Written by london swaminathan
Date: 11 April, 2016
Post No. 2714
Time uploaded in London :– 9-22 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
மொகலாய சக்ரவர்த்தி பாபரின் மகன் ஹுமாயுன் நோய்வாய்பட்டார்; படுத்தபடுக்கையாய்க் கிடந்தார். அரண்மனை வைத்தியர்கள் வந்து சிகிச்சை செய்தும் உடல் நலம் தேறவில்லை. அரசவை முதியோர்களைக் கலந்தாலோசித்தார். அவர்களில் சிலர், உங்களிடமிருக்கும் மிக உயர்ந்த பொருளை இறைவனுக்குக் காணிக்கையாக்கினால், உங்கள் மகன் உயிர் பிழைப்பார் என்றனர்.
உடனே பாபர் தனது கஜானாவிலுள்ள மிக உயர்ந்த பொருளை எடுத்து வா என்று நிதியமைச்சருக்கு உத்தரவிட்டார். அவர் ஒரு பெரிய பை நிறைய வைரக் கற்களைக் கொண்டுவந்து, அதில் மிகப்பெரிய , நன்கு பட்டைதீட்டப்பட்ட, ஜொலிக்கும் வைரத்தைக் காட்டி, இதுதான் மிக விலை உயர்ந்த பொருள் என்றார். (படத்தில் அதிகாரிகள் விலையுயர்ந்த பொருட்களைக் காட்டுவதைப் பார்க்கலாம்). அந்த வைரத்தை விட, தன்னுடைய உயிர் மதிப்புமிக்கதா? என்று கேட்டார். எல்லா அமைச்சர்களும், மன்னர் மன்னவா! அதில் சந்தேகம் என்ன? என்று பதிலிறுத்தார்கள்.
உடனே பாபர், ஒரு கம்பளத்தை விரித்தார்; முழந்தாளிட்டார். இறைவா! என்னுடைய இன்னுயிரை எடுத்துக் கொண்டு, என் மகனை உயிர் பிழைக்க வை என்று வேண்டினார். ஹுமாயூன் படுத்திருந்த படுக்கையை மூன்று முறை வலம் வந்தார். அவருடைய நோய் தனக்கு வந்துவிட்டது என்று பகிரங்கமாக அறிவித்தார்.
அவர் சொன்னபடியே பாபருக்கும் நோயும் வந்தது. அவர் சில நாட்களில் இறந்தும் போனார். அவருடைய மகன் ஹுமாயூன் உயிர்பிழைத்துக் கொண்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.
எல்லா மதங்களிலும் பிரார்த்தனைக்கு மதிப்பு உண்டு. அதனால்தான் பிரார்த்தனைக்காகக் கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் என்று கட்டி வைத்திருக்கின்றனர்.
“நம்பினார் கெடுவதில்லை; இது நான்குமறைத் தீர்ப்பு” – என்று மஹா கவி பாரதி பாடியதும் இதை உறுதி செய்யும்.
-சுபம்-
You must be logged in to post a comment.