ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!(Post No.10,174)

ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!    (Post No.10,174)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,174

Date uploaded in London – 4 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நம்முடைய பிளாக் Blog கட்டுரைகளைப் படிக்கும் வாசகர் ஒருவர் வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை பற்றி இல்லையாமே, இவை எல்லாம் புத்த, ஜைன மதத்திலிருந்து வந்ததாமே ! இது உண்மையா என்று கேட்டிருந்தார் .

சுருக்கமான பதில்- ரிக் வேதம் உலகில் பழமையான புஸ்தகம். அதிலேயே இந்தக் கருத்துக்கள் உள்ளன.அதைத் தொடர்ந்து வந்த பிராமணங்கள் என்னும் நூல்கள் மற்றும் உபநிஷதங்கள் ஆகியவற்றில் தெள்ளத் தெளிவாக, ஐயம் திரிபற, இந்த விஷயங்கள் உள்ளன. அவை அனைத்தும் புத்த, ஜைன மதநூல்களுக்கு முற்பட்டவை என்பதைத் ‘தள்ளிப்போன வெள்ளைக்காரர்களும்’ ஒப்புக்கொள்கின்றனர். ஆகவே இவை இந்து மதத்திலிருந்து ஏனைய கீழ்த்திசை மதங்களுக்கு — அதாவது இந்து மதத்தின் கிளை மதங்களுக்குச் சென்றன என்பதே உண்மை.

முதலில், காலக் கணிப்பை எடுத்துக்கொள்வோம். நமது பஞ்சாங்கமும் மத நூல்களும் சொல்லும் கருத்துக்களை ஏற்காத– எதிர்த்துப் பேசுவோர்– சொல்லும் கருத்துக்கள் இவை என்பதை முதலில் நாம் மனதிற் கொள்ளவேண்டும் ;  நமது பஞ்சாங்கங்கள் கி.மு 3102-ல் கலி யுகம் துவங்குவதாகச் சொல்லுகின்றன சுமார் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளும் இதை உறுதி செய்கின்றன. அதன்படி பகவத் கீதை அதற்கு முந்திய நூல். அதில் இரண்டாவது அத்தியாயத்தில் மறு பிறப்பு, கர்ம வினை என்பன தெளிவாகவே கூறப்பட்டுள்ளன. ஒரு வேளை கீதையின் காலத்தைச் சந்தேகிப்பவர்கள், வேறு சில ஆதாரங்களைக் கேட்கலாம். பிருஹத் ஆரண்யக உபநிஷத் மற்றும் சதபத பிரா(ஹ்)மணம் முதலிய நூல்களில் இருப்பதை வெளிநாட்டோரும் ஒப்புக் கொள்வதோடு அந்த நூல்களுக்கு கி.மு.850 அல்லது 800 என்றும் தேதி குறித்துவிட்டனர். அப்படிப்பார்த்தாலும் புத்தர், மஹாவீரர் முதலியோருக்கு முன்னரே இது எழுத்து வடிவில் வந்து விட்டது.

ரிக் வேதத்தில் உள்ளது

இந்து மத நூல்கள் பெரிய சமுத்திரம் போல விரிவானவை ; எவரேனும் அவை முழுவதையும் படித்திருக்க முடியுமா என்று கேட்டால் நான் இல்லை என்றே சொல்லுவேன். ஆனால் ஏனைய மத நூல்களை ஒரே நாளில் பிடித்துவிடலாம். மேலும் நமது நூல்கள் மிகவும் அப்டேட் Update  ஆனவை. வேதம் தவிர மற்ற எல்லா நூல்களையும் நம் முன்னோர்கள் Update அப்டேட் செய்துள்ளனர்- புதுமைப்படுத்தியுள்ளனர். சில விஷயங்களை விளக்கத்துக்காக சேர்த்துள்ளனர். வெளிநாட்டார் கடைசியில் சேர்க்கப்பட்ட தகவலை அடிப்படையாக வைத்து தேதி குறிக்கின்றனர். ஏனெனில் அவர்கள் இந்துமதத்தைப் பின்பற்றாதவர்கள், அதில் சொல்லிய கருத்துக்களை நம்பாதவர்கள் என்பது மட்டுமல்ல. அவர்களை அப்பணியில் பணம் கொடுத்து  ஈடு  படுத்தியவர்கள் ‘கிறிஸ்தவ மத கொள்கைகளை வலியுறுத்த உம்மை இப்பணியில் நியமித்துள்ளோம்’ என்றும் எழுத்து வடிவில் எழுதியும் வைத்துவிட்டனர். நம் வீட்டு எதிரி– குடும்ப எதிரி — நம் குடும்பத்திலுள்ளோர் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொன்னால் நாம் உடனேயே அவைகளை உதறித் தள்ளிவிடுவோம். அது போல எதிரிகளின் கருத்தை ஏற்க வேண்டியது இல்லை.

அது சரி, ஒரு இந்து மத அன்பர், உண்மையிலேயே இது பற்றி தெரிந்து கொள்ள நம்மை அணுகினால் நாம் என்ன சொல்லுவோம்? இதோ பதில்.

ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் மரணம், இறுதிச் சடங்கு, மக் கிரியைகள் பற்றி நிறைய மந்திரங்கள் உள்ளன. அவற்றில் இக்கருத்துக்கள் பேசப்படுகின்றன. இந்த மந்திரங்களை இன்றும் ஒருவர் இறந்தபின்னர் முதல் 13 நாட்களின் சடங்குகளில் பிராமணர்கள், பயன்படுத்துகின்றனர். பொதுவாக ஈமக் கிரியை விஷயங்களை எவரும் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொவதில்லை. ஆனால் மிகவும்  வியாப்பான விஷயம், ரோட்டில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் பாடும் பாட்டுக்களில் கூட  இந்தக் கருத்துக்கள் எதிரொலிப்பதைக் கேட்கலாம்.

ரிக்வேத மந்திரங்களில் நுழைவதற்கு முன்னர் என் வாழ்வில் நடந்த ஓரிரு விஷயங்களை சொல்லுகிறேன்.. முப்பது வருடங்களுக்கு முன்னால் — அதாவது 1987ல் பிரிட்டிஷ் அரசு என்னை லண்டனுக்கு பி.பி.சி . தமிழோசை ஒலிபரப்புக்கு அழைத்ததற்கு முன்னால்— நான் மதுரை ஜில்லா ஆர்.எஸ்.எஸ் கார்யவாஹ் (மாவட்டச் செயலர்) பொறுப்பில் இருந்தேன். மேலூர், உசிலம்பட்டி , திருமங்கலம், கம்பம், உத்தமபாளையம், பெரியகுளம் முதலிய இடங்களுக்குச் சென்று ஆர். எஸ்.எஸ். கிளைகளைத் துவக்குவது, கூட்டங்களில் பேசுவது முதலியன வழக்கமான பணிகள் . ஒருமுறை உசிலம்பட்டி சென்றபோது பஸ் நிலையத்தில் பஸ்  நின்றவுடன் ஜன்னல் வழியாக கையை நுழைத்து காசு கேட்டு நச்சரித்தவன் கையில் ஒரு சிப்பலா க்கட்டையை வைத்து அடித்துக் கொண்டு பாடிய பாடல் என்னை அசத்திவிட்டத்து ; உபநிஷத்திலும் பகவத் கீதையின் இரண்டாவது அத்தியாயத்திலும் சொல்லும் கருத்துக்களை அவன் நாட்டுப்புற பாடலாகப் பாடுகிறான். கையில், பையில் இருந்த பணத்தில் ஊர் போய்ச்  சேரத் தேவையான பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு  மிச்சத்தை அவன் கையில் போட்டேன் .

Xxx

லண்டனில் நான் BBC பி.பி.சி ஒப்பந்த வேலை பார்த்தது ஐந்து ஆண்டுகளுக்கும் சற்று அதிகம். அதற்குப் பின்னர்  நான் பார்த்த பகுதி நேர வேலையில் ஒன்று, பிரபல ஆஸ்பத்திரியொன்றின் மொழிபெயர்ப்பாளர் வேலை. அதில் ஒரு புற்று நோய் நோயாளி இறக்கப்போகிறார் என்பதை அவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் அறிவிக்கும் நாள் வந்தது. இங்கெல்லாம் இவ்விஷயத்தை பட்டவர்த்தனாமாக்ச் சொல்லி விடுவார்கள். ஆனால் பக்குவமாக, சுற்றிவளைத்து, ஒரு மணிநேரம் பேசிவிட்டு, மிகவும் அழகாகச் சொல்லுவார்கள். அந்த SPECIALIST NURSES ஸ்பெஷலிஸ்ட் நர்ஸுகள்  இருவர், முதலில் குடும்பத்தினரை சமையல் அறைக்குள் அழைத்துச் சென்று விஷயத்தைச் சொல்லி உயில் முதலியவற்றை எழுதச்  சொல்லுங்கள், அவருக்குக்ப் பிடித்த விஷயங்களைக் கேட்டு அதை நிறைவேற்றுங்கள் என்று சொன்னவுடன் அவர்கள் விக்கி விக்கி அழுதனர்.

பிறகு நோயாளியிடம் வந்து ஒரு அரை மணிநேரம் பேசிய பின்னர் விஷயத்தை உடை த்தோம் . அவர் அழ வும் இல்லை ஷாக் ஆகவும் இல்லை. “ஆமாம், ஆமாம், காடு வா,வா என்கிறது ;வீடு போ, போ, என்கிறது; போகத்தா னே வேண்டும்; எல்லாம் முடித்துவிட்டேனே” என்றார் . அவர் சொன்னதை நான் அ ப்படியே மொழி பெயர்த்துச் சொன்னேன். நர்ஸுகள்  லண் டன் கிறிஸ்தவர்கள். அவர்களுக்கு இந்த விஷயம் புரியவில்லை . ஆள் மூளை குழம்பிவிட்டதோ என்று என்னைக் கேட்டார்கள். நான் அவர்களுக்கு சுருக்கமாக வானப்பிரஸ்தம் என்னும் இந்துக்களின் மூன்றாவது கட்டத்தைச் சொல்லி வயதான இந்துக்கள் இதை அடிக்கடி வீட்டில் சொல்லுவார்கள். அவரும் மரணத்தை எதிர்கொண்டு மறு உலகத்துக்குச் செல்லத் தயாராகிவிட்டார் என்று.

அந்த வெள்ளைக்கார நர்ஸுகளுக்கு எவ்வளவு புரிந்ததோ கடவுளுக்கே வெளிச்சம். உசிலம்பட்டி பஸ்  நிலைய பிச்சைக்காரனோ இறந்து போன புற்று நோய்காரனோ  பகவத் கீதையையோ பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷத்தையோ படித்திருக்க மாட்டார்கள். ஆனால்  அவர்களுடைய மரபணுவில் பல்லாயிரம் ஆண்டுகளாக ஊன்றிய வேத தத்துவங்கள் வெளிப்படுகின்றன என்றே நான் சொல்லுவேன்.

மரணம் தொடர்பாக உள்ள மந்திரங்களை வெள்ளைக்கார்களும் கூட விளக்காமல் அப்படியே மொழி பெயர்த்துவிட்டனர். நான் ரிக் வேதத்தில் 9000 மந்திரங்களுக்கு மேல் படித்துவிட்டேன். இன்னும் சுமார் 1000 மந்திரங்களே பாக்கி. இதுவரை படித்த ஈமச் சடங்கு மந்திரங்களுக்கு பல இடங்களில் அர்த்தம் புரிவதில்லை.  பல மர்மமான புரியாத விஷயங்களைப் பேசுகினன்றனர் . ஆகவே இந்து மதம் பற்றிப் பேசுவோர் அதை முழுமையாக அறியவில்லை .

எங்கள் வீட்டுக்கு வாரம் தோறும் பிச்சை எடுக்க ஓர் நாமம் போட்டவர் வருவார். இராமனின் பெயரைச் சொன்னால் ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே என்ற கம்ப ராமாயணப்  பாடலை வாசலில் நின்று பாடுவார். உடனே சகோதரர்களில் ஒருவர் ஓடிச் சென்று அவர் பாத்திரத்தில் ஒரு பிடி அரிசி அல்லது ஒரு அணா காசு போடுவோம். கொஞ்சம்  தாமதமானால் அவர் அந்தப்பாடலை உரத்த குரலில் பாடி எங்களை மிரட்டுவார். நாங்கள் அண் ணன் தம்பி களுக்குள் ஜோக் அடித்துக் கொள்ளுவோம்; ஏய் , அதிகார ப் பிச்சைக்காரன் வந்துட்டான் ; அவன் அதிகாரம் செய்து அதட்டுவதற்குள் காசு போடுவோம் என்று பேசிக் கொள்வோம். அவர் பாடிய இராமன் என்னும் இரண்டு எழுத்தினால் ஜென் மமும் மரணமும் இன்றித் தீருமே என்பது இன்றும் காதில் ரீங்காரமாக ஒலிக்கிறது. யார் இவர்களுக்கு எல்லாம் இந்த உயரிய தத்துவங்களைச்  சொல்லிக் கொடுத்தார்கள்? எல்லாவற்றுக்கும் மேலாக இரத்தத்தில் யார்  ஏற்றிவிட்டார்கள் ?

அமிர்தம்

காலா காலமாக நாம் நம்பும் விஷயங்கள் இவை. இதற்குப்  பெரிய ஆதாரம் “அமிர்தம்” என்ற சொல்லில் இருக்கிறது. இந்த சம்ஸ்கிருதகி  சொல் சங்க இலக்கியத்திலும் உளது. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் பயன்படுத்திய இந்தச் சொல் ரிக் வேதத்தில் நூற்றுக் கணக்கான முறைகள் வரும்.

 இந்த அமிர்தம் என்பது என்ன காட்டுகிறது? மரணமில்லாப் பெரு வாழ்வு தரக்கூடியது அமிர்தம்.

எங்கே? இறைவனின் திருப்பாதத்தில் அல்லது சொர்க்கத்தில். அது கிடைக்காதவர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பார்கள் என்ற கருத்து ரிக் வேதம் முழுதும் இந்தச்  சொல்லால்  எதிரொலிக்கப்படுகிறது.

TO BE CONTINUED……………………

XXXXX

  tags –புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை,  ,ரிக்வேத,ம் 

மேலும் 31 ரிக்வேதப் பொன்மொழிகள் (Post No.9912)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9912

Date uploaded in London –30 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆகஸ்ட் 2021 நற் சிந்தனை காலண்டர்

ஆகஸ்ட் மாத பண்டிகைகள் – 3 ஆடிப் பெருக்கு , 8 ஆடி அமாவாசை , 11- ஆடிப் பூரம், 15- சுதந்திர தினம், அரவிந்தர் பிறந்த தினம், 20- மொகரம், 21- வரலெட்சுமி விரதம், ஓணம் , 22- ஆவணி அவிட்டம், ரக்ஷா பந்தன், 23 காயத்ரி ஜபம், 30- கிருஷ்ண ஜெயந்தி .

அமாவாசை -8, பெளர்ணமி -22, ஏகாதசி விரத நாட்கள் – 4, 18

சுப முஹுர்த்த நாட்கள் -20, 26

முதல் எண் ரிக் வேத மண்டலத்தையும், அடுத்த எண் துதியையும் , மூன்றாவது எண் மந்திரத்தையும் குறிக்கும் .

xxxx

ஆகஸ்ட் 1 ஞாயிற்றுக் கிழமை

வருணனே!  எல்லா மக்களும் பிழை செய்கிறார்கள் நாங்களும் உன் விதியை மீறுகிறோம். கோபப்பட்டு எங்களை அழித்து விடாதே -1-25-1, 1-25-2

xxx

ஆகஸ்ட் 2 திங்கட்  கிழமை

கண்டேன், கண்டேன், கண்ணுக்கினியன கண்டேன்.அவனுடைய தேரையும் இந்த பூமியில் கண்டேன். என் துதிப்பாடலையும் அவன் ஏற்றுக்கொண்டான் – 1-25-18

xxx

ஆகஸ்ட் 3 செவ்வாய்க்  கிழமை

என் நினைவுகள் , மேய்ச்சல் நிலங்களுக்குச் செல்லும் பசு மாடுகளைப் போல, எல்லோரும் போற்றும் அவனையே நாடிச் செல்கிறது 1-25-16

xxx

ஆகஸ்ட் 4 புதன்  கிழமை

பேரறிஞனான வருணன் எங்களை நாள்தோறும் நன்னெறியில் செலுத்துவானாக ; எங்கள் ஆயுளை நீடிப்பானாக -1-25-12

xxx

ஆகஸ்ட் 5 வியாழக் கிழமை

நாங்கள் வாழ மேலேயுள்ள, நடுவிலுள்ள,கீழேயுள்ள பந்த பாசங்களிலிருந்து கட்டுக்களிலிருந்து, தளைகளிலிருந்து அவிழ்த்து விடுங்கள் – 1-24-21

Zxxx

ஆகஸ்ட் 6 வெள்ளிக் கிழமை

உணவின் தலைவனே ; நீ ஒளி ஆடைகளை அணிந்து கொள் ; எங்கள் வேள்வியை ஏற்றுக்கொள் – 1-26-1

Xxx

ஆகஸ்ட் 7  சனிக் கிழமை

அக்னியே , நீ தந்தை, நான் மகன்;நீயும்  நானும் உறவினர்கள் ; நான் உன் நண்பன்; நீ என் நண்பன் – 1-26-3

Xxx

ஆகஸ்ட் 8 ஞாயிற்றுக் கிழமை

அமிர்த சொரூபனே , எங்களுடைய துதிப்பாடல்கள் , நம் இருவருக்கும் இன்பம் தரட்டும் – 1-26-9

Xxx

ஆகஸ்ட் 9 திங்கட்  கிழமை

அக்னியே ,எங்கும் செல்லும் நீ, எங்களை அருகிலிருந்தோ தொலைவிலிருந்தோ துன்புறுத்த நினைப்பவர்களிடமிருந்து காத்தருள்க 1-27-3

Xxxx

ஆகஸ்ட்10 செவ்வாய்க் கிழமை

சித்திரபானுவே /அக்னியே , நீ நதியின் அலைகளைப் போல செல்வங்களை பகிர்ந்து கொடுக்கிறாய்; யாகம் செய்ப்பவனுக்குப் பொழிகிறாய் 1-27-6

xxx

ஆகஸ்ட் 11 புதன்  கிழமை

பெரிய தேவர்களுக்கு நமஸ்காரம் ; சிறிய தேவர்களுக்கு நமஸ்காரம் ; இளைஞர்களுக்கு நமஸ்காரம்; முதியோருக்கு நமஸ்காரம்; சக்திமிக்க  நாங்கள் எல்லா தேவர்களையும் போற்றுகிறோம் நான் பெரிய தேவர்களுக்கு மறக்காமல் துதி பாடுவேனாக 1-27-13

xxx

ஆகஸ்ட் 12 வியாழக் கிழமை

இந்திரனே ! உரலில் இடிக்கும்போது உலக்கை விழும் நேரத்தை சரியாக அறிந்து ,இடிப்பதற்கு உதவும் பெண்களைப் போல நீயும்,  இந்த உரலில் இடிக்கும்போது விழும் சோம ரஸத்துளிகளைப் பருகுவாயாக 1-28-3

Xxx

ஆகஸ்ட் 13 வெள்ளிக் கிழமை

இந்திரனே! கழுதை போலக்  கத்தி அபஸ்வரம் பாடும் எங்கள் எதிரிகளை வீழ்த்துவாயாக. எங்களுக்கு ஆயிரக் கணக் கில் குதிரைகளையும் பசுக்களையும் தருவாயாக- 1-29-5

Xxx

ஆகஸ்ட் 14  சனிக் கிழமை

இந்திரனே இந்த சோம ரசம் உனக்கானது. கருத்தரித்த பெட்டைப் புறா விடம் வரும் ஆண் புறா போல வருக்கிறாய்.      அப்போது எங்கள் தோத்திரங்களையும் ஏற்பாயாக  1-30-4

Xxx

ஆகஸ்ட் 15 ஞாயிற்றுக் கிழமை

அக்கினியே, பேரறிஞநான நீ, தீமையான செயல்புரிவோரை நற்பணியில் ஈடுபடுத்துகிறாய்  வீரர்கள் செய்யும் போரில் பரந்த செல்வமாக  இருக்கிறாய் . நீ போரிலே வலியோரைக் கொண்டு மெலிந்தவர்களை கொன்றாய்.1-31-6

Xxx

ஆகஸ்ட் 16 திங்கட்  கிழமை

ஏ நான்கு  கண்கள் உடைய அக்கினியே , புனிதர்களை நீ காக்கிறாய் உனக்கு அ வி அளிக்கும் மனிதனின் மந்திரத்தை நீ மனதில் இருத்திப் போற்றுகிறாய் 1-31-11

Xxx

ஆகஸ்ட் 17 செவ்வாய்க்  கிழமை

அக்கினியே , நீ எங்களுடைய அசட்டையை மன்னிக்கவும் . நாங்கள் தீய வழியில் சென்று விட்டோம்.. நீயே நண்பன்; நீயே தந்தை.எல்லோரையும் ஊக்கப் படுத்துகிறாய். எல்லோரையும் கவனித்துக் கொள்பவனும் நீயே -1-31-16

Xxxx

ஆகஸ்ட் 18 புதன்  கிழமை

நான் இந்திரன் செய்த வீரதீரத் செயல்களை சொல்கிறேன். வஜ்ராயுதனான அவன் மேகத்தைப் பிளந்தான்.தண்ணீரை பூமிக்குத் தள்ளினான்.மலைகளில் தண்ணீர் செல்ல வழிகளைக் கீறினான் 1-32-1

xxx

ஆகஸ்ட் 19 வியாழக் கிழமை

இந்திரனே, நீ அஹி என்னும் பாம்புகளிடையே தோன்றிய மேகத்தைப் பிளந்தாய்; பின்னர் மாயாவிகளின் மாயையை அழித்தாய்; அப்பால் சூரியனையும், வானத்தையும் உஷை என்னும் உதய காலத்தையும் தோற்றுவித்தாய். பின்னர் உன்னை எதிர்க்க எந்தப் பகைவனும் இல்லை 1-32-4

xxxx

ஆகஸ்ட் 20 வெள்ளிக் கிழமை

இந்திரனே நீ  அஹி  என்னும் பாம்பு அரக்கனைக் கொல்லும்போது உன் இதயத்தில் பயம் நுழைந்தபோது நீ யாரை நாடினாய் ? கலங்கிய நீயே 99 நதிகளை பருந்து போல விரைந்து கடந்தாயே 1-32-14

Xxxx

ஆகஸ்ட் 21  சனிக் கிழமை

வாருங்கள், நாம் திருடப்பட்ட பசுக்களை  மீட்க இந்திரனிடம் செல்லுவோம். பகைமையற்ற அவன் நம்முடைய பேரரறிவை அதிகப்படுத்துகிறான் ; பிறகு அவன் பசுக்களின் செல்வத்தைக் காணும் உத்தம ஞானத்தை அளிப்பான் 1-33-1

xxx

ஆகஸ்ட் 22 ஞாயிற்றுக் கிழமை

என் மனம் மரத்தின் உச்சியில் கட்டிய கூட்டுக்குப் பருந்து பாய்வது போல இந்திரனிடத்தில் பாய்கிறது . மறைந்திருக்கும் செல்வம் தரும் அவனைப் புகழ்மிகு கீதம் இசைத்துப் போற்றுகிறேன் 1-33-2

Xxxx

ஆகஸ்ட் 23 திங்கட்  கிழமை

அவன் பூமியின் எட்டு திசைகளையும், மூன்று வறண்ட பகுதிகளையும், ஏழு நதிகளையும் ஒளிமயமாக்கினான்.சவிதா தேவனின் கண் தங்க நிறமானது ; வழிபடுபவனுக்கு தேர்ந்து எடுத்த செல்வத்தை அவன் அளிக்கிறான் (சவிதா= சூரிய தேவன்)-1-35-8

Xxxx

ஆகஸ்ட் 24 செவ்வாய்க்  கிழமை

அக்கினியே ! உன்னுடைய எரிக்கும் சுவாலைகளால் தானம் அளிக்காத அத்தனை போரையும் மட்பாண்டங்களை தடிகளால் அடிப்பது போல அடித்து நொறுக்கு – 1-36-16

மருத்துக்கள் (காற்று தேவன்) புள்ளி மான்களோடும் ஈட்டிகளோடும் மின்னும்  நகைகளோடும், தாமே துலங்கும் ஒளியோடும் ஒருமித்துப் பிறந்தார்கள்- 1-37-2

xxxx

ஆகஸ்ட் 25 புதன்  கிழமை

மருத்துக்கள் மொழியைப் பிறப்பிக்கிறார்கள்; தண்ணீரை அவற்றின் வழிகளிலே செலுத்துகிறார்கள்; அவர்கள் கதறும் பசுக்களை முழங்கால் அளவு நீருள்ள இடத்தில் பருக அனுப்புகிறார்கள் 1-37-10

xxx

ஆகஸ்ட் 26 வியாழக் கிழமை

மருத்துக்களே எப்போது உங்கள் இரு கைகளாலும் எங்களை மகனைத் தந்தை தூக்குவது போல தூக்குவீர்கள்? 1-38-1

xxx

ஆகஸ்ட் 27 வெள்ளிக் கிழமை

பேரறிஞனான இந்திரனே ! எங் களுக்கு நிறைய செல்வத்தைக் கொடு ; ஆனால் வணிகனைப் போல செயல்படாதே – 1-33-4

Xxx

ஆகஸ்ட் 28  சனிக் கிழமை

அஸ்வினி தேவர்களே ! ஒரு நாளைக்கு மும்முறை வந்து குற்றங்களை நீக்கும் நீங்கள் இன்று எங்கள் வேள்வியை ன்று முறை தேனால் தெளியுங்கள்.; இனிமைப் படுத்துங்கள். காலையிலும் மாலையிலும் எங்களுக்கு வலிமை தரும் உணவைப் படையுங்கள் 1-34-3

Xxx

ஆகஸ்ட் 29 ஞாயிற்றுக் கிழமை

3 முறை எங்கள் மனைக்கு வாருங்கள்; நீதியுள்ள மனிதனிடம் 3 முறை செல்லுங்கள்; உங்கள் பாதுகாப்புக்கு உரியவர்களிடம் 3 முறை தோன்று ங்கள்; எங்களுக்கு 3 மடங்கான அறிவைக் கற்பியுங்கள்; உங்களுக்குத் திருப்தி தரும் பொருட்களை 3 முறை தாருங்கள்; மழையைப் பொழியும் இந்தி ரண் போல் 3 முறை உணவைப் பொழியுங்கள் 1-34-4

Xxxx

ஆகஸ்ட் 30 திங்கட்  கிழமை

ஒளியுள்ள உலகங்கள் மூன்று உண்டு; இரண்டு சவிதா அருகில் இருக்கிறது . ஒன்று மானிடர்களை எமலோகத்துக்கு கொண்டு செல்கிறது; தேரின் அச்சாணி போல அமிர்தர்கள் ஸவிதாவில் நிலைக்கிறார்கள்; சவீதாவின் சிறப்பை அறிபவன் எங்களுக்கு கூறட்டும். 1-35-6

xxx

ஆகஸ்ட் 31 செவ்வாய்க் கிழமை

உங்கள் வாயால் ஸ்லோகங்களை சொல்லுங்கள். மழையைபி பரவலாக்கும் மேகத்தைப் போல அதை பரத்துங்கள்;காயத்ரீ சூக்தத்தைப் பாடுங்கள் 1-38-14

–subham–

 tags — மேலும் ,ரிக்வேத, பொன்மொழிகள், ஆகஸ்ட் 2021, காலண்டர்

பெண்கள் வாழ்க- பகுதி 3; ரிக்வேத பெண் கவிஞர்களின் பட்டியல் (Post No.9417)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9417

Date uploaded in London – –24 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

பெண்கள் வாழ்க- பகுதி 3ரிக் வேத பெண் கவிஞர்கள்

உலகிலேயே பழமையான புஸ்தகம் ரிக்வேதம். சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரும் ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் வான சாஸ்திர அடிப்படையில் இ தை நிரூபித்துள்ளனர். அவர்கள் கண க்குப் படி குறைந்தது கி.மு. 4500. அதாவது இற்றைக்கு 6500 ஆண்டுகளுக்கு முன்பு. ஆனால் சங்கத்

tags- பெண்கள் வாழ்க,பகுதி 3,  ரிக்வேத, பெண் கவிஞர், பட்டியல்

ரிக்வேதத்தில் நெருப்புக் கோழி OSTRICH வந்த மர்மம் !(Post No.9343)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9343

Date uploaded in London – –5 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

தென் ஆப்ரிக்காவில் கலஹாரி பாலைவனத்திலும் கிழக்கு ஆப்பிரிக்காவிலும்  ஆஸ்ட்ரிச் என்னும் பறவை வாழ்கிறது  இதைத் தமிழில் தீக்கோழி அல்லது நெருப்புக் கோழி என்று மொழிபெயர்ப்பார்கள். இதன் ஸம்ஸ்க்ருதப் பெயயர் ததிக்ராவன் . பிராமணர்கள் தினமும் மூன்று முறை சொல்லும் சந்தியா வந்தன மந்திரத்தில் இந்தச் சொல் வருகிறது. உலகிலேயே மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் இது சுமார் 20 இடங்களில் வருகிறது ;அது நான்கு மண்டலங்களில் குறிப்பிடப்படுகிறது. ரிக் வேதத்தை பத்து மண்டலங்களாக — அதாவது பத்து புஸ்தகங்களாகப் பிரித்து வைத்துள்ளனர். அவற்றில் 3,4,7,10 ஆகிய மண் டலங்களில் ஆஸ்ட்ரிச் பறவை வருகிறதுஆரம்ப காலத்தில் ரிக்வேதத்தை ‘முழி’ பெயர்த்தவர்கள் –

tags-

ததிக்ராவன் ,ரிக்வேத,ஆஸ்ட்ரிச்