மஹாபாரதத்தில் வாணிபம்- வியாபாரம் (Post No.5082)

Written by London Swaminathan 

 

 

Date: 7 JUNE 2018

 

 

Time uploaded in London – 7-22 AM

 

Post No. 5082

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

மஹாபாரதத்தில் வாணிபம்- வியாபாரம் (Post No.5082)

வேத காலம் முதல் வணிகச் செய்திகள் கிடைக்கின்றன. ‘பாணி’ என்ற வணிகர்கள் பற்றிய செய்திகளும் அவர்களின் அடாவடிச் செயல்களை இந்துக்கள் கண்டித்ததையும் வேதத்தில் காண்கிறோம்; பிற்காலத்தில் ‘பனியா’ என்ற சொல் வணிகர்களைக் குறித்தது. வியாபாரிகளைக் குறிக்கும் இச் சொல்.( ‘பாணி’  ) பீனீஷியர்களைக் குறித்ததாகவும் சிலர் கொள்வர். மாபாரதத்தில் இல்லாதது உலகில் எதுவும் இல்லை என்ற ஸம்ஸ்க்ருத ஸ்லோகம் பிரசித்தமானது “வ்யாச்சோசிஷ்டம் ஜகத் ஸர்வம்” என்பர்- அதாவது வ்யாஸ பகவானின் எச்சில்தான் உலகம் முழுதும்  உளது என்பது  தாத்பர்யம் (கருத்து)- இதன் பொருள் யாது என்றால் இவ்வுகில் வியாஸர் என்ற முனிவரின் வாயில் வராத சொல் எதுவும் இல்லை என்பதாம்.

 

உலக மஹா இதிஹாசமான– உலகிலேயே நீண்ட கவிதை நூலான– மஹாபாரதத்தில்– எதிர்பாராத ஒரு வர்த்தகச் செய்தி வருகிறது- நள தமயந்தி கதையில் அச் செய்தி உளது!

ஆரண்யக பர்வம் தரும் தகவல் இதோ:-

சேதி நாட்டில் வியாபாரம் செய்து பெரும் பொருள் ஈட்டும் நோக்கத்தோடு ஒரு பெரிய சார்த்தவாஹன வண்டித் தொடர் சென்று கொண்டிருந்தது. அது வேத்ரவதி நதியைக் கடந்து செல்லும் தருணத்தே தமயந்தியும் அக்கூட்டத்தில் சேர்ந்துகொண்டாள். வேத்ரவதியின் தற்காலப் பெயர் பேட்வா நதி. நடுக்காட்டின் வழியே சென்ற போது சார்த்தவாஹ தலைவர் மணிபத்ரா கடவுளை நோக்கிப் பிராத்தனை செய்தார்.

 

(மணிமேகலை என்பது தமிழ் வணிகர் தெய்வம்; மணிபத்ரா என்பது வடக்கத்திய வியாபாரிகளின் தெய்வம்– எனது முந்தைய கட்டுரையில் மேல் விவரம் காண்க).

 

அந்தக்கூட்டத்தில் யானைகள், குதிரைகள், ரதங்கள் எல்லாம் அணிவகுத்துச் சென்றன. அதிலுள்ள கழுதைகள்,  காளை மாடுகள், ஒட்டகங்கள், மக்கள் எல்லாம் கடல் போலக் காட்சி அளித்தன. வியாபாரிகள் மட்டுமின்றி வேதம் ஓதும் பிராஹ்மணர்களும் அதில் காணப்பட்டனர்.

(முன் காலத்தில் காடுகளைக் கடந்து வேற்றூருக்குச் செல்ல விரும்புவோர் இத்தகைய மாசாத்தனுடன் (சிலப்பதிகாரம்- மாசாத்தான்) செல்வர். அவ்வகையிலேயே தனி ஒரு பெண்ணான இளவரசி தமயந்தியும் சேர்ந்துகொண்டாள். குழந்தைகளும் பெண்களும் வயோதிகர்களும் அதில் சென்றனர் என்பதை மாபாரதம் தெளிவு படுத்துகிறது.)

 

இந்தியர் வாழ்வின் இணையற்ற என்சைக்ளோபீடியா (கலைக் களஞ்சியம்)  மஹாபாரதம்- ராக்கெட் விஞ்ஞானம் முதல் வேதாந்தம் வரை அத்தனை விஷயங்களையும் உடைத்து.

 

(கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள், காலப் பயணம், மேலுக மக்களை அர்ஜுனன் கண்டது முதலிய விஞ்ஞான விஷயங்களை எனது முந்தைய கட்டுரைகளில் கண்டு மகிழ்க)

 

இத்தகைய கூட்டத்தில் இளமைத் துடிப்புள்ள சில காமப் பிசாசுகளும் இருந்தன. அவர்கள், பேரழகியான தமயந்தியைக் கண்டவுடன் நக்கல் அடிக்கத் தொடங்கினர்; சிலர் ஜொள்ளு விட்டனர். உடனே அங்கிருந்த பெரியோர் அத்தகைய காமாந்தகர்களை விலக்கி, தமயந்தியின் சோகக் கதையை அன்புடன் வினவினர். மஹாபாரதம் இன்னும் ஒரு விஷயத்தையும் செப்பத் தவறவில்லை.

 

தமிழ் பேரர்சர்கள் படையெடுக்கும் முன் ஒரு படை (தூஸிப் படை) முன் சென்று வழி செய்தது போல, இந்த வணிகர் குழுவிலும் ஒரு தொழிலாளர் படை முன்னே சென்று காடு வெட்டி, புதர் அகற்றி வழி செய்தனவாம்; இத்தகைய சிறு விஷயங்களையும் செப்பும் இதிஹாசம் மஹாபாரதம்.

‘சார்த்தவாஹ’ வெறும் வணிகர் தலைவனாக மட்டுமின்றி அதன் எஜமானனாகவும் விளங்கினன் என்கிறது இந்நூல்.

 

மாலை நேரம் நெருங்கியது; சூரிய தேவன் மலை வாயில் விழுந்து கொண்டிருந்தான். சார்த வாஹத் தலைவன் கட்டளையின் பேரில் அவரவர் முகாம் அடித்தனர். ஆனால் அந்த முட்டாள் வணிகர் தலைவனுக்கு அது யானைப் பாதை என்பது தெரியாது. வனவிலங்குகள் குளிக்கவும் தண்ணீர் குடிக்கவும் நீர் நிலைகளை நோக்கி வரும் பாதை அது. யானைகள் தண்ணீர் குடிக்க கூட்டம் கூட்டமாக வரவே வணிகர்கள் பீதி அடைந்து ஓடினர். அவர்களில் பலர் மிதிபட்டு இறந்தனர்; ஒரே களேபரம்; அங்கும் இங்கும் அனைவரும் சிதறி ஓடினர்; துயரக் காட்சி.

 

இத்தகைய குழப்பத்துக்கு இடையே உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலிகளில் தமயந்தியும் ஒருவள் (ஒருத்தி); அவள் நளனைத் தேடிச் செல்லும் நெடும் பயணம் இது. வணிகர்களுடன் சேர்ந்து அவளும் காட்டைக் கடந்தாள்.

 

மஹாபாரதத்தில் வியாஸர் எத்தனை வகைச் செய்திகளைத் தொகுத்துட அளிக்கிறார் என்பது வியப்புறும் செய்தி;  2000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு வந்த ஒரு கிரேக்கன் இந்த நாட்டில் ஒரு லட்சம் ஸ்லோகங்கள் உடைய ஒரு கிரந்தம் (நூல்) இருக்கிறதாம் என்று வியப்புடன் எழுதியுள்ளான்.

வாழ்க மஹாபாரதம் – வளர்க இந்திய வணிகம்

 

– சுபம், சுபம்–