கட்டுரையை எழுதியவர் :– London swaminathan
கட்டுரை எண்- 1519; தேதி 26 டிசம்பர், 2014.
மூதறிஞர் வ.சு.ப.மாணிக்கம் எழுதிய தொல்காப்பியக் கடல் என்ற நூலில் இருந்து தொகுக்கப்பட்டவை:–
சுவாமிநாத தேசிகர்
1.“சுவாமிநாத தேசிகரின் இலக்கணக்கொத்தோ பாயிர நூற்பாக்களிற் சில அடிகளையொதுக்கிடின் நல்ல இலக்கணப் புதுமைகொண்ட நூல் என்பதைப் பலரும் ஒப்புவர்
வடமொழி தமிழ்மொழி யெனுமிருமொழியினும்
இலக்கணம் ஒன்றே யென்றே யெண்ணுக – இலக்கணக்கொத்து
பெருந்தேவனார்
2.தமிழ் சொல்லிற்கெல்லாம் வடநூலே தாயாகி நிகழ்கின்றமையின் அங்குள்ள வழக்கெல்லாம் தமிழுக்கும் பெறும் – வீரசோழிய உரை ஆசிரியர் பெருந்தேவனார்
சேனாவரையர்
3.ஒரு சொல்லாய வழித் தமிழ் சொல் வடபாடைக்கட் செல்லாமையானும், வட சொல் எல்லாத் தேயத்திற்கும் பொதுவாகலானும் – சேனாவரையர்
சிவஞான முனிவர்
4.தமிழ்நூல் ஒன்றே வல்ல உரையாசிரியர்கள் உரை உரையாகா எனவும் வடநூல் உணர்ந்தாற்கன்றித் தமிழியல்பு விளங்கா எனவும் ஊறும் வீறும்பட உரைத்தார் சிவஞான முனிவர்
சுப்ரமண்ய தீக்ஷிதர்
5.வடமொழிக்கும் தமிழ் மொழிக்கும் இலக்கணம் ஒன்றே எனவும் தமிழும் திசைச் சொல்லேயாம் எனவும் பொதுமையும் திசைமையும் கண்டார் சுப்பிரமணிய தீக்கிதர்.
சுவாமிநாத தேசிகர்
6.இவர் எல்லோரும் விஞ்சுமுகத்தான்
அன்றியும் ஐந்தெழுத்தால் ஒருபாடை யென்று
அறையவும் நாணுவர் அறிவுடையோரே
ஆகையால் யானும் அதுவே அறிக – இலக்கணக்கொத்து சுவாமிநாத தேசிகர்
சிவப்பிரகாசம்
தொன்மையவாம் எனுமெவையும் நன்றாகா இன்று
தோன்றிய நூல் எனுமெவையும் தீதாகா
–சிவப்பிரகாசம்
சுவாமிநாத தேசிகர்
7.நூலாசிரியரே உரையும் எழுதும் வழக்கம்
நூல்செய்தவனந் தவனந் நூற்குரை யெழுதல்
முறையோ எனிலே அறையக் கேள்நீ
முன்பின் பலரே என்கண் காணத்
திருவாரூரில் திருக்கூட்டத்தில்
தமிழ்க்கிலக்காகிய வயித்திய நாதன்
இலக்கண விளக்கம் வகுத்துரை எழுதினன்
அன்றியும் தென்றிசை ஆழ்வார்திருநகர்
அப்பதி வாழும் சுப்பிரமணிய
வேதியன் தமிழ் ப்ரயோக விவேகம்
உரைத்துரை எழுதினன் ஒன்றே பலவே
—சுவாமிநாத தேசிகரின் உரை நூற்பா
- முக்கிய தமிழ் இலக்கண நூல்கள்
தொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம்
நன்னூல், இலக்கண விளக்கம், பிரயோக விவேகம்
இலக்கணக் கொத்து, தொன்னூல் விளக்கம்
முத்துவீரியம், சுவாமிநாதம்
contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.