100 பொன் பரிசு கிடைக்க எழுதிய கவிதை (Post 8632)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8632

Date uploaded in London – –5 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருவிளையாடல் புராணத்தில் தருமி என்ற ஏழைப் பிராமணனுக்கு  சிவபெருமான் எழுதிக் கொடுத்த கவியை சங்கப்  புலவன்  நக்கீரன் கேள்வி கேட்க, சிவபெருமானே நேரில் வந்து நெற்றிக் கண்ணைத் திறக்க , “நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று அவர் வாதாட, பின்னர் எல்லாம் இனிதே முடிந்த கதை எல்லோரும் அறிந்ததே . அந்தப் பார்ப்பனன் தருமி பெற்றது 1000 பொற் காசுகள் . இந்த நிகழ்ச்சியை அப்பர் பெருமான் தேவாரத்தில் பாடியதால் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இது நடந்ததை நாம் அறிகிறோம். திருவிளையாடல் திரைப்படம் இந்தக் காட்சியை சுவைபடக் காட்டுவதால் மக்கள் நினைவில் இது பசுமையாக நிற்கிறது .

ஸ்ரீ மாதவ சிவஞான யோகிகள்

ஸ்ரீ மாதவ சிவஞான யோகிகள் என்பவர் வாழ்விலும் இது போல ஒரு சுவையான சம்பவம் நடந்தது . முதலில் மாதவ சிவஞான சுவாமிகள் யார் என்பதைக் காண்போம். அவர் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் புலமை பெற்றவர் . திருநெல்வேலிப் பகுதியில் பாபநாசம் அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரத்தில் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் பிறந்தார். இவருடைய இயற்பெயர் முக்களா லிங்கர். தந்தையின் பெயர் ஆனந்தக் கூத்தர். தாயார் பெயர் மயிலம்மை.

‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்னும் பழமொழிக்கேற்ப இவர் மேதாவிலாசம் சிறு வயதிலேயே வெளிப்பட்டது. திருவாவடுதுறை ஆதீன முனிபுங்கவர்கள் ஒரு முறை விக்கிரமசிங்கபுரம் சென்றிருந்தனர். அப்போது பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த முக்களா லிங்கர் அவர்களைத் தன் வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு அழைத்தார். இவ்வளவுக்கும் அப்போது அவருடைய தந்தை ஊரில் இல்லை. சிறுவன் அழைப்புக்கிணங்க அவனுடைய வீட்டுக்குச் சென்ற சிவனடியார்களுக்கு அவன் தாயார் அறுசுவை அமுது படைத்து உபசரித்தார்.

தந்தை ஊருக்குத் திரும்பியவுடன் மகனின் தொண்டை நினைத்து மகிழ்ந்தார். தந்தையையும் தாயாரையும் வணங்கிய முக்களாளிங்கர் தன்னைத் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டினர். அங்கு சென்ற அவர் சிவநெறித் தொண்டு செய்வதே தன்  குறிக்கோள் என்று சொன்னவுடன் அங்கு சின்னப் பட்டத்தில் எழுந்தருளிய வேலப்ப சுவாமிகள் , முக்களா லிங்கருக்கு சிவ தீட்சை அருளி சிவஞானத்  தம்பிரான் என்ற தீட்சா நாமம் கொடுத்தார். குரு முகமாக பல சாஸ்திரங்களைக் கற்று, சிவஞானத்  தம்பிரான் சம்ஸ்கிருத நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். தமிழில் சுமார் 20 நூல்கள் இயற்றினார் .

சிவ ஞான சுவாமிகள் ஒருமுறை திருப் பாதிரிப்புலியூருக்குச் சென்றார்கள் . அப்பர் சுவாமிகளைக் கரை  ஏற்றிவிட்ட  ஊர் என்பதால் சிலகாலம் தங்கினார் .அப்போது அவ்வூரில் கற்றோர் அவை கூடியது . அதில் ஒரு பணக்காரர் , “கரை ஏற விட்ட முதல்வா  உன்னை யன்றியும் ஓர் கதியுண்டாமோ” என்ற ஈற்றடியைத் தந்து இதனை முடித்துத் தருவோருக்கு நூறு பொன் பரிசளிப்போம் என்று அறிவித்தார். இதனை அறிந்த ஏழை ஒருவன் சுவாமிகளிடம் வந்து விண்ணப்பிக்க, சுவாமிகளும் அருள் கூர்ந்து ,

வரையேற விட்டமுதம் சேந்தனிடம்

உண்டனைவல் லினம் என்றாலும்

வரையேற விட்டமுத  லாகுமோ

எனைச்சித்தென்  றுரைக்கின் என்னாம்

நரையேற விட்டமுத  னாளவனாக்

கொண்டு நறும் புலிசை மேவும்

கரையேற  விட்டமுதல்  வாவுன்னை

யன்றியுமோர்  கதியுண்டாமோ

என்ற பாடலை எழுதிக்கொடுத்து பரிஸில் பெற்றுச்  செல்க எனப் பணித்தனர்.

சுவாமிகள் காஞ்சிபுரத்தில் தங்கிய நாட்களில் , மெய்கண்ட தேவரின் சிவ ஞான போதத்துக்கு பேருரை எழுதினார். அந்த நூலின் பெயர் சிவ ஞான மாபாடியம் .

சுவாமிகள் எழுதிய தொல்காப்பிய விருத்தியில் முந்தையோர் உரையில் கண்ட பல விஷயங்களைத் தவறு என்று சொல்லி ஆதாரமும் தருகிறார்.

இவருடைய பிற நூல்கள் –

சிவ ஞான சித்தியார் பொழிப்புரை

சிவசமவாதவுரை மறுப்பு

அரதத்தாசாரிய சுலோக பஞ்சக மொழிபெயர்ப்பு

சித்தாந்தப் பிரகாசிகை

சிவதத்துவ விவேகம்

சித்தாந்த மரபுக்கு கண்டன கண்டனம்

பஞ்சாக்கர தேசிக மாலை

திருத்தொண்டர் திருநாமக்கோவை

வட திருமுல்லைவாயில் திருவந்தாதி

திருவேகரம்பரந்தாதி

அகிலாண்டேசுவரி பதிகம்

அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ்

செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ்

திருவேகம்பர் ஆனந்தக்  களிப்பு

கச்சியானந்தருத்திரேசர்  பதிகம்

இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி

குளத்தூர்ப் பதிற்றுப் பத்தந்தாதி

சோமேசர் முதுமொழி வெண்பா

காஞ்சிப்புராண முதற் காண்ட பேரிலக்கியம்

தொல்காப்பியச் சூத்திரவிருத்தி

நன்நூல் விருத்தியுரைத் திருத்தம்

இலக்கண விளக்கச் சூறாவளி

தருக்க சங்கிரகம்

அன்னம்பட்டீயம்

சுவாமிகள் , திருவாவடுதுறை ஆதீனத்தின் ஞானக் கண்ணாக, செந்தமிழ்க் காவலராக , இலக்கண வரம்பினையும், சமய வரம்பினையும் பாதுகாக்கும் சிவஞான வள்ளலாகத் திகழ்ந்தார். விசுவாவசு சித்திரைத் திங்கள் எட்டாம் நாள் 17-4-1785-ம் ஆண்டு சிவானந்தப் பெருவாழ்வு அடைந்தார்கள்

– உதவிய நூல் – தொல்காப்பிய சூத்திரவிருத்தி; ஆதீன மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர் முகவுரை

tags –மாதவ சிவஞான ,யோகிகள்,சுவாமிகள், திருவாவடுதுறை

கடைசியில் என்ன சொன்னார்கள்?! (Post No.3443)

Written by S NAGARAJAN

 

Date: 13 December 2016

 

Time uploaded in London:- 6-48 am

 

Post No.3443

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 கடைசியில் என்ன சொன்னார்கள்?!

by ச.நாகராஜன்

 

“எல்லோரும் ஓர் நாள் இறக்கத்தான் வேண்டும். ஆனால் அப்படிச் சொல்லி ஞாபகப்படுத்துவதைக் கேட்க சிலரே விருப்பப்படுகிறார்கள்”. – லெமனி ஸ்னிக்கெட்

 

 

 

  பிரபல விஞ்ஞானிகள், யோகிகள், மேதைகள், மகான்கள், சீர்திருத்தவாதிகள் தங்களின் கடைசி நிமிடத்தில் என்ன சொன்னார்கள்?

 

 

பிரபல பத்திரிகையாளரான எம்.வி.காமத் பத்ம பூஷண் விருது பெற்றவர். இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இந்தியா என்ற பிரபல வார இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர். அவர் 55 மேதைகளின் இறுதி நேரத்தை ஆராய்ந்து பிலாஸபி ஆஃப் லைஃப் அண்ட் டெத் (Philosophy of Life and Death) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

 

 

மரணத்தை பிரபல மேதைகள் எப்படி எதிர் கொண்டார்கள் என்பதை ஆராய்ந்த அவர் வாழ்க்கையை நன்கு ஒருங்கிணைந்து வாழ்ந்தவர்கள் தைரியத்துடனும் அமைதியுடனும் இறக்கிறார்கள். என்று தன் ஆய்வு முடிவை அறிவிக்கிறார்.

 

 

வில்லிய்ம் பி.ப்ராம்ஸ் (William B,Brahms)  என்ற அமெரிக்கர் நூலகப் பணியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அதற்கென நியூ ஜெர்ஸியில் நூலகத்தில் பல்லாண்டுகளாகப் பணியாற்றி வருபவர். அவர் தகவல் தொகுப்பாளரும் கூட.

 

 

1992ஆம் ஆண்டு அவர் ஒரு நாள் நூலகத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். முதன் முதலில் யார் எதைக் கண்டு பிடித்தார்கள் என்பதைப் பற்றி பல நூல்கள் இருக்கும் போது பிரபலமானவர்கள் இறக்கும் போது என்ன சொன்னார்கள் என்பதைப் பற்றி ஒரு தகவலும் சரியான முறையில் இல்லையே என்று நினைத்தார். உடனே அதைத் தானே ஆராயப் புகுந்தார். ஆயிரக்கணக்க்கான நூல்கள், பத்திரிகைக் கட்டுரைகளைச் சேகரித்துப் படித்தார்.

 

 

தன் ஆராய்ச்சியின் முடிவாக 3500 பேர்கள் தாங்கள் இறக்கும் போது என்ன சொன்னார்கள் என்பதைத் தொகுத்து ‘லாஸ்ட் வோர்ட்ஸ் ஆஃப் நோடபிள் பீப்பிள்’ (Last words of Notable People)  என்ற நூலை அவர் எழுதியுள்ளார். அதிகாரபூர்வமான தகவல்களை சரி பார்த்து ஆய்வு செய்த நூலாக இது அமைகிறது.

 

மஹாத்மா காந்திஜி இறக்கும் தருணத்தில் ஹே! ராம் என்று கூறியவாறே உயிர் துறந்தார் என்பதையும் பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் இறக்கும் கடைசி நிமிடத்தில் தனது தாய் மொழியான ஜெர்மானிய மொழியில் ஏதோ கூற அதை ஜெர்மானிய மொழி அறியாத நர்ஸினால் புரிந்து  கொள்ள முடியவில்லை என்பதையும் அனைவரும் அறிவர்.

 

 

   இன்னும் பல பிரபலங்கள் தங்கள் கடைசி நிமிடத்தில் என்ன சொன்னார்கள்?

 

சில தகவல்களைப் பார்ப்போம்.

 

பிரபல விஞ்ஞானியான சர் ஐஸக் நியூட்டன் கூறியது:

 

 “என்னை உலகம் எப்படிப் பார்க்குமோ எனக்குத் தெரியாது.ஆனால் எனக்கு என்னை கடற்கரையில் விளையாடும் ஒரு பையனைப் போலவே எண்ணத் தோன்றுகிறது. உண்மை என்னும் பெருங்கடல் என் முன்னே கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் போது, சாதாரணமாகக் கிடைப்பதை விட ஒரு அருமையான கூழாங்கல் அல்லது கிளிஞ்சலைக் கண்டு பிடிப்பதில் என்னை ஈடுபடுத்தியவன் போலத் தோன்றுகிறது

 

என்று இவ்வாறு எளிமையுடன் கூறி அவர் இறந்தார்.

 

சார்லஸ் டார்வின், “நான் இறப்பதற்குப் பயப்படவில்லை” என்று கூறி விட்டு மரணமடைந்தார்.

 

 

1988இல் லாஸ் ஏஞ்சல்ஸில் மரணமடைந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ரிச்சர்ட் ஃபெய்ன்மேன், “இந்த மரணம் எனக்கு போரடிக்கும் ஒன்றாக இருக்கிறது” என்றார்.

பிரபல விஞ்ஞானியும் அமெரிக்க ராஜ தந்திரியுமான பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் தனது 84ஆம் வயதில் இறந்தார். மரணத் தறுவாயில் அவர் அருகில் இருந்த மகள் அவரை படுக்கையில் சற்று ஒருக்களித்துப் படுக்குமாறு கூறினார். அதற்கு அவர்,  “இறக்கும் ஒரு மனிதனுக்கு எதையும் சுலபமாகச் செய்ய முடியாது” என்று பதில் கூறினார். அதைச் சொல்லும் போதே அவர் உயிர் பிரிந்தது.

தாமஸ் ஃபேனட் டெ லாக்னி என்பவர் ஒரு பிரபலமான கணித மேதை. அவர் இறக்கும் போது அவரிடம் 12ன் ஸ்குயர் (12ஐ 12ஆல் பெருக்கு வரும் எண்) என்ன என்று கேட்கப்பட்டது. 144 என்று பதில் கூறியவாறே அவர் மரணமடைந்தார்.

 

 

பாப் மார்லி என்ற இசைக் கலைஞர், “பணம் வாழ்க்கையை வாங்க முடியாது” என்று கூறி விட்டு இறந்தார்.

மேரி ஆண்டாய்னெட் என்பவர் பிரான்ஸின் மஹாராணி. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அவரை கில்லடீனுக்குக் கொண்டு சென்ற போது கில்லடீனை இயக்குபவரின் காலைத் தவறுதலாக அவர் மிதித்து விட்டார். உடனே அவர், “என்னை மன்னிக்கவும். வேண்டுமென்றே இதைச் செய்யவில்லை” என்று கூறியவாறே கில்லடீன் வைக்கப்பட்ட மேடை மீது ஏறி அதில் தன் தலையை வைத்தார்.

 

 

ஷெர்லாக் ஹோம்ஸைப் படைத்த எழுத்தாளரான சர் ஆர்தர் கானன் டாயில் 71ஆம் வயதில் தனது தோட்டத்தில் மரணம்டைந்தார். அருகில் இருந்த தன் மனைவியைப் பார்த்து “யூ ஆர் வொண்டர்புல்” என்று கூறியவர் தனது மார்பைப் பிடித்துக் கொண்டார். இறந்தார்.

 

 

பிரபல கவிஞரான டி.எஸ். எலியட் இறக்கும் போது ஒரே ஒரு வார்த்தையைத் தான் முணுமுணுத்தார் – வாலெரி என்று.

வாலெரி என்பது அவர் மனைவியின் பெயர்

எல்லோரையும் தியேட்டர்களில் நாற்காலியின் விளிம்பில் அமர வைத்த சஸ்பென்ஸ் மன்னன் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக், “எவருக்கும் எப்போது முடிவு வரும் என்பது தெரிவதில்லை. கத்தோலிக்கர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றாலும் கூட, மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பதை அறிய செத்துத் தான் பார்க்க வேண்டும்”என்று கூறி விட்டு இறந்தார்.

 

 

  ஜோ டி மக்கியோ என்ற பேஸ் பால் விளையாட்டு வீரர் இறக்கும் போது, “கடைசி கடைசியாக நான் மர்லின் மன்ரோவைப் பார்க்கப் போகிறேன்” என்று கூறி விட்டு இறந்தார்.

 

3500க்கும் மேற்பட்ட பிரப்லங்களின் இறுதி வார்த்தைகளைப் படிப்பது வாழ்க்கையைப் பற்றியும் மரணத்தைப் பற்றியும் சிறப்பாக அறிந்து கொள்ள முடிகிறது என்று படித்தவர்கள் கூறும் போது அவற்றைத் தெரிந்து கொள்ள ஆவல் கொள்வது இயல்பு தானே!

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

 

பிரபல விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிஸனுக்கு பல விசித்திரமான நம்பிக்கைகள் உண்டு. யார் என்ன சொன்னாலும் தான் நம்பியதை அவர் கடைசி வரை விடவே இல்லை.

 

இப்படிப்பட்ட நம்பிக்கைகளில் ஒன்று ஆவிகளைப் பற்றியது.

ஆவிகளுடன் நிச்சயமாக மனிதர்கள் பேச முடியும் என்று அவர் நம்பினார்.

 

1920ஆம் ஆண்டு அமெரிககன் மாகஸைன் என்ற பத்திரிகையைச் சேர்ந்த ஒரு நிருபருக்கு அவர் பேட்டி அளித்த போது  தான் ஒரு ‘ஆவி போனை’க் கண்டு பிடித்திருப்பதாகத் தெரிவித்தார். அதாவது அந்த போனின்  மூலமாக இறந்த எந்த ஒருவருக்கும் டய்ல் செய்து யார் வேண்டுமானாலும் பேசலாம்.

இதைக் கேட்ட நிருபர் அசந்து போனார்.

 

ஆனால் அந்த போனைக் காட்டுமாறு பலரும் தொடர்ந்து அவரை நச்சரித்தவண்ணம் இருந்தனர். இது பல ஆண்டுகள் தொடர்ந்தது. பின்னர் ஒரு நாள் அப்படிப்பட்ட போனைக் காண்பிக்க முடியாத நிலையில் எடிஸ்ன் தான் அப்படி சொன்னது ஒரு ஜோக் தான் என்று சொல்லிச் சமாளித்தார்.

இறந்தவருக்கு டயல் செய்து பேசும் போனை அவரைத் தவிர வேறு யாரும் கற்பனையும் செய்ததில்லை; உருவாக்க முயன்றதுமில்லை!

 

*******