டாக்டர் கடவுள் யார்? புதையல் கடவுள் யார்? ரிக் வேதப் புலவர் புதிர் ! (Post No.7585)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7585

Date uploaded in London – 17 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ரிக் வேதப்  புலவர்கள் மகா மேதாவிகள்; அவர்கள் எதையும் நேரடியாகச் சொல்ல மாட்டார்கள். மறை பொருளில் பகர்வர். உலகிலேயே ரிக் வேதத்தை சரியாகப் புரிந்து கொண்டவன் தமிழன் ஒருவன்தான். வேதத்துக்கு மறை  (ரகசிய மொழி)  என்ற அழகான பெயரைக் கொடுத்தான். சங்கத் தமிழ் நூல்களில் இந்த அழகான சொல் பயிலப்படுகிறது. அது மட்டுமல்ல. ரிக் வேதத்தையே தமிழர்கள்தான் கண்டுபிடித்தார்களோ என்றும் எண்ண வேண்டி இருக்கிறது. ஏனனில் தமிழர்களின் கடல் தெய்வம் வருணன் என்றும், மருத நிலக் கடவுள் இந்திரன் என்றும் தொல்காப்பியர் செப்புகிறார். இவ்வளவு தெளிவாக, ரத்தினச்  சுருக்கமாக எந்த சம்ஸ்கிருத நூலிலும் இல்லை. ரிக் வேதத்திலுள்ள பத்தாயிரத்துக்கும் மேலான மந்திரங்களை படித்தால்  இந்திரனுக்கும் வருணனுக்கும் மாயோனுக்கும் (விஷ்ணு) 1008 அடை மொழிகள் கொடுத்து இருப்பர். அதைப்  படிக்கும் வெளிநாட்டினர் வருணன் வான் தெய்வமா, கடல் தெய்வமா, சந்திரனா, இருளைக் குறிக்கும் ராத்திரி தெய்வமா என்று காரசார விவாதம் நடத்தினர். இன்னும் கதைக்கின்றனர். தமிழனோ பொட்டில் அடித்தாற்போல புகன்று விட்டான்.

இதே போல யாக, யக்ஞ, ஹோம, ஹவனுக்கு ‘வேள்வி’ என்ற ஒரே சொல்லைப்  போட்டு அசத்திவிட்டான் தமிழன். இந்த ‘வேள்வி’ என்ற சொல், தமிழத்தில் வேத மதம், சங்க காலத்துக்கு வெகு காலம் முன்னரே தழைத்து ஓங்கி விட்டதற்குச்  சான்று என்று காஞ்சி முனிவரும், பரமாசார்யாருமான ஸ்ரீ சந்திர சேகர இந்திர சரஸ்வதி  (1894-1994)  சுவாமிகளும் விளம்புவார் .

ரிக் வேதப் புலவர்கள், மறை பொருளில் கவி படுவதை உலகோர்  அறிவர். சில கவிதைகள் முழுக்க முழுக்க விடுகதையாக அமைந்துள்ளன. குறிப்பாக எட்டாவது மண்டலத்திலுள்ள 29-ஆவது கவிதையைப் படித்து ரசிக்கலாம். ஒவ்வொரு கடவுளின் சிறப்பையும் சொல்லிவிட்டு கடவுளின் பெயரை நாமே கண்டுகொள்ளும்படி புதிர் போடுகிறார் புலவர் . இதோ இந்தக் கவிதையின் மொழி பெயர்ப்பைப் படியுங்கள்.. விடை கடைசியில் உளது. அதைப்  பார்க்காமலேயே எத்தனை கடவுளரை நீங்கள் கண்டுபிடிக்க முடிகிறது என்றும் பாருங்கள்:–

1.ஒருவன் பழுப்பு நிறமுள்ளவன் . எங்கும் பரவுபவன்; இரவுகளின் தலைவன், யுவன்; போன் ஆபரங்களால் தன்னை அலங்கரித்துக் கொள்பவன் (அவன் யார்?)

2.ஒருவன் அறிஞன்- தேவர்களின் நடுவே பிரகாசிப்பவன் – தன்னுடைய இடமான  வேதியிலே அமர்ந்துள்ளான் .

3.ஒருவன் தேவர்களிடையே இரும்புக் கோடாலியைச் சுழற்றிக் கொண்டிருக்கிறான்.

4.ஒருவன் தன கையில் இயங்கும் வஜ்ராயுதத்தை பற்றுகின்றான். அதனால் அவன் விருத்திரனைக் கொல்கிறான்.

5.ஒருவன் ஒளி வீசுகிறான்- உக்கிரமானவன் –  கையில் கூரிய ஆயுதத்தை வைத்து இருக்கிறான் . அவன் குணப் படுத்தும் மருந்துகளைத் தருகிறான்.

6.ஒருவன் கள்ளர்களைப் போல வழிகளை, பாதைகளைக் கவனிக்கிறான். அவனுக்கு மறைந்து கிடக்கும் புதையல் செல்வங்கள் தெரியும் .

7.ஒருவன் கம்பிர நடையுள்ளவன் மூவடியால் ஓங்கி உலகளந்தவன்

8.இருவர் சிட்டாகப் பறந்து செல்லும் குதிரைகளில் ஒரு பெண்ணோடு போகின்றனர். அவர்கள் அந்நிய நாடுகளுக்குச் செல்லும் பயணிகளைப் போல விரைகிறார்கள்.

9.இருவர் வானத்தின் உயரே அமர்ந்து இருக்கிறார்கள் ; வணங்கப்படும் அவர்கள் நெய் ஆகுதிகளை ஏற்கிறார்கள்.

10.சிலர் சாம கீதம் இசைத்து , புகழ் பாடி , சூரியனையே பிரகாசிக்க வைக்கிறார்கள் (யார் இவர்கள்)

புதிர்களுக்கு விடை –

1.சோமன்/சந்திரன் 2.அக்நி (தீ), 3.துவஷ்டா , 4.இந்திரன், 5.ருத்ரன் 6. பூ ஷன் , 7.விஷ்ணு , 8.அஸ்வினி தேவர்கள், சூரியை என்னும் பெண், 9. மித்திரன், வருணன், 10.அத்ரி ரிஷி குடும்பத்தினர்.

இது வைவஸ்வத மநு பாடியது அல்லது மரீசி காஸ்யபன் பாடியது என்று பாடலின் அடிக்குறிப்பு கூறுகிறது.

–subham–

குரு யார்? ஆசிரியர் யார்? என்ன வேறுபாடு? (Post No.2907)

mdu school

Compiled by London swaminathan

 

Date: 19  June 2016

 

Post No. 2907

 

Time uploaded in London :– 9-51

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

devakottai school

தமிழிலும் ஆங்கிலத்திலும் குரு, ஆசிரியர் (டீச்சர்), உபாத்யாயர் போன்ற சொற்கள் வேறுபாடின்றி வழங்கப்படுகின்றன. ஆனால் சம்ஸ்கிருதத்தில் ஒவ்வொன்றுக்கும் தெளிவான பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

 

டீச்சர், ஆசிரியர் ஆகிய சொற்கள் சம்ஸ்கிருதச் சொல்லான ‘ஆசார்ய’ என்பதிலிருந்து வந்தவை.

 

வட இந்தியாவில் இப்பொழுது பல்கலைக்கழகத் துணைவேந்தரை குலபதி என்று அழைக்கின்றனர். வேத காலத்தில் 10,000 மாணவர்களைக் கொண்ட ஆசிரியருக்கு மட்டுமே குலபதி என்ற பட்டம் வழங்கப்பட்டது.

 

உலகின் முதல் சட்டப்புத்தகமான மனு ஸ்மிருதியிலிருந்து சில விஷயங்களைக் காண்போம்.

உபநீயது ய: சிஷ்யம் வேதமத்யாபயேத் த்விஜ:

சகல்பம் சரஹஸ்யம் ச தமாசார்யம் ப்ரசக்ஷதே (மனு 2-140)

உபநயனம் (பூணூல்) செய்வித்து வேத வேதாந்தங்களை ஓதிவைப்பவன் ‘ ஆசார்யன்’ என்று அழைக்கப்படுகிறான்.

xxx

 

SCHOOL CHILDREN jr

ஏகதேசம் து வேதஸ்ய வேதாங்கான்யபி வா புன:

யோ அத்யாபயதி வ்ருத்தர்தமுபாத்யாய: ச உச்யதே

பணம் (தட்சிணை) வாங்கிக் கொண்டு வேத வேதாங்கங்களைக் கற்பிப்பவன் உபாத்யாயன் என்று சொல்லப்படுகிறான்.

xxx

நிஷேகாதினி கர்மாணி ய: கரோதி யதா விதி

சம்பாவயதி சான்னேன ச விப்ரோ குருர் உச்யதே

விதிப்படி, கர்ப்பாதானம் முதலிய கிரியைகளைச் செய்வித்து ஜீவனோபாயத்தைக் கற்பிப்பவன் குரு என்று அழைக்கப்படுகிறான்

xxx

பிதா மாதா ச ததாசார்யோ மஹாகுருரிதி ச்ம்ருத:

தந்தை, தாய், ஆசிரியர் ஆகியோர் மஹா (பெரிய) குருக்கள் என்று கருதப்படவேண்டும்.

xxx

 

school tree

முனீனாம் தசசாஹஸ்ரம் யோ அன்னதானாதி போஷணாத்

அத்யாபயதி விப்ரர்ஷிரசௌ குலபதி: ஸ்ம்ருத:

10,000 சிஷ்யர்களுக்கு உணவு அளித்து, போதிக்கும் (கற்பிக்கும்), ரிஷிக்கு ‘குலபதி’ என்று பெயர். (பத்தாயிரம் முனிவர்களுடைய கூட்டத்துக்கு எவன் அன்னதானம் முதலியன கொடுத்து ஆதரிக்கிறானோ அவன் குலபதி என்று அறியப்படுகிறான்)

xxxx

ஆசிரியனின் இலக்கணம்:  ஒரு ஆசிரியன் எப்படி இருக்கவேண்டும் என்றும் இந்துமத நூல்கள் செப்புகின்றன:–

 

ஜிதேந்த்ரிய ஜித த்வந்த்வஸ் தபோ தான பராயணா:

சத்யவாக் ஊர்ஜித: ராக்ஞோ மேதாவீ நியதஸ் சுசி:

புலனடக்கம், இருமைகளை (வெற்றி தோல்வி, சுக துக்கம் போன்றவை இருமைகள்) வென்றவன், தானம்-தவம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பவன், உண்மை விளம்பி, வீர்யமுடையவன், கற்றறிந்தவன், புத்திகூர்மையுள்ளவன், ஒழுங்கு கட்டுப்பாடு உடையவன், தூய்மையானவன் (ஆசிரியன் ஆவான்)

xxxx

நிஸ்சம்திக்த: குலீனஸ்ச ஸ்ரௌதகர்மணி தத்பர:

நிக்ரஹானி க்ரஹேதக்ஷஸ் சர்வ தோஷ விவர்ஜித:

காயத்ரீமந்த்ர குசல ஆசார்ய ஸமுதாஹ்ருத:

 

அப்பழுக்கற்ற குலத்தில் பிறந்தவன், வேத அனுஷ்டானம் உடையவன், செய்யத் தக்கது-செய்யத்தகாதது எது என்ற விவேகம் உடையவன், மாசுமருவற்ற ஒழுக்கம் உடையவன், எல்லாம் அறிந்தவன், காயத்ரீ மந்திரத்தில் தேர்ச்சியுடையவன் ஆசார்யன் (ஆசிரியர்) என்று அறியப்படுகிறான்.

 

xxxx

Skt at school level

Sanskrit instructor conducting a contact class for professionals at Rashtriya Sanskrit Sansthan on Tuesday. Photo by K Asif 26/09/12

ஆசினோதி ஹி சாஸ்ரார்தான் ஆசாரே ஸ்தாபயத்யபி

ஸ்வயமாசரதே யஸ்மாத் தஸ்மாத் ஆசார்ய உச்யதே

சாத்திரங்களை அறிந்து பிறரையும் அனுசரிக்கச் செய்பவனே ஆசார்யன்.

(சாத்திர நூல்களின் பொருளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து அறிந்துஆராய்பவன், பிறரையும் ஆசார அனுஷ்டானங்களில் ஈடுபடச் செய்பவன், தானும் அதைக் கடைப்பிடிப்பவன் ஆசார்யன் (ஆசிரியர்) என்று அறியப்படுகிறான்.

 

–சுபம்–