Compiled by London swaminathan
Date : 4 September 2015
Post No. 2124
Time uploaded in London : 12-58
கம்ப ராமாயணத்திலும்,வால்மீகி ராமாயணத்திலும் இல்லாத எவ்வளவோ விஷயங்கள் செவி வழியாக வந்துள்ளன. புற நானூற்றில் உள்ள இரண்டு பாடல்களில் உள்ள செய்திகள் இரண்டு ராமாயணங்களிலும் இல்லை. ஆழ்வார் பாடல்களில் உள்ள அணில் கதையும் முந்தைய இரண்டு ராமாயணங்களில் இல்லை. இவைகள் குறித்து முன்னரே எழுதிவிட்டேன். ஒரு வேளை இவைகள் நமக்குக் கிடைக்காமற்போன போதாயன ராமாயணம் முதலியவற்றில் இருந்திருக்கலாம். ராமனுக்கும் யமனுக்கும் நடந்த சண்டை குறித்த ஏட்டுப் பிரதி விஷயம், ஒரு சிறிய நூலாக வெளிவந்து, பிரிட்டிஷ் லைப்ரரியில் வைக்கப்பட்டுள்ளது. இதோ அந்தப் புத்தகம்.
வசந்தன் உயிர்வரு படலம்
வெளியான தேதி – 6-11-1917
வெளியிட்டவர்: கும்பகோணம் அ.அரங்கசாமி மூப்பனார்
(தற்போதைய கம்பராமாயணப் பதிப்புகளில் இந்தப் படலம் சேர்க்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை).
You must be logged in to post a comment.