இதாலியில் மாபியா வன்முறை (Post No.7253)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 23 NOVEMBER 2019

Time  in London – 18-59

Post No. 7253

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

மபியா கும்பல் பற்றி இன்னும் இதாலியிலிருந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவர்களுடைய செயல்பாடு உலகம் முழுதும் பரவி இருப்பது பற்றியும் அவர்கள் வெவ்வேறு விதங்களில் செயல்படுவது பற்றியும் வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆயினும் இதாலி, அமெரிக்கா, மெக்ஸிகோ போலீசாரின் தீவிர நடவடிக்கையால் அவர்கள் முதுகெலும்பு முறிக்கப்பட்டுவிட்டது. அவவ்வப்போது குற்றவாளிக் கும்பல் கைது பற்றித் தகவல் வருகிறது. பாதிக்கப்பட்ட பலர் அவர்களுடைய சித்திரவதை உத்திகள், அவர்கள் தோண்டி வைத்த சுரங்கங்கள் பற்றியும் தகவல் வருகிறது. இதோ நான் தினமணியில் 1992-ல் எழுதிய மபியா கும்பல் பற்றிய கட்டுரை.

கம்யூனிஸம், ஜிஹாதி, வன்முறை- Part 2 (Post No.4284)

Written by S.NAGARAJAN

 

 

Date:9 October 2017

 

Time uploaded in London- 5-42 am

 

 

Post No. 4284

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பாப ராட்ஸசர்கள் பட்டியல் – 2

கம்யூனிஸம், ஜிஹாதி, வன்முறை – ஒரே பொருளைத் தரும் மூன்று சொற்கள் -2

 

by ச.நாகராஜன்

 

 

ஒரே கட்டுரையில் முழுப் பட்டியலையும் தந்திருக்கலாமே என்றால் முடியவில்லை!!

 

15 பாப ராட்ஸசர்களின் பெயரை அடிக்கும் போதே உள்ளம் நொந்து விட்டது.

 

அதனால் மீதி ராட்ஸசர்களின் பட்டியலை இப்போது தருகிறோம்.

மனதைத் திடப்படுத்திக் கொண்டு படியுங்கள்.

 

16) இடி அமீன் Idi Amin (1971-1979)

உகாண்டா

தனிநபர் சர்வாதிகாரம்

3 லட்சம் முதல் 5 லட்சம் பேர் வரை பலி. ( தன்னை எதிர்த்தோர், அரசியல் எதிரிகள்)

17) ஜெனரல் யாஹ்யா கான் General Yahya Khan (1970-1971)

பாகிஸ்தான் சர்வாதிகாரி

ராணுவ சர்வாதிகாரம்

3 லட்சம் கிழக்கு பாகிஸ்தான் வங்காளிகளைப் படுகொலை செய்தார்.

18) பெனிடோ முஸோலினி Benito Mussolini (1922-1945)

இத்தாலி – பாஸிஸ சர்வாதிகாரி

2,50,000 பேர் பலி.

எதியோப்பியர்கள், லிபிய மக்கள், யூதர்கள்,அரசியல் எதிரிகள் ஆகியோர் படுகொலை.

19) ஜெனரல் மொபுடு செசெ செகோ General Mobutu Sese Seko (1965-1997)

ஜைரே, காங்கோ

தனிநபர் சர்வாதிகாரம் 2,30,000 பேர் பலி.

அரசியல் எதிரிகள்

20) சார்லஸ் டெய்லர் Charles Taylor (1989-1996)

லைபீரியா

தனிநபர் சர்வாதிகாரம்

2,20,000 பேர் பலி

அரசியல் எதிரிகள், ராணுவ எதிர்ப்பாளர்கள், சாதாரண பொது மக்கள்

 

21) ஃபோடே சாங்கோ Foday Sankoh (1991-2000)

சியார்ரா லியோன் Sierra Leone

தனி நபர் சர்வாதிகாரம்

2,10,000 பேர் பலி

(அரசியல் எதிரிகள்)

22) ஹோ சி மின் Ho Chi Minh (1945-1969)

வடக்கு வியட்நாம்

கம்யூனிஸ ஆட்சி

இரண்டு லட்சம் பேர் பலி

அரசியல் எதிரிகள், தெற்கு வியட்நாமியர்

23) மைக்கேல் மொகாம்பரோ Michel Micombero  (1966-1976)

புருண்டி Burundi

தனிநபர் சர்வாதிகாரம்

24) ஹாஸன் அல்டுராபி Hassan Alturabi (1989-1999)

இஸ்லாமிய சர்வாதிகாரம்

ஒரு லட்சம் பேர் பலி

அரசியல் எதிரிகள் – மதத்தை எதிர்த்தோ படுகொலை

 

25) ஜீன் – பெடல் – பொகாஸா Jean – Bedel Bokassa (1966-1979)

மத்திய ஆப்பிரிக்க குடியரசு / எம்பயர் Central African Republic / Empire

தனிநபர் சர்வாதிகாரம்

90,000 பேர் பலி

 

26) எஃப்ரெய்ன் ரியாஸ் மாண்ட் Efrain Rios Montt  (1982-1983)

குவாதமாலா Guatemala

ராணுவ சர்வாதிகாரம்

70000 குடியானவர்கள, அரசியல் எதிரிகள் பலி

27) ஃப்ராங்கோய்ஸ்/ ஜீன் க்ளாட் டுவாலியர் Francois/ Jean  Claude Duvalier ( ‘papa Doc’ பாபா -டாக் 1957-1971) பேபி டாக் ‘Baby Doc’ 1971-1986)

ஹைதி Haiti

தனிநபர் சர்வாதிகாரம்

60000 அரசியல் எதிரிகள் பலி

28) ராஃபேல் ட்ருஜில்லோன் Rafael Trujillo (1930-1961)

டொமினிகன் குடியரசு Dominican Republic

தனிநபர் சர்வாதிகாரம்

50000 அரசியல் எதிரிகள் பலி

29) ஹிசானே ஹாப்ரே  Hissane Habre (1982-1990)

சாட் Chad

ராணுவ சர்வாதிகாரம்

40000 அரசியல் எதிரிகள் பலி

30) ஜென்ரல் ஃப்ரான்சிஸ்கோ ஃப்ராங்கோ General Francisco Franco (1939-1975)

ஸ்பெயின்

பாஸிஸ ராணுவ சர்வாதிகாரம்

35000 அரசியல் எதிரிகள் பலி

31) ஃபிடல் காஸ்ட்ரோ Fidel Castro (1959-2006)

க்யூபா Cuba

கம்யூனிஸ ஆட்சி

30000 அரசியல் எதிரிகள் பலி

 

32) ஹபீஸ்/ பாஷா அலாஸாட் Hafez/ Bashar Alassad (1970-2000)

சிரியா

(ஹபீஸ் -1970-2000; பாஷர் – 2000–)

பலாத் கட்சியின் சார்வாதிகாரம் (Balath party dictatorship

25000 முதல் 30000 பேர் பலி (அரசியல் எதிரிகள் – உட்பிரிவு எதிரிகள்)

33) ஆயதுல்லா ருஹொல்லா கொமெய்னி Ayatollah Ruhollah Khokeini (1979-1989)

இரான்

இஸ்லாமிய சர்வாதிகாரம்

20000 அரசியல் எதிரிகள்/ மதத்திற்கு எதிரானவர்கள் பலி

34) ராபர்ட் முகாபே Robert Mugabe (1982)

ஜிம்பாப்வே

தனிநபர் சர்வாதிகாரம்

15000 அரசியல் எதிரிகள், ஆதிவாசி எதிரிகள் பலி

35) ஜெனரல் ஜார்ஜ் விடேலா General Jorge Videla (1976-1983)

அர்ஜெண்டினா

ராணுவ சர்வாதிகாரம்

13000 பேர் பலி

இடதுசாரி அரசியல் எதிரிகள்

36)ஜென்ரல் அகஸ்டோ பினோசெட் General Augusto Pinochet (1973-1990)

சிலி Chile

ராணுவ சர்வாதிகாரம்

30000 அரசியல் எதிரிகள் பலி

 

இந்தப் பட்டியலில் இன்னும் கொஞ்சம் பேரைச் சேர்க்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது சரி தான்! இதில் விட்டுப் போனவர்களை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளலாம்.

மனித குலத்தின் சாபக்கேடு இந்த் பாப ராட்ஸசர்க்ள்.

இஸ்லாமிய மதத்தின் பெயராலும், கம்யூனிஸத்தின் பெயராலும், தனிநபர் அதிகார ஆசையாலும் எத்தனை லட்சம் பேர் பலியானார்கள், பார்த்தீர்களா?

நமக்குத் தெரிந்த யாரேனும் இந்த கம்யூனிஸ கொள்கைக்கோ, இஸ்லாமிய தீவிரவாதத்திற்கோ துணை போனால் அவர்களை நல்வழிப் படுத்துங்கள்.

பாப ராட்ஸசர்க்ள் இல்லையேல் –

உலகம் சற்று நிம்மதி அடையும்.

அதற்கு சேது பந்தனத்தில் அணில் போல நாமும் சற்று உதவுவோம்!

***

இந்தத் தொடர் முற்றும்

 

 

 

கம்யூனிஸம்= ஜிஹாதி= வன்முறை (Post No.4281)

Written by S.NAGARAJAN

 

 

Date:8 October 2017

 

Time uploaded in London- 5-52 am

 

 

Post No. 4281

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

பாப ராட்ஸசர்கள்

கம்யூனிஸம், ஜிஹாதி, வன்முறை – ஒரே பொருளைத் தரும் மூன்று சொற்கள்

 

by ச.நாகராஜன்

ஒரே பொருளைத் தரும் சொற்கள் பல உண்டு.

வன்முறை எனப்படும் கொலை, கொள்ளை, கடத்தல், தீவிரவாதம் என்ற சொல்லுக்கும் கூட மறு சொற்கள் உண்டு.

கம்யூனிஸம், ஜிஹாதி ஆகிய இரு சொற்களும் அதே பொருளைத் தான் தரும்.

 

அபாயகரமான இந்த வழி முறை சமீபத்தில் கேரளத்தில் தலை விரித்து ஆடியது.

 

ஆர்.எஸ்.எஸ் பிரசாரக் ராஜேஷ் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

80 காயங்கள்- உடல் முழுவதும்.. கைகள் துண்டிக்கப்பட்டன.

தீவிரவாதிகளே பயப்படும் வன்முறை.

 

கேரள கம்யூனிஸ அரசின் 17 மாத காலத்தில் 17 படு கொலைகள்.

 

கம்யூனிஸ்டுகள் பற்றிய வரலாறைப் புரட்டிப் பார்த்தால் வருவது நீளமான ஒரு பட்டியல். ஜிஹாதிகளுக்கோ இவர்களுடன் வன்முறையில் போட்டி.

 

இருவரும் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு உலகை நாசப்படுத்துகின்றனர். இத்துடன் சர்வாதிகாரிகள் வேறு.

இவர்களைப் பற்றிய சின்ன ஒரு பட்டியல் இதோ;

நீளமான பட்டியல் வேண்டுவோர் தாமே சுலபமாகத்  தொகுக்கலாம்.

சின்னப் பட்டியலை இங்கு காணலாம்.

1.மாசே துங்

சீனா 91949-1976)

பலியானோர் 600 லட்சம் பேர்

  1. ஜோஸப் ஸ்டாலின்

ரஷியா (1929-1953)

பலியானோர் 400 லட்சம் பேர்

  1. அடால்ஃப் ஹிட்லர்

ஜெர்மனி (1933-1945)

நாஜி சர்வாதிகாரம்

பலியானோர் 300 லட்சம் பேர்

 

  1. மன்னர் இரண்டாம் லியோபோல்ட் (King Leopold II) (1886-1908)

பெல்ஜியம்

காங்கோ காலனி ஆதிக்கம்

பலியானோர் 80 லட்சம் காங்கோ மக்கள் அடிமைகளாக்கப்பட்டனர்

  1. ஹிடேகி டோஜோ (1941-1945) (Hideko Tojo)

ஜப்பான் ராணுவ சர்வாதிகாரம்

இரண்டாம் உலகப் போரில் பலியானோர் 50 லட்சம் பேர்

  1. இஸ்மாயில் அன்வர் பாஷா 91915-1920) (Ismail Evver Pasha)

ஒட்டாமன் துருக்கி

ராணுவ சர்வாதிகாரம்

20 லட்சம் அமெரிக்கர்கள்,கிரேக்கர்கள்,அஸிரியர்கள் பலி

  1. போல் பாட் (1975-1979) (Pol Pot)

க்ம்யூனிஸ ஆட்சி (Khmer Rouge)

170 லட்சம் பேர் – அரசியல் எதிரிகள் பலி

  1. கிம் இல் ஸங் 91948-1994) (Kim Ilsung)

கம்யூனிஸ ஆட்சி

160 லட்சம் பேர் – அரசியல் எதிரிகள், பஞ்சம், பட்டினிச் சாவு

9.மெங்கிஸ்டு ஹைலே மரியம்(1974-1978) (Mengistu Haile Mariam)

எதியோப்பியா

கம்யூனிஸ்ட் எதேச்சாதிகார ஆட்சி

150 லட்சம் பேர் – எரிட் ரியர்கள், அரசியல் எதிரிகள் பலி

  1. யாகுபு கோவொன் (1967-1970) (Yakubu Gowon)

ராணுவ சர்வாதிகார ஆட்சி

நைஜீரியா

10 ல்ட்சம் பேர் பயாபரர்கள் பசியால் சாவு, உள்நாட்டுப் போரில் ராணுவ வீரர்கள் சாவு

  1. ஜீன் கம்பாண்டா (1994) (Jean Kambanda)

ருவாண்டா

ஆதிவாசி சர்வாதிகாரம்

ஹூடு

எட்டு லட்சம் பேர் – டுட்ஸிஸ் பலி

  1. சதாம் ஹுஸைன் 91979-2003) (Saddaam Hussein)

இராக்

சர்வாதிகார ஆட்சி

ஆறு லட்சம் பேர் பலி (ஷிலிட்டுகள், குர்துக்கள், குவைத் தேசத்தினர்,அரசியல் எதிரிகள் )

  1. ஜோஸப் ப்ராஸ் டிட்டோ 91945-1980) (Josheph Broz Tito)

யுகோஸ்லேவியா

கம்யூனிஸ ஆட்சி

5,70,000 பேர் பலி – அரசியல் எதிரிகள்

 

  1. சுகர்ணோ (1945-1966) (Sukarno)

இந்தோனேஷியா

தேசிய சர்வாதிகாரி

ஐந்து லட்சம் கம்யூனிஸ்டுகள் பலி

  1. முல்லா ஒமர் (1996-2001) (Mullah Omar)

ஆப்கனிஸ்தான்

இஸ்லாமிய சர்வாதிகாரம் – தாலிபான்

 

நான்கு லட்சம் பேர் பலி – அரசியல் மற்றும் மதத்திற்கான எதிரிகள்

 

இந்தப் பட்டியல் முடியவில்லை; இன்னும் கொஞ்சம் இருக்கிறது.

அதை அடுத்துக் காண்போம்.

 

இதை எழுதவே கை நடுங்குகிறது. படித்தால் கண்ணீர் வரும்.

ஆனால் … அனுபவித்தவர்களுக்கோ..

 

நல்ல உள்ளங்கள் சிந்திக்க வேண்டும்!

 

– தொடரும்

 

 

 

 

கருமிகளை கடலில் தள்ளுக! மஹாபாரதம் அறிவுரை!! (Post No.2774)

desrt nd sea

Written  by london swaminathan

 

Date: 2 May 2016

 

Post No. 2774

 

Time uploaded in London :– 11-58 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் ஒரு அருமையான ஸ்லோகம். இதே கருத்தை வள்ளுவனும் பிற்காலத்தில் எழுதியிருக்கிறான்:–

 

த்வாவம்பசி நிவேஷ்டவ்யோ கலே பத்வா த்ருடாம் சிலாம்

தனவந்தமதாதாரம் தரித்ரம் ச தபஸ்வினம்

–மஹாபாரதம், உத்யோக பர்வம் 33-60

 

அதாத தனிக – பணமிருந்தும் கொடுக்க மறுப்பவன்

அதபஸ்வி தரித்ர – (கடவுள்) நம்பிக்கையற்ற ஏழை

த்வா- இருவரும்

கலே பத்வா த்ருடாம் சிலாம்- கழுத்தில் கல்லைக் கட்டி

அம்பசி நிவேஷ்டவ்ய = கடலில் மூழ்கடிக்கப்படவேண்டியவர்கள்.

 

வெறுமனே கடலில் தூக்கிப்போட்டால், ஒருவேளை நீந்திக் கரை சேர்ந்துவிடுவார்களே என்றெண்ணி, கழுத்தில் கல்லைக் கட்டி கடலில் தூக்கி எறிக என்கிறது மஹாபாரதம்.

 sugarcane

வள்ளுவனும் இப்படி சுடு சொற்களையே பெய்கிறான்: கையை முறுக்கு, தாடையில் ஓங்கி அடித்து நொறுக்கு, கரும்பை நசுக்கிப் பிழிவது போல கருமியை நசுக்கு – என்பான் வான் புகழ் வள்ளுவன்!!

 

 “வள்ளுவனும் வன்முறையும்”, “பாரதியும் வன்முறையும்” என்று 24 ஜூலை, 2013ல் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இதோ:

 

மரண தண்டனைக்கு ஆதரவு

 

மரண தண்டணைக்கு ஆதரவு தருபவன் வள்ளுவன். அவன் தீவிர அஹிம்சாவாதி அல்ல. தீயோரை அழிப்பது பயிர்களின் களைகளை நீக்குவது போல என்று அழகான உவமை தருகிறான். இதோ அந்தக் குறள்:

 

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனோடு நேர் (550)

 

பொருள்: நாட்டில் உள்ள கொடியோரை மரண தண்டனை கொடுத்து அழிப்பது, பயிர்கள் நன்றாக வளர உழவர்கள் களை எடுப்பது போல் ஆகும்.

 

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

எண்ணின் தவத்தான் வரும் (264)

 

கீதையில் ‘’பரித்ராணாய சாதூணாம் விநாசாய ச துஷ்க்ருதாம்’ என்று கண்ணன் சொன்னதன் எதிரொலி இது. ‘’தீயோரை அழிப்பதும் நல்லோரைக் காப்பதும் என் குறிக்கோள்’’ என்று பகவான் கண்ணன் சொன்னதை, தவமுடைய யாரும் செய்ய முடியும் என்பதை வள்ளுவன் ஒப்புக்கொள்கிறான்.

twists

கன்னத்தில் அடி, கையை முறுக்கு, கரும்பு போல நசுக்கு

 

அதிகாரம் 108, கயவர்கள் பற்றியது. அதில் கஞ்சர்களையும் சேர்த்துத் திட்டுகிறார். கயவர்களின் கன்னத்தில் அடித்து ஆளை நொறுக்கு என்றும் சொல்வான் வள்ளுவன்.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடுறுடைக்கும்

கூன்கைய ரல்லா தவர்க்கு (1077)

பொருள்: கன்னத்தில் அடித்து நொறுக்கினால்தான் கயவர்கள் உதவி செய்வர். அதுவரை சாப்பிட்ட பின்னர் ஈரக் கையால் கூட உதறித் தெறிக்க மாட்டார்கள்.

இன்னொரு குறளில் கரும்பு போல கசக்கி நசுக்கு என்கிறான்.

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ் (1078)

 

பொருள்: சான்றோர்கள் சொன்ன மாத்திரத்திலேயே பிறர்க்கு உதவி செய்வர். கயவர்கள் மட்டும் கரும்பு போல் கொன்று பிழிந்தால்தான் பயன்படுவார்கள்.

 

வள்ளுவன் கோபக்காரனும் கூட. சோற்றுக்கே அலையவேண்டிய நிலை இருக்குமானால் பிரம்மாவே பிச்சை எடுக்கட்டும் என்று அவனைச் சபிக்கவும் தவறவில்லை.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகு இயற்றியான் (1062)

பொருள்: உலகில் சிலர் பிச்சை எடுத்துத்தான் உயிர் வாழவேண்டும் என்றால், அந்த பிரம்மாவே பிச்சை எடுத்து அழியட்டும்.

ஆக தேவையானபோது வன்முறையைப் பிரயோகிக்கலாம்; அதர்மம் செய்வோருக்கு எதிராக மட்டும் வன்முறையைக் கையாளலாம்.

 

Sugar cane-23

–சுபம்–