
Article written by S.NAGARAJAN
Date: 6 June 2016
Post No. 2871
Time uploaded in London :– 4-50 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
Contact swami_48@yahoo.com
சமஸ்கிருதச் செல்வம்
வெற்றிக்கு வழி!
ச.நாகராஜன்
நான் யார்?
இப்போதுள்ள கால தேச (வர்த்தமானம்) என்ன? நல்லவை அல்லது கெட்டவை எவை உள்ளன?
எனது எதிரிகள் யார்? எனது நண்பர்கள் யார்?
என்னிடம் உள்ள வலிமை எவ்வளவு?
பயனுள்ள திட்டம் நிறைவேற்றுவதற்கு உள்ள வழிகள் எவை?
எனக்கு காலம் எப்படி இருக்கிறது? (அதிர்ஷ்ட காலம் தானா?)
எனக்கு வளம் சேரும் தொடர்ச்சி எப்படி உள்ளது?
எனது சொற்கள் நிராகரிக்கப்பட்டால் எனது பதில் என்னவாக இருக்க வேண்டும்?
வெற்றியை விரும்பும் நல்ல மனிதர்கள் வெற்றி பெறும் வழியை உறுதியாக இப்படிச் சிந்திப்பார்களேயானால் அவர்கள் ஏமாற்றம் அடைய மாட்டார்கள்!
Who am I?
What are the present time and place and what good or evil qualities in evidence?
Who are my enemies, and who are my allies?
What power have I?
What means of carrying out a useful plan?
What store of good fortune have I?
What continuance of prosperity?
And what should be my reply if my words are rejected?
Good men, who fix their minds thus steadfastly on success, are not disappointed.
( Translation by F.Edgerton)
ஒரு மானேஜ்மெண்ட் (மேலாண்மை) கோர்ஸில் கொடுக்கப்படும் அறிவுரை போல அல்லவா இருக்கிறது என்று நினைத்தால் அது சரியல்ல.
இது நமது பழைய கால பஞ்சதந்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயம்.
வெற்றி பெற எப்படி சிந்திக்க வேண்டும், எதை எதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை விவரிக்கும் அறிவுரை.
சம்ஸ்கிருத கவிதையைப் பார்ப்போம்:
கோஹம் கோ தேச காலோ சம விஷம குணா: கே த்விஷ: கே சஹாயா:
கா சக்தி: கோப்யுபாயோ ஹித காரண வித்யௌ கா ச மே தைவ சம்பத் I
சம்பத்தே: கோ அனுபந்த: ப்ரதிஹதவசனஸ்யோத்தரம் கிம் ச மே ஸ்யாத்
இத்யேவம் கார்யசித்தாவவஹிதமனஸோ நாவசீதந்தி சந்த II:
வெற்றிக்கான அருமையான உத்திகளை வகுத்துத் தருவது பஞ்சதந்திரம். டேல் கார்னீகியின் சுய முன்னேற்றக் கருத்துக்கள் எல்லாம் பழைய ‘கள்’; ஆனால் புதிய மொந்தையில் தரப்பட்டது.
உலகமும் அதை ஆரவாரத்துடன் ஏற்றுக் கொண்டது.
ஆனால் ஹிந்து சிந்தனைகள் காலத்தால் முற்பட்டவை; காலத்தை வென்றவை. என்றும் பொருந்துபவை!
******************
You must be logged in to post a comment.