வாஸ்து வீடு (Post No.8658)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8658

Date uploaded in London – –10 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


தர்ம ராஜா “ராஜ சூய யாகம்” நடத்தி அரசாண்டு தனது சாம் ராஜ்யத்தை 

அபிமன்யுவின் மகனான பரிஷித்தை மன்னனாக்கி
துறவரம் பூண்டு சுவர்க்கம் புகுந்தார் தம்பிகளுடன்.

பரிஷித் நியாயம் தவறாமல் அரசாண்டார். காட்டிலிருக்கும்
மிருகங்கள் நாட்டிலிருக்கும் மக்களை துன்புறுத்தாமல்
இருக்க அக்காலத்து மன்னர்கள் காட்டிற்குச் சென்று
வேட்டையாடுவது வழக்கம். படைகளுடன் சென்ற மன்னன்
ஒரு மானின் மேல் அம்பு எய்ய அதை துரத்திச் சென்ற மன்னன்
வழி தவறினான். தனித்து விடப்பட்டான்.


காட்டில் வழிதெரியாமல் அலைந்து திரிந்து கடைசியில்
ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு
ஓய் முனிவரே இங்கு ஒரு அம்பு பட்ட மான் ஓன்று ஓடியதைப்
பார்த்தீர்களா??? முனிவர் தவத்தில் இருந்தால் பதிலேதும்
கூறவில்லை. பல முறை வினவியும் பதில் வராத்தால் மன்னன்
கோபம் கொண்டு அருகில் இருந்த இறந்த பாம்பு ஒன்றைக்
கழுத்தில் போட்டுச் சென்றான்.


உணவு சேகரிக்கச் சென்ற மகன் தன தந்தை சமீகர் கழுத்தில்
இறந்த பாம்பை கண்டு ரத்தம் கொதித்து சாபம் கொடுக்க
முயன்ற போது சமீகர் பொறுமையின் சின்னமாக தன் மகன்
கிரீசனை தடுத்தார்.


ஆனால், சமீகரின் மகன் கிரீசன் என் தந்தையின் கழுத்தில் 

செத்த பாம்பைப் போட்டனோ அவன் இன்றுலிருந்து 

 “ஏழு நாட்களுக்குள்” பாம்பு கடித்து இறப்பான்”.
தகவல் அறிந்து கதறி மன்னிப்பு கேட்டான் மன்னன்.

சாபம் கொடுத்தது கொடுத்ததுதான் மன்னிப்பே கிடையாது. அதேபோல்
எழே நாட்களில் பரீஷித் மன்னன் பாம்பு கடித்து இறந்தான்
என் அப்பா ஒரு நாடாளும் மன்னன். அவரை கடித்த கொன்ற
பாம்புகளை விட மாட்டேன் என்றான் மகன் ஜனமேஐயன்.
பாம்புகளைக் கொல்ல ஒரு பெரிய யாகம் செய்ய பரிஷித் மகன்
ஜனமேஜயன்  தலைமையில் ஒரு குழு திரண்டது…….


பெரிய பந்தல் போட்டு யாகத்தை ஆரம்பித்தனர் முனிவர்கள்.

 பாம்புகள் ஒவ்வொன்றாக வந்து விழுந்தன யாகத்தில். 


அவ்வழியே வந்த ஸ்தபதி ( வீடு கட்டும் ஆலோசகர்)இந்தப்
பந்தல் வாஸ்து சாஸ்திரப் பிரகாரம் இல்லை.நாடே அழியும்.
உடனே நிறுத்துங்கள் யாகத்தை…….ஆ னால் ஜனமேஜயன்
நிறுத்த வில்லை.மேலும் மேலும் சர்ப்பங்கள் வந்து விழுந்தன.

அவ்வழியே வந்த ஆஸ்தீகர் என்னும் முனிவர்
உடனே யாகத்தை நிறத்தக் கட்டளை இட்டார்.இல்லை
யென்றால் நாடே அழியும். முனிவரே சொன்ன காரணத்தினால்
யாகம் நிறுத்தபட்டது .


வாஸ்து பிரகாரம் கட்டப்படாத எந்த இடமும் உருப்படாது.
துனபத்தையே விளைவிக்கும்.


இதோ உங்கள் வீடு எப்படி அமைய வேண்டும் என்பதை
சாஸ்திரப் பிரகாரம் வரைந்து காட்டியிருக்கிறோம்.
இதை “மாதிரியாக “ வைத்துக்கொண்டு புது வீடு கட்டி வளமாக
வாழ வாழ்த்துகிறோம்.

tags- வாஸ்து , வீடு, சாஸ்திரம்

மந்திரத்தில் எண் 12, வாஸ்து-வில் எண் 12 (Post No.7332)

WRITTEN BY  LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 12 DECEMBER 2019

 Time in London – 8-53 AM

Post No. 7332

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

செல்வம் சேர வாஸ்து வழி ! Clutter-ஐ ஒழியுங்கள்! (Post No.5083)

Written by S NAGARAJAN

 

Date: 7 JUNE 2018

 

Time uploaded in London –  8-39 am  (British Summer Time)

 

Post No. 5083

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

 

செல்வம் சேர வாஸ்து வழி

Clutter-ஐ ஒழியுங்கள்!

 

ச.நாகராஜன்

 

1

காசு மேலே காசு வரும் கட்டுரையைப் படித்தீர்களா? நீரை வடகிழக்கு மூலையில் வைத்தவர்களுக்கு செல்வம் சேருவதற்கான  நல்ல அறிகுறி வரும் என்று எழுதியிருந்தேன். அதில் சற்று கங்கா ஜலம் அல்லது பன்னீருடன் சில மலர்களையும் தூவலாம். தினம்தோறும் புதிய ஜலத்தை நிரப்புமாறும் இந்தப் பழக்கத்தைத் தொடர்ந்தால் காரண்டியாக காசு வரும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

 

சார், ஒண்ணும் பலிக்கலை சார் என்று சொல்பவர்கள் இருந்தால் அவர்களுக்காகத் தான் இந்தக் கட்டுரை.

அன்பர்களுக்கு உத்வேகமூட்ட ஒரு உண்மைச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறேன்.

 

நெருங்கிய சொந்தம். நல்ல கூர்மையான புத்திசாலி. நல்ல உழைப்பாளி. ஆனால் உழைப்புக்கும் தீர்க்கமான புத்திக்கும் தகுந்த ஊதியம் கிடைக்கவில்லை. என்னிடம் ஆலோசனை கேட்ட போது

 

Clutter-ஐ ஒழிக்குமாறு ஆலோசனை கூறினேன்.

குறிப்பாக விபத்தில் சிக்கியிருந்த ஒரு ஸ்கூட்டர் பல காலமாக வீட்டு வாசலின் முன்னால் நிறுத்தப் பட்டிருந்தது. அதை உடனடியாக அகற்றுமாறு கூறினேன்.

சில மாதம் கழித்து மீண்டும் ஆலோசனையைக் கேட்டார்.

ஸ்கூட்டர் வெளியேற்றப்படவில்லை என்பதை அறிந்த நான் கண்டிப்பாக அதை அகற்றுமாறு கூறியதோடு அதை எடுத்துச் செல்பவர்களுக்கு சற்று பணம் கூடக் கொடுக்கலாம் என்று சொன்னேன்.

 

உடனடியாக ஸ்கூட்டர் அகற்றப்பட்டது.

 

மறு நாள் இந்தியாவின் தலை சிறந்த பெரிய வங்கியிலிருந்து அவருக்கு பிரமாதமான வேலை நல்ல சம்பளத்துடன் கிடைத்தது.

மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும். வருடங்கள் உருண்டோடின. மிக நல்ல அந்தஸ்து. நல்ல செல்வம் சேர்ந்தது.

சென்ற வாரம் கூட இதைப் பற்றி அவர் குடும்பம் கூறி மகிழ்ந்தது.

 

இது போல ஏராளமான உண்மைச் சம்பவங்கள் உள்ளன.

உங்கள் வீட்டு நிகழ்வும் அதில் சேர வேண்டுமானால் Clutter-ஐ அகற்றுங்கள்.

 

2

எது சார் குப்பை என்று கேட்டால் சுலபமான பதில் எது உங்களுக்குத் தேவையில்லையோ அதெல்லாம் குப்பை தான் என்று சொல்லலாம்.

 

வீட்டில் சுவர் ஓரத்தில் தொங்கும் ஒட்டடை, பேனில் படிந்து கிடக்கும் தூசி, ஆங்காங்கு பயன்படுத்தாமல் இருக்கும் டேபிள், சேர் உள்ளிட்ட பல பொருள்களின் மீதுள்ள தூசி எல்லாமே குப்பைகூளம் தான்.

 

ஓடாத கடிகாரம் : கடிகாரம் இருக்கும்; ஆனால் அது ஓடவில்லை.

 

உடனடியாக அதை ஓடும் கண்டிஷனில் ரிப்பேர் செய்யுங்கள்; அல்லது அதை வீட்டை விட்டு அகற்றி விடுங்கள்.

இதே போல பல காலம் பயன்படுத்தாத உடைந்து போன பொருள்களை சற்று கூட தாக்ஷண்யம் இன்றி வெளியில் அகற்றி விடலாம்.

 

மலர் செடிகள் வைப்பது நல்லது தான்; ஆனால் நீர் ஊற்றாமல் அது வாடி வதங்கி  இருப்பது தான் தவறு.

பழுத்துப்போன காகிதங்கள், உபயோகமற்ற டயரிகள், தேவையற்ற பாத்திரங்கள், காலி பாட்டில்கள், முக்கியமாக பால் கவர்கள், பழைய பேப்பர்கள் .. அடடா. லிஸ்ட் முடிவில்லாத ஒன்று.

இவற்றை சிறிது பணம் கிடைக்கும் என்பதற்காக சேர்த்து வைத்து வர வேண்டிய பெரிய செல்வத்தை இழக்காமல் – அது வரும் வழியைத் தடை செய்ய விடாமல் – அகற்றி விடுங்கள்.

சரி, முக்கியமான ஆவணங்கள், வீட்டுப் பத்திரம் உள்ளிட்டவை பழையதாகத் தானே இருக்கும் அவற்றை என்ன செய்வது என்ற கேள்வி எழலாம்.

 

மிக முக்கியமான ஆவணங்களை அழகான ஃபோல்டரில், அல்லது பையில் அல்லது பைலில் வைத்து அதைச் சுற்றி ஒரு தங்க நிற ரிப்பனைக் கட்டி விடுங்கள். போதும்.

கம்ப்யூட்டரில் கூட ஈ மெயிலில் தேவையற்ற அஞ்சல்களை அழித்து விடுங்கள்.

இது வாழ்முறைப் பழக்கமாக ஆகும் போது செல்வம் சேர விடாமல் இருக்கும் தடைகள் அகலும்.

வீட்டைச் சுற்றிலும் கூட தோட்டம் உள்ளிட்டவற்றில் குப்பைகளைச் சேர்க்கக் கூடாது.

 

தோட்டத்திலிருந்து பழைய சாமான்களை அகற்றிய பிரபலமான ஒருவர் மிக உச்சத்திற்குச் சென்ற சம்பவம் கூட உண்டு.

ஆக வடகிழக்கில் நீர் வைத்தேன்; வடக்கில் காஷ் பாக்ஸை வைத்தேன் பலனில்லை என்று வருத்தப்பட்டால் உங்கள் வீட்டில் உள்ள clutter மீது கவனம் செலுத்துங்கள். அது தான் தடை!

 

3

Cleanliness is next to Godliness என்று சும்மா சொல்லவில்லை. சுக கந்த மால்ய சோபே என்று லக்ஷ்மியை போற்றுவதற்குக் காரணம் சுத்தமான நறுமணம் கமழும் இடத்தில் இருப்பவள் அவள் என்ற உண்மையை உள்ளத்தில் இருத்தியே!

ஆக அழுக்கை அகற்ற முயற்சி செய்யும் போது நல்ல அறிகுறிகளைக் காணலாம்.

வாஸ்து சாஸ்திரம் சொல்லும் உண்மை இது.

***

காசு மேலே காசு வரும்! வாஸ்து சாஸ்திரம்!! (Post No.5068)

Written by S NAGARAJAN

 

Date: 2 JUNE 2018

 

Time uploaded in London –  7- 11 am  (British Summer Time)

 

Post No. 5068

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

வளமான வாழ்க்கைக்கு வாஸ்து

 

காசு மேலே காசு வரும்!

 

ச.நாகராஜன்

வாஸ்து சாஸ்திரம் ரிஷிகளால் உருவாக்கப்பட்டது. அது பொய்க்காது.

வாஸ்து சாஸ்திரத்தின் பெருமை எல்லையற்றது. அதன்  பெருமைகளைக் கேட்பதை விட உடனடி பலன்களை எதிர்பார்ப்பதே அனைவருக்கும் பிடித்த ஒன்று.

எப்படி மின்சாரத்தின் தியரி பகுதியை அனைவரும் அறிய விரும்பாமல் ஸ்விட்சைப் போட்டால் விளக்கு எரிவதை மட்டும் விரும்புகிறார்களோ அது போல, வாஸ்து சாஸ்திரத்தின் பெருமையை முழுவதுமாக அறிவதற்கு முன்னால் அதன் பயனை உடனடியாக அனுபவிக்கத் துடிப்பதே அனைவருக்கும் பிடித்த ஒன்று.

ஒம்’ஸ் லாவும் (Ohm’s Law) கிர்சாஃப்ஸ் லாவும் (Kirchoff’s Law) யாருக்கு வேண்டும். ஸ்விட்ச் போட்டால் விளக்கு எரிய வேண்டும்; ஃபேன் சுற்ற வேண்டும்.

சரி, நேரடியாக அனைவருக்கும் பிடித்த விஷயத்திற்கு வருவோம்.

காசு மேலே காசு வரும்!

அது தானே வேண்டும்.

‘வடுவிலா வையத்து மன்னிய மூன்றனுள் நடுவணது எய்த இருதலையும் எய்தும்”

 

அதாவது குற்றமுற்ற பூமியில் அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்றனுள் நடுவில் இருக்கின்ற பொருளை அடைந்து விட்டால் அறமும் இன்பமும் தானே வரும் என்பது ஆன்றோர் வாக்கு.

சரியாகத் தான் சொன்னார்கள்.

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை!

வாஸ்து மூலம் காசு மேலே காசு வர வழி என்ன?

சுலபமானது; அதிகம் செலவில்லாதது – ஒரு வழி!

வடக்கு திசையைக் கவனியுங்கள் என்பது தான் அது.

வடக்கு திசைக்கு அதிபதி குபேரன்.

செல்வம் வேண்டுவோர் முதலில் பார்க்க வேண்டிய திசை அது.

வடகிழக்கு மூலையில் – ஹாலில் –  தினமும் ஒரு நல்ல பாத்திரத்தில் ஜலத்தை நிரப்பி வைக்க வேண்டும்; அதை மறு நாள் காலையில் அகற்றி விடவேண்டும். மறுபடியும் புதிய நீரை நிரப்ப வேண்டும்.

வடக்கு திசையில் – ஹாலில் – முக்கியமாக குப்பை கூளங்கள் இருக்க கூடாது.

வடக்கு திசையில் ஸ்டோர் ரூம் இருக்க கூடாது.

வடகிழக்கில் டாய்லட் இருக்கக் கூடாது.

அப்படி இருந்தால் அங்கு கல் உப்பை ஒரு கிண்ணத்தில் வைக்க வேண்டும். அது ஈரமாகப் போனவுடன் அதை அகற்றி புதிய உப்பை வைக்க வேண்டும்.

வடக்கு திசை செல்வத்தின் திசை என்பதால் அங்கு காசு, பணம் உள்ள பீரோவை வைக்கலாம்.

வடக்கில் செய்யக் கூடாத ஒன்று – வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது என்பது தான். அது மூளையின் செயல் இயக்கத்திற்குப் பாதகத்தை விளைவிக்கும்.

வடக்கு நீரின் திசை.

இந்தத் திசை வீட்டில் சுத்தமாக இருந்தால் அந்தஸ்து உயரும்; உயர் பதவி வரும்; செல்வம் சேரும். சொத்துக்கள் சேரும்.

இது மிகவும் பலவீனப்படுத்தப்பட்டால் – ஸ்டோர் ரூம், அழுக்கு மூட்டைகள், குப்பைகள் சேர்தல், செருப்புகளை வைத்தல் ஆகியவற்றால் பலவீனப்படுத்தப்பட்டால் – வீட்டில் செல்வம் வந்தாலும் அது உடனடியாக அகன்று விடும். இல்லத்தில் இருப்பவர் நோய்வாய்ப்படுவர். சொத்துக்கள் வில்லங்கமாகி விடும்.

ஆகவே வடக்கு திசையைக் கவனித்து வடகிழக்கு மூலையில் ஒரு பேஸினில் நீரை வைத்து 24 மணி நேரம் அல்லது 48 மணி நேரம் கவனியுங்கள்.

நிச்சயம் ஒரு நல்ல அறிகுறி தோன்றும்.

உடனடியாக இந்தப் பழக்கத்தை பலப்படுத்துங்கள்.

 

 

 

நீரில் ரோஸ் வாட்டர், பன்னீர், கங்கை ஜலம் போன்றவற்றை ஊற்றி வரவை அதிகமாக்கலாம்.

இந்தப் பழக்கத்தை ஆரம்பித்தவுடன் உங்கள் பணவரவைப் பாருங்கள்.

வடக்கில் Clusterஐ அகற்றுங்கள்.

வாஸ்து தரும் காரண்டி – காசு மேலே காசு வரும்!

***

பயனடைந்தவுடன் அன்பர்கள் தங்கள் அனுபவத்தை எழுதி அனுப்ப மறக்க வேண்டாம்!

ரோம், கிரீஸில் வாஸ்து கடவுள்

vestatemple_nero

ரோம் நகர வெஸ்டா (வாஸ்து) தேவதை கோவில் (நாணயத்தில்)

Research article by London swaminathan

Article No.1918; Dated 8 June 2015.

Uploaded at London time: காலை 6-09 மணி

வீட்டிலும், கோவில் போன்ற கட்டிடங்களிலும் வாஸ்து புருஷனைப் பூஜிப்பது, வாஸ்து அடிப்படையில் கட்டிடங்களை நிர்மாணிப்பது எல்லாம் ரிக் வேத காலத்திலேயே துவங்கிவிட்டது. அது மட்டுமல்ல அதே பெயரில், அதே நோக்கத்தில் இத்தாலிநாட்டின் தலைநகரான ரோமிலும், கிரேக்க நாட்டிலும் வழிபாடுகள் நடத்தப்பட் டூள்ளன. ஆயினும் அங்கே நிறைய புதிய கதைகளும் எட்டுக்கட்டப் பட்டுள்ளன. எப்படி நம் நாட்டில் ஒரே சிவ பெருமானும், ஒரே மஹாவிஷ்ணுவும் ஊருக்கு ஊருள்ள கோவில்களில் பல ஸ்தல புராணக் கதைகளுடன் விளங்குகின்றனரோ அதைப் போல ரோம், கிரிஸில் வேறுபாடுகள் உண்டு. ஏதோ ஒரு காலத்தில் அங்கு குடியேறிய இந்துக்கள், காலப் போக்கில் பாரதத்துடன் தொடர்பை இழந்தவுடன் அந்த ஊர்க் கடவுளுடன் இணைத்து புதிய கதைகளை உருவாக்கினர் என்று சொல்லலாம்.

ரோம் நகரில் வெஸ்டா என்ற பெயரிலும் கிரேக்க நாட்டில் ஹெஸ்தியா என்ற பெயரிலும் வீட்டிலுள்ள அக்னிமூலையில் இந்த தெய்வங்கள் வழிபட்டன. ஒவ்வொரு வீட்டிலும் குளிர்காலத்தில் சூடு ஏற்றுவதற்காக நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் அக்னி மூலை இருக்கும்.

vesta_coin4

முதலில் ரிக்வேதத்தில் உள்ள விஷயங்களைக் காண்போம். உலகின் மிகப் பழைய மத நூலான் ரிக்வேதம் குறைந்து 3700 ஆண்டுப் பழமையுடையது. இதில் வசிஷ்டர் கோத்ர ரிஷிகள் பாடிய பாடல்கள் ஏழாவது மண்டலத்தில் இருக்கின்றன. அதில் ஒரு பாடலில் (7-54-1) வாஸ்தோஸ்பதி வணங்கப்படுகிறார். வாஸ்தோஸ்பதி என்றால் வீட்டின் கடவுள் எனப்பொருள். மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் நன்மை செய்யவேண்டும்; கால்நடைகளும் குதிரைகளும் பெருகவேண்டும்;நோய்கள் அழிய வேண்டும்; பாதுகாப்பு கிடைக்கவேண்டும் என்று முனிவர்கள் வாஸ்துக் கடவுளை வேண்டுகின்றனர்.

இன்னொரு துதியில் சோமன், த்வஸ்டா ஆகியோராக வழிபடப்படுகிறார். இந்திரனுடன் ஒப்பிடப்படுகிறார்.

பத்தாவது மண்டலத்தில் வரும் ஒரு பாடலில் (10-61-7) அவர் சட்ட நியதிகளை பராமரிப்பவராகவும் கடவுளால் உருவாக்கப்பட்டவராகவும் சித்தரிக்கப்படுகிறார். பிற்காலத்தில் எழுதப்பட்ட கிருஹ்ய சூத்திரங்களில் கிரகப்பிரவேசத்தின் போது அவருக்கு படைப்புகள், காணிக்கைகள் செலுத்தவேண்டும் என்று உள்ளது. அவர் ருத்ரன் போல ஒரு துதியில் போற்றப்பாடாலும் இல்லுறை தெய்வம் அவரே என்று துதிபாடுகின்றனர்.

vesta 3

வெஸ்டா—ஹெஸ்தியா

ரோம் நகர தேவதையாக வெஸ்டா வழிபடப்படுகிறார். ஒவ்வொரு வீட்டிலும் அவர் நெருப்பு மூட்டப்படும் இடத்தில் அவள் உறைவாள். அவளுக்கு நாள் தோறும் படைப்புகள்/காணிக்கைகள் செலுத்த வேண்டும். ரோம் நகரில் ‘போரம்’ என்னும் இடத்தில் அவளுடைய பிரதான கோவில் உள்ளது. அங்கு மார்ச், ஜூன் மாதங்களில் வெஸ்டாலியா என்னும் விழா நடை பெறும். ரோம் நகரிலேயே சிறந்த பெண்கள் அந்தக் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்படுவர். அவர்கள் அங்கேயே வாழ்ந்து குறைந்தது 30 ஆண்டுகள் ப்ரம்மசாரிணியாக இருந்து விட்டு வெளியே வரலாம். இடையில் கற்புநிலை தவறினால் அவருக்கு கசையடி கொடுக்கப்படும் பின்னர் இந்தக் கசையடிக்குப் பதிலாக அவரைச் சுற்றி சுவர் எழுப்பும் விதிகள் வந்தன. எல்லா பணிகளுக்கும் அந்தக் கோவிலில் எரியும் நந்தாவிளக்கின் ஒளியிலிருந்து தீயை எடுத்துச் செல்ல வேண்டும். விழாக் காலங்களில் பெண்கள் வெறும் கால்களுடன் நடந்து வந்து ரொட்டிகள், அப்பங்களைச் சுட்டுப் படைக்கவேண்டும். வருடம் முழுதும் அங்கு தீ அணையாமல் பாதுகாக்கப்பட்டது. ரோம் நகரில் வெஸ்டாவின் தீ வட்டவடிவான குண்டத்தில் ஏற்றப்பட்டது.

இந்துமத வழக்கங்கள்

இப்பொழுது இவைகளை இந்து மதக் கடவுளருடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்:-

1.வாஸ்து என்பதே வெஸ்டா என்றும், கிரேக்க மொழியில் ஹெஸ்தியா என்றும் மருவியது

2.எல்லா இடங்களிலும் அக்னியாக, வீட்டுக்கு ஒளியூட்டும் கடவுளாக வழிபடப்பட்டது.

3.பிராமணர் வீடுகளில் தினமும் அக்னிஹோத்ரம், அவுபாசனம், சமிதாதானம் முதலிய ஹோமங்களைச் செய்வர். இதற்காக அணையாத தீ எப்பொழுதும் ஒரு சட்டியில் (உமி) வைக்கப்பட்டிருக்கும். பிறப்பு முதல் இறக்கும்போது தகனக் கிரியை வரை இதிலிருந்தே அக்னியை எடுப்பர்.

4.ஒவ்வொரு பிராமணர் வீட்டிலும் மூன்று வடிவங்களில் தட்சிணாக்கினீயம் (அரை வட்ட ஹோம குண்டம்), கார்கபத்யம் (வட்ட வடிவம்), ஆஹவனீயம் (சதுர வடிவ ஹோம் குண்டம்) ஹோம குண்டங்கள் இருந்தன. இதில் ரோம் நகரில் எப்பொழுதும் வட்டவடிவத்தில் இருக்கவேண்டும் என்று விதித்தனர்.

5.இந்துக்கள் ஆண் தெய்வமாக வஸ்தோஸ்பதியை வழிபட்டனர். ரோமானியர்கள் பெண் தெய்வமாக வழிபட்டனர். ஆனால் நாமும் கிருஹ லெட்சுமி என்றே சொல்லுவோம்

6.இந்துக்கள் கோவில்களில் நந்தாவிளக்கு என்று அனையாத தீபம் வைத்திருப்பர். அதே போல ரோமிலும் வெஸ்டா கோவிலில் தீயை அணையாமல் பாதுகாத்தனர்.இந்துப் பெண்கள் வெறும் கால்களுடன் கோவிலுக்குச் சென்று நைவேத்யம் செய்தது போல ரோமானியர்களும் செய்தனர்.

kalibanganfirealtars.

சிந்து சமவெளியில் யாக குண்டங்கள் (காளிபங்கன்)

  1. பால்டிக், ஸ்லாவ் இனமக்கள் வாழும் நாடுகளில் பெண்கள் திருமணமாகி மறுவீடு செல்லுகையில் அம்மா வீட்டிலுள்ள அக்னி மூலையிலிருந்து அக்னியை (விளக்கு) எடுத்துச் செல்லும் வழக்கம் உண்டு. பிராமணர் வீடுகளிலும் ஆண்கள் பரம்பரை பரம்பரையாக அணையாத தீ வைத்திருப்பர். அந்தக் காலத்தில் மூன்று வடிவங்களில் இருந்த ஹோம இடங்கள் இப்பொழுது ஒரு சட்டியில் எரியும் உமிக்கரியாகச் சுருங்கிவிட்டது. எனது நண்பர்கள் சிலர் இன்றும் இதே முறையில் அக்னிஹோத்ரம் செய்துவருகின்றனர்.
  2. இந்த மூன்று வடிவ யாக குண்டங்கள் சிந்து சமவெளி நாகரீக நகரான காளிபங்கனில் கண்டுபிடிக்கபட்டுள்ளன. இவைகளுக்கு சில அளவுகள், சட்டதிட்டங்கள் உண்டு. அந்தக் கணக்குகள் மிகவும் சிக்கலானவை. அவைகளை விளக்கும் சூல்வ சூத்திரங்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டன. அதிலிருந்துதான் ஜியோமிதி என்னும் கணித சாத்திரம் உலகிற்கு கிடைத்தது. இது எகிப்து நாட்டில் பிரமிடுகள் கட்டவும் உதவியது. இந்து மத எஞ்ஜினீயர்கள் அங்கு சென்றதால் பிரமிடு கட்டுவோருக்கும் நூல் பிடிப்போர் (சூல்வ சாத்திர நிபுணர்கள்) என்ற பெயர் ஏற்பட்டது. ‘பை’ முதலிய கணித எண்களை அறிந்தோரே வேத கால யாக குண்டங்களை அமைக்கமுடியும்.

9.வெஸ்டா கோவிலில் கன்னிப் பெண்கள் இருந்தது போல இந்துக் கோவில்களிலும் தேவதாசிகள் இருந்தனர்.

10.இந்தியாவில் எப்படி ஒவ்வொரு நகரத்துக்கும் ஒரு தேவதை உண்டோ அப்படியே ரோம் நகர தேவதையாக வெஸ்டா வணக்கப்பட்டாள்.

temple3

ஆதி காலத்தில் பிராமணர் வீடுகளில், இருந்த மூன்று வடிவ யாக குண்டங்கள்

நான்கு நூல்களில் கிடைத்த விஷயங்களைத் தொகுத்து நான் இவைகளை ஒப்பிட்டு ஆராய்ந்தேன். அதன் விளைவே இக்கட்டுரை.

சங்கத் தமிழ் இலக்கியங்களில் உள்ள வாஸ்து சாஸ்திர விஷயங்களைத் தனி கட்டுரையாகத் தருவேன்.