தமிழ் முட்டாளும் சம்ஸ்கிருத முட்டாளும் (Post No.2810)

blockheads

Written by london swaminathan

 

Date: 14 May 2016

 

Post No. 2810

 

Time uploaded in London :–  9-31 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

கொக்கின் தலையில் வெண்ணையை வைத்து பிடிக்கலாம் என்றது போல – என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இதுதான் முட்டாள்களின் அடையாளம். கொக்கைப் பிடிப்பதற்கு அதே நிறமுள்ள வெண்ணையை வைத்தால் அதற்குத் தெரியாது; அது வெய்யிலில் நிற்கும் போது வெண்ணை உருகி கண்ணில் விழுந்து அதை மறைக்கும்; அப்போது நாம் போய் அதைப்பிடித்துவிடலாம் என்று முட்டாள்கள் நினைப்பர்.

 

இதனுடைய பழைய வடிவம் மயிலின் தலையில் வெண்ணை வைத்து பிடிப்பது என்பதாகும்:

முன்னையுடையது காவாதிகந்திருந்து

பின்னையஃதாராய்ந்து கொள்குறுதல் – இன்னியல்

மைத்தடங்கண் மாதராய் அஃதாதல் வெண்ணெய் மேல்

வைத்து மயில்கொள்ளுமாறு (பழமொழி)

 

சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னால் சமண முனிவர்களால் இயற்றப்பட்ட ‘பழமொழி’-யில் இப்பாடல் உளது. இதன் பொருள்:–

“ஏ கண்ணழகி! தனக்கு முன்னுள்ள பொருளைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டு, கஷ்டப்பட்டு அதே பொருளைத் தேடுவது மயிலின் தலையில் வெண்ணெய் வைத்து பிடிக்கலாம் என்று எண்ணுவது போலாகும்”

 

வான்புகழ் வள்ளுவன் தேன் தமிழ்க்குறளில் பல இடங்களில் பேதைமை எது எனப் புகல்வான்.

பாரதியாரும் முட்டாள்கள் பட்டியலைப் பல இடங்களில் தருவார்:

கோயிற்பூசை செய்வார் சிலையைக் கொண்டு விற்றல், வாயிற்காத்து நிற்போன் வீட்டை வைத்திழத்தல், கண்களிரண்டையும் விற்றுச் சித்திரம் வாங்குதல், அமிர்தம் கிடைக்கும்போது கள்ளுக்கு ஆசை கொள்ளல்,விண்ணிலுள்ள இரவி/சூரியனை விட்டு மின்மினி (ப்பூச்சி) கொளல் முதலிய பல உவமைகள் மூலம் முட்டாள்தனம் எது என்று காட்டுவார்.

Laurel and Hardy.jpg

சம்ஸ்கிருத முட்டாள்

ஆரப்பயந்தே அல்பமேவாஅஞா: காமம் வ்யக்ரா பவந்தி ச

மஹாரம்பா: க்ருததிய: திஷ்டந்தி ச நிராகுலா:

சம்ஸ்கிருத மொழியிலும் முட்டாள்கள் பற்றி நிறைய பழமொழிகள் இருக்கின்றன:–

முட்டாள்கள் சின்ன காரியங்களைத் துவக்கிவிட்டு, முடிக்க முடியாமல் தவிப்பார்கள் பெரியோர்களோவெனில் பெரிய அளவில் பணிகளைத் துவக்கி, சலிக்காமல்,தயங்காமல், மலைக்காமல் அதைச் செய்துமுடிப்பர்.

आरभ्यन्तेऽल्पमेवाऽज्ञाः कामं व्यग्रा भवन्ति च

महारंभाः कृतधियः तिष्ठन्ति च निराकुला:
எல்லோரும் செய்யக்கூடாது என்று சொன்ன செயல்களை, முட்டாள்கள் செய்வர். அதை மூடி மறைக்கவும் அவர்களுக்குத் தெரியாது. (கதசரித்சாகரம்/கதைக்கடல்)

 

அகார்யம் ஹி கரோத்யக்ஞோ ந ச ஜானாதி கூஹிதும்

 

–சுபம்–

முட்டாள்கள் பற்றிய முந்தைய கட்டுரைகள்:

முட்டாள்களை எப்படி கண்டுபிடிப்பது? (31-10-2015)

முட்டாள்கள் முன்னேற்ற சங்கம் (27-2-2016)