கட்டுரையாளர்:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1071; தேதி:- 29 May 2014.
(இக் கட்டுரை ஏற்கனவே ஆங்கிலத்தில் என்னால் வெளியிடப்பட்டது)
வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே — பாரதியார்
உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் இந்திரனின் சாகச் செயல்கள்தான் அதிக இடத்தைப் பிடிக்கின்றன. நாலில் ஒரு பகுதி துதிகள் இந்திரனைப் (250 துதிகள்) பற்றியதே. தமிழினத்தின் மிகப் பழைய நூலான தொல்காப்பியமும் இந்திரனை , தமிழர் கடவுளாகப் போற்றுகிறது. கரிகால் சோழன் நடத்திய பெரிய விழா இந்திர விழா! ஆனால் சங்க இலக்கிய த்தின் 18 நூல்களில்– 27,000 வரிகளில்— இல்லாத ஒரு அபாண்டப் பொய்யை வெள்ளைக்காரகள் சொன்னதை இன்றுவரை பல தமிழக அறிவிலிகள் பரப்பி வருகின்னர்.
இந்திரன் என்பவன் ஆரிய இனத் தலைவன் என்றும் அவன் தஸ்யூக்கள் என்னும் கருப்பர்களைக் கொன்றதாகவும் வெளி நாட்டு ‘’அறிஞர்கள்’’ எழுதிவருகின்றனர். உலகிலேயே அதிகமான பழைய நூல்களைக் கொண்டது சம்ஸ்கிருத மொழி. தமிழைப் போல பன்மடங்கு இலக்கியம் உடைய, சம்ஸ்கிருத மொழியில் ஒரு நூலிலும் ஆரிய ,திராவிட இனவாதக் கொள்கை இல்லை.தமிழிலும் இல்லை.
வெளிநாட்டுக்காரர்கள் எழுதியதற்கு நேர் மாறான விஷயங்கள்தான் நம் இலக்கியத்தில் இருக்கின்றன.
1.அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் பிராமணர்களாகிய பிருஹஸ்பதியும் சுக்ராசார்யாரும்தான் ஆசிரியர்கள். இதை சங்க இலக்கியப் பாடல்களும் உறுதி செய்வதை ஏற்கனவே கொடுத்துவிட்டேன்.
2.அசுரர், தேவர், நாகர் முதலிய யாவரும் ஒரு தாய் வயிற்றுப் புதல்வர்கள்.
3.தஸ்யூகளைக் கொன்ற இந்திரன் பிராமணர்களையும் கொன்றான். அவன் இப்படிப் பிராமணர்களைக் கொன்றதை, இந்தியா முழுதும் உள்ள ஸ்தல புராணங்களும் ,ராமாயண மஹாபாரத, புராணங்களும் பக்கம் பக்கமாக எழுதி இருக்கின்றன. முப்பதுக்கும் மேலான அசுரர்களைக் கொன்ற இந்திரனின் மிகப் பெரிய வெற்றி– விருத்திராசுரனைக் கொன்றதுதான். அவன் ஒரு பிராமணன். அவனது அண்ணன் திரிசிரஸ் இந்திரனால் கொல்லப்பட்டான். அவனும் ஒரு பிராமணன்.
4.இந்திரனால் மானபங்கப்படுத்தப்பட்ட அஹல்யையும் பாப்பாத்தி.! இந்திரனால் எத்தி உதயப்பட்ட முனிவன் அகத்தியனும் பார்ப்பனன். இந்திரனைப் பிடித்துக்கொண்ட மிகப்பெரிய பாவம்—பிரம்மஹத்தி. அதாவது பிராமணனைக் கொன்றால் வரும் பாபம். இதற்காக அவன் இந்தியா முழுதும் சென்ற கோவில் குளம், ஆறு, மலை, ஏரி பற்றி உள்ள ஸ்தல புராணங்கள் ஆயிரம் ஆயிரம்!!
இவ்வளவு ஆதாரங்கள் இருக்கையில் வெள்ளைக்கார, வெளிநாட்டுக்கார ‘’அறிஞர்கள்’’ எப்படி முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்தார்கள்? அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். இந்து மத நூல்கள் கடல் போலப் பெருகியவை. மற்ற மத நூல்களையோ ஒரே மூச்சில் சில மணி நேரத்தில் படித்து முடித்து விடலாம். அவை எல்லாம் நேற்று வந்தவை. ஆனால் காலத்தைக் கடந்து நிற்கும் இந்து மதத்திற்கோ பல்லாயிரம் நூல்கள். ஆங்கிலம் படித்த ‘அரைவேக்காடு’கள், இந்துமத ராமாயணத்தையோ, மஹாபாரதத்தையோ ‘’ஒரிஜினலில் ‘’முழுக்க படித்ததே இல்லை. அவர்கள் படிப்பதெல்லாம் ஆங்கிலத்தில் எதிர்மறையில் எழுதப்பட்ட கட்டுரைகள் அல்லது வெற்று வேட்டுப் பட்டிமன்றங்கள்தான். மாதா, பிதா, குரு ஆகியவர்களை விட அதிகம் மதிக்கப்பட வேண்டியவர்கள் ஆங்கிலத்தில் எழுதப்படும் கட்டுரை யாளர்களே என்பது அந்த அறிவிலிகளின் ஏகோபித்த முடிவு.
இந்த பலவீனங்களை அறிந்த வேற்று மத, வெளிநாட்டு ‘’அறிஞர்கள்’’ இந்து மதத்தில் எந்தப் புத்தகத்தில் எந்த வரியை வேண்டுமானலும் எடுத்து எப்படி வேண்ண்டுமானாலும் ஒட்டுப்போட்டு என்ன வேண்டுமானாலும் எழுதி நம்மிடமே பி.எச்டி. பட்டம் வாங்க முடியும் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். பிரபல வெளிநாட்டுப் புத்தக பதிப்பாளர்கள் மூலம் கோடிக் கணக்கில் பணம் பெற முடியும் என்றும் தெரியும். அவர்கள் வேற்று மதங்களைப் பற்றி இப்படிப் புத்தகம் எழுதுவதும் இல்லை. எழுதினாலும் விற்காது. இந்து ஒருவன் தான் ஏமாந்த சோணகிரி! ஊருக்கு இளத்தவ பிள்ளையார் கோவில் ஆண்டி!!
நம்முடைய இலக்கியம், இலக்கிய கர்த்தாக்கள் ஆகியவர்களுக்கு அவர்களே பொய்மையான ஒரு காலத்தையும் எழுதி– ‘இது முதல், அது பின்னது’– என்று சொல்லவும் கற்றனர். நமது சங்கத் தமிழ் இலக்கியத்தையோ, தேவார திருவாசக, திவ்வியப் பிரபந்தங்களையோ வாழ்நாளில் தொட்டுப் பார்க்காத தமிழ் அஞ்ஞானிகள், கேள்விகளை மட்டுமே கேட்கப் பழகிக்கொண்டார்கள். இதனால் இந்திரன், பிராமணர்களைக் கொன்றதையோ, இராம பிரான் ராவணன் என்னும் பிராமணனைக் கொன்றதையோ பெரிது படுத்தாமல், இதற்கு எதிர்மறையான கருத்துக்களை மட்டும் பிரபலப்படுத்தினர்.
திரிசிரஸ், விருத்திரன் கொலை
த்வஷ்டா என்ற முனிவருக்கு திரிசிரஸ் என்ற மூன்று தலை உடைய முனிவர் பிறந்தார். அவர் ஒரு தவ சீலர், மகா முனிவர். தனது பதவிக்கு ஆபத்து வரும் என்று அஞ்சிய இந்திரன் அவரைக் கொன்றான். அவன் தந்தை கோபம் அடைந்து, விருத்திரன் என்பவனை யாகத்தீயில் உண்டாக்கினான். அவனைக் ‘’கடல் நுரை’’ மூலம் இந்திரன் கொன்றான். இதுதான் சுருக்கமான கதை. இருவரும் பிராமணர்கள். அவனைப் ப்ரம்மஹத்தி பற்றிக்கொண்டது.
வேதங்களில் பல விஷயங்கள் ரகசிய, சங்கேத மொழியில் சொல்லப்பட்டிருப்பதால் தமிழர்கள் வேதங்களுக்கு ‘’மறை’’ என்று அழகான பெயர் வைத்தனர். இங்கே விருத்திரன் என்பது மனிதனா, இயற்கை நிகழ்ச்சியா (வறட்சி) என்று பல அறிஞர்களுக்குக் குழப்பம். வேத, இதிஹாசபுராணம் முழுதும் வரும் இந்திரன் ஒருவரா? பலரா? என்பதிலும் எல்லோருக்கும் குழப்பம்.
இந்திரன் என்பது ஒரு ஆள் அல்ல, அது ஒரு ‘’டைட்டில்’’—அதாவது பிரதமர், ஜனாதிபதி, சக்ரவர்த்தி, மன்னர், தலாய் லாமா, சங்கராச்சார்யார், போப்பாண்டவர் என்பது போல அவ்வப்போது பதவிக்கு வருவோர் பெறும் பட்டமா என்பதும் விளக்கப்படவில்லை. மேலும் வேதம் முழுதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வெள்ளைக்காரர்கள் அவன் எப்போது வாழ்ந்தான் என்பதிலும் குழப்பம் அடைந்ததால் பேசாமல் இருந்து விட்டனர். அப்படி ஒரே இந்திரன் தான் என்று யாராவது நினைத்தால் உலகிலேயே அதிகமாக இலக்கியத்தில் அடிபட்ட பெருமை இந்திரன் ஒருவனுக்கே கிட்டும்!!
ஒரே இந்திரன் இவ்வளவு பாடல்களுக்கு முதற்பொருளாக அமைந்திருக்க முடியாது. இந்திரன் என்பது பல பொருள்களில் பயன்படுத்தப்பட்டிருக் கலாம் அல்லது இந்திரன் என்பது மன்னன் போன்ற ஒரு பட்டம். ஆகையால் யார் அந்தப் பதவிக்கு வருகிறார்களோ அவர் இந்திரன் என்றும் கொள்ளலாம்.
மூன்றுதலை திரிசிரஸ் என்பதெல்லாம் சில தத்துவங்களை விளக்கும் சொற்களாக இருக்கலாம். உண்மையில் இப்படிப்பட்ட விளக்கங்களை சாயனர், சங்கராசார்யார், பட்டபாஸ்கரர், அண்மைக் காலத்தில் ஆரிய சமாஜ ஸ்தாபகர் தயானந்த சரஸ்வதி ஆகியோர் கொடுத்துள்ளனர். வேதம் முழுதும் உள்ள விஷயங்களைக் கூறவே தேவாரமும் திருவாசகமும், திவ்வியப் பிரபந்தமும் பாடப்பட்டதாக அவற்றை யாத்தவர்களே திருவாய் மலர்ந்திருக்கின்றனர்.. இதற்குப் பின்னரும் வீம்பு பிடித்து நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்தான், நான் ஆரிய திராவிடச் சகதியில்— பன்றியைப் போல தொடர்ந்து உழல்வேன்— என்பவரை இறைவனே வந்தாலும் கரையேற்ற முடியாது!!
Indra in painting
Also read my other posts:-
Brahmins deserve an entry into Guinness Book of Records (Jan.26, 2012)
No Brahmins, No Tamil!! (Jan. 14, 2012)
Foreign Travel Banned for Brahmins! (26 Nov.2013)
Fall of Brahmin Kingdoms in Pakistan & Afghanistan (23 Mar.2014)
Indus valley –Brahmins connection (10th May 2014 ,Post No.1034)
Why did Indra kill Brahmins? (25th May 2014,Post No.1064)
உலகம் கெட்டுப்போனதற்கு பிராமணர்களே காரணம்? 4-3-2014 (885)
சிந்துசமவெளி—பிராமணர் தொடர்பு 10-5-14 ( 1033)
1500 ஆண்டு பிராமணர் ஆட்சியின் வீழ்ச்சி 24-3-14
பிராமணர்களை இந்திரன் கொன்றது ஏன்? 29-5-14 (1071)
You must be logged in to post a comment.