கற்க! கேட்க!! சொல்லுக!!! சொல்லற்க!!! வள்ளுவரின் கட்டளைகள்! (9409)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9409

Date uploaded in London – –  22 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கற்க! கேட்க!! சொல்லுக!!! சொல்லற்க !!!!- வள்ளுவரின் கட்டளைகள்!

ச.நாகராஜன்

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் முன்னேற நன்கு படிக்க வேண்டும், பெரியோர் பலரும் அவனிடம் சொல்வதை அவன் நன்கு கேட்க வேண்டும், பிறரிடம் பழகும் போது சொல்ல வேண்டியவற்றைச் சொல்ல வேண்டும்.

எதைப் படிக்க வேண்டும், எப்படிப் படிக்க வேண்டும், எதைக் கேட்க வேண்டும், எதைச் சொல்ல வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லக் கூடாது, எங்கு சொல்லக் கூடாது என்பதை அறிய வள்ளுவரைத் தானே நாட வேண்டும்!

அவர் கட்டளைகளாகவும், அன்புரையாகவும், அறிவுரையாகவும் கூறுவது மனித குலத்திற்கே பொதுவான நீதிகளாகும்; வாழ்வாங்கு வாழ வேண்டிய வழிகளாகும்.

கற்க!

இரு குறள்களில் ‘கற்க என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் வள்ளுவர்!

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக     (குறள் 391)

ஒருவன் கற்கப்படும் நூல்களைப் பழுதறக் கற்க! அப்படிக் கற்றபின் அந்தக் கல்விக்குத் தக அந்த நூல்கள் சொல்லுகின்ற நெறியின் கண் நிற்கவும்.

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா

மாற்றம் கொடுத்தற் பொருட்டு    (குறள் 725)

ஒரு அவையில் அஞ்சாது பேச, பதில் சொல்ல, சொல் இலக்கண  நெறியினாலே கற்க வேண்டிய அளவை நூல் முதலியவற்றை அறிந்து கற்க வேண்டும்.

கேட்க!!

கேட்க என்ற சொல்லை நான்கு குறள்களில் பயன்படுத்துகிறார் வள்ளுவர்.

(குறள் பாக்கள் :-414,416,695,587)

கற்றிலனாயினும் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாம் துணை   (குறள் 414)

ஒருவன் தானே கற்கவில்லை என்றாலும் கூட கற்றவர்களை அணுகி கேட்டுத் தெளிய வேண்டும். அது அவன் தளர்ச்சி வந்த போது அவனுக்கு ஊன்று கோல் போலத் துணையாக நிற்கும்.

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்   (குறள் 416)

இந்தக் குறளில் எதைக் கேட்க வேண்டும் என்பதை மிக அழகுறத் தெளிவு படுத்தி விடுகிறார் வள்ளுவர். நல்லவை கேட்க என்பது வாழ்நாள் இறுதி வரைக்குமான அற்புதமான ஒரு அறவுரை ஆகும். அதில் எனைத்தானும் என்று கூறி எவ்வளவு சிறிய அளவாக இருந்தாலும் கூட என்கிறார்.

சிறிய அளவு நல்லதைக் கேட்டாலும் கூட அது பயன்படுத்தப்படும் போது மிகப் பெரிய பெருமையைத் தரும் என்று பலனையும் கூறி விடுகிறார்.

எப்பொருளும் ஓரார் தொடரார் மற்றப் பொருளை

விட்டக்கால் கேட்க மறை   (குறள் 695)

ஒரு அரசன் அல்லது ஒரு தலைவன் (Leader) அல்லது கம்பெனியின் தலைவன் (CEO) அல்லது உரிய மேலதிகாரி (Manager) நமக்கு இருக்கும் போது நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

எந்தப் பொருளையும் செவி கொடுத்துக் கூர்ந்து கேட்காமலும் அப்பொருளை அறியத் தொடர்ந்து கேட்காமலும்  அந்தத் தலைவன் தானே மனம் விட்டுச் சொன்னால் மட்டும் அந்த இரகசியத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அனாவசியமாக மூக்கை நுழைக்காதே என்பது பொருள்!

மறைந்தவை கேட்க வற்றாகி அறிந்தவை

ஐயப்பாடு இல்லதே ஒற்று     (குறள் 587)

சமூக சூழ்நிலையில் ஏராளமான நிகழ்வுகள் ஏற்படுகின்றன.  ஒற்றாடல் அதிகாரத்தில் இடம் பெறும் இந்தக் குறள் சாமன்யனுக்கும் சாதாரண நிகழ்வுகளில் பயன் படும் ஒரு குறள் அறிவுரை ஆகும்.

(நமக்கு வேண்டாத, நமக்கு எதிராக) பிறரால் மறைக்கப்பட்டு செய்யப்படும் செயல்களை  மற்றவரிடம் கேட்டு அறியக் கூடிய வல்லமை வேண்டும். தான் கேட்டதை சந்தேகமின்றி அது சரிதானா, உண்மை தானா என்று தானே ஆராய்ந்து முடிவிற்கு வர வேண்டும்.

சொல்லுக!!!

சொல்லுக என்று ஆறு இடங்களில் நமக்குக் கட்டளை இடுகிறார் வள்ளுவர்!

(குறள் பாக்கள் : 197, 200, 644,645,711, 712)

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று  (குறள் 197)

நயனில்லாத சொற்களைச் சொன்னாலும் சொல்லுக; ஆனால் சான்றோர், பயனே தராத வெற்றுச் சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க;

சொல்லிற் பயனிலாச் சொல்   (குறள் 200)

மிக மிகத் தெளிவாக எதைச் சொல்ல வேண்டும் என்பதற்கான அறிவுரை இது.

சொல்ல வேண்டும் என்று ஒருவன் விரும்பினால் பயன் தரும் சொற்களை மட்டுமே சொல்லுக; பயன் தராத சொற்களை ஒருபோதும் சொல்லாதே.

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனினூஉங்கு இல்   (குறள் 645)

அறம் பொருள் ஆகியவற்றை அடைய நமது நாக்கே வழி. அதைப் பயன்படுத்துவது எப்படி? சொல்லும் திறன் அறிந்து முறைப்படி அழகுற இனிமையாகச் சொல்ல வேண்டும். அதுவே அறத்தையும் செல்வத்தையும் சேர்க்கும்.

சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை

வெல்லுஞ் சொல் இன்மை அறிந்து    (குறள் 645)

ஒரு சொல்லைச் சொல்வதற்கு முன் அந்தக் கருத்தை வெளிப்படுத்தச் சிறந்த சொல் எது என்று நன்கு ஆராய்ந்து இன்னொரு சொல் அதை விட நல்லது இல்லை என்ற தன்மையில் அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இதுவே வெற்றிக்கு வழி.

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்    (குறள் 711)

சொல் மூன்று வகைப்படும்.செஞ்சொல், இலக்கணைச் சொல், குறிப்புச் சொல். இதில் நமக்கு ஆகாதனவற்றை விடுத்து எந்த இடத்தில், எந்த அவையில் பேசுகிறோமோ அந்த இடத்தின் நிலையையும் அப்போதைய சூழ்நிலையையும் அறிந்து உரிய சொல்லைச் சொல்ல வேண்டும்.

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்

நடை தெரிந்த நன்மை யவர்   (குறள் 712)

இடை, நடை! ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு நடை உண்டு. சொற்களின் நடையினை முதலில் நன்கு அறிந்து கொள்ள வேண்டு. அதையும் நினைத்த இடத்தில் சொல்லக் கூடாது. எங்கு பேசுகிறோமோ அந்த நடையை – அதாவது அவையை – அறிந்து ஒரு குற்றமும் இன்றி சொல்ல வேண்டும். கேட்பவர் அதைக் கேட்க விருப்பப்படும் படி செவ்வி அறிந்து அதாவது சொல் வழு, பொருள் வழு இன்றிச் சொல்ல வேண்டும்.

சொல்லற்க!!!!

இவ்வளவு சொன்ன வள்ளுவர் எதைச் சொல்லக் கூடாது என்பதையும் தெளிவு படுத்தி விடுகிறார் மூன்று குறள்களில்! (குறள் பாக்கள் 184, 200, 719)

இவற்றுள் குறள் 200 பற்றி மேலே பார்த்து விட்டோம்.

கண் நின்று கண் அறச் சொல்லினும் சொல்லற்க

முன் இன்று பின் நோக்காச் சொல்  (குறள் 184)

ஒருவனின் எதிரே நின்று கண்ணோட்டம் இல்லாமல் எதை வேண்டுமானாலும் கடுமையாகப் பேசி விடலாம். ஆனால் அவன் எதிரில் இல்லாத போது, பின் விளைவை அறியாமல் புறம் கூறும் சொற்களைச் சொல்லாதே.

புல்லவையுள் பொச்சாந்தும்  சொல்லற்க நல்லவையுள்

நன்கு செலச் சொல்லுவார்  (குறள் 719)
புல்லவை – புல்லர்  கூடி இருக்கும் அவை

நல்லவை – நல்லோர் இருக்கும் அவை

ஒரு நல்லோர் கூடிய அவையில் அவர்கள் மனம் கவரும் படி பேச வல்லமை உடைய ஒருவன் மறந்தும் கூட புல்லர்கள் குழுமிய அவையில் தன் வாயைத் திறக்கக் கூடாது.

பொச்சாந்தும் என்று ஏன் சொல்கிறார் வள்ளுவர்? நல்லவையில் பேசும் ஒருவன் புல்லர்கள் கூட்டத்தில் பேசினால் இப்படிப்பட்டவர் இந்தக் கூட்டத்தில் பேசலாமா என நல்லோர் அங்கலாய்ப்பர். ஆகவே தான் பொச்சாந்தும் – மறந்தும் கூட – புல்லர்கள் கூட்டத்தில் பேசாதே என்கிறார் வள்ளுவர்.

எதை, எப்படி, எப்போது பேச வேண்டும் என்பதை இதை விட வேறு எப்படிச் சொல்ல முடியும்?

சொல்வது, சொல்லாமல் இருப்பது ஆகியவை பற்றிய  உலகிற்கான திரண்ட கருத்தே இவை தாம்!

ஆக, கற்க, கேட்க, சொல்லுக, சொல்லற்க ஆகிய நான்கு கட்டளைகளை சிரமேற் கொண்ட ஒருவன் பெயரும் புகழும் பெறுவான். அறம் ஆற்றியவன் ஆவான். அவனுக்கு மாபெரும் செல்வம் தானே வந்து சேரும்!

***

tags – கற்க, கேட்க, சொல்லுக, சொல்லற்க, வள்ளுவன்,  கட்டளைகள்,

வெள்ளை வேண்டாம்’- வள்ளுவன், கம்பன் போர்க்கொடி (Post No.8526)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8526

Date uploaded in London – 17 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வெள்ளை என்றால் முட்டாள்தனம்; வெள்ளையர் என்றால் முட்டாள் பயல்கள். வள்ளுவனும் கம்பனும் ‘வெள்ளை மர்தாபாத் ‘ என்று உச்ச ஸ்தாயியில் பாடுகின்றனர் . திருவள்ளுவ ஐயங்காருக்கு ரொம்ப பிடித்தது விஷ்ணுதான் ; ரொம்ப பிடிக்காதது நாஸ்திகம் பேசும் சமண பவுத்த , சாருவாக மதத்தினர்தான்

புல்லறிவாண்மை என்ற அதிகாரத்தில் இவர்களைப் ‘பேய்கள்’ (ALGOL) என்றும் வெள்ளை என்றும் திட்டுகிறார்.

இவர் ‘ஓபனாக’ வாமனாவதாரம் , கிருஷ்ணாவதாரத்தைப் புகழ்வதை வள்ளுவர் ஐயரா ஐயங்காரா? என்ற தலைப்பில், எடுத்துக் காட்டினேன் .

நாஸ்தீக வாதிகளை ‘பேய்கள்’ என்று திட்டுவதையும் ஆல்கால் நட்சத்திரத்தை இவர் அலகை என்ற பேய் நட்சத்திரத்தின் பெயரால் திட்டுவதையும் எழுதி இருந்தேன் (காண்க–  திருக்குறளில் ஒரு பேய் நட்சத்திரம் )

இப்போது வேறு சில குறள்களைப் பார்ப்போம். வெள்ளை ஆடை உடுத்திய சமணர்களை ஸ்வேதாம்பரர் என்பர். ஸ்வேத என்றால் வெள்ளை. ஆங்கிலச் சொல்லான ஒயிட்  (S+white= Swehta) இதிலிருந்து வந்ததே இதையே நெடிலாக மாற்றி நீட்டித்து ஸ்வேதா என்று சொன்னால் அறிவுத் தெய்வமான சரஸ்வதி என்று பொருள்படும்.

வெள்ளை ஆடை உடுத்த ஸ்வேதாம்பர சமணர்களைத் தாக்கும் வள்ளுவர்,

வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை

உடையம்யாம் என்னுஞ் செருக்கு – குறள் 844 என்று பாடுகிறார் .

இதன் பொருள் என்ன ?

முட்டாள்தனம் என்பது என்னவென்றால் முட்டாள்கள் தங்களை அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்வதாகும் .

இதை ஆங்கிலத்தில் நாலாவது வகை மனிதர் என்று சொல்லும் ஒரு பழமொழி இதோ :-

He who knows not and he knows not, he is simple teach him.

He who knows and knows not that he knows, he is asleep, awaken him.

He who knows and knows that he knows, he is wise, follow him.

“He who knows not, knows not, he knows not, he is a fool shun him.

கம்பனும் வெள்ளையரை – வெள்ளையைச் சாடுகிறான்.

வெள்ளியை ஆதல் விளம்பினை மேலோய்

வள்ளியர் ஆகில் வழங்குதல் அல்லால்

எள்ளுவ என்சில இந்த உயிரேனும்

கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால்

-பால காண்டம் , கம்ப ராமாயணம்

பொருள்

நீ வெள்ளியாக — அறியாமை உடையவனாக — இருப்பதால் இப்படிக்கூறினாய் .உயர்ந்தவர்கள் எதைக்கேட்டாலும் கொடுப்பர். கொடுக்கக்கூடாது என்று விலக்கப்பட்டது ஏதேனும் உண்டா ? கிடையாது. இனிய உயிரையும் பிச்சையாகப் பெறுவது தீயது; உயிரையும் தானமாக ஈவது  சிறந்தது (வெள்ளி நிறம் இங்கும் அறியாமையைக் குறிக்கும்)

(இந்தப் பாடலில் ‘கொடுப்பது நல்லது; அதை வாங்குவது தீயது’ என்று முரண்பட இருப்பதாக நினைக்கலாம் ; அது தவறு  ; அவ்வையாரும் கூட , ஆத்திச் சூடியில்,   ஈவது விலக்கேல்  என்று நாலாவது வரியில் சொல்லிவிட்டு ஏற்பது இகழ்ச்சி என்று எட்டாவது வரியில் சொல்கிறார். இது வெவ்வேறு சூழ்நிலையில் பொருந்தும் வாசகம் ஆகும்)

****

நிர்வாண சாமியார் மீது வள்ளுவன் தாக்கு !

சமணர்களின் வெள்ளாடை (ஸ்வேதாம்பரர்) சாமியார்களைத் தாக்கிய வள்ளுவன் நிர்வாண சமண சன்யாசிகளையும் விடவில்லை . திசையையே – அதாவது வானத்தையே — ஆடையாகக் கொண்ட நிர்வாண சாமியார்களை திக் அம்பரர் = திகம்பரர் என்பர்

அவர்களை வள்ளுவன் கிண்டல் செய்யும் குறள்  இதோ —

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்

குற்றம் மறையா  வழி -குறள் 846

பொருள் –  தம்முடைய குற்றத்தை நீக்காது , உடம்பை ஆடையால் மறைத்து வைக்க நினைப்பது புல்லறிவு – அதாவது முட்டாள்தனம் ; இப்படி அவர் பாடியதற்கு ,அவர் மனக்கண்களில் தோன்றியது, திகம்பர சமணர்களாகும் .

அதுமட்டும் அல்ல உலகம் எல்லாம் ‘உண்’டு என்று சொல்லும் கடவுளை ‘இல்லை’ என்று சொல்லுவான் பேய்ப்பயல் என்பதை ‘அலகை/ பேய் ‘என்று சொல்லிச் சாடுகிறான். புத்தரும் கடவுள் பற்றியே எதுவும்  சொல்லாமல் எட்டு குணங்களை மட்டும் வலியுறுத்துவதால் அவரைத் தாக்கும் விதத்தில் பத்து ‘கடவுள் வாழ்த்துப் பாட்டுப் பாடி’ கடவுள் உண்டு என்கிறார். 


புல்லறிவாண்மை அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களையும் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களையும் சேர்ந்து படிப்போருக்கு இது தெள்ளிதின் விளங்கும்.

OLD ARTICLES

திருக்குறளில் பேய் … – Tamil and Vedas

tamilandvedas.com › 2017/08/12

  1.  

12 Aug 2017 – திருக்குறளில் பேய் நட்சத்திரம்ஒரு அதிசயத் தகவல்! (Post No.4151). Algol is a binary star. Written by London Swaminathan. Date: 12 August 2017. Time uploaded in London- …

திருவள்ளுவர் ஐயரா? ஐயங்காரா …

tamilandvedas.com › tag › ஐயரா…

– 

17 Aug 2016 – Tagged with ஐயரா, ஐயங்காரா … தமிழ்நாட்டில் கிடைத்த பழைய வள்ளுவர் சிலை பூணூலுடன் காட்சி தருகிறது. அது மட்டுமல்ல. அந்தப் …

திருவள்ளுவர் ஐயரா? ஐயங்காரா …

swamiindology.blogspot.com › 2016/08 › post-no3068

அவ்வையார், வள்ளுவர் பற்றிய அதிசய தகவல்கள்! 14-11-2015. –Subham—. Posted 16th August 2016 by Swaminathan. Labels: ஐயங்காரா? ஐயரா திருக்குறளில் இந்து …

‘வெள்ளை, வெள்ளி, வள்ளுவன், கம்பன், சமண

–SUBHAM–

வள்ளுவனுக்குப் பிடித்த நகை நட்டுகள் (Post No.6667)

WRITTEN  by London swaminathan


swami_48@yahoo.com


Date: 23 JULY 2019


British Summer Time uploaded in London – 7-59 AM

Post No. 6667


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. 
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

subham

வள்ளுவனை மிஞ்சிவிட்டான் பர்த்ருஹரி! (Post No.5574)

 

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 22 October 2018

Time uploaded in London – 8-33 AM

(British Summer Time)

Post No. 5574

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

வள்ளுவனை மிஞ்சிவிட்டான் பர்த்ருஹரி! (Post No.5574)

உலகப் புகழ் பெற்றவன் தமிழ்ப் புலவன் வள்ளுவன். 2660 வரிகளில் 133 விஷயங்களை அலசி ஆராய்ந்து விட்டான்.  அவன் ‘பக்கா’ ஹிந்து என்பதால் தர்ம, அர்த்த, காம என்ற அதே வரிசையில் திருக்குறளை முப்பாலாக வகுத்தான். நாலாவது விஷயமான மோக்ஷம் என்பதை துறவறவியலில் வைத்துவிட்டான். அவன் இரண்டு அடிகளில் சொன்ன விஷயங்களை பர்த்ருஹரி ஒரே வரியில் சொல்கிறார்.

நீதி சதகத்தில் 100 ஸ்லோகங்கள் உண்டு . அவர் யாத்த சிருங்கார சதகம், வைராக்ய சதகத்தில் மேலும் 200 பாடல்கள் இருக்கின்றன. வள்ளுவன் 1330 அருங்குறள்களில் செப்பியதை பர்த்ருஹரி 300 பாடல்களில் செப்பிவிட்டான்.  இருந்தபோதிலும் குறளுக்குத் தனிச் சிறப்பு உண்டு.

பர்த்ருஹரியின் மூன்று பாடல்களைக் குறளுடன் ஒப்பிடுவோம்

பர்த்ருஹரியின் நீதி சதகத்தில் 21, 22, 23 பாடல்களைக் காண்போம்

பாடல் 21-ன் பொருள்

மன்னிக்கும் குணம் உள்ளவனுக்கு கவசம் எதற்கு?

கோபம் உள்ளவனுக்கு எதிரிகள் எதற்கு?

ஒருவனுக்கு அறிவு இருந்தால் தீயதை எரிக்க தீ எதற்கு?

உண்மை நண்பன் இருந்தால் மருந்து தேவையா?

தன்னைச் சுற்றிலும் கெட்டவர்கள் இருந்தால் பாம்புகள் எதற்கு?

நல்ல விவேகம் இருந்தால் பணம் எதற்கு?

நல்ல குணங்கள் இருந்தால் ஆபரணங்கள் எதற்கு?

கவிதையை ரசிக்கத் தெரிந்துவிட்டால் அவனுக்கு ராஜ்யம், அரசாட்சி எதற்கு?

மன்னிக்கும் குணம்–

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்துவிடல்- 314

உனக்கு துன்பம் விளைவித்தவர்க்கு நன்மைகள் பல செய்து அவர்கள் வெட்கப்படும்படி செய்க; அவர் செய்த கெடுதிகளையும் மறக்க.

தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்

என் குற்றமாகும் இறைக்கு- குறள் 436

தன்னுடைய குற்றத்தை ஆராய்ந்துவிட்டு, மற்றவர் குற்றத்தை

ஆராய்க; இதில் என்ன கஷ்டம்?

கோபம் பற்றி வள்ளுவன்

சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி இனம் என்னும்

ஏமப் புணையைச் சுடும்- 306

சேர்ந்தாரைக் கொல்லி= ஆஸ்ரயாசஹ

கோபப்பட்டவனை கோபம் என்னும் நெருப்பே அழித்துவிடும்; அவனுக்குத் துணையாக நின்றாரையும் அழித்துவிடும் (நெருப்பு போல)

உண்மை நண்பன்

ஒருவன் ஆடை திடீரென நழுவினாலோ, காற்றில் பறந்தாலோ, கிழிந்தாலோ ஒருவனின் கைகள் எவ்வளவு விரைவாக உடற் பகுதிகளை மறைக்க தன்னிச்சையாகச் செல்லுமோ அவ்வளவு விரைவாக, கஷ்டகாலத்தில் உதவுபவனே உண்மை நண்பன் என்பதை வள்ளுவன் காட்டுவது போல வேறு எவரும் காட்டியதில்லை.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு (குறள் 788)

கெட்டவர்களும் பாம்பும் பற்றி வள்ளுவன்,

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்பொடு உடனுறைந்தற்று- 890

ஒரே கருத்து இல்லாதவருடன் வாழ்தல், குடிசையில் பாம்புடன் வசிப்பது போலாகும்

எது செல்வம்?

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்-443

ஒருவன் அடையக்கூடிய செல்வங்களுள் தலையாய

செல்வம் அறிவில் சிறந்த பெரியார்கள் சூழ இருப்பதேயாகும்.

க்ஷாந்திஸ் சேத் கவசேன கிம் கிம் அரிபிஹி அஸ்தி சேத தேஹினாம்

ஞாதிஸ்சேத் அநலேன கிம் யதி சுஹ்ருத்திவ்யௌஷதம் கிம் பலம்

கிம் ஸர்ப்பையதி  துர்ஜனாஹா கிம் உதனைர்வித்யா அனவத்யா யதி

வ்ரீடா சேத் கிமு பூஷணைஹி ஸுகவிதா யத்யஸ்தி ராஜ்ய்ரேன கிம் 1-21

क्षान्तिश्चेत्कवचेन किं किम् अरिभिः क्रोधो‌உस्ति चेद्देहिनां
ज्ञातिश्चेदनलेन किं यदि सुहृद्दिव्यौषधं किं फलम् ।
किं सर्पैर्यदि दुर्जनाः किम् उ धनैर्विद्या‌உनवद्या यदि
व्रीडा चेत्किम् उ भूषणैः सुकविता यद्यस्ति राज्येन किम् ॥ 1.21 ॥

xxxx

 

பாடல் 22-ன் பொருள்

ஒருவன் உறவினர்களிடத்தில் மரியாதை காட்ட வேண்டும்;

வேலைக்காரர்களிடம் அன்பாக இருக்க வேண்டும்;

புனிதர்களின் உறவுக்கு ஏங்க வேண்டும்;

ஆட்சியாளரின் விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும்;

கற்றோரிடம் பணிவுடன் இருக்க வேண்டும்;

எதிரிகளிடத்தில் வீரத்தைக் காட்ட வேண்டும்;

முதியோரிடம் சகிப்புத் தன்மை இருக்க வேண்டும்;

மனைவியிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும்;

மனிதர்களின் திறமை, விவேகம், தந்திரம் மூலம்தான்

நல்ல சமுதாயம் வேரூன்றி நிற்கிறது

எல்லோரிடமும் அன்பு காட்டுதல்—

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு- 80

அன்பு இருக்கும் உடல் உயிருள்ள உடல்; அது இல்லாவிட்டால் அது பிணம் ( தோல் போற்றிய எலும்புக்கூடு)

பெரியார் துணைக்கு ஏங்கு—

உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்-442

இருக்கும் துன்பத்தைப் போக்கி, இனி துன்பம் வராமல் காக்கும் அறிவிற் சிறந்த பெரியோரை பேணுக

 

தாக்ஷிண்யம் ஸ்வஜனே தயா பரிஜனே சாட்யம் ஸதா துர்ஜனே

ப்ரீதிஹி ஸாது ஜனே நயோ ந்ருப ஜனே வித்வத் ஜனே ச ஆர்ஜவம்

சௌர்யம் சத்ரு ஜனே க்ஷமா குரு ஜனே காந்தா ஜனே த்ருஷ்டதா

யேசைவம் புருஷாஹா கலாஸு குசலாஸ்தேஷ்வேவ லோகஸ்திதிஹி-1-22

दाक्षिण्यं स्वजने दया परिजने शाठ्यं सदा दुर्जने
प्रीतिः साधुजने नयो नृपजने विद्वज्जने चार्जवम् ।
शौर्यं शत्रुजने क्षमा गुरुजने कान्ताजने धृष्टता
ये चैवं पुरुषाः कलासु कुशलास्तेष्वेव लोकस्थितिः ॥ 1.22 ॥

xxxx

பாடல் 23-ன் பொருள்

புனிதர்களின், அறிவாளிகளின் தோழமையானது ஒருவனின் அறியாமையையும் அறிவின்மையையும் நீக்கும்;

மந்த புத்தியை  விலக்கும்; சுயமரியாதையை  அதிகரிக்கும்; பாபங்களைப் போக்கும்; மனத்தில் மகிழ்ச்சியை எழுப்பும்; உற்சாகத்தை உயர்த்தும்; சமுதாயத்தில் புகழை  ஈட்டித் தரும்; புனிதர்களின் கூட்டுறவால் கிடைக்காதது ஏதேனும் உண்டோ? செப்புக.

ஆதிசங்கரரும் பஜகோவிந்தம் என்னும் துதியில் நல்லோர் சஹவாசம் முக்தி நிலைக்கு இட்டும் செல்லும் என்கிறார்:–

சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்

நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்

நிர்மோஹத்வே நிஸ்ஸலதத்வம்

நிஸ்ஸலதத்வே ஜீவன் முக்தி – பஜகோவிந்தம்.

திருவள்ளுவரும் சத்சங்கத்தின் பெருமையை, தொண்டர்தம் கூட்டை, ‘கேள்வி’ என்னும் அதிகாரத்தில் சொல்லுவார்:

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும் (குறள் 416)

கொஞ்சமாவது நல்லது கேளுங்கள்; அது உங்களுக்குப் பயன்படுகிறபோது நல்ல பெருமையைக் கொண்டுவரும் – என்கிறார்.

இன்னொரு குறளில் சறுக்கி விழும் நிலத்தில் நடக்கும்போது பயன்படும் ஊன்றுகோல் போல (walking stick வாக்கிங் ஸ்டிக்), புராண இதிஹாசச் சொற்பொழிவுகள் பயன்படும் என்பார்:

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் – குறள் 415

ஜாட்யம் தியோ ஹரதி ஸிஞ்சதி வாசி ஸத்யம்

மானோன்னதிம் திஸதி பாபம் அபாகரோதி

சேதஹ ப்ரஸாதயதி திஷு தனோதி கீர்த்திம்

ஸத்ஸங்கதிஹி கதய கிம் ந கரோதி பும்ஸாம் 1-23

जाड्यं धियो हरति सिञ्चति वाचि सत्यं
मानोन्नतिं दिशति पापम् अपाकरोति ।
चेतः प्रसादयति दिक्षु तनोति कीर्तिं
सत्सङ्गतिः कथय किं न करोति पुंसाम् ॥ 1.23 ॥

FROM MY EARLIER POST……………………..

அவ்வையாரிடம், முருகப் பெருமான் ‘அம்மையே! இனியது எது?’ என்று கேட்டார்; அவ்வை சொன்னார்:

“இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது! இனிது! ஏகாந்தம் இனிது !
அதனினும் இனிது ! ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது ! அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது! அறிவுள்ளோரை
கனவிலும் நனவிலும் காண்பதுதானே!”

பொருள்: தனிமையில் இருப்பது இனிது. அதைவிட இனிது அந்தத் தனிமையிலும் இறைவனைத் தொழுவது இனிது. அதைவிட இனிது சத்சங்கம், அதாவது ஞானம் படைத்த நல்லோரைச் சேர்ந்து வாழ்வது. எல்லாவற்றையும் விட இனிது கனவிலும் நனவிலும் அந்த பெரியோரை நினைப்பதே! அதாவது அவர்களைப் பின்பற்றுவதே!

இதையே வாக்குண்டாம் என்ற பாடலில் மேலும் தெளிவாகச் சொல்கிறார்:

“நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே—நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று” —-(வாக்குண்டாம்)

இம்மையில் சுவர்க்கம்
நற்குணன் உடைய வேந்தை
நயந்து சேவித்தல் ஒன்று;
பொற்பு உடை மகளிரொடு
பொருந்தியே வாழ்தல் ஒன்று;
பற்பலரோடு நன்னூல்
பகர்ந்து வாசித்தல் ஒன்று;
சொற்பெறும் இவைகள் மூன்றும்
இம்மையில் சுவர்க்கம் தானே! —(விவேக சிந்தாமணி)

மூன்று வகை சொர்க்கலோக இன்பங்களில் ‘வாசகர் வட்டமும்’ ஒன்று. அந்த வாசகர்கள் நன்னூலை வாசித்து , விவாதித்து பகிர்ந்து கொள்வராம்; அதாவது சத் சங்கம்!

–subham–

பிறப்பொக்கும் எல்லா உயிரும்- வள்ளுவனும் வால்டேரும் (Post No.4620)

தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))

 

Research Article Written by London Swaminathan 

 

Date: 15 JANUARY 2018

 

Time uploaded in London  11-09 am

 

 

 

Post No. 4620

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

எல்லா உயிர்களும் பிறவியில் சமமாகவே இருக்கின்றன; வேற்றுமை என்பதே இல்லை; குழந்தையும் தெய்வமும் ஒன்று. பின்னர் எப்படி ஒருவரை நல்லவர் அல்லது கெட்டவர் என்று சொல்லுகிறோம்? அவரவர் செய்கையினால் இந்த வேறுபாடு தோன்றுகிறது. இதை வான் புகழ் வள்ளுவனும், பிரெஞ்சு தத்துவ அறிஞர் வால்டேரும், பகவத் கீதையின் கண்ண பிரானும், கம்பனும் அமெரிக்க  அரசியல் சாசனத்தில் ஜெப்பெர்சனும் சொல்லுகின்றனர். பிற்காலத்தில் அரசியல்வாதிகள் அனைவரும் மேடைப் பேச்சு வசன ங்களில் இதையும் சேர்த்துக் கொண்டனர்.

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான் குறள் 972

 

பொருள்

எல்லா உயிர்க்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையதே; அங்கே வேறுபாடில்லை; செய்யும் தொழிலில் காணப்படும் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால், அவர்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை.

 

கி.வா. ஜகந்நாதன் எழுதிய திருக்குறள் ஆராய்ச்சிப்பதிப்பில் கம்பனும் இதையே சொல்லுவதை எடுத்துக் காட்டுகிறார்:

 

இனையதாதலின் எக்குலத்து யாவர்க்கும்

வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்

–வாலி வதைப் படலம் 115)

 

பகவத் கீதையில் கண்ணபிரானும் (4-13) சொல்கிறார்,

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகசஹ

தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம் –4-13

பொருள்

 

என்னால் குணங்களுக்குத் தக்கபடி கருமங்களை வகுத்து நான்கு வர்ண முறை உண்டாக்கப்பட்டது; அதை நான் உருவாக்கினாலும், என்னை மாறுபாடில்லாதவன் என்பதை அறிந்துகொள்.

 

இதற்கு இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் பெரிய தத்துவ அறிஞருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய உரையிலும் இது ஜாதி அடிப்படையிலான பிரிவினை அல்ல, குணங்களின் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் அமைந்ததே என்று காட்டியுள்ளார்.

 

 

சுவாமி சித்பவானந்தர்

சுவாமி சித்பவானந்தர் எழுதிய பகவத் கீதைப் பேருரையில் இதை இன்னும் நன்கு விளக்குகிறார்:–

 

“குண பேதத்தால் சிருஷ்டி ஏற்படுகிறது. சத்வ குணம் நிறைந்திருக்கும் ஜீவன் பிராம்மணன்; சத்வ குணமும் சிறிது ரஜோ குணமும் கூடியிருப்பவன் க்ஷத்திரியன். ரஜோ குணம் பெரும்பகுதியும் சிறிது சத்துவம், தமசு ஆகியவை கூடியிருப்பவன் வைஸ்யன். தமோ குணம் பெரிதும், சிறிது ரஜோ குணமும் சேர்ந்திருப்பவன் சூத்திரன்.

 

சத்வத்தின் வர்ணம் வெண்மை. ரஜோ குணம் சிவப்பானது. தமோ குணம் கறுப்பு. பிராம்மணனுடைய நிறம் வெண்மை; க்ஷத்திரியன் செந்தாமரை போன்றவன். வைசியனுக்கு நிறம் மஞ்சள். சூத்திரன் கறுத்து இருக்கிறான். இந்நிறங்கள் ஸ்தூல சரீரத்தில் தென்படுபவைகள் அல்ல. ஸ்தூல உடலில் ஐரோப்பியர் வெள்ளையர்; ஆனால் அவர்கள் எல்லோரும் பிராம்மண இயல்புடையவர் அல்ல. அமெரிக்க இந்தியர் சிவப்பு நிறம்; ஆனால் அவர்கள் எல்லார்க்கும் க்ஷத்ரியர் இயல்பு இல்லை. மங்கோலியர் மஞ்சள் நிறம். இராமன், கிருஷ்ணர் போன்ற இந்தியர் கறுப்பு நிறம். ஆக, ஸ்தூல சரீரத்தின் நிறம் மனிதனது இயல்பை விளக்காது”.

அருமையான விளக்கம்!

xxxx

பிரான்ஸ் நாட்டின் அறிஞர் வால்டேர், “மனிதர்கள் அனைவரும் சமம் ஆனவர்களே; குணங்களினால்தான் வேறுபடுகிறார்கள்” – என்றார்.

 

‘Men are equal; it is not the birth but virtues that make the difference’.

 

xxx

 

அமெரிக்க அரசியல் சட்டத்தில் தாமஸ் ஜெஃபர்ஸன் எழுதிய வாசகங்களில் எல்லோரும் படைப்பில் சமமாகவே படைக்கப்பட்டுள்ளனர் – என்று எழுதினார். பிரெஞ்சு தத்துவ அறிஞர் ரூஸோவும் இதை மொழிந்தார். இவர்களுடைய கருத்துக்கள் பிற்காலத்தில் பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டன. சுதந்திரம்- சமத்துவம் – சஹோதரத்துவம் – என்ற கோஷம்/ கொள்கை விண்ணைப் பிளந்தது.

 

“All men are created equal”

 

 

xxx

 

முகமே மனத்தின் கண்ணாடி! வள்ளுவனும் சிஸரோவும்

 

ஒருவனுடைய முக பாவங்களை வைத்து அவன் மனக் கருத்தை அறிய முடியும். இதை வள்ளுவன் சொற்களில் வடித்தான். பரதமுனி என்ற முனிவர் நாட்டியக் கலையில் இதைப் புகுத்தி முக பாவங்களிலேயே நவரஸங்களையும் காட்டும் அரிய பரத நாட்டியக் கலையை உலகிற்கு அளித்தார்; வள்ளுவன் சொன்ன கருத்துக்களை ஷேக்ஸ்பியர், ரோமானிய அறிஞரான சிஸரோ போன்ற பலரிடத்தில் காண்கையில் பெரியோர்களின் சிந்தனைப் போக்கு ஒரே மாதிரிதான் என்ற கருத்து உறுதிப் படுகிறது.

 

வள்ளுவன் சொன்னான்

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம் – 706

 

பொருள்

ஒருவனுடை உருவம் கண்ணாடியில் பிரதிபலிப்பது போல உள்ளக் கருத்துக்களை முகமானது பிரதிபலிக்கும்.

இந்த உரை பெரும்பாலான நூல்களில் காணப்படும்; அது சரியன்று.

 

பளிங்கு என்பது ஸ்படிகம்; ஆங்கிலத்தில் கிறிஸ்டல் CRYSTAL   என்று சொல்லுவர். அதன் தன்மை என்னவென்றால் பக்கத்திலுள்ள பொருட்களின் நிறத்தை அப்படியே அது எடுத்துக் கொள்ளும்– சிவப்பு நிற பொருளின் அருகே வைத்தால் அதுவும் அப்படியே சிவப்பாகிவிடும். இப்படி ஒருவன் உள்ளத்தில் எழும் உணர்வுகளுக்கு ஏற்ப முகத்தின் பாவமோ நிறமோ மாறும். இதுவே சரியான உரை.

 

கி. வா ஜகந்நாதன் எழுதிய ஆராய்ச்சிப் பதிப்பில் இந்தக் கருத்தை எடுத்து காட்டி அதற்குச் சமமான பாடல்களையும் பிற பாடல்களையும் காட்டி இருக்கிறார். அது பளிங்கு என்பது CRYSTAL ஸ்படிகம் என்பதை உறுதிப் படுத்தும்

 

ஈர்ந்த நுண்பளிங்கெனத் தெளிந்த வீர்ம்புனல்

பேர்ந்தொளிர் நவமணி படர்ந்த பித்திகை

சேர்ந்துழிச் சேர்ந்துழி நிறத்தைச் சேர்தலான்

ஓர்ந்துணர் வில்லவர் உள்ளம் ஒப்பது

 

பம்பைப் படலம், கம்ப ராமாயணம்

 

முகம் காட்டும் உணர்வு பற்றி அகம், புறத்தில் உள்ளது.

முன்னம் காட்டி முகத்தின் உரையா- அகம்; 5-19

 

முன்னம் முகத்தின் உணர்ந்தவர் —  புறம் 3; 250

 

இது தவிர நான்மணிக்கடிகை, பழமொழி, பெருங்கதை ஆகிய நூல்களில் வரும் மேற்கோள்களையும் கி. வா.ஜ. வின் ஆராய்ச்சிப் பதிப்பு காட்டும்.

 

ஷேக்ஸ்பியரும் இக்கருத்தை ஹாம்லெட் நாடகத்தில் சொல்லுவார்.

“there is a kind of confession in your looks which your modesties have not craft enough to colour” – Hamlet , Act 2, Scene 2

xxx

 

 

ஆத்மாவின் சித்திரமே முகத்தின் தோற்றம் – என்று ரோமானிய அறிஞர் சிஸரோ, 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னார்.

 

மனத்தின் கண்ணாடி முகம்; கண்கள் குறிப்பை உணர்த்தும் அவயம்  என்றும் சிஸரோ சொன்னார்.

 

 

“The countenance is the portrait of the soul”- Cicero

 

“All action is of the mind and the mirror of the mind is face, its index the eyes”- Cicero

 

 

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற தமிழ்ப் பழமொழியும் பல மொழிகளில் உள்ளது.

 

‘Face is the index of the Mind’-  English proverb

 

 

 

 

ஒன்றே போல் சிந்திப்பர் சான்றோர் (Great Men Think Alike)- என்பது உலக வழக்கு!!

 

TAGS: — சிஸரோ, வால்டேர், பளிங்கு முகம், மனம் பிறப்பொக்கும், எல்லா உயிரும், வள்ளுவன்

 

–subham–

கல்யாணம் கட்டாதே; முனிவர்கள் அறிவுரை; வள்ளுவர் எதிர்ப்புரை (Post No.4461)

கல்யாணம் கட்டாதே; முனிவர்கள் அறிவுரை; வள்ளுவர் எதிர்ப்புரை (Post No.4461)

 

Written by London Swaminathan 

 

Date: 5 DECEMBER 2017 

 

Time uploaded in London-  6–53 am

 

 

Post No. 4461

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

கல்யாணம் செய்யலாமா வேண்டாமா என்பதற்கு கிரேக்க நாட்டறிஞன் சாக்ரடீஸ் சொன்ன பதில் நமக்குத் தெரியும்:

 

“மகனே! வாய்ப்பு கிடைத்தால் விடாதே; கல்யாணம் கட்டு; நல்ல மனைவி வாய்த்தால் நீ சுகமாக இருப்பாய்; கெட்ட மனைவி கிடைத்தாலோ நீ (என்னைப் போல) தத்துவ ஞானி ஆகிவிடுவாய்; உலகமே பயனடையும்!”

 

இன்னொரு சாக்ரடீஸ் கதையும் உங்களுக்குத் தெரிந்ததே! சாக்ரடீஸ் வழக்கம்போல இளஞர்களைக் கண்டவுடன் கதைத்தார். இதைப் பிடிக்காத அவரது மனைவி மேல் மாடியிலிருந்து அவரைத் திட்டித் தீர்த்தாள்; அசராது, அலங்காது அவர்பாட்டுக்கு உபதேசத்தைத் தொடர்ந்தார். மேல் மாடியிலிருந்து அவரது மனைவி ஒரு வாளி தண்ணீரை எடுத்து அவர் தலையில் கொட்டினாள்; அவர் சொன்னார்: “இவ்வளவு நேரம் இடி இடித்தது; இப்போது மழை பெய்கிறது!”

 

 

வள்ளுவரும் மனுவும் திருமணம் செய்துகொள்; ஏனெனில் கிருஹஸ்தன் என்பவனே மற்ற மூவர்க்கும் உதவுபவன் ; ஆகையால் அவனுக்கு மற்ற மூவரை விட புண்ணியம் கிடைக்கும் என்கின்றனர். பிரம்மச்சாரி, வானப்ரஸ்தன், சந்யாசி ஆகிய மூவர்க்கும் சோறுபோட்டு ஆதரவு கொடுப்பவன் இல்வாழ்வான்தான் (கிரஹஸ்த) என்று செப்புவர் அவ்விருவரும்.

 

கண்ணகியும் சீதையும் ‘அடடா! இந்த மூவரையும் கவனிக்கும் வாய்பை இழந்துவிட்டோமே’ என்று புலம்புவதை சிலப்பதிகாரத்திலும் கம்பராமாயாணத்திலும் காண்கிறோம்.

 

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை (குறள் 41)

மனு புகல்வது யாது?

“மற்ற மூவர்க்கும் அறிவினாலும் உணவினாலும் ஆதரவு அளிப்பதால் மனை   வி யுடன் வாழ்பவனே மற்ற மூவரையும்விடச் சிறந்தவன்” என்பார் மனு (3-78)

 

இன்னும் பல இடங்களிலும் கிரஹஸ்தனே சிறந்தவன், மனைவியே குடும்ப விளக்கு என்கிறார் மனு.

 

ஆனால் நாலடியார் இயற்றிய சமண முனிவர்களோ நேர் மாறான கருத்தைக் கொண்டுள்ளனர். திருவள்ளுவர் சமணர் அல்ல என்பதற்குக் கொடுக்கப்படும் ஏராளமான ஆதாரங்களில் இதுவும் ஒன்று. அதாவது கல்யாணம் வேண்டுமா, வேண்டாமா என்னும் பட்டிமன்றத்தில் சமண முனிவர் கல்யாண எதிர்ப்பு கோஷ்டி; வள்ளுவனும் மனுவும் கல்யாண ஆதரவு கோஷ்டி!

 

கல்லால் அடித்துக்கொள்வதே திருமணம்

 

இதோ நாலடியார் பாடல்கள்:

 

கடியெனக் கேட்டும் கடியான் வெடிபட

ஆர்ப்பது கேட்டும் அது தெளியான் – பேர்த்துமோர்

இற்கொண்டு இனிதிரூஉம் ஏமுறுதல் என்பவே

கற்கொண்டு எறியும் தவறு – நாலடியார் 364

 

பொருள்:

கல்யாணம் கட்டாதே என்று பெரியோர் சொல்லக்கேட்டும் அதை ஏற்காமல், தலை வெடிக்கும்படி சாக்கொட்டு ஒலித்து, அதைக்கேட்டும், இல்வாழ்க்கை நிலை இல்லாதது என்பதை உணராதவனாய் மறுபடியும் ஒருத்தியை மணம்புரிந்து இன்புற்றிருக்கும் மயக்கம், ஒருவன் கல்லை எடுத்து தன் தலையிலேயே போட்டுக்கொண்டது போலாகும் என்பர் சான்றோர்.

 

திருமணம் என்பதே துன்பம்

 

மாண்ட குணத்தொடு மக்கட்பேறு இல்லெனினும்

பூண்டான் கழித்தற்கு அருமையால் — பூண்ட

மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக்கண்ணே

கடியென்றார் கற்றறிந்தார் — நாலடியார் 56

 

பொருள்:

நல்ல குணங்களும் புத்திரப்பேறு என்னும் பாக்கியமும் மனைவியிடம் இல்லாவிட்டாலும் கல்யாணம் செய்துகொண்ட புருஷன் அவளை விட்டுவிட முடியாது. எனவே திருமணம் என்பது ஒருவன் தானே வலிய ஏற்றுக்கொண்ட துன்பம் ஆகும். ஆகையால்தான் உயர்ந்த ஒழுக்க நூல்களைக் கற்றுணர்ந்த ஞானிகள் திருமணம் செய்து கொள்ளாதே என்றனர்.

 

ஆக, நாலடியார் இயற்றிய சமண முனிவர்கள் திருமண எதிர் கோஷ்டி; தீவிர இந்துக்களான திருவள்ளுவனும் மநுவும் திருமண ஆதரவு கோஷ்டி.

 

 

TAGS: -சாக்ரடீஸ், திருமணம், கல்யாணம், சமண முனிவர், மநு, வள்ளுவன்

 

 

சுபம், சுபம் —

அப்பா போல பிள்ளை! காளிதாசன், வள்ளுவன் உவமைகள்! (Post No.3415)

Written by London swaminathan

 

Date: 4 December 2016

 

Time uploaded in London: 7-07 am

 

Post No.3415

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

 

ஒரு மகன், அவனது தந்தையின் நல்ல குணங்களை பின்பற்றவேண்டும். மகன் என்பவன், தந்தையின் மறு அச்சு என்று சம்ஸ்கிருத  நூல்கள், கூறுகின்றன. பிரம்மாவுக்கு எப்படி அத்ரி மகரிஷி நல்ல புத்திரனாக இருந்தாரோ, சந்திரன் எப்படி அத்ரிக்கு நல்ல புத்திரனாக இருந்தாரோ , புதன் எப்படி சந்திரனுக்கு நல்ல புத்திரனாக இருந்தாரோ, புரூருவசு மன்னன் எப்படி புதனுக்கு நல்ல புத்திரனாக இருந்தாரோ அப்படி ஆயுஸ் என்ற புதல்வன் அவன் தந்தைக்கேற்ற மகனாகப் பிறந்தான்.

பிரம்மா, அத்ரி, சந்திரன், புதன், புரூருவஸ் – என்று அழகாக ஐந்து தலைமுறைகளை அடுக்குகிறான் காளிதாசன்.

அமர முனி: இவ அத்ரி:ப்ரம்மண: அத்ரே: இவ இந்து:புத: இவ சசினாம்சோ: போதனஸ்ய ஏவ தேவ: பவ : பிது:அனுஸ்த்ரூப: த்வம்

குணை: லோக காந்தை: அதிசயினி சமாப்தா வம்சஏவாசிஷஸ்தே

–விக்ரமோர்வசீயம் 5-21

ரகுவம்சம்

 

ரகு வம்சத்திலும் மகன்கள் பற்றிய அழகிய பாடல்கள் வருகின்றன:-

அத நயன சமுத்தம் ஜ்யோத்ரத்ரேரிவ த்யௌ:

சுரசரிதிவ தேஜோ வன்னிநிஷ்டயூதமைசம்

நரபதி குல மூர்த்யை கர்பமாதத்த ராக்ஞோ

குருபிரபிநிவிஷ்டம் லோகபாலானுபாவ:

–ரகுவம்சம் 2-75

 

பொருள்:

பிறகு ஆகாசம், அத்ரி மகரிஷியின் கண்களிலிருந்து எழுந்த ஒளியாகிய சந்திரனை தரித்தது போலும், கங்கா நதி அக்னி தேவனால் கொடுக்கப்பட்ட பரமசிவனுடைய தேஜசாகிய சுப்ரமண்யனை (தரித்தது) போலும், அரசியான சுதக்ஷிணை ராஜகுலத் தின் க்ஷேமத்தின் பொருட்டு அதிகமான லோகபாலகர்ளின் அம்சங்களினால் பிரவேசிக்கப்பட்ட கர்ப்பத்தைத் தரித்தாள்.

 

லோகபாலகர்களின் அம்சம்: இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என எண்மர். இவர்களுடைய சக்தி அரசனிடம் பிரவேசிப்பதாக மனு கூறுகிறார். தமிழ் இலக்கியமும் மன்னர்களை இந்திரன் என்றும், அக்கினி என்றும், வாயு என்றும், எதிரிகளுக்கு எமன் என்றும் புகழ்கின்றன.

 

அத்ரியின் கண்களிலிருந்து விழுந்த நீர்த்துளிகளை திக் தேவதைகள் தாங்கவே அது சந்திரனாக மாஇறியது.

 

பரமசிவனுடைய கண்களிலிருந்து விழுந்த ஆறு தீபொறிகளை கங்கை தாங்கவே அது சுப்பிரமணியனாக உருவாகியது என்பது புராணச் செய்திகள்.

தமிழ்ப் புலவர் திருவள்ளுவரும் மகன் தந்தைக்குள்ள உறவைப் பற்றி பேசுகிறார்:

 

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை

என்னோற்றான் கொல் எனுஞ் சொல் (குறள் 70)

 

அதாவது ஒரு மகன் அவனுடைய தந்தைக்கு எப்படி நன்றி செலுத்துவது? இப்படிப்பட்ட ஒரு நல்ல பிள்ளையைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ? என்னென்ன நோன்புகளைக் கடைப்பிடித்தானோ?

 

ஒரு இந்துவானவன் நல்ல பிள்ளை கிடைக்க கடவுளை வேண்டுவான். மகன், வாழ்நாள் முடியும்வரை தந்தைக்கு சாப்பாடு போட வேண்டும், கை கால் பிடித்துவிட வேண்டும் என்றெல்லாம் வள்ளூவன் சொல்லவில்லை. அவன் தந்தையை விட அறிவாளியாகவும், தந்தையைப் போல குணவானாகவும் இருப்பதே பெரிய கைம்மாறு! இதனால்தான் காளிதாசனும் பிரம்மா முதல் ஐந்து தலைமுறைகளைப் புகழ்ந்து அப்படிக் குணவானாக இருந்தான் அந்தப் பிள்ளை என்கிறான்.

 

ஏனைய இடங்களில் வள்ளுவன் கூறும் கருத்துகளும் சிறப்புடைத்து. பெற்றபோது இருந்த இன்பத்தைவிட, ‘உன் மகன் அறிஞன்’ என்று சொல்லும்போது தாயார் கூடுதலாக மகிழ்வாளாம் (குறள் 69). ஒரு தந்தையினுடைய கடமை, பிள்ளையை நல்ல பள்ளியில் சேர்த்து அவனை வகுப்பில் முதல் மாணவனாகக் கொண்டுவரவேண்டும் என்றும் வள்ளுவன் வலியுறுத்துவான்.

 

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து

முந்தியிருப்பச் செயல் (குறள் 67)

ஒரு மகனுக்கு தந்தை செய்யக்கூடிய நன்மை யாதெனில் கற்றோர் உள்ள சபையில் தன் மகன் அறிவாளி என்று புகழப்படும் அளவுக்குக் கல்வியை அளிப்பதாகும்.

 

இதே கருத்தை பெரியாழ்வார் திவ்வியப்பிரபந்தத்திலும், திருத்தக்க தேவர் சீவக சிந்தாமணியிலும், கம்பன், ராமாயணத்திலும் கூறுவது ஒப்பிட்டுப் பார்த்து ரசிக்க வேண்டிய பகுதிகளாம்:-

 

என்ன நோன்பு நோற்றாள் கொலோ

இவனைப் பெற்ற வயிறுடையாள்

என்னும் வார்த்தை எய்துவித்த இருடீகேசா

–பெரியாழ்வார் 2.2-6

 

எத்துணைத் தவம் செய்தான் கொல்

என்று எழுந்துலகம் ஏத்த — சீவக.2567

 

வல்லை மைந்தவம் மன்னையும் என்னையும்

எல்லையில் புகழ் எய்துவித்தாய் என்றான்

–கம்ப, சடாயுகாண் படலம் 41

 

–சுபம்–

 

வள்ளுவர் சொன்ன ‘செக்ஸி’ உவமை! (Post No 2783)

hugging

Written by london swaminathan

 

Date: 5 May 2016

 

Post No. 2783

 

Time uploaded in London :– 6-19 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

காமத்துப் பாலில் 250 குறள்களில் காம சம்பந்தமான விஷயங்களை வள்ளுவன் பாடியிருப்பதை நாம் அறிவோம். அறம், பொருள் பற்றிப் பாடிய குறள்களிலும் ஆங்காங்கே சில ‘செக்ஸி’ உவமைகள் இருப்பது படித்து இன்புறத் தக்கது.

 

முலையிரண்டும் இல்லாத பெண், ஆசைவயப்பட்டது பற்றிப் பாடுகிறான் (குறள் 402) வள்ளுவன்.

 

அறியாமை (கல்லாமை) பற்றி பத்து குறட்பா எழுதிய வள்ளுவன் 5 பாடல்களில் அருமையான உவமைகளைப் பயன்படுத்தி உலக மஹா கவிஞன் – உவமை மன்னன் — காளிதாசனுடன் போட்டியிட முயல்கிறான்!

 

முதலில் மஹாபாரதத்தில் வரும் அறியாமை பற்றிய ஒரு ஸ்லோகத்தைக் காண்போம்:

 

“மனிதனுக்கு ஒரே எதிரி அறியாமைதான்; இரண்டாவது எதிரியே அவனுக்கு இல்லை; அறியாமையால் சூழப்பட்டவன் மோசமான கொடூரமான செயல்களில் இறங்கிவிடுகிறான்” – என்று வியாசர் சொல்லுகிறார்:-

 

ஏகசத்ருர் நத்வீயோ(அ)ஸ்தி சத்ருரக்ஞானதுல்ய: புருஷஸ்ய ராஜன்

யேனாவ்ருத: குருதே சம்ப்ரயுக்த: கோராணி கர்மாணி சுதாருனானி

–மஹாபாரதம், சாந்தி பர்வம், 297-28

 

வள்ளுவன் வாய்மொழி

உவமை 1

கல்லாதான் சொற்காமுறுதல் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற்றற்று- குறள் 402

பொருள்:- கல்லாத ஒருவன் ஒரு சபையில் பேச விரும்புவது, இயல்பாகவே ஸ்தனங்கள் (முலைகள்) இரண்டுமில்லாத ஒரு பெண், இன்பத்தை அனுபவிக்க விரும்பிய கதையாக முடியும்.

 

உவமை 2

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

களரனையர் கல்லாதவர் குறள் 406

பொருள்:-கல்லாதவர்கள் இருந்தும் இறந்தவர்களுக்குச் சமம்; அவர்கள் எதுவும் விளையாத களர் நிலத்துக்கு ஒப்பானவர்கள்.

 

உவமை 3

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவையற்று-குறள் 407

பொருள்:- ஆழ்ந்த, சிறந்த அறிவு இல்லாதவனின் அழகு (தோற்றம்) மண்பொம்மை போல இருக்கும் (தண்ணீரில் விழுந்தால் சாயம் வெளுத்துப் போகும்!)

 

உவமை 4

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்

கற்றாரோடு ஏனையவர்–குறள் 410

 

பொருள்:-நல்ல புத்தகங்களைப் படித்தவர்க்கும், படிக்காதவர்க்கும் உள்ள வேறுபாடு மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடே (படிக்காதவன் எல்லாம் மிருகம்)

 

உவமை 5

அரங்கின்றி வட்டாடியற்றே நிரம்பிய

நூலின்றிக் கோட்டி கொளல் -குறள் 401

பொருள்:- நூல் பல கல்லாமல், ஒரு சபையில் பேசுவது, கட்டம் போட்டு சதுரங்கம் வரையாமல் தாயக் கட்டையை உருட்டுவது போலத்தான்.

fool

‘உன் மனைவி ஊருக்கே மனைவி’ கதை

முட்டாள்களை எப்படிக் கண்டு பிடிப்பது? (31 அக்டோபர் 2015) என்று முன்னர் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி:–

 

நுனி மரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுபவன் மூடன், முட்டாள் என்று இந்திய இலக்கியங்கள் சித்தரிக்கின்றன. உலக மஹா கவி காளிதாசனும் இப்படி இருந்தவர் என்றும் பின்னர் காளிதேவியின் அருள் பெற்று சிறந்தவர் என்றும் செவி வழிக் கதைகள் செப்பும்.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை

முட்டாள்கள் அர்த்தம் தெரியாமல் சொற் பிரயோகம் செய்வர். தமிழில் உள்ள கதை அனைவரும் அறிந்ததே. ஒரு ஊரில் ஒரு பெரியவரின் தாயார் இறந்தவுடன் பலரும் துக்கம் விசாரிக்கச் சென்றனர். ஒரு முட்டாள் ஏது சொல்வதென்று திகைத்திருந்த தருணத்தில் எல்லோரும் செல்வதைக் கவனித்தான். “உனது தாயின் இழப்பு உனக்கு மட்டும் இழப்பன்று; அவர் ஊருக்கே தாயாக விளங்கினார். ஆகையால் இன்று நாங்கள் எல்லோரும் தாயை இழந்த பிள்ளையாகி விட்டோம் என்று பலரும் கூறினர். இவனும் அப்படியே கூறிவிட்டு,  வீட்டுக்கு வந்தான். மற்றொரு நாள் ஊர்ப் பெரியவரின் மனைவி இறந்து போனாள். இவன் எல்லோருக்கும் முன் முந்திக் கொண்டு, முந்திரிக் கொட்டை போலச் சென்றான். ஊரே கூடியிருந்தது. இந்த முட்டாள் முன்னே சென்று, “உனது மனைவியை இழந்தது உனக்கு மட்டும் துக்கமன்று. அவள் உனக்கு மட்டும் மனைவியில்லை; ஊருக்கே மனைவியாகத் திகழ்ந்தாள் இன்று நாங்கள் அனைவரும் மனைவியை இழந்த கணவர் ஆகிவிட்டோம்” என்றான். பக்கத்தில் இருந்த பத்துப் பேர் அவனுக்கு அடி உதை கொடுத்து அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்!!

 

மஹாபாரதம் இதை இன்னும் அழகாகச் சொல்லுகிறது. ஒரு கிளியானது சொன்னதைச் சொல்லும்; அழகாகச் சொல்லும். ஆனால் அதையே ஒரு பூனை பிடிக்க வரும் போது அம்மா, என்னை பூனை பிடிக்கிறது என்று சொல்லத் தெரியாது. இதே கதைதான் முட்டாள்களின் கதையும்.

 

பல மொழிகளிலும் அறியாமை பற்றிய கருத்துகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன:

 

1.Ignorance is the night of the mind (Chinese proverb)

 

மனதின் இருண்ட நேரம் அறியாமை (சீனப் பழமொழி)

 

2.There is no blindness like ignorance.

அறியாமை என்பது அந்தகத்தன்மை (குருடு)

 

3.Thedevil never assails a man except he find him either void of  knowledge or  of the fear  of god.

அறிவு இல்லாதவனையும், கடவுளை நம்பாதவனையும்தான் பேய்கள் பிடிக்கின்றன

 

4.Scinece has no enemy but the ignorant.

விஞ்ஞனத்துக்கு ஒரே எதிரி அறிவற்றவனே

 

5.Art has no enemy but ignorance

கலையின் எதிரி அறியாமை

 

6.If the blind lead the blind, both shall fall into the ditch

குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் பள்ளத்தில் விழுவர் (உபநிஷத்திலும், பைபிளிலும் உள்ள உவமை)

 

இறுதியாக மத்திய கிழக்கில் அராபிய மொழியில் உள்ள பழமொழி

He who knows not, and knows not that he knows not, is a fool. Shun him.
He who knows not, and knows that he knows not, is simple. Teach him.
He who knows, and knows not he knows, is asleep. Wake him.
He who knows, and knows that he knows is wise. Follow him.

அறியான் அறியான் தான் அறியாதவன் என்று – அவன் ஒரு முட்டாள் – ஒதுக்குக

அறியான் அறிவான் தான் அறியாதவன் என்று – அவன் எளியவன் – கற்பிக்க

அறிவான் அறியான் தான் அறிந்தவன் என்று – அவன் உறங்குகிறான் – எழுப்புக

அறிவான் அறிவான் தான் அறிந்தவன் என்று – அவன் மேதாவி – பின்பற்றுக

–சுபம்–

உங்களுக்கு வள்ளுவனையும் பாரதியையும் தெரியுமா?

valluva nayanar

தமிழ் வினா – விடை (க்விஸ்)
உங்களுக்கு வள்ளுவனையும் பாரதியையும் தெரியுமா?

திருவள்ளுவரை தினமும் புகழ்கிறோம். திருக்குறளை தமிழ் வேதம் என்கிறோம். இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

தொகுத்தவர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் 937 தேதி 27 மார்ச் 2014

இது நான் வெளியிடும் 27ஆவது க்விஸ். ஏனையவற்றையும் படித்து மகிழ்க. முந்தைய 26 தலைப்புகளைக் கடைசியில் கொடுத்துள்ளேன்.

1.திருக்குறளில் பல சம்ஸ்கிருத சொற்கள் உள்ளன. முதல் குறளிலும் முடிவுக் குறளிலும் உள்ள ஒரு சம்ஸ்கிருத சொல்லையாவது சொல்லுங்கள். (மதிப்பெண் 1)

2. வான் சிறப்பு அதிகாரத்தில் “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை” (குறள் 12) என்கிறார். துப்பு என்றால் என்ன? (மதிப்பெண் 1)

3. “அச்சமே கீழ்களது ……………..” என்ன சொன்னார் (குறள் 1075) என்று ஒரு சொல்லை மட்டும் நிரப்புங்கள். (மதிப்பெண் 1)

4.வெஃகாமை, வெருவந்த செய்யாமை, மடி இன்மை, இரவு, நல்குரவு என்ற ஐந்து அதிகாரத் தலைப்புகளின் பொருள் என்ன? ( 5 மதிப்பெண்கள் )

5.திருக்குறளின் மூன்று பால்களும் (அறம், பொருள், இன்பம்) இந்துமத புராண இதிஹாசங்களில் புழங்கும் மூன்று சம்ஸ்கிருதச் சொற்களின் மொழிபெயர்ப்பு. அவை என்ன? (மதிப்பெண் 1)

bharathy

தமிழா, தமிழா!! உனக்கு பாரதியாரைத் தெரியுமா?

பாரதியின் பெயரை அறியாத தமிழன் இல்லை. பாரதியின் பெயரை அறியாதவன் தமிழனே இல்லை! பாரதி பாடலைப் படியாதவன், படியாதவனே. உங்களைச் சோதிக்க இதோ சில கேள்விகள்.

6.யாமறிந்த புலவரிலே …….. போல், ………..போல், ……….. போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை – என்று தமிழின் பெருமையை முரசு கொட்டுகிறார். யார் இந்த மூன்று புலவர்கள்? (மதிப்பெண் 1)

7. வாழ்க ——— நாமம் வாழ்கவே! நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே ! நரகமொத்த அடிமை வாழ்வி நைந்து கழிகவே என்ற பாட்டில் யாருடைய நாமம் வாழ்கவே என்று வாழ்த்துகிறார். (மதிப்பெண் 1)

8.ஒரு ராஜாவுக்கு பாரதி இப்படி கடிதம் எழுதினார். யார் அந்த ராஜா?
ராஜமகா ராஜேந்த்ர ராஜகுல சேகரன் ஸ்ரீ ராஜ ராஜன் தேசமெல்லாம் புகழ் விளங்கும் இளசை ————–(மதிப்பெண் 1)

9. என்றும் இருக்க உளங் கொண்டாய் —- என்று துவங்கும் பாட்டில் ஒரு தமிழ்ப் பெரியாரை “இறவாய் தமிழோடு இருப்பாய் நீ? என்று வாழ்த்துகிறார். யார் அந்த புகழுக்குரியவர்? (மதிப்பெண் 1)

10. பொதிய மலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில், துதியறிவாய், அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்குவாயே என்று பாரதியார் போற்றும் தமிழர் யார்? (மதிப்பெண் 1)

11. வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம் என்று பாடத் துவங்கிய பாரதி, பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த —– ——– நீ வாழ்க! வாழ்க! என்கிறார். யாரை இப்படிப் புகழ்கிறார்?

12. தமிழ்த் தாய் என்ற பாடலில் “ ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை ஆரிய மைந்தன் ———– என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே — நிறை மேவும் இலகணஞ் செய்து கொடுத்தான். யார் அந்த ஆரிய மைந்தன்?

13. வந்தே மாதரம் என்று உயிர் போம் வரை வாழ்த்துவோம் – முடி – தாழ்த்துவோம் எந்தம் ஆருயிர் அன்னையை போற்றுதல் ஈனமோ? — அவ — மானமோ? என்று விஞ்ச் துரைக்கு பதில் கூறும் தேசபக்தர் யார்?
(11, 12, 13 கேள்விகளுக்கும் தலா மதிப்பெண் 1.)

14.ஞானப் பெருங்கடல், நல்லிசைக் கவிஞன், வானம் வீழ்ந்து உதிரினும் வாள் கொடு தடுக்கும் வீரர் நாயகன், மேதினி காத்த ———— இப்படி பாரதி போற்றும் பாஞ்சாலத்துச் சிங்கம் யார்? (மதிப்பெண் 1)

15.ஜய ஜய பவானி! ஜய ஜய பாரதம்! ஜய ஜய மாதா! ஜய ஜய துர்க்கா என்று யார் பாடுவதாக பாரதியார் எழுதியுள்ளார்? (மதிப்பெண் 1)

விடைகள்:– 1) உலகு, ஆதி பகவன், அகரம் (முதல் குறள்) காமம் (1330 கடைசி குறாள்) 2) துப்பு=உணவு, உண் 3) ஆசாரம் 4) வெஃகாமை= பிறர் பொருள் கவராது இருத்தல், வெருவந்த செய்யாமை= குடிமக்களை வருத்தாமல் இருத்தல், மடி இன்மை= சோம்பல் இல்லாமை, இரவு=பிச்சை எடுத்தல், நல்குரவு=வறுமை 5) அறம்=தர்ம, பொருள் = அர்த்த, இன்பம் =காம 6) கம்பனைப் போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல் 7) திலகன், சுதந்திரம் எனது பிறப்புரிமை என்றவர். 8) ஸ்ரீ வெங்கடேசு ரெட்டப்ப பூபதி அல்லது ரெட்டசிங்கன் 9) தாயுமானவர் மீது பாரதி பாடிய பாடல் 10) மகாமகோபாத்யாய உ.வே.சாமிநாத ஐயர் 11) வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க! வாழ்க! 12) அகத்தியன் 13) தேச பக்தர் சிதம்பரம் பிள்ளை 14) குருகோவிந்தசிம்மன் 15)சத்ரபதி சிவாஜி

Earlier Quiz posted by me:
(1&2)27 Star Quiz (In English and Tamil)
(3&4)Hindu Picture Quiz-1 (In English and Tamil)
5.தமிழ் தெரியுமா? Tamil Quiz—1
6.தமிழ் தெரியுமா? Tamil Quiz—2
7.Tamil Quiz—3 தமிழ் தெரியுமா?
8.Hindu Tamil Quiz (in Tamil)
9.Hindu Tamil Quiz (in Tamil)-2
10.Hindu Tamil Quiz (in Tamil)-3
11.Hindu Tamil Quiz (in Tamil)-4
12.Hindu Quiz–1
13.Hindu Quiz–2
14.Hindu Quiz–3
15.Hindu Quiz–4
16.Hindu Quiz on Holy Forests
17.காடுகள் பற்றி இந்து மதம்: கேள்வி பதில்
18.ராமாயண வினா விடை
19.பிள்ளையார் பற்றி வினா விடை
(20&21)Quiz on Saivaite Saints (Both Tamil and English)
22.சைவம் பற்றி வினா விடை
23 & 24) Quiz on Hindu Hymns in English and Tamil
25. Are you familiar with Number Four?
26. நீங்கள் நாலும் தெரிந்தவரா?
Contact swami_48@yahoo.com