காடுகள் பற்றி ரிக் வேத கவிதை — பகுதி 3 (Post No.10,276)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,276

Date uploaded in London – 30 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘காடுகள் வாழ்க ! இந்துக்களின் அற்புத வாழ்க்கை முறை’ என்ற தலைப்பில் இரண்டாவது பகுதி நேற்று வெளியானது. இன்று இறுதி பகுதியில் ரிக் வேத துதி 10-146 ல் கடைசி மூன்று மந்திரங்களைக் காண்போம்.

நேற்று இறங்கு வரிசையில் மந்திரம் 6, 5, 4 பற்றி எனது விளக்க உரையைத் தந்தேன். ஆறு மந்திரங்களின் முழு மொழிபெயர்ப்பை முதல் பகுதியிலேயே தந்து விட்டேன்.

இதோ மூன்றாவது மந்திரம் ரிக்.10-146-3

இங்கும் புலவர் ஒரு கற்பனைக் காட்சியை புலவர்  நம் முன்னே வைக்கிறார்.

புலவர் சொன்ன வார்த்தைகள் – “அங்கு பசுக்கள் மேய்வது போலத் தோன்றுகிறது. அதனால் வீடுகள் இருப்பது போலவும் தோன்றுகிறது மாலை நேரத்தில் அரண்யானி  தன்  வண்டிச் சக்கரங்களைக் கழற்றி வைத்திருக்கிறாள் போலும்!”

இதற்கு விளக்கம் எழுதியோர் உண்மையில் புலவர் பார்ப்பது மான்கள், அங்கும் இங்கும் புல் மேய்வதாகும்; வீடு என்பது  மரங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து, செடி கொடிகளால் கூரை வேயப்பட்டது போலத் தோன்றுவதே என்றும் எழுதியுள்ளனர்.

வண்டிச் சக்கரம் கழற்றி விட்டது என்பது மாலை நேரத்தில் வண்டிக்காரர்கள்  காளைகளை வண்டியிலிருந்து அகற்றி இளைப்பாற விட்டுவதாகும். இங்கே காட்டில் மான்கள் சுதந்திரமாக புல் மேய்வதைக் கண்ட புலவர் அப்படிப் பாடுகிறார் .

நல்ல ஒரு காட்சியை புலவர் நம் முன்னே கொண்டுவருகிறார்.

காளிதாசன், இமய மலை அடிவாரம் பற்றி குமார சம்பவத்தில் சொல்லும் காட்சி இது. அதை அப்படியே புறநானூற்றுப் புலவர் முரஞ்சியூர் முடி நாகராயர் பாடல் 2-ல் வருணிக்கிறார்:-

சிறுதலை நவ்வி பெருங்கண் மாப்பிணை

அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்

முத்தீ விளக்கின் துஞ்சும்

பொற்கோட்டு இமயமும், பொதியமும் போன்றே “

இது சேரமான் பெருஞ் சோற்று உதியஞ் சேரலாதனைப் பாடிய பாடலால் மிகப் பழைய பாடல் ஆகும் .

MR NAGARAJAN’S POEM IN PURA NANURU

பிராமணர்கள் இமயமலை அடிவாரத்தில் மாலை நேரத்தில் சந்தியா வந்தனம் செய்து, யாகம் செய்வதைக் காட்டுகிறது .இன்று தேசப்படத்தில் ‘கஞ்சன் ஜங்கா’ என்று போட்டிருக்கும் சிகரத்தின் உண்மைப் பெயர் ‘காஞ்சன சிருங்கம்’; அதை அப்படியே ‘பொற்கோடு’ golden peak  என்று அழகுற மொழிபெயர்க்கிறார் புறநானூற்றுப்  புலவர் மிஸ்டர் நாகராஜன் (ராய= ராஜ என்பது இன்று ஆங்கிலத்திலும்  Royal ராயல் என்று இருப்பதை தமிழ் -சம்ஸ்கிருதம் தொடர்பு பற்றிய 150 கட்டுரைகளில் விளக்கியுள்ளேன்)

xxx

ரிக்.10-146-2

இரண்டாவது மந்திரத்துக்கு வருவோம். ரிக் வேதம் எவ்வளவு பழமையானது; அதற்குப் பொருள் காண்பது எவ்வளவு கடிது என்பதை இந்த மந்திரம் விளக்குகிறது

காட்டில் நடக்கும் Orchestra ஆர்கெஸ்ட்ரா பற்றிப் புலவர் பாடுகிறார். இது போன்ற அருமையான இயற்கை வருணனை மலைபடுகடாம் முதலிய சங்க இலக்கியப் பனுவல்களில் நிறைய உள .

கிரீச் என்று சப்திக்கும் விருஷாவரத்துக்கு சிச்சிகம் பதில் அளிக்கிறது. அங்கே பின்புறத்தில் யாரோ தாளம் போடுகிறார்கள். யாரோ சுருதி பாடுகின்றனர் . அவைகள் எல்லாம் அரண்யானி தேவியைக் குறித்து துதி பாடுகின்றன” –

இதன் பொருள் காட்டில் பல்வேறு ஒலிகள் கேட்கின்றன.அவற்றின் ஒலிகள் ‘பாடுவது’ போலவும் பின்னாலுள்ள வண்டுகளின் தொடர்ந்த ரீங்காரம் ‘சுருதி’ போலவும் உள்ளதாம். இதைப் புரிந்துகொள்ள இரண்டு விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

ஒன்று, இந்துக்களின் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில்  பாடகர் அல்லது வாத்தியம் வாசிப்போருக்கு தம்பூராவில் சுருதி மீட்டும் ஒரு பெண்மணி அமர்ந்து 3, 4 மணி நேரத்துக்கு சுருதி போட்டுக்கொண்டு இருப்பார் . 

இரண்டு , காடுகளுக்குச்  சென்ற அனுபவம் உடையோருக்கு அங்கு எப்போதும் இதே போல வண்டுகளின் ரீங்காரம் இசைப்பதை கேட்டிருப்பார்கள். கொடைக்கானல் போன்ற மலைகளில் ஏறும்போது காரை நிறுத்திவிட்டு வெளியே வந்தோருக்கு இது தெரிந்திருக்கும். இதே போல காடுகளில் தொடர்ந்து ஒலி . ஆனால் இப்படி ஆர்க்கெஸ்ட்ரா Orchestra வாசித்த பூச்சிகள் , பறவைகள் பற்றி உரைகாரர் இடையே கருத்தொற்றுமை இல்லை. ஏனெனில் வேதம் அவ்வளவு பழமையானது  அந்தப் பறவைகளை இன்று அடையாளம் காணமுடியவில்லை. சிச்சிக ,வ்ருஷாவர என்பதை வெட்டுக்கிளி, மீன் கொத்திப் பறவை என்பர் சிலர். எல்லாமே பூச்சி வகை, எல்லாமே பறவை வகை என்றும் உரைகாரர் செப்புவர் .

நமக்குத் புரிவது பறவைகளின் பாடல்; பின்னணியில் சிற்றோடை, நீர்வீழ்ச்சிகள் தாளம், வண்டுகளின் ரீங்காரம்  என்னும் சுருதி. இது தமிழ் இலக்கியத்திலும் உளது. ஆனால் அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புலவன் அதை சம்ஸ்கிருதத்தில் பாடியதும் அதை பிராமண சமூகம் வாய் மொழியாகவே பரப்பி வருவதும் உலக அதிசயம்!!!

xxx

10-146-1

முதல் மந்திரத்தைக் காண்போம் . அரண்யானி!  அரண்யானி! என்று இரு முறை அழைத்து புலவர் பாட்டைத் துவங்குகிறார் . இது போல பல பாடல்கள் சங்க இலக்கியத்திலும் உண்டு ‘பல் சான்றீரே , பல் சான்றீரே!!’ ‘கலம் செய் கோவே,  கலம் செய் கோவே !!’ என்றெல்லாம் இரு முறை அழைக்கும் பாடல்களை புற நானூற்றிலும் காணலாம்.

ரிக் வேதத்தில் உள்ள நிறைய சொற்களை தமிழர்களாகிய நாம் அன்றாடம் பயன்படுத்துகிறோம் ; இந்தக் கவியில் உள்ள ‘அரண்யானி’ என்பது ஆரண்யம், அரண்யம் = காடு என்பதாகும். இன்றும் கூட வேதாரண்யம் = திருமறைக்காடு என்பதெல்லாம் தமிழர் வாயில் சர்வ சாதாரணாமாகப் புழங்கும் சொற்கள் ஆகும் .

இப்படி காட்டு ராணியை அழைக்கும் புலவர் ஒரு வியப்பான கேள்வியைக் கேட்கிறார். “ஒய் அம்மணி! உனக்கு பயமே இல்லையா? மாலை நேரம் வந்துவிட்டால் தோன்றியும் தோன்றாமலும் மறைந்து போகிறாய். நீ ஏன் அருகிலுள்ள கிராமத்துக்கு வரக்கூடாது? உனக்கு பயம் என்பதே இல்லையா என்று வியக்கிறேன்”.

xxx

6000 ஆண்டுகளுக்கு முன்னர், இப்படிப் பாடிய கற்பனை மிகு கவிகள் ரிக் வேதத்தில் நிறைய உள்ளன. BIG BANG ‘பிக் பாங்’ என்று அழைக்கப்படும்  மாபெரும் பிரபஞ்சத் தோற்றம் CREATION பற்றிய கவிதையைக் கண்டு உலகமே வியக்கிறது அதர்வண வேதத்தில் உள்ள பூமி சூக்தத்தைக் கண்டு உலகமே ஆச்சர்யப்படுகிறது.

ரிக்வேதத்தின் கடைசி கவிதை வியாசரின் மஹா ஜீனியஸைக் காட்டுகிறது. ‘’உலகம் முழுதும் ஒற்றுமை நிலவ வேண்டும் என்ற உலக மஹா தேசீய கீதத்தை கடைசி பாடலாக வியாசர் வைத்திருப்பது இந்துக்களின் நல்லெண்ணத்துக்கு உதாரணம்ஆகத் திகழ்கிறது. ரிக் வேதத்தை எல்லோரும் படிக்க வேண்டும். அஸ்வினி தேவர்கள், விச்வே தேவர்கள் பற்றிய கவிதைகளை முதலில் படியுங்கள். அற்புதங்களும் வரலாறும் அதில் உள .

இதனால்தான் வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே என்று பாரதியும் பாடிவைத்தான்.

—SUBHAM—

tags- காடுகள் , ரிக் வேத,  கவிதை-3

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை-PART 2; ரிக் வேதத்தில் தாவரவியல் செய்திகள் (Post.10,235)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,235

Date uploaded in London – 20 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதத்தில் BOTANY தாவரவியல் செய்திகள்

ரிஷி புதன் என்பவன் சோமனுடைய புதல்வன்; அவன் விஸ்வே தேவர்களை நோக்கிப் பாடும் பாடல் ரிக் வேதத்தில் பத்தாவது மண்டல 101 (RV. 10-101) ஆவது துதியாக அமைந்துள்ளது. இது முழுக்க  முழுக்க வேளாண்மை AGRICULTURE  பற்றியது !

நவக்கிரகங்களில் ஒன்று புதன். அதை சந்திரனின் குமாரன் (MERCURY son of MOON)  என்று பிற்காலத்தில் எழுந்த  நவக்கிரஹ ஸ்தோத்திரம் புகழ்கிறது. அதற்கு ஆதாரம் இங்கே உளது. ஸோமனின் புதல்வன் புதன் (SON OF MOON) என்று.

இதில் பெரிய விஞ்ஞான உண்மையும் பொதிந்து கிடக்கிறது. அதாவது புதன் காரணமாக உருவானதே சந்திரன். அதாவது பூமியும் புதனும் மோதிய காலத்தில் துண்டாக உடைந்ததே சந்திரன். எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டுபிடிப்பர் ; இந்துக்கள் ரிக் வேதத்திலேயே சொல்லிவிட்டார்கள்!!!

இன்னொரு அதிசயமும் இந்த துதியில் உளது. தாவர வளர்ச்சிக்கு சந்திரன் காரணம் என்பது இந்துக்களின் வாதம். ஆகவே உலகிலேயே மிக அற்புதமான மூலிகைக்கும் சோமன் (சந்திரன்) என்று இந்துக்கள் பெயர் கொடுத்தார்கள் ; ஏனெனில் நிலவு போல 15 நாள் வள ருமாம் ; நிலவு போல 15 நாள் தே யுமாம் ; சோம மூலிகைக்கு பஞ்சதஸ சோமம் (திருவாளர் 15, மிஸ்டர் 15) என்று ஏன் பெயர் ஏற்பட்டது என்று ரிக் வேத வியாக்கியானத்தில் சாயனர் இயம்புகிறார்  இங்கு ரிக் வேதத்திலும் விவசாயம் பற்றிய பாடலுக்கு ‘சோமனின் மகன் புதன்’ என்னும் ரிஷி என்கின்றனர். ஆகவே தாவரத்துக்கும் சந்திரனுக்கும் தொடர்பு உண்டு என்பதை ரிக் வேதமே சொல்லிவிட்டது. இதையும் இதுவரை விஞ்ஞானிகள் கண்டு பிடிக்கவில்லை. இனிமேல் கண்டு பிடிப்பார்கள் அப்போது இந்துக்கள் மார் தட்டிக்கொள்ளலாம் .

Botanical Science in Bhagavad Gita

பகவத் கீதையில் கண்ணனும் இந்த மாபெரும் விஞ்ஞான உண்மையை உறுதி செய்கிறார் .

சோம ரசம் பற்றி இரண்டு குறிப்புகள் பகவத் கீதையில் வருகிறது

கீதை 9-20; 15-13

“நான் ரஸ மயமான சந்திரனாக இருந்து கொண்டு எல்லா பயிர்களையும் போஷிக்கின்றேன் ; அதாவது சத்துள்ளவையாக வளர்க்கின்றேன் “-15-13

புஷ்ணாமி செளஷதீ : ஸர்வா : சோமோ பூத் வா ரசாத்மக: 15-13

இங்கு கிருஷ்ணர்  சந்திரனை சொல்கிறாரா அல்லது சோம மூலிகையைச் சொல்கிறாரா என்ற வினா எழும். ஆனால் பிற்கால நூல்களிலும் ‘சந்திரன் – தாவர  வளர்ச்சி’ பற்றியே உளது

ரிக் வேதத்திலேயே சோம என்ற சொல்லுக்கு அர்த்தம் சொல்ல உரைகார்கள் திணறுகிறார்கள். அந்தச் சொல்லை சந்திரனுக்கும் சோம ரசத்துக்கும் பொருள் தரும்படி சிலேடையாகவும் புலவர்கள் பாடுகிறார்கள் !!

“மூன்று வேதங்களையும் கற்றவர்கள் வேள்விகளால் என்னை பூஜித்து ஸோம பானத்தால் பாவம் தோய்ந்தவர்களாய் ஸ்வர்கம் செல்லுதலை வேண்டுகிறார்கள்” – 9-20

சோமபா: பூதபா : யக்ஞய் ரிஷ்ட்வா ஸ்வர்கதிம் ப்ரார்த்தயந்தே  9-20

Soma Herb in Tamil Inscription

சோமபானம் என்பது மனதை சுத்தப்படுத்தும் அரு மருந்து , டானிக் என்று தமிழ்க் கல்வெட்டும் பகர்கிறது.

பராந்தக வீரநாராயணன் என்ற பாண்டிய மன்னரின் 45 ஆவது ஆட்சி ஆண்டில் வெளியான (ஒன்பதாம் நூற்றாண்டு) தளவாய்புரம் செப்பேடுகள் சோம பான மனோ சுத்தராகிய காடக சோமயாஜிக்கு முன்னொரு காலத்தில் கழுதூரில் உயிர் நீத்த பாண்டியன் ஒருவன் சோமாசிக்குறிச்சி என்னும் ஊரை தானம் கொடுத்தது குறித்து பேசுகிறது. ஆக ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழ் நாட்டில் சோம யாகம் நடந்ததும் அதற்காக அவருக்கு , அந்தப் பிராமணனுக்கு , சோமாசிக்குறிச்சி என்னும் ஊர் தானம் கொடுக்கப்பட்டதையும் அறிவதோடு ‘மனோ சுத்தர்’ ஆன அதிசயமும் தெரிகிறது. சோம பானம் குடித்தால் ஏற்படும் அற்புதங்கள் பற்றி ரிக்வேதத்தின் ஒன்பதாவது மண்டலம் முழுதும் காணக்கிடக்கிறது  .

சிந்து சமவெளி நாகரீகத்தை தோண்டி எடுத்த  மார்ஷல், மார்டிமர் வீலர், மகே போன்றோர் ஆரம்பத்திலேயே அதுபற்றி தவறான கருத்துக்களைக் சொல்லி திசை திருப்பிவிட்டதால் இன்று வரை அந்த எழுத்துக்களைப் படிக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அது போலவே சோம பானம் குறித்து 150 ஆண்டுகளுக்கு முன்னரே வெள்ளைக்காரர்களும் , மார்க்சீய வாதிகளும் தவறான கருத்துக்களைப் பரப்பியதால் இன்று வரை அந்தத் தாவரத்தை அடையாளமும் காணமுடியவில்லை. அதற்கு இணையான பானத்தைத் தயாரிக்கவும் முடியவில்லை ; கள் , சாராயம் , மதுபானம் குடித்தால் மனம் அசுத்தம் அடையும் ; சோமபானம் குடித்தால் மனம் சுத்தம் அடையும் ; காஞ்சி பரமாசார்யார் செய்த ‘விஜய யாத்திரை’ என்ற நூலில் சோமபான யாகம் செ ய்தோருக்கு  அரசனைப் போல வெண்கொற்றக்கு டை முதலியன தருவது பற்றி எழுதியுள்ளார்.

xxxx

இனி ரிக் வேதம் 10-101 துதியைக் காண்போம்

Andal and Rig Veda

முதல் மந்திரம் 10-101-1

“நண்பர்களே ஒரு மனத்துடன் விழித்து எழுங்கள் !” என்று அழைக்கிறார் ரிஷி.

“இனித்தான் எழுந்திராய்  ஈதென்ன பேருறக்கம்” — என்று திருப்பாவையில் ஆண்டாள் தூங்கும் ஆன்மாக்களைத் தட்டி எழுப்புகிறார். உத்திஷ்ட = எழுந்திரு என்று பகவத் கீதையில் 5 இடங்களில் அர்ஜுனனைத் தட்டி எழுப்புகிறார் பகவான் .

பகவத் கீதை – உத்திஷ்ட – 2-3; 2-37; 2-69; 4-41; 1-33

ஆக ரிஷியின் முதல் மந்திரம் அக்நியை ஏற்றி வழிபட எல்லோரையும் அழைப்பதால்  இதை ஞானத் தேடலாகவும் நோக்கலாம் !

(ரிக் வேத மந்திரங்கள் பலதரப்பட்ட மக்களுக்கு பல்வேறு அர்த்தம் (MYSTICAL, ETHICAL, MORAL, SPIRITUAL, PHILOSOPHICAL, LITERAL, SCIENTIFIC ) கொடுக்கும் வகையில் சிலேடைப் பாங்கில் அமைந்துள்ளன; ஆகையால் இலக்கிய ரீதியில் மட்டும் அர்த்தம் காண்பது பொருந்தா ; சங்கராசார்யார் போன்ற பெரியோர் இதன் ஒலிக்கே (Magical Sound Effect)  பலன் உண்டு; பொருள் காணத் தேவையில்லை என்பர்.

XXXX

இரண்டாவது மந்திரம் 10-101-2

“இன்பம் ஊட்டும் பாடல்களை இயற்றுங்கள் துணி நெய்பவனைப் போல பாடல்களை நூற்றுத் தையுங்கள் .

துடுப்புகளை கையில் எடுங்கள் ; கப்பல்களை/ படகுகளை விடுங்கள்

உபகரணங்களை, கருவிகளை (உழு படைகளை) ஆயத்தப் படுத்துங்கள்; அக்கினியை முன்னெடுத்துச் செல்லுங்கள் “.

இதில் பல்வேறு தொழிலில் உள்ளோருக்கு ரிஷி அறைகூவல் விடுப்பது போலத் தோன்றுகிறது

“பிராமணர்களே ; யாகம், யக்ஞம் செய்யுங்கள்;

வணிகர்களே , திரைகடல் ஒடித் திரவியம் ஈட்டுங்கள் ;

உழவர்களே , உழுவதற்குப் புறப்படுங்கள்!”

XXX

மூன்றாவது மந்திரம்

ஏர்களை இணையுங்கள் ; நுகத்தைப் பூட்டுங்கள் ; உழுத நிலத்திலே விதைகளைத் தூவுங்கள்  எங்கள் பாட்டுக்களால் அறுவடை பெருகட்டும் ; முதிர்ந்த  தானியத்திடையே அரிவாள் செல்க”.

எனது உரை

இதுவரையுள்ள மூன்று பாடல்களில் மிக முக்கியமான கருத்துக்கள் உள்ளன :

1. இது உழவர் ஓதை ; அதாவது உழவர்கள் உழும்போது , அறுவடை செய்யும்போது பாடும் பாடல்கள். மதர்  இந்தியா Mother India, Hindi Film போன்ற இந்தி சினிமாக்களைப் பார்த்தோருக்கு இத்தகைய பாடல்கள் புரியும் ஆக ரிக் வேத காலத்திலே யே உழவர் ஒதை Farmers Songs தோன்றிவிட்டது.

2. விவசாயத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் எடுத்துரைக்கிறது; உழுதல், வரப்பு கட்டுதல், விதை விதைத்தல், அறுவடை செய்தல் ……

Musical Effect on Plants

3.பாடல்கள் மூலம் அறுவடை பெருகும் என்பது இசைக்குள்ள சக்தியைக் காட்டுகிறது

இந்தத் துறையில் இந்துக்களை மிஞ்ச எவராலும் முடியாது . அமிர்தவர்ஷனி ராகத்தின் முலம் முத்துசாமி தீட்சிதர் மழை பெய்வித்தார்; தான்சேன், , ராகத்தின் மூலம் அக்கினியை உண்டாக்கினார்; ஆதி சங்கரர் கனக தாரா தோத்திரம் மூலம் தங்க மழை பொழியச்  செய்தார். ரிக் வேத விவசாயிகள் ‘பாடல்கள் மூலம் அறுவைடையை பெருக்கினர்’ என்பது மூன்றாவது மந்திரத்தில் தெரிகிறது .

4. பெயர் தெரியாத காரணத்தாலோ, அல்லது அவர்கள் பயன்படுத்திய முக்கிய, புகழ்பெற்ற

 சொற்றொடர்களாலோ  (Cliché) புலவர்களுக்குப் பெயரிடும் மரபு ரிக் வேதத்தில் வருகிறது. அதற்கு எடுத்துக் காட்டு இந்தக் கவிதை; ‘சோமன் மகன் புதன்’ என்ற புராணக்கதையை இங்கே புலவர் பெயர்களாகத் தந்துள்ளனர்.

Sangam Age Tamils Copied Rig Veda

ரிக் வேதத்தைத் தொகுத்து நமக்கு அளித்த வியாசர் என்ன என்ன செய்தாரோ, அதை அப்படியே சங்க நூல்களை தொகுத்தோரும் செய்தனர். ரிக் வேத வியாசருக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்குக்குப் பின்னர்!

தேய் புரிப்  பழங்கயிற்றனார் , செம்புலப் பெயல் நீற்றனார் , காக்கை பாடினியார் என்றெல்லாம் காரணப் பெயர்கள், ரிக் வேதத்தை அடி ஒற்றி எழுந்தனவே. இது போல தமிழிலும் ரிக் வேதத்திலும் சுமார் இருபது பெயர்கள் உண்டு.

புற நானூற்றுப் புலவர் பாடல்களைத் தொகுத்தோர் செய்த, அகநானூற்றுப் பாடல்களைத் தொகுத்தோர் செய்த, அற்புதங்களை எல்லாம் முன்னரே பட்டியலிட்டு விட்டேன். எண்கள் வாரியாக அகத்திணைப் பாடல்களை அமைத்தல், இரங்கற் பாடல்களை ஒருசேரத் தொகுத்தல், வெள்ளி கிரகம் பற்றிய பாடல்களை அடுத்தடுத்து வைத்தல், மிகப் பழங்காலப்  பாடல்களை முன்னே வைத்தல், முதலிய பல விஷயங்களைக் கண்டோம். இது வியாசர் பின்பற்றிய முறை. மரணம், ஈமச் சடங்குகள், கல்யாணம், கிரஹப் பிரவேசம், உழவர் ஓதை முதலியவற்றை பத்தாவது மண்டலத்தில் வைத்தார் வியாசர். இதை அறியாத மாக்ஸ்முல்லர் கும்பல், அசிங்கப்பட்ட மார்க்ஸீயக் கும்பல், இவை எல்லாம் கடைசி காலப் பாடல்கள் என்று உளறிக்கொட்டி கிளறி மூடி இருக்கின்றனர்.

இந்தப் பயல்கள் தமிழ் இலக்கியத்தையும் விடவில்லை. கலித்தொகை, திருமுருகாற்றுப்படை, பரிபாடல் முதலியன பிற்கலத்தியவவை என்று எழுதிவிட்டனர். இவர்களுக்குப் புரியாத விஷயம் என்ன தெரியுமா?

 நமது இந்துப்பவர்கள் , சில சில விஷயங்களை சொல்லும்போது,  சில பாணியை, ஒரு ஸ்டைலைப் (certain genre, particular style) பின்பற்றுவர். இதற்கு சிறந்த எடுத்துக் காட்டு இந்திய கல்வெட்டுகள். அவற்றின் பாஷை, பேச்சு நடையிலும் அதே கால புலவர் பாடல்கள் இலக்கிய நடையிலும் இருக்கும். இது தெரியாத அசட்டுப் பிச்சுக்கள் உளறிக்கொட்டி வைத்துள்ளன.

அதுகளைக் கேளுங்கள்:

ஏண்டா மண்டு ! தமிழ்க் கல்வெட்டு ‘கொச முச’ நடையில் இருக்கும்போது எப்படியடா அற்புதமான இலக்கிய நடைப் பாடல்கள் எழுந்தன? என்று .

இரண்டும் ஒரே காலத்தில் இயங்க முடியும். ஒன்று பேச்சு நடை; மற்றது இலக்கிய நடை !

மூன்றாவது பகுதியில் மேலும்பல அதிசய விஷயங்களை திருக்குறளுடன் ஒப்பிட்டுக் காண்போம் –தொடரும் TO BE CONTINUED…………………………..

tags- ரிக் வேத,  தாவரவியல், செய்திகள், உழவுக்கும் தொழிலுக்கும் 2

ரிக் வேதத்தில் மிஸ்டர் கண்ணாயிரம் (Post No.10,184)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,184

Date uploaded in London – 7 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

குறு மாணக்குடி கண்ணாயிரநாதர் , சஹஸ்ர நேத்ர ஈஸ்வரர்

1097       முன்னொருகாலத் திந்திரனுற்ற முனிசாபம்

பின்னொருநாளவ் விண்ணவரேத்தப் பெயர்வெய்தித்

தன்னருளாற்கண் ணாயிரமீந்தோன் சார்பென்பர்

கன்னியர்நாளுந் துன்னமர்கண்ணார் கோயிலே. 1.101.7

—Tevaram, Sambandar

நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ( 1954-1986) வசித்த மதுரை மாநகரில் கண்ணாயிரம் என்ற பணக்காரர் ஒருவர் இருந்தார். அவரை மறக்க முடியாமல் போனதற்கு இந்த நிகழ்ச்சி காரணம். எங்கள் வீட்டில் மாலை நேரத்தில் அரட்டை அடிக்க கூடும் கூட்டம் மிகப்பெரிது. சில நேரங்களில் ஆளுக்கு ஒரு தகர டப்பா , கையில் கிடைத்த குச்சிகளை வைத்து அடித்து சினிமாப் பாட்டுகளைப் பாடுவோம். சிலர் அமைதியாக வேடிக்கை பார்ப்பார்கள். மதுரை வடக்கு மாசி வீதி 20-ம் எண் வாடகை வீட்டில் இது நடக்கும். திடீரென்னு நிறுத்திவிட்டு வேதம் கீதை, சீன கம்யூனிஸ்ட், நேருஜி, காந்திஜி பற்றி விவாதிப்போம். இந்த அறைக்கு ‘பகுத்தறிவுப் பாசறை’ என்று பெயர் வேறு !!

நாலு வீடு தள்ளி வசித்த ரஷ்ய கம்யூனிஸ்ட் (அக்கட்ச்சிக்கு வலது கம்யூனிஸ்ட் என்று பெயர்) டாக்டர் எஸ்.ஆர்.கே வருவார். (கம்பனும் மில்டனும் ஆராய்ச்சிக்காக டாக்டர் பட்டம் பெற்றவர் Dr S Ramakrishnan. முற்காலத்தில் கம்யூனிஸ்ட் பிரசாரம் செய்ததற்காக மதுரைக் கல்லூரி பேராசிரியர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்). அவரும் எங்களுடன் வாக்குவாதத்தில் இறங்குவார், திடீரென்று சேதுபதி உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்வி.ஜி.சீனிவாசன் , கி.வா .ஜகந்நாதன் போன்ற தமிழ்ப் பேரறிஞர்களை க் கூட்டிக்கொண்டு உள்ளே நுழைவார். எல்லோரும் ‘கப் சிப்’ என்று அடங்கி நைசாக நழுவி விடுவோம்.

என் தந்தை வந்து அவர்களுடன் பேசுவார் . சிருங்கேரி மஹாஸன்னிதானம் விஜயம் செய்தவீடு. புதுக் கோட்டை  கோபால கிருஷ்ண பாகவதர் பஜனை செய்த வீடு. காஞ்சி  பரமாசார்ய சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரத காலத்தில் சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தங்கி இருந்ததால், எங்கள் வீட்டின் வழியாக மீனாக்ஷி  கோவிலுக்கு நடந்து செல்லுவார்.

ஓ, இதுதான் சந்தானம் ( V Santanam, Editor in Chief, Dinamani, Madurai) வீடா?  என்று கேட்டுவிட்டு ஒரு சில வினாடிகள்  நின்று ஆசீர்வாதம் செய்துவிட்டுப் போவார். இப்படிப்பட்ட லக்கி lucky  வீட்டின் வாடகை மாதத்துக்கு 60 ரூபாய்தான். அந்த வீட்டுச் சொந்தக்காரரான பைரவ பிள்ளையும் தினமணியில் என் அப்பாவின் கீழ் ‘சப் எடிட்டரராக’ இருந்ததால் வாடகையை உயர்த்த முடியாமல் தவித்தார் . இப்பேற் பட்ட புகழுடைய வீட்டுக்கு நிறைய பேர் ‘ஓஸி’க் காப்பி சாப்பிடவும் வருவார்கள். என் அம்மா போடும் காப்பி அவ்வளவு பிரசித்தம்!!

தினமும் வரக்கூடிய ராவ் என்ற இளைஞருக்கு மாலைக் கண் நோய்; மாலை வந்துவிட்டால்  மெதுவாக ‘நான் போய்ட்டு வரேன்’ என்று கிளம்பிவிடுவார். கண் தெரியாதபோதும் அவருக்கு ஒரு அபூர்வ சக்தி உண்டு. மதுரையில் அந்தக் காலத்தில் கார் வைத்திருப்பவர்கள் மிகவும் குறைவு. ‘அவரிடம் கார்கூட இருக்கிறது’ என்று சொன்னால் அவர் லட்சாதிபதி- குபேரன் – ன்று பொருள். மேலே குறிப்பிட்ட ராவ்ஜி, எந்தக் கார் போனாலும் அதன் owner ஓனர் / சொந்தக்காரர் பெயரைச்  சொல்லி விடுவார். இறைவனின் கருணைதான் என்னே!! ஒரு அங்கத்தின் சக்தியைக் குறைத்தால் மற்றோரு உறுப்பின் சக்தியை அதிகரித்து விடுவார். அந்த ராவ்ஜி சொல்லும் ஒரு காரின் ஓனர் owner பெயர் கண்ணாயிரம். மதுரையில் ஒரு சினிமா கொட்டகையின் சொந்தக்காரர்.

xxxx

மிஸ்டர் கண்ணாயிரம் Mr One Thousand

அவர் சொல்லும் மிஸ்டர் கண்ணாயிரம் பற்றி நான் வியக்கும் விஷயம் கண்ணாயிரம் என்றால் நல்ல பெயர் இல்லையே? இந்திரன் பற்றிய கதையில் அவருக்கு ஆயிரம் கண் கிடைத்த கதை அசிங்கமாக இருக்கிறதே. எப்படி இப்படியெல்லாம் பெயர்கள் வைக்கிறார்கள்? என்று. இப்பொழுது ரிக் வேதத்தில் உள்ள பத்தாயிரம் மந்திரங்களில் 9300 படித்தவுடன் புது அர்த்தம் விளங்குகிறது. அதாவது இந்திரன் பின்னால் மன்னிப்புக் கேட்டு நல்லவர் ஆகிவிட்டார். அவருக்கு நல்ல கண்- ஞானக் கண்- கொடுத்த இறைவனின் பெயரும்- சிவ பெருமானின் பெ யரும் கண்ணாயிரம்தான். இதோ விவரம்

இந்திரன், அஹல்யா என்ற அழகி வீட்டுக்குப் போனான். நடுக்காடு . அவருடைய கணவர் கௌதம ரிஷி ஆற்றில் குளிக்கப் போனார். இந்திரனுக்கு சபலம் தட்டியது. அவள் மீது பாய்ந்தான். அவளும் மறுப்பு தெரிவிக்கவில்லை; கணவர் வரும் நேரத்தை அறிந்து  பூனை போல நைசாக நழுவிச் சென்றான். இதை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை அருகில் ஓவியமாக தீட்டிய செய்தி பரிபாடலில் உள்ளது. ஒரு பட்டிக்காட்டு பெண், கணவனிடம் இது என்ன அய்யர் ஆஸ்ரமத்தில் ஒரு பூனை பயந்து கொண்டே ஓடுகிறது ? என்று கேட்க, பட்டிக்காட்டான் பதில் சொல்கிறான்-  அட மூமே, இந்திரன் -அஹல்யை கதை உனக்குத் தெரியாதா என்று. அவ்வளவுக்கு தமிழர்களுக்கு புராணம் அத்துப்படி! 2000 வருஷங்களுக்கு முன்னரே.

xxx

கவுதம ரிஷி திடீரென்று வீட்டுக்குள் வந்தார். மனைவியின் நிலையைக் கண்டார். விஷயம் புரிந்தது. மனைவியை அதட்டினார். அவளுக்கு சித்தப் பிரமை பிடித்தது; கல் போல உட்கார்ந்தாள். மானஸீகமாக மன்னிப்புக் கேட்டாள் ; கெளதம ரிஷியும் மனம் இரங்கினார் ; மன்னிப்பு கொடுத்தார். ‘உலக மஹா உத்தமன், இந்த இப்பிறவியில் சிந்தையாலும் வேறொரு பெண்ணைத் தொடேன் என்று வீர சபதம் செய்த இராம பிரான் ,காலடி உன் மீது படும்போது உன் மன நோய் அகலும். நீ மீண்டும் அழகி ஆவாய்’ என்கிறார் கவுதம ரிஷி.

இதைக்  கம்பன் ‘உன் கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்கு கண்டேன்’ என்று பாட அதைக் கண்ணதாசனும் சினிமாப் பாட்டில் நுழைத்த கதையும்  நாம் அறிந்ததே. ‘அதே நேரத்தில் இந்திரன் உடலில் ஆயிரம் பெண் உறுப்புகள் தோன்றுக’ என்றும் முனிவர் சாபம் இட்டார் . அவன் உடம்பில் ஆயிரம் பெண் உறுப்புகள் தோன்றின. பின்னர் பல கோவில்களுக்குச் சென்று மன்னிப்பு கேட்கவே சிவன் , அந்த இந்திரனின் கண்களை சாதாரணக் கண்களாக மாற்றியதாக கதையும் தல வரலாறும் உண்டு.

Xxxx

1000 கண்கள்!!

இந்த இடத்தில் 1000 கண்கள் பற்றி சில சுவையான விஷ்யங்களைக் காண்போம். (ஆயிரம் கண் போதாதடி வண்ணக் கிளியே, குற்றால அழகை நாமும் கண்பதற்கு வண்ணக் கிளியே!என்று  சிவாஜி கணே சன் பாடிய சினிமாப்பாட்டைச் சொல்லவில்லை )

அஹல்யா கல் ஆனாள் என்று சொல்லுவது புராண ஸ்டைல் Purana Style. அதாவது அந்த இன்சிடென்ட் incident  காரணமாக அவள் மன நோயாளி ஆனால் ; ராம பிரான் போன்ற புருஷோத்தமன் பாத துளி பட்டவுடன் புனிதை ஆனாள் . இது போலவே இந்திரன் உடலில் ஆயிரம் பெண் உறுப்புகள் வந்தன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவருக்கு கண்ணாயிரம் என்ற பெயர் இருந்தது உண்மையே. ஏனெனில் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் திருஞான சம்பந்தரும் முதல் திருமுறையில் கண்ணாயிரேஸ்வரர் கோவிலில் பாடி இருக்கிறார்.. ஆயினும் பெண் உறுப்பு போன்ற கதைகளை பிற்காலத்தில் உபன்யாசம் சொல்லும் பவுராணிகர்கள், சுவையை அதிகரிக்க சேர்த்துவிட்டார்கள்.

இதற்கு ஒரு எடுத்துக் காட்டும் தருகிறேன். ரிக் வேதத்தில் அத்ரி முனிவர் சூரியகிரகணப் பாடல் உளது; மஹாபாரதத்தில் அர்ஜுனன், ஜெயத்ரதனை  வீழ்த்திய சம்பவத்தில் கிருஷ்ணன், சாதுர்யமாக சூரிய கிரஹணத்தைப் பயன்படுத்திய சம்பவமும் உள்ளது (விவரங்களுக்கு என் ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் காண்க.)

கிரஹணத்தைத் துல்லியமாக கணக்கிட்டு பஞ்சாங்கத்தில் குறித்தபோதும், ராகு என்னும் பாம்பு சந்திர சூரியர்களை விழுங்குவதாக 2000 ஆண்டு பழமை உடைய  காளிதாசன் காவியத்திலும் சங்க இலக்கியப் பாடல்களிலும் எழுதிவைத்தனர். அதாவது விஞ்ஞான உண்மைகளை பாமரர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்; அதற்காக இப்படி கதை ரூபத்தில் சொல்லி விடுவார்கள். இதே போல இந்திரன் உடம்பில் ஏதேனும் பச்சை குத்தி இருப்பார்கள். எங்கள் லண்டனில் யாரேனும் செக்ஸ் சில்மிஷம் செய்து தண்டிக்கப்பட்டால் அவரை REGISTER OF SEXUAL OFFENDERS செக்ஸுவல் அஃ ப்பண்டர் — செக்ஸ் குற்றவாளிகள் – பட்டியலில் வெளியிடுவார்கள் அதே போல அக்காலத்தில் குற்றவாளிகள் உடலில் செம்புள்ளி- கரும்புள்ளி குத்தி, மொட்டையடித்து , கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் விடுவார்கள். இப்படி இந்திரனுக்கும் உடலில் நிறைய பச்சை குத்தி இருப்பார்கள் போலும்.

இதை நான் சொல்லுவதற்கு ரிக் வேதத்தில் ஆதாரம் உளது. ஆயிரம் போன்ற  எண்களை அவர்கள் ‘நிறைய’ என்ற பொருளில் பயன்படுத்துகின்றனர். வருணனுக்கு 1000 கண்கள் உண்டு. அவன் மறைவாக மனிதர்கள் செய்யும் தீய செயல்களைக் கண்டுவிடுவான் என்று ரிக் வேதம் இயம்புகிறது. அக்கினி பகவானுக்கு 1000 கண்கள் உண்டு என்று ரிக் வேத மந்திரம் கூறுகிறது.

எல்லோரும் அறிந்த தினமும் கோவில் களிலும் பிராமணர்  வீடுகளிலும் ஒலிக்கும்

புகழ்பெற்ற புருஷ சூக்த மந்திரத்தில் (10-90) இறைவன் என்னும் மஹா புருஷனை 1000 கண்கள் உடையவன், 1000 கைகள் உடையவன், 1000 பாதங்கள் உடையவன் என்று ரிஷிகள் பாடுகின்றனர். அதே பத்தாவது மண்டலத்தில் இந்திரனின் வாயில் 1000 ஓநாய்கள் இருப்பதாக ஒரு ரிஷி பாடுகிறா ர் ; ஓநாய் என்பதை 1000 கழுதைப் புலிகள் என்று கிரிப்பித் மொழிபெயர்க்கிறார். அதே மண்டலத்தில் ரிஷிகளுக்கு அக்கினி பகவான் 1000 பசுக்களை அளிப்பதாகச் சொல்கிறார். சுருங்கச் சொல்லின் சஹஸ்ர என்ற 1000 ‘நிறைய’ என்ற பொருளில் வருகிறது. இதை நூற்றுக் கணக்கான ரிக்வேத துதிகளில் காணமுடிகிறது. ஆகவே ‘1000= நிறைய’ என்பதே பொருள். தசரதனுக்கு 60,000 பொண்டாட்டிகள் என்று புராணிகர் உபன்யாசத்தில் சொல்லும்போதும் அவனுக்கு ‘அதிகம்’ பெண்கள் மனைவியாகவும் அந்தப்புர அழகிகளாகவும் இருந்தனர் என்பதைக் குறிப்பதே.

XXX

கண்ணாயிரேஸ்வரர் கோவில்

மாயவரம்- வைத்தீஸ்வரன் கோவில் பாதையில் கண்ணாயிரேஸ்வரர் கோவில் உளது. இங்குதான் இந்திரனுக்கு நார் மல் கண்கள் கிடைத்தன; பெண் உறுப்பு அடையாளங்கள் மறைந்தன என்று தல புராணம் கூறும்; நின்ற சீர் நெடுமாறன் காலத்தில், மஹேந்திர பல்லவன் ஆட்சிக் காலத்தில்  1400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருஞான சம்பந்தர் 1000 கண்கள் பற்றிப் பொதுவாகப் பாடுகிறார் :-

குறு மாணக்குடி கண்ணாயிரநாதர் , சஹஸ்ர நேத்ர ஈஸ்வரர்

1097       முன்னொருகாலத் திந்திரனுற்ற முனிசாபம்

பின்னொருநாளவ் விண்ணவரேத்தப் பெயர்வெய்தித்

தன்னருளாற்கண் ணாயிரமீந்தோன் சார்பென்பர்

கன்னியர்நாளுந் துன்னமர்கண்ணார் கோயிலே.    1.101.7

காம வயப்பட்டு அகலிகையை நாட , அதனால் கெளதம முனிவரின் சாபம் பெற்ற இந்திரன், அது தீரும் வண்ணம் பூஜித்து வேண்ட , அந்த சாபத்திரிலிருந்து விடுவித்துக் கண்ணாயிரம் என்ற பெயரையும் ஈ ந்த , ஈசன் வீற்றிருப்பது, கன்னிப் பெண்கள் ஏற்றித் துதிக்கும் கண்ணார் கோயில் ஆகும்

இது போல ஆயிரம் தாமரைகளால் பூஜித்த திருமாலுக்கு ஒரு தாமரை போதாமல் போகவே கண்ண்ணையே  சிவபெருமானனுக்கு திருமால் கொடுத்த  கதைகளும் உண்டு .

திருக்காரவாசல் ; திருக்காறாயில்

இதே போல அஹங்காரத்தினால் சிறிது கா ல த்துக்கு  படைப்புத் தோளிலிருந்து சஸ்பெண்ட் செய்துவைக்கப்பட்ட பிரம்மதேவன் மன்னிப்பு கேட்கவே அவருக்கு ஆயிரம் கண்களுடன் தோன்றி பதவியை மீண்டும் கொடுத்த கதை திருக்கார் வாசல் தல் த்துடன் தொடர்புடையது

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் – கண்ணாயிரநாதர், தேவியார் – கயிலாயநாயகியம்மை.

 இங்கு சிவனுக்கே ஆயிரம் கண்ணன் என்ற பொருளது.

ஆகவே ஆயிரம் என்பதன் பொருளை உணர்ந்து நாம் வணங் குவோமாகுக

–SUBHAM—

 tags – ரிக் வேத,  கண்ணாயிரம்,கண்ணாயிரநாதர், கண்ணாயிரேஸ்வரர்

பாரதி பாட்டில் ரிக் வேத வரிகள் (Post 10081)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,081

Date uploaded in London – 11 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

‘திக்குகள் எட்டும் சிதறி’ என்னும் பாரதியாரின் பாடல் ரிக் வேதத்தில் ‘மருத்’ MARUTS என்னும் காற்று தேவதைகளின் துதிகள் போல இருக்கின்றன. பாரதியார் காசியில் தங்கிய காலத்தில் வேதத்தில் புலமை பெற்றிருக்க வேண்டும். மருத் என்ற சொல்லில் இருந்து மாருதி ( வாயுதேவன் மகன் அனுமன் மாருதி என்ற சொல் வந்தது)

எடுத்துக் காட்டாக

எனக்கு வேண்டும் வரங்களை

     இசைப்பேன் கேளாய் கணபதி!

மனத்திற் சலனமில்லாமல்,

     மதியி லிருளே தோன்றாமல்,

நினைக்கும் பொழுது நின்மவுன

     நிலைவந்  திடநீ செயல்வேண்டும்

கனக்குஞ் செல்வம் நூறுவய   

     திவையுந் தர நீ  கடவாயே.

என்று பாரதியார் பாடுகிறார் . நான்கு  வேதங்களிலும் உள்ள காயத்ரீ  மந்திரத்தில் எல்லோரும் அனுதினம் வேண்டுவது ‘மனதில் ஒளி உண்டாகுக; அதாவது ஞான ஒளி உண்டாகுக’ என்பதே. அதை இந்தப்பாட்டின் மூன்றாவது வரியில் காண்கிறோம். ‘கனக்கும் செல்வம், நூறு வயது’ என்ற வரிகள் ரிக் வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகிறது. பிராமணர்கள் தினமும் சொல்லும் ‘பஸ்யேம சரதஸ் சதம்’ என்ற யஜுர் வேத மந்திரத்திலும் வருகிறது 

பாரதியாரே காயத்ரீ மந்திரத்தை பாஞ்சாலி சபதத்தில் அழகாக மொழிபெயர்த்துள்ளார்

எல்லா இந்துக்களுக்கும் ‘ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் சவிதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹீ’ என்ற காயத்ரி மந்திரம் தெரியும். இதை அவர் அழகிய தமிழில்


“செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்—அவன்
எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” —

என்று மொழி பெயர்த்தார். சம்ஸ்கிருதம் தெரியாதவர்களும் இந்தத் தமிழ் மந்திரத்தைச் சொன்னால் அறிவு தெளிவு பெறும். நினைத்ததெல்லாம் கைகூடும்.

பாரதியார் பாடல்களில் வேத உபநிஷத் வரிகள் அப்படியே மொழி பெயர்க்கப்பட்டதை முந்தைய கட்டுரைகளில்  (கீழே இணைப்புகளைக் காண்க) கொடுத்தேன். இங்கு மருத் பற்றிய வரிகளை மட்டும் ஒப்பு நோக்குவோம்

அவரே ‘தமிழில் பழ மறையைப் பாடுவோம்’ என்றும் ‘வேதம் என்று வாழ்க என்று கொட்டு முரசே’ என்றும் பாடுவதாலும் பழைய  மறையை மொழி பெயர்த்ததை சொல்லாமல் சொல்லுகிறார் .

பாரதியாரின் மழை , புயற் காற்று பாடல்களில் ‘மருத்’ துதிகளின் தாக்கத்தைக் காணலாம்:-

திக்குகள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததிங்கிடத்தோம்-அண்டம்
சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று-தக்கத்
தாம்தரிகிடத்தாம் தரிகிடத்தாம் தரிகிடத்தாம் தரிகிட

வெட்டி யடிக்குது மின்னல் கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம்-கூ
கூவென்று விண்னைக் குடையுது காற்று
சட்டச்சடசட சட்டச்சட டட்டா-என்று
தாளங் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய –மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா

அண்டம் குலுங்குது தம்பி-தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்-திசை
வெற்புக் குதிக்குது வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்-என்ன
தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்
கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்

Xxxx

ரிக் வேத மந்திரங்கள் இதோ:–

ரிஷி கௌதம ராஹுகணன் 1-85

1-85-1

பாறைகளைப் பொடிப்பொடியாக்குகிறான் மருத்

1-85-8

போர் வீரர்களைப் போலும், தீரர்களைப் போலும் போராடுகிறார்கள். எல்லாப் பிராணிகளும் மருத் தேவர்களைக் கண்டு அஞ்சுகின்றனர் .

1-85-10

மருத்துகள் தங்கள் பலத்தால் கிணறுகளை மேலே உயர்த்தினார்கள்; மலையைப் பிளந்தார்கள்;

1-85-11

கனலாகச் சென்ற மேகத்தை  இங்கே செலுத்தினார்கள்; நீர் ஊற்றைப் பொழிந்தார்கள்

1-86-10

எங்கும் பரவிய இருளை அகற்றுங்கள்;

1-87-1

பகை அழிப்பவர்கள் ; மிகுந்த பலம் வாய்ந்தவர்கள்; பலவித சப்தம்/ தீம் தரிகிட  தாளம் / உண்டாக்குவோர்;

1-87-2

பறவை போல மேகங்கள் எங்கும் செல்வது உங்களால்தான்.மேகத்தோடு மேகம் மோதி மழை  கொட்டுகிறது.

1-87-3

கணவன் பிரிந்து சென்ற பின்னர் நடுங்கும் மனைவி போல பூமி நடுங்குகிறது.

1-87-6

மருத்துக்கள் சூரிய கிரணங்களுடன் சேர்ந்து மனிதர்களுக்கு நன்மை செய்ய மழையைக் கொட்டுகிறார்கள்

1-88-1

நீங்கள் முழங்கும் கீதங்கள் ! மின்னல் என்னும் ஈட்டி உடையோர்; பறக்கும் குதிரைகள் ; பறவைகள் போல பறந்து வந்து உணவு கொடுங்கள் / தானியம் விளையட்டும்

1-88-2

தேர் சக்கரத்தால் பூமியை அடிக்கிறார்கள்; தங்கம் போல பளபளக்கும் ஆயுதம்/ மின்னல் ஏந்தி வந்து பகைவர்களை/ வறட்சி கொல்லுங்கள்

1-88-3

உங்கள் உடல் உறுப்புகளில் ராஜ்யத்தை வெல்லும் ஆயுதங்கள் உண்டு

1-88-5

தங்கச் சக்கர தேரும் இரும்பு ஆயுதமும் கொண்டு பகையை வெல்லுகிறீர்கள்

XXX

அகஸ்தியர் பாடிய பாடல்களில் சில மந்திரங்களைக் காண்போம்

1-166-4

உங்கள் குதிரைகள் தங்கள் திறத்தால் உலகங்களை சுற்றுகின்றன, உங்கள் வருகையால் எல்லா உலகங்களும் மலைகளும் கலங்குகின்றன. போரில் ஈட்டியால் குத்தப்படுவது போல மழை பொழிந்து தள்ளுகிறீர்கள் .

1-166-10

உங்களுடைய ஆயுதங்களின் தாரைகள் கூர்மையாக இருக்கின்றன.

1-167-10

மருத்துக்களே ! அருகிலோ தொலைவிலோ  உங்களை விட எவனும் பலத்தின் எல்லையை அடையவில்லை; நீங்கள் தீரத்திலும், திண்மையிலும் உயர்ந்து, பகைவர்களைக் கடல் போல வெல்கிறீர்கள்

1-168- 4

பிரகாசிக்கும் கண்கள் உள்ள மருத்துக்கள் (மின்னல், இடி) திறமான மலைகளையும் ஆட்டினார்கள்

1-168-5

மின்னல் ஆயுதம் உடைய மருத்துக்களே !தாடை களின் நடுவில் நாக்கு இருக்கிறது. உங்களை யார் அப்படி நாக்கு போல ஆட் டுகிறான்?

XXXX

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்….. என்று துவங்கும் ஊழிக் கூத்து பாடலிலும் சில வரிகள் அப்படியே மருத் தேவர்களைப் பற்றியதே. ரிக் வேதத்தில் இந்திரன் பற்றிய பாடல்களிலும் இதைக் காணலாம்

XXXX

பர்ஜன்ய என்ற மழைக் கடவுள் பாடல்களிலும் மழையின் ,

காற்றின் கோர தாண்டவத்தைப் படிக்கலாம்.

XXXX

34. ஊழிக் கூத்து

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாட-பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக்-களித்
தாடுங் காளீ!சாமுண் டீ!கங் காளீ!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

ஐந்துறு பூதம் சிந்திப் போயொன் றாகப்-பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக-அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத்-தோடே
முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

பாழாம் வெளியும் பதறிப் போய்மெய் குலையச்-சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய-அங்கே
ஊழாம் பேய்தான்”ஓஹோ ஹோ”வென் றலைய;-வெறித்
துறுமித் திரிவாய்,செருவெங் கூத்தே புரிவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

சத்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச்-சட்டச்
சடசட சட்டெனுடைபடு தாளங்கொட்டி-அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல் போய் எட்டித்-தானே
எரியுங் கோலங் கண்டே சாகும் காலம்.
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

காலத் தொடுநிர் மூலம் படுமூ வுலகும்-அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும்-சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும்-கையைக்
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

தமிழில் பழ மறையைப் பாடுவோம்: பாரதியார்

https://tamilandvedas.com › தமிழ…

  1.  

11 Dec 2014 — “செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்—அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” — (காயத்ரி மந்திரம்)


Tagged with ஆதித்ய – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ஆ…

  1.  

29 May 2016 — ‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் — அவன் … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). Contact : swami_48@yahoo.com.


கண்ணதாசன் பாடல்களில் ரிக்வேத வரிகள் ! (Post No …

https://tamilandvedas.com › கண்…

  1.  

7 Aug 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com. உலகிலேயே பழமையான சமய நூல் ரிக்வேதம் … ‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத்

—SUBHAM—-

tags – பாரதி, ரிக் வேத, வரிகள், ‘திக்குகள் எட்டும் , ‘மருத்’ ,MARUTS ,காற்று, வெடிபடு மண்டத் திடிபல

ரிக் வேதத்தில் என்ன அதிசயம் இருக்கிறது?- PART 3 (Post No.10049)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,049

Date uploaded in London – 3 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

37. ரிக் வேதம் முழுதும் இந்திரனை அக்கினியோடும், மித்ரனை வருணனோடும் ஜோடி சேர்த்துப் பாடுகின்றனர். சிலர் இதை (Kinetic and potential energy) சிவன் – சக்தி என்றும், பேட்டரியில் (Negative and Positive points in electric equipment) உள்ள நெகட்டிவ், பாசிட்டிவ் போன்றது என்றும் வருணிக்கின்றனர்.(INDRA-AGNI;  MITRA-VARUNA)

38. தங்கம் பற்றி வேத கால முனிவர்கள் பாடுவதைப் பார்த்தால் மிகவும் செல்வச் செழிப்புள்ள சமுதாயம் என்று தெரிகிறது.

39. அத்ரி பற்றிப் பாடும் பாடல்களில் எல்லாம் சூர்ய கிரஹணக் குறிப்பு வருகிறது. அவர்தான் முதல் வான சாஸ்திரியோ!

40.விஷ்ணு, மூன்றடியால் உலகை அளந்த கதையை ரிக் வேத முனிவர்கள் பாடுகின்றனர். மநு என்ற பெயரும் , குறிப்பாக வைவஸ்வத மனு பெயரும் வருகின்றன. அப்படியானால் மஹா பிரளயம், வாமனாவதாரம் ஆகியன ரிக் வேதத்துக்கும் முந்தியதோ !

41.நிறைய ஆறுகள் பற்றிப் பாடும் புலவர்கள் 99 ஆறுகளை இந்திரன் பருந்து போலக் கடந்தான் என்றும் பாடுகின்றனர். பெரும் பூகோள நிபுணர்களோ!! . வெள்ளைக்கரர்களுக்கு சில ஆறுகளின் பெயர்கள் மஹா குழப்பத்தை உண்டாக்கி, தமாஷான உரைகளைத் தந்துள்ளனர். “நான் ஒரு முட்டாளுங்க நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க என்ற சந்திரபாபு பாடிய” திரைப்படப் பாடலை நினைவு படுத்துகின்றனர்

42. அஸ்வினி தேவர்கள் என்ற இரட்டையர் பற்றிய அற்புத விஷயங்களை எழுத நிறைய கட்டுரைகள் தேவை. தனியாகப் பார்ப்போம். ஆனால் பெரும்பாலான ரிஷிகள் அவர்களுடைய அற்புதங்களைக் குறிப்பிடுகின்றனர்.

43. பத்து ராஜா யுத்தம் மற்றும் அதில் வெற்றி வாகை சூடிய சுதாஸ பற்றிப் பலரும் பாடுகின்றனர். ஒரு காலக்கோடு வரைந்து சுதாஸுக்கு முந்தியோர், பிந்தியோர் என்று பிரித்து ஆராய வேண்டும். ஏனெனில் 400 க்கும் மேலான புலவர்கள் ரிக்வேதத்தில் உள்ளனர். இதில் மட்டுமே 10,000 மந்திரங்கள் (ஆயிரம் +++ துதிகள்)  இருக்கின்றன. உலகில் ஏற்பட்ட முதல் பெரிய war போர் இதுதான்.

44. பஞ்ச ஜனாஹா , என்றும் ஏழு சமூகம் என்றும் ரிஷிகள் பாடுகின்றனர். இவர்கள் உலகம் முழுதும் குடியேறி இந்து நாகரீகத்தைப் பரப்பினர். தற்போது கி.மு 1800 வரை தெளிவான தொல்பொருட் துறை தடயங்கள் கிடைக்கின்றன. கி.மு 3000 வரையான பெயர்ப் பொருத்தம் உலகம் முழுதும் கிடைக்கின்றன.

45. ரிக்வேத சொற்கள் இன்றும் தமிழ் உள்ளிட்ட அனைத்து பழைய மொழிகளிலும் இருப்பது மறறொரு உலக அதிசயம் ( இது பற்றி 100-க்கும் மேலான கட்டுரைகள் இந்த பிளாக்கில் இருக்கின்றன.)

46.அதிசய உவமைகள் , மரபுச் சொற்றோடர்கள் ரிக் வேதம் முழுதும் உள்ளன. அம்பு போல, சொல்லம்பு = கவிதைகள், கோடரியை சாணையில் கூராக்குவது போல (கவிதைகள்) சொற்களைத் தீட்டும் புலவன் ஆகியவை குறிப்பிட  தக்கவை .

47. 100 கூர்மையுள்ள வஜ்ராயுதம் ஆயுத தொழில் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. இரும்புத் தொழிற்சாலை பற்றி குறிப்புகளையும் படிக்கலாம்,

48. ரிக் வேதத்தில் புலவர் பற்றிய குறிப்பில் இன்னார் மகன் என்று வரும் குறிப்புகளைப் படிக்கையில், ‘மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்’ என்பதெல்லாம் ரிக் வேத தாக்கத்தால் ஏற்பட்டதே என்பது தெளிவாகிறது  .

49. தாய் பெயரைச் சொல்லி இன்னார் மகன் என்று சொல்லும் அற்புத முறையும் இருக்கிறது ரிக் வேதத்தில்!

50.’புகழ் வேண்டும் பாடல்கள்’ ‘தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்ற வள்ளுவன் வாக்கை நினைவு படுத்துகின்றன.

51.ரிக்வேதத்தில் 20-க்கும் மேலான பெண்புலவர்கள் இருப்பது உலக அதிசயம்; எகிப்திலும் இந்தியாவிலும் பெண் அரசிகள் உண்டு. ஆயினும் இவ்வளவு பெண்கள் புலவர்களாக இருந்தது பெண்களின் உயர் கல்வி நிலையைக் காட்டுகிறது இதற்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சங்கத் தமிழ் நூல்களில் 25 பெண் புலவர்களைப் பார்க்கிறோம்.

52.வெள்ளைக்காரர்கள் வேத கால இந்துக்களை நாடோடிகள் என்றனர். ஆனால் நிறைய பாடல்களில் நிலம், சாகுபடி, அறுவடை பற்றி இருப்பது வியப்பைத் தருகிறது ; பயிரிடும் கருவிகளின் பெயர்களும் இருக்கின்றன.

53.புலவர்கள், சபை (assembly) பற்றிப் பேசுகின்றனர். இன்றுவரை தமிழர்களும் வட இந்தியர்களும் அதே சொல்லை பயன்படுத்தி வருவது நாம்தான் ஜனநாயக சிற்பி என்பதைக் காட்டுகிறது.

54.வேதத்தில் 21 பீட பூமிகள், 30 ஏரிகள், 7 நதிகள், 99 நதிகள் என்றெல்லாம் ஏராளமான பூகோள geography விஷயங்கள் இருப்பதும் வியப்பிலும் வியப்பே.

55.மழை எப்படி ஏற்படுகிறது, சந்திரனின் ஒளி வெறும் பிரதிபலிப்புதான் என்று புலவர்கள் பாடியிருப்பது ஆச்சர்யமே.

56.பல பாடல்களில் கொடி flag, banner, ensign  பற்றி வருகிறது உலகில் நாம்தான் கொடிகளை முதலில் பயன்படுத்தினோம் என்பதை வியாசர் கால மகாபாரதமும், அதற்கு முந்தைய ராமாயணமும் காட்டுகின்றன.

57.உலகின் முதல் அந்தகக் கவிஞர் blind poet கிரேக்க நாட்டின் ஹோமர் அல்ல; நம் நாட்டின் தீர்க்கதமஸ் என்ற விஷயமும் அவர் பாடிய 52 (Rigveda 1-164) மந்திரங்களில் பல அதிசய விஷயங்கள் இருப்பதும், அந்தக் கவிதையை இன்றுவரை எவராலும் முழுமையாக விளக்க முடியாததும் வியப்பைத் தருகிறது. கர்ம பலன் பற்றி அவர் சொன்ன இரண்டு பறவை விஷயம் உபநிஷதத்திலும் Adam and eve ஆதாம் – ஏவாள் கதையிலும் வருவது வியப்பிலும் வியப்பே. (ரிக்.1-164)

58. செம்புலப் பெயல் நீரார், தேய்புரிப் பழங்கயிற்றனார், காக்கை பாடினியார்  என்றெல்லாம் சங்கப் புலவர்கள் பெயர்களில்  இருப்பது ரிக் வேத எதிரொலிதான் என்பதை அறிந்து ஆச்சர்யப்பட்டேன் . ரிக் வேதத்திலும் 400 ++ புலவர் பெயர்களில் இப்படி 20 ++ காரணப் பெயர்கள் வருகின்றன!!!

–SUBHAM—

tags- tags – ரிக் வேத, என்ன அதிசயம்,   part 3

ரிக் வேதத்தில் என்ன அதிசயம் இருக்கிறது?- PART 2 (Post No.10,045)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,045

Date uploaded in London – 2 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

19. எண்களைக் குறிப்பிடும் ரிஷிகள் எனக்கு நூறு செல்வங்களை, 1000 செல்வங்களை அல்லது பசு மாடுகளை தா என்று வேண்டுகிறார்கள் . எப்போது பார்த்தாலும் இவர்களுக்கு டெசிமல் சிஸ்டம் DECIMAL SYSTEM  நினைப்புதானா ? நல்ல வேளை . இவர்கள் இதைக் கண்டுபிடித்திராவிடில், பசு மாடுகள் மற்றும், பாலின் பயனைக் கண்டுபிடித்திராவிடில் , உலக ஆரோக்கியமும் இராது; கம்ப்யூட்டர், ராக்கெட், விண்வெளிப் பயணமும் நடந்திராது ! வாழ்க  ரிக் வேத ரிஷி முனிவர்கள் .

20.எல்லா முனிவர்களும் நாங்கள் உனக்காக தர்ப்பைப் புல்லை வெட்டி பரப்பி இருக்கிறோம்; இதன் மீது அமர்க என்று பாடுகிறார்கள் ! என்ன அதிசயம்! இயற்கையோடு இயைந்த வாழ்வு என்பதோடு இன்றும் பிராமணர்களும் , ஏனைய  ஜாதியினரும் (ஆடி, தை அமாவாசைகளில் எல்லா ஜாதியினரும்)  தர்ப்பை மீது அமரும்படி இறந்தோரை அழைத்து நீரும் எள்ளும் வார்க்கிறார்களே ! இது இந்துக்கள் ஒரே சமுதாயம், நீண்ட கால பாரம்பர்யத்தைப் பின்பற்றும் சமுதாயம் என்பதைக் காட்டுகிறது.

21.’வ்ருத்ரன்’ என்ற அசுரனையும் ‘அஹி’  என்னும் பாம்பையும் இந்திரன் கொன்றதை பத்து மண்டலங்களில் உள்ள ரிஷிகளும் பாடுகின்றனர். ‘வ்ருத்ர’னும் ‘அஹி’ யும்  இயற்கைச்  சக்திகள் என்பதை வெள்ளைக்காரனும் புரிந்து கொண்டுள்ளான் .

22. என்ன அதிசயம் ! ‘பதி’ என்பதை ஆணுக்கும் ‘வதி’, ‘மதி’ என்பதை பெண்ணுக்கும் ரிக்  வேதம் முழுதும் காண முடிகிறது; இன்றும் என் நண்பர்கள் பெயரில் சரஸ் வதி, இந்து மதி , கண பதி, பார் வதி, வசு மதி, லட்சுமி பதி என்ற பெயர்கள் உள்ளன. கட்டாயம் சிந்து  சமவெளி முத்திரைகளில் (ஜாடி அல்லது மீன் வடிவ முத்திரை)இது இருக்க வேண்டும் !

23.வேதம் முழுதும் ‘கடவுளருக்கு  எல்லாம் தாய் அதிதி’ என்று ரிஷிகள் பாடுகின்றனர். அதிலும் பெண்ணுக்கே முதலிடம். இளா ILA , பாரதி BHARATI , சரஸ்வதி SARASVATI  (அலைமகள், கலைமகள், மலைமகள்) என்றும் போற்றுகின்றனர் . 20+++ பெண் கவிஞர்கள் , 30 பெண் தெய்வங்கள் முதலியோரை முனிவர்கள் பாடுகின்றனர் ; உலகில் பெண் தெய்வங்களை வழிபடும் பழைய மதம் இந்து மதம் என்பதற்கும் இன்றுவரை பெண்களை தெய்வமாகப் போற்றி வழிபடும் மதம் இந்துமதம் ஒன்றே  என்பதற்கும் வேதமே  சான்று

24.தானம், ஈகை முதலியவற்றைப் போற்றும் பாடல்களைப் பார்க்கையில் திருக்குறள், நாலடியார், பழமொழி நூல்கள் நினைவுக்கு வருகின்றன.

25.எப்போதும் வானத்தில் செல்லும் குதிரை, தேர் பற்றியே பாடுகின்றனர். அந்தக் காலத்தில் அவர்கள் விண்  கப்பலில் பூமிக்கு வந்தார்களோ! இதை கற்பனை என்று யாராவது கருதினால், உலகில் முதலில் விஞ்ஞான புனைக் கதைகளை SCIENCE FICTION எழுதியவர் இந்துக்கள்தான் என்பதையாவது ஒப்புக்கொள்ள வேண்டும். பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியாவந்தனத்தில் ‘ததிக்ராவண்’ என்னும் பறக்கும் குதிரை பற்றிப் பாடுகின்றனர்/ மந்திரம் சொல்கின்றனர். 

26.அட அதிசயமே ! 100 இடங்களில் கடல் பற்றிப் பாடுவதோடு ‘திரை கடல் ஓடியும் திரவியம் தேடு’ என்கிறார்களே

27.இவர்கள் சிந்து – சரஸ்வதி சமவெளியில் மட்டும் இல்லாமல் ‘மலை’ ‘கடல்’ பற்றியெல்லாம் பாடுகின்றனர். சிந்து முதல் யமுனை வரையுள்ள பிரதேசத்தை ஒரே மந்திரத்தில் சொல்லுகின்றனர் . அப்படியானால் வட இந்தியா முழுதும் இவர்கள் வாழ்ந்திருக்க வேண்டும்!

28.ஏராளமான பறவைகள், மிருகங்கள் பற்றிப் பாடுகின்றனர். சிங்கம், யானை, ஒரே இடத்தில் புலி பற்றி எல்லாம் பாடுகின்றனர். நிறைய இடங்களில் ஓநாய்- ஆடு உவமை வருகிறது ; இயற்கையை ரசித்த மக்கள் போலும் .

29.போர், பகைவர், தாசன், தஸ்யூ சிம்யூ, பாணி , ராக்ஷஸ, கந்தர்வர், சித்தர் பற்றி எல்லாம் பாடுகின்றனர். இவர்களில் பலர் ‘மனிதர்களை அடித்து உண்ணுவோர்’ CANNIBALS  என்றும், இரவில் தாக்குவோர் என்றும், கடவுளை வணங்காதோர் (GODLESS) என்றும் சொல்லுகின்றனர் இப்படி சில கும்பல்கள் இன்றும் இருப்பதைக் காண்கிறோம்

30.குகையில் மறைத்துவைக்கப்பட்ட பசுக்கள் பற்றியும் அவற்றை இந்திரன் மீட்டது பற்றியும் நிறைய ரிஷிகள் பாடுகின்றனர் . இதற்கு மறைபொருள் உளது. புறநானூறு , மஹாபாரதம் ஆகியவற்றில் ‘ஆநிரை கவர்தல்’ வந்தாலும் இதை இரு பொருள்பட ரிஷிகள் உபயோகித்தனர் போலும். சாயனர் என்ற உரைகாரரும் பசு என்பதற்கு பல அர்த்தம் கற்பிக்கிறார்.

31. ஈற்றடிகள் ஒரே மாதிரியாக முடியும் நிறைய துதிகள் பத்து மண்டலங்களிலும் உள . இதே போல நாடகத்துக்கு முன்னோடியான உரையாடல் பாடல்களும் உள . இவை எல்லாம் இலக்கிய கலை வளர்ச்சியைக் காட்டுகின்றன.

32. இந்திரனை ‘’பாடல்களை விரும்புவோன் LOVER OF SONGS  என்று எல்லா ரிஷிகளும் பாடுகின்றனர். சாம கானம் பற்றிய குறிப்புகளும் வருகின்றன. ஏழு என்ற எண் சப்த ஸ்வரங்களைக் குறிப்பிடலாமென்ற தொனியிலும் மந்திரங்கள் உள்ளன. இந்திரனை நாட்டியக்காரன் dancer என்றும் போற்றுகின்றனர். கந்தர்வர் என்னும் பாடும் பாணர்கள் பற்றியும் மந்திரங்கள் உள்ளன. பாடலும் ஆடலும் போற்றப்பட்ட சமுதாயம் வேத கால சமுதாயம்

33. விவசாயம், பார்லி/யவம் , அரிசி, தானியம், அப்பம்,கஞ்சி போன்றவை வருவதால் விவசாய சமூகம் என்பது தெரிகிறது.அபால என்ற பெண் தனக்கு தோல் வியாதி நீங்கி முடி வளரவேண்டும், தன் தந்தைக்கு வழுக்கைத் தலையில் முடிவளரவேண்டும், நிலத்தில் பயிர்கள் வளரவேண்டும் என்று பாடுகிறார். இன்னொரு புலவர் அரிவாள், அறுவடை, நிறைய தானியம் பற்றிப் பாடுகிறார். வேதம் முழுதும் விவசாயம் உளது.

34.மிகவும் அதிசயம் ! ருதம்TRUTH  என்னும் இயற்கை விதியும் /ஒழுங்கும், சத்தியமும் முழுதும் போற்றப்படுகிறது.

35. கவசம் போன்ற பாடல்களின் ‘மூலம்’ ரிக்வேதம், மற்றும் அதர்வ வேதத்தில் உளது

36. உலகில் தினசரி வழிபாட்டில் யாப்பு இலக்கணத்தைப் பயன்படுத்தும் ஒரே சமுதாயம் இந்துக்களே. காயத்ரீ , பிருஹதி , 7 வகை யாப்புகள் குறித்து ரிக் வேத மந்திரங்கள் பாடுகின்றன. பிராமணர்கள் மூன்று வேளை செய்யும் சந்தியா வந்தனத்தில் 7 வகை யாப்புகளையும் சொல்லி வழிபடுகின்றனர். இலக்கணத்தை வழிபடும் சமுதாயம் என்றால் எந்த அளவுக்கு கல்வி அளவு இருக்க வேண்டும்! அதைப் பெண்களுக்கும் பெயராகச் சூட்டுவது அதை விட அருமை !!

To be continued…………………………

 tags – ரிக் வேத,  அதிசயம் , part 2

xxxxxxxxxxxxxxxxxxxxx

31 ரிக் வேதப் பொன்மொழிகள்– ஜூலை 2021 நற்சிந்தனை காலண்டர் (Post.9797)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9797

Date uploaded in London – 30 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பண்டிகை நாட்கள் – ஜூலை 4- சுவாமி விவேகானந்தர் நினைவு தினம், 15-ஆனி  உத்தரம் , 17-தக்ஷிணாயன புண்யகாலம், 23-குரு  பூர்ணிமா.

சுப முகூர்த்த நாட்கள் – ஜூலை 7, 16

அமாவாசை – ஜூலை 9பவுர்ணமி – ஜூலை 23,

ஏகாதசி விரத நாட்கள் – ஜூலை 5, 20

ரிக்வேதத்தில் உள்ள முதல் எண் (Number) மண்டலத்தையும், இரண்டாவது எண் துதியையும் மூன்றாவது எண் அந்தத் துதியில் உள்ள மந்திரத்தையும் குறிக்கும் .

Xxxx

ஜூலை 1 வியாழக்கிழமை

அக்கினியே! உன்னை தினமும் அதிகாலையில் உஷா துயில் எழுப்புகிறாள் 10 தோழிகள் (5+5 விரல்கள் )அவிர் பலி கொடுக்கின்றனர். ஈட்டி முனை போலும், கோடரி முனை போலும் கூரான முனையுடையாய் ; மநு வம்சம் வந்த மக்களிடையே நீ உலவுகிறாய்  4-6-8

Xxx

ஜூலை  2 வெள்ளிக்கிழமை

அக்னீ , நீ பள்ளத்காக்கை நோக்கிப் பறக்கும் பருந்துகளைப் (Falcons) போலவும், குதிரைகளைப் போலவும், மருத் தேவர்களின் படையைப் போலும் உன் சுவாலைகளை பரப்புகிறாய் 4-6-10

xxx

ஜூலை  3 சனிக்கிழமை

இந்த செல்வத்தின் மதிப்பு என்ன?  லாபம் என்ன ? நீ அறிவாய், சொல், இந்த ரகசியமான வழியில் நாங்கள் குற்றம் இல்லாமல் செல்ல வழிகாட்டுவாயாக 4-5-9

Xxx

ஜூலை  4 ஞாயிற்றுக்கிழமை

அக்னியே , நீ சத்தியவான், பேரறிஞன், நட்சத்திரங்கள் போல பிரகாசமானவன், வேள்விகளைக் காப்பவன்; உன்னை ஒவ்வொரு வீட்டிலும் தியானம் செய்கிறார்கள் 4-7-3

xxx

ஜூலை  5 திங்கட்கிழமை

அக்னியே , நீ விறகில் தீயினன் (அப்பர் தேவாரம்) , அற்புதன், அணுக முடியாதவன், வனங்களில் வசிப்பவன், அறிவுள்ளவன், தாய் போன்ற நதி நீரில் இருப்பவன் , குகையில் மறைந்திருப்பவன் (குகன்=முருகன்) 4-7-6

xxx

ஜூலை  6 செவ்வாய்க்கிழமை

பறவை, பூமியின்  பிரியமான, மேலான இடத்தைக் காக்கிறது  4-5-8

xxx

ஜூலை  7 புதன் கிழமை

அக்னி பகவானுக்கு தேவர்களை எப்படி வணங்க வேண்டும் என்பது தெரியும். அவன் நாம் விரும்பும் செல்வங்களைத் தருகிறான் 4-8-3

xxx

ஜூலை 8 வியாழக்கிழமை

அக்னீ, மர்மத்தில் வைக்கப்பட்டிருக்கும் மகத்தான ஞானத்தை, உண்மையை , தோத்திரத்தை அறிவான். பசுவின் காலடி போல மறைந்திருந்த அறிவை எனக்குப் புலப்படுத்தினான் 4-5-2

ஜூலை  9 வெள்ளிக்கிழமை

அக்கினியே , அருகிலும் தூரத்திலும் உள்ள , பல விதமாகத் தூற்றும் இருவிதத் தீயோர்களை விலக்கவும் ; எங்கள் விருப்பங்களைக் கிரமமாய் நிறைவேற்றவும் – 4-3-14

xxx

ஜூலை  10 சனிக்கிழமை

அக்நியே , வேடர்கள் வலையைப் பரத்துவது போல உன் பலத்தைப் பரப்பு.  யானை மீது செல்லும் அரசனைப் போல பவனி வா ; உன்னுடைய உக்கிர சுவாலையால் அரக்கர்களை எரிக்கவும் 4-4-1

xxx

ஜூலை  11 ஞாயிற்றுக்கிழமை

எங்கள் பகைவர்களை, உறவினர் ஆனாலும் உறவினர் இல்லாவிட்டாலும் அழித்து விடு 4-4-5

xxx

ஜூலை  12 திங்கட்கிழமை

அக்நியே , உன்னுடைய பார்வையானது மமதாவின் குருட்டுப் புதல்வனை  – தீர்க்கதமஸை – துர்பாக்கியத்திலிருந்து காத்தது அவனை அழிக்க விரும்பியவர்கள் தீமை செயலற்றுப்போனது 4-4-13

xxx

ஜூலை  13 செவ்வாய்க்கிழமை

அக்நி தேவனே , கணவனின் பொருட்டு தன்னை அழகிய ஆடைகளால் அலங்காரம் செய்து கொள்ளும் மனைவியைப் போல இந்த வேதியை / அக்கினி குண்டத்தை உனக்காக அலங்கரித்து உள்ளோம் – 4-3-2

xxx

ஜூலை  14  புதன் கிழமை

கறப்பவர்கள் நீர் போல கறக்கும் பால், மர்மத்தில் வைக்கப்பட்டிடிருக்கிறது (விறகில் தீயினன் , பாலில் படு நெய் போல் பரவியவன்- அப்பர் தேவாரம்) 4 -5-8

xxx

ஜூலை 15 வியாழக்கிழமை

பசு கருப்பாக இருந்தாலும் பிரகாசமான, வெண்மையான , சத்துள்ள பாலால் மனிதர்களைக் காக்கிறது. வேள்விக்கு வேண்டிய பாலை அருளுக 4-3-9

xxx

ஜூலை  16 வெள்ளிக்கிழமை

அங்கீரசர்கள் ருதத்தால் / சத்தியத்தால் மலையைப் பிளந்தார்கள் பசுக்களோடு சேர்ந்து போற்றுகிறர்ர்கள் 4-3-11

xxx

ஜூலை  17 சனிக்கிழமை

அக்நி தேவனே, தேவியர் போன்ற நதிகள் , குதிரைகளைப்  போல , பாய்ந்து ஓடுகின்றன இதற்கும் ருதமே/ சாத்தியமே காரணம் – 4-3-12

xxxx

ஜூலை  18 ஞாயிற்றுக்கிழமை

அக்நி தேவனே, நீ எங்களைத் துன்புறுத்துவோரின் வேள்விக்கோ, அல்லது பக்கத்தில் வசிக்கும் வேள்விக்கோ போகாதே -3-13

xxx

ஜூலை  19 திங்கட்கிழமை

அக்நி தேவனே, நேர்மையற்ற என் உறவினர் வீடுகளுக்குப் போகாதே . கபடமுள்ள சகோதரனிடம் எதையும் விரும்பாதே. நாங்கள் நண்பனுடைய, பகைவனுடைய செல்வத்தை அனுபவிக்காமல் இருப்போமாகுக  4-3-13

xxxx

ஜூலை  20 செவ்வாய்க்கிழமை

பொன் மேனி அம்மானை , சத்தியவானை, பூமிக்கும் ஆகாசத்துக்கும் பரவி இருப்பவனை, ருத்திரனை புத்தி தடுமாறி இறப்பதற்குள் போற்றித் துதியுங்கள்  4-3-1

xxxx

ஜூலை  21  புதன் கிழமை

அக்கினியே, நீ அசுரன்!  மிக்க ஆற்றலுள்ளவன். பசுக்களையும் ஆடுகளையும், குதிரைகளையும் இந்த வேள்வி தோற்றுவிப்பதாகுக -4-2-5

xxx

ஜூலை 22 வியாழக்கிழமை

மித்திரனே , வருணனே , கடமையைச் செய்ப்பவனுக்கு சத்தியம் தோன்றுக (அவர்கள் பிரார்த்தனைகள் பலிக்கட்டும்) 4-1-18

xxx

ஜூலை 23 வெள்ளிக்கிழமை

இந்த உலகத்திலே எங்களுடைய முன்னோர்கள் மலையில் பாறைகள் இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த பால்தரும் பசுக்களை வெளிப்படுத்தினார்கள் . இதற்காக இருட்டை அழிக்கும் உஷா தேவியை அழைத்துச் சென்றனர் (காலைப்பொழுதில் பிரார்த்தனை மூலம் உண்மைப் பொருளை  அறிந்தார்கள்)

(பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்து உண்டு – திருமூலர் 4-1-13

xxx

ஜூலை 24 சனிக்கிழமை

அவர்கள் (எங்களுடைய முன்னோர்கள்) மலைகளைப் பிளந்து அக்கினியைப் போற்றினார்கள் ; மற்ற அறிஞர்கள் அவர்களுடைய வீரச் செயல்களை எங்கும் அறிவித்தார்கள்  4-1-14

xxx

ஜூலை 25 ஞாயிற்றுக்கிழமை

பசுக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த  மலை அடைப்பை தெய்வ வாக்கால் பலாத்காரமாகத் திறந்தார்கள் 4-1-15

xxxx

ஜூலை 26 திங்கட்கிழமை

அக்கினியே! தட்சனின் புதல்வியான இளை-யால் உலகத்தின் தந்தையாக ஏற்கப்பட்டாய்.3-27-9

xxx

ஜூலை 27 செவ்வாய்க்கிழமை

அவர்கள் பாற்பசுவின் பூர்வமான நாமத்தை அறிந்தார்கள் அவர்கள் தாயின் மூவேழு உத்தமச் சந் தங்களையும் அறிந்தார்கள் .பின்னர் உஷா தேவியைப் போற்றினார்கள். அவள் சூரியனோடு  புகழுடன்  தோன்றினாள் 4-1-16 (புறநானூறு 166, திருமூலர் திருமந்திரம்)

xxx

ஜூலை  28  புதன் கிழமை

வேள்விக்காக தன்  தலையில்  விறகுக் குச்சிகளைச் சுமந்து வந்து, வியர்வை சிந்த உழைக்கிறானே

 அவனுக்குத்தான் நீ செல்வம் தருகிறாய். அவனுக்குத் தீமை செய்ய விரும்பும் ஒவ்வொருவனிடமிருந்தும் அவனைக் காப்பாயாக 4-2-6

xxx

ஜூலை 29 வியாழக்கிழமை

இரும்பை நெருப்பால் சுத்தப்படுத்தும் கருமானைப்போல கடவுளை வழிபடும் தூயவர்கள் வேள்வித் தீயால் தங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டார்கள் 4-1-17

xxx

ஜூலை  30 வெள்ளிக்கிழமை

ஏழு  ரிஷிகளான நாங்கள் உஷத் காலத்தில் வேள்வித் தீயை உருவாக்குவோம்.அங்கீரசர்களான நாங்கள் ஒளி மயம் ஆவோம். நீர் நிறைந்திருக்கும் மேகத்தைப் பிளப்போம் 4-1-15

xxx

ஜூலை  31 சனிக்கிழமை

காலையிலும் மாலையிலும் உன்னைப்போற்றி உனக்கு அவிர் பலி கொடுப்பவனை தங்கக் கச்சை அணிந்த குதிரை போலுள்ள நீ துன்பத்திலிருந்து மீட்பாயாக .4-2-8

–subham–

tags – ரிக் வேத, பொன்மொழிகள், ஜூலை 2021,  காலண்டர்,