Research Article Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 12 October 2018
Time uploaded in London –9-59 am (British Summer Time)
Post No. 5531
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
ரிக் வேத அசுரர்கள் வெளிநாடு சென்றது ஏன்? (Post No.5531)
அஸீரியா என்னும் பழைய நாட்டின் பெயர் அசுரர் தேசம் என்பதாகும். அசுரர் (Ashur) என்றால் கடவுள் என்று சுமேரியன் அகராதி சொல்லும். அஸீரியா(Assyria) என்பது தற்போதைய இராக் நாட்டில் டைக்ரீஸ் (Tigris) நதி பாயும் பிரதேஸம். அங்கே கி.மு.2000 முதல் கி.மு 1000 வரை 20 மன்னர்களுக்கு மேல் அசுரர் என்ற பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே கி.மு.2000 வாக்கில் ரிக்வேத அசுரர்கள் கருத்து வேற்பாடு காரணமாக இராக், ஈரான் பகுதிகளுக்குச் சென்றது உறுதியாகிறது.
இதற்கு ரிக் வேதத்திலும் வரலாற்றிலும் அசைக்க முடியாத ஆதாரங்கள் உள.
சான்று 1
கி.மு 800 முதல் கி.மு 1000 வரை தேதி முத்திரை குத்தப்பட்ட பார்ஸீ மத ஸ்தாபகர் ஜொராஸ்டர் (Zoroaster), சௌராஷ்டிர என்ற குஜராத் பகுதியிலிருந்து ஈரான் சென்று பாரஸீக மதத்தைப் பிரபலப் படுத்தினார். ஈரான் என்ற பெயரே ஆர்யன் என்ற சொல்லிலிருந்து வந்ததும், ஈரானிய ஜெண்ட் அவஸ்தா (Zend Avesta) வேதப் புத்தகத்துக்கும், ரிக் வேதத்துக்கும் உள்ள ஒற்றுமையும் உலகறிந்த விஷயம். எல்லா என்ஸைக்ளோபீடியாக்களிலும் உள.
சௌராஷ்டிரர் என்பது ஜொராஸ்டர் என்று மாறியதை காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் 75 ஆண்டுகளுக்கு முன்னரே மைலாப்பூர் சொற்பொழிவுகளில் செப்பியுள்ளார். ஈரானை முஸ்லீம்கள் எட்டாம் நூற்றாண்டில் கபளீகரம் செய்தவுடன் பார்சீக்கள், தனது தாயகமான குஜராத்துக்கு ஓடி வந்து அடைக்கலம் புகுந்ததை முன்னம் ஒரு கட்டுரையில் மொழிந்து விட்டேன்.
இரண்டாவது சான்று
அசுரர்களுக்கு சுக்ராச்சார்யார் குரு; தேவர்களுக்கு பிருஹஸ்பதி குரு. கீதையில் கண்ணன் வாயால் புகழப்பட்ட சுக்ர கவியின் வம்ஸம் திடீரென்று ரிக் வேதத்தில் மறைந்து போகிறது. ஏனைய ரிஷிகளின் வம்ஸங்கள் தொடர்கதையாக உள்ள போழ்தில் உசனஸ் கவி என்ற உலக மஹா கவி, — கண்னன் தன்னை கவிஞர்களுள் நான் உசனஸ் என்னும் போற்றும் கவி– காணாமற் போய் விடுகிறார்.அவரும் அவர்தம் சீடர்களும் அஸீரியா. ஈராக் ஃநாட்டிற்குக் குடியேறி விட்டனர் போலும்.
மூன்றாவது சான்று
ரிக் வேதத்தின் பழைய பகுதிகளில் இந்திரன், வருணன், மித்திரன் ஆகியோர் ‘அசுர’ என்ற அடை மொழியுடன் போற்றப் படுகின்றனர். சுமேரியாவில் இப்பொழுதும் ‘அசுர்’ (ASHUR) என்பது கடவுள் என்றே மொழி பெயர்க்கப்படுகிறது.
நாலாவது சான்று
ஜொராஸ்டர் தன்னை ‘ஸ்பிடம’ (spitama=white) ஜௌராஷ்ட்ர என்று அழைத்துக் கொள்கிறார். அதாவது வெள்ளை (சுக்ர, சுக்ல=வெள்ளை) என்று பெருமை பேசுகிறார். சுக்ராச்சார்யார் வ ழியில் வந்தவன் நான் என்று தம்பட்டம் அடிப்பதே இதன் தாத்பர்யம்.
ஐந்தாவது சான்று
ரிக்வேதத்தைப் போற்றும் மற்றொரு கோஷ்டி, துருக்கி பகுதியைச் சென்று ஆண்டதை உலகம் முழுதுமுள்ள வரலாற்றுப் புத்தககங்கள் மூலம் அறியலாம். காஞ்சி பரமசார்ய ஸ்வாமிகள் 75 ஆண்டுகளுக்கு முந்தைய மைலாப்பூர் பிரசங்கங்களில் மொழிந்தும் உள்ளார். மிட்டனி (Mitanni Civilization) என்னும் நாகரீகத்தில் தசரதன் பிரதர்தனன், சத்யவசன் முதலிய மன்னர்கள் பெயர் கி.மு 1400 முதல் உள்ளதை விக்கிபீடியா முதல் என்ஸைக்ளோபீடியா பிரிட்டானியா வரை எல்லா கலைக்களஞ்சியங்களிலும் காணலாம். அது மட்டுமின்றி ரிக்வேத தெய்வங்களின் பெயர்களில் ஸத்தியம் செய்து அவர்கள் உடன்படிக்கை கையெ ழுத்திட்டதும், தஸ்ரதமன்னன் எகிப்திய மன்னனுக்கு எழுதிய கடிதங்களும் அப்படியே களிமண் பலகைகளில் க்யூனிபார்ம் கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன.
சுமேயாவில் ராம சந்திரன்
ஆறாவது சான்று
தஸரதன் பெயர் மட்டுமின்றி ராமன் பெயரும் சுமேரியாவில் கி.மு.2000 வாக்கில் பல மன்னர் பெயர்களில் கணப்படுகிறது.
ரிமூஷ், ரிம் சைன் (Rimush, Rim Sin) என்ற பெயர்களில் குறைந்தது மூன்று மன்னர்கள் உளர்.
சுமேரிய அகராதியில் சைன் (sin) அல்லது சின் என்றால் சந்திரன் / நிலவு என்று பொருள்.
ரிம் சைன் என்பது ராம சந்திரன் என்பதன் திரிபாகும்.
சைன்/சந்திரன் என்பதை நாம் எப்படி பெயரில் விகுதியாகவும் பகுதியாகவும் பயன் படுத்துகிறோமா அப்படியே சுமேரிய மன்னர்களும் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்துவது ஸம்ஸ்க்ருத மொழியின் தாக்கத்தைக் காட்டுகிறது.
நாம்,
சந்திர மூர்த்தி, சந்திர ஹாஸன், சந்திரமதி, சந்திர ஸேகரனென்றும்
மற்றொரு புறம் ராம சந்திரன், பூர்ண சந்திரன், விபின சந்திரன் என்றும் பயபடுத்துவது போல அவர்களும் சின், சைன் என்பதை பெயர்களில் முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் பயன் படுத்துகின்றனர்.
சுமேரிய, அஸீரிய, பாபிலோனிய மன்னர்களின் பட்டியலை அப்படியே எனது ஆங்கிலக் கட்டுரையில் இருந்து கொடுக்கிறேன். இவை என்ன காட்டுகின்றன என்பதை முதலில் மொழிவேன்:
1.’அசுர’ ன்ற சொல்லின் ‘மூலம்’ (root) தெரியாமல் சுமேரிய ஆராய்ச்சியளர் முழிக்கின்றனர். ‘அசுர்’ Ashur என்பது ஒரு பிரதேசத்தின் பெயரிலிருந்தோ அல்லது கடவுள் என்ற அர்த்தத்தில் இருந்தோ வந்திருக்கலாம் என்பது சுமேரிய ஆராய்ச்சியளர் துணிபு. இரண்டும் இந்துக்கள் செப்பியதே. மத்ஸ்ய தேசம், நாக நாடு என்று நமது புராணங்கள் சொல்கையில் அங்கு மீன்களோ நாகப் பாம்புகளோ அதிகம் இருப்பதால் அல்ல மத்ஸ்யர்கள், நாகர்கள் என்ற இனத்தினர் நாடு என்ப தை நாம் அற்கிறோம். அது போல, கி.மு.2000 ஆண்டில் தேவர்களுடன் கருத்து மோதல் காரணமாக புதுக் கட்சி துவங்கிய அசுரர்கள் குடியேறிய தேசம் -அசுர தேசம் =அஸீரியா
என்று அழைக்கப்பட்டது. அந்த ‘அஸூர்’ Ashur என்பது கடவுளைக் குறிக்கும் என்பது ரிக் வேதத்தாலும் ஜெண்ட் அவஸ்தாவாலும் மெய்ப்பிக்கப்ப ட் டது. பாரஸீக நாட்டின் (ஈரான்) பாரஸீக மதத்தின் தலையாய கடவுள் அசுர மஸ்டா (Azura Mazda). அவர்கள் எதிர்க்கட்சி துவங்கியதால் பழைய தலைவரான இந்திரனை ஒழித்துவிட்டு வருணனை கட்சித் தலைவராக ஏற்றுக்கொண்டு வருணனை மஹா அசுரான் (பெரிய கடவுள்) என்று விதந்து ஓதுகின்றனர்.
(காம்போஜர் என்ற இனம் இருக்கும் இடமெல்லாம் காம்போஜம் என்பது இந்தியாவிலுள்ள காம்போஜத்தாலும் கம்போடியாவிலுள்ள காம்போஜத்தாலும் அறியப்படும்.)
இது தெரியாமல் புராணத்தை விமரிசித்த, துவக்க கால இந்திய வரலாற்றை எழுதிய, வெளிநாட்டினர் திணறிப்[போயினர். சோழர்கள் உள்ள பகுதி சோழ தேசம். அவர்கள் பாண்டிய நாட்டைப் பிடித்துவிட்டால் ‘சோழ தேசத்துக்குள் உள்ள’ என்று கல்வெட்டுகள் துவங்கும். இது போல, மத்ஸ்யர்கள் உள்ள இடம் மத்ஸ்ய தேசம்; அவர்கள் எல்லையை விஸ்தரித்தால் அந்த இடமெல்லாம் மத்ஸ்யர் தேசம்; இது தெரியாத அரை வேக்காடுகள் இந்தியாவின் வடமேற்கில் எல்லையை விஸ்தரித்த யவனர் பற்றி தத்துப் பித்து என்று உளறிக்கொட்டி கிளறி மூடி இருக்கின்றனர். அலெக்ஸாண்டர் படையெடுப்புக்கு முன்னர் இந்தியருக்கு யவனர் தெரியாது என்று எண்ணி மஹாபாரத யவனர், சங்க இலக்கிய யவனர் பற்றி எல்லாம் உளறி விட்டனர்.
மற்றொரு முக்கியமான விஷயம் ஒரே மன்னர் பெயர்கள் பல இடங்களில் தோன்றுவதாகும்.
புராணங்களை மிகவும் ஆராய்ந்து தேதி குத்திய பர்ஜிட்டர் Pargitter முதலிய வெளி நாட்டுக்காரர்கள், சில புராணங்களுக்கு முட்டாள் பட்டம் கட்டி அவை எல்லாம் பெயர்களை இருமுறை எழுதி குழப்பி விட்டதாக எழுதி நம்மைக் குழப்பினர். எகிப்திய வரலாற்றில் ராமர் பெயரில் ராமேஸ்ஸஸ் என்ற பெயரில் 14 மன்னர்கள் உள்ளனர்.
சுமேரியா, அஸ்ஸீரியாவில் பல சற்குணர்கள்/ சத்ருக்னன் உளர் (ஸர்கோன் என்று அவர்கள் அழைப்பர்). அஸீரியாவில் ஒரே மன்னர் பெயர் ஆறு ஏழு முறை வருகின்றன. ஆக அடுத்தடுத்து இரண்டு மன்னர்கள் ஒரே பெயரில் வர முடியும் என்பதை எகிப்திய சுமேரிய, அஸீரிய மன்னர் பட்டியல் காட்டுகின்றன. இது தெரியாமல் புராணங்கள் புளுகிவிட்டன என்று பகர்ந்தோர் பலர்.
சின்/ சைன் என்று முடியும் பெயரகள் சந்திரன் என்று மேலே குறிப்பிட்டு இருந்தேன். இவை சேன என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லாகவும் இருக்க முடியும் மஹாபாரதத்தில் மட்டும் 24 மன்னர்களின் பெயர்கள் ‘சேன’ என்று முடிவது எனது ஆராய்ச்சியில் தெரியவந்தது.
காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் (1894-1994) தனது உபந்யாஸங்களில் எகிப்திய ராமஸெஸ் , ராமபிரானின் பெயர் என்று குறிப்பிட்டார். இது ரமேஷ், ரமேசன் என்ற சிவ பிரான் பெயராகவும் இருக்க லாம். எகிப்திய மன்னர் அனைவரும் சிவ பிரான் போல நாகப் பாம்புகளை முடியில் சூடியது பற்றி எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் முன்னரே விளக்கி இருக்கிறேன்.
மற்ற ஒரு அதிசய விஷயம் கடவுள் நம்பிக்கை பற்றியது.
சுமார் 40 மத்தியக் கிழக்கு நாட்டு மன்னர்கள் கடவுளின் பெயருடன் துவங்குகின்றன. ‘மர்துக்’, ‘அதாத்’, ‘அசுர’ என்பதெல்லாம் கடவுளின் பெயர்கள். இவ்வாறு குறைந்தது 40 மன்னர்களின் பெயர்கள் உள.
முடிவுரை
ஒரு மன்னர் பெயர் பல முறை வந்ததால் குழம்ப்பிப் போய் வரலாற்றைத் திரிக்கக் கூடாது. அசோகனின் பெயரன் தஸரதன். துருக்கியை கிமு.138-0ல் ஆண்டவன் தஸரதன். ராமாயண தஸரதனுக்கு முன்னால் உள்ள தஸரதன் பெயரும் மன்னர் பட்டியலில் உள.
இரண்டாவதாக,
பெயர்கள் எப்படி திரிபடையும், மாறுபடும் என்றும் அறிவதற்கு சுமேரியா, அஸீரிய, பாபிலோனிய, எகிப்திய மன்னர் பட்டியல் முன் உதாரணமாகத் திகழ்கின்றன. தற்காலத்திலும் மொரீஷியஸ், மலேஷியா, இலங்கையில் வாழும் தமிழர்கள் ஸஸ்க்ருதப் பெயர்களைக் குதறி, தவறான பெயர்களாக, எழுதுவது போல எகிப்திலும் மத்தியக் கிழக்கிலும் எழுதினர். க்யூனி பார்ம் கல்வெட்டில் ‘துஷ்ட்ரத’ என்று தஸரதன் பெயர் உளது. இதே போல பிரதர்தனன், சத்யவாசன் பெயர்களும் குதறப் ப்பட்டுள்ளன. வெளிநாட்டுத் தமிழர் பெயர்களின் ஆங்கில ஸ்பெல்லிங் spellings பார்ப்போருக்கு நாம் சொல்லுவது தெள்ளிதின் விளங்கும்.
மூன்றாவதாக,
நாம் நமது குழந்தைகளுக்குக் கொஞ்சம் எகிப்திய, சுமேரிய வரலாற்றையும் சேர்த்து ஒப்பிட்டுக் காட்ட வேண்டும்
நாலாவதாக,
வெளிநாட்டினர் செய்த அயோக்கியத் தனத்தை உடனே அகற்ற வேண்டும். கி.மு ஆறாம் நூற்றாண்டு புத்தர் கால அஜாத சத்ரு, உதயணன் போன்றோர் முதல் வரலாறு துவங்குவதாக மார்கஸீயவாதிகளும் வெள்ளைக்காரகளும் எழுதி வைத்துள்ளனர் ஆனால் அதற்கு முந்தைய 140 தலை முறை மன்னர் பட்டியல் நமது புராணங்களில் உள. அவற்றை சேர்த்து மாணவர்களின் ஆராய்ச்சிக்கு அவைகளை (Home Work/ assignment) ஹோம் ஒர்க் ஆகக் கொடுக்க வேண்டும்.
இறுதியாக உடனே வரலாற்றை திருத்தி எழுதி துருக்கி நாட்டு மிட்டன்னி கல்வெட்டு, எகிப்திலுள்ள தஸரதன் கடிதங்கள் (அமர்ணா லெட்டர்ஸ்), முன்று தமிழ் சங்கங்களில் உள்ள மன்னர்களின் பெயர்கள், உலகம் முழுதும், மத்திய ஆஸியப் பாலைவனம் முதல் தென்கிழக்காஸிய நாடுகள் வரை,கண்டு பிடிக்கப்பட்ட தமிழ், ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகளின் உலக வரைபடம்/மேப் ஆகியவற்றை சிலபஸில் சேர்க்க வேண்டும்.
வரலாற்றை திருத்தி எழுதுவது மிகமிக அவஸியம்.
நேரம் போதாமையால் மன்னர் பட்டியலை ஆங்கிலக் கட்டுரையிலிருந்து இணைத்துள்ளேன் கீழே காண்க.
Puzur Ashur I 2000 BCE
Naram Sin (Nara simha or Nara Chandra or Nara Sena)
Sena titles are very common in Mahabharata; at least 24 kings with Sena names in Mahabharata.
Ashur Rabi – around 1500 BCE (Rabi- Ravi/Surya/Sun)
Ashur nadin ahhe
Ashur Nirari 1426 BCE (N and M are interchangeable; it may be Murari)
Ashur bel nishesu 1410 BCE
Ashur nadin ahhe II 1402 BCE
Ashur Ubalit I 1365 BCE
Then there are seven kings with ASHUR title until 1000 BCE.
Some kings names were used up to four times with I, II, III, IV numbers.
We come across at least Four Dasarathas until Asoka’s grand son’s time in Indian History.
Ram’s Name
Rim Sin (Rama Chandra or Rama Sena) – 1822 BCE (ruled from Larsa)
Rim sin II – 1741 BCE
Sin in Sumerian is Moon God; Sin= Chandra
There is another proof for using only Gods names in Sumeria:
ADAD and MARDUK- gods’ names were used by at least 20 kings.
Sin Iddinam 1849 BCE
Sin Eribam 1842 BCE
Sin Iquisham 1840 BCE
xxx
Rimush ruled Akkad in 2284 BCE
Naram Sin in 2260 BCE ( other areas also had this name)
Amar sin (Amara Sena or Amara Chandra)- 2046 BCE from Ur
Shu Sin 2037 BCE (ruled from Ur) Susena or Suchandra
Ibbi sin – 2026 BCE
-சுபம்–
You must be logged in to post a comment.