யாழ்ப்பாண ஐயர் பழமொழிகள்! (Post No. 2953)

pararajasekara

Compiled by London swaminathan

Date: 8 July 2016

Post No. 2953

Time uploaded in London :– 17-11

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

“பரராஜ சேகரன் ஆண்ட காலத்தில் சுபதிருஷ்ட முனிவர் என்பவர் அவன் சபைக்கு வந்தார். மன்னன் எழுந்து நின்று அவரை உபசரித்து,  தனது எதிர்காலம் பற்றிக் கூறுமாறு வேண்டினான். முனிவர் சொன்னார்:-

நீ புண்ணியவான். உனது ஆட்சி குறைவின்றி நடக்கும். அதற்குப்பின் உன் மூத்த புதல்வனை விஷம் வைத்துக் கொன்றுவிடுவார்கள். இரண்டாவது மகனை வெட்டிக் கொன்றுவிடுவார்கள்.

 

இரண்டாம் பத்தினியின் வயிற்றில் பிறந்த சங்கிலி அரசோச்சுவான். அவனது கொடுங்கோலாட்சியில் பறங்கியர் வசம் ஆட்சி ஒப்படைக்கப்படும்.  பறங்கியர் சிவாலயங்களை அழித்து தமது சமயத்தைப் பரப்பி நாற்பது வருஷம் கொடுங்கோலாட்சி புரிவர். அவர்களை ஒல்லாந்தர் (ஹாலந்து/ டச்சு) வென்று  அவரைப்போல் கொடியராக 120 ஆண்டுகள் ஆள்வர். அதற்குப்பின் மற்றொரு தேசத்தார் (புகைக்கண்ணர்- ஆங்கிலேயர்) வந்து ஒல்லாந்தரை ஒட்டி நீதியாக அரசு செய்வர். உன் சந்ததிக்கு அரசு ஒரு காலத்தும் மீள்வதில்லை” என்றார்.

 

இதுவே சாரமான கல்வெட்டொன்று திரிகோணமலைத் தம்பத்திலுமுள்ளது

அது மிகவும் பழமையானது. பிற்காலத்தாரால் ஏடுகளில் மாற்றப்பட்டுத் திரிபுபெற்றுள்ள வைபவமாலைக் கூற்றுப்போல்வதன்று:-

 

முன்னாட்குளக்கோட்டன் மூட்டுந்திருப்பணியைப்

பின்னாட்பறங்கி பிடிப்பானே — பொன்னாரும்

பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணர் போய் மாற

மானேவடுகாய்விடும்.

 

இதனை வையா (வையாபுரி ஐயர்) பாடல் என்பர்.

வையாபுரி பாடல் பொய்யாதென்பது பழமொழி. வையாபுரி ஐயர் என்பது அவர் இயற்பெயர். அவர் பிராமண சந்யாசி. அவர் சுபதிருஷ்டர் சீடராகிய சித்தையர் என்பவருக்குச் சீடர்.

 

சித்தையர் இருந்து தவம் செய்த இடம் சித்தன்கேணியென்று வழங்குகின்றது. சித்தன்கேணிக் கிராமத்திலே அவர் இருக்கும் வரையில்  விஷப் பாம்புகள் செல்வதும், விஷம் தீண்டி இறப்பதும் இல்லையாம். வையாபுரி ஐயர் சீடர் கோவியத் திருமேனியுடைய கொற்றனார்.

 

ஐயருக்கு 12 மனைவிகள்!

 

அவர் சீடர் பெரியதம்பி ஐயர். அவர் கொற்றனார் கொடுத்த மூலிகையை உண்டு நரை திரை மூப்பு இன்றி 120 வயசில் இளமையோடிறந்தவர். அவருக்கு நான்கு பார்ப்பாரப் பெண்களும், நான்கு வேளாளப் பெண்களும், நான்கு கோவியப் பெண்களுமாக பன்னிருவர் பத்தினிமார் ஏக காலத்தில் இருந்தார்கள். இவருடைய அற்புத இளமையை நோக்கியே “பெரிய தம்பி ஐயர் வாலிபத்திலே” என்னும் பழமொழி வழங்குவதாயிற்று. பெரியதம்பி ஐயர் இருந்த வீடு வண்ணைச் சிவன் கோயிலுக்குத் தென் பாரிசத்தில் இன்றுமிருக்கின்றது. அவர் சந்ததியாருமங்கேயிருக்கின்றார்கள்”.

 

–ஆதாரம்: யாழ்ப்பாண சரித்திரம், ஏ.முத்து தம்பி பிள்ளை

 

யாழ்ப்பாணம் பற்றிய சுவையான நூல்

IMG_6160 (2)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Compiled  by London swaminathan

Date: 29  September 2015

Post No: 2197

Time uploaded in London :– 8-09 am

(Thanks  for the pictures) 

லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரியில் யாழ்ப்பாணம் பற்றிய, 1915 ஆம் ஆண்டு வெளியான, நூல் ஒன்று கண்டேன். 156 பக்கங்களுக்கு மேலுள்ள இந்த நூலில் பல அரிய தகவல்கள் உள்ளன. இத்தகைய நூல் இன்று இலங்கையில் கிடைக்காவிடில் இதை மீண்டும் அச்சிடுவது நல்லது. இதை எழுதியவர் முத்துத்தம்பிப் பிள்ளை. புத்தக முடிவில் அந்தக் கால வழக்கப்படி ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு வாழ்த்துக் கூறியிருப்பது அக்கால மனநிலையை உண்ர முடிகிறது. விக்டோரியா ராணியாரையும், மன்னரையும் வாழ்த்துவது அக்கால கட்டங்களில் வெளியான நூல்களில் காணமுடிகிறது.

யாழ்ப்பாண நில அமைப்பு, குடியேறிய ஜாதிகள் விவரம் முதலியனவும் புத்தகத்தின் இறுதியில் பட்டியலிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணர் படம் ஒன்றும் நூலில் இருக்கிறது.

IMG_6161 (2)

IMG_6162

IMG_6163 (2)

IMG_6164 (2)

IMG_6165 (2) - Copy

IMG_6166 (2)

IMG_6167 (2)

IMG_6168

IMG_6169 (2)

IMG_6170 (2)

jaffna_map

Last few pages are given below:——————

IMG_6171 (2)

IMG_6172 (2)

IMG_6173 (2)

IMG_6174 (2)

IMG_6175 (2)

IMG_6177 (2)

(Jaffna map is NOT from the old book.)

–Subham–

இலங்கைச் சரித்திரம்

Article No. 2108

Compiled  by London swaminathan
Date : 30 August  2015
Time uploaded in London :– 7-14 am

IMG_4070

வடமொழியில் காந்தபுராணத்துள்ள, தக்ஷிண கைலாச மான்மிய சங்கிரகம் எனப்படும் இலங்கைச் சரித்திரம்

யாப்பாணத்து வண்ணைநகர் சு.ரத்தினசபாபதி சாஸ்திரிகளால் ஏடுகளிலிருந்து மொழிபெயர்த்துச் சொல்லியபடி, நல்லூர் வ.சின்னத்தம்பி புலவரால் அச்சில் பதிப்பிக்கப்பட்டது.

இந்த நூல் பிரிட்டிஷ் மியூசியத்தில் 1911- ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டதாக கடைசி பக்கத்தில் முத்திரை இருப்பதால் அதற்கு முன்பு பதிப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்பொழுது லண்டன் பிரிட்டிஷ் லைப்ப்ரரியில் உள்ளது.

IMG_4071 - Copy

IMG_4072 (2) - Copy

IMG_4073 (2)

IMG_4074 (2)

IMG_4075 (2)

IMG_4080 (2)

IMG_4083 (2)

IMG_4084 (2)

IMG_4085 (2)

IMG_4086 (2)

IMG_4087 (2)

IMG_4088 (2)

IMG_4089 (2)

IMG_4090 (2)

IMG_4091 (2)

IMG_4092 (2) IMG_4094 (2)

IMG_4093 (2)

IMG_4095 (2) IMG_4096 (2)

IMG_4098 (2)

IMG_4099 (2)

IMG_4100 (2)

IMG_4101 (2)

IMG_4102 (2)

IMG_4103 (2)

IMG_4105 (2)

யாழ்ப்பாணம் வேலுப்பிள்ளை செய்த திருத் தில்லை நீரோட்டக யமக அந்தாதி

Article No. 2039

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 3  August  2015

Time uploaded in London : -15-45

தமிழில் சிற்றிலக்கியத்தில் 96 பிரபந்த வகைப் பாடல்கள் உள்ளன. அவைகளில் ஒன்று அந்தாதி. அந்தாதியில் பல வகை அந்தாதிகள் உண்டு. அவை:

ஒலியந்தாதி

பதிற்றந்தாதி

நூற்றந்தாதி

கலியந்தாதி

கலித்துறை அந்தாதி

வெண்பா அந்தாதி

யமக அந்தாதி

சிலேடை அந்தாதி

திரிபு அந்தாதி

நீரோட்டக யமக அந்தாதி

யமகம் என்றால் ஒரே சொல் மீண்டும் மீண்டும் வரும்; ஆனால் அதற்கு வெவ்வேறு பொருள் இருக்கும். அந்தாதி என்றால் முதல் பாடலில் அந்தத்தில் (இறுதியில்) வரும் சொல் அடுத்த பாடலில் ஆதியில் (துவக்கத்தில்) வரும். இவையெல்லாமே சம்ஸ்கிருதச் சொற்கள். “ஆதி அந்தமில்லாத”, “வேதாந்தம்” (வேதத்தின் அந்தம்/இறுதி = உபநிஷத் கூறும் தத்துவம்) ஆகிய சொற்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

ஆக அந்தாதி என்றால் தெரிந்து விட்டது. யமகம் என்றால் புரிந்துவிட்டது. நீரோட்ட யமக அந்தாதி என்பதில் நீரோட்டம் என்றால் என்ன. இதுவும் சம்ஸ்கிருதச் சொல்லே! நிர்+உஷ்ட என்றால் உதடு ஒட்டாத என்று பொருள். உஷ்ட என்ற வடமொழிச் சொல்லும் உதடு என்ற தமிழ் சொல்லும் ஒரே மூலம் உடையவை. (தமிழ் திராவிட மொழியும் இல்லை, சம்ஸ்கிருதம் ஆரிய மொழியும் இல்லை. இரண்டும் சிவன் உடுக்கை ஒலியின் இரு புரத்திலிருந்து வந்த இரு பாரதீய மொழிகள் என்று எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் நிரூபித்துள்ளேன்)

ஒட்டகத்துக்கு உஷ்ட்ரம் என்ற சம்ஸ்கிருதப் பெயரும் ஒட்டகம் என்ற தமிழ்ப் பெயரும் அதன் தடித்த உதடுகளால் வந்த பெயரே! சிறப்பான கை உடைய மிருகம் யானை, சிறப்பான மயிர் உடைய மிருகம் சிங்கம் (கேச+அரி); அதே போல சிறப்பான உதடு உடைய மிருகம் ஒட்டகமும் கழுதையும். இதனால் வடமேற்கு இந்திய எழுத்துக்கு கரோஷ்டி என்று பெயர் (கழுதை உதட்டு எழுத்து). அசோகர், காஞ்சீபுரம் வரை பிராமி எழுத்தில் எழுதிவிட்டு, வடமேற்கு இந்தியாவில் மட்டும் கழுதை உதடு போல தடிப்பாக இருக்கும் கரோஷ்டியில் எழுதிவைத்தார்.

ஆக நிர்+உஷ்ட =உதடு ஒட்டாத என்ற சம்ஸ்கிருதச் சொற்கள் நீரோட்டம் எனத் தமிழ்படுத்தப்பட்டது. இவ்வாறு உதடு ஒட்டாத சொற்களை வைத்துப் பாடுவது கடினம், அதில் யமகம் வைத்துப் பாடுவது அதைவிடக் கடினம்; அதில் அந்தாதி அமைப்பது அதைவிடக் கடினம். இது போன்ற சாதனைகளைத் தமிழ்ப்புலவர்கள் அந்தக் காலத்தில் செய்துள்ளனர்.

இலண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்த யாழ்ப்பாணம் வேலுப்பிள்ளை யாத்த திருத் தில்லை நீரோட்டக யமக அந்தாதி இத்துடன் பதிப்பிக்கப்படுகிறது.1892 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் மியூசியத்தில் சேர்க்கப்பட்டதால் அதற்கு முன் எழுதப்பட்டது புலப்படும்.