காலம் என்னும் மர்மம்! – 1

apple-kitchen-wall-clocks

ஹிந்து தத்துவ விளக்கம்                                          புதிய தொடர்

காலம் என்னும் மர்மம்! – 1

Written  by S NAGARAJAN

Date: 31 October 2015.

Post No:2288

Time uploaded in London :–  7-16 AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

.நாகராஜன்

1

வியாசர் சுகருக்கு விளக்கியது        

காலம் என்னும் மர்மத்தை இந்திய நூல்கள் விளக்கியுள்ளது போல உலகின் வேறு எந்த நூல்களும் விளக்கவில்லை.

விஞ்ஞானிகளில் கார்ல் சகன் உள்ளிட்டோர் ஹிந்து மதத்தில் காலம் விளக்கப் பட்டுள்ள விதத்தை வியந்து பாராட்டி உள்ளனர். அதன் மீதுள்ள மதிப்பின் காரணத்தால் கால நடனத்தைஆடும் நடராஜரையும் தங்கள் காஸ்மாஸ் (Cosmos) தொடரில் பயன்படுத்தி உள்ளனர்.

 

 

மஹாபாரதத்தில் காலம் பற்றிய விவரம் ஏராளமான இடங்களில் பல்வேறு நோக்கில் விளக்கப்பட்டுள்ளது.

ஒரு சிலவற்றை இங்கு பார்ப்போம்.

சாந்தி பர்வம் 244வது அத்தியாயத்தில் வருவது இது.

வியாச முனிவர் சுக முனிவருக்கு காலத்தைப் பற்றி இப்படி விவரிக்கிறார்:-

காலமானது நானாவிதமாக ஏற்பட்டிருக்கிறது. என்னால் உனக்கு முன்னே சொல்லப்பட்டதும், மக்களை உண்டு பண்ணுகிறதும், அழிப்பதுமான (பரமாத்ம ரூபமான) காலமானது ஆதி, அந்தம் இல்லாதது.

 

 

பூதங்களுடைய உற்பத்தியையும், பாலனத்தையும், அழிவையும் செய்யும் ஆகிய இவற்றின் விளக்கமாக அமைகிறது காலம்.

ஒன்றுக்கொன்று தொடர்ச்சியாக படைக்கப்பட்ட பூதங்கள் தமது இயல்புடன் கூட அப்படிப்பட்ட காலத்தில் இருக்கின்றன.

காலமே சிருஷ்டி. காலமே துஷ்டி.

காலமே வேதம். காலமே கர்த்தா.

காலமே காரியம். காலமே கர்மத்தின் பலன்.

argos clock 2

 

2

இந்திரனுக்கும் பலிக்கும் நடந்த சம்வாதம்

இந்திரனுக்கும் விரோசனன் மகனான பலிக்கும் இடையில் நடந்த சம்வாதம் – (அர்த்தமுள்ள உரையாடல்) – காலத்தின் வன்மையை நன்கு விளக்குகிறது.

பாழடைந்த வீட்டில் கழுதை வேஷத்தில் இருந்த பலியைப் பார்த்த இந்திரன், “அசுர வேந்தனே! உன் பெரிய குடை எங்கே? பொன் பாத்திரம் எங்கே? பிரம்மதேவர் உனக்கு அளித்த மாலை எங்கே?” என்று கேட்டான்.

பலி இந்திரனை நோக்கி நகைத்து, “அவற்றையா கேட்கிறாய்? யாவும் காலத்தால் வரும்! .நல்ல காலத்தில் போகாது.

 

 

இவ்வுலகத்தில் யாவும் காலத்தின் மாறுதலில் எல்லாமே நிலையற்றனவாயிருப்பதைக் கண்டு நான் சோகப்படாமல் இருக்கிறேன்.

இவ்வுலகம் அனைத்தும் முடிவுள்ளதாக இருக்கிறது.

கொன்ற பின்னும் வென்ற பின்னும் புருஷ வீரம் உள்ளவன் போல் இருக்கின்ற மனிதன் உண்மையில் கர்த்தாவே அல்ல. கர்த்தாவாய் இருப்பது தான் அதைச் செய்கிறது.

மற்றும் சிலர் ஒன்றாய் இருக்கும் காலத்தை வருடங்கள் என்றும், மாதங்கள் என்றும், பட்சங்கள் என்றும், தினங்கள் என்றும், க்ஷணங்கள் என்றும், காலை என்றும், மாலை என்றும், நடுப்பகல் என்றும், முகூர்த்தம் என்றும் பல விதமாகக் கூறுகிறார்கள்.

 

 

இவ்வுலகம் யாவும் எதன் வசத்தில் இருக்கிறதோ அதைக் காலம் என்று தெரிந்து கொள்!

இந்திரனே! உன்னைப் போல் வன்மையும் பராக்ரமும் பொருந்திய பல்லாயிரம் இந்திரர்கள் காலம் சென்றார்கள். உனக்கு கர்வம் வேண்டாம். வருங்காலத்தில் உள்ள கதியை எவன் கண்டான்?”

 

காலத்தின் வன்மையையும், தன்மையையும் பலி, இந்திரனுக்கு இப்படி விளக்கினான். (மஹாபாரதம் சாந்தி பர்வம் 234வது அத்தியாயத்தில் ஒரு சிறு பகுதி சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது)

 

antique-kitchen-wall-clocks

3

பிருஹஸ்பதியிடம் மனு கூறியது

பிருஹஸ்பதியிடம் மனு காலத்தைப் பற்றி விவரிக்கிறார் :-

பூமியின் உருவத்தை விட ஜலத்தின் உருவம் பெரியது.                            

ஜலத்தை விட தேஜஸ் பெரியது.                                                  

தேஜஸை விட வாயு பெரியது.                                                        

வாயுவை விட ஆகாயம் பெரியது.                                                          

ஆகாயத்தை விட மனம் மிகப் பெரியது.                                      

மனத்தை விட புத்தி பெரியது.                                                          

புத்தியை விடக் காலம் பெரியது, என்று இப்படிச் சொல்லப்படுகிறது.

 

இந்த உலகமெல்லாம் எந்த விஷ்ணுவின் உருவமோ அந்த விஷ்ணு காலத்தை விடப் பெரியவர்!

மிக அழகாக ஒவ்வொன்றையும் ஒப்பிட்டு எது எதை விடப் பெரியது என்பதைப் பட்டியலிட்டுக் காட்டுவது ஹிந்து இலக்கியம் ஒன்று மட்டுமே! இப்படி எதை எதனுடன் ஒப்பிட வேண்டும் என்பதே மற்ற பழைய நாகரிகத்தினர்க்குத் தெரியுமா என்பது ஐயப்பாடே! எதிர்காலத்தில் விஞ்ஞானம் இவற்றைப் படிப்படியாக நிரூபிக்கும் என்பதில் ஐயமில்லை.

(சாந்தி பர்வம் 204வது அத்தியாயம்

 

மஹாபாரதம் இன்னும் பல்வேறு இடங்களில் காலம் பற்றி விரிவாக விளக்குகிறது! காலத்தைப் பற்றி மிக விளக்கமாக அறிந்து கொள்வதால் ஏற்படும் முதல் பலன் எல்லையற்ற கால வெள்ளத்தில் நாம் சிறுதுளியினும் சிறுதுளியே என்பதை அறிவதன் மூலம் நம் அகங்காரம் அகலும். அத்துடன் கூட  ‘நிலையாமைஎன்பது நன்கு புரியப் புரிய மன அமைதி தானே உருவாகும்!

***********         (தொடரும்)

வியாசருக்கு இரண்டு நோபல் பரிசுகள் தருக!

VYASA top

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1459; தேதி 5 டிசம்பர், 2014.
(This is already posted in English)

உலகிலேயே மிக நீண்ட நூலான மஹாபாரதத்தை இயற்றிய,
உலகிலேயே மிகப் பழைய நூலான வேதங்களை நமக்குப் பாதுகாத்து அளித்த,
உலகிலேயே அதிகமான சமயக் கதைகளைக் கொண்ட 18 புராணங்களை நமக்கு தொகுத்துத் தந்த
வியாச மாமுனிவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசையும் இலக்கியத்துக்கான நோபல் பரிசையும் அளிக்க வேண்டும்.

அவர் காலத்தில் நோபல் பரிசு போன்ற ஒரு பரிசு இருந்திருக்குமானால் அவருடன் போட்டி போட யாருமே இருந்திருக்க மாட்டார்கள்.

இந்தியாவில் மிகவும் கறுப்பாகவும் அவலட்சணமாகவும் பிறந்த முனிவர் வியாசர். இவருடைய அம்மா ஒரு மீனவப் பெண்மணி. பெயர் சத்யவதி. அப்பா பெயர் பராசர முனிவர். வியாசருக்குப் பெயரே “தீவில் பிறந்த கறுப்பன்”, அதாவது கிருஷ்ண த்வைபாயன வியாசன்.

இவர் எவ்வளவு அவலட்சணம் என்றால், ராஜ வம்சத்தை நடத்திச் செல்ல பிள்ளைகள் இல்லாமல் விசித்ரவீர்யன் இறந்துவிட்டான் என்பதால் அவனது மனைவியர் அம்பா, அம்பாலிகா ஆகியோர் மூலம் பிள்ளைகளை உண்டாக்கு என்று அம்மா இட்ட கட்டளையை சிரமேற்கொண்டார். ஆனால் இவரைப் பார்த்தவுடன் அவர்கள் இருவரும் வெறுப்பால் படுக்க மறுத்தனர். பின்னர் அறுவறுப்புடன் படுத்ததால் ஒரு குழந்தை குருடாகவும் மற்றொரு குழந்தை ‘’ஆல்பினோ’’ குறையுடன் வெளுப்பாகவும் பிறந்தன. மூன்றாவது முறை அவருடன் படுத்து நல்ல பிள்ளையைப் பெறு என்று அம்மா சொன்ன போது அப்பெண்மணிகள் வேலைக் காரியை வியாசருடன் படுக்க அனுப்பவே ஒரு கள்ளப் பிள்ளை பிறந்தது. அவ்வளவு கறுப்பு/அவலட்சணம்!

Shree-Vyasa-Ji4

ஆனால் உலகிலேயே ஒரு தூய ஆன்மா, ஒரு மகத்தான ஆன்மா இருந்ததென்றால் அது வியாச மாமுனிவனே. உலகில் யாரும் சாதிக்க முடியாத மகத்தான பணிகளைச் செய்தார். ஆகையால் தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்போர் இவரை விஷ்ணு என்று போற்றுவர் (வியாசாய விஷ்ணு ரூபாய வியாச ரூபாய விஷ்ணவே). இவரைத்தான் இந்துக்கள் முதல் குருவாக கருதி ஆண்டுதோறும் வியாச பவுர்ணமியை குரு பூஜையாகக் கொண்டாடுகின்றனர்.

அவர் செய்த மகத்தான இலக்கியப் பணிகள்
1.அவர் வாழ்ந்த கி.மு.3100-ல் வேதங்கள் அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டது. காரணம் அதை எழுதக் கூடாது, வாய் மொழியாகத்தான் கற்க வேண்டும் என்ற விதி இருந்தது. யாரும் அத்தனை வேதங்களையும் மனப்பாடம் செய்ய முடியாது. மேலும் வேதங்கள் எண்ணிக்கையில் கடல் போலப் பெருகிவிட்டன. உடனே அவர், அழிந்துபோனதைத் தவிர மிச்சமுள்ள வேதங்களைத் தொகுத்து நாலு மிகப் பெரிய அறிவாளிகளை அழைத்து அவர்கள் மூலம் பரவச் செய்தார். இன்று வரை வாய் மொழியாக வேதம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகில் இப்படிப்பட்ட அதிசயத்தை வேறு எங்குமே காணமுடியாது.

உலகிலேயே பழமையான நூலான வேதங்களில் மனிதகுலத்தின் வரலாறும் உயரிய சிந்தனைகளும் இருக்கின்றன. சில வெளிநாட்டுக் காரர்கள் வேண்டுமென்றே இதை சுமேரிய ஜில்காமேஷ் காவியத்துக்குப் பின்னர் என்பர். முதலில் ஜில்காமேஷ் காவியம் முழு உருப்பெற்றது கி.மு 800 வாக்கில்தான். இரண்டாவது அது ஆதிமனிதனின் அடிபிடிச் சண்டை பற்றிய அசுர காவியம். அவரை யாரும் வழிபட்டதும் இல்லை
vyasa3

2.தமது காலத்தில் இந்தியாவில் வழங்கி வந்த அத்தனை பழமொழிகள், கதைகள், தர்ம விதிகள் அனைத்தையும் தொகுத்து அவற்றை மஹாபாரத கதையுடன் அழகாகப் பின்னிப் பிணைந்து உலகிலேயே மிகப் பெரிய இதிஹாச நூலை உருவக்கினார். மஹபாரதத்தில் இரண்டு லட்சம் வரிகளும் சுமார் ஒரு மில்லியன் சொற்களும் உள. அது மட்டுமல்ல. வியாசர் அதில் முதல் பகுதியிலேயே (ஆதிபர்வம்) ஒரு சவாலும் விட்டார். உலகில் உள்ள எல்லாப்பொருளும் இதனில் உள. இதனில் உள்ள அத்தனை பொருளும் வேறு எங்கும் இல என்றார். அதுவும் உண்மையே. அத்தனை விஷயங்களும் நீதி நெறிகளும் இந்த இதிகாசத்தில் இருக்கின்றன.

3.அவர் செய்த மூன்றாவது சாதனை 18 புராணங்களைத் தொகுத்ததாகும். நூற்றுக்கணக்கான புராணங்கள் இருந்தபோதிலும் அவற்றில் சிறப்புமிக்க 18-ஐ எடுத்து அவைகளை எழுதினார். எட்டு லட்சம் பாக்களையும் 16 லட்சம் வரிகளையும் உடைய புராணங்களில் இந்து மதத்தின் சாரம் கதைகள் வாயிலாக வெளிப்படுத்தப்படுகின்றது. இதுவும் அவர் செய்த சாதனை.

வியாசர் இந்த சதானைகளைச் செய்த காலத்தில் உலகில் வேறு எந்த மொழியிலும் இலக்கியம் இல்லை. மோசஸ் பிறக்கவே இல்லை. கிரேக்க கதாசிரியர் ஹோமரும் பிறக்கவில்லை. சம்ஸ்கிருத வேதம் தவிர உலகில் வேறு எந்த நூலும் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பாடல்கள் மட்டும் சில மொழிகளில் இருந்தன. இலக்கியமென்று எதுவும் இல்லை!

இந்த மூன்று காரணங்களுக்காக வியாசருக்கு இலக்கிய நோபல் பரிசு கொடுக்கவேண்டும். அவர் தோன்றியிராவிடில் இந்துமதம் அழிந்தே போயிருக்கும்.

vyasa02

சமாதான நோபல் பரிசு எதற்கு?
மஹாபாரதப் போரைத் தவிர்ப்பதற்காக திருதராஷ்டிரனுக்கு எவ்வளவோ புத்திமதி சொல்லி உன் பிள்ளையை அடக்கு என்றார். ஆனால் அவர் முக்காலமும் உணர்ந்த முனிவர் என்பதால் போர் நடைபெறப்போவதும், அதன் முடிவும் அவருக்கு முன்கூட்டியே தெரியும்.

இதைவிட அவர் செய்த மிகப் பெரிய சமாதான வேலை ரிக் வேதத்தில் சமாதானம், அமைதி, உலக நலன் பற்றிய பாக்களை முதலாவது மற்றும் பத்தாவது மண்டலத்தில் சேர்த்ததாகும். ரிக் வேதத்தின் கருத்து என்ன என்பதைச் சொல்லும் முகத்தான், கடைசி பாடலாக அமைதி பற்றிய ஒரு பாடலை வைத்தார். மஹா பாரதத்தில் பாரத சாவித்ரி என்ற பகுதியில் நாலே ஸ்லோகங்களில் அதன் கருத்தை வெளியிட்டார். அதே போல மகத்தான வேதத்தின் கருத்தை கடைசி பாடலில் வெளியிட்டார். உலக மகா தேசிய கீதமாக வைக்கத் தக்க பாடல் அது.

உலக நாடுகள், இரண்டு உலகப் போர்களை நடத்தி பல லட்சம் மக்களைச் சாகடித்த பின்னர் ஐ நா சாசனத்தில் எழுதிய விஷயங்களை அதற்கு முன்னரே — 5000 ஆண்டுகளுக்கு முன்னரே — எழுதி விட்டார். அகவே அவருக்கு சமாதான நோபல் பரிசும் உரித்தாகுக!

vyasa 1
இதோ அவர் நமக்கு தொகுத்தளித்த ரிக் வேதத்தின் கடைசி பாடல் ( ரிக் வேதம் 10-191) வரிகள்:
உங்கள் அனைத்து பிரார்த்தனையும் ஒரே கருத்துடையதாகுக !
உங்கள் இறுதி லட்சியம் ஒருமித்ததாகுக !
உங்கள் அணுகுமுறை ஒரே மாதியாக இருக்கட்டும் !
நீங்கள் பேசுவதெல்லாம் ஒன்றாக இருக்கட்டும் !
உங்கள் ஆசை அபிலாசைகள் ஒன்றாக இருக்கட்டும் !
உங்கள் இதயங்கள் ஒன்றுபடட்டும் !
உங்கள் நோக்கம்/எண்ணம் ஒன்றாக இருக்கட்டும் !
உங்கள் ஒற்றுமை பரிபூரணமானதாகட்டும் !
எல்லோரும் மகிழ்ச்சியுடன் இதைச் செய்யுங்கள் !

வாழ்க வியாசன் புகழ்!!
–சுபம்–

“கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு”

 

என் பெயர் புலவர் நக்கீரன். “கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு” என்ற தலைப்பில் பேச வந்திருக்கும் உங்கள் அனைவர்க்கும் முதல் கண் நன்றி கலந்த வணக்கங்கள். சென்ற இரண்டு வாரங்களில் ‘மன்னிக்க வேண்டுகிறேன்”, என்ற தலைப்பிலும் “ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை” என்ற தலைப்பிலும் பேசினீர்கள். கன கச்சிதமாக இருந்தது. அதே போல இன்றும் தலைப்பை ஒட்டி மட்டுமே பேசவேண்டும்.

 

கண்ணபிரான்: என் பெயர் கண்ணன். வடக்கில் கிருஷ்ணன் என்பார்கள். இப்படி ஒரு தலைப்பில் யாராவது பேச அழைக்க மாட்டார்களா என்று காத்திருந்தேன். காரணம் என்னவென்றால் என் கலரை மனதில் வைத்துக் கொண்டு வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கன்னா பின்னா என்று எழுதுகிறார்கள். கிருஷ்ணனென்ற பெயரை ஆங்கிலத்தில் சொல்லப்போனால் மிஸ்டர் பிளாக் Mr Black. உண்மையில் நான் சொல்வதுதான் வேதங்களிலும் உபநிஷதங்களிலும் உள்ளது. அவைகளை ஆரியக் கொள்கை என்றும் நான் சொன்னது த்ராவிடன் சொன்னது என்றும் பிதற்றுகிறார்கள். உண்மையில் ஆரியமே திராவிடமோ இல்லை. எல்லா காதல் பாட்டுகளிலும் கண்ணனென்று ஒப்பிட்டு காதலனை அழைப்பார்கள். இதிருந்தே உங்களுக்கு தெரியும் கறுப்புதான் எல்லோருக்கும் பிடிச்ச கலரு என்று.

 

வியாசர்: இடை மறித்துப் பேசுவதற்கு மன்னிக்கவும். யாராவது இந்ததலைப்பில் பட்டிமன்றம் நடத்தமாட்டார்களா என்று நானும் காத்திருந்தேன். என் பெயர் வியாசர். வேதங்களை அழகாகத் தொகுத்து நாலாகப் பிரித்து நான்கு சீடர்கள் மூலம் பரப்பியவன் நான். மஹா பாரத்தை எழுதியவன் நான். என் மகன் புராணங்களை எல்லாம் தொகுத்துச் சொன்னவன். என்னுடைய உண்மையான பெயர் கிருஷ்ண த்வைபாயனன். ஆங்கிலத்தில் சொன்னால் மிஸ்டர் ப்ளாக் ஐலண்டர் Mr Black Islander. நானும் கறுப்பன் (Black) தான். இந்த ஆரிய திராவிட வாதம் எல்லாம் பொய். ஆரியக் கலர் வெள்ளை என்றும் திராவிடக் கலர் கறுப்பு என்றும் மஹா பேத்தல்களால் மனம் நொந்தே போனேன்.

 

தீர்க்கதமஸ்: வியாசர் ஐயா அழகாச் சொன்னாரு. என்பெயர் தீர்க்க தமஸ். ஆங்கிலத்தில் சொன்னால் லாங் டார்க்நெஸ் LongDarkness. நான் ரிக்வேத ரிஷி. நான் ஒரு கறுப்பன். இதை வைத்தே நிறவாத ஆரிய திராவிடக் கொள்கை பொய் என்று சொல்லாமலே விளங்குமே. வேத காலத்தில் இப்படி நிறபேதம் இல்லை என்பது வியாசர் ஐயாவையும் என்னையும் கறுப்பனான ராம பிரானையும் பார்த்தாலேயே தெரியும்.

 

ராம பிரான்: அட, நான் பேச நினைத்தஎல்லாம் நீ பேச வேண்டும் என்று நினைத்தேன். என்னையும் ஒரு கறுப்பன் என்று இனம் காட்டினீர்கள். நன்றி, தீர்க்கதமஸ் ஐயா.

 

என் பெயர் திரவுபதி. அர்ஜுனன் மற்றும் நான்கு பாண்டவர்களின் மனைவி. என் பெயர் கிருஷ்ணா (krishnaaa. நானும் கறுப்புதான். மக்கள் என்னை எந்த அளவுக்கு கொண்டாடினார்கள் தெரியுமா? ( வடமொழியில் கிருஷ்ண என்பது கண்ணன், கிருஷ்ணா என்பது திரவுபதி)

அட நீ ஒன்று. என் பெயர் காளி. கலி, காளி, காலன் என்றாலே கறுப்பு என்றுதான் அர்த்தம். நானும் விஷ்ணுவும் கறுப்புதான். நாங்கள் என்ன ஆரியர்களா, திராவிடர்களா?

 

என் பெயர் காலன். என்னை எமன் என்று சொன்னால் எல்லாருக்கும் எளிதில் புரியும். இந்த வெளி நாட்டு ஆராய்ச்சியாளரும், பி.எச்டி. பைத்தியங்களும் என்னை ஆரிய தெய்வங்களில் ஒன்று என்று எழுதி வைத்துவிட்டார்கள். மஹா உளறல். என்னை அனுதினமும் பிராமணர்கள் மூன்று முறை சந்தியா வந்தனத்தில் வணங்குகிறார்கள். அதில் கூட என்னை நீலாய (Yamaaya Dharmarajaaya……..Neelaaya parameshtine) என்ற மந்திரத்தால்தான் துகிக்கிறார்கள். நீலம் என்றாலும் கறுப்பு என்றாலும் ஒன்றுதான். நீலக் குயில் ,கருங்குயில் என்று சொல்வதிருந்து இது எளிதில் புரியு.ம்.

 

முக்கண்ணன்: ஐயாமார்கள் சொன்னதெல்லாம் ரொம்ப ரொம்ப சரி. வேதத்தைப் படித்தவர்களும் சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றி முதலில் எழுதியவர்களும் நகைப்புக்குரிய ஒரு கொள்கையை வெளியிட்டு என் பெயரை எல்லாம் ரிப்பேர் ஆக்கிவிட்டர்கள். ஆரிய ருத்திரன் சிவப்பு என்றும் திராவிட சிவன் கறுப்பு என்றும் காலப்போக்கில் இது ஒன்றாகக் கலந்துவிட்டது என்றும் நல்ல கதை கட்டிவிட்டு ஏராளமான புத்தகங்களும் எழுதிவிட்டார்கள். உண்மையில் அப்பர் பெருமான் பாடிய பாடலில் சிவனும் ருத்திரனும் ஒன்றே என்று அழகாகப் பாடியிருக்கிறார். எனக்கு ஐந்து நிறம் உண்டென்பதை இன்னொரு பாடலில் சொல்லிவிட்டார். ருத்ரம் என்னும் வேதப் பகுதியில்தான் நமசிவாய என்ற மந்திரமே வருகிறது. தமிழில் சிவன் என்ற சொல்லே ஐந்தாம் நூற்றாண்டில்தான் முதலில் வருகிறது. சங்க இலக்கியத்தில் என் பெயரே சிவனென்று சொல்லப்படவில்லை. சிவன் என்னும் செம்மேனி அம்மான் என்பதே சரி. நிறத்தின் அடிப்படையில் ஆரிய திராவிட பாகுபாடு செய்ததெல்லாம் மஹா அபத்தம் என்பது இப்போதாவது புரிகிறதா?

நீங்கள் கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்று சொன்னாலும் சரி, சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்று சொன்னாலும் சரி, எனக்கு மகிழ்ச்சியே.

 

அப்பர் பெருமான்:

நீலவுரு வயிரநிறை பச்சை செம்பொன்

நெடும்பளிங்கு என்ற அறிவரிய நிறத்தர்போலும்

கோலமணி கொழித்தெழியும் பொன்னி நன்னீர்

குடந்தை கீழ்கொட்டத்து என் கூத்தனாரே.

 

(இப் பாட்டில் சிவனுக்கு நீலம், வயிரம், பச்சை, பொன், பளிங்கு என ஐந்து நிறங்கள் உள்ளதாக அப்பர் பாடி இருக்கிறார். வேறு பாடல்களில் சிவணை செம்மேனி அம்மான் என்பார்)

வளர் ஒளியை மரகதத்தின் உருவினானை

செம்பொன்னே மரகதமே மணியே போற்றி.

 

நக்கீரர் முடிவுரை:

மிக அழகாக இனவாத, நிற வாத ஆரிய-திராவிட வாதத்தை தகர்த்துவிட்டீர்கள்.

மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ் பயன் அறிகிலா

அந்தகர்க்கு எளியேன் அலேன்” – என்று திரு ஞானசம்பந்தர் பாடியிருக்கிறார்.. இது பெரிய ஒரு தலைப்பு. ஆகையால் அடுத்த கூட்டத்தில் “ சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை, அதை சொன்னாலும் கேட்பவருக்கு புரியவில்லை” என்ற தலைப்பில் பேச உங்களை அழைக்கிறேன். மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது திருமுருகாற்றுபடை புகழ் நக்கீரன்.

வாழ்க தமிழ், வளர்க பாரத ஒற்றுமை.

contact: swami_48@yahoo.com