பாம்பு நீர் குடித்தால் விஷமாகும்; பசு நீர் குடித்தால் பால் ஆகும்! (Post No.5848)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 28 December 2018
GMT Time uploaded in London –20-40
Post No. 5848


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பர்த்ருஹரியின் நீதி சதகத்திலுள்ள நூறு பாடல்களில் இது வரை 44 பாடல்களைக் கண்டோம். மேலும் சில பாடல்களைத் தமிழ் இலக்கியத்துடன் ஒப்பிட்டு மகிழ்வோம்

இதோ பாடல் 45

கெட்டவனுக்கு இயல்பாகவே கொடுஞ்செயல்கள் வரும்.

காரணம் இல்லாமலேயே சண்டைக்கு வருவான்.

மற்றவர் செல்வத்துக்கும் மனைவியர்க்கும் ஆசைப்படுவான்.

நல்லோரைக் கண்டால் சீறி விழுவான்.

தனது குடும்பத்தினரையே நிந்திப்பான்.

ராவணன் இந்த எல்லா கெட்ட குணங்களையும் உடையவன்.

குபேரனின் புஷ்பக விமானத்தைப் பறித்தான்;

சிவ பெருமானின் கயிலை மலையை அசைத்தான்;

ராமனின் மனைவியைக் கவர்ந்தான்.

தேவர்களைத் துன்புறுத்தினான்.

எல்லா ராக்ஷசர்களும், நல்லோரைத் துன்புறுத்தியதால்தான் விஷ்ணு பல அவதாரங்களை எடுக்க நேரிட்டது.

திருவள்ளுவரும் தமிழ் வேதமான திருக்குறளில் கயவர்களின் குணத்தை வருணிக்கிறார்

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண வற்றாகும் கீழ் -குறள் 1079

பிறர் நன்றாக உடுப்பதையோ உண்பதையோ கண்டால்,கயவர்கள், பொறாமை கொண்டு அதற்கும் குற்றம் காண வல்லவர் ஆவார்கள்.

ஈசாப்   கதையில் வரும் ஆடு- ஓநாய் கதை போலத்தான். வலிய சண்டைக்கு இழுத்து ஆட்களைக் கொல்லுவர். ரிஷி முனிவர்கள் காடுகளில்  பழங்களையும் தேனையும் சேகரித்து உண்டு அமைதியான வாழ்க்கை நடத்தியபோதும் அவர்களுடன் வம்புச் சண்டைக்குப் போனவர்கள் அரக்கர்கள்.

பிறன் மனை நோக்காத பேராண்மை

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்- குறள் 146

பிறருடைய மனிவியை நாடிச் செல்பவனுக்கு நான்கு கெடுதிகள் எப்போதும் வரும்/ இருக்கும்:–

பகைமை, பாவம், பயம், உலகமே பழித்துரைக்கும் வசவுகள் இவை நான்கும் நீங்காமல் நிற்கும்.

இதை பர்த்ருஹரி அழகாகஒரே ஸ்லோகத்தில் சொல்லிவிட்டார்.

அகருணத்வமகாரணவிக்ரஹக பரதனே பரயோஷிதி ச ஸ்ப்ருஹா

ஸுஜன பந்துஜனேஸ்ஹ்வஸஹிஷ்ணுதா ப்ரக்ருதி ஸித்தமிதம்  ஹி துராத்மனாம்-45

xxxxxx

பாடல் 46

கற்றவர்களாயினும் தீய குணம் இருந்தால் அவர்களைத் தவிர்க்க வேண்டும். பாம்பின் தலையில் மாணிக்கம் இருந்தாலும் அது ஆபத்தானதல்லவா?

துர்ஜனஹ பரிஹர்தவ்யோ வித்யயாஅலக்ருதோ அபிஸன்

மணினா பூஷிதஹ ஸர்பஹகிம் அஸௌ ந பயங்கரஹ- 1-46

தீயவர்பால் கல்வி சிறந்தாலு மற்றவரைத்

தூயவரென்றெண்ணியே துன்னற்க– சேயிழையே!

தண்ணொளிய மாணிக்க சர்ப்பந் தரித்தாலும்

நண்ணுவரோ மற்றதனை நாடு- நீதிவெண்பா

பொருள்

பாம்பிடம் ஒளிமிக்க மாணிக்கக் கல் இர்ந்தாலும் யாராவது அதை நெருங்குவார்களா? அதே போல கெட்டவர்களிடம் கல்வி அறிவு இருந்தாலும் நாடக் கூடாது.

 பசுவுக்கு நீர்பால்; பாம்புக்கு நீர் – விஷம்

பாம்புண்ட நீரெல்லாம் நஞ்சாம் பசுவுண்ட

தேம்படு ஹெண்ணீர் அமுதமாம் – ஓம்பற்கு

ஒளிஆய்ம் உயர்ந்தார்கண் ஞானம் அதுபோற்

களியாம் கடையாயார் மாட்டு- அறநெறிச்சாரம்

பொருள்

பாம்புகள் குடிக்கும் நீர் எல்லாம் விஷமாக மாறுகிறது;

கயவர்கள் கற்கும் ஞன நூல்கள் அவர் மாட்டு மயக்கத்தையே விளைவிக்கும்;

பசு மாடுகள் குடிக்கும் தண்ணீர் இனிய பாலாக மாறும்;

உயர்ந்தோர் கற்கும் ஞான நூல்கள் அவர்கள் மாட்டு அறிவினை வளர்க்கும்.

தீயோர்கள் கற்றாலும் கற்றதையெல்லாம் தவறாக வியாக்கியானம் செய்வர்.

अकरुणत्वम् अकारणविग्रहः
परधने परयोषिति च स्पृहा ।
सुजनबन्धुजनेष्वसहिष्णुता
प्रकृतिसिद्धम् इदं हि दुरात्मनाम् ॥ 1.45 ॥

दुर्जनः परिहर्तव्यो
विद्यया‌உलकृतो‌உपि सन् ।
मणिना भूषितः सर्पः
किम् असौ न भयङ्करः ॥ 1.46 ॥

tags– நல்லோர்,தீயோர், பாம்பு, பசு, விஷம், பால்

Xxxxxxxxxxxxxx  subham xxxxxxxxxxxxxxxxxxxx

‘அஜீர்ணே போஜனம் விஷம்’- உணவு பற்றி சாணக்கியன் எச்சரிக்கை (Post No.4572)

Written by London Swaminathan 

 

Date: 1 JANUARY 2018

 

Time uploaded in London- 6-59 AM

 

 

Post No. 4572

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

‘அஜீர்ணே போஜனம் விஷம்’- உணவு பற்றி சாணக்கியன் எச்சரிக்கை (Post No.4572)

சாணக்கியனின் நீதி சாஸ்திரம் ஒரு மருத்துவ நூலன்று; அப்படியும் கூட அவன் போகிற போக்கில் மூலிகைகள் பற்றியும் உணவு பற்றியும் பல அறிவுரைகளை வழங்குகிறான்.

 

 

ஒருவனுடைய உடலைப் பார்த்தாலேயே அவன் சாப்பிடும் உணவைக் கண்டுபிடித்து விடலாம் என்பார் சாணக்கியன்.

என்ன சரியான கணிப்பு!

 

தொந்தியும் தொப்பையுமாக இருந்தால் ஆசிய (Asian) நாட்டவர் என்று கண்டு பிடிக்கலாம். குறிப்பாக அவர்கள் சாப்பிடும் அரிசிச் சோறு அவர்களை இப்படி ஆக்கி விடுகிறது. இது போல ஒவ்வொரு நாட்டு உணவு வகைகளோ, குறிப்பாக நாம் அளவுக்கு அதிகமாக எதைச் சாப்பிடுகிறோமோ, அது நம் உடலில் எதிரொலிப்பதைப் பார்க்கலாம்.

முழு ஸ்லோகம்:-

ஒருவன் நடத்தையைப் பார், அவன் குடும்பத்தைச் சொல்லிவிடலாம்;

ஒருவனுடைய பேச்சைப் பார், அவன் ஊரையும் நாட்டையும் சொல்லி விடலாம்;

ஒருவனுடைய அங்க அடையாளங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பார், அவனுடைய அன்பை/ காதலைச் சொல்லிவிடலாம்;

ஒருவனுடைய உடலைப் பார், அவன் சாப்பிடும் உணவைச் சொல்லி விடலாம்.

ஆசாரஹ குலமாக்யாதி தேசமாக்யாதி பாஷணம்

சம்க்ரமஹ ஸ்னேஹமாக்யாதி வபுராக்யாதி போஜனம்

 

—–அத்தியாயம் 3, ஸ்லோகம் 2

xxx

 

தகிக்க வைக்கக் கூடிய விஷயங்கள் ஆறு

அருகில் நெருப்பு இல்லாவிட்டாலும் உடலை எரிக்கக்கூடிய, தகிக்க வைக்கக் கூடிய விஷயங்கள் ஆறு:

கெட்ட உணவு (வாய்க்கு ருசியான, ஆனால் உடம்புக்கு ஒவ்வாத உணவு ) சிற்றூரில் வசித்தல், கீழ்மட்டத்தில் உள்ளவனுக்கு சேவை செய்தல், எரிந்து விழக்கூடிய மனைவி, முட்டாளான மகன், விதவையான மகள்  – இந்த ஆறும் உடலை தகிக்க வைக்கும்.

குக்ராமவாஸஹ குலஹீனஸேவா குபோஜனம் க்ரோதமுகீ பார்யா

புத்ரஸ்ச மூர்க்கோ விதவா ச கன்யா வினாக்னினா ஷட் ப்ரதஹந்தி காயம்

—அத்தியாயம் 4, ஸ்லோகம் 8

 

xxxx

 

அஜீர்ணத்தில் சாப்பிடுவது விஷம் !

இப்போதெல்லாம் கல்யாணத்துக்குப் போனால் சீக்கிய குருத்வாரா லங்கார் (Langar) போல 24 மணி நேரமும்  சாப்பாடு போடுகிறார்கள். அங்காவது  குறைவான அயிட்டம் (items )கள்தான்- வகைகள் தான் கிடைக்கும். கல்யாணத்திலேயோ, ஒரு குடும்பத்துடன் மற்றொரு குடும்பம் போட்டி போட்டுக்கொண்டு 30, 40 வகைகளை பரிமாறி அவர்களுடைய பணத்தையும் வீணடித்து நம்முடைய வயிற்றையும் பாழடைய வைக்கிறார்கள். நாமும் வேண்டாம் என்று சொல்வதில்லை; கிடைக்கக் கிடைக்க வயிற்றில் திணிக்கிறோம்; முன் சாப்பிட்ட உணவு இன்னும் செமிக்கவில்லை என்பதை அறிந்தும் உண்கிறோம். அவை எல்லாம் வயிற்றில் விஷமாகிப் போனது அடுத்த சில நாட்களில் நமக்குத் தெரிகிறது; புரிகிறது.

 

அஜீர்ணத்தில் சாப்பிடுவது விஷம் ஆகும்;

பாராயணம் செய்யாத படிப்பு விஷம் ஆகும்;

சபையில்  நிற்பது ஒரு ஏழைக்கு விஷம் ஆகும்;

வயதான மனிதனுக்கு இளம் பெண் விஷம் ஆகும்.

 

 

விஷம் என்பதைப் பொருந்தாது, ஏற்காது என்று பொருள் கொள்ளலாம்.

அனப்யாஸே விஷம் சாஸ்த்ரம் அஜீர்ணே போஜனம் விஷம்

திவம் ஸபா தரித்ரஸ்ய வ்ருத்தஸ்ய தருணீ விஷம்

xxxx

திருப்தி வேண்டும்

ஒருவன் தனக்குக் கிடைத்த உணவு, வாய்த்த மனைவி, சம்பாத்தித்த செல்வம் மூன்றிலும் திருப்தி அடைய வேண்டும். இதற்கு நேர் மாறாக எப்போதும் திருப்தி அடையக் கூடாத மூன்று விஷயங்களும் உண்டு:-படிப்பு, தானம் செய்தல், தவம்.

 

ஸந்தோஷ த்ரிஷு கர்தவ்யஹ ஸ்வதாரே போஜனே தனே

த்ரிஷு சைவ ந கர்தவ்யோ அத்யயனே தப தானயோஹோ

—அத்தியாயம் 7, ஸ்லோகம் 4

பிரிட்டனில் டெலிவிஷன் பார்ப்போர் எல்லோருக்கும் பால் மக்கென்னாவைத் (Paul McKenna)  தெரியும். பெரிய மனோ வஸிய நிபுணர். (Hypnotist);  நாலு பேரை மேடைக்கு அழைப்பார்; நீ மைக்கேல் ஜாக்ஸன், நீ மடொன்னா, நீ பீட்டில்ஸ்  பாடகர் என்று ஒவ்வொருவரிடமும் ஒன்றைச் சொல்லிவிட்டு கையைச் சொடுக்குவார். அவர்கள் அடுத்த நொடியில் அவர் யார் பெயரை சொன்னாரோ அது போலவே நடிப்பர்.

 

அவரே தமிழ் நாட்டில் இருந்தால் நாலு பேரில் ஒருவரை எம்.ஜி.ஆர், ஒருவரை சிவாஜி கணேசன், ஒருவரை ரஜினிகாந்த், இன்னும் ஒருவரை கமலஹாசன் என்று சொல்லிவிட்டு ஹிப்னாடிஸம் செய்த அடுத்த நொடியில் கேள்வி கேட்டால் அந்தந்த நடிகர் போலப் பேசுவார்.

அவர் உடல் இளைக்க ஒரு சில வழிமுறைகளைச் சொன்னார்; நினைவில் உள்ளதை மட்டும் தருகிறேன்:

எந்த ஒரு உணவுப் பண்டம் கிடைத்தாலும் அதை டெலிவிஷன் பார்த்துக் கொண்டோ, பாட்டுக் கேட்டுக் கொண்டோ, புஸ்தகம் படித்துக் கொண்டோ சாப்பிடாதீர்கள். உணவுப் பண்டத்தைப் பாராட்டி, சீராட்டி, கொஞ்சிக் குலவிப், போற்றிப் புகழ்ந்து  அணு அணுவாக ரஸித்து, ருஸித்து, அனுபவித்து உண்ணுங்கள்.

 

இறைவன் உங்களுக்கு அதைக் கொடுத்தானே என்று எண்ணி மகிழுங்கள்.

இதுவே வயிற்றின் பசியை ஆற்றிவிடும் என்று நம்பி கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுங்கள்.

 

நாளடைவில் கொஞ்சமாகச் சாப்பிடுவீர்கள்; வயிறு நிறைந்த திருப்தியும் ஏற்பட்டுவிடும்.

 

நீங்களும் பின்பற்றிப் பாருங்கள்.

 

–சுபம்—

 

 

புத்தி கூர்மை: பலே! பலே! ரபலே!!! (Post No.3090)

gargantua-252683

Written by London Swaminathan

 

Date: 25  August 2016

 

Time uploaded in London: 8-06 AM

 

Post No.3090

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர் பிரான்ஸ்வா ரபலே. அவர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் மறுமலர்ச்சி காலத்தில் வாழ்ந்தார். கிறிஸ்தவ மத போதகராகவும், அங்கத எழுத்தாளராகவும், நகைச்சுவை எழுத்தாளராகவும், கிரேக்க மொழி அறிஞராகவும் திகழ்ந்தவர். அவர் எழுதிய ‘கார்காங்டுவா’ என்ற நூல் பிரெஞ்சு அரசியலையும் வாழ்க்கை முறையையும் கிண்டல், கேலி செய்யும் புகழ்மிகு புத்தகம் ஆகும்.

 

ஒரு முறை அவர் தெற்கு பிரான்ஸில் ஓரிடத்தில் பணமே இல்லாமல் மாட்டிக்கொண்டார். தலைநகரான பாரீசுக்குத் திரும்பிவருவதற்கு அவர் கையில் தம்பிடிக் காசு (பைசா கூட) இல்லை.

 

அந்தக் கிராமத்திலுள்ள ஒரு சத்திரத்தில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்தார். அதை நடத்தும் பெண்மணியிடம் தான் முக்கிய விஷயங்களை எழுதவிருப்பதால் தனக்கு ஒரு எழுத்தர் தேவை என்றார்.

அப்பெண்ணும், அதற்கென்ன? என் மகன் கெட்டிக்காரன்; 12 வயது என்றாலும் அச்சுப்பொறித்தாற் போல எழுதிக் கொடுப்பான். அவனை சம்பளத்துக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பிவைத்தார்.

 

பையனும் வந்தான். ரபலே பேசினார்: டே! பையா! மிக முக்கியமான ஒரு காரியத்தைச் செய்யப்போகி றேன். ஆகையால் கவனமாகக் கேட்டு எழுது என்று சொல்லி துவங்கினார்; முதலில் எழுது:

 

ராஜாவுக்கான விஷம்

இதையும் எழுது

மஹாராணிக்கான விஷம்

ஆர்லியன்ஸ் நகர பிரபுவுக்கான விஷம்

 

இதையெல்லாம் கொட்டை எழுத்தில் எழுது. ஏனென்றா ல் இவை எல்லாம் டப்பா மீது ஒட்டும் அடையாள வில்லை என்றார்.

Gargantua_GF

பையனுக்கு பயம்! இருந்தாலும் அச்சுப்பொறித்தாற் போல, மாக்கோலம் போல எழுதினான்.

 

இதற்கிடையில் ரபலேயோ ஒரு பெட்டியிலிருந்த சாம்பலைச் சுரண்டினார். அதைத் தன் மூக்குப்பொடி டப்பிக்குள் போட்டுக் குலுக்கினார். முகத்தை மிகவும் கடுமையாக வைத்துக் கொண்டு காகிதத்தில் போட்டார்.

 

இதைப் பார்த்த எழுத்தருக்கு — 12 வயது பாலகனுக்கு — மேல் மூச்சூ கீழ் மூச்சு வாங்கியது. அலறி புடைத்துக்கொண்டு மாடியிலிருந்து இறங்கி அம்மா, அம்மா! இவன் ஒரு கொலைகாரன்,  ராஜா ராணியை விஷம் வைத்துக் கொள்ள விஷம் தயாரித்துக் கொண்டிருக்கிறான் என்று எல்லாவற்றை யும் சொல்லி முடித்தான்.

 

உடனே அப்  பெண் போலீசுக்கு ஆள் அனுப்பினாள்; அவர்களும் விரைந்தோடி வந்து ஆளை க் கையும் களவுமாகப் பிடித்து,

யாரடா நீ, அயோக்கியா? என்றனர்.

 

பிரபல ரபலேயை அவர்களுக்குத் தெரியவில்லை. அவரும் பதில் சொல்லாமல் பேந்தப் பேந்த முழித்தார். ஆளை அலாக்காகத் தூக்கி ஒரே கட்டாக கட்டி வண்டியில் பாரீசுக்குக் கொண்டு சென்றனர். போலீசுக்கு மிகவும் பெருமிதம். பிரான்ஸு நாட்டின் ராஜத்  துரோகியைக் கண்டுபிடித்து  விட்டோ ம்; நமக்குப் பரிசு கிடைக்கும்; இவனுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று கணக்குப் போட்டனர்.

rabelais 1

பாரீஸ் நகரத்துக்கு வந்து சேர்ந்தவுடன் அவசரமாக மன்னர் தலைமையில் நீதிமன்றம் கூடியது. மன்னருக்கோ ரபலேயைப் பார்த்தவுடன் அதிர்ச்சி! திகைப்பு! ரபலே நடந்தவற்றை அப்படியே விவரித்தார். மன் னரும் புன்சிரிப்புடன் ரபலேயை விடுவித்தார்.

 

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் ! கத்தியை விட பேனா வலிமை வாய்ந்தது அல்லவா!

 

கடலில் பெய்த மழையும் புத்தகத்திலுள்ள அறிவும் வீண்! வீண்! (Post No.2661)

old groom

Compiled by london swaminathan

 

Date: 25 March 2016

 

Post No. 2661

 

 

Time uploaded in London :–  11-10 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Already published in English; Tamil Translation: London swaminathan

சம்ஸ்கிருதத்தில் பல அழகான ஸ்லோகங்கள் உள்ளன. கற்றறிந்த அறிஞர்களும், சான்றோர்களும் பேசிக்கொண்டிருக்கையில், அவைகள் தானானாகப் பொங்கி வரும். இதையே விவேக சிந்தாமணி என்ற, ஆசிரியர் பெயர் தெரியாத, நூலிலும் காண முடியும். இதுகுறித்து நான் ஏற்கனவே எழுதிய ‘பயன் இல்லாத ஏழும், உதவாத எட்டும்’ என்ற கட்டுரையில் காண்க (நவம்பர் 18, 2013). அதில் விவேக சிந்தமணி பாடல் ‘ஆபத்துக்குதவா பிள்ளை’— முதலிய பாடல்களைக் கொடுத்துள்ளேன்.

 

இனி சில சம்ஸ்கிருத பாக்கள்:

நாலு விஷங்கள்:–

அனப்யாச வித்யா- பயன்படுத்தப்பாடாத படிப்பு

அஜீர்ண போஜனம் – செமிக்காத உணவு

தரித்ர சபா- ஏழைகள் சபை

விருத்த தருணீ – வயதான மாப்பிள்ளைக்கு இளம் மணமகள்

அனப்யாஸோ விஷம் வித்யா அஜீர்ணே போஜனம் விஷம்

விஷம் சபா த்ரித்ரஸ்ய வ்ருத்தஸ்ய தருணீ விஷம்

–ஹிதோபதேசம்

Xxx

 

rain sea

வீண்போகும் 4 விஷயங்கள்:—

 

சமுத்ரேஷு வ்ருஷ்டி: – கடலில் பெய்யும் மழை

த்ருப்தஸ்ய போஜனம்- சாப்பிட்டவனுக்குப் போடும் சாப்பாடு

சமர்தஸ்ய தானம் – திறமையுள்ளவனுக்கு கொடுக்கப்படும் தானம்

திவா தீபா – பகலில் ஏற்றப்படும் விளக்கு

வ்ருதா வுருஷ்டி: சமுத்ரேஷு வ்ருதா த்ருப்தஸ்ய போஜனம்

வ்ருதா தானம் சமர்தஸ்ய வ்ருதா தீபோ திவாபி ச

-சுபாஷித ரத்ன பாண்டாகரம் 153-26

Xxx

 

கெட்டதைத் தட்டிக் கேட்காத முதியோர்

வ்ருத்தரஹித சபா- முதியோரில்லா சபை

தர்மாப்ரதிபாதகா வ்ருத்தா – நல்ல குணங்களை எடுத்துரைக்கா முதியோர்

சத்யரஹித தர்ம- உண்மையில்லாத வழிமுறைகள்

சலாப்யுபேதம் சத்யம் – உண்மையை தவறான விஷயங்களுக்குப் பயன்படுத்துவோர்

ந சா சபா யத்ர ந சந்தி வ்ருத்தா ந தே வ்ருத்தா யே ந வதந்தி தர்மம்

நாசௌ தர்மோ யத்ர ந சத்யமஸ்தி ந தத்சத்யம் யச்சலேனாப்யுபேதம்

–விதுரநீதி 3-58

Xxx

 

libraries

பயனற்ற நான்கு விஷயங்கள்:–

பராதீன ஜன்ம – மற்றவர்களை அண்டி வாழும் வாழ்க்கை

ப்ரஸ்த்ரீ சுக- மற்ற பெண்களிடத்தில் துய்க்கும் இன்பம்

பரகேஹே லக்ஷ்மீ –பிறர் வீட்டிலுள்ள செல்வம்

புஸ்தக வித்யா – நூல்களிலுள்ள அறிவு: ஏட்டுச் சுரைக்காய்

பராதீனாம் வ்ருதா ஜன்ம பரஸ்தீஷு வ்ருதா சுகம்

பரகேஹே வ்ருதா லக்ஷ்மீ: வித்யா யா புஸ்தகே வ்ருதா

 

Xxx

பயனிலா முடிவுடைய நான்கு:—

husbad wife

அஜயுத்தம்ருஷிராத்தம் ப்ரபாதே மேகடம்பரம்

தம்பத்யோ கலஹஸ்சைவ பரிணாமே ந கிஞ்சன

அஜயுத்தம் –ஆட்டுச் சண்டை

ரிஷி ஸ்ராத்தம் – ரிஷி முனிவர்களுக்குச் செய்யப்படும் ஸ்ராத்தம்

ப்ரபாதே மேகடம்பரம் – காலையில் இடியுடன் கூடிய மேகம்

தம்பதி கலஹம் – கணவன் –மனைவி சண்டை

 

–சுபம்–

 

மனைவிக்கு ‘பெர்Fயூம்’ (செண்ட்) வாங்குவது எப்படி? (Post No 2624)

dog

Written by london swaminathan

 

Date: 12 March 2016

 

Post No. 2624

 

Time uploaded in London :–  13-36

 

( Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

dog in wedding

இது அமெரிக்காவில் உண்மையில் நடந்தது. ஒருவனுடைய காதலிக்குப் பரிசாக வாசனைத் திரவியம் (Perfume பெர்Fயூம்) வாங்குவது என்று காதலன் முடிவு செய்தார். ஆனால் அவள் வாங்கும் ‘பெர்Fயூம்’ எது என்று தெரியாது. அவள் வசிப்பதோ அவளுடைய அம்மா வீட்டில். அவளிடம் கேட்டால் ‘சர்ப்ரைஸ் (surprise)’ போய்விடும். ஆகவே கேட்கவும் தயக்கம். அவள் எப்போது வந்தாலும் அவளுடைய செல்லமான (pet dog) நாய்க்குட்டியைத் துணைக்கு அழைத்துவருவாள். அவளை மறுமுறை சந்தித்தபோது, உன்னுடைய நாயை ஒரு ‘வாக்கிங் (walking)’ கூட்டிக்கொண்டு போய்விட்டு மாலையில் உன் வீட்டில் கொண்டுவந்து விடுகிறேன் என்றான். அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

 

காதலன் நாயைக் கூட்டிக்கொண்டு நேரடியாக கடைக்குப் போனான். பெர்Fயூம் விற்கும் பிரிவிலுள்ள பெண்களிடம் பல வகையான பெண்கள் வசனைத் திரையங்களின் மாதிரி (Sample சாம்பிள்) கேட்டான். பொதுவாக அவைகளைக் சின்னக் கார்டில் “ஸ்ப்ரே” (spray) செய்து (தெளித்து) முகர்ந்து பார்க்கக் கொடுப்பார்கள்.

 

நமது காதலனோ அந்த அட்டைகளை நாயின் மூக்கிற்கு நேரே காட்டச் செய்தான். அந்தப் பிரிவிலுள்ள பெண்களுக்கு ஒரே வியப்பு; புரியவுமில்லை. ஒரு குறிப்பிட்ட பெர்Fயூமை, நாயிடம் காட்டியபோது அது ஆநந்தமாக எம்பிக் குதித்தது. அதுதான் மனைவி, பயன்படுத்தும் பெர்Fயூம் என்பது தெளிவாகியது. அதை மகிழ்ச்சியாக வாங்கிச் சென்றான். அவளுக்கும் மகிழ்ச்சி. தனது கணவனுக்குத் தான் பயன்படுத்தும் பெர்Fயூம் முதற்கொண்டு எல்லாம் தெரிந்திருக்கிறதே! என்று அன்பும் அதிகரித்தது. (ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம்—லண்டன் சுவாமிநாதன்)

 

Xxx

 

poison

நீ என் மனைவியாக இருந்தால்……………….

பெண்களுக்கு ஓட்டுரிமை கோரி இங்கிலாந்தில் பெரிய போராட்டம் (suffragette)  நடந்தது. அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கக்கூடாதென்று லாய்ட் ஜார்ஜ் (Lloyd George) என்பவர் சொற்பொழி வாற்றினார். அந்தக் கூட்டத்து வந்த ஒரு பெண்மணிக்கு அதிபயங்கர கோபம். கண்களில் கனல் தெரிக்க எழுந்தார். எல்லோர் முன்னிலையிலும், “அன்பரே, நீவிர் மட்டும் எனது கணவராக இருந்திருந்தால் உமக்கு விஷம் கொடுத்துக் கொன்றிருப்பேன்” என்றார். அவர் உடனே “நீர் மட்டும் எனது மனைவியாக இருந்திருந்தால், கட்டாயம் அதை வாங்கிக் குடித்திருப்பேன்!” என்றார்.

 

xxx

 

நான் என்ன முட்டாளா? அவ்வளவு ஆரஞ்சுப் பழத்தையும் ஒரு நிமிடத்தில் விற்க!

 

Happy-Orange-Vendor-

 

மெக்ஸிகோ நாட்டில் ஒரு பிரமுகர், பழம் விற்கும் ஒரு கூடைக்காரியிடம் தினமும் இரண்டு ஆரஞ்சுப் பழம் வழங்குவார். ஒரு நாள் அவர் வீட்டில் ஒரு பெரிய பார்ட்டி/விருந்து ஏற்பாடாகியிருந்தது. அவர் நினைத்தால், மொத்த விற்பனைக் கடைக்குச் சென்று சகாயமான விலையில் ஒரு கூடை, 2 கூடை ஆரஞ்சுப் பழம் வாங்கியிருக்கலாம். ஆனால் கூடைக்கார கிழவியிடம் வாங்கினால், அவள் சந்தோஷப்படுவாள் என்று எண்ணி, அவளிடம் போய் நின்றார்.

 

வழக்கமான வாடிக்கையாளர் என்பதால், அவர் வாய் திறக்கும் முன்னரே, அந்தப் பெண்மணி, “இந்தாருங்கள் உங்களுடைய இரண்டு ஆரஞ்சுகள்” என்று சொல்லி கையில் திணித்தாள்.

அவர் சொன்னார், “ அம்மா! இன்று உன் கூடையிலுள்ள எல்லா ஆரஞ்சுப் பழங்களும் எனக்கு விலைக்கு வேண்டும். என் வீட்டுக்கு விருந்தாளிகள் வருகின்றனர்” –என்றார்.

அவளுக்கு வந்ததே பார்க்க வேண்டும் – கோபம்! “என்ன நினைத்தீர்கள் என்னை? உங்களுக்கு முழுக்கூடையையும் ஒரு நிமிடத்தில் விற்றுவிட்டால், நாள் முழுவதும் நான் என்ன செய்வது?” – என்று ஒரு முறை,முறைத்தாள்.

அந்தப் பிரமுகருக்கு, சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.

(ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம்—லண்டன் சுவாமிநாதன்)

Xxx