கம்போடியாவில் சிவன், விஷ்ணு பாதங்கள் (Post No.7133)

India- Vietnam Joint Issue

Written by london Swaminathan

swami_48@yahoo.com

Date: 24 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 9-18 am


Post No. 7133

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கடவுளின் பாத சுவடுகளை வழிபடுவதும், ஞானியரின் காலணிகளை வழிபடுவதும் பாரத நாட்டில் தொன்றுதொட்டு  இருந்துவரும் பழக்கங்கள். ராமனின் பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து அரசாண்டான் பரதன். காசி இந்து பல்கலைக் கழக துவக்க விழாவுக்கு வர இயலாது என்று சிருங்கேரி சுவாமிகள் சொன்னவுடன் பாதுகைகளை  வாங்கிச் சென்று பெரிய மரியாதை செய்து அவற்றைத் திருப்பி அனுப்பினார் அமைச்சர். பாதுகா சஹஸ்ரம் என்ற பெயரில் இறைவனின் திருவடிகள் மீது 1000 பாடல் இயற்றினார் வேதாந்த தேசிகன். வள்ளலார் பாதக் குறடுகள் முதல் மஹாத்மா காந்திஜியின் பாதக் குறடுகள் வரை இன்றும் மரியாதையுடனும் பயபக்தியுடனும் தரிசிக்கப்படுகிறது.

இந்துக்களுக்கு மண்ணும் புனிதம், மலையும் புனிதம். பக்தர்களின் காலடித் தூசி தன்  மீது படவேண்டும் என்பதற்காக மாமன்னர்கள் தங்கள் பாத சுவடுகளை கோவில் தரைகளில் பொறிக்க வைத்தனர். ஆனால் அவர்கள் காலடிச் சுவடுகள் மீது நாம் படக்கூடாது என்று அஞ்சி அதன் மீதும் மண்டபம் எழுப்பிவிட்டோம்.

இமய மலை முதல் இலங்கையின் சிவனொளி பாத மலை (Adam’s Peak) வரை பாதச் சுவடுகளை வழிபடுவதில் வியப்பில்லை ஆனால் கம்போடியாவிலும் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே வழிபடக்கூடிய பாத சுவடுகள் உள்ளதைப் பலரும் அறியார்.

வியட்நாம், கம்போடியாவின் பழைய பகுதி ப்யூனான் (Funan). அங்கு முக்கிய வைஷ்ணவக் கல்வெட்டுகள் கிடைத்தன. ஒரு கல்வெட்டு ஜயவர்மனின் மனைவி குலப் பிரபாவதி செய்த தானம் பற்றியது. பிராமணர்கள் வசிக்கும் குரும்ப நகரத்தில் அவள் இறைவனின் தங்க விக்ரகத்தை நிறுவினாள்; ஒரு நந்தவனத்தையும், ஆஸ்ரமத்தையும் நிர்மாணித்தாள்; மற்றொரு கல்வெட்டு விஷ்ணுவின் பாத சுவடுகள் பற்றியது. குணவர்மன் என்பவன் சக்ர தீர்த்த ஸ்வாமின் என்னும் விஷ்ணுவின் பாத சுவடுகளைப் பொறித்தான். அடுத்ததாக ருத்ரவர்மன் கல்வெட்டு புத்தர், பிராமணர் ஆகியோரைப் புகழ்கிறது.

604-ம் (CE 604) ஆண்டில் (சக ஆண்டு 526) ஒரு பிராஹ்மணன், மலை உச்சியில் சிவன் பாதத்தைப் பொறித்து அதன் மீது தண்ணீர், பால் விழுவதற்காக ஒரு குடத்தை நிர்மாணிததாக ஒரு கல்வெட்டு இயம்புகிறது. அதைச் சுற்றிலும் செங்கல் சுவர் எழுப்பியதையும் கல்வெட்டு உரைக்கிறது.

613 (CE 613) ஆண்டில் சிவன் மடி மீது பார்வதி அமர்ந்த சிலை நிர்மாணிக்கப்பட்டதை மற்றொரு கல்வெட்டு காட்டுகிறது.

xxxx

Brahma Stamp in Indo China

சீனர்கள் அடித்த கொள்ளை – ஒரு லட்சம் பவுண்டு தங்கம்

சீனாவின் லியங் வம்சாவளி (History of Liang Dynasty) )  பற்றிய புஸ்தகம் கிடைத்துள்ளது. அதில் வியட்நாமென்னும் சம்பா  தேசத்தில் இருந்து சீனர்கள் ஒரு லட்சம் பவுண்டு எடையுள்ள தங்கத்தை எடுத்துச் சென்றதாகவும் கவுண்டின்ய வம்சத்தில் வந்த மன்னர் தங்க சிம்மாசனத்தில் படாடோபங்களுடன், அழகிகள் சாமரம் வீச, எழுந்தருளியதாகவும் எழுதி வைத்துள்ளனர். இப்பொழுது நாம் சினிமாவில் காணும் மன்னர்களின் காட்சிகள் அத்தனையையும் அவர்கள் அப்படியே வருணித்து எழுதியுள்ளனர்.

சம்பா தேச பாமர மக்கள் உடை அணியாமல் இருந்ததாகவும் அவர்களுக்கும் உடை அணியும் வழக்கததை கவுண்டின்யர் கற்றுக் கொடுத்தகதாவும் சீனர்கள் எழுதி வைத்துள்ளனர்.

சீனர்களுக்கு சிறிய கப்பல் மட்டுமே கட்டத் தெரிந்ததால், தென் சீனக் கடலில் ,இந்துக்களின் நீண்ட கப்பல்களுக்கு , பயணிகள் மாற்றப்பட்டதாகவும் சீனர்கள் சொல்கின்றனர்.

ஒரு பவுண்டு= 453 கிராம்; ஒரு பவுன்/ சவரன் = எட்டு கிராம்)

xxx

உடனே செய்க!

உலக நாடுகள் முழுதும் அவரவர் எழுதிய புது வரலாற்றைப் படிக்கின்றனர். இந்தியர்கள் மாட்டும் வெள்ளையர்கள் எழுதிய வரலாற்றை இன்று வரை படிக்கின்றனர்!!!

இந்திய வரலாற்றை விரைவில் திருத்தி எழுத மாபெரும் இயக்கம் துவக்க வேண்டும். தமிழர்களும் ஏனைய தென் இந்தியர்களும் தென் கிழக்கு ஆசியாவில் எட்டு நாடுகளை 1500 ஆண்டுகளுக்கு ஆண்டதை மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்; சிங்க்கப்பூரின் பெயர் சம்ஸ்க்ருதம் (சிம்ஹ புரம்; இலங்கையின் பெயர் சம்ஸ்க்ருதம்- லங்கா, சிம்ஹலதேச); பர்மாவின் பெயர் பிரஹ்மா, கம்போடியாவின் பெயர் காம்போஜம், லாவோஸின் பெயர் லவன் தேசம்; வியட்நாமின் பழைய பெயர் சம்பா; மலேயாவின் பெயர் மலை நாடு- தமிழ்) சாவகம், சுமத்ரா போன்ற` இந்தோநேஷிய தீவுகள் தமிழ், சம்ஸ்கிருத நூல்களில் உள்ளன; தென் கிழக்காசிய வரலாற்றை தமிழர்கள் கற்றால் ராஜேந்திர சோழன், வீர பாண்டியன், குலோத்துங்க சோழனின் கடற்படை வலிமை புரியும். வியட்நாமை ஆண்ட திருமாற பாண்டியன் முதல் 1500 ஆண்டுகளுக்கு இந்தியர்கள் கொடிகட்டிப் பறந்தனர்). அந்த புகழோங்கிய காலம் மீண்டும் வரும்; வரச் செய்ய முடியும்!)

Shoe worship | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › shoe-worship

1.      

15 Aug 2012 – Why Do Hindus Worship Shoes? By London swaminathan. “A pair of sandals worn by the Maharishi is expected to fetch £80,000 when they are …

Nayan Tara Temple in Syria with Mysterious Foot Prints! (Post …



https://tamilandvedas.com › 2017/04/08 › nayan-tara-temple-in-syria-with-…

1.      

8 Apr 2017 – Written by London swaminathan Date: 8 APRIL 2017 Time uploaded in London:- 13-47 Post No. 3799 Pictures are taken from various sources; …

Footprints on sands | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › footprints-on-sands

1.      

12 Jul 2017 – Written by London Swaminathan Date: 12 July 2017. Time uploaded in London- 18-24. Post No. 4074. Pictures shown here are taken from …

Durga | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › durga

1.      

20 Jul 2018 – The kings foot prints were engraved on a boulder and it indicated he ruled or conquered that area. In the text of the inscription he compared his …

காலமெனும் மணலிற் காலடி ‘Footprints …



https://tamilandvedas.com › 2018/10/07 › காலம…

1.      

Translate this page

7 Oct 2018 – Tamil and Vedas … காலமெனும் மணலிற் காலடி ‘Footprints on the … some of his most famous poems, including the Village Black Smith. … Manu and Longfellow: Great Men think Alike (Post No.4074)In …

Xxxx subham xxxx