கழுதை வைத்தியம்! (Post No.7066)

WRITTEN by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 7 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 7-56 am
Post No. 7066

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

Egyptian Beauty Cleopatra

வேதத்தில் தங்கப் பல் வைத்தியம்! (Post No.7008)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

 Date: 24 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 8-19 am

Post No. 7008


Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

gold tooth

தவளைக் கஷாயம் (Post No.5691)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 23 November 2018

GMT Time uploaded in London –7-00 AM
Post No. 5691

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

picture from Wikipedia

பிளினி மூத்தவர் ( PLINY THE ELDER ) சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் ரோமானிய சாம்ராஜ்யத்தில் வாழ்ந்தார். அவர் நம் நாட்டு வராஹமிஹிரரின் பிருஹத் ஜாதகம் போல வானவியல் முதல் பிராணிவியல் வரையுள்ள எல்லா விஷயங்களையும் எழுதி நேச்சுரல் ஹிஸ்டரி- NATURAL HISTORY இயற்கை வரலாறு-என்ற பெயரில்37 தொகுதிகளாக வெளியிட்டார். இது லத்தீன் மொழியிலுளது. இதை 500 ஆண்டுகளுக்கு முன்னர் வெனிஸ் நகரில் பதிப்பித்தனர். வராஹமிஹிரரின் பிருஹத் ஜாதகம் போன்ற நூல்கள் ஏராளமான விஞ்ஞான பூர்வ விஷயங்களை உடைத்தாய் இருக்கிறது. பிளினி எழுதிய மருத்துவ விஷயங்கள் ஒரே அபத்தக் களஞ்சியமாக உளது. நமது சரகர், சுஸ்ருதர் போன்றோர் எழுதிய நூல்கள் இவருக்கும் சில அல்லது பல நூற்றாண்டுகளுக்கு முந்தியவை. இவைகளை ஒப்பிடுகையில் ஐரோப்பியர்கள் காட்டுமிராண்டி வைத்தியத்தைக் கடைப்பிடித்தது தெரிகிறது.

ஒரு சில எடுத்துக் காட்டுகளைக் காண்போம்:-

ஒருவருக்கு இடது பக்கம் கண் நோய் இருந்தால் ஒரு தவளை அல்லது தேரையின் இடது கண்ணை நோயாளியின் இடது தோளில் இருந்துத் தொங்க விடுக; இதே போல வலது கண் நோய்க்கு வலப்பக்கம் செய்க.

யாருக்காவது காதில் நோய் இருந்தால் தவளைக் கொழுப்பைக் காதில் திணிக்கவும். நோய் பறந்தோடும்.

பல் வலியா? தவளையை புளிச்ச காடி எனப்படும் விநிகரில் கொதிக்க வைத்து அந்தக் கஷாயத்தால் வாயைக் கொப்புளிக்கவும்.

இருமல், தொண்டையில் வியாதி இருந்தால் குட்டித் தவளையை வாயில் போட்டுத் துப்பி விடவும்.

இது போன்ற நம்பிக்கைகள் ஐரோப்பாவில் 1600 ஆண்டுகளுக்கு நீடித்தமைக்கு  அநதக் காலத்தில் வெளியான சில ஆங்கில நூல்களும் சான்று பகர்கின்றன.

1658ல் ஸர் கே.டிக்பி (SIR K DIGBY எழுதிய டிஸ்கோர்ஸ் ஆன் சிம்பதி (DISCOURSE ON SYMPATHY) என்ற நூலில் காணும் விஷயம்:

நீங்கள் பிரயாணம் செய்கிறீர்களா? குறிப்பாக நோய் இருக்கும் பகுதிக்குச் செல்வதானால் தவளை அல்லது தேரையைப் பொடி செய்து டப்பாவில் கொண்டு செல்லவும். அல்லது உயிருடன் உள்ள தவளை அல்லது சிலந்திப் பூச்சிகளையோ ஆர்ஸெனிக் என்னும் விஷத்தையோ கொண்டு சென்றால் நோய்கள், அவைகளுக்குப் போய்விடும் உங்களை விட்டுவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

1665ல் ஆலின் லெட்டர்  என்பவர் எழுதிய விஷயம்:-

‘பிளேக்’ போன்ற கொடிய கொள்ளை நோய் இருந்தால்  அப்பகுதிக்குச் செல்லுகையில் தவளை விஷம் கொண்ட தாயத்துகளை அணிக. நோய் வந்தாலும் அது உங்களைக் கொல்லாது.

இப்படி தேரை, தவளை வைத்தியம் 1800 ஆம் ஆண்டுவரை பரப்பப்பட்டு வந்துளது.

தமிழ் ஸம்ஸ்க்ருத நூல்களில் உள்ள மூலிகை மருத்துவம் நாம் எவ்வளவு முன்னேறி இருந்தோம் என்பதற்கு எடுத்துக் காட்டுகள்.

Tags– தவளை, கஷாயம், தேரை, வைத்தியம்

–SUBHAM–

விஷக்கடிக்கு பௌத்த மத வைத்தியம் (Post No.5137)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 22 JUNE 2018

 

Time uploaded in London –  5-34 AM  (British Summer Time)

 

Post No. 5137

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாலி மொழி நூல்களில் புத்த மத விஷயங்களுக்கு இடையில் பல மருத்துவக் குரிப்புகளும் உள. சில விஷயங்கள் மிகவும் விநோதமனவை.

 

 

சூள வம்ஸம் என்னும் இலங்கை வரலாற்று நூல் விளம்புவதாவது:- கித்திஸிரிராஜஸீஹ,

(கீர்த்தி ஸ்ரீ இராஜ சிம்ஹன்) பௌத்த பிஷுக்களுக்காக இரண்டு டாக்டர்களையும் நர்ஸ்களையும் நியமித்தான். அரசாங்க கஜானாவிலிருந்து ஆண்டுதோறும் மருத்துவச் செலவை நல்கினான்.

 

 

உபாலி என்ற பௌத்த மத குருவுக்கு மூக்கில் வியாதி வந்தபோது நல்ல மருத்துவ வசதி அளித்தான்.

 

முதலாவது பராக்ரமபாஹு ஒரு பெரிய மண்டபம் கட்டி அங்கு நோயாளிகளைத் தங்கச் செய்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு விஷேச வேலைக்காரன், ஒரு வேலைக்காரியை அமர்த்தி இரவும் பகலும் உணவும் மருத்தும் அளிக்க ஏற்பாடு செய்ததாகவும் சூளவம்ஸம் எனும் சரித்திர நூல் பகரும்.

 

பராக்ரமபாஹு பல்வேறு மூலிகை மருந்துகளைச் சேகரித்து அவைகளை மாட்டு கொம்புக்குள் பாது காத்து வைத்தான். விஷ அம்புகளை எடுப்பதற்காக விஷேச சாமணங்களைச் செய்தான். விஷ அம்புகளை எடுத்து காயங்களுக்கு மருந்திட திறமையான டாக்டர்களை நியமித்தான்.

பாம்புக்கடிக்கோ அல்லது விஷத்தை இறக்கவோ சாணி சாம்பல், மூத்திரம், களிமண், கஷாயம் பயன்படுத்தப்பட்டன. ஒருவருடைய எல்லா உறுப்புகளிலும் விஷம் பாய்ந்து நீலம் ஏறிய பின்னரும் அவனைக் காப்பாற்றிய அதிசயச் செய்திகளை புத்தமத நூல்கள் நுவலும்.

 

அவர்கள் கருகிய அரிசியினால் ஆன கஷாயத்தைக் கொடுத்து விஷத்தை இறக்கிய செய்திகளும் சொல்லப்படுகின்றன.

 

 

மருந்துகளைப் பொறுத்த மட்டில் ஆயுர்வேத மருந்துகளைப் போலவே உள்ளன. ஆனால் கரடி மாமிசம், முதலை மாமிசம், மீன் முதலியவும் உள்ளன.

வியாதிகளின் பட்டியல் பின்வருமாறு:

 

மஞ்சள் காமாலை நோய்க்கு பசு மூத்திரம் கலந்த கஷயம் கொடுக்கப்பட்டது.

தோல் நோய்களுக்கு மூலிகை எண்ணை பயன்படுத்தப் பட்டது.

 

சமிதிகுத்த என்ற பிராஹ்மணனுக்கு குஷ்ட நோய் வந்து உறுப்புகள் அனைத்தும் உதிர்ந்து விழுந்தன.

மொக்கராஜ (மஹாராஜ) என்ற பிராஹ்மணனுக்கு  உடல் முழுதும் பருக்கள் வந்தன. வீட்டில் நோய்க் கிருமிகள் இருப்பதை அறிந்து குளிர் காலத்தையும் பொருட்படுத்தாது வயலில் வசித்தான்

 

ராஜ க்ருஹத்தில் இரண்டு பாங்கு அதிகாரிகள் வீட்டில் பிளேக் நோய் ஏற்பட்டது. முதலில் ஈ போன்ற பூச்சிகளும் பின்னர் பசு போன்ற மிருகங்களும் பின்னர் வேலைக்காரர்களும் பின்னர் வீட்டு எஜமானர்களும் நோயில் விழுந்தனர்.

 

நோய்களின் பட்டியலில் நீரிழிவு, வயிற்றுப் போக்கு, கண், காது, வாய், வயிறு, குடல் நோய்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளன. உறுப்பு வாரியாக நோய்கள் பட்டியலிடப்பட்டது விஞ்ஞான அணுகுமுறையைக் காட்டுகிறது.

 

 

Sota Roga = Disease of hearing
Jihva Roga = Disease of tongue
Kaya Roga = Disease  of body
Mukha Roga = Disease of mouth
Dant Roga = Disease of teeth
Kaba =cough
Sasa =asthma
Pinasa= cold in the head
Daha = burning
Kucchi Roga = Disease abdominal trouble.குடல் நோய்
Muchchaa = hysteria உணர்ச்சிக் கொந்தளிப்பு
Pakkhandika=  diarrhoea
Suula = acute pain
Visucikaa = cholera வாந்திபேதி
Kilaasa Roga = a cutaneous Disease
Apasmaara = epilepsy வலிப்பு
Daddu=  ringworm
vitachchikaa=  scabies
Madhu meha=  diabetes சர்க்கரை வியாதி
Lohitapitta=  bile with blood
Bhagandala = fistula இரத்தக்குழாய், குடல் போன்ற உறுப்புகளின் இணைப்பில் கோளாறு
Sannipaatikaa = union of humours
Utuparinaamajaaabaadhaa = change of season disease

சித்த, ஆயுர்வேத முறை  போலவே வாத, பித்த, கப  சமத்தன்மை இழப்பதால் நோய்கள் வருவதாக நம்பினர்.

 

–SUBHAM—

 

பைத்தியத்துக்கு வைத்தியம்: சுவையான சம்பவங்கள் (Post No.2866)

grimadi

Translated by London swaminathan

 

Date: 4 June 2016

 

Post No. 2866

 

Time uploaded in London :–  6-25 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

தமிழ்நாட்டில் தங்கவேலு, சந்திரபாபு போல அந்தக் காலத்தில் புகழ் பெற்ற மேற்கத்திய நகைச்சுவை நடிகன் கிரிமால்டி. அவருடைய வாழ்வில் நடந்த சுவையான சம்பவம் இதோ:

நோயாளி: டாக்டர், எனக்கு எப்போதும் ஒரே கவலையாக இருக்கிறது. ஏனென்றே தெரியவில்லை.

டாக்டர், அந்த நோயாளியிடம் பேச்சு கொடுத்துவிட்டு சொன்னார்:

“இதோ பாருங்கள், உங்களுக்கு உடம்பில் ஒரு நோயும் இல்லை; மன நோயும் இல்லை. பேசாமல் பிரபல நகைச் சுவை நடிகர் கிரிமால்டியின் நாடகத்தைப் போய்ப் பாருங்கள்; வயிறு குலுங்கச் சிரிப்பீர்கள்; கவலைகள் எல்லாம் பறந்தோடிப் போகும்”.

நோயாளி: “டாக்டர், நான் தான் அந்த கிரிமால்டி!”

(பெரும்பாலான நகைச் சுவை நடிகர்களும், சர்க்கஸ் கோமாளிகளும் நமக்கு சிரிப்பு ஊட்டினாலும், அவர்கள் சொந்த வாழ்வு, சோகமயமாக இருக்கிறது!)

Xxx

(மொழிபெயர்ப்பு: லண்டன் சுவாமிநாதன்; இந்த சம்பவங்கள் ஏற்கனவே என்னால் இங்கே ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டன)

mozart notes

சங்கீதம் – நல்ல மருந்து!

ஸ்பெயின் நாட்டின் அரசர் பிலிப்புக்கு திடீரென்று உடல் நலம் குன்றி, மன நோய் ஏற்பட்டு சோகக் கடலில் மூழ்கினார். உண்ணுவதில்லை; உறங்குவதில்லை; உடம்பைப் பேணுவதில்லை. முகச் சவரம் கூட செய்துகொள்ளவில்லை; செய்யவும் பிறரை அனுமதிக்கவில்லை.

 

மஹாராணிக்கு ஒரே கவலை. “இசை ஒரு மருந்து; அது பல வியாதிகளைக் குணப்படுத்தும்; கவலைகளைக் போக்கும்” — என்பதை அவர் அறிவார். ஆகையால் அக்காலத்தில் சிறந்த பாடகரான பாரிநெல்லி என்பவரை அழைத்து அரண்மனைக்குள் ஒரு கச்சேரி ஏற்பாடு செய்தார். அந்த இன்னிசை நிகழ்ச்சி, மன்னர் தங்கியிருந்த அறைக்கு அடுத்த அறையில் ஏற்பாடு செய்யப்பட்டது. மன்னர் காதிலும் அற்புதமான சங்கீதம், தேவ கானம் ஒலித்தது. மெல்ல மெல்ல, கச்சேரியில் வந்து அமர்ந்தார். பாரிநெல்லி அவரிடம் பேச்சு கொடுத்தார். மேலும் சில பாடல்களைக் கேட்க விரும்புவதாக மன்னர் தெரிவித்தார்.

 

உடனே பேரிநெல்லி சொன்னார்: மன்னர் அவர்களே, நீங்கள் கேட்கும் பாடல்கள் எல்லாவற்றையும் பாடுவேன். ஆனால் எனக்கும் ஒரு கோரிக்கை இருக்கிறது. அதை நிறைவேற்றுவீர்களா?

மன்னர் சொன்னார்: என்னால் நிறைவேற்றக் கூடிய கோரிக்கை என்றால் உடனே செய்கிறேன்.

பாரிநெல்லி சொன்னார்: மன்னரே, சின்ன வேண்டுதல்தான். தாங்கள் முக க்ஷவரம் செய்துகொண்டு ‘டிப்டாப்’பாக, மன்னர் போல அமர்ந்தால் நான் இன்னும் உற்சாகத்துடன் பாடமுடியும்.

உடனே பிலிப் முடிதிருத்தி, மணி முடி அணிந்து வந்து அமர்ந்தார்.

மன்னர் சங்கீதக் கடலில் மூழ்கினார்; மஹாராணி மகிழ்ச்சிக் கடலில் நீந்தினார்.

Xxx

dollars

காசேதான் கடவுளடா! பணமே மருந்து!!

டாக்டர் கோல்ட்ஸ்மித் என்பவர் சிறந்த மேல்நாட்டு மருத்துவர். அவரிடம் ஒரு பெண்மணி வந்தார். என் கணவருக்கு மனதே சரியில்லை; பிரமை பிடித்தவர் போல இருக்கிறார். டாக்டர் வீட்டுக்கும் வர மறுக்கிறார். தயவு செய்து வீட்டுக்கு வந்து அவரைப் பார்த்து, ஏதேனும் மருந்து கொடுங்களேன் – என்று கெஞ்சினார்.

 

டாக்டர் கோல்ட்ஸ்மித்தும் அந்த வீட்டுக்குப் போய் ‘நோயாளியிடம்’ பேச்சுக் கொடுத்தார். அவருக்கு என்ன நோய் என்று பளிச்செனத் தெரிந்தது.

அந்தப் பெண்மணியிடம் சொன்னார்: கவலைப்படாதீர்கள். உங்கள் கணவரின் நோய்க்கு உடனே மருந்து கொடுத்து அனுப்புகிறேன்.

 

வீட்டிற்குப் போனவுடன் டாக்டர் கோல்ட்ஸ்மித், ஒரு ‘கவரில்’ (காகிதப் பை) பத்து பவுன் கரன்ஸி நோட்டை வைத்து நோயாளிக்கு அனுப்பிவைத்தார். அந்த நோயாளியும் விரைவில் குணம் அடைந்தார்.

(வறுமை என்பது மனத் தொய்வை ஏற்படுத்தும். உங்கள் நண்பரோ, உறவினரோ இப்படிப்பட்ட பசிப் பிணியால், ஏழ்மை நோயால், வருந்தினால், அவருக்கு உதவி செய்யுங்கள். மனக் கவலை, பயம் முதலியவற்றை இயற்கைக் காட்சிகள், நகைச் சுவைப் படங்கள், இன்னிசைக் கச்சேரிகள், பண உதவி மூலம் போக்குங்கள். பணத்தாசை கொண்ட மன நோய் மருத்துவரிடம் போனால், ‘லிதியம்’ மாத்திரைகளைக் கொடுத்து, வாயில் நுரை தள்ள வைத்துவிடுவார்கள்.)

–சுபம்–