வாஸ்து வீடு (Post No.8658)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8658

Date uploaded in London – –10 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


தர்ம ராஜா “ராஜ சூய யாகம்” நடத்தி அரசாண்டு தனது சாம் ராஜ்யத்தை 

அபிமன்யுவின் மகனான பரிஷித்தை மன்னனாக்கி
துறவரம் பூண்டு சுவர்க்கம் புகுந்தார் தம்பிகளுடன்.

பரிஷித் நியாயம் தவறாமல் அரசாண்டார். காட்டிலிருக்கும்
மிருகங்கள் நாட்டிலிருக்கும் மக்களை துன்புறுத்தாமல்
இருக்க அக்காலத்து மன்னர்கள் காட்டிற்குச் சென்று
வேட்டையாடுவது வழக்கம். படைகளுடன் சென்ற மன்னன்
ஒரு மானின் மேல் அம்பு எய்ய அதை துரத்திச் சென்ற மன்னன்
வழி தவறினான். தனித்து விடப்பட்டான்.


காட்டில் வழிதெரியாமல் அலைந்து திரிந்து கடைசியில்
ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு
ஓய் முனிவரே இங்கு ஒரு அம்பு பட்ட மான் ஓன்று ஓடியதைப்
பார்த்தீர்களா??? முனிவர் தவத்தில் இருந்தால் பதிலேதும்
கூறவில்லை. பல முறை வினவியும் பதில் வராத்தால் மன்னன்
கோபம் கொண்டு அருகில் இருந்த இறந்த பாம்பு ஒன்றைக்
கழுத்தில் போட்டுச் சென்றான்.


உணவு சேகரிக்கச் சென்ற மகன் தன தந்தை சமீகர் கழுத்தில்
இறந்த பாம்பை கண்டு ரத்தம் கொதித்து சாபம் கொடுக்க
முயன்ற போது சமீகர் பொறுமையின் சின்னமாக தன் மகன்
கிரீசனை தடுத்தார்.


ஆனால், சமீகரின் மகன் கிரீசன் என் தந்தையின் கழுத்தில் 

செத்த பாம்பைப் போட்டனோ அவன் இன்றுலிருந்து 

 “ஏழு நாட்களுக்குள்” பாம்பு கடித்து இறப்பான்”.
தகவல் அறிந்து கதறி மன்னிப்பு கேட்டான் மன்னன்.

சாபம் கொடுத்தது கொடுத்ததுதான் மன்னிப்பே கிடையாது. அதேபோல்
எழே நாட்களில் பரீஷித் மன்னன் பாம்பு கடித்து இறந்தான்
என் அப்பா ஒரு நாடாளும் மன்னன். அவரை கடித்த கொன்ற
பாம்புகளை விட மாட்டேன் என்றான் மகன் ஜனமேஐயன்.
பாம்புகளைக் கொல்ல ஒரு பெரிய யாகம் செய்ய பரிஷித் மகன்
ஜனமேஜயன்  தலைமையில் ஒரு குழு திரண்டது…….


பெரிய பந்தல் போட்டு யாகத்தை ஆரம்பித்தனர் முனிவர்கள்.

 பாம்புகள் ஒவ்வொன்றாக வந்து விழுந்தன யாகத்தில். 


அவ்வழியே வந்த ஸ்தபதி ( வீடு கட்டும் ஆலோசகர்)இந்தப்
பந்தல் வாஸ்து சாஸ்திரப் பிரகாரம் இல்லை.நாடே அழியும்.
உடனே நிறுத்துங்கள் யாகத்தை…….ஆ னால் ஜனமேஜயன்
நிறுத்த வில்லை.மேலும் மேலும் சர்ப்பங்கள் வந்து விழுந்தன.

அவ்வழியே வந்த ஆஸ்தீகர் என்னும் முனிவர்
உடனே யாகத்தை நிறத்தக் கட்டளை இட்டார்.இல்லை
யென்றால் நாடே அழியும். முனிவரே சொன்ன காரணத்தினால்
யாகம் நிறுத்தபட்டது .


வாஸ்து பிரகாரம் கட்டப்படாத எந்த இடமும் உருப்படாது.
துனபத்தையே விளைவிக்கும்.


இதோ உங்கள் வீடு எப்படி அமைய வேண்டும் என்பதை
சாஸ்திரப் பிரகாரம் வரைந்து காட்டியிருக்கிறோம்.
இதை “மாதிரியாக “ வைத்துக்கொண்டு புது வீடு கட்டி வளமாக
வாழ வாழ்த்துகிறோம்.

tags- வாஸ்து , வீடு, சாஸ்திரம்

‘வீடு வாங்கலியோ வீடு’! ‘பிளாட் வாங்கலியோ பிளாட்’ ! (Post No.8477)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8477

Date uploaded in London – 9 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.  And pictures are only representational; may not be connected to the story.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வீடு வாங்கலியோ வீடு!  பிளாட் வாங்கலியோ பிளாட் !

‘வீடு வாங்கலியோ வீடு , பிளாட் வாங்கலியோ பிளாட்’- என்று கூவி விற்கும் அளவுக்குப் போய்விட்டது இன்றைய ‘ரியல் எஸ்டேட் பிஸினஸ்’ (Real Estate Business) ! பலர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி ஒளிகிறார்கள் . வாரம் ஒரு முறை ஒரு பக்க விளம்பரம். 

சீரியல் நடிகைகளும் , சில நடிகர்களும் மத்தியான வேளையிலும் சரி, இரவு வேளையிலும் சரி ,கதறிக் கதறி, அடி வயிற்றிலிருந்து, (அவர்கள் நிழலைப் பார்த்தாலே தெரிகிறது அவர்கள் வெயிலில் நின்றுகொண்டு போஸ் தருவது) பேசுவதைக் கேட்டால் பரிதாபமாக இருக்கிறது.

சரி,  டீ.வி, காட்சிக்கு வருவோம்.

ஒருவரைப் பார்த்து அழகான நடிகை கேட்கிறாள்

உங்கள் பெயர் ?

அவரும் பதில் சொல்கிறார் – என் பெயர் ……..

எதற்காக இங்கே வீடு வாங்குகிறீர்கள் ?

நான் …… ஊரிலிருந்து ……. ஊருக்குப் பஸ்ஸில் போகையில் ‘அழகான மரங்கள், தென்றல் காற்று, , பக்கத்திலேயே ரயில்வே ஸ்டேஷன், பஸ்  ஸ்டாண்டு’ (இதைச் சொல்லும்போதே முகத்தில் வேர்வை வடிய பக்கத்தில் உள்ளவரிடம் துண்டை வாங்கி  முகத்தைத் துடைத்துக்  கொள்கிறார் ) இவைகளை பார்த்து இந்த இடத்துக்கு வந்தேன் . இந்த போர்டையும் (Board) கண்டேன் (உடனே போர்டை சில நிமிடங்களுக்கு காட்டுவார்கள்).

இந்த ஓனரிடம் (owner) 4 பிளாட்டுகள் வாங்கி விட்டேன் .

டி .வி. நடிகை (ஆச்சர்யத்துடன்) என்ன ….. 4 ……… பிளாட்டுகளா ?

ஆமாம். ஒன்று எனக்கு; இரண்டு பிளாட்டுகள் என் பையனுக்கும், பெண்ணுக்கும். நாலாவது பிளாட் என் மச்சினனுக்கு  .

(அடடா, என்ன அண்டப்புளுகு; ஒரு பிளாட் நமக்கு வாங்குவதற்குள் மூச்சுத் திணறி, நாக்கு வெளியே வந்து விடுகிறது. இவர் மச்சினனுக்கு வேறு வாங்கி விட்டாராம்).

நடிகை – உங்கள் அருகில் நிற்பவர் யார்?

ஓ , இவரா, இவர் என் நண்பர் . சும்மா, பிளாட்டுகளைக் காட்ட அழைத்து வந்தேன். அவரோ இந்த இடத்தைப் பார்த்த மாத்திரத்தில், செல் போனை எடுத்தார். சொந்தக் காரரிடம் பேசி 8 பிளாட்டுகள் ‘புக்’ செய்து அட்வான்ஸ் தொகையும் அனுப்ப ஏற்பாடு செய்துட்டார்.

உடனே காமிரா டெலிவிஷன் நடிகையை நோக்கி திரும்புகிறது ; அவர் சொல்கிறார்.

ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன். இந்த இடத்தில் ஒரு சதுர அடி ரூ. 2000. ஆனால் நாங்கள் 50% டிஸ்கவுன்ட்டில் (Discount) ரூ.1000குத்  தருகிறோம் . அது மட்டுமா? 4 பிளாட்டுகள் வாங்கினால் ஒரு பிளாட் இலவசம். கிட்டத்தட்ட எல்லா பிளாட்டுகளும் ‘புக்’ ஆகிவிட்டன. இன்னும் ஒரு சில பிளாட்டுகளே பாக்கி!

நீங்கள் எப்போ த வரப்போகிறீர்கள்?  இதோ எங்கள் விலாசம் —

………..

……….

…………

பின் கோடு –  பூஜ்யம், பூஜ்யம் பூஜ்யம் …..

புரிகிறதா?

உங்களுக்கும் ‘பூஜ்யம்’ தான்

நீங்களும் சிந்திக்கத் துவங்கி இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

tags – ags – வாங்கலியோ ,பிளாட் ,வீடு

–subham–

வீடு பற்றிய 5 பழமொழிகள் கண்டுபிடியுங்கள் (Post No.8421)

WRITTEN BY LO

NDON SWAMINATHAN

Post No. 8421

Date uploaded in London – 29 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

ANSWER

1.வீட்டுக்கு வீடு  வாசற்படி.

2.கட்டியவனுக்கு ஒரு வீடு , கட்டாதவனுக்கு ஊரெங்கும் வீடு

3.கட்டின வீட்டுக்கு எட்டு வக்கணை

4.வீட்டைக் கட்டிப் பார், கலியாணம் செய்து பார்

5.வீடு பற்றி எரியும்போதா கிணறு வெட்டுவது?

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

Tags- ,  பழமொழிகள், வீடு

வீடு பற்றிய 30 பழமொழிகள் (Post No.4861)

Picture posted by Lalgudi Veda

COMPILED by London Swaminathan 

 

Date: 29 MARCH 2018

 

Time uploaded in London –  6-58 am (British Summer Time)

 

Post No. 4861

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

ஏப்ரல் 2018 காலண்டர்

(2018 பங்குனி-சித்திரை மாத நற்சிந்தனை காலண்டர்;

ஹேவிளம்பி- விளம்பி காலண்டர்)

 

முக்கிய விழாக்கள் ஏப்ரல் 14-தமிழ்ப் புத்தாண்டு; 18-அக்ஷய த்ருத்யை; 20- சங்கர ஜயந்தி; 29-சித்ரா பௌர்ணமி; புத்த பௌர்ணமி; ஏப்ரல் 1- ஈஸ்டர், 2- ஈஸ்டர் திங்கள் விடுமுறை

 

 

பௌர்ணமி ஏப்ரல் 29

அமாவாசை ஏப்ரல் 15

ஏகாதஸி விரதம்—ஏப்ரல் 12, 26

சுப முகூர்த்த தினங்கள்:- 5, 20, 22, 25, 27

 

ஏப்ரல் 1 ஞாயிற்றுக் கிழமை

வீடு அசையாமல் தின்னும், யானை அசைந்து தின்னும்

ஏப்ரல் 2 திங்கட்கிழமை

வீடு கட்டுகிறது அரிது, வீடு அழிக்கிறது எளிது

ஏப்ரல் 3 செவ்வாய்க்கிழமை

 

வீடு கட்டும் முன்னம், கிணறு வெட்ட வேண்டும்

ஏப்ரல் 4 புதன்கிழமை

வீடு நிறைந்த விளக்குமாறு

ஏப்ரல் 5 வியாழக்கிழமை

வீடு பற்றிக் கொண்டு  எரியும்போது, சுருட்டுக்கு நெருப்புக் கேட்டானாம்.

 

ஏப்ரல் 6 வெள்ளிக்கிழமை

வீடு பற்றி எரியும்போதா கிணறு வெட்டுவது?

ஏப்ரல் 7 சனிக்கிழமை

வீடு போ போ என்கிறது காடு வா வா என்கிறது

 

ஏப்ரல் 8 ஞாயிற்றுக் கிழமை

வீடு வெறும் வீடாய் இருந்தாலும் மணியம் ஏழு ஊர்

ஏப்ரல் 9 திங்கட்கிழமை

வீட்டிலிருக்கிற பூனையை அடித்தால், மேட்டிலிருக்கிற எலியைப் பிடிக்கும்

ஏப்ரல் 10 செவ்வாய்க்கிழமை

வீட்டுக்கு ஏற்றின விளக்கு விருந்துக்கும் ஆகும்

 

ஏப்ரல் 11 புதன்கிழமை

வீட்டைக் கட்டிப் பார், கலியாணம் செய்து பார்

 

ஏப்ரல் 12 வியாழக்கிழமை

வீட்டைக் காத்த நாயும் காட்டைக் காத்த நரியும் வீண்போகா

ஏப்ரல் 13 வெள்ளிக்கிழமை

வீட்டுக் கருமம் நாட்டுக்குரையேல்

ஏப்ரல் 14 சனிக்கிழமை

வீட்டுக் காரியம் பார்க்காதவன் நாட்டுக் காரியம்  பார்ப்பானா?

 

ஏப்ரல் 15 ஞாயிற்றுக் கிழமை

வீட்டுக்கு அடங்காத பிள்ளையை ஊரார் அடக்குவார்கள்

வீட்டில் அடங்கதவன் ஊரில் அடங்குவான்

ஏப்ரல் 16 திங்கட்கிழமை

வீட்டுக்கு அலங்காரம் பெரிய குடி.

வீட்டுக்கு அலங்காரம் மனையாள்.

வீட்டுக்கு அலங்காரம் விளக்கு.

வீட்டுக்கு அலங்காரம் வேளாண்மை.

ஏப்ரல் 17 செவ்வாய்க்கிழமை

வீட்டுக்கு இருந்தால் வெண்கலப் பெண்டாட்டி, வீட்டுக்கு இல்லாமற் போனால் தூங்கற் பெண்டாட்டி

ஏப்ரல் 18 புதன்கிழமை

வீட்டுக்கு ஒரு மெத்தை, கேட்டுக்கொள்ளடி மாரியாத்தை

ஏப்ரல் 19 வியாழக்கிழமை

வீட்டுக்கு ஒரு வாசற்படி, பூட்டுக்கு ஒரு திறவு கோல்

 

ஏப்ரல் 20 வெள்ளிக்கிழமை

வீட்டுக்கு சோறில்லை சிவனறிவான், நாட்டுக்குச் செல்லப் பிள்ளை நானல்லவா?

ஏப்ரல் 21 சனிக்கிழமை

வீட்டுக்குப் புளி, காட்டுக்குப் புலி

 

ஏப்ரல் 22 ஞாயிற்றுக் கிழமை

வீட்டுக்கு வாய்த்தது எருமை, மோட்டுக்கு வாய்த்தது போர்

 

ஏப்ரல் 23 திங்கட்கிழமை

வீட்டைக் கட்டிக் குரங்கை குடிவைத்தது போல

 

ஏப்ரல் 24 செவ்வாய்க்கிழமை

வீட்டுக்கு வீரன் காட்டுக்குக் கள்ளன்

 

ஏப்ரல் 25 புதன்கிழமை

வீட்டுப் பாம்பு காட்டுக்குப் போனால் அதுவும் காட்டுப் பாம்பாகும்.

வீட்டு மூதேவியும் காட்டு மூதேவியும் சேர்ந்து உலாவுகின்றன

 

ஏப்ரல் 26 வியாழக்கிழமை

வீட்டுக்குள் கஞ்சித் தண்ணீரைக் குடித்துவிட்டு, மீசையில் வெள்ளையைத் தடவிக்கொண்டு புறப்படுகிறது

ஏப்ரல் 27 வெள்ளிக்கிழமை

வீட்டுப் பெண்சாதி வேம்பு, நாட்டுப்     பெண்சாதி                 கரும்பு

 

ஏப்ரல் 28  சனிக்கிழமை

வீட்டுக்கு வீடு  வாசற்படி.

வீட்டுக்கு வீடு எதிர் வீடு ஆகாது.

வீட்டுக்கு வீடு மண் வீடுதான்.

 

ஏப்ரல் 29 ஞாயிற்றுக் கிழமை

வீட்டுச் செல்வம் மாடு, தோட்டச் செல்வம் முருங்கை

 

ஏப்ரல் 30 திங்கட்கிழமை

வீட்டுக்குள்ளே வேட்டை நாயை உசுப்புவானேன்

 

BONUS PROVERBS ON HOUSE/HOME

வீட்டிளக்காரம் வண்ணான் அறிவான்

வீட்டைக் கொளுத்தி வேடிக்கை பார்க்கிறதா?

வீட்டில் அழகு வேம்படியாகும்

 

–SUBHAM–