவேற்றுவர். நந்தலாலாவிடம் கடைசி ஆசை என்ன என்று கேட்டபோது தான் கண்டுபிடித்த புதிய தாளத்தை மிருதங்கத்தில் வாசிக்க அனுமதிக்க வேண்டும் என்றார் ; அனைவரும் அது நிறைவேற ஒப்புதல் தந்தனர்.

இவர் போட்ட புதிய தாளம் அரசவை  யானையின் காதையும் எட்டியது.; அதற்குள் ஆனந்த பரவசம் எழுந்தது. இவர் போட்ட தாளத்துக்கு ஏற்ப அது காலையும் துதிக்கையையும் தூக்கி டான்ஸ் ஆடத் துவங்கியது. அது மட்டுமல்ல நடன மாடிக்கொண்டே தாளம் வந்த திசையை நோக்கிச் சென்றது; மன்னனும் மந்திரிகளும் இந்த அதிசயத்தைக்  கண்டு மலைத்தனர்; திகைத்தனர். 

நந்தலாலாவின் புதிய தளத்துக்கு ஏற்ப கன  கச்சிதமாக, யானை டான்ஸ் ஆடியது . அவரை அப்படியே துதிக்கையால் வளைத்துத் தூக்கி தனது முதுகின்மேல் வைத்தது ; நந்த லாலாவோ தன்னை மறந்து தாளத்தில் மூழ்கிக் கிடந்தார்; யானை அவரை மைதானத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்று மன்னன் முன்னிலையில் இறக்கிவிட்டு துதிக்கையால் பிளிறி வணக்கம் சொல்லிவிட்டு மீண்டும் தாளத்துக்கு ஏற்ப நடனம் ஆடியது !

மன்னனுக்கு ஒரே வெட்கம் ; யானைக்கு தெரிந்த சங்கீதம் கூட தனக்குத் தெரியவில்லையே என்று வருத்தப்பட்டு ஆசனத்திலிருந்து இறங்கி வந்து நந்த லாலாவைக் கட்டித் தழுவி பெரிய சன்மானங்களை வழங்கினான். புதிய. தாளத்துக்கு ‘கஜஜாம்பி’  என்ற புதுப் பெய ரும் சூட்டினர் .

SOURCE – ORGANISER WEEKLY, 21-01-2007

tags — டான்ஸ் , Dancing elephant, யானை

–சுபம்–

யானை அரியணையில் அமர்த்திய கரிகாலன்! (Post No.5056)

Written by S NAGARAJAN

 

Date: 29 MAY 2018

 

Time uploaded in London –  8-06 am  (British Summer Time)

 

Post No. 5056

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

கொங்கு மண்டல சதகம்

யானை அரியணையில் அமர்த்திய கரிகாலன்!

 

ச.நாகராஜன்

 

உலக வரலாறு கண்ட சிறந்த மன்னர்களுள் சோழ மன்னன் கரிகால் சோழனும் ஒருவன். சிறந்த வீரன். நீதிமான். பல சிறந்த வியத்தகு சம்பவங்களைத் தன் வாழ்க்கையில் கொண்டவன்!

 

அவன் புகழை கொங்கு மண்டல சதகம் பாடல் 33 எடுத்துரைக்கிறது.

பாடல் வருமாறு:-

நீர்மை காவிரி நாட்டினை யாண்ட நிருபரினற்

பேருறு வான்கரி காலன் கரந்து பிழைத்ததன்றி

ஏருறு சிங்கா தனமேறக் கையாலெடுத்துமத

வாரணங் கண்டு கொடுபோன துங்கொங்கு மண்டலமே

கொங்கு மண்டல சதகம் – பாடல் 33

பாடலின் பொருள் : சோழ மண்டலத்தை ஆண்ட மன்னர்களுள் திறமை வாய்ந்த மன்னனான கரிகால் சோழன் தன் உயிர் பிழைத்தல் காரணமாக மாறு வேடமாக இருந்து பிழைத்ததும், இவனைச் சிங்கதானம் ஏற்ற யானை எடுத்துப் போனதும் கொங்கு மண்டலம் என்பதாகும்.

பாடல் குறிக்கும் வரலாறு அனைவரும் அறிந்த ஒன்று தான். அதற்கு ஆதாரமாக இந்தப் பாடல் விளங்குவதால் இது தனியிடத்தைப் பெறுகிறது.

 

இது குறிக்கும் வரலாறு இது தான்:

உறையூரில் அரசு புரிந்து வந்த உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி என்னும் சோழ மன்னன் அழுந்தூர் வேள்மகளை மணந்தான். கருப்பமுற்று அவளுக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. இன்னும் ஒரு முகூர்த்த காலத்தில் பிள்ளை பிறப்பானாயின் அவன் சக்கரவர்த்தி ஆவான் என்பதைச் சொல்லக் கேட்ட அரசி, தன்னைத் தலைகீழாகக் கட்டும் படி கூறி நல்ல ஹோரை வந்தவுடன் இறங்கி ஆண்மகனைப் பிரசவித்தாள்.

இளம் பருவத்திலேயே குழந்தையின் தந்தை இறந்தான். உள்நாட்டுக் குழப்பமும், வெளிநாட்டிலிருந்து வந்த சண்டையும் அவனை அரியணை ஏறச் செய்யவில்லை. பிழைப்பதே அரிதாக இருந்தது. மாறுவேடம் பூண்ட இளவரசன் கொங்கு நாட்டில் புகுந்து ஊர் ஊராய்த் திரிந்து வாழ்ந்தான்.

இதற்கிடையில் உறையூரில் சிங்காதனம் ஏறத் தக்க ஒருவனைத் தேடவேண்டும் என்று நிச்சயிக்கப்பட்டது. அக்கால வழக்கப்படி பட்டத்து யானையை விடுவதென்று தீர்மானித்து அதன்படியே யானையை கழுமலத்திலிருந்து கட்டவிழ்த்து அனுப்பி அதன் பின்னால் அனைவரும் சென்றனர்.

 

யானை கருவூர் சென்றது.அங்கிருந்த கரிகாலனைத் தன் பிடரி மீது தூக்கி வைத்துக் கொண்டு திரும்பியது.

கரிகாலன் அரசனாக்கப்பட்டான். ஆனால் இது பொறாத தாயத்தார் (உறவினர்) அவனைச் சிறைப்படுத்தினர். அது மட்டுமின்றி சிறைக்குத் தீயும் வைத்தனர். அந்த நெருப்பையும் மீறி அவன் சிறையிலிருந்து தப்பி வந்தான். தனது மாமன் இரும்பிடர்த்தலையாரின் துணையைப் பெற்று பகைவர்களை வென்று அரியணை ஏறினான்.

சிறையில் தீ எரிந்த போது அந்த நெருப்பால் கருகிய காலைப் பெற்றதால் கரிகாலன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான்.

கரிகாலனின் காலத்தை வரலாற்று ஆசிரியர்கள் கி.மு. 100 என்று நிச்சயிக்கின்றனர். அதாவது  2118 ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்பாகச் செங்கோலோச்சியவன் கரிகாலன்!

 

இவனைப் பற்றி பழமொழி கூறுகையில்.

“கழுமலத்தில் யாத்த களிறுங் கருவூர்

விழுமியோன் மேற்சென் றதனால்” – பழமொழி

என்று கூறுகிறது.

பழமொழியின் இன்னொரு பாடல் இது:-

 

“சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும்

பிடர்த்தலைப் பேரானைப் பெற்று – கடைக்கால்

செயிரறு செங்கோல் செலீஇனான் இல்லை

உயிருடையா ரெய்தா வினை”  (பழமொழி)

 

பொருனராற்றுப்படையில் வரும் குறிப்பு இது:-

 

“மூச்சக் கரமு மளப்பதற்கு நீட்டியகால்

இச்சகக் கரமே அளந்ததால் – செச்செய்

அரிகான் மேற்றேன் றொடுக்கு மாய்புன னீர்நாடன்

கரிகாலன் கானெருப் புற்று   – (பொருனராற்றுப்படை)

 

திருஞான சம்பந்தர் பாடிய தேவாரத்தில் திருக்கச்சியேகம்பம் பதிகத்தில் வரும் ஒரு பாடலையும் கீழே பார்ப்போம்:

“விண்ணுளார் மறைகள் வேதம் விரித் தோதுவார்

கண்ணுளார் சழலின் வெல்வார் கரிகாலனை

நண்ணுவார் எழில்கொள் கச்சிநக ரேகம்பத்

தண்ணலா ராடுகின்ற வலங்காரமே”

 

எத்தனை அற்புதமான மன்னன் கரிகாலன்; அவனை ஆதரித்தது கொங்கு மண்டலமே என்கிறது கொங்கு மண்டல சதகம்.

தமிழருக்குப் புகழ் சேர்த்த மன்னன் கரிகாலனைக் கொண்டாடுவோமாக!

***

3.தமிழ்ப் பழமொழிகள்: TAMIL- ENGLISH PROVERB BOOK -2 (Third Part)

சிதம்பரத்தில்  பிறந்த பிள்ளைக்குத் திருவாசகம் கற்றுக் கொடுக்கவேண்டுமா?

Compiled by London swaminathan

Post No.2225

Date: 8  October 2015

Time uploaded in London: 17-10

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

Second part of Proverb book –Two was published yesterday. This is Third part of Book Two.

தனி மரம் காடாகாது  (தனி மரம் தோப்பு  ஆகாது)

துரும்பு நுழைய, இடம் கொடுத்தால் யானையைக் கட்டுவான் –(இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான்)

நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு இரண்டாடு கேட்கும்
நிழலின், அருமை வெயிலில் போனால்தான்   தெரியும்

பணம் பத்தும் செய்யும்

பார்த்தால் பூனை, பாய்ந்தால் புலி

தொடரும்………………………….