வானவியல் முறையில் வேதத்தின் காலம்! (Post No.3191)

img_8093

Written by London swaminathan

Date: 26 September 2016

Time uploaded in London:10-08 AM

Post No.3191

Pictures are taken from various sources; thanks.

 

 

நேற்றைய கட்டுரையில் மாக்ஸ்முல்லரின் ஊகத்தின்படி வேதத்தின் காலத்தைப் பார்த்தோம்.

 

வேதத்தின் காலம் பற்றி உளறுவோரிடம் முதலில் ஒரு கேள்வி கேட்க வேண்டும்:-

ஐயா, நீங்கள் சொல்லுவது போல வேதத்தின் காலலம் கி.மு.1200 என்று கொண்டால் ராமாயணம் எப்போது நடந்தது? மஹாபாரதம் எப்போது நடந்தது. புராணத்திலுள்ள அரசர்கள் ஆண்டது எப்போது? கோ கருநந்த அடக்கனின் கல்வெட்டு ஏழாவது நூற்றாண்டிலேயே கலியுகத்தின் காலத்தைக் காட்டுகிறதே! அதுவும் நாள் கணக்கில் சொல்லுகிறதே! 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழன் புளுகத் துவங்கி விட்டானா?

 

புத்தர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்று ஒப்புக்கொள்கிறீர்கள். ராமாயணம் நடந்தது, மஹாபரதம் நடந்தது, உபநிஷதம் தோன்றியது, பிரம்மாண்டமான வேத இலக்கியம் –கிரேக்க நாட்டு ஹோமருக்கு முன் தோன்றியது எல்லாம்– 600 ஆண்டுக்குள் நடந்ததாக ‘கப்சா’ அடிக்கிறீர்களே!

 

ராமர் செய்த யுத்ததில் மஹா பாரத  வியூகங்கள் இல்லை, மஹாபாரத ஆயுதங்கள் இல்லை, கிருஷ்ணர் கால சூது-வாதுகள் இல்லை– அப்படியானால்  இரண்டுக்கும் பெரும் கால வேறுபாடு இருக்க வேண்டுமே. மஹா பாரத  கி.மு3102 காலத்தியது என்று இந்துக்கள் நம்புகின்றனர். அதை நம்பாதோரும் கி.மு.1500 என்று மஹாபாரத யுத்தத்துக்கு காலம் குறித்துள்ளனரே. அக்காலத்தில் வாழ்ந்த வியாசர்தானே வேதங்கள் மிகவும் பெருகிவிட்டன என்று நான்காகப் பகுத்தார்.

 

அது போகட்டும்; கிரேக்க நாட்டு மெகஸ்தனீஸ் அவருக்கு முன்னர் 140-க்கும் மேலான அரசர்கள்

மகத சாம்ராஜ்யத்தை ஆண்டதாக எழுதிவைத்துள்ளாரே! அர்ரியன் என்ற கிரேக்க எழுத்தர் கி.மு 6000 க்கு முன் துவங்கிய இந்து மன்னர் ஆட்சி பற்றிக் குறிப்பிடுகிறாரே. இதையெல்லாம் அவர்கள் எழுதியே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிவிட்டதே.

தமிழ் வளர்க்க அகத்தியர் தென்னகம் வந்தது கி.மு.700-க்கும் கி.மு ஆயிரத்துக்கும் இடையில் என்று அறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்களே. இவை எல்லாம் இப்படி இருக்க நீங்கள் 600 ஆண்டுக் கால இடைவெளியில் இவ்வளவும் நடந்தது என்று சொல்லுவது முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல உளதே! என்று கேட்க வேண்டும்.

 

இதையெல்லாம் விட, வேத இலக்கியத்தில் உள்ள வானவியல் குறிப்புகளை இதுவரை யாரும் பொய் என்று சொல்லவில்லை அதன் கணக்குப்படி பார்த்தால் கி.மு 3000 அல்

லது அதற்கும் முன்னர் என்று வேதத்தின் காலம் கணக்கிடப்படுகிறதே.

அது போகட்டும். சரஸ்வதி நதி பற்றிய குறிப்புகள் வேதத்தின் காலம் கி.மு. 1900-க்கும் முன்னதாக என்று காட்டுகின்றனவே.

துருக்கி நாட்டில் பொகைஸ்கோயில் கண்டுபிடிக்கப்பட்ட களிமண் பலகைக் கல்வெட்டில் வேத கால தெய்வங்களின் பெயரைச் சொல்லி இரு மன்னர்கள் கையெழுத்து இட்டது இருக்கிறதே. துருக்கியைத் தாண்டி ஈரான் வரை 3000 ஆண்டுகளுக்கு முன்னரே வேத கலாசாரம் பரவியுள்ளதே.

இதோ கீழே கண்ட வானவியல் குறிப்புகளை மறுத்துப்பேச முடியுமா? சொல்லுங்கள்:–

precession_animation_small_new

சிறுவர்கள் பம்பரம் ஆடுவதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி பம்பரம் ஆடுகையில் கடைசியில் பம்பரம் ஆட்டம் முடிந்து அது தரையில் சாயும் முன் சாய்வாகச் சுற்றி கீழே விழுவதையும் பார்த்திருப்பீர்கள் இது போலத்தான் பூமியும் சாய்வாகச் சுற்றுகிறது. வான மண்டலத்தில் வட்டமாக உள்ள ஒரு பொருள் சுற்றும்போது அது சாய்வாகச் சுற்றுகிறது என்றால் என்ன? பொருள் விளங்க வில்லையே? என்று கேட்கலாம். அதாவது பூமியின் அச்சு இப்படிச் சாய்வாக இருக்கிறது. இதனால் இந்தக் கோட்டின் கீழ்ப்   புறமும் மேல் புறமும் அச்சுக்கு நேராக நிற்கும் நட்சத்திரங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

 

துருவ நட்சத்திரம் என்று நாம் இன்று காணும் நட்சத்திரம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துருவ நட்சத்திரமாக இல்லை! வேறு ஒரு நட்சத்திரம்தான் துருவன் பதவியை வகித்து வந்தது. இப்படி மாறிய பல நட்சத்திரங்களை வேத மந்திரங்களில் காண முடிகிறது.

 

இதையெல்லாம் கொண்டு ஜாகோபி என்ற ஜெர்மானிய அறிஞரும் , பால கங்காதர திலகர் என்ற இந்திய அறிஞரும் வேதத்தின் காலத்தைக் கணக்கிட்டனர். ஒருவருக்கொருவர் தெரியாமல், அறியாமல், தனித்தனி ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்த விஷயங்கள் இதோ:-

சதபத பிராமணத்திலுல் கிருத்திகா/ கார்த்திகை நடசத்திர உதயம் பற்றி உள்ளது. இது மார்ச் 21 ஆம் தேதி சம இரவு நாட்கள்  (Vernal Equinox) நிலையாகும். 2000 ஆண்டுகளுக்கு ஒரு பூமியின் முறை அச்சு வேறு ஒரு நட்சத்திரத்தைக் காட்டும். பம்பரம் போல் வேக மாகச் சுற்றாமல் பூமியின் அச்சு மெதுவாகச் சுற்றுவதால் 27 நட்சத்திரங்களில் ஒவ்வொன்றாக மாற 2000 ஆண்டுகள் பிடிக்கும். இன்றைய நிலயை ஒப்பிடுகையில், இது (கிருத்திகா/ கார்த்திகை நடசத்திர உதயம்) கி.மு 2500 இல் இருந்த நிலை என்பதை வானவியலாளர் அறிவர்.

 

ரிக்வேதத்திலும் ஒரு குறிப்பு உள்ளது இது மிருக சீர்ஷம் பற்றிய குறிப்பாகும். இந்த நிலை கி.மு 4500 இல் இருந்த நிலை என்று ஜெர்மானியர் ஜாகோபி எழுதினார்.

 

கி.மு 2500-ல் இப்போதைய துருவ நட்சத்திரம் இல்லை. Alfa draconia ஆல்பா ட்ராகோனியா என்ற நட்சத்திரமே இருந்தது. இவை எல்லாம் ரிக் வேதத்தின் காலத்தை கி.மு 4500 என்று காட்டுவதாக ஜாகோபி சொன்னார்.

சுதந்திரப் போராட்ட வீரர் திலகரோ, ரிக் வேதத்தில் புனர்வசு நடசத்திரம் பற்றியுள்ள குறிப்பைக் காட்டி வேதத்தின் காலம் கி.மு.6500 என்று காட்டினார்.

டாக்டர் ஆச்சார், அண்மையில் நடத்திய ஆய்விலும் .கி.மு 3000 என்று கண்டுள்ளார்.

f7wobble

அவர் சொல்லும் கணக்கு (கி.மு)

அஸ்வினி – 200

பரணி- 1200

கார்த்திகை- 2200

ரோஹிணி- 3200

மிருகசீர்ஷம்- 4200

 

கிருத்திகையில் ஆண்டு துவங்குவதாக பிராமணங்கள் கூறுவது அவை 2200-ஐ ஒட்டி எழுதப்பட்டதைக் காட்டும்.

பிரம்மாவின் “தலையை வெட்டியதாக”க் கூறும் புராணக்கதைகள் 4200-ஐ ஒட்டி எழுந்த கதைகள்.

 

சப்தரிஷிக்கள் காலண்டர்

சப்த ரிஷிக்கள் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் 100 ஆண்டுகள் இருப்பர் என்ற பழைய சப்தரிஷி காலண்டர் இன்றும் கூட நாட்டின் சில பகுதிகளில் பின்பற்றப்படுகிறது. 2700 ஆண்டு சுழற்சியின் அடிப்படையில் உடையது. “சப்த ரிஷிக்கள்- கிருத்திகை நட்சத்திரக் கல்யாணம்” என்பன எல்லாம் இந்த காலண்டாரின் அடைப்படையில் வந்ததே.

 

தற்போதைய கணக்குப்படி இதன் துவக்கம் 3076. ஆனால் கிரேக்க ஆசிரியர்கள் அர்ரியன், பிளினி ஆகியோர் இது கி.மு.6676ல் துவங்கியதாக எழுதியுள்ளனர்.

 

இந்து மத நூல்களில் அஸ்வமேத யக்ஞம் துவங்கப்பட்ட நட்சத்திரம், ஆண்டு துவங்கும் மாதம் ஆகியன மாறுபட்டிருப்பதற்கு அவ்வப்போது இருந்த நட்சத்திர நிலையும் அதன் பழமையும் காரணமாகும்.

 

 

“மாதங்களில் நான் மார்கழி” என்று பகவத் கீதையில் கண்ணன் கூறுவது மஹா  பாரதத்தின் பழமையைக் காட்டும். அப்போது மார்கழி மாதமே ஆண்டின் துவக்க மாதமாக இருந்தது என்றும் ஆராய்ச்சியாளர் நவில்வர்.

img_8095

தொல்பொருட் துறை சான்று

ஹிட்டைட் மன்னரும் மிட்டனி மன்னரும் துருக்கி நாட்டில் பொகாஸ்கோய் என்னுமிடத்தில் கைச்சாத்திட்ட உடன்பாட்டில் இந்திரன், மித்திரன், வருணன், நாசத்யர் பேரில் உடன்படிக்கையை கை எழுத்திட்டுள்ளனர். இவை எல்லாம் இந்தோ- ஐரோப்பிய இலக்கியத்திலும் வெவ்வேறு கால கட்டங்களில் இருந்ததாகக் காட்டுவோரும் “நாசத்யர்” என்ற அஸ்வினி தேவர்களைக் காட்ட முடியவில்லை. நாசத்யர் என்பது இந்துக்கள், இந்திய மண்ணில் வேதம் பாடியபோது போற்றப்பட்ட தெய்வங்கள். ஆக இதுவரை வானவியல் குறிப்புகளை மறுத்தோ, தொல்பொருட் துறைக் குறிப்புகளை மறுத்தோ அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

 

சரஸ்வதி  நதி  சான்று

சரஸ்வதி நதி பற்றிய குறிப்புகளும் ரிக்வேத காலத்தைக் கணிக்க பெரிதும் துணைபுரிகிறது. இந்த நதி கடலில்

கலக்கும் நதி என்று ரிக்வேதம் கூறும். ஆனால் பிற்காலத்தில் ஏற்பட்ட பிரம்மாண்டமான பூகம்பத்தால் இது திசை றிப்போய் பின்னர் வறண்டுவிட்டது. அண்மைக்கால விஞ்ஞான சோதனைகள் 1900.ல் இது ஏற்பட்டதாகக் காட்டுவதால் ரிக்வேதத்தை கி.மு 1900க்கு முன்னர்தான் கணிக்கமுடியும். இப்படி வானவியல், தொல்பொருட் துறை, மொழியியல், மக்களின் பாரம்பர்ய நம்பிக்கை, இலக்கியச் சான்றுகள் எல்லாம் வேதத்தின் பழமையைப் பறை சாற்றுவதால் வெளிநாட்டான் எழுதியதும் அதற்குத் தாளம் போடும் மார்கஸீய திராவிடங்களின் வாதங்களும் நகைப்புக்குள்ளாகி விடுகின்றன.

அட நகைச் சுவை என்பது ஆராய்ச்சியிலும் தேவைதானே!

img_8104

–சுபம்—

 

வேதங்களின் காலத்தைக் கண்டுபிடிப்பது எப்படி? (Post No.3188)

imgres

written by London swaminathan

Date: 25 September 2016

Time uploaded in London:12-35

Post No.3188

Pictures are taken from various sources; thanks.

 

 

ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் ஆகிய நான்கு வேதங்களின் காலம் பற்றி பல்வேறு கருத்துகள் உண்டு. ஆயினும் இதை முதல் முதலில் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டோர் வெளிநாட்டினர்தான். அவர்களில் எந்த இரண்டு ஆட்களும் ஒரே கருத்தைத் தெரிவிக்கவில்லை. ஆனால் எல்லோரும் மாக்ஸ்முல்லர் (Friedrich Max Muller 1823-1900)  சொன்ன ஒரு கருத்தை ஏற்றுக்கொண்டனர். யாரும் இதை கி.மு.1200–க்குக் குறைத்து மதிப்பிட முடியாது என்றார். பலர் இதிலுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டியபோது இதற்கும் கீழே கொண்டுவர முடியாது என்றுதான் நான் சொன்னேன். அதற்கு முன்னாலும் இருக்கக் கூடும் என்றார்.

 

இந்துக்களைப் பொறுத்தமட்டில் வேதத்துக்கு காலம் என்பதே இல்லை. ஏனெனில் அது எப்போதுமே வானத்தில் உள்ளது. ஒவ்வொரு யுகத்திலும் ரிஷி முனிவர்கள் தங்கள் தவ வலிமையால் — நாம் ரேடியோ கேட்பது போல — கேட்டு அறிகிறரர்கள். அதனால் அதற்கு சுருதி (கேள்வி) என்று பெயர். மனிதனால் இயற்றப்படாததால் அதை ‘அபௌருஷேயம்’ என்றும் சொல்லுவார்கள்.

rigveda_0

ரிக் வேதத்திலேயே (10-90-9), யாகத்திலிருந்து வேதங்கள் தோன்றியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது ஞான வேள்வி இயற்றுகையில் இந்த உண்மை அறிவு அவர்களுக்குப் புலப்பட்டது. வேதம் என்பதை அப்படியே மொழி பெயர்த்தால் “அறிவு” என்றே சொல்ல வேண்டும்.

தஸ்மாத் யக்ஞாத் சர்வ ஹுத: ருச: சாமானி யக்ஞிரே

சந்தாம்ஸி ஜக்ஞிரே தஸ்மாத் யஜுஸ் தஸ்மாத் அஜாயத

– ரிக் வேதம், புருஷசூக்தம், 10-90-9

 

ரிக்வேதத்துக்குள்ளேயே (1-1-2) முற்கால ரிஷிகள் பற்றிய குறிப்புகள் உளதால் அவைகளுக்கு 300 ஆண்டுக்கால வீச்சு கொடுத்து மிகப் பழைய மந்திரம் கி.மு.1500 வாக்கில் வந்திருக்கலாம் என்றும் ஊகிப்பர்.

தமிழில் சங்க இலக்கியத்திலும்  ரிக் வேதம் போலவே 400 புலவர்களுக்கு மேல் உள்ளனர். அவை அனைத்தும் உருவாக 300 ஆல்லது 400 ஆண்டுகள் வீச்சு கொடுக்கப்படுகிறது.

 

atharva-veda

மாக்ஸ்முல்லரது ஊகம் (hypotheses):

 

ஒரு மொழி 200 ஆண்டுக் காலத்துக்கு ஒரு முறை வேறு ‘நடை’ அல்லது

‘பாணி’யில் (literary Style) எழுதப்படும் என்பது மாக்ஸ்முல்லரது “கண்டுபிடிப்பு”.

 

வேதத்தின் “அந்த”ப் பகுதி (முடிவுப் பகுதி) உபநிஷத். இதை வேதாந்தம் (வேத+ அந்தம்) என்பர். இதில் புத்தமத தாக்கம் எதுவும் இல்லை. ஆகையால இது புத்தருக்கு முந்தியது என்று சொல்லி அவருக்கும் வேதாந்தத்துக்கும் இடையே 200 ஆண்டு இடைவெளி கொடுத்து, மாக்ஸ்முல்லரே தன்னிச்சையாக கி.மு.800 என்று முத்திரை குத்தினார். இந்திய வரலாற்றில் எல்லாவற்றையும் புத்தரின் காலத்தை (கி.மு. ஆறாம் நூற்றாண்டு) வைத்துதான் நிர்ணயித்துள்ளார்கள். உபநிஷத்துக்கு  முந்தைய ‘பிராமண’ங்களுக்கு கி.மு 1000 என்றும்  அவைகளுக்கும் முந்தைய சம்ஹிதை எனப்படும் மந்திரப் பகுதிகளுக்கு குறைந்தது கி.மு 1200 என்றும் மாக்ஸ்முல்லர் சொல்லிவிட்டார்.

 

உபநிஷத் காலம் – 600 முதல் 800 வரை

பிராமணங்களின் – 800 முதல் 1000 வரை

சம்ஹிதைகளின் காலம் – 1000 முதல் 1200 வரை

 

மாக்ஸ்முல்லர் கையாண்ட முறையை வேறு எந்த நாட்டு இலக்கியத்துக்கும் யாரும் பின்பற்றவில்லை. அது தவறு என்பதை நான் தமிழ் இலக்கியத்தைக் கொண்டு நிரூபிக்கிறேன்.

 

 

தமிழில் திருக்குறளுக்கு ‘கட்டைப் பஞ்சாயத்து’ முறையில் சில அறிஞர்கள் சண்டை போட்டு கி.மு. 31 என்று தன்னிச்சையாக முடிவு செய்தனர். சிலப்பதிகாரத்தில் “கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனை”  (C.E.132) செங்குட்டுவனின் சம காலத்தை சேர்ந்தவனாகக் காட்டுவதால் செங்குட்டுவன் இரண்டாம் நூற்றாண்டு என்று கொள்ளப்பட்டது. சங்க இலக்கியம் அனைத்தும் முதல் மூன்று நூற்றாண்டுகளை சேர்ந்தவை என்று எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர். ஏனெனில் அதில் ரோமானிய சாம்ராஜ்யத் தொடர்பு பேசப்படுவதாலும் அக்காலக் காசுகள் தமிழ் நாடு முழுதும் கிடைப்பதாலும் அது ஐயம் திரிபற நிரூபிக்கப்பட்டுவிட்டது.

 

ஆனால் சங்க இலக்கிய நடை வேறு; சிலப்பதிகார நடை வேறு; திருக்குறள் நடை வேறு. நாமோ இவை அனைத்தையும் 200 ஆண்டுக்குள் வைக்கிறோம்! மாக்ஸ்முல்லர் விதிப்படி இவை ஒவ்வொன்றுக்கும் இடையே 200 ஆண்டுக் கால இடைவெளி இருக்க வேண்டும்.

 

yajur

வையாபுரிப் பிள்ளை போன்ற அறிஞர்கள் திருக்குறளின் காலத்தை மிகவும் பின்னுக்குத் தள்ளியதற்கு அதிலுள்ள வடமொழிச் சொற்களும், அதிலுள்ள புதிய இலக்கணப் பிரயோகங்களும் காரணம். சிலப்பதிகாரத்திலோ வடமொழி புராணங்களைப் போல அத்தியா யத்துக்கு அத்தியாயம் (காதைக்கு காதை) மாயாஜாலம், மந்திரம் கடவுள் வழிபாடு, கோவில்கள், பார்ப்பனர் புகழ்ச்சி முதைலியன உள்ளன. இதை ஏழாம் நூற்றாண்டுக் காவியம் என்பார் டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன் Dr S R K of Madurai). நானோ மொழி நடை முதலியனவற்றைக் கொண்டு தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகிய மூன்றும் நாலு அல்லது ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்தது என்று காட்டியுள்ளேன். சுருக்கமாகச் சொல்லப்போனால்  மாக்ஸ்முல்லரின் விதி உலகில் எந்த மொழிக்கும் பொருந்தியதாக இதுவரை நான் படித்ததில்லை.

 

 

காலப்போக்கில் “நடை” (Style and language) மாறும் என்பது உண்மையே. சொல்லப்போனால் மாறுதலுக்கு உள்ளாகாத விஷயம் (Change is inevitable) எதுவுமே இல்லை.

 

 

மேலும் நாங்கு வேதங்களும்  உலகில்  வேறு எந்த இடத்திலும் இல்லாத புதுமை உடைத்து. அதாவது மற்ற மொழிகள் எல்லாம் பேசப் பேச மாறும் ஆனால் வேதம் மட்டும் மாறாது. ஏனெனில் அதை கிளிப்பிள்ளை மாதிரி அப்படியே மனப்பாடம் பண்ணி ஒப்பிப்பதால் மாற முடியாது. மற்ற மொழியினரைப் போல பரப்பி இருந்தால் அதில் மாறுதலைத் தவிர்க்க முடியாது.

 

யாஸ்கர் என்பவர் ‘நிருக்தம்’ எழுதினார். அவருடைய காலம் கி.மு.800 என்று வெளிநாட்டினர் கணிக்கிறார்கள். அவரே வேதத்தின் பல சொற்களுக்கு பொருள் தெரியாமல் போய்விட்டது என்று சொல்லுகிறார். அப்படியானால் அவருக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னராவது இந்த மந்திரங்கள் (சம்ஹிதை) சொல்லப்பட்டிருக்க வேண்டும். அவருக்குப் பின்னர் வந்த பாணினியோ புதிய சம்ஸ்கிருத அமைப்புக்கு இலக்கணம் எழுதியுள்ளார். அவர் எழுதிய சம்ஸ்கிருத மொழி இலக்கணம் வேத கால சம்ஸ்கிருத இலக்கணத்திலிருந்து மிகவும் வேறுபட்டது. ஆகையால் ஒரு ஆயிரம் ஆண்டு இடைவெளியாவது கொடுக்கவேண்டும்.

 

இவை அனைத்தும் உலகிலுள்ள சாதாரண மொழிகளுக்கு கொடுக்கப்படும் விதிகள். வேதமோ இன்று வரை மாறாத- மாற்ற முடியாத — அமைப்பு கொண்டது. அதாவது ஒரு சொல்லைக் கூட எழுத்தைக்கூட மாற்ற முடியாமல் மனப்பாடம் மூலம் — வாய்மொழி (அத்யயனம்) மூலம் பரப்பப்பட்டது. சங்கப் புலவர்கள் இதை “எழுதாக்கிளவி” என்று போற்றுகின்றனர். உலகில் எழுதாமல் காக்கப்பட்ட புத்தகம் இது ஒன்றே. ஆகையால மற்ற மொழிகளுக்குப் பொருந்தும் விதிகள் இதற்குப் பொருந்தா. அப்படியே பொருந்தும் என்று வாதாடினாலும் ஆயிரம் ஆண்டு இடைவெளி கொடுக்க வேண்டும் என்பதே மேலே கூறப்பட்டுள்ளது.

 

வானவியல் முறை பற்றி அடுத்த கட்டுரை யில் காண்போம்

தொடரும்…………………………………….

 

இந்தப் பூவுலகில் யாராலும் வேதங்களின் காலத்தை சொல்லமுடியாது: மாக்ஸ்முல்லர்

சிந்துவெளி ஆண் மிருகங்கள்

சிந்து வெளி முத்திரைகளில்,  ஆண் மிருகங்களின்  ஆதிக்கம்

Compiled by London swaminathan

Article No.1902; Dated 1 June 2015.

Uploaded at London time: 9-23 am

தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்

சூழ்கலை வாணர்களும் — இவள்

என்று பிறந்தவள் என்றுணராத

இயல்பினளாம் எங்கள் தாய்.

 

நாவினில் வேதம் உடையவள் கையில்

நலந்திகழ் வாளுடையாள் – தனை

மேவினர்க்கு இன்னருள் செய்பவள் தீயரை

வீழ்த்திடும் தோளுடையாள். –பாரதியார்

 

பாரத அன்னையைப் புகழ்ந்த பாரதியார், உடனே அவள் நாவினில் வேதம் உடையவள் என்று சொல்லி, பாரதம் எவ்வளவு பழமையானதோ, அவ்வளவு பழமையானது வேதமும் என்பதை உறுதிபடக் கூறுகிறார்.

எக்காலத்தும் இந்தியாவுக்கே வராமல், இங்கிலாந்தில் இருந்துகொண்டே வேதத்தை மொழிபெயர்த்த ஜெர்மானியர் மாக்ஸ் முல்லர், வேதங்களின் காலம் கி.மு.1200–க்கு முன்னதாக இருக்கலாம் என்று சொன்னார். உடனே அதை எதிர்த்து அறிஞர் உலகம் போர்க்கொடி உயர்த்தியது. இப்படி போர்க்கொடி உயர்த்தியவர்களும் மேலை நாட்டவரே! வில்சன், பார்த்தலேமி, செயின்ட் ஹில்லேர், விட்னி, கோல்ட்ஸ்டக்கர் (Wilson, Barthelemy, St.Hillaire, Whitney, Goldstucker)

போன்றோர் மாக்ஸ் முல்லர் கருத்தை ஏற்கவில்லை. உடனே மாக்ஸ்முல்லர் ஜகா வாங்கினார். அறிஞர்கள் அனைவர் சொல்லுவதையும் நான் அப்படியே ஏற்கிறேன். நான் கி.மு.1200–க்கும் கீழாக யாரும் வேதத்தைக் கொண்டுவரக்கூடாது என்று சொன்னேனே தவிர, அதுதான் வேதத்தின் காலம் என்று சொல்லவில்லை என்றார்.

ரிக் வேதத்தில் இருக்கும்  வான சாத்திரக் குறிப்புகளைக் கொண்டு, மாக்ஸ் முல்லருக்கு நீண்ட நெடுங்காலம் முன்னரே ஆராய்ச்சி மேற்கொண்ட, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் திலகரும், ஜெர்மன் அறிஞர் ஜாகோபியும் (Tilak 1904, Jacobi 1894) வேத காலத்தை கி. மு 4000 என்று காட்டினர்.

17ef9-vedapatam

Max Muller:–

I need hardly say that I agree with every word of my critics. I have repeatedly dwelt on the hypothetical character of the dates., which I ventured to assign to the first periods of Vedic literature; all I have claimed for them has been that they are the minimum dates………………

If now we ask how we can fix the dates of these three periods, it is quite clear that we cannot hope to fix a terminum a qua. Whether the Vedic hymns were composed 1000 or  1500 or  2000 or 3000 years BC, NO POWER ON EARTH WILL EVER DETERMINE” (Max Muller 1890)

ஆனால் ஆரிய-திராவிட இனவெறிக் கொள்கையைப் பின்பற்றுவோர், ஆரியர்கள் வந்து, கறுப்புத் தோலுடைய பூர்வ குடிமக்களை விரட்டி விட்டதாக நீண்ட நெடுங்காலமாகப் பிரசாரம் செய்துவந்தனர். இந்தப் பிரசாரம் 200 வருடங்கள் நடந்தபின்னர் 1920 ஆம் ஆண்டுக்குப் பின், சிந்து வெளியில் இரண்டு நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. “வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது”. பார்த்தீர்களா, நாங்கள் அன்றே சொன்னோம். ஆரியர்கள் வந்து இந்த மக்களை விரட்டினார்கள் என்று. இது உண்மையானது என்பதற்கு சான்று கிடைத்துவிட்டது என்றனர். ஆக மீண்டும் எல்லோரும் வேதத்தின் காலம் கி.மு. 1200 என்று எழுதத் துவங்கினர். இப்பொழுது இது எல்லாம் பொய்யாய் பழங்கதையாய்ப் போய்விட்டது.

காரணம்?

சிந்து சமவெளியில் ஒரு திராவிடர் எலும்புக்கூடு கூட கிடைக்கவில்லை! கிடைத்தது எல்லாம் ஆரிய எலும்புக்கூடுகளே. அதுவரை ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதித்தவர்கள் எலும்புக்கூடு விஷயத்தில் கப்புச்சிப்பு என்று வாய் மூடி மௌனம் ஆகிவிட்டனர். கிடைத்த எலும்புக்கூடுகள் எல்லாம் பஞ்சாபியரை போல அந்த இடத்து மக்களின் உடல் ஆகிருதி உடையவர்கள். வேறு சிலவும் உண்டு. ஆனால் திராவிடம் இல்லை. கிடைத்த எலும்புக்கூடுகளும் மிகச் சில. ஆரியர்கள் படுகொலை நடத்தியிருந்தால். பல்லாயிரம் திராவிட எலும்புக்கூடுகள் இருக்க வேண்டுமே என்று யாரவது ஒரு சிலர் கேட்டு விடப் போகிறார்களே என்று எண்ணி, திராவிடர்கள், பயந்துகொண்டு 3000 மைல்களுக்கு ஓடிப் போய் தமிழ் நாட்டில் உகார்ந்து கொண்டனர் என்று சொல்லி திராவிடர்களுக்கு அதி பயங்கரக் கோழை என்று பட்டமும் சூட்டினர்.

சிந்து சமவெளிப் பகுதியில் ஆராய்சி நடத்திய ஜான் மார்ஷல் போன்றவர்களை ஆராய்ச்சியாளர்கள் என்று சொல்லுவதா, மதப் பிரசாரகர்கள் என்று சொல்லுவதா என்று கூட எண்ணத் தோன்றுகிறது ஆராய்ச்சியாளர்கள் யாரும் 30 எலும்புக்கூடுகளைப் பார்த்துவிட்டு இந்திரன் குற்றவாளி என்று சொல்லமாட்டார்கள். ஒரு ஆரய்ச்சியளனுக்குள்ள மனப் பக்குவம் இல்லாத இனவெறியன் என்பது இதன் மூலம் சொல்லாமலே விளங்கும்!

vedic fire altar.chattisgarh

வேத யாக குண்டம், சட்டிஷ்கர்

மேலும் இப்பொழுது சிந்துவெளி முத்திரைகளில் காணப்படும் மர்மச் சின்னம் சோம ரசம் வடிகட்டும் பாத்திரம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். இதுவரை சிறிதும் பெரிதுமாக 2000 சிந்து வெளி நகர, கிராமங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. மேலும் சரஸ்வதி நதியின் காலமும் அது மறைந்த காலமும் தெரிந்துவிட்டதால், வேதங்களின் பழமையும் குறைந்தது கி.மு 1700 என்று இந்துமத எதிரிகளும் ஒப்புக்கொள்ளத் துவங்கி விட்டனர்.

மொஹஞ்சதாரோ ஹரப்பாவில் பெரிய அகலமான மதில் சுவர்கள் கி.மு 2000 வாக்கிலேயே உள்ளன. இவர்கள் யாரைக் கண்டு பயந்து கி.மு 2000 வாக்கில் அவ்வளவு பெரிய மதில் சுவர்களை எழுப்பினர்? ஒரு வேளை சேர, சோழ, பாண்டியர்கள் 1800 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து மோதிக் கொண்டது போல ஹரப்பாவும், மொஹஞ்சதாரோவும் சண்டை போட்டார்களா?

மேலும் காலிபங்கன், லோதல், டோலவீரா முதலிய பல இடங்களில் யாக குண்டங்கள், கருகிய ஹோம சாம்பல் ஆகியனவும் கிடைத்திருக்கின்றன.

எல்லா இடங்களிலும் ஏன் முத்திரைகள் கிடைக்கவில்லை? கிடைத்த எல்லா முத்திரைகளிலும் மிருகங்களின் ஆண் வகை மட்டும் காணப்படுகிறதே? இவர்கள் பெண்களை எதிர்க்கும் அல்லது மட்டம் தட்டும் கும்பலா? ஆயிரத்துக்கும் அதிகமான சின்னங்களில் காளைச் சின்னத்தைப் பொறித்த மக்கள் ஏன் பசுமாட்டைப் பொறிக்கவில்லை? ஒருவேளை புனிதச் சின்னம் என்பதால் பசுவை விட்டு விட்டனரா? குதிரை எலும்புகள் கிடைத்தபோது மட்டும் அது மேல் மட்டத்தில் கிடைத்தது என்று சொல்லிவிட்டு, முழு ஒட்டக எலும்புக்கூடு கிடைதது பற்றி மௌனம் சாதிப்பது ஏன்? இப்படிப் பல கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன.

ஒட்டுமொத்த முடிவுரை:

1அங்கு வாழ்ந்தவர்கள் ஆரியர்களும் இல்லை, திராவிடர்களும் இல்லை. வேதகால இந்துக்கள்.

2.அவர்களில் இப்பொழுது இந்து மதத்தில் இருப்பது போலவே பலதரப்பட்ட மக்கள் இருந்தனர். சிலர் கிராமதேவதைகளை வழிபடுவது போல பெண் தெய்வங்களையும் மற்றும் பலர் ஆண் தெய்வங்களையும் வணங்கினர்.

3.ஒர்புறம் கந்தர்வர்கள் ஆதிக்கம் இருந்ததால் இசை, நடனம் ஆகியன வளர்ந்தன.

4.உலகிலுள்ள எல்லா பழைய நாகரீகங்களிலும் பெரிய கோவில்கள்/ வழிபாட்டு இடங்கள் இருக்கின்றன. ஆனால் சிந்து வெளியில் அப்படி இல்லை. ஆகவே அது வேத காலத்தை ஒட்டிய– பெரிய கோவில்கள் இல்லாத நாகரீகமே

5.ஹரப்பா நகரத்தில் பல இன மக்கள் வசித்தது குறித்து 2013-ல் நேஷனல் ஜியாக்ரபிக் மேகஸின் ஒரு ஆரய்ச்சிக் கட்டுரையையும் வெளியிட்டு இருக்கிறது.

ஆரிய ஜீன் —- திராவிட ஜீன் ஆராய்ச்சி முடிவுகள்

Please click below for the article

ஆரிய ஜீன்

BenHur2