
Post No. 8658
Date uploaded in London – –10 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தர்ம ராஜா “ராஜ சூய யாகம்” நடத்தி அரசாண்டு தனது சாம் ராஜ்யத்தை
அபிமன்யுவின் மகனான பரிஷித்தை மன்னனாக்கி
துறவரம் பூண்டு சுவர்க்கம் புகுந்தார் தம்பிகளுடன்.
பரிஷித் நியாயம் தவறாமல் அரசாண்டார். காட்டிலிருக்கும்
மிருகங்கள் நாட்டிலிருக்கும் மக்களை துன்புறுத்தாமல்
இருக்க அக்காலத்து மன்னர்கள் காட்டிற்குச் சென்று
வேட்டையாடுவது வழக்கம். படைகளுடன் சென்ற மன்னன்
ஒரு மானின் மேல் அம்பு எய்ய அதை துரத்திச் சென்ற மன்னன்
வழி தவறினான். தனித்து விடப்பட்டான்.
காட்டில் வழிதெரியாமல் அலைந்து திரிந்து கடைசியில்
ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு
ஓய் முனிவரே இங்கு ஒரு அம்பு பட்ட மான் ஓன்று ஓடியதைப்
பார்த்தீர்களா??? முனிவர் தவத்தில் இருந்தால் பதிலேதும்
கூறவில்லை. பல முறை வினவியும் பதில் வராத்தால் மன்னன்
கோபம் கொண்டு அருகில் இருந்த இறந்த பாம்பு ஒன்றைக்
கழுத்தில் போட்டுச் சென்றான்.
உணவு சேகரிக்கச் சென்ற மகன் தன தந்தை சமீகர் கழுத்தில்
இறந்த பாம்பை கண்டு ரத்தம் கொதித்து சாபம் கொடுக்க
முயன்ற போது சமீகர் பொறுமையின் சின்னமாக தன் மகன்
கிரீசனை தடுத்தார்.
ஆனால், சமீகரின் மகன் கிரீசன் என் தந்தையின் கழுத்தில்
செத்த பாம்பைப் போட்டனோ அவன் இன்றுலிருந்து
“ஏழு நாட்களுக்குள்” பாம்பு கடித்து இறப்பான்”.
தகவல் அறிந்து கதறி மன்னிப்பு கேட்டான் மன்னன்.
சாபம் கொடுத்தது கொடுத்ததுதான் மன்னிப்பே கிடையாது. அதேபோல்
எழே நாட்களில் பரீஷித் மன்னன் பாம்பு கடித்து இறந்தான்
என் அப்பா ஒரு நாடாளும் மன்னன். அவரை கடித்த கொன்ற
பாம்புகளை விட மாட்டேன் என்றான் மகன் ஜனமேஐயன்.
பாம்புகளைக் கொல்ல ஒரு பெரிய யாகம் செய்ய பரிஷித் மகன்
ஜனமேஜயன் தலைமையில் ஒரு குழு திரண்டது…….
பெரிய பந்தல் போட்டு யாகத்தை ஆரம்பித்தனர் முனிவர்கள்.
பாம்புகள் ஒவ்வொன்றாக வந்து விழுந்தன யாகத்தில்.
அவ்வழியே வந்த ஸ்தபதி ( வீடு கட்டும் ஆலோசகர்)இந்தப்
பந்தல் வாஸ்து சாஸ்திரப் பிரகாரம் இல்லை.நாடே அழியும்.
உடனே நிறுத்துங்கள் யாகத்தை…….ஆ னால் ஜனமேஜயன்
நிறுத்த வில்லை.மேலும் மேலும் சர்ப்பங்கள் வந்து விழுந்தன.
அவ்வழியே வந்த ஆஸ்தீகர் என்னும் முனிவர்
உடனே யாகத்தை நிறத்தக் கட்டளை இட்டார்.இல்லை
யென்றால் நாடே அழியும். முனிவரே சொன்ன காரணத்தினால்
யாகம் நிறுத்தபட்டது .
வாஸ்து பிரகாரம் கட்டப்படாத எந்த இடமும் உருப்படாது.
துனபத்தையே விளைவிக்கும்.
இதோ உங்கள் வீடு எப்படி அமைய வேண்டும் என்பதை
சாஸ்திரப் பிரகாரம் வரைந்து காட்டியிருக்கிறோம்.
இதை “மாதிரியாக “ வைத்துக்கொண்டு புது வீடு கட்டி வளமாக
வாழ வாழ்த்துகிறோம்.

tags- வாஸ்து , வீடு, சாஸ்திரம்