பெண் – பல கோணங்களில்! – 1 (Post.8896)

COMPILED  BY KATTUKKUTY

Post No. 8896

Date uploaded in London – – 6 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

                                        Compiled by Kattukutty

பழி யார் மீது???

தங்க நகை இல்லாமல்

தங்கைக்கு

திருமணம் என்றேன்

தங்கை

மறுத்து விட்டாள்

xxxxx

வரதட்சிணை இல்லாமல்

எனக்கு

திருமணம் என்றேன்

என் தாய்

மறுத்து விட்டாள்

xxxx

பெண் குழந்தை

ஒன்று போதும் என்றேன்

என் மனைவி

மறுத்து விட்டாள்

xxxx

பெண்ணுக்கு பெண்ணே

எதிரி என்றால்

பழி எங்கள் மீதா ??? – இ. ராமசாமி , கோட்டக்கரை

xxxx

வர தட்சிணை

மனைவியாகும் போது

கொடுத்தவள்,

மாமியாராகும்போது

வாங்கினாள் – முல்லைப்பூ அ.முருகையன் பாப்பா நாடு

xxxxx

அம்மாவின் துணையோடு

வரதட்சிணை வில்லெடுத்து

ஆசை அம்பெறிந்தான்

அந்த வேட்டைக்காரன்

அங்கம் நிறைய

தங்க நகைகளோடு

வலையில் விழுந்தது

ஒரு பெண் மான்!!! – கருணாகர பல்லவன்

xxxx

ஜாதி

விவாகத்திற்கு

கேட்பது

விபசாரியிடம்

கேளாதது – மா.சுப்பிரமணியன், சென்னை-84

கருவிலும்

கல்லறையிலும்

இல்லாத

வார்த்தை – க.சுவிதா, சென்னை- 4

xxxxxx

பெண்நடிகையாக

அன்று கதையை

வைத்து சினிமா

இன்று சதையை

வைத்து சினிமா – உத்திராட்ச மணி, தாயார் தோப்பு

பெண்களும்

சேர்ந்து நடித்தனர்

ஆனால்

பார்ப்தென்னவோ

ஆண்கள் மட்டுமே – முகவை முத்துசாமி ,தொண்டி

உடையைக் குறைத்து

சுவருக்கு உடை

கொடுத்தாள்

போஸ்டராக – சி.என்.கணேசன் பெத்தூர்

இவள் உண்டானாலும்

தப்பு

குண்டானாலும்

தப்பு – வி.சி.கிருஷ்ண ரத்னம் காட்டாங்குளத்தூர்

xxxxxx

பெண்விதவையாக

இளம் விதவை

பூச்சூடினாள்

பொம்மைக்கு – எல்.ரவி, செ. புதூர்

விதவைக்கு

வேலை கிடைத்தது

மல்லிகைப் பூ தோட்டத்தில்

மலர் பறிக்க – தீன தயாளன், ஓடைப்பட்டி

மலையாய் குவிந்த

எந்தக் கலர் சேலையும்

பிடிக்கவில்லை

குங்குமம் போன பிறகு -ஆங்கரை பைரவி,இலால் குடி

முகர்ந்தவனுக்கு

மூச்சுப் போனதால்

முல்லைப் பூவுக்கு

முக்காடு – ஐ.ஜெய் கணேஷ் நாகர் கோவில் – 2

வண்ண ரோஜாக்களுக்கு

நடுவில் வெள்ளை ரோஜா

கலர்சாயம் பூச

யாருமில்லையோ??? – சி.முட்லூர் செல்வ குமார் சென்னை-15

விதி

கொடுத்த

விவாக ரத்து – காரை தமிழ் செல்வன்

அடப்பாவிகளா

கைம்பெண்ணை

வெள்ளாடை கட்டச்

சொல்கிறீர்கள்

மல்லிகையும்

முல்லையும்

வெள்ளைதானே

அதை சூடிக்கச்

சொல்லாததேன்??? – குடந்தை கி.மனோகரன்

பூவைக்குள்

பூகம்பம்

பூ வைக்க

தடை

விதவை – செருவை.வே.சேகர்,ஓசூர்

வாழ்க்கைப் பாதையில்

விபத்துக்குள்ளான

உணர்ச்சியுள்ள ஊர்தி – கே. ராஜா, பாவக்கல்

சமுதாய மாலையில்

உதிர்ந்து

சடங்குச் சாக்டையில்

மிதக்கின்ற

பூக்கள் – விடியல் விரும்பி, சென்றாம் பாளையம்

பூக்களை

இழந்த

செடிகள் – மு.முத்துக்கிருஷ்ணன், கொங்கணாபுரம்

இனி கடல்

தேவையில்லை

உப்பு தயாரிக்க

எங்கள் கண்ணீரே

போதும் – பி. கவிச்செழியன், திருவையாறு 23

xxxxxxxxx

பெண்விலை மாதாக

வாழ்வதற்காக

வாழ்க்கையை

இழந்தவர்கள்- சுமன் லடசுமணன்,சாயல்குடி

xxxx

காசு வாங்கினால்

விலை மாது

காசு கொடுத்தால்

கல்யாணப் பெண் – நீரோடை சந்தானம், தூத்துக்குடி

xxxx

வாழ்க்கையில்

தடம் புரண்ட

சரக்கு ரயில் – பி.என். ஜெய்சங்கர், திருவாரூர்

xxxx

தோகை விரிக்கக்

கூட

தொகையை

எதிர்பார்க்கும்

விசித்திர மயில் – தமிழவன், பாகலூர்

xxxx

தெருவோரம்

நிற்கும்

தபால் பெட்டி – ஆர்.சி.சந்திர மணி ஊத்துக்குளி ராயப்பட்டி

xxxx

வாழ்க்கைப் புயலில்

சிக்கி

தரை தட்டிய

கப்பல். – பி.என் .ஜெய்சங்கர்,திருவாரூர்

tags–
பெண், விதவை,
  பல கோணங்களில்           

                                     ****

அழகிய பெண்ணுக்கு எது ஆபரணம் ?! (Post No.8694)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8694

Date uploaded in London – – 17 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

விதவையின் நெற்றியில் குங்குமப் பொட்டா?!

ச.நாகராஜன்

புதிரைக் கொண்டுள்ள விசித்திரமான ஒரு சுபாஷிதத்தை இப்போது பார்ப்போம்.

கிம் பூஷணம்  சுந்தரசுந்தரீணாம்

      கிம் தூஷணம் பாந்தஜனஸ்ய நித்யம் |

கஸ்மின் விதாதா லிகிதம் ஜனானாம்

      சிந்தூரபிந்து விதவாலலாடே ||

ஒரு அழகிய பெண்ணுக்கு எது ஆபரணம்?

சிந்தூரப் பொட்டு ( நெற்றியில் இடும் குங்குமப் பொட்டு)

ஒரு யாத்திரைக்குக் கிளம்பும் போது கெட்ட சகுனம் எது?

விதவை ஒருத்தி எதிரில் வருவது! (விதவா)

பிரம்மா தலைவிதியை எங்கு எழுதி இருக்கிறான்?

நெற்றியில் (லலாடே)

இந்த சுபாஷிதத்தின் கடைசி வரி விசித்திரமான நையாண்டியான ஒரு வரியைத் தருகிறது. ஆனால் அதில் தான் மூன்று கேள்விகளுக்கும் தனித் தனியே விடையை அளிக்கிறது.

கடைசி வரி : ஒரு விதவையின் நெற்றியை அலங்கரிக்கும் சிந்தூரப் பொட்டு!

இது வழக்கத்திற்கு மாறான விநோதமான ஒரு செய்கை அல்லவா?

ஆனால் இந்த சிந்தூரபிந்து விதவா லலாடே என்ற வரியை சிந்தூர பிந்து, விதவா. லலாடே என்ற மூன்று வார்த்தைகளாகப் பிரித்தால் மூன்று கேள்விகளுக்கும் விடை வருகிறது.

இது கவி சமத்காரம்!

What is the ornament to highly charming women?

Sindura – bindu  (the mark of saffron on the forehead.

What is always inauspicious to one who sets out on a journey?

Vidhava (The sight of a widow)

Where has Brahma inscribed his letters of fate?

Lalate (On the forehead)

(The last line which gives the answers, by itself gives an absurd meaning : “The mark made by saffron on the forehead of a widow!’)

                    – Translation by A.A.R

*

இதையே சற்று மாற்றித் தருகிறார் இன்னொரு கவிஞர்!

கிம் பூஷணம் வா ம்ருகலோசனாயா:

    கா சுந்தரி யௌவனதுக்கபாரா: |

தாதா லிலி வாஅ வித்தாதி குத்ர

     சிந்தூரபிந்து விதவா லலாடே ||

மான்விழியாளுக்கு எது ஆபரணம்?

சிந்தூர பிந்து.

எந்த அழகிய பெண் யௌவன வயதிலேயே துக்கத்தில் ஆழ்கிறாள்?

விதவையான இளம் பெண்

விதி எந்த இடத்தில் தன் எழுத்தை எழுதுகிறது?

நெற்றியில்

கடைசி வரி : ஒரு விதவையின் நெற்றியை அலங்கரிக்கும் சிந்தூரப் பொட்டு!

சென்ற சுபாஷிதத்தைப் போலவே அதே வரி தான்!

இந்த சிந்தூரபிந்து விதவா லலாடே என்ற வரியை சிந்தூர பிந்து, விதவா. லலாடே என்ற மூன்று வார்த்தைகளாகப் பிரித்தால் மூன்று கேள்விகளுக்கும் விடை வருகிறது.

What is the ornament to a gazelle-eyed damsel?

Sindura-binduh (the mark made of saffron on the forehead)

Which beautiful woman is burdened by sorrow in her youth?

Vidavah (Widow)

Where does fate inscribe its letters?

Lalate (on the forehead)

(The last line, which gives the answers to all the three questions, by itself absurd; “The mark made of saffron on the forehead of a widow”)

  • Translation by A.A.R

     *

அழகு பிறக்கும் இடம் எது?

கிமன்யஸ்தி ஸ்வபாவேன சுந்தரம் வாப்யசுந்தரம் |

யதேவ ரோசதே  யஸ்மை  பவேத் தத் தஸ்ய சுந்தரம் ||

ஸ்வபாவமாகவே – அதாவது இயற்கையாகவே – ஏதாவது ஒன்று அழகுடையதா அல்லது இல்லையா? எது மனதிற்கு ஒருவனுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதோ அவனுக்கு அது அழகு தான்!

Is anything naturally beautiful or not beautiful? Whatsover is indeed is pleasing to anyone, to him that will be beautiful.

  • Translation by F. Johnson

மிக மிகப் பழைய காலத்தில் கூறப்பட்ட இந்தக் கருத்தை கிரேக்க நாடும் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர், Beauty is in the eye of  the beholder’ – பார்ப்பவனின் கண்ணில் தான் அழகு இருக்கிறது  கூறி இருக்கிறது!

tags- அழகி,  பெண், ஆபரணம், விதவை, நெற்றி,, 

          ***