பிரெஞ்ச் எழுத்தாளர் வால்டே(ய)ர்(Post No.9718)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9718

Date uploaded in London – –11 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வால்டேர்  VOLTAIRE

(1694 – 1778)

வால்டேரின் முழுப்பெயர் FRANCOIS MARIE AROUET. இவர் ஒரு பிரெஞ்ச் எழுத்தாளர். புதிய சிந்தனை (AGE OF REASON) பிறந்த காலத்தில் தோன்றிய எழுத்தாளராகையால் அதனுடைய முழுநிறை தாக்கத்தை இவருடைய எழுத்தில் காணலாம்.

வால்ட்டே(ய)ர் என்பது இவரது புனைப்பெயர். உண்மைப் பெயர் பிரான்ஸ்வா மரி அருவே . இவர் 20,000 கடிதங்களுக்கு மேல் எழுதினார். 2000 புஸ்தகங்களையும் துண்டுப் பிரசுரங்களையும் எழுதி வெளியிட்டார்

இந்து மதம்

இந்து மதம் பற்றி உயர்ந்த எண்ணம் கொண்டவர்.வேதங்கள் என்பது உலகிற்குக் கிடைத்த பெரிய நன்கொடை. இதற்காக மேலை நாடுகள் கீழ்த்திசை உலகத்திற்கு என்றும் கடமைப்பட்டது என்றார்.

இந்துக்கள் அமைதியானவர்கள்; அப்பாவி மக்கள்; மற்றவர்களைத் தாக்கவும் தெரியாது. தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் தெரியாதவர்கள் . பைபிளுக்கு நல்ல பதிலடி கொடுக்கவல்லது இந்து மதம் என்றார்

அவரும் உயர்குல இந்துக்களைப் போல மாமிச உணவை வெறுத்தவர். பிராணிகளை வதைக்கக் கூடாதென்று வாதிட்டவர்.

கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தையும் பிரெஞ்சு அரசாங்கத்தையும் தொடர்ந்து தாக்கி வந்ததால் பாரிஸ் நகரைவிட்டு வெளியேற நேரிட்டது.

      பணக்கார வழக்குரைஞரின் ஐந்தாவது மகனாகப் பிறந்தார். ஏசு சமய சமூகத்தார் – இவருக்கு கல்வி புகட்டினர். இவருக்கு இளம் வயதில் தந்தை கொடுத்த படித்தொகையில் (ALLOWANCE) இவர் சுகமாக வாழ்ந்தார்.

      பாரிஸில் உயர்குடி வட்டாரத்தில் இடம்பெற்றார். அந்தக்காலத்தில் LAMPOONS என்னும் நையாண்டிக் கவிதைகளை எழுதுவது ஒரு புதிய வழக்கமாகத் தோன்றியிருந்தது.

      அவர் கடுமையாகத் தாக்கி எழுதியதன் விளைவாக சிறைக்கம்பி எண்ண நேரிட்டது. சிறையிலும் அவர் கைகள் வாளாவிருக்கவில்லை. அங்கு முதல் நாடகமான ஈடிபஸ் (OEDIPUS)ஐ எழுதினார். அதை அனைவரும் ஆர்வத்துடன் படிக்கவே மேலும் பல நாடகங்களை எழுதினார்.

      சிறையிலிருந்து விடுதலையானவுடன் இவர் உயர்குடி வட்டாரத்தில் மீண்டும் மதிப்பைப் பெற்றார். ஆனால் 1726ஆம் ஆண்டில் அவர் எழுதிய மற்றொரு புஸ்தகத்துக்காக மீண்டும் சிறை செல்ல நேரிட்டது. பிரான்ஸை விட்டு வெளியேறுவதாக இருந்தால் விடுதலை தருவதாக அதிகாரிகள் கூறினர். உடனே அவர் இங்கிலாந்துக்குச் சென்றார்.

      பிரெஞ்ச் சமூகத்தைவிட ஆங்கில சமுகத்தில் அதிக சுதந்திரம் இருப்பதாக அவர் எண்ணினார். LETTRES PHILOSOPHIQUES என்ற புத்தகத்தில் அதைப்புகழ்ந்து எழுதினார். அவர் பாரிஸ் திரும்பிய பின்னர் இதை வெளியிட்டார். இது புதிய நெருக்கடியைத் தோற்றுவிக்கவே பாரிஸை விட்டு வெளியேற நேரிட்டது.  மர்கூயிஸ் து சாதலே MARQUISE DU CHATELET என்ற அழகிய பெண்ணைக் காதலித்து அவரது வீட்டிலேயே குடியிருந்தார். அவருடைய வீடு ஷாம்பைன் CHAMPAGNE வட்டாரத்திலுள்ளது.

      1744இல் அவர் PARIS திரும்பிய போது அவருக்கு வெர்சாய் VERSAILLES அரசவையில் இடமளித்தனர். அரசவை வாழ்வு அவருக்கு இன்பம் தரவில்லை. 1749இல் மர்கூயிஸ் இறக்கவே அவர் பிரஷ்யாவின் மன்னர் இரண்டாவது பிரெடெரிக்கின் (KING FREDERICK) அழைப்பை ஏற்று

பெர்லின் நகருக்குச் BERLIN சென்றார். அங்கு அரசவையில் இடம் பெற்றார். ஆனால் இந்த அன்னியரின் நட்பை பல ஜெர்மானியர்கள் விரும்பவில்லை. இதனால் பிரெடெரிக்-வால்டேர் நட்பு கரைந்தது. 1753இல் ஏமாற்றவுணர்வுடன் பாரிஸ் திரும்பினார்.

      1755ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்துக்குச் சென்றார். பின்னர் FERNEYக்குச் சென்றார். இது ஜெனிவா நகரிலிருந்து சிலமைல் தொலைவில் பிரெஞ்ச் எல்லைக்குள் உள்ளது. இங்கு அவரது புகழ்பெற்ற CANDIDE  கதை பிறந்தது.

      1778இல் 84 வயதான VOLTAIRE பாரிஸ் திரும்பி தனது முதலாவது நாடகமான IRENEஐப் பார்த்தார். அப்போது அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் அவ்வளவு முதிய வயதில் அவருக்குக் கிடைத்த அங்கீகாரத்தை அவர் அனுபவிக்க முடியவில்லை. அதே ஆண்டு அவர் இறந்தார். 

வால்டேர் பிறந்த தேதி -நவம்பர் 21, 1694
இறந்த தே தி – மே 30, 1778
வாழ்ந்த ஆண்டுகள் – 84

PUBLICATIONS

1718- OEDIPUS

1728- THE HENRIADE

1730- BRUTUS

1731- CHARLES XII

1733- PHILOSOPHICAL LETTERS

1748- SEMIRAMIS

1751- THE CENTURIES OF LOUIS XIV

1759- CANDIDE

1760- TANCREDI

1778- IRENE

xxx—xxx

tags- வால்டேர் , VOLTAIRE,

பிறப்பொக்கும் எல்லா உயிரும்- வள்ளுவனும் வால்டேரும் (Post No.4620)

தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))

 

Research Article Written by London Swaminathan 

 

Date: 15 JANUARY 2018

 

Time uploaded in London  11-09 am

 

 

 

Post No. 4620

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

எல்லா உயிர்களும் பிறவியில் சமமாகவே இருக்கின்றன; வேற்றுமை என்பதே இல்லை; குழந்தையும் தெய்வமும் ஒன்று. பின்னர் எப்படி ஒருவரை நல்லவர் அல்லது கெட்டவர் என்று சொல்லுகிறோம்? அவரவர் செய்கையினால் இந்த வேறுபாடு தோன்றுகிறது. இதை வான் புகழ் வள்ளுவனும், பிரெஞ்சு தத்துவ அறிஞர் வால்டேரும், பகவத் கீதையின் கண்ண பிரானும், கம்பனும் அமெரிக்க  அரசியல் சாசனத்தில் ஜெப்பெர்சனும் சொல்லுகின்றனர். பிற்காலத்தில் அரசியல்வாதிகள் அனைவரும் மேடைப் பேச்சு வசன ங்களில் இதையும் சேர்த்துக் கொண்டனர்.

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான் குறள் 972

 

பொருள்

எல்லா உயிர்க்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையதே; அங்கே வேறுபாடில்லை; செய்யும் தொழிலில் காணப்படும் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால், அவர்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை.

 

கி.வா. ஜகந்நாதன் எழுதிய திருக்குறள் ஆராய்ச்சிப்பதிப்பில் கம்பனும் இதையே சொல்லுவதை எடுத்துக் காட்டுகிறார்:

 

இனையதாதலின் எக்குலத்து யாவர்க்கும்

வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்

–வாலி வதைப் படலம் 115)

 

பகவத் கீதையில் கண்ணபிரானும் (4-13) சொல்கிறார்,

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகசஹ

தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம் –4-13

பொருள்

 

என்னால் குணங்களுக்குத் தக்கபடி கருமங்களை வகுத்து நான்கு வர்ண முறை உண்டாக்கப்பட்டது; அதை நான் உருவாக்கினாலும், என்னை மாறுபாடில்லாதவன் என்பதை அறிந்துகொள்.

 

இதற்கு இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் பெரிய தத்துவ அறிஞருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய உரையிலும் இது ஜாதி அடிப்படையிலான பிரிவினை அல்ல, குணங்களின் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் அமைந்ததே என்று காட்டியுள்ளார்.

 

 

சுவாமி சித்பவானந்தர்

சுவாமி சித்பவானந்தர் எழுதிய பகவத் கீதைப் பேருரையில் இதை இன்னும் நன்கு விளக்குகிறார்:–

 

“குண பேதத்தால் சிருஷ்டி ஏற்படுகிறது. சத்வ குணம் நிறைந்திருக்கும் ஜீவன் பிராம்மணன்; சத்வ குணமும் சிறிது ரஜோ குணமும் கூடியிருப்பவன் க்ஷத்திரியன். ரஜோ குணம் பெரும்பகுதியும் சிறிது சத்துவம், தமசு ஆகியவை கூடியிருப்பவன் வைஸ்யன். தமோ குணம் பெரிதும், சிறிது ரஜோ குணமும் சேர்ந்திருப்பவன் சூத்திரன்.

 

சத்வத்தின் வர்ணம் வெண்மை. ரஜோ குணம் சிவப்பானது. தமோ குணம் கறுப்பு. பிராம்மணனுடைய நிறம் வெண்மை; க்ஷத்திரியன் செந்தாமரை போன்றவன். வைசியனுக்கு நிறம் மஞ்சள். சூத்திரன் கறுத்து இருக்கிறான். இந்நிறங்கள் ஸ்தூல சரீரத்தில் தென்படுபவைகள் அல்ல. ஸ்தூல உடலில் ஐரோப்பியர் வெள்ளையர்; ஆனால் அவர்கள் எல்லோரும் பிராம்மண இயல்புடையவர் அல்ல. அமெரிக்க இந்தியர் சிவப்பு நிறம்; ஆனால் அவர்கள் எல்லார்க்கும் க்ஷத்ரியர் இயல்பு இல்லை. மங்கோலியர் மஞ்சள் நிறம். இராமன், கிருஷ்ணர் போன்ற இந்தியர் கறுப்பு நிறம். ஆக, ஸ்தூல சரீரத்தின் நிறம் மனிதனது இயல்பை விளக்காது”.

அருமையான விளக்கம்!

xxxx

பிரான்ஸ் நாட்டின் அறிஞர் வால்டேர், “மனிதர்கள் அனைவரும் சமம் ஆனவர்களே; குணங்களினால்தான் வேறுபடுகிறார்கள்” – என்றார்.

 

‘Men are equal; it is not the birth but virtues that make the difference’.

 

xxx

 

அமெரிக்க அரசியல் சட்டத்தில் தாமஸ் ஜெஃபர்ஸன் எழுதிய வாசகங்களில் எல்லோரும் படைப்பில் சமமாகவே படைக்கப்பட்டுள்ளனர் – என்று எழுதினார். பிரெஞ்சு தத்துவ அறிஞர் ரூஸோவும் இதை மொழிந்தார். இவர்களுடைய கருத்துக்கள் பிற்காலத்தில் பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டன. சுதந்திரம்- சமத்துவம் – சஹோதரத்துவம் – என்ற கோஷம்/ கொள்கை விண்ணைப் பிளந்தது.

 

“All men are created equal”

 

 

xxx

 

முகமே மனத்தின் கண்ணாடி! வள்ளுவனும் சிஸரோவும்

 

ஒருவனுடைய முக பாவங்களை வைத்து அவன் மனக் கருத்தை அறிய முடியும். இதை வள்ளுவன் சொற்களில் வடித்தான். பரதமுனி என்ற முனிவர் நாட்டியக் கலையில் இதைப் புகுத்தி முக பாவங்களிலேயே நவரஸங்களையும் காட்டும் அரிய பரத நாட்டியக் கலையை உலகிற்கு அளித்தார்; வள்ளுவன் சொன்ன கருத்துக்களை ஷேக்ஸ்பியர், ரோமானிய அறிஞரான சிஸரோ போன்ற பலரிடத்தில் காண்கையில் பெரியோர்களின் சிந்தனைப் போக்கு ஒரே மாதிரிதான் என்ற கருத்து உறுதிப் படுகிறது.

 

வள்ளுவன் சொன்னான்

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம் – 706

 

பொருள்

ஒருவனுடை உருவம் கண்ணாடியில் பிரதிபலிப்பது போல உள்ளக் கருத்துக்களை முகமானது பிரதிபலிக்கும்.

இந்த உரை பெரும்பாலான நூல்களில் காணப்படும்; அது சரியன்று.

 

பளிங்கு என்பது ஸ்படிகம்; ஆங்கிலத்தில் கிறிஸ்டல் CRYSTAL   என்று சொல்லுவர். அதன் தன்மை என்னவென்றால் பக்கத்திலுள்ள பொருட்களின் நிறத்தை அப்படியே அது எடுத்துக் கொள்ளும்– சிவப்பு நிற பொருளின் அருகே வைத்தால் அதுவும் அப்படியே சிவப்பாகிவிடும். இப்படி ஒருவன் உள்ளத்தில் எழும் உணர்வுகளுக்கு ஏற்ப முகத்தின் பாவமோ நிறமோ மாறும். இதுவே சரியான உரை.

 

கி. வா ஜகந்நாதன் எழுதிய ஆராய்ச்சிப் பதிப்பில் இந்தக் கருத்தை எடுத்து காட்டி அதற்குச் சமமான பாடல்களையும் பிற பாடல்களையும் காட்டி இருக்கிறார். அது பளிங்கு என்பது CRYSTAL ஸ்படிகம் என்பதை உறுதிப் படுத்தும்

 

ஈர்ந்த நுண்பளிங்கெனத் தெளிந்த வீர்ம்புனல்

பேர்ந்தொளிர் நவமணி படர்ந்த பித்திகை

சேர்ந்துழிச் சேர்ந்துழி நிறத்தைச் சேர்தலான்

ஓர்ந்துணர் வில்லவர் உள்ளம் ஒப்பது

 

பம்பைப் படலம், கம்ப ராமாயணம்

 

முகம் காட்டும் உணர்வு பற்றி அகம், புறத்தில் உள்ளது.

முன்னம் காட்டி முகத்தின் உரையா- அகம்; 5-19

 

முன்னம் முகத்தின் உணர்ந்தவர் —  புறம் 3; 250

 

இது தவிர நான்மணிக்கடிகை, பழமொழி, பெருங்கதை ஆகிய நூல்களில் வரும் மேற்கோள்களையும் கி. வா.ஜ. வின் ஆராய்ச்சிப் பதிப்பு காட்டும்.

 

ஷேக்ஸ்பியரும் இக்கருத்தை ஹாம்லெட் நாடகத்தில் சொல்லுவார்.

“there is a kind of confession in your looks which your modesties have not craft enough to colour” – Hamlet , Act 2, Scene 2

xxx

 

 

ஆத்மாவின் சித்திரமே முகத்தின் தோற்றம் – என்று ரோமானிய அறிஞர் சிஸரோ, 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னார்.

 

மனத்தின் கண்ணாடி முகம்; கண்கள் குறிப்பை உணர்த்தும் அவயம்  என்றும் சிஸரோ சொன்னார்.

 

 

“The countenance is the portrait of the soul”- Cicero

 

“All action is of the mind and the mirror of the mind is face, its index the eyes”- Cicero

 

 

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற தமிழ்ப் பழமொழியும் பல மொழிகளில் உள்ளது.

 

‘Face is the index of the Mind’-  English proverb

 

 

 

 

ஒன்றே போல் சிந்திப்பர் சான்றோர் (Great Men Think Alike)- என்பது உலக வழக்கு!!

 

TAGS: — சிஸரோ, வால்டேர், பளிங்கு முகம், மனம் பிறப்பொக்கும், எல்லா உயிரும், வள்ளுவன்

 

–subham–

வால்டேர் வளர்த்த கழுகு (Post No 2558)

eagle1

Written by S Nagarajan

 

Date: 20  February 2016

 

Post No. 2558

 

Time uploaded in London :–  6-21 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

  19-2-16 பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

மேதை உள்ளம்

வால்டேர் வளர்த்த கழுகு

 

.நாகராஜன்

 voltaire

உலகின் பிரபலமான மேதைகளில் ஒருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த  வால்டேர்.(பிறப்பு 21-11-1694 மறைவு 30-5-1778) அறிவும் செல்வமும் ஒருங்கே சேர்ந்திருந்த அபூர்வமான மேதைகளை வரலாற்றில் காண்பது மிகவும் அரிது. அப்படிப்பட்ட ஜீனியஸ்களில் ஒருவராக வால்டேர் திகழ்ந்தார். அவரது மேதைத் தன்மையைப் பற்றி மேடம் நெக்கர் (Madam Necher) கூறுகையில், ‘அவர் எதையும் ஒருமுறை படித்தாலே போதும் கடைசிச் சொட்டு வரை உறிஞ்சி விடுவார். அவர் ஒரு ஸ்பாஞ்ஜ் போல.’ என்று வியப்புடன் கூறினார்

ஏராளமான நூல்களைக் கரைத்துக் குடித்த அவர் ஹிந்து நாகரிகத்தையும் ஹிந்து அறிவு மேன்மையையும் கண்டு வியந்தார்.

“நமக்கு எல்லாமே கங்கைக் கரையிலிருந்து தான் வந்திருக்கிறது” என்று பிரமித்துப் போய்க் கூறினார் அவர்.

தன் வாழ்நாளில் 2000 புத்தகங்களையும் 20000 கடிதங்களையும் அவர் எழுதியுள்ளார்!

அப்படிப்பட்ட அபூர்வ மேதை மிகவும் ஆசையாக ஒரு கழுகுக் குஞ்சை வளர்க்க ஆரம்பித்தார். அதை ஃபெர்னி என்ற இடத்தில் இருந்த தன் மாளிகையில் அது எங்கும் பறந்து போய் விடக் கூடாது என்று நினைத்து ஒரு செயினுடன் இணைத்து வளர்க்க ஆரம்பித்தார்.

ஒரு நாள் இரண்டு சேவல்கள் அந்தக் கழுகைத் தாக்க அது படுகாயம் அடைந்தது.தனது செல்லக் கழுகு காயமடைந்ததைப் பார்த்த வால்டேர் துடிதுடித்துப் போனார்.

 

உடனடியாக ஒரு அவசரச் செய்தியை ஜெனிவாவிற்கு அனுப்பினார் – நல்ல ஒரு மிருக வைத்தியரை உடனே அனுப்பி வைக்கவும் என்று. வைத்தியர் வரும் வரைக்கும் பொறுமையாக இருக்க அவரால் முடியவில்லை.

பறவை இருந்த கூண்டிற்கும் தனது சாளரத்திற்குமாக அலைந்தார். அந்த சாளரத்திலிருந்து நீண்ட நெடுஞ்சாலை நன்கு தெரியும்.

கடைசியாக தனது தூதுவனுடன் ஒரு டாக்டரும் வருவதைப் பார்த்து ஆஹா என்று மகிழ்ச்சியுடன் கூவி அவரை வரவேற்க ஓடினார்.

மாளிகையில் ஒரு பெரிய வரவேற்பு அந்த வைத்தியருக்குத் தரப்பட்டது.

“எனது கழுகை மட்டும் குணமாக்கி விடுங்கள். உங்களுக்கு வேண்டியதைத் தருகிறேன் என்றார் வால்டேர்.”

இப்படி ஒரு வரவேற்பைத் தன் வாழ்நாளிலேயே பார்த்திராத அந்த மிருக வைத்தியர் திகைத்துப் போனார்.

பறவையை நன்கு சோதனை செய்தார். அதற்குள் மிக்க கவலையுடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்த வால்டேர், ‘என்ன, கழுக்குக்கு ஒன்றுமில்லையே” என்று கவலையுடன் கேட்டார்.

 

eagle2

வைத்தியரோ,” இப்போதைக்கு ஒன்றும் சொல்ல முடியாது. முதலில் கட்டைப் போடுகிறேன். கட்டை அவிழ்க்கும் போது தான் எதையும் உறுதியாகச் சொல்ல முடியும்” என்று சொன்னார்.

அவருக்கு ஏராளமான பணத்தைத் தந்த வால்டேர், “நாளை காலை கட்டை அவிழ்த்துப் பார்த்து எனக்குச் சொல்லுங்கள்” என்றார்.

மறுநாள் கழுகின் கட்டை அவிழ்த்துப் பார்த்த வைத்தியர். கழுகின் உயிருக்கு உறுதி சொல்ல முடியாது என்றார். ஆனால் வைத்தியத்தைத் தொடர்ந்தார்.

வால்டேருக்கு புதிய வேலையாக இது  வந்து சேர்ந்தது. தனது நம்பிக்கைக்கு உரிய பணிப்பெண்ணான மேடலைனை அழைத்து கழுகை உரிய முறையில் சரியாகப் பார்க்குமாறு உத்தரவிட்டார்.

காலையில் எழுந்தவுடன் வால்டேரின் முதல் கேள்வி:” மேடலைன். என் கழுகு எப்படி இருக்கிறது?” என்பது தான்!
“ரொம்ப மோசம், ஐயா, ரொம்ப மோசம்” என்பது மேடலைனின் வாடிக்கையான பதில்.

ஒரு நாள் காலை சிரித்துக் கொண்டே மேடலைன் வால்டேரிடம் வந்து, “ஐயா, உங்கள் கழுகுக்கு இனி வைத்தியம் தேவையே  இல்லை” என்று கூறவே வால்டேர் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூவி “ஆஹா! எப்படிப்பட்ட நல்ல செய்தி! என் கழுகு நன்கு குணமாகி விட்டதா?” என்றார்

 

.”இல்லை ஐயா!  அது வாழவே லாயக்கில்லாத படி மிகவும் மெலிந்து விட்டது. அதற்கு வைத்தியமே தேவை இல்லை. அது  செத்துப் போய்விட்டது.” என்றாள் பணிப்பெண்.

இதைக் கேட்டவுடன் மிகுந்த சோகமடைந்தார் வால்டேர்.

“என் செல்லக் கழுகு செத்து விட்டது என்று சிரித்துக் கொண்டா சொல்கிறாய். உடனே இங்கிருந்து வெளியே ஓடி விடு!” என்று ஒரு கூப்பாடு போட்டார்.

நடுங்கிப்போன மேடலைன் வெளியே ஓட இந்தச் சத்தத்தைக் கேட்ட அவரின் மருமகள் டெனிஸ் ஓடோடி வந்து, “என்ன நடந்தது, மாமா?’ என்று கேட்டாள்.

ரௌத்ராகாரமாக இருந்த வால்டேர்,’இதோ இந்த மேடலைன் என் கண் முன்னால் இனி என்றும் இருக்கவே கூடாது. விரட்டி விடு அவளை”” என்று உத்தரவு போட்டார்.

“மெலிந்து விட்டதாம் மெலிந்து. செத்து விட்டதாம்! நான் கூடத் தான் ஒல்லியாக இருக்கிறேன். அதனால் என்னையும் கொலை செய்து விடலாமா? விரட்டு அவளை உடனே வெளியில்” என்று அவர் கத்தவே அந்த பணிப்பெண்ணை உடனடியாக மாளிகையை விட்டு வெளியே அனுப்பினாள் டெனிஸ்.

 

eagle-flying-on-sky

இரண்டு மாதங்கள் ஓடின. மேடலைனைப் பற்றி வால்டேர் ஒன்றுமே கேட்கவில்லை. ஒரு நாள் மெதுவாக அவர் டெனிஸிடம், அந்த மேடலைன் என்ன ஆனாள்?” என்று கேட்டார்

“ஐயோ, பாவம் அந்த மேடலைன். ஜெனிவாவில் கூட அவளுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. இங்கிருந்து அனுப்பப்பட்ட அவளை யார் தான் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள்?” என்றாள் டெனிஸ்.

“எதற்காக அவள் என் கழுகு இறந்ததைப் பார்த்துச் சிரித்தாள்? ஒல்லியாக இருந்தால் சாக வேண்டுமா என்ன? இருந்தாலும் அவள் பட்டினியாக இருக்கக் கூடாது. அவளுக்கு ஒரு வேலை போட்டுக் கொடு. ஆனால் என் கண் முன்னால் மட்டும் வரக் கூடாது. வந்தால் அவள் வேலைக்கு நான்  உத்தரவாதம் இல்லை: என்றார் வால்டேர்.

மிக்க மகிழ்ச்சியுடன் மறைவாக வைத்திருந்த மேடலைனை வேலை பார்க்க உத்தரவிட்டாள் டெனிஸ்.

ஆனால் ஒரு நாள் தற்செயலாக மேஜையிலிருந்து எழுந்த வால்டேர் மேடலைன் எதிரே நிற்பதைப் பார்த்து விட்டார். நடுநடுங்கிப் போன மேடலைன் மன்னிப்பு கேட்டவாறு முணுமுணுத்தாள்.

“ஒரு வார்த்தையும் பேசாதே! ஒன்று மட்டும் தெரிந்து கொள். மெலிந்து இருக்கும் காரணத்தினால் யாரையும் சாகடிக்கக் கூடாது. புரிந்ததா! ஓடிப் போ” என்றார் வால்டேர்.

பதறி அடித்துக் கொண்டு ஓடினாள் மேடலைன்.

 

 

கருணை வாய்ந்த உள்ளம் வால்டேருக்கு எப்போதுமே இருந்தது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

மேதையின் அபாரமான உள்ளம் மிக்க இளகிய உள்ளம்.

கஷ்டப்பட்டு செல்லம்மாள் வாங்கி வைத்திருந்த அரிசியை மகாகவி பாரதியார் சிட்டுக் குருவிகளுக்கு வாரி வாரி இறைத்துப் போட்ட சம்பவத்தை இதனுடன் ஒப்பிடலாம்.

கருணை உள்ளம் மேதைகளின் இயல்பான சொத்து!

************

.

 

 

வால்டேரும் வள்ளுவரின் திருக்குறளும்!

voltaire guinea

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Research Article: Written by ச. நாகராஜன்

Date: 14th September 2015

Pot No: 2157

Time uploaded in London :–காலை 10-02

(Thanks  for the pictures) 

 

குறள் தெளிவு

 

.நாகராஜன்

 

 valluvar

வள்ளுவர் தபால் தலை படம்

குருடன் ரோஜா செடியைப் பார்ப்பது போல!

வள்ளுவரின் திருக்குறளுக்கும் வால்டேருக்கும் சம்பந்தம் இருக்கிறதா? வியப்பாக அல்லவா இருக்கிறது.

சற்றுப் பொறுங்கள்! கட்டுரையின் கடைசி பகுதியில் தெளிவு பிறக்கும்!

ஒரு சமயம் வால்டேர் (Voltaire) அவரது நண்பரான ஷெர்லாக் (Sherlock) என்பவரிடம் பேசிக் கொண்டிருந்தார். ஷெர்லாக் அவரிடம், “வெளிநாட்டுக்காரர்கள் ஷேக்ஸ்பியரை அனுபவித்து ரஸிக்க முடியாது” என்றார். உடனே வால்டேர், “ஆமாம், அது உண்மைதான்! அவரது படைப்புகளை மொழிபெயர்ப்பின் மூலமாகவே அவர்கள் படிக்க வேண்டியிருக்கிறது. அதில் பிழைகள் ஏராளம் உள்ளன. அத்தோடு மூலத்தில் இருக்கும் அழகுகள் அத்தனையும் போய் விடுகின்றன. ஒரு குருடனை அவன் கைகளை ரோஜா செடியின் முள்கள் குத்திக் கொண்டிருக்கும் போது    ரோஜாவின் அழகைப் பார்த்து அனுபவி என்று வற்புறுத்த முடியாது” என்றார்,

வால்டேரின் இந்தக் கூற்று வள்ளுவரின் குறளுக்கும் நன்கு பொருந்தும்.அருமையான நூல் என்று திருக்குறளைப் பல மொழிகளில் மொழி பெயர்த்தாலும் அதன் அழகையும் அருமையையும் ஆழ்ந்த பொருளையும் தமிழை அறியாதவர்கள் அனுபவித்து ரஸிக்க முடியாது.

coin valluvar

வள்ளுவர் நாணயம் படம்

ஆய்விற்காக ஒரே ஒரு குறள்

எடுத்துக் காட்டாக ஒரே ஒரு குறளை மட்டும் எடுத்து அலசி ஆராய்வோம்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது       (குறள் 45)

இந்தக் குறளுக்கு G.U.Pope மொழியாக்கம் செய்த ஆங்கிலப் பெயர்ப்பு இது.

If love and virtue in the household reign,

This is of life the perfect grace and gain.

If the married life possess love and virtue, these will be both its duty and reward. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் மொழி பெயர்ப்பு சரி தான்.

ஆனால் வள்ளுவரோ தனது குறளை குறள் முழுவதும் உள்ள தேர்ந்தெடுத்து அமைக்கப்பட்ட சொற்களோடு ஒரு மர்மமான அதிசயமான முறையில் நெய்து இருக்கிறார்.

ஒரு குறளை மேலெழுந்தவாரியாகப் படித்துப் பொருளை அர்த்தம் செய்து கொண்டால் அதில் உள்ள ஆழத்தை அறிய முடியாது. அதாவது ஆழ்ந்திருக்கும் கவி உளத்தைக் காண முடியாது..

அன்பு, அறன், உடைத்து ஆயின், இல், வாழ்க்கை, பண்பு, பயன், அது – இந்த ஒன்பது சொற்களையும் அவர் குறளில் எங்கெங்கு எப்படிப் பயன்படுத்தியுள்ளார் என்பதைப் பார்க்க வேண்டும். இல் என்பதை இல்லம் என்றும் பயன்படுத்தலாம் இல்லை என்றும் பயன்படுத்தலாம். இல்லை என்ற பொருளில் அவர் பயன்படுத்தி இருந்தால் இந்தக் குறளுக்குத் தேவையற்ற இல்லை என்று வரும் குறள்களை நீக்கி விடலாம். இப்படி பொருத்தமான அர்த்தமுள்ள குறள்களைத் தனியே ஒப்பு நோக்கித் தொகுக்க வேண்டும். பொருத்தமுள்ள எல்லா குறள்களையும் பொருத்திப் பார்த்தால் பிரம்மாண்டமான அர்த்தம் வெளி வரும்.

அதாவது குறளில் சொல்லப்பட்டிருப்பது பனிக்கட்டியின் முனை போல இருக்க, உண்மையான பொருள் மறைந்திருக்கும் பிரம்மாண்டமான பனிக்கட்டியாக இருக்கிறது குறள் பாக்களில்.

voltaire

 வால்டேர் – அஞ்சல்தலை

772 இடங்களைப் பார்க்க வேண்டும்!

எடுத்துக் காட்டாக மேலே எடுத்துக் கொள்ளப்பட்ட குறளில் உள்ள வார்த்தைகளை ஆராய்வோம்.

அன்பு என்ற வார்த்தை 23 இடங்களில் வருகிறது.

அறன் என்ற வார்த்தை 21 இடங்களிலும் அறம் என்ற வார்த்தை 20 இடங்களிலும் அறத்தான் என்பது ஒரு இடத்திலும் அறத்திற்கு -2, அறத்தின் -2 அறத்து – 2, அறவோர் 1 இடங்களிலும் வருகிறது.

உடைத்து 34 இடங்களிலும் ஆயின் என்பது 35 இடங்களிலும் வருகிறது.

இல் என்ற வார்த்தை மட்டும் 118 இடங்களில் வருகிறது. வாழ்க்கை 19 இடங்களில் வருகிறது.

பண்பு 29 இடங்களிலும், பண்பின் – 3 இடங்களிலும் பண்பினார்கள் – 1 இடத்திலும் வருகிறது.

பயனும் என்பது 31 இடங்களில் வருகிறது.

அது என்ற வார்த்தை மட்டும் திருக்குறளில் எத்தனை இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியுமா?

430 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சுமாராக இதையெல்லாம் கூட்டிப் பார்த்து ஆராய ஆரம்பித்தால் 772 இடங்களை நாம் ஆய்ந்து ஒரு குறளின் உண்மையான ஆழ்ந்த பல்வேறு அர்த்தங்களைக் கண்டு பிடிக்க வேண்டும். அத்தோடு இதையொத்த குறள்கள், இதற்கு விரிவை வழங்கும் குறள்கள் போன்ற பல்வேறு வகைகள் வேறு உண்டு. தமிழனாகப் பிறந்த பேற்றை எண்ணி மகிழ்ந்தவாறே, இந்த ஒரு குறளை மட்டும் ஆராய சற்று நேரத்தை அமைதியாகச் செலவழித்தால் குறளின் கட்டுக் கோப்பும் இதர அருமைகளும் தெரிய வரும்!

இன்னும் மறைந்திருக்கும் பொருளை வேறு ஆய்ந்து உணர வேண்டும்.

ஆகவே தான் இதற்குத் தமிழ் மறை என்று பெயர் வைத்தனர்.

அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் என்ற ஔவையாரின் வாக்கிற்கு அர்த்தம் கண்டு பிடிப்பதற்கு வேறு, இன்னும் எவ்வளவு ஆராய்ச்சி நடத்த வேண்டுமோ!

ஒன்று மட்டும் நிச்சயம்! ஷேக்ஸ்பியரைப் பற்றி வால்டேரின் கூற்றில் ஐயம் இருக்க முடியாது. ஏனென்றால் ஒரு மேதையைப் பற்றிய இன்னொரு மேதையின் கணிப்பு அது. அதில் தவறு இருக்க முடியாது. அதையே ஒரு அடிப்படையாகக் கொண்டு திருக்குறளை நோக்கினால் திருக்குறளுக்கு மொழிபெயர்ப்பு எடுபடாது என்பதில் ஐயமே இல்லை.

வால்டேரின் கொள்கை வள்ளுவர் குறளுக்கும் சிறப்பாகப் பொருந்தும் என்பது தான் அவருக்கும் குறளுக்கும் உள்ள சம்பந்தம்! குறளைத் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் – முழுவதுமாக!

caoin valluvar2

காசுகளில் வள்ளுவர் படம்

தமிழர்கள் பாக்கியசாலிகள்

தமிழ் தெரிந்தவர்கள் உலகிலேயே கொடுத்து வைத்த பாக்கியசாலிகள்!

தெய்வத் தமிழ் மூலம் திருக்குறளைப் படிக்கலாம்; திருக்குறள் மூலம் தெய்வத் தமிழைத் தொழுது உய்யும் வழி அறியலாம்.

வாழ்நாள் முழுவதற்குமான துணையாக இலங்கும் ஒரே வழிகாட்டி நூல் அற்புதத் தமிழ்க் குறளே!

குறளே தான்!

************