குறள் கதை-காலகாசார்யா தங்கை கடத்தல்! (Post No.5010)
WRITTEN by London Swaminathan
Date: 14 May 2018
Time uploaded in London – 11-14 am (British Summer Time)
Post No. 5010
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலு ளெல்லாம் தலை (குறள் 891)
பொருள்
தாம் எடுத்த காரியத்தை எண்ணியவாறே முடிக்க வல்லாரை இகழாமல் இருப்பது, தம்மைக் காத்துக் கொள்ளும் செயல்களில் மிகவும் முக்கியமானதாகும்.
விக்ரமாதித்தன் தொடர்பாக சமண மத நூல்களில் ஒரு கதை உண்டு. அவனைப் பற்றிய பல கதைகளில் ஒன்று இது. ஆனால் எல்லாக் கதைகளும் காலப்போக்கில் ஒரே விக்ரமாதித்தன் தலையில் கட்டிவிடப்பட்டது. விக்ரமாதித்தின் என்றால் ‘வீரத்தில் சூரியன்’ என்று பொருள். வீரத்தில் சூரியனைப் போல ஒளி உள்ளவன், தஹிப்பவன், புகழ் பெற்றவன் என்று பல பொருள் உள்ளதால் ஆதித்தன் (சூரியன்) என்ற பெயர் பல மன்னர்களின் பெயரில் — சோழ மன்னர்கள் – உள்பட சேர்க்கப்படும்.
வேதாளமும் விக்ரமாத்தித்தனும் என்ற கதையில் வரும் மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன். அவனைப் பற்றிய ஒரு சுவையான கதை இதோ:
உஜ்ஜைனியை தலைநகராகக் கொண்டு கர்த்தபில்லா என்ற மன்னன் ஆண்டு வந்தான். அப்பொழுது உஜ்ஜையினி நகரில் இருந்த மடத்தில் காலகாசார்யா என்ற சமண மதத் துறவி தலைவராக இருந்தார். அவருக்கு ஸரஸ்வதி என்ற பெயருள்ள அழகான ஸஹோதரி இருந்தாள். அவளை மடத்திலிருந்து மன்னன் கர்த்தபில்லா கடத்திச் சென்றான். உடனே காலகாசார்யாவுக்கு கோபம் வந்தது.
பொதுவாக சமணர்கள் வன்முறையில் இறங்கமாட்டார்கள். ஆகவே அவர் முறையாக மன்னனைச் சந்தித்து சகோதரியை விட்டுவிடும் படி இறைஞ்சினார். ஆனால் மன்னனோ, ராவணன், சீதையை விடுதலை செய்வதற்கு மறுத்தது போலவே ஸரஸ்வதியை விடுதலை செய்யவும் மறுத்தான். அத்தோடு காலகாசார்யாவை இகழ்ந்தான். அவமானப்படுத்தினான்.
காலகாசார்யா, அருகிலுள்ள சக மன்னன் ஒருவனை அணுகி உதவி கேட்டார். அவனிடமோ குறைவான படைகளே இருந்தன. காலகாசார்யா சொன்னார்: நானே பயிற்சி கொடுத்து, நானே தளபதி பதவி ஏற்று படை நடத்துவேன் என்று. அவ்வாறே செய்தார். கர்த்தபில்லாவை வென்று ஸஹோதரியை மீட்டார். அந்த மன்னனையும் மன்னித்தார். மன்னன் காட்டில் சென்று வசித்தான். அவனை ஒரு புலி அடித்துக் கொன்றுவிட்டது. அவனது மகனே விக்ரமாதித்யன். அவன் பெரியவன் ஆனவுடன், பக்கத்து தேசத்தில் படை திரட்டி உஜ்ஜைனி மீது படை எடுத்தான். அவன் வெற்றி பெற்ற வருடத்தில் இருந்து விக்ரம சகாப்தம் என்ற புது ஆண்டுத் தொடக்கம் ஏற்பட்டது.
இந்தக் கதைகள் எல்லாம் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர்தான் எழுதப் பட்டன. இது தொடர்பான குட்டி ஓவியங்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வரையப்பட்டன. ஆக, எது உண்மை, எவ்வளவு தூரம் உண்மை என்பதைக் கண்டுபிடிக்க முடியாது.
பெரியாரைப் பகைத்தால் ஆட்சிகள் முறியும் என்பது கர்த்தபில்லாவின் கதையில் தெரிகிறது.
காலகாசார்யா கதையைக் கூறும் ஓவியங்கள் பல மியூசியங்களில் உள்ளன. அமெரிக்காவில் ப்ரூக்ளின் மியூசியத்திலும் பல குட்டி ஓவியங்கள் இருக்கின்றன.
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுறிந்து
வேந்தனும் வேந்து கெடும் (899)
உயர்ந்த கொளகைகளை உடைய பெரியார்கள் கோபம் அடைந்தால், பெரிய வேந்தர்களும் ஆட்சியை இழந்து கெட்டுப்போவர்.
–சுபம்–
You must be logged in to post a comment.