தாய்லாந்தில் தமிழ் பொங்கல் பண்டிகை (Post No.4994)

Research article Written by London Swaminathan 

 

Date: 9 May 2018

 

Time uploaded in London – 10-22 am (British Summer Time)

 

Post No. 4994

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

தமிழர்கள் பொங்கல் பண்டிகையை அறுவடை விழாவாக கொண்டாடுகிறார்கள்; அன்றைய தினம் சூரியனை வழிபட்டு, பொங்கல் வைக்கிறார்கள். மறுநாளன்று ‘கோ மாதா’வான பசுமாட்டை வணங்கி கிருஷ்ணன் சிலையுடன் ஊர்வலம் விடுகிறார்கள். யாதவ குல மோஹனனான கண்ணன் பெயரில் ஜல்லிக்கட்டு விளையாடுகிறார்கள். இந்த வீர விளையாட்டின் வருணனை சங்க இலக்கிய நூலான கலித்தொகையில் உளது.

 

பொங்கல் என்று சொல்லும் பண்டிகையின் உண்மைப் பெயர் சங்கராந்தி. ஒரு உணவுப் பண்டத்தின் பெயரில் பண்டிகை இராது என்பது வெளிப்படை. தீபாவளி என்றால் லட்டு என்பது போல சங்கராந்தி என்றால் பொங்கல் சாப்பிடுவோம்.

சங்கராந்தி என்பது தென் கிழக்காசியா முழுதும், இந்தியாவில் தென் குமரி முதல் வட இமயம் வரை, கொண்டாடப்படுகிறது.

தாய்லாந்து, லாவோஸ் ஆகிய இரண்டு நாடுகளில் இதைக் கொண்டாட அழகான கதை சொல்லப்படுகிறது. அதாவது புத்த மத, நாட்டுப்புற கதைகளை எல்லாம் இதில் இணைத்து விட்டார்கள். ஆனால் இந்துமதப் பெயர் மட்டும் ‘சொங்ராங்’ (சங்கராந்தி) என்ற பெயரில் அப்படியே இருக்கிறது இந்து மதத்தின் வழக்கங்களும் மேரு மலையும் அப்படியே உளது.

 

இதோ சுவையான கதை!

 

தர்மாபரணன் என்ற ஒரு அறிவாளி வாழ்ந்து வந்தான். அவன் ஏழு வயது முதலே பேரர்றிஞன். ஆதி சங்கரர், சம்பந்தர் போல இளம் வயது மேதை. விக்ரமாதித்தன் போல பறவைகள் மிருகங்கள் பேசுவதை அறிந்தவன். அவன் மீது அந்த நாட்டின் மன்னன் கபிலபிரம்மனுக்கு ஒரே பொறாமை. அவனை போட்டிக்கு அழைத்தான். கபிலனுக்கு ஏழு பெண்கள்/புதல்விகள்.

 

 

இதோ பார்! சின்னப்பையா! நான் ஒரு விடுகதை போடுவேன். நீ சரியான பதில் சொன்னால், நானே என் தலையை வெட்டிக் கொள்வேன்; அப்படிச் சொல்லவில்லையானால் நீயே உன் தலையை வெட்டிக்கொள்ள வேண்டும் . சரியா? என்றான் கபிலன்.

 

உடனே சரி என்று தலை அசைத்தான் தர்ம ஆபரணன்.

 

விடுகதை இதுதான்:-

மனிதனுடைய ஜீவன் காலையில், நண்பகலில், மாலையில் எங்கே உளது?

 

தர்மன் இதைப் பற்றி யோசித்துக் கொண்டே இருந்தான்; அவனுக்குத்தான் பறவைகளின் மொழி தெரியுமே! அவை இது பற்றி என்ன பேசிக்கொள்கின்றன என்று ஒட்டுக் கேட்டான். விடையும் கிடைத்து விட்டது.

நேராக கபிலனிடம் சென்று இதோ தயார் என்றான்

 

என் கேள்விக்கு என்ன பதில்? என்றான் மன்னன் கபிலன்.

தர்மன் சொன்னான்:–

காலையில், மனிதனின் ஜீவன் முகத்தில் உளது; ஆகையால்தான் நாம் துயில் எழுந்தவுடன் முகத்தைக் கழுவுகிறோம்.

 

மதியம், நமது ஜீவன் மார்பில் உளது;ஆகையால்தான் சந்தனம் பூசுகிறோம்.

 

மாலையில், நமது ஜீவன் காலில் உள்ளது. ஆகையால்தான் படுக்கைக்கு போகும் முன் கால் கழுவிவிட்டு படுக்கச் செல்கிறோம்.

 

இதைக் கேட்டவுடன் கபிலன் தன் தலையை வெட்டிக்கொண்டான். அதைச் சீவிய வேகத்தில் தலை காற்றில் பறந்தது.

 

கபிலனுக்கு ஏழு மகள்கள் உண்டல்லாவா?

அவர்கள் நினைத்தார்கள்; இந்தத் தலை பூமியில் விழுந்தால் பூமி எரிந்து கருகிவிடும்; காற்றில் இருந்தால் அனல் காற்றால் பூமி வறண்ட பாலை வனம் ஆகி விடும்; கடலில் விழுந்தால் அது வற்றிப்போய் விடும். ஆகையால் மேரு மலை மீதுள்ள குகையில் வைப்போம். ஒவ்வொரு ஆண்டும் முறை வைத்து அதைப் பாது காப்போம் என்று  எழுவரும் முடிவு செய்தனர். ஆண்டுக்கு ஒரு முறை — சங்கராந்தி தினத்தன்று– அதை ஊர்வலமாக எடுத்துச் செல்வோம் என்று முடிவு செய்தனர்.

 

காலப்போக்கில் அந்த ஏழு பெண்களுக்கும் பிடித்த உடை, உணவு, வாஹனம், தோற்றம் ஆகியவற்றை தாய்லாந்து மக்கள் கற்பித்தனர்; ஏழு நங்கைகளையும் வாரத்தின் ஏழு கிழமைகளுக்கு சொந்தம் ஆக்கினர். அவர்கள் கையில் ஆயுதம் அல்லது ஒரு பொருளைக் கொடுத்தனர்.

 

சங்கராந்தி நாள் எந்தக் கிழமையில் ஏற்படுகிறதோ அந்த கிழமைக்கு உரிய மங்கையின் கையில் என்ன உள்ளது, அவள் என்ன ஆடை அணிந்திருக்கிறாள்? அதன் வர்ணம் என்ன? போன்ற அம்சங்களை வைத்து அந்த ஆண்டில் என்ன நடக்கும் என்பதை  மக்கள் ஆரூடம் கூறினர்.

 

இந்த வழக்கத்தை இப்பொழுதும் மதுரை சித்திரைத் திருவிழாவில் காணலாம். கள்ள அழகர் (விஷ்ணு) என்ன நிற ஆடை உடுத்தி, வைகை ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்றவாறு மழை அறுவடை, நாட்டின் வளம் இருக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். பச்சைப் பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினால் பசுமை மிக்க அறுவடை இருக்கும் என்பது போல தாய்லாந்தில் கையில் வாளேந்திய சிவப்பு நிற மங்கைக்கு உரிய நாளில் சங்கராந்தி ஏற்பட்டால் யுத்தம் போர் மூளும் என்று தாய் மக்கள் நம்பினர்.

லாவோஸ் நாட்டில் அன்றைய தினம் மேருமலையைப் போல மணற் கோபுரங்களைக் கட்டி, அதற்கு மஞ்சள் ஆடை உடுத்தி, தோரணம் கட்டி, பூஜை புனஸ்காரங்களைச் செய்து நைவேத்யம் படைத்து வணங்குவர். அந்த படைப்புப் பொருட்களை புத்த பிக்ஷுக்களுக்கு வழங்குவர்.

 

இப்படிப் பல கதைகளை இணைத்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினாலும் சம்ஸ்க்ருத, தமிழ் சொற்கள் அப்படியே அப்பண்டிகையில் ஒட்டிக் கொண்டு இருக்கின்றன. தாய்லாந்து, லாவோஸ் நாட்கள் சிறப்பு அஞ்சல் தலைகளை வெளியிட்டு பக்தர்களை ஊக்குவிக்கின்றன.

 

கிழமைகளையும் அதற்குரிய நங்கைகளின் பெயர்களையும் அவரவர்க்குரிய உடை, உணவு, வர்ணம், ஆயுதம், வாஹனம் முதலியவற்றையும் கீழே உள்ள பட்டியலில் காண்க:–

  • Sunday: TungsateveeRed dress, preferred wild fruit, discus in the right hand, shell in the left hand, garuda as the vehicle.

 

  • Monday: Korakatevee Yellow dress with pearl ornaments, preferred butter oil, dagger in the right hand, walking cane in the left hand, tiger as the vehicle.

 

 

  • Tuesday: Ragsotevee Light red dress with agate ornaments, preferred blood, trident in the right hand, arrow in the left hand, pig as the vehicle.

 

  • Wednesday: Montatevee Emerald green dress with cats eye ornaments, preferred milk and butter, sharp iron in the right hand and walking cane in the left hand, donkey as the vehicle.

 

 

  • Thursday: Kirineetevee Greenish yellow dress with emerald ornaments, preferred nuts and sesame seeds, elephant hook in the right hand, gun in the left hand, elephant as the vehicle.

 

  • Friday: Kimitatevee White dress with topaz ornament, preferred banana, dagger in the right hand, Indian vina in the left hand, buffalo as the vehicle.

 

 

  • Saturday: Mahotorntevee Black dress with onyx ornaments, preferred hog deer, discus in the right hand, trident in the left hand, peacock as the vehicle.

 

 

வாழ்க தமிழ்!!  வளர்க இந்துமதம்!