மாம்ஸபக்ஷிணி, குடிகாரர்கள் மீது வள்ளுவன், சாணக்கியன் கடும்தாக்கு (Post No.4793)

 

Written by London Swaminathan 

 

Date: 28 FEBRUARY 2018

 

Time uploaded in London – 8-59 am

 

Post No. 4793

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

மாம்ஸபக்ஷிணி, குடிகாரர்கள் மீது வள்ளுவன், சாணக்கியன் கடும்தாக்கு (Post No.4793)

 

மாமிசம் உண்ணுவோரும், குடிகாரர்களும் இந்த பூமிக்குப் பாரம் என்று சாணக்கியன் கடுமையாகத் தாக்குகிறான்; வள்ளுவன் அதற்குப் பின் யாத்த திருக்குறளில் கள்ளுண்ணல் , புலால் மறுத்தல் என்ற அதிகாரங்களில் மாம்ஸ பக்ஷிணிகள் மீதும் குடிகாரர்கள் மீதும் சுத்தி அடி, நெத்தி அடி கொடுக்கிறான். இரு பெரும் அறிஞர்களும் செப்புவது ஒன்றே; இமயம் முதல் குமரி வரை பாரதீய சிந்தனை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒன்றாக இருப்பதை அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் அண்மைக் காலத்தில் மொழிந்ததில் இருந்தும் நாம் அறிகிறோம்.

சாணக்கியன் எழுதியது சாணக்கிய நீதி ;திருவள்ளுவன் எழுதியது திருக்குறள்.

 

 

ஒரு ஜாடி விஷம்!

 

பரோக்ஷே கார்ய ஹந்தாரம் ப்ரத்யக்ஷே ப்ரிய வாதினம்

வர்ஜயேத் தாத்ருசம் மித்ரம் விஷம் கும்பம் பயோமுகம்

2-5

 

நாம் இல்லாத போது நமக்கு குழிபறிப்பதும், நாம் இருக்கும் போது நம்மை இந்திரனே, சந்திரனே என்று புகழ்வதும்  உண்மையான நட்பு அல்ல; அவன் உண்மையான நண்பன் அல்ல; அவன் பால் போல் இருக்கும் விஷ ஜாடி; அதாவது அடிப்பகுதி முழுதும் விஷம் – மேல் பகுதி மட்டும் பால்.

வள்ளுவன் புகல்வான்:–

மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து

நட்பினுள் சாப்புல்லற் பாற்று (829) –வள்ளுவன் சொல்லுவான்- வெளியே நண்பன் போல நடித்து, மனதுக்குள் நம்மை மட்டம் தட்டுவோனைப் பார்த்து சிரித்துக்கொண்டே, மெல்ல ஓடிப் போய்விடுங்கள்.

 

xxxxxx

 

உண்மையான மகன்

தே புத்ரா யே பிதுர் பக்தாஹா ஸ பிதா யஸ்து போஷகஹ

தன் மித்ரம் யஸ்ய விஸ்வாஸஹ ஸா பார்யா யத்ர நிவ்ருத்திஹி

2-4

 

தந்தையிடம் மரியாதையும், விசுவாசமும் உடையவன் உண்மையான மகன்;

மகனை கல்வி, கேள்விகளில் முன்னுக்குக் கொண்டு வருபவன்  உண்மையான தந்தை;

 

நம்பக்கூடிய ஒருவனே உண்மையான நண்பன்;

இன்பமும் மகிழ்ச்சியும் அளிப்பவளே உண்மையான இல்லாள்.

 

வள்ளுவன் விளம்புவதும் அஃதே!

 

மங்கலம் என்பது மனைமாட்சி– குறள் 60 — இல்வாழ்க்கையில் இன்பமும் அழகும் சேர்ப்பது மனைவி.

 

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து

முந்தி யிருப்பச் செயல் (67) — மகனை முதலிடத்தில் நிற்க உதவுபவன் தந்தை.

 

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்னோற்றான் கொல்லெனுஞ் சொல் (70) –இவனைப் பெற, இவன் எந்தை என்ன தவம் செய்தனன் என்று வியக்க வைப்பது மகனின் கடமை.

 

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

நினைக்கரிய யாவுள காப்பு (781) –நட்பினைப் போல அரிய பொருளோ, பாதுகாப்பு தருவதோ வேறு ஏதேனும் உண்டோ!

xxxx

 

Brahmin Tiruvalluvar with Punul/ Sacred thread of Brahmins; from Chennai

தட்டிக் கேட்கும் அமைச்சன் வேண்டும்

 

நதி தீரேஷு யே வ்ருக்ஷாஹா பர க்ருஹேஷு காமினீ

மந்த்ரி ஹீனாஸ்ச ராஜானஹ சீக்ரம்நஸ்யந்த்ய ஸம்சயம்

2-15

ஆற்றோர மரங்கள் அடி சாய்வது நிச்சயம்;

பிறர் இடத்தில் வாழும்/ வேலை செய்யும் பெண்கள் தாழ்வதும் நிச்சயம்;

மந்திரிகள் இல்லாத மன்னன் அழிவதும் நிச்சயம்;

இவை விரைவில் நடப்பதும் நிச்சயம் (உறுதி)

 

வள்ளுவன் இயம்புவான்:–

 

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பாரிலானுங் கெடும் (448)

தட்டிக்  கேட்டு புத்தி சொல்லும்  மந்திரி  இல்லாத மன்னனுக்கு எதிரியே தேவை இல்லை; அவன் தன்னாலே அழிந்தொழிவான்

xxxxx

கொக்கு போல இரு

புத்திசாலி மனிதன் கொக்கு போலக் காத்திருக்க வேண்டும்; தக்க இடம், தக்க நேரம், தனது சக்தி ஆகியவற்றை எடை போட்டு, காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும்.

 

இந்த்ரியாணி ச ஸம்யம்ய பகவத் பண்டிதோ நரஹ

தேச கால பலம் ஞாத்வா ஸர்வ கார்யாணி ஸாதயேத்

6-16

வள்ளுவன் பகர்வான்:–

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து (490) — அமைதியாக இருங்கள்; நல்ல சமயம் வாய்த்ததும் கொக்கு, மீனைக் கவ்விப் பிடிப்பது போலப் பாயுங்கள்.

 

xxxxx

 

மனிதர் உருவத்தில் மிருகங்கள்!

 

மாம்ஸ பக்ஷைஹி ஸுரா பானைர் மூர்க்கஸ்ச அக்ஷர வர்ஜிதைஹி

பசுபிஹி புருஷாகாரைர் பாராக்ராந்தா ச மேதினீ

8-21

 

இந்த உலகிற்கு பாரம் யார்? புலால் உண்ணுவோர், குடிகாரர்கள், எழுத்து அறிவில்லாத மூடர்கள் ஆகியோர் மனித உருவில் நடமாடும் பிராணிகள் ஆவர். இவர்கள் இந்த உலகிற்குப் பாரமானவர்கள் (நடைப் பிணங்களே)

வள்ளுவன் செப்புவான்:–

 

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுன்பான்

எங்ஙனம் ஆளும் அருள் (251)- தன்னுடைய சதையைப் பெருக்க மற்றவற்றின் சதையைத் தின்பவனுக்கு கருணை இருக்குமா?

 

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்

உயிரின் தலைப்பிரிந்த ஊன் (258) – மயக்கமும், குற்றமும் இல்லாத அறிஞர்கள், உயிர் போன உடலைத் தின்ன மாட்டார்கள்

 

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண்ணுபவர் (926)- தூங்குபவனும் செத்துப்போனவனும் சிந்திக்க முடியாது; அதுபோல கள் குடிப்போரும் அறிவு/ சிந்தனை இல்லாதவரே. அவர்கள் விஷம் குடித்து விழுந்தவர் போல நினைவு தப்பிப் போனவர்களே!

 

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா  தவர் (393)-  படித்தவனுக்குக் கண் உண்டு; படியாதவனுக்குக் கண் இல்லை; அவன் முகத்தில் இரண்டு  காயங்களே இருக்கின்றன.

xxx

 

ரஹசியம் காவான் அழிவான்

ஒருவருடைய ரஹசியங்களை மற்றவர்களுக்கு வெளியிடுவோர் பாம்புப் புற்றில் வசிக்கும் பாம்பு போல அழிவார்கள்

 

பரஸ்பரஸ்ய மர்மாணி யே பாஷந்தே நராதமாஹா

த ஏவ விலயம் யாந்தி வல்மீகோதர ஸர்பவத்

9-2

 

வள்ளுவான் உரைப்பான்:–

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட

மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான் (1076) — தாம் கேட்ட ரஹஸியங்களை ஊர் அறியச் சொல்பவன் திருடன்; அவன் ஒரு டமாரம்; தாங்களாகவே பேட்டை தோறும் அடிக்கும் பறைகள் (டமாரம் அடிப்பவன்).

Orignal Tiruvalluvar Picture from an old book.

இன்னும் வரும்…………………..

 

சுபம்- சுபம்-

ரஹசியம்! பரம ரஹசியம்! எல்லா மதத்திலும் உண்டு! (Post No.4300)

Written by London Swaminathan

 

Date:14 October 2017

 

Time uploaded in London- 7-43 am

 

 

Post No. 4300

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

பாரசீக நாட்டில் (ஈரான்) ஜொராஸ்டர் (Zoroaster or Zarathusthra) என்பவர் பின்பற்றிய மதம், வேத கால சமயம் போன்றது. அவர்களும் தீயை (யாக, யக்ஞம்) வணங்கினர். ஆயினும் சில கருத்துக்களில் மாறுபட்டார். ஒற்றுமை அம்சங்களே அதிகம்; அதில் ஒன்று மந்திரங்களை எல்லோருக்கும் கற்றுத் தராதே என்பதாகும். இது எல்லா சமயங்களிலும் உள்ள உண்மை.

 

நான் தினமும் படிக்கும் விநாயகர் கவசத்தில் கடைசியில் வரும் வரிகள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக உளது என்பது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது!

அன்பு உறுதி ஆசாரம் உடையார்க்குக்கிக்

கவசத்தை அறைக அல்லார்க்கு

என்பெறினும் உரையற்க எனக்கிளந்து

மரீசி தனது இருக்கையுற்றான்

என்று விநாயக கவசம் முடியும். அதாவது அன்பு, உறுதி, ஆசாரம் ஆகியன எவருக்கு இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டும் இக்கவசத்தைச் சொல்லிக்கொடு; மற்றவர்கள் என்ன கொடுத்தாலும், அவர்களுக்குச் சொல்லி விடாதே என்று கூறிவிட்டு மரீசி முனிவர் அவருடைய இருப்பிடத்தை அடைந்தார் என்பதாகும்.

 

புத்தரும் ஒரு சொற்பொழிவில், எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும்; அவைகள் எல்லாவற்றையும் நான் சொல்லித் தரப்போவதில்லை என்று கூறுகிறார். அதிக விடயங்களைச் சொல்லச் சொல்ல குழப்பம் அதிகரிக்கும் என்பது அவருக்கும் தெரியும்.

 

ஜொராஸ்டர் சொல்லிய கருத்துக்கள் ஜெண்ட் அவஸ்தா (Zend Avesta) என்ற புனித நூலில் உள்ளது. சந்தஸ் என்ற சம்ஸ்கிருதச் சொல்லே ஜெண்ட் (ZEND) என்று திரிந்ததாக ஆன்றோர் கூறுவர். இந்தப் புனித நூலில் மூன்று இடங்களில் இந்த மந்திரங்களை யாருக்குச் சொல்லித் தரவேண்டும்,எப்படி சொல்லித் தர வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.

 

தந்தை ஒருவர் மகனுக்குக் கற்பிக்கலாம்; அல்லது சஹோதரன் ஒருவன் மற்ற சஹோதரனுக்கு உபதேசிக்கலாம்; அல்லது அதர்வண் (புரோஹிதர்) தனது சீடனுக்குச் சொல்லித் தரலாம் என்று ஜொராஸ்டருக்கு அஹுரமஸ்தா (AHURA MAZDA அசுர மஸ்தா= பெரிய கடவுள்) சொன்னதாக ஆறாவது அமேஷா ஸ்பெண்டாவில் (Sixth Amesha Spenta) வருகிறது. இதே போல யாஸ்ட் 14, 46 (Yasht 14, 46) ஆகியவற்றிலும் சொல்லப்பட்டுள்ளது.

இந்து மதத்தில் எல்லா மந்திரங்களும் குரு மூலமாகவே கற்பிக்கப்படுகிறது. பிராமனர் உள்பட மூன்று வருணத்தார் பூணுல் போடும்போதும் அவர்களுக்கு தந்தைதான் காயத்ரீ மந்திரத்தை உபதேசிப்பார். அப்பொழுது மகனையும் தந்தையையும், புரோஹிதரையும் ஒரு பட்டு வேஷ்டியால் போர்த்தி மறைத்து விடுவர். இதன் பொருள் இது ரஹசிய மந்திரம்; அந்த ரஹசியத்தைக் காக்க வேண்டும் என்பதாகும்.

பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷதத்திலும் (6-3-12), சாந்தோக்ய உபநிஷத்திலும் (3-2-5-6) இவ்வாறு எழுதப்பட்டுளது. அதாவது மகனோ அல்லது தனது மாணவரோ இல்லாவிடில் மந்திரங்களைக் கற்பிக்காதே என்பது கட்டளை.

 

மதத்தில் தீட்சை பெற்றவர்களுக்கே ரஹசிய ஞானம் கிடைக்கும் என்று கிறிஸ்தவ புனிதர் பால் (St.Paul) கூறுகிறார்.

 

பாபிலோனியா, எகிப்து போன்ற நாகரீகங்களிலும் சில விஷயங்கள் எல்லோருக்கும் கிடைக்காது என்றும் அதில் சேர்ந்தவர்களுக்கு (Initiated)  மட்டுமே கிடைக்கும் என்றும் வரலாற்று அறிஞர்கள் எழுதியுள்ளனர்.

 

ரோமானிய சாம்ராஜ்யத்தில் பரவிய மித்ர (Mithra Cult) வழிபாடு நிலத்து அடியிலுள்ள குகைகளில் கற்பிக்கப்பட்டது. அது மட்டுமல்ல அந்த வழிபாட்டில் தீட்சை எடுத்துக் கொள்வோர் சவுக்கடியும் (flagellation) பெறவேண்டும்.

மித்ரனைப் போற்றும் ஒரு மந்திரத்தில் (யாஸ்ட் Yasht 10-122) சவுக்கடி விதிகள் கூறப்படுகின்றன. மூன்று பகல், மூன்று இரவில் குளித்த பின்னர் 30 சவுக்கடி அல்லது சாட்டை அடி பெறும், சாத்திரங்களைக் கற்ற அறிஞர்களே மித்ர பானத்தை அருந்தலாம் என்று ஜோராஸ்டருக்கு அசுர மஸ்தா கூறுகிறா

ர் என்று இந்த யாஸ்ட் சொல்கிறது. சில சந்தர்ப்பங்களில் இரண்டு பகல் இரண்டு இரவுகளில் குளித்து விட்டு இருபது கசையடிகள் வாங்கிய பின்னர் மித்ரனுக்காக தயாரிக்கப்பட்ட பானத்தை அருந்தலாம் என்றும் அதே மந்திரம் சொல்லும்.

 

ஐயப்ப விரதம் இருப்போர் குருமார்களிடம் தீட்சை பெறுவது இப்போதும் உள்ளது.  அதற்கு 41 நாள் விரதம் இருக்க வேண்டும். இதே போல விஜயாவாடவில் பவானி விரதம் இருப்போர் 41 நாட்களுக்கு சிவப்பு ஆடைகளை அணிந்து கோவில் குருமாரிடம் தீட் சை பெறுகின்றனர்.

 

ஏன் இந்த ரஹசியம்?

கண்ட கண்ட தோழான் துருத்திகளுக்கு மந்திர உபதேசம் செய்தால், அவர்களுடைய நடை உடை பாவனைகள் அந்த மந்திரத்தின் மதிப்பைக் குறைத்து விடும்; மக்கள அதில் நம்பிக்கை இழந்து விடுவர். எல்லா மதங்களிலும் போலி சாமியார்கள் உண்டு; அவர்கள் எல்லாம் நாஸ்தீகவாதிகளுக்கு உதவி செய்யவும் மதங்களின் மதிப்பைக் குறைக்கவும் பிறந்தவர்கள். மந்திரத்தின் மதிப்பையும் சக்தியையும் காப்பாற்ற ரஹசியம், பரம ரஹசியம் அவசியம்!

Source: M P Khareghat Memorial Volume-1, Bombay, 1953 (A Symposium on Indo-Iranian Subjects)

TAGS: ரகசியம், ரஹசியம், பரம, மந்திரம், ஜொராஸ்டர்

இது தொடர்பான எனது பழைய கட்டுரைகள்:–

போலி சாமியார் பற்றிய பழந்தமிழ்ப் …

https://tamilandvedas.com/…/போலி-சாமியார்-பற…

2 days ago – போலி சாமியார் பற்றிய பழந்தமிழ்ப் பாடல்கள் (Post No.4294) … கூடா ஒழுக்கம் என்னும் அதிகாரத்தில், போலி வேடம் போடும் ஆட்கள் …

மந்திரங்களை யாரும் கற்கலாமா? | Tamil and …

https://tamilandvedas.com/…/மந்திரங்களை-யாரு…

6 Nov 2013 – ஏன் சில மந்திரங்களை ஒரு சில வகுப்பினர் மட்டுமே கற்கலாம் என்று … எல்லோருக்கும் முன்பாக மன்னர் தனக்கும் காயத்ரீ மந்திரம் …

மந்திரங்களை யாரும் கற்கலாமா? | Swami’s …

swamiindology.blogspot.com/2013/11/blog-post_6.html

6 Nov 2013 – ஏன் சில மந்திரங்களை ஒரு சில வகுப்பினர் மட்டுமே கற்கலாம் என்று … எல்லோருக்கும் முன்பாக மன்னர் தனக்கும் காயத்ரீ மந்திரம் …

 

–SUBHAM–