Article written by S.NAGARAJAN
Date: 25 May 2016
Post No. 2837
Time uploaded in London :– 5-52 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
சம்ஸ்கிருதச் செல்வம்
கீதையைப் படிக்காத வாழ்வு வீணே!
ச.நாகராஜன்
ஹிந்து மதத்தின் உயரிய நூல் பகவத் கீதை. இதன் பெருமையைச் சொல்லாத மகான்களே இல்லை. ஆதி சங்கரர் ‘பகவத் கீதா கிஞ்சித தீதா’ என்று கூறி பகவத் கீதையைக் கொஞ்சமாவது படியுங்கள் என அருளுரை பகர்ந்துள்ளார்.
கீதையின் பெருமையைக் கூறும் சுலோகங்கள் ஆயிரமாயிரம் உண்டு. அவற்றில் இரு சுபாஷித சுலோகங்களை இங்கு பார்ப்போம்.
கீதா சுகீதா கர்தவ்யா கிமன்யை: சாஸ்த்ரசிந்ததே: I
யா ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத்யாத் வினி:ஸ்ருதா: I I
இதன் பொருள்:- கீதை திருப்பித் திருப்பி ந்ன்றாகப் படிக்கப் பட வேண்டும். மற்ற சாஸ்திரங்களை எண்ணி என்ன பிரயோஜனம்? ஏனெனில் இது பதமநாபனின் முக கமலத்தினின்றே வந்த ஒன்றல்லவா?
ஆக கண்ணனின் முகத்திலிருந்து வந்த அரிய நூலில் இல்லாத விஷயம் வேறு எதில் இருக்கப் போகிறது?
இதன் ஆங்கில மொழியாக்கம் இதோ:-
The Bhagavat Gita should be repeatedly recited well; of what use are thoughts about other scriptures? For, it has come out of the lotus-mouth of the Lord Krishna (the Lotus-navelled one) Himself. (Tranlation by S.B.Nair)
இன்னொரு ஸ்லோகம் மஹாபாரதத்தில் உள்ள அரிய விஷயங்களைப் பட்டியலிட்டுக் கூறுகிறது. அதில் முதலிடத்தைப் பிடிக்கிறது கீதை.
கீதா விதுரவாக்யானி தர்மா: ஷாந்தனவேரிதா: I ந ஸ்ருதா பாரதே யேன: தஸ்ய ஜன்ம நிரர்த்தகம் II
இதன் பொருள்:- எவன் ஒருவன் ம்ஹாபாரதத்தில் கீதையையோ , விதுரனின் வாக்கியங்களையோ, தர்மத்தைப் பற்றிய பீஷமரின் பொருளுரைகளையோ படிக்கவில்லையோ அவனது வாழ்வு பூமியில் வீணே!
கண்ணனின் கீதை
விதுரனின் அரத்தமுள்ள நீதி
பீஷ்மரின் தர்மோபதேசம்
ஆகிய இவை மஹாபாரதத்தின் சாரமாக அமைந்துள்ளதால் இவற்றைப் பட்டியலிட்ட கவிஞர் இதைப் படியுங்கள் என்று சொல்லி, இவற்றைப் படிக்காத வாழ்வு வீணே என்கிறார் முத்தாய்ப்பாக!
இதன் ஆங்கில மொழியாக்கம் இதோ:-
He who has not listened to the Bhagavat Gita , the speeches of Vidura and the disquisitions on Dharma by Bhishma in the Mahabharata has his birth on the earth in vain. (Tranlation by S.B.Nair)
கீதையைப் படிப்போம்;
வாழும் வழி அறிந்து அந்தப் பாதையில் செல்வோம்
உயர்வோம்!
*********
You must be logged in to post a comment.